Wednesday, August 15, 2007

பொங்கி வரும் காவேரி.

சென்ற வார இறுதியில் ஊருக்குச் சென்றிருந்தேன். ஆடி அமாவசையை முன்னிட்டு,கூடுதுறை கோயிலில் அதிகக் கூட்டம். 'மக்கள் கூட்டத்திற்கு நானும் இளைத்தவள் இல்லை' என்ற பெருமிதத்தோடு, காவேரி அன்னை பொங்கி வந்தாள்.

அங்கு எடுத்த காவேரிப் படங்கள் மற்றும் கூடுதுறைக் கோயிலின் சில படங்கள், இனி :

காயத்ரி லிங்கேஸ்வரர் கோயிலின் பிரகாரத்தையும், படிக்கட்டுகளையும் மூழ்கடித்து விட்டு பாய்கிறாள் காவேரி :


கோவை - சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் காவேரிப் பாலத்தின் கணுத்தூண்கள் வரை மட்டம் உயர்ந்தது, நீர் அளவு :


நுரையாடி வரும் காவேரியன்னை :






















சங்கமேஸ்வரர் கோயிலின் ஒரு தூண் :


முதன்மைப் பிரகாரத்தைச் சுற்றி வலம் வருதல் :


துர்க்கை அம்மனின் திருப் பாதங்கள் அன்பர்களின் அன்பெனும் எண்ணெயில் முழுக்காட்டிய பீடம் :


திருக்கோயிலின் பிரகாரத்தில் செழித்திருக்கும் பூங்காவனம் :


வேதநாயகி அம்மனின் திருக்கோயில் பிரகாரம் :




அற்புதக் கலை வேலைப்பாடு நிறைந்த தூண் :


வேத முனி :


வெற்றி முகம் காட்டும் வீரன் :


முன்மண்டபம் :


கஜேந்திரனைக் காக்கும் ஆதிமூலம் :


கற்பகத் தருவை அன்பால் நனைத்து மகிழ்கின்ற காமதேனு :


திருக்கோயிலின் வடக்கு கோபுரத்தின் நுழைவாயில் :




படங்கள் எடுத்து உதவிய நண்பர் திரு. பாலாஜிக்கும், நோக்கியா 3230க்கும் நன்றிகள்.

Tuesday, August 14, 2007

சென்னைக் கடற்கரைப் படங்கள்.

சென்னை வலைப்பதிவர் சந்திப்பின் போது, மெரினா கடற்கரைக்குச் சென்று கிளிக்கியவை :

மாலன் அவர்கள் பேசுகிறார் :


கடலைப் பார்த்துக் கடலை சாப்பிடுகையில் :



மாலை மங்கும் ஒளியில் சென்னைப் பல்கலைக்கழகம் :



சோளப் பொறி விளக்கில் மிச்சமாய்த் தெறிக்கின்ற சூரியனின் மஞ்சள் ஒளி :



அலையோடும் கடல் :



திரை கடல் ஓடியும், தில்லாக விளையாடு :

அன்னை தேசத்தின் விடுதலை விழா...!



சுவாமிஜி கன்னியாகுமரி ஆலயத்தில் இருந்து வெளியேறினார். சமுத்திரக்கரையை அடைந்தார். மூன்று கடல்களும் கூடிய கடலிலும் இறங்கி நீந்தலானார். சிறிது தொலைவில் கடலில் இருந்த ஒரு பாறை மீதேறி அமர்ந்து கொண்டார்.

நாற்புறமும் அவரைச் சுற்றி அலைகள் எழும்பி எழும்பிப் பாறையில் மோதிக் கொண்டிருந்தன. அவற்றை விட உயரமாக அவர் உள்ளத்தில் சிந்தனை அலைகள் எழும்பிக் கொண்டேயிருந்தன. கடலை விடக் கொந்தளித்தது அவர் உள்ளம். அதோ அவருக்கு எதிரே இந்தியா முழுவதும் கிடக்கிறது! பாரதமாதா வாடிச் சோர்ந்து போய் அவர் கண்ணெதிரே படுத்துக் கொண்டிருக்கிறாள்!

பாரதத்தின் கடைசி மண்ணில் அமர்ந்து கொண்டிருந்த சுவாமிஜிக்குப் புல்லரித்தது.



...

இந்தியாவை அல்லவா அவர் காண்கிறார். பாடநூல்களில் படித்த , பேச்சாளர்களின் சொற்பொழிவுகளில் கேட்ட , தேசப் படங்களில் கண்ட இந்தியாவை இதோ பிரத்தியட்சமாக அல்லவா உயிருடன் கூடியதாகக் காண்கிறார்? அப்போது அவர் கண்முன் தமிழகத்தின் ஒரு கோடியாகிய கன்னியாகுமரி தெரியவில்லை. தமிழகமே தெரியவில்லை. ஏன் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், உத்கலம், வங்காளம், மகராஷ்டிரம், கூர்ஜரம், மத்தியப் பிரதேசம், பாஞ்சாலம், ம்கோன்னதமான க்ஷீமாசலம் உட்பட எதுவுமே அவருக்கு அப்போது தெரியவில்லை. பாரதம் என்ற ஒன்றே அவர் கண்களுக்குத் தெரிந்தது. இத்தனை பகுதிகலிலிருந்தாலும், அவரவர்களுக்கென்று தனித்தனி மொழிகளும், பழக்கவழக்கங்களும் இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் ஆதாரமான வேதமும், வேதாந்தமும், ஆகமமும், புராணமும், ஒன்றேயல்லவா..? இந்திய மக்கள் வெறுமனே இந்த உலக வாழ்க்கையை அனுபவித்துவிட்டுச் சாகவா பிறந்தவர்கள்? இத்தனை பகுதிகளுக்கும் பொதுவான ஆன்மீக அமுதத்தைப் பருகி அமரத்துவம் பெற அல்லவா பிறந்தவர்கள்?



.......

பாரதத்தின் புராதன மேன்மை, அந்த மேனமை சிதைந்து அது இழிந்து நிற்பது, இனி இந்த இழிவை வென்று அது வீறுகொண்டு எழப்போவது எல்லாம் அலை அலையாக அவருடைய கண்முன் தோன்றின.

(நன்றி : சுவாமி விவேகானந்தர் - பக்கம் : 317 - ரா.கணபதி - இராமகிருஷ்ண மடம்)



அந்நியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று ஆண்டுகள் அறுபதாகின்றன.

எத்தனை பெரிய தேசம்..! எத்தனை விதமான மனங்கள்..! இணைப்பது எது?

கலாச்சாரம்..! பண்பாடு..! நாட்டின் அனைத்து மனங்களிலும் பூரித்திருக்கும் நாம் இந்தியர் என்ற உணர்வு..!

சுதந்திரம் பெற்று, ஒரு முழுச் சுற்று முடித்து, அடுத்த சுற்றில் அடியெடுத்து வைத்திருக்கின்ற அன்னை பூமியே, உன்னை அன்புடன் முத்தமிடுகிறோம். உன்னை இன்னும் செழுமைப்படுத்த, எங்களால் ஆன வாழ்வை அர்ப்பணிக்கிறோம்..!

வந்தே மாதரம்..!