Monday, September 03, 2018

Happy Birthday Kannan.

காலடி மலரென கதிசேர்ந்திட நான் ஓடி வந்தேன் கண்ணா...
உந்தன் கள்சொல்
என்மேல் விழுந்தால் என்ன கனிந்தே போகும் என் உள்ளம் - அழகுனை
அணிந்தே போகும் கண்ணா...  (காலடி)

உன்னை அணைத்திட வேண்டுமடா
உன்னுள் அடங்கிட வேண்டுமடா..
உன்னை அணைத்திட வேண்டுமடா
உன்னுள் அடங்கிட வேண்டுமடா..

பெண்ணைப் பேதை ஆக்கினாய்
என்னைச் சேரும் நாளெதுவோ?
பண்ணைப் பாடிடும் பொழுதிலெல்லாம்
கண்ணன் நாதக் குழலொலி கேட்கின்றேன். மின்னும் (காலடி)

மண்ணில் ஓரடி வைக்கின்றாய்
விண்ணிலும் ஈரடி பதிக்கின்றாய்
மண்ணில் ஓரடி வைக்கின்றாய்
விண்ணிலும் ஈரடி பதிக்கின்றாய்

என்னிலே மூவடி வைத்திருந்தால்
பொன்னடி தாங்கிப் பூத்திருப்பேன்
மன்னா மயிலெழில் மகுடத்திலே
முன்னால் சூட்டிய முதலமுதே. வண்ணக் (காலடி)

***

எழில் முதல்வனுக்குத் தமிழ்ப்பரிசு.