Monday, June 21, 2010

மொக்ஸ் - 21.Jun.2010

ரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பினர் கொஞ்ச காலத்திற்கு முன் நடத்திய கவிதைப் போட்டியில், என் கவிதை ஒன்றும் இருப்பதில் நல்ல இருபதில் ஒன்றாய்த் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது. அறியப்பட்ட கவிஞர்கள் சுகுமாரன் அவர்களும், எம்.யுவன் அவர்களும் நடுவர்களாய் அமைந்து தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதில் பெருமையாய் இருக்கின்றது.

அமைப்பினர் பைத்தியக்காரன்ஜி மற்றும் சுந்தர்ஜிக்கு நன்றிகளும், பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்களும்!

கவிதை :: முரண் உணர் (A)

போட்டி முடிவு அறிவிப்பு :: முடிவுகள்.



சிங்கத்த ஃபோட்டொல பாத்திருப்ப, சினிமால பாத்திருப்ப, டிவில பாத்திருப்ப, ஏன்... கூண்டுல கூட பாத்திருப்ப...

கம்பீரமா க்ரெளண்ட்ல நடந்து பாத்திருக்கியா..?

வெறித்தனமா தனியா பெளலிங்கை வேட்டையாடி பாத்திருக்கியா...?

ஓங்கி அடிச்சா ஒவ்வொண்ணும் சிக்ஸர்டா...

பாக்கறியா...பாக்கறியா...பாக்கறியா...

சிங்கம்...சிங்கம்...சிங்கம்....