Saturday, April 19, 2008

குமுதம் - Coooooool....

வெ.நா. சிவகுமார், சென்னை.

கே: இன்டர்நெட்டுக்கு அடிமையானால் மனநோய் ஏற்படுமாமே?

ப: கண்டிப்பாக. ஏனென்றால் அதில் எழுதுபவர்கள் பல பேர் மனநோயாளிகள்.

நன்றி : குமுதம் . 23.04.2008. பக்கம் :: 28.

இணையம் என்றாலே அதில் எழுதுபவர்கள் மட்டுமே உள்ளனர் என்பது இல்லை. யூட்யூப் போன்ற ஒளி ஊடகப் பரிமாற்ற தளங்களும், கூகுள் மேப்ஸ் போன்ற வரைபடச் சேவை வழங்கும் தளங்களும் இன்னும் பல நாம் அறியாத வகையில் சேவை அளிக்கும் தளங்களும் உள்ளன. இந்திய, தமிழக, ஊரக, உள்ளாட்சி அரசாங்க தளங்களும் தமது பணிகள் பற்றி அவ்வப்போது தளம் வழி கூறி வருகின்றன.

இந்த அரசு வலைப்பதிவர்களைப் பற்றி தான் கூறினார் என்றால், நானும் அதில் ஓர் ஆள் என்பதால் அதைப் பற்றி எனது...

இந்த அரசு என்பவர் யார்? ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்கள் இருந்தவரை அவர் தாம் கேள்வி பதில் பகுதியை நடத்தி வந்ததாக அறியப்பட்டது. இப்போது யார் எழுதுகிறார்கள்? விகடனில் 'ஹாய் மதன்' என்று பகுதி பெயர் இருப்பதால், பதில் கூறுவது மதன் தான் என்பதற்கு ஓர் எழுத்துபூர்வமான ஆதாரம் இருக்கின்றது. ஆனால் இந்த அரசு என்பது யார்?

இவருக்கும் இணையத் தளங்களில் இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஒளிந்து நின்று தங்கள் இஷ்டம் போல் சமூக/ தன் நன்மைக்கு ஒவ்வாத எழுத்துக்களை எழுதும் மிகச் சிலருக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

இது போன்ற பதில்களைப் படிக்கும் ஒரு சாதாரண வாசகன் என்ன செய்ய வாய்ப்பு அதிகம்? 'இணையப் பக்கம் சென்றால் அது ஒரு தீய செயல். குமுதமே சொல்லி விட்டதே!' என்று ஒதுங்குவார். தந்திரம்.

ஆனால் இந்த ஊடகங்களைப் போன்று பணத்திற்காக பக்கங்களை நிரப்பும் அவசர கர்ப்பிணிகள் அல்ல இங்கு இருக்கும் இணையப் பதிவாளர்கள். தமது எண்ணத்திற்கு ஏற்ப, தமக்குப் பிடித்ததை எழுதி வெளியிடுகின்றனர்.

அணையில் மிக்க காலமாக நீர் தேங்கி இருக்கும். பின் ஒரு நாள் அணை திறக்கப்படும் போது, முதல் இரண்டு நாட்களுக்கு யாரும் குளிக்கச் செல்ல மாட்டார்கள். அப்போது, அவ்வளவு நாள் வெளியிட முடியாது தேங்கி இருந்த கசடுகள் நீரோடு சேர்ந்து வரும். இரண்டு நாட்கள் கழித்து தெளிந்த நீர் பொங்கிப் பிரவாகிக்கும்.

அதன்ன, தமிழ் இணையம் துவங்கிய சில காலத்திற்கு சில அழுக்குகள் வரலாம். ஆனால் அத்தோடு ஆற்றின் பெரும் பாகம் நீர் தான் பாயும் என்பதையும் மறக்கலாகாது. காலப் போக்கில் தெள்ளிய நீர் மட்டுமே பாயும்.

இவர்களைப் போன்றவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்பது ஒரு கேள்வி. தேவை இல்லை தான்.

ஆனால் இணையத் தமிழ் பற்றியும், அதில் தானும் பங்கேற்க ஆர்வமுடன் இருக்கும் புதியவர்களை ஆரம்பத்திலேயே பயமுறுத்தி வலைப்பதிவு பக்கம் வராமல் ஓட விட்டு, பதிவர்கள் எண்ணிக்கையை குறைத்து வைத்தே இருக்க வேண்டும் என்ற தீய எண்ணம் இது போன்ற செயல்களில் தெரிவதால் இவற்றை எதிர்த்து குரல் தர வேண்டியதாக இருக்கின்றது.

ரு புது தொழில் நுட்பம் வருகையில் ஏற்கனவே இருக்கின்ற பழைய நுட்பம் பயப்படுவதும், முதலில் அதனை எதிர்க்க முயல்வதும், முடியாமல் போகையில் அதனை ஒட்டி தம்மை மாற்ற முயல்வதும், அதிலேயே சமாதானப்படுத்திக் கொண்டு ஜீவிப்பதும் நடைமுறை.

விகடன் இதை சரியாகப் புரிந்து, வலைப்பதிவு மறுக்க முடியாத மறைக்க இயலாத அடுத்த ஊடகம் என்று புரிந்து கொண்டுள்ளதால், தாமும் அவற்றை ஆதரிப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, தமது பிம்பத்தை இன்னும் ஆழப் பதித்துக் கொள்ளும் முயற்சியில் உள்ளது. அச்சு ஊடகத்தை தாண்டி அடுத்ததாக சினிமா என்ற மாய உலகம் வந்த போது எதிர்க்கப் பார்த்தும் பின் முடியாமல், தாமும் அதனை ஒட்டி வாழ தொப்புள்களாலும் கொங்கைகளாலும் தம் பக்கங்களை நிரப்பினார்கள்.

சினிமாவிற்கு அடுத்து, தொலைக்காட்சி வந்த போது, அதிலும் தமது தொடர்களையும், 'சக்தி கொடு'வை காட்டுவதும் தமது ஆதார பத்திரிக்கை ஜீவனத்திற்காகத் தான் என்று கூறலாம்.

இணையம் என்ற அடுத்த ஊடகம் வந்த பின், தங்களது தளம் அமைப்பும் பதிவுகள் பற்றி தவறான/சரியான செய்திகளை வெளியிடுவதும் தாங்களும் இந்த புது நுட்பத்தை ஆதரிக்கிறோம் என்ற மாய பிம்பத்தை ஏற்படுத்தி, தமது பத்திரிக்கைக்கு உறுதி சேர்ப்பிக்கும் உத்தி என்று நம்புகிறேன்.

குமுதம் இந்த விஷயத்தில் கொஞ்சம் லேட் தான். எனவே தான் ஜூ.வி. வந்து பல ஆண்டுகள் கழித்து தான் ரிப்போர்ட்டர் வந்தது. 'ஜெமினி பிக்சர்ஸும்', 'கோலங்கள்' வந்து பல ஆண்டுகள் கழித்து தான் 'ஆஹா எஃப்.எம்.' வந்தது.

எனவே இந்த விஷயத்திலும் விகடன் தற்போது கையாண்டு வரும் நிலைக்கு குமுதம் வந்து சேர இன்னும் கொஞ்ச காலம் ஆகும். அதுவரை இது போன்ற -ve விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.

அது வரை பாலச்சந்தருக்கும், குஷ்பூக்கும் ஏப்ரல் ஒன்று கல்யாணம் செய்து வைத்த குமுதத்திடம் இருந்து வேறு எந்த வித உயர்ந்த விமர்சனத்தையும் எதிர்ப்பார்க்கலாகாது.

இவர்களது கூட்டுக் கை குலுக்கலைப் பற்றி முன்னமே கூறிய பதிவு ::

இரு நிலைப்பாடுகள்.

அடுத்தது,


இதற்காகவே காத்திருந்தது போல் நடந்த அவசரக் கூட்டங்கள் முடிந்து விட்டன. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பார்த்தவர்கள், பார்க்காதவர்கள், சீடர்கள், வேடர்கள், பாதியில் சந்தித்தவர்கள், வீதியில் பேசியவர்கள் என எல்லோரும் அஞ்சலியைப் பதிவு செய்து விட்டார்கள். பத்திரிக்கைகளில் கைகுட்டை போட்டு இடம்பிடிக்க முடியாதவர்கள் இணையத்தில் இரங்கலை எழுதிக் கொண்டார்கள்.


நன்றி : குமுதம் . 23.04.2008. பக்கம் :: 107.

இதில் சில கேள்விகள் எனக்கு ::

* 'இதற்காகவே காத்திருந்தது' - எவ்வளவு வக்கிரமான வார்த்தை இது! எனக்குத் தெரிந்து சுஜாதாவிற்காக இரங்கிய, அஞ்சலி செலுத்திய (இணையத்திலோ, அச்சு ஊடகங்களிலோ) எவரும் சுஜாதா இறக்க வேண்டும் என்று காத்திருந்ததாகத் தெரியவில்லை. பிறகு எங்கிருந்து இப்படி ஒரு வார்த்தை வந்து விழுந்திருக்க முடியும்? ஒரு வேளை இக்கட்டுரையை எழுதிய மகானுபவர் அப்படி காத்துக் கொண்டிருந்திருக்கலாம்.

* தெரியாதவர்கள் எப்படி அஞ்சலி செலுத்தி இருக்க முடியும்? இன்றைய பொழுதில் உலகத்தில் மூலைகளில் எத்தனையோ இறப்புகள் நடந்து கொண்டே இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் யாரேனும் அஞ்சலி செலுத்தினால் இறந்தவரைத் தெரிந்தவர்களாய்த் தான் இருக்க வேண்டும். இவர்கள் 'தெரியாதவர்கள்' என்று எந்த அளவுகோலை வைத்து கட்டுரையாளர் எழுதினார் என்று புரியவில்லை. 'தெரிந்தவர்கள்' என்று எழுதப்பட்டவர்கள் தெரிந்து கொண்ட அளவிற்கு தெரியாதவர்கள் என்று பொருளா? எனில், இவருக்கு அந்த அளவை யார் அளித்தது? பொது வாழ்விற்கு வந்த பின் ஒருவர் பல விதங்களில் பொது மக்களைப் பாதிக்கிறார். கட்டுரையாளர், சுஜாதா புழங்கிய துறையில் இருந்த படியால், அத்துறையில் புழங்காத அல்லது கட்டுரையாளர் அளவிற்குப் புழங்காத ஒருவர் சுஜாதா பற்றி தெரிந்ததை விட குறைவாகவே தெரிந்து கொண்டிருக்க முடியும். பொது வாழ்விற்கு வந்த பின் தெரிந்து கொண்ட அளவை வைத்து தான், அவர் தம் மனதில் ஏற்படுத்திய பாதிப்பிற்குத் தக்க தான் அஞ்சலிகள் அமைந்திருக்க முடியுமே தவிர, தாம் மட்டுமே அவரைத் தெரிந்து வைத்துள்ளோம் எனவே தம்மைத் தவிர வேறு யாரேனும் பொது வாழ்வு நபரைப் பற்றிக் கருத்து தெரிவிப்பது தவறு என்ற எண்ணம் கட்டுரையாளருக்கு இருக்குமேயானால், அது எல்லோரும் சொல்வது போல் உண்மையிலேயே 'சிறுபிள்ளைத்தனமானது தான்'.

'நீங்க இன்னும் வளரணும் தம்பி..!'.

* அது என்ன வேடர்கள் என்ற ஒரு செருகல்? இது சுத்தமாகப் புரியவில்லை. எதுகை மோனைக்காக எழுதப்பட்டதெனில் மன்னித்து விடலாம். இந்த பத்தியில் இப்பதம் யாரைக் குறிப்பிடுகிறது என்பதைக் கட்டுரையாளர் சற்று தெளிவுபடுத்தினால் நலன்.

* 'பத்திரிக்கை...கைகுட்டை' - இது யாரைப் பார்த்து என்று தெரியவில்லை. இணையப் பதிவாளர்களைப் பார்த்து இருக்காது என்றே நினைக்கிறேன். வலைப்பதிவு வைத்திருக்கும் அச்சு ஊடகத்தில் ஏற்கனவே அறிமுகம் பெற்றிருக்கும் எழுத்தாளர்களை நோக்கித் தான் வீசப்பட்டிருக்க வேண்டும். பின்னே, பொது வாழ்வு நபரின் மறைவிற்குப் பின் நான் போய் 'சார், என்னுடைய இரங்கல் செய்தியை வெளியிடுகிறீர்களா?' என்று கேட்டால் அது ஏற்கப்படுமா? எனவே அது பெரியவர்களைப் பார்த்து சொல்லப்பட்டது தான் என்றே கருதுகிறேன். அவர்களுக்கும் அவ்வாறே தோன்றினால், அவர்கள் எதிர்வினை புரியட்டும். இதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை.

விகடனில் வரிசையாக சுஜாதா கதைகளை வெளியிட்டு சிம்பதியை சில்லறை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, கோட்டை விட்ட குமுதம் யோசித்து, சுஜாதா இல்ல விஜயம் ஒன்றை நிகழ்த்தி துட்டு பார்க்க நினைத்து எழுதிய கட்டுரை இது. போகிற போக்கில் ஒரு வெடியை வீசி விட்டுப் போகலாம் என்ற வயிற்றெரிச்சல் வாக்கியங்களாய் முதல் பத்தியில் வந்து விழுந்து விட்டது.

முன்பே கூறியது தாம். குமுதம் கொஞ்சம் லேட்டாகத் தான் விகடனை ஃபாலோ பண்ண நினைக்கும். அதற்கான அடுத்த அத்தாட்சி இது...!

தொடர்புடைய மற்றும் இரு பதிவுகள் :

http://blog.balabharathi.net/?p=93

http://valai.blogspirit.com/archive/2008/04/19/kumudam.html

Friday, April 18, 2008

கலிஃபோர்னியாவிலிருந்து புதுப்பேட்டைக்கு...

Eagles குழுவின் Hotel California என்ற பாடல்.



அருமையான பாடல் வரிகள் :

On a dark desert highway, cool wind in my hair
Warm smell of colitas, rising up through the air
Up ahead in the distance, I saw a shimmering light
My head grew heavy and my sight grew dim
I had to stop for the night
There she stood in the doorway;
I heard the mission bell
And I was thinking to myself,
'This could be Heaven or this could be Hell'
Then she lit up a candle and she showed me the way
There were voices down the corridor,
I thought I heard them say...

Welcome to the Hotel California
Such a lovely place
Such a lovely face
Plenty of room at the Hotel California
Any time of year, you can find it here

Her mind is Tiffany-twisted, she
got the Mercedes Benz
She got a lot of pretty, pretty
boys, that she calls friends
How they dance in the courtyard, sweet summer sweat.
Some dance to remember, some dance to forget

So I called up the Captain,
'Please bring me my wine'
He said, 'We haven't had that spirit
here since nineteen sixty nine'
And still those voices are calling from far away,
Wake you up in the middle of the night
Just to hear them say...

Welcome to the Hotel California
Such a lovely place
Such a lovely face
They're livin' it up at the Hotel California
What a nice surprise, bring your alibis

Mirrors on the ceiling,
The pink champagne on ice
And she said 'We are all just
prisoners here, of our own device'
And in the master's chambers,
They gathered for the feast
They stab it with their steely knives,
But they just can't kill the beast

Last thing I remember, I was
Running for the door
I had to find the passage back
To the place I was before
'Relax,' said the night man,
We are programmed to receive.
You can checkout any time you like,
but you can never leave!


நன்றி : http://www.mp3lyrics.org/e/eagles/hotel-california/

இதன் Beatஐ எங்கோ கேட்டது போல் இருக்கிறதா? அப்ப, இதையும் கொஞ்சம் கேட்டுப் பார்த்திடுங்க, என்ன?


Get Your Own Hindi Songs Player at Music Plugin

(தலைப்பு எனக்கே ரொம்ப பிடிச்சிருக்கு. இப்பவே சொல்லிக்கறேன். வேற ஏதாவது பதிவுக்கும் இதையே யூஸ் பண்ணினாலும் பண்ணுவேன்...)

மனம் வெட்டவெளியிலே அலைகிறதே...


காற்றே துளியும் அற்ற இருள் பிரபஞ்சம். இருள். இருள். எங்கும் இருள். அருகில், மிக அருகிலேயே கடந்து செல்லும் விண்மீன்கள் வெம்மையால் தடவி விட்டு நகர்கின்றன. குழிக் குழியாய்த் தரைகளில் சாம்பல் நிற பூஞ்சைகளாய்ப் பூத்திருக்கின்றது மெளனம் நிலவில்..!

பொறிப் பொறியாய் மிதந்து கொண்டிருக்கின்றன காற்றில்லாத வெற்று வெளியில் ஒளித் துணுக்குகள். யாருமற்ற தனிமைப் பிராந்தியத்தில், கைகளைத் துழாவியபடி நடக்கிறேன். மென்மணல் மேல் புதைந்து புதைந்து மிதக்க, வெண்ணொளியில் தகதகவென பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது நிலா.

எங்கோ தொலைவில் நீலப் புள்ளியாய் மிதந்து கொண்டிருக்கின்றது பூமிப் பந்து. குண்டூசியின் தலைப் புள்ளிகளாய் கோடிக்கணக்கில் வானத் துணியில் குத்தி பிரகாசிக்கின்றன மீன்கள். சிகப்பாய், மஞ்சளாய், பிரம்மாண்டமாய், புள்ளிகளாய் சுற்றிச் சுற்றி வருகின்றன கோள்கள்.

குளிர் என்ன, கொடும் வெப்பம் என்ன தீண்டாமல் இருக்கின்ற நிலையில் நகர்ந்து கொள்ள தகிக்கின்றது நிலவு. பிரம்மாண்டமான தனிமை சூழ்ந்து நிற்க பரபரவென முன்னால் நின்று கொளுத்துகின்றது மஞ்சள் நிற மிகப் பெரும் அடுப்பாய் சூரியன். தகதகவென அலை அலையாய் மின்னிக் கொண்டே நெருப்பு ஜூவாலைகளை வீசி எறிந்து கொண்டே, எரிந்து கொண்டு இருக்கின்றது.

மெல்ல மண்டி இடுகின்றேன்.

முதுகை எரித்து, கழுத்தின் பரப்புகளில் பெருகி ஓடுகின்றது வியர்வை வெள்ளம். நசநசவென உடலெங்கும் பற்றி எரிய, வெம்மைக் கதிர்கள் உள்ளே ஊடுறுவ பஞ்ச பூதங்களாய் சிரிக்கின்றேன். காற்றாய், அனலாய், புனலாய், பிரபஞ்சமாய், கசங்கி விழ தாங்கிக் கொண்டு சாம்பல் புதர்களில் என்னைச் சிறையிட்டு விட்டு கை தொழுது நிற்கின்றது நிலா.

Thursday, April 17, 2008

பாதச் சுவடுகள் போகும்...



டலளவு வருமெனினும் கடுகளவும் கவலைப்பட்டதில்லை அக்கணத்தை நினைத்து! மேகம் யாவினும் நனைத்து நனைத்து பெய்ய பெருந்துளிகள் உள்ளன எனினும் நிழல் படிகின்ற கலங்கிய குளம் தானே அருந்த நீர் தருகின்றது?

தொலைவில் ஒளிகின்ற சிறுகையின் கடைசி விரல், மறைந்து செல்கையில் தருகின்ற கனத்தை தாங்கிக் கொள்ளும் பாதையில் தான் எத்தனை எத்தனை தடங்கள்? ஈரம் கொண்டு குழைந்த சகதிகளால் உருக் கொண்ட இதன் மேனியைச் சற்றே சுவைக்க கண்ணீரின் வாசம் அடிக்கின்ற உண்மை என்ன?

சலசலவென இலைகளின் மேல் படிந்து என் நடையின் முழுதும் கூட வருகின்ற வெயிலின் கரங்கள் என்னோடு விளையாடி, வெம்மையை உடலிலிருந்து மனதிற்கு உடலுக்கு நகர்த்தும் முயற்சியில் இறங்க, நில்லாது கனக்கின்ற மனதின் அடைப்பையும் தகர்த்தெறிந்து விழி வழி நனைக்கின்ற கண்ணீர் குளிர்மையை மனதிலிருந்து உடலுக்கு நகர்த்த முயல.... எந்நிலையில் கட்டுண்டேன் என்ற குழப்ப நிலையில் பயணம் தடுமாறி நிற்கின்றது.

குளிர்ப் போதுகள் நிழலாடும் கண்களின் படலங்களை அழுத்தமாகத் துடைத்து, தெளிவைக் கொடுக்க கூரிய நகக் கிரீடங்கள் தரித்த விரல்கள் வரவேயில்லை. பொல்லாத கணம் என்று நினைக்கத் தோன்றுகையில், இதுவும் நிலையல்ல என்ற நினைவைத் தேடி வந்து கொடுத்துச் செல்கின்றன, சென்ற காலங்களின் நிறைவுறா வட்டங்கள்.

மெல்ல மெல்ல நிலா உதிக்கையில், உறங்கிப் போக நான் என்ன கல்லெறிந்து விளையாடிக் களிக்கும் குளச் சுழலா என்று கேட்க, இல்லை பகலின் நேரங்களில் பொறிந்த வெப்பம் தகிக்கும் பொழுதுகளைக் கடந்து செல்ல இராப்போதில் அமைதியாக உறங்கச் செல் என்றேன் மனதிற்கு....!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம் நன்றி :: http://www.oceandharma.org/images/Goodbye.jpg.

Wednesday, April 16, 2008

அங்கிள்... அங்கிள்... அங்கிள்...!


"SIM Lockedனு வந்திருக்கு. ஏதோ நம்பர் கேட்டிருக்கு. இவன், என் தம்பி தான், ஏதோ நம்பர் ப்ரெஸ் பண்ணி இருக்கான். இப்படி லாக் ஆகிடுச்சு. இதை ஏதாவது பண்ணி சரி பண்ணித் தர முடியுமா, அங்கிள்...?"

அங்கிள்... அங்கிள்... அங்கிள்...!

சென்னையில் இருந்து நகர்ந்து எர்ணாகுளம் நெருங்கிக் கொண்டிருந்தது சென்னை மெயில். ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் முக்கால் பாகம் சபரிமலைக்குப் போகும் சாமிகளால் நிரம்பி இருந்தது. ஜன்னல்களில் கதம்ப மாலைகள் தொங்கலில் இருந்தன. அரையாடையும், வழியும் தொப்பையும், முகத்தில் முட்களென முளைத்திருந்த வெள்ளையும் கருப்புமான தாடி காற்றில் ஆட, பெட்டிக்குள் நடந்து கொண்டே இருந்தனர் சாமிகள்.

வீட்டில் இருக்கும் போது அசையவே இருந்திராத மூன்று மணி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த பெட்டிகளைத் தழுவி எதிர்த் திசையில் வெகு வேகமாக நழுவிக் கொண்டிருந்தது. இன்னும் இரண்டு மணிநேரத்தின் தொலைவில் 'செங்கன்னூர்' இருக்கின்றது. அங்கு இறங்கி பேருந்து பிடித்து மலைக்குச் செல்வார்கள்.

இந்தச் சிறுமியும், சிறுவனும் கூட அங்கு தான் இறங்க வேண்டியவர்கள் என்று சொல்லி இருந்தார்கள். என்னை அவர்களைக் கவனித்துக் கொள்ளுமாறு கூட வந்து, சேலம் நெருங்குகையில் காலணிகளைக் கழட்டி, நான் சுகமாக பெர்த்தில் படுத்துக் கொள்ள, இறுக்கமான சாக்ஸும், பாலிஷ் மினுமினுத்த ப்ளாக் ஷூவும் அணிந்து கொண்டு இறங்கத் தயாரான பெண் காவலர்கள் இருவரும் சொல்லி இருந்தார்கள்.

சிறுமி இன்னும் பத்தாவது கூட தாண்டி இருக்க மாட்டாள் போல் இருந்தாள். பறக்க விட்ட சின்ன குதிரைவால் முடிக்கற்றையோடு, மென் மஞ்சள் நிற சுடி அணிந்திருந்தாள். காதில் ஏதோ சின்ன கல் மினுத்தது. இது தான் இப்போதைய ட்ரெண்ட் போலும். சிறுவனும் இன்றைய தலைமுறைக்கு ஏற்றார் போல், இறுக்கிப் பிடித்த ஜீன்ஸும், அந்த இரவிலும் இன் செய்த, 77 என்ற NBA நம்பர் பொறிந்திருந்த நீல டீ-ஷர்ட்டும், பழைய விஜய் போன்ற ஒரு ஸ்பெக்ஸும் அணிந்திருந்தான்.

சிறுவன் அவளது தம்பி போல் இருந்தான். அட, தோற்ற ஒற்றுமை எல்லாம் இல்லை. வழியெங்கும் அவர்கள் சண்டை இட்டுக் கொண்டே வந்தார்கள். சிறுமி அவனை மிரட்டிக் கொண்டும், ஏதோ குறை சொல்லிக் கொண்டும் வர, அவனோ காதிலேயே போட்டுக் கொள்ளாமல், இரு கட்டை விரல்களால் செல் போனைப் படுத்திக் கொண்டே வந்தான்.

பொறுமை தாண்டிப் போனால், அவனும் ஏதோ சொல்லித் திட்டுவான். அவ்வப்போது தமிழிலும், சிலசமயம் மலையாளத்திலும் சண்டை நடக்கும். உச்ச கட்டம் தாண்டிய பின் மொழிப் பிரச்னை இன்றி மெளனம் அங்கே நிலவும். சிறிது நேரம் தான்; மிகச் சிறிய நேரம் தான். மீண்டும் அடுத்த சண்டை கிளம்பும்.

இப்படியான ஒரு சூழலில் தான் செல்போன் லாக் ஆகி விட்டிருந்தது.

நானும் என்னால் ஆன டெக்னிக்குகளை எல்லாம் சொல்லி, பின் அதைச் சரி செய்து கொடுத்தேன். ஆனாலும் சரி செய்ய முடியாமல் போனது, அச்சிறுமி சொன்ன 'அங்கிள்....!'

சிறு வயதில் ஒரு ஹேர்டை விளம்பரம் பார்த்திருப்போம்.

ஒரு பெண் தலைமுடியில் ஒரே ஒரு நரைமுடி வந்திருக்கும். அதைப் பார்த்து அவர் வருத்தப் படுவார். அப்போது அவரைக் கடந்து கல்லூரி செல்லும் அவரது தம்பி, 'ஹாய் ஆண்டி' என்று கூறிச் செல்வான். அதிர்ச்சி அடையும் அவர்.. பின்புலத்தில் 'ஆன்ட்டி... ஆன்ட்டி... ஆன்ட்டி...' என்று எக்கோ கேட்டு பயமுறுத்தும். இதற்கு ஏதாவது ஒரு வழி செய்தாக வேண்டும் என்று, ஒரு ஹேர் டையை பூசிக் கொள்வார்.

அடுத்த நாள், அவன் 'ஹாய் அக்கா' என்று சிரித்துச் செல்லும் போது சும்மா போகாமல், ஷூ லேஸ் போட்டுக் கொண்டு இருக்கும் அவரது கணவரைப் பார்த்து 'ஹாய் அங்கிள்' என்று போகின்ற போக்கில் ஒரு குண்டை வீசிச் செல்வான்.

எனக்கென்னவோ அவன் அந்த ஹேர் டை விற்பனையாளனாக இருப்பானோ என்ற சந்தேகம். இவர்கள் இரண்டு பேரும் அதை உபயோகித்தவுடன், வெளியில் தோட்டக்காரர், தள்ளுவண்டி வைத்திருப்ப்பவர் என்று பரப்புவான் போலும்!

அது போன்ற எஃபெக்ட் நேற்று எனக்கு!

ஆமா, வீட்டுல போடறாங்கனு பருப்பு சாம்பரும், தக்காளி இரசமும், ஆஃபீஸுல ஓசியில கூட்டிட்டுப் போறங்கனு பிஸ்ஸா, சிக்கன், மட்டன், ஃபிஷ், தேங்காய் எண்ணெயில் பொறித்த சிப்ஸ், க்ரீம் வழிந்து இனிக்கின்ற கேக், பக்கோடா, வாழைப்பழம் என்று வெரைட்டியாக வளைத்துக் கட்டினால்.. பிறகு என்ன 'மிஸ்டர் வேர்ல்டு லார்டு லபக்குதாஸ்' பட்டமா தருவார்கள்...?

சென்ட் கணக்கில் ஆரம்பித்து விட்ட க்ரெளண்ட், ஆங்காங்கே 'வெள்ளி முளைத்தது' போல் பறக்கத் துவங்கி இருக்கும் வெண் முடிகள்... கன்ஃபார்மே செய்திருக்கும்.

இதெல்லாம் போதாதென்று விழித்துப் பயணித்த நான்கு மணி நேரத்திலேயே, அசோகமித்திரனின் ஒற்றன், Idries Shah-வின் 'Thinkers of East', Partition பின்னணியில் கங்கை நதிக்கரையில் ஒரு குடும்பம் படும் பாடு பற்றிய நாவல் (பெயர் ஞாபகமில்லை. நேற்று தான் படிக்கத் துவங்கி உள்ளேன்.) , குமுதம் ரிப்போர்ட்டர் என்று வகை தொகை இல்லாமல் படித்துக் கொண்டே வரும் ஒரு மனிதனைப் பார்த்து, '100 எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்' என்ற குறு நூலை 10ரூ. கொடுத்து வாங்கி, செல்போனில் எழுத்தெழுத்தாக டைப் அடித்து சேமித்துக் கொள்ளும் சிறுமி 'அங்கிள்' என்று விளிக்காமல் வேறு என்னவென்று கூறுவாள்?

இருந்தாலும் வயதாகிக் கொண்டே செல்வதை ஒப்புக் கொள்ளாத மனம் கூறுகிறது....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!

Monday, April 14, 2008

ஒரு அண்டை மாநில காமெடி.

தேச்சையாக இந்த வீடியோவைப் பார்த்தேன். உங்கள் பார்வைக்கு.

விஷூ ஆஸம்சகள்.

னைவர்க்கும் இனிய விஷூ வாழ்த்துக்கள்.







Sunday, April 13, 2008

மோக்ளி - Dramatic Life.

ரம்ப காலத்தில் ஒரு டேப் ரிக்கார்டர் வீட்டில் இருந்து வந்தது. அதில் தான் 'உயிரே உனக்காக' மற்றும் 'நானும் ஒரு தொழிலாளி' என்ற காம்பினேஷன் கேஸட் (TDK) கேட்ட நினைவு இருக்கிறது. ஒரு முரை அதில் ஏதோ ரிப்பேர் ஆகி விட , அதைச் சரி செய்யக் கொடுத்த கடையில் ஸ்வாஹா செய்து விட்டு கொஞ்சம் பைசா கொடுத்தார்கள்.

அத்தோடு பாடல்கள் கேட்கும் பழக்கம் வானொலி (His Master's Voice) மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. அதுவும் ஒரு பழைய காலத்து வஸ்து. பெரிய செவ்வகப் பெட்டி. முகத்தின் அடிப்பக்கம் இரு குமிழ்கள். சட்டை பட்டன் பெரிய சைஸ் போல் இருக்கும். ஒன்று ஆன் செய்து, வால்யூம் கூட்ட, குறைக்க உதவும். மற்றொன்று ட்யூன் செய்ய.

முகத்தின் மேல்பாகம் 80% பட்டை பட்டையாய் இருக்கும். அதன் வழியாகத் தான் ஒலி கேட்கும். குமிழ்கள் அருகில் ஸ்கேல் போல் பல எண்கள். எஃப்.எம். ஏ.எம் என்று பின்பு தான் புரிந்தது. வானொலி ஆன் செய்ததன் அடையாளம் ஒரு ரேடியம் நிற ஒளி அந்த அளவுஸ்கேலின் உடலெங்கும் பரவும். குமிழைத் திருப்பிக் கொண்டே பாடல்கள் , நாடகங்கள் கேட்போம்.

வானொலியின் முக்கிய பங்கு நேரம் அறிவதற்காகத் தான் இருந்து வந்தது. காலை 8 மணிக்கு பள்ளிக்கு பேருந்து இருக்கின்றது. 7:30க்கு திருச்சி வானொலியில் பாடல்கள் வைக்க ஆரம்பிப்பார்கள். அதிகமில்லை ஜென்டில்மேன், மூன்றே பாடல்கள் தான். முதலில் புதுப்பாடல். இரண்டாவதாக மீடியம் கால பாடல். மூன்றாவதாக பழைய பாடல். இந்த வரிசையும், வகைப்பாடும் மாறுவதே இல்லை. சரியாக இரண்டாம் பாடல் முடிந்தவுடன் கிளம்பி விடுவோம். அப்போது தான் பஸ் ஸ்டாப்பிற்குச் செல்ல கரெக்டாக இருக்கும்.

8 மணிக்கு பாடல்கள் முடிந்தவுடன் டெல்லிக்கு அலைவரிசை மாற்றப்படும். முதல் கால் மணிநேரம் இந்தியிலும், பின் அடுத்த கால் மணி நேரத்திற்கு ஆங்கிலத்திலுமாக செய்திகள் சொல்லப்பட, 08:30 ஆகி இருக்கும்.

சனிக் கிழமைகளில் மட்டுமே அவற்றை கேட்க முடியும். கோவை வானொலியில் 08:30க்கு நாடகம் போடுவார்கள். அற்புதமாக இருக்கும். சில சமயம் கொங்கு வட்டார வழக்கில் நாடகங்கள் இருக்கும். கேட்க கேட்க இனிமை...!

அப்படி ஒரு சனிக்கிழமையில் கேட்ட ஒரு நாடகம் நினைவுக்கு வருகின்றது. சகுனி ஏன் கொளரவர்களுக்கு கூட இருந்தே குழி பறித்து, பாண்டவ மற்றும் கெளரவ வம்சங்கள் பகை கொள்ள காரணமாய் இருந்தார்? அவரது வாழ்வில் இவர்களால் ஏற்பட்ட பிரச்னை என்ன? என்பதை சொல்லி இருந்தார்கள். நன்றாய் இருந்தது.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

இன்றைக்கும் 'ஒரே நாள் உனை நான்..' பாடலைக் கேட்டால் திருச்சி வானொலி தான் நினைவுக்கு வருகின்றது.

ஒன்பதாம் வகுப்பின் பாதியில் ஒரு டேப் ரிக்கார்டர் வந்தது. மாடர்னாக வானொலி, டேப், ரிக்கார்டர் எல்லாம் இருந்தன.

அதில் தான் எல்லா சித்து விளையாட்டுகளும் விளையாடி, எக்கச்சக்க அடிகள் வாங்கிய்து நடந்தது.

பாடல் கேஸ்ட்களை எல்லாம் உருவிப் போட்டது, புதிது புதிதாக பாடல்கள் ரெக்கார்டிங் செய்வது, அதிலேயே சொந்தக் குரலில் பாடுவது (கரோக்கி), பேசுவது, பழைய கேஸட்டுகளை குரல் அழிப்பு... என்று பல விதங்களில் இன்று PodCasting செய்வது போல் பல வேலைகள் செய்தோம்.

பிறகு தான் அறிமுகம் ஆயினர் எஸ்.வி.சேகர் மற்றும் கிரேஸி மோஹன் நாடகங்கள்.

ஒய்.ஜி.மகேந்திரன், காத்தாடி இராமமூர்த்தி, பூர்ணம் விஸ்வநாதன், ஆர்.எஸ்.மனோகர் என்று பல ஜாம்பவான்கள் நாடகங்கள் இருந்தாலும் இவர்கள் இருவரின் நாடகங்கள் தான் மிகவும் கவர்ந்தனவாக இருந்தன.

அவற்றில் கிரேஸியின் நாடகங்கள் கொஞ்சம் பிராமண டச் இருந்து கொண்டே இருக்கும். இன்று வரை அந்த நிழல் படிவதை அவரும் விலக்க முயற்சி செய்யவில்லை என்றே தோன்றுகின்றது. அதை அவர் விரும்பியே செய்வது போலவும் இருக்கிறது. சேகர் திறமையாக அது போன்ற தவற்றைச் செய்யாமல், பொதுத் தமிழை பயன்படுத்தியதால் எல்லோரையும் எளிதாக ரீச் செய்ய முடிந்தது.

சேகரின் நாடகங்களில் அவரைச் சுற்றியே கதை இருக்கும். செய்வது போலவும் இருக்கும். கிரேஸி அப்படி எல்லாம் செய்யாமல், எல்லோர்க்கும் சம வாய்ப்பு கொடுப்பது போல் இருக்கும்.

சேகரின் நாடகங்களில் வண்ணக் கோலங்கள், அதிர்ஷ்டக்காரன், பெரியதம்பி, 1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி, காட்டுல மழை, காதுல பூ, மகாபரதத்தில் மங்காத்தா ஆகியனவும், கிரேஸியின் நாடகங்களில் மீசை ஆனாலும் மனைவி, சாட்டிலைட் சாமியார், ரிடர்ன் ஆஃப் கிரேஸி தீவ்ஸ் ஆகியனவும் மிகவும் பிடித்தனவாக இருக்கின்றன.

அமுல் மில்க் பவுடர், ஹார்லிக்ஸ், மாஸ்,கிஸான் ஜாம்.... இவற்றுக்கும், இப்பதிவுக்கும் என்ன தொடர்பு என்று குழம்ப வேண்டாம். சனிக்கிழமை பகல்களில் சும்மா இருக்கையில் இந்த நாடகங்களை டேப் ரிக்கார்டர்ல் ஓட விட்டு, இவற்றை எல்லாம் ஸ்பூனால் எடுத்து 'இது தான் லாஸ்ட் ஸ்பூன்' என்று சொல்லிக் கொண்டே பூரா பாட்டிலையும் காலி செய்து விட்டு, சுவை பழகி, நாடகம் கலந்து... இப்போது நாடகங்களைக் கேட்கும் போது அவற்றின் சுவை நினைவுக்கு வந்து, இவற்றைச் சாப்பிடும் போது நாடக வசனன்களும், அச்சூழலும் நினைவுக்கு வந்து, Pavlov's Dog Experiment-ஐ ருசுப்படுத்துகின்றன.

இன்று வரையில் பாடல்கள் கேட்கப் போரடிக்கையில் அமைதியாக ஏதேனும் ஒரு நாடகத்தை ஓட விட்டு (இப்போது கணிணியில்..!) கேட்டுக் கொண்டே வேலைகள் செய்வதிலும், இன்றி படுத்துக் கொண்டு கழுத்து வரை போர்த்திக் கொண்டு சும்மா படுத்திருப்பதிலும் சுகம் இருக்கத் தான் செய்கின்றது.