Thursday, October 23, 2008

அம்மா - தீபாவளி சிறப்புச் சிறுகதை!

ட்டென வெட்டித் திரும்பும் பாறைகளாலான நிலப்பகுதியை வந்து வந்து மோதும் பெருங்கடலில் திசையென்று எதைச் சொல்வது? எது கிழக்கு? எது மேற்கு? எது தெற்கு...? எல்லாம் ஒரே நீர் நிலை. வாழும் வசதிக்கேற்ப பெயர் சொல்லி, திசை சொல்லி, பிரித்து, வகுத்து, எல்லை கட்டி....

மக்கள் கூட்டம். கறுப்பு மண்ணில் விளையாடினர். மென் அலைகள் புகுந்து புறப்படும் சிறு பாறை இடுக்குகளில் அமர்ந்து நனைந்தனர். அலை அடங்கி அமைதியாகும் எல்லைப்புறங்களில் நின்று பாதம் சிலிர்த்தனர். விரல்களின் இடையில் பின் வாங்கும் உப்புநீர் வாரிப்போகும் மணல் வெளியில் கொஞ்சமாய்ப் புதைந்தனர். செங்கல் தடுப்புகளில் அமர்ந்து கடலை சாப்பிட்டனர். ஐஸ் சைக்கிள். மசாலா சுண்டல். பாசி மாலைக் கடை. போட்டோ ஸ்டுடியோ. சுனாமி தோட்டம். கடைசி எல்லை மண்டபம். நடு வான் வெயில். குமரி.

கரையோரத்தில் இருந்து, என் வீட்டிற்குச் செல்ல வேண்டும். குழந்தைகள் உணவிற்காகக் காத்திருப்பார்கள். பசியோடு களைத்திருப்பார்கள். உணவை எடுத்துக் கொண்டேன். வேடிக்கை பார்த்தது போதும். கிளம்பினேன்.

என்ன... வெயில் இன்று இப்படிக் கொளுத்துகின்றது...? பிற்பகலில் மழை வருமா...?

அரபிக் கடலில் இருந்து நகர்ந்து, செவ்வகக் கடைகளின் இடையே புகுந்து, கொஞ்சம் மேடேறி என் வீட்டை அடைய முயல்கையில்...

மறுபடியும் கூட்டம்...!

அடிக்கடி இதே பிரச்னை. என் வீட்டின் அருகிலேயே இந்த காலணி பாதுகாப்பிடம் இருப்பது எத்தனை சிரமம் எனக்கு..? என் மனம் பதறத் தொடங்கியது. இவர்களை எப்படியாவது விலக்கி விட்டுப் போக வேண்டும். என்னை என் வீட்டிற்குச் செல்ல விடுவார்களா..? என் பிள்ளைகள் பசியோடு துடித்திருக்குமே..! கடவுளே..! அழுகிறேன்.

ழைய ஃபேன் ஒன்று மெதுவாக கைகள் வீசிக் கொண்டிருந்தது. கடற்காற்றின் அனல் வீச்சும், உப்புப் படிவமும் விழுந்து விழுந்து கரங்கள் அரித்து, ஏனோ கடைசி மூச்சில் முட்டிக் கொண்டிருக்கும் கிழவனைப் போல் சுற்றியது.

உட்கார்ந்திருந்த சரோஜாவுக்கு வேர்த்துக் கொண்டே இருந்தது. என்ன அனல் இது...? முகத்தில் தீக் கங்குகளை வாரி வாரிப் போடுவது போல்...! முந்தானையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டே இருந்தாள். வியர்வை பட்டுப் பட்டு ஒரு வித நசநச ஈரத்தோடு சாயம் இழந்து கொண்டே இருந்தது அது. துடைக்கும் போதெல்லாம் அந்த சாயம் நெற்றியையும், பழைய மக்கிய வாசனை அவள் மூக்கையும் அடைந்தது.

சதுர மர வரிசைகளில் இருக்கும் செருப்புகள் அவளுக்கான காற்றை அடைத்துக் கொண்டே இருந்தன. வித விதமான, வகை வகையான செருப்புகள்!

பிளாஸ்டிக் பூ வைத்த, கண்ணாடி பதித்த, பழுப்பு நிற, வழு வழு கவர் போட்ட, ஹை ஹீல்ஸ், ரப்பர், தோல் வகையறாக்கள், லேஸ் விலகிய ஷூக்கள், கட் ஷூக்கள், உரித்துச் செருகிய கறுப்பு சாக்ஸுகள்...!!!

தேசத்தின் சகல மண்ணையும் அங்கே பார்க்கலாம். எங்கெங்கோ நடந்து வரும் கால்களின் நிழல்கள் செருப்புகளோடு காத்திருக்கும், உடையவர்களுக்காக! எத்தனை எத்தனையோ செருப்புகளை எடுத்து வைத்து அவள் விரல்கள், அவற்றின் நகங்கள் எல்லாம் பல மாநில மண் வாசனை.

மதிய உணவிற்குச் சென்ற பலராமன் இன்னும் வரவில்லை. எங்கே சுற்றிக் கொண்டிருக்கிறானோ..?

ஒரு வடக்கத்தி கோஷ்டி முற்றுகையிட்டது.

அவர்கள் மெளனமாக இருப்பதை அறியாத கூட்டம் போலும். அல்லது கூட்டமாய் இருப்பதாலேயே பேசிக் கொண்டே இருக்கிறார்களாய் இருக்கும். தனித்தனியாய் வந்திருந்தால் யாரிடம் என்ன பேச முடியும் அவர்கள்? அவர்கள் மட்டுமல்ல, யாரிடமும் யார்தான் என்ன பேச முடியும்..?

பல வண்ண நகைகள், இளம் ஆரஞ்சு தலைப்பாகைகள், இழுத்துக் கட்டிய வேட்டி, வெள்ளை நுரைத்த மீசைகள், புருவங்களில் காற்றில் திரியும் முடிகள், வயிறு தெரியும் இடது பக்க சேலைகள், கை நிறைய வளையல்கள். இவர்களும் இந்தியர்கள்.

ஒரு கிழவன், ஒரு கிழவி. ஒரு பெரியவன். ஓர் ஆண். ஒரு பெண். புதிதாக மணமானவர்களாக இருக்க வேண்டும். அவள் கைகளில் ஒரு பிஞ்சுக் குழந்தை. விரல்களை மூடி, விழிகளை மூடி, பொன்முடி சுருண்டு, முகம் மட்டும் வெளித் தெரிய துண்டால் மூடி...!

சரோஜா பார்க்கும் போது, அவர்களது தலைகளைத் தாண்டி ஒரு வெள்ளை மேகம் எங்கோ அவசரமாகக் கிளம்பி பறந்து கொண்டிருந்தது. பாரத தேவி சிலையின் கீழ் ஒரு நாய் சுருண்டு படுத்திருந்தது. அடிக்கும் வெயிலின் அதன் வால் கண்டிப்பாக பொசுங்கத் தொடங்கி இருக்கும். ஒரு குருவி பறந்தது. நிழல் தேடி நகர்ந்த ஒரு ஜோடி ஒரு புல்வெளிச் சேரில் அமர்ந்தனர்.

செருப்புகள் சரோஜாவின் பார்வை எல்லையைச் சுருக்கின.

அவள் ஒவ்வொன்றாக ஜோடி சேர்த்தாள். கொத்தாக எடுத்தாள். இப்போது அவள் கைகளில் நாட்டின் ஒரே பாலைவனத்தின் மென் மணல் மணம். காலியாக இருந்த இடத்தில் நிரப்பினாள்.

கூட்டம் மண்டபத்தின் உள் சென்றது.

இன்னும் பலராமன் வராதது, அவளுக்குள் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. ஏன்..? ஏன் இன்னும் வரவில்லை..! அவன் வீட்டுக்குப் போய்த் தூங்கி விட்டானா...? இல்லயே, எப்படியும் வந்து விடுவானே..!

கையில் இருந்த குட்டி வாட்ச்சைத் திருப்பிப் பார்த்தாள். மணி ஒன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.

அவள் பரிதவிக்கத் தொடங்கினாள். அவளது குழந்தையின் முகம் கண்களில் வந்தது. அய்யோ..! குழந்தை சாப்பிடாமல் நமக்காக காத்திருப்பாளே! அவள் ஸ்கூலின் உனவு இடைவேளை முடியும் நேரம் நெருங்குகின்றது. பலராமன் வந்தால் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, சீக்கிரம் போய் குழந்தைக்கு உணவு ஊட்டி விட்டு வரலாம். ஒயர் கூடையில் இருந்த டிபன் பாக்ஸையும், வாட்டர் பாட்டிலையும் , பாதையையும் மாறி மாறிப் பார்க்கத் தொடங்கினாள்.

அவளால் உட்கார முடியவில்லை. அங்குமிங்கும் அலைபாய்ந்தாள். குழந்தை பசியால் வாடி அமர்ந்திருக்கும் காட்சி அவள் மனக் கண்ணில் தெரிந்தது. அவளுக்கு அழுகையே வந்து விடும் போல் இருந்தது.

"ங்க அக்டோபர் ரெண்டில் சூரிய ஒளி நேராக காந்தி அஸ்தி மேலயே விழும். தொட்டுக் கும்பிட்டுக்குங்க. வாங்க. இப்படி வாங்க. இது காந்தி போட்டோ. இது கஸ்தூரிபாய் கூட எடுத்தது. போட்டோ எடுத்துக்குங்க. எல்லாரும் நில்லுங்க. நான் எடுக்கறேன். மாடிக்குப் போகலாம் வாங்க.."

கைடு வழிகாட்டிச் சொல்லிச் செல்ல வடக்குக் கூட்டம் அவரைத் தொடர்ந்து சென்றது. உடைந்த இந்தியில் அவர் பேசுவதை இவர்கள் புரிந்து கொண்டு, தமக்குள் உணர்ந்து கொண்டனர்.

குழந்தை அழத் தொடங்கியது.

வெளியே அலைகளின் பேரிரைச்சல். உப்புக்காற்று அனலை அள்ளி அள்ளி வீசியது. கட்டிடத்தின் மஞ்சள் சுவர்களில் பட்டு, கண்ணாடி ஜன்னல்களில் அசைந்து வழிந்தது. அனைத்தையும் தாண்டி அந்த அஹிம்ஸை மண்டபத்தில் அழுகை எதிரொலித்துப் படர்ந்தது.

அவளுக்குப் புரிந்து போயிற்று. குழந்தை பசிக்கு அழுகின்றது. பால் கொடுக்க வேண்டும். இந்த மண்டபத்தை கண்டு விட்டு, வெளியே போய் மதிய உணவு தேடலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். அதை மூன்று மாதக் குழந்தைக்கு சொல்ல வேண்டாமா? அது பசியில் அழத் தொடங்கி விட்டது.

வளைவான படிக்கட்டுகளில் இதர அனைவரும் சென்று விட அவள் மட்டும் குழந்தையோடு ஓர் இடத்தில் அமர்ந்தாள். பின் கொக்கிகளைப் பிரிப்பதற்கு முன், இயல்பான கவனத்தோடு சுற்றுமுற்றும் பார்க்கச் சலிப்புற்றாள்.

பெண்ணாய்ப் பிறந்ததன் காரணத்தை அறிந்த தினத்தில் இருந்து அவள் இந்தப் பார்வையை சந்தித்து வருகிறாள். ரயில் பயணத்தில், சந்தைக்குச் செல்கையில், தியேட்டருக்குச் செல்கையில் எங்கு சென்றாலும் தண்ணீர் எடுக்க வேண்டி, பாலைவனத்தில் நெடுந்தொலைவு குடத்துடன் நடக்கையில் வழியில் காணும் பிணந்தின்னி கழுகுகளின் பார்வையை நினைவுறுத்தும் பார்வைகளை அவள் தினமும் எதிர் நோக்குகிறாள்.

குழந்தையின் அழுதல் அதிகரித்தது. இவளுக்கும் அழுகை வரப் பார்த்தது.

சட்டென ஒரு தீர்மானத்திற்கு வந்தவள் போல் எழுந்தாள்.

லுங்கியை பாதி மடித்துக் கட்டி, ஒரு திட்டின் மேல் ஒற்றைக் காலால் சாய்ந்து, ஒற்றை பீடியை மாறி மாறி வலித்துக் கொண்டு அவளை ஓரக்கண்ணால் வெறித்துக் கொண்டிருந்த அவன்களின் அருகில் சென்று, "பைய்யா...!" என்று நீட்டினாள். திடுக்கென்று ஆனார்கள். பீடியை நழுவ விட்டார்கள். லுங்கி தானாக ஒழுங்கிற்கு வந்தது. கைகள் அவைகளாக நீட்டி வாங்கிக் கொண்டன.

புது ஸ்பரிசத்தில் தாயின் வாசம் இல்லாததை உணர்ந்த குழந்தை அழுகையை நிறுத்தி, 'யார் இது..?' என்பது போல் பார்த்தது. அதற்கு, இவர்கள் முகங்கள் எங்கோ அடிபட்ட குரங்குகள் போல் தோன்றி இருக்க வேண்டும். பொக்கை வாயால் சிரித்தது.

அவள் கொஞ்சம் தள்ளி நின்று பின்களை நீக்கத் தொடங்கினாள். அவன்கள் இவள் பக்கம் பார்க்கவேயில்லை. குழந்தையின் முகம் பார்த்து செயலிழந்து நின்றனர். நெருப்பாய் அவர்கள் முகம் சுட்டது.

மேலே புடவையை இழுத்துப் போட்டு மறைத்துக் கொண்டு அவள் கை நீட்டி, "பைய்யா...மேரா கிரிதர்நாத்...!" எனக் கேட்க, அவள் பக்கம் திரும்பாமலேயே அவர்கள் குழந்தையை கொடுத்து விட்டு, அவசர அவசரமாக நீங்கினார்கள்.

குழந்தையை அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு, மாரோடு ஒட்டி, கண்கள் மூடினாள்.

கொஞ்ச நேரம் கழித்து, அவள் கண்கள் திறந்து, வெட்ட வெளிக் காற்றின் வழியே கீழே பார்த்த போது, ஒரு பெண் வேக வேகமாகச் சென்று கொண்டிருந்தாள். அதில் இருந்த அவசரம் இவளுக்குள் ஒரு ஒற்றுமைத்தன்மையைச் சொல்லியது.

டன்காரன்..! அடுத்த தடவை இன்ஸ்பெக்ஷன் வரும் போது, ரிப்போர்ட் செஞ்சிடணும். சாப்பிட போறேன்னுட்டு யாராவது ஒரு மணி நேரம் கழிச்சு வருவாங்களா..? ஒரு மணி நேரம் முள்ளு மேல இருக்கற மாதிரி இல்ல இருந்தேன்...? செருப்பு குடுக்க வர்றவங்க கிட்ட சரியா வாங்காம, கேட்கறவங்க கிட்ட சரியானத குடுக்காம... எல்லாம் இவனால!

கேட்டதுக்கு என்ன சொல்றான், 'பொண்டாட்டிக்கு ஒடம்பு சரியில்ல, ஆஸ்பத்திரி போய்ட்டு வந்தேன்'னு சொல்றான். பொய். அத்தனையும் பொய்.

இல்ல. உண்மையாவும் இருக்கலாம். ரெண்டு நாளுக்கு முன்னாடி பார்த்தப்ப கூட பொன்னம்மா இருமிக் கிட்டு தானே இருந்தா. பலராமனுக்கு பொண்டாட்டி மேல பிரியம் ரொம்பத் தான். அதுக்கு என் புள்ள சாப்பாடு நேரம் தான் கெடச்சுதா..?

ஐயோ.! மணி ஒண்ணு இருவது ஆகப் போகுது. என் புள்ள பசியோட இருக்குமே! பகவதி தாயே!

சரோஜா அடிக்கின்ற அனல் வெயிலுக்கு முந்தானையை முகத்திற்கு மூடிக் கொண்டு கிட்டத்தட்ட ஓடினாள். உடலெங்கும் பொங்கிப் பொங்கிப் பெருகியது வியர்வை. டிபன் பாக்ஸும், வாட்டர் கேனும் குலுங்கக் குலுங்க விரைவான எட்டுகள் போட்டாள்.

"நிறுத்துங்க.. நிறுத்துங்க...!" சற்று உரக்கவே கூவிக் கொண்டு அடைக்கப்பட்டுக் கொண்டிருந்த அந்த கேட்டை அடைந்தாள்.

நாற்காலியில் அப்போது தான் அமர்ந்திருந்த வாட்ச்மேன், "என்னம்மா...? இப்ப வர்றீங்க..? லஞ்ச் டைம் முடிஞ்சிருச்சேம்மா..!" என்றார்.

"ஐயா..! வேலையை முடிச்சிட்டு வர நேரமாகிடுச்சுங்க..! பாருங்க, என் புள்ள பசியோட இருப்பா. பத்து நிமிசம் விடுங்க. சாப்பாடு ஊட்டி விட்டுட்டு போயிடறேன்..!"

அவர் இண்டர்காம் வழியாக செய்தி அனுப்பி, II - பி செக்ஷனில் இருந்து வள்ளியை வரச் செய்தார்கள்.

அம்மாவைக் கண்டதும் அவள் முகம் முழுதும் சிரிப்பு. பாய்ந்து வந்தாள்.

"வள்ளிக் கண்ணூ...!" பாய்ந்து கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தங்கள் கொடுத்தாள்.

"வள்ளிம்மா..! ஐயோ..! என் புள்ள அம்மா சாப்பாடு கொண்டு வரலைன்னு முகமெல்லாம் வாடிப் போயிருக்கே..!"

"இல்லம்மா..! நான் சாப்புத்தேன்..!"

"அப்படியா..?யாரு குடுத்தா..?"

"அகஸ்தின் மம்மி, பாபு மம்மி, மீனா மம்மி.. அப்புதம்... அப்புதம்... லீலா மிஸ்.. எல்லாரும் லஞ்ச் குடுத்தாங்க..! மம்மிவர்லையானு கேத்தாங்க...இல்லனு சொன்னன்... அவங்களே ஊத்தி வித்தாங்க...!"

"பகவதி தாயே..! என் செல்லம்...! என் பட்டுக்குட்டி...! சரி, இந்தா அம்மா உனக்குப் பிடிச்ச பருப்பு சாதம், மீன் கறி எல்லாம் ஒண்டு வந்திருக்கேன். சாப்டுவியாம். சரியா..?" பாக்ஸைத் திறந்து ஊட்டி விடத் தொடங்கினாள்.

வாலைச் சுருக்கியபடி ஒரு மஞ்சள் நிற நாய், அந்த வேப்ப மரத்தடியில் வந்து நின்றது. அதன் காலைச் சுற்றி நான்கு குட்டிகள்.

"மம்மி...! டாமிக்கும் கொஞ்சம் லஞ்ச் குது...! பாவம், யாருமே டாமிக்கு லஞ்ச் தரவே இல்ல..! நாம கொஞ்சம் லஞ்ச் குதுப்பமா..?" கேட்டாள் வள்ளி.

கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது சரோஜாவிற்கு..! ரெண்டு கைப்பிடி சோறு பிடித்து கீழே வைத்தாள். அந்த நாய் அவசர அவசரமாகத் தின்றது. அதன் குட்டிகள் அதன் மடியைக் கவ்வின.

அவற்றின் வால்கள் ஆடிக் கொண்டே இருந்தன.

நான் இப்போது மறுபடியும் என் வீட்டை நெருங்கினேன். கூட்டம் கம்மி தான். என்னை யாரும் கவனிக்கவில்லை. படபடப்பாய் வீட்டுக்குள் நுழைந்தேன்.

என் குழந்தைகள் சட்டென என் வருகையைக் கண்டறிந்து கொண்டன. இன்னும் கண்கள் கூட சரியாகத் திறக்கவில்லை. என் ரத்தம் அல்லவா..? தாய் வாசம் என்று ஒன்று பிறகு எதற்காக இருக்கின்றது...?

கடவுளே...! பசியோடு வாய் திறந்து....!

முதலில் இந்த வீட்டை மாற்ற வேண்டும். வேறு எங்கு போவது..? கடற்கரையைச் சுத்தம் செய்கிறோம் என்று, எல்லா மரங்களையும் வெட்டி விட, கொளுத்தும் முக்கடற்கரைக்கு இந்த காந்தி மண்டபச் செங்கல் சுவர்க் கூடு தான் பாதுகாப்பு..!

வாழ்க நீ எம்மான்..! நீர் இறந்தும், எமக்கு ஒரு வகையில் காப்பு..!

வாயோடு கவ்விக் கொண்டு வந்திருந்த புழுத் துண்டை வெட்டி வெட்டி என் பிள்ளைகளுக்குத் தரத் துவங்கினேன்.

***

ஆசிரியர் குறிப்பு ::

இந்தக் கதை என் அருமைத் தம்பிக்கு பரிசு.

சென்ற முறை கன்னியாகுமரிக்குச் சென்றிருந்த போது, காந்தி மண்டப என்ட்ரன்ஸில், காலணிகள் விடும் இடத்தில், சுவற்றின் உள்ளே பார்க்கச் சொன்னான். பார்த்ததில், நான்கைந்து குருவிக் குஞ்சுகள் வாய் திறந்திருந்தன. 'ஐயோ..! உணவிற்காகக் காத்திருக்கின்றனவே! நாம் இப்படி இவ்விடத்தில் கூட்டமாய் நிற்பதால், இதன் தாய் உணவோடு சுற்றிச் சுற்றி வருகிறாரோ..?' என்ற எண்ணமும், காலணி பாதுகாப்பு அம்மணியும், மண்டபத்தின் உள்ளே கண்ட பால் கொடுக்கும் வடக்கத்துப் பெண்ணையும் இவ்வளவு நாட்கள் மனதிற்குள் அசை போட்டு, தாய்மை என்னும் ஒரே புள்ளியில் கொண்டு வர முயன்று எழுதப்பட்டது இக் கதை.

கதையில் எத்தனை தாய்மைகள் இருக்கின்றன என்று கமெண்டிப்போர்க்கு ஸ்பெஷல் தீபாவளி வாழ்த்துக்கள். மற்றவர்களுக்கு ஆர்டினரி வாழ்த்துக்கள் தான்..!! ;-))

Wednesday, October 22, 2008

மழை பெய்தலினால்...!

பெய்கின்ற
பெரு மழைக்குப்
பயந்து,
இறுக்கச் சாத்திய
ஜன்னலின்
இடுக்கு வழி
நுழைந்து,
ஒற்றை அறைக்குள்
சுற்றிச் சுற்றி
அலைந்து,
'சொத்'தென
அடிக்கப்பட்டு
இறந்தது
தடி புத்தகத்தால்
ஒரு பூச்சி!

***

மழை நின்ற
நிமிடங்களுக்குப் பின்
அடியில் நின்ற
அனைவரையும்
நனைத்து,
மரம் பெய்தது.

***

எண்ணெய் வழியும்
சாலை,
குரல் கொடுக்கும்
தகரக்கூரை,
நிறைத்துப் பாயும்
சாக்கடை,
தூசு நீங்கும்
கறுப்புக் குடை,
ஆவி பறக்கும்
மயானம்...
இல்லாத ஒன்றை
எடுத்துக் காட்டுகிறது,
திடுமென பொழியும்
மாமழை!

***

ஒரு கையில்
மழை பிடித்தேன்.
மறு கையில்
காகிதக் கப்பல்.
பார்த்தால்,
மழைக்கு
உள்ளும் கப்பல்.
வெளியும் கப்பல்.

***

வானம் அழுகிறது
என்கிறார்கள்.
தேவாசுரப் போர்
என்கிறார்கள்.
வருண பகவான்
வருகிறார்
என்கிறார்கள்.
பகல் மழையில்
நரிக்கு கல்யாணம்
என்கிறார்கள்.
மேகம் மோதும்
மின்சாரம்
என்கிறார்கள்.
அம்மோனியா தூவினால்
அமோகப் பலன்
என்கிறார்கள்.

பாயும் குதிரை,
கோமாளி,
அரக்க முகம்,
பூந்திப் பொட்டலம்,
யானை,
ரோஜாப் பூ,
தேர்,
அப்பா முகம்...

என்னென்னவோ
வடிவங்கள் காட்டினாலும்,
பூக்குடையைப் பிடித்து
வீதியில் நடக்கும்
அந்தச் சிறுமியை
நனைக்காது
எல்லா மேகமும்
ஒரே
மழையாய்ப்
பெய்கின்றன.

***

மற்றும் சில ::

ஒரு மழை நாளின் இரவில்.

இவன்..!

தூறல் போடும் மேகங்கள்.

கோ - பாஸஞ்சர்.

"ஸோ..! நீங்களும் சென்னை தான் இல்லையா..?" மென்மையாகச் சிரித்தாள்.

எனக்கு அவளிடம் கொஞ்சம் விளையாடிப் பார்க்கத் தோன்றியது. அட்லீஸ்ட் விபின் வரும் வரை. விபின் நேராக ஆபீஸில் இருந்து வந்து விடுவதாகச் சொல்லி, நான் வீட்டில் - ஷேர்ட் வீட்டில் - இருந்து அவனது பேக்கேஜை எடுத்து ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து வைத்து, அவனுக்காக காத்திருக்கும் வேளையில்,

"எக்ஸ்க்யூஸ் மீ..?"

"எஸ்! நானும் சென்னை தான் வருகிறேன்..! நீங்கள்..?" என்றேன்.

இரண்டு நொடிகள் கழித்து, "மீ டூ..! நீங்க தமிழா?"

"எஸ்...!"

அவளுக்கு கொஞ்சம் ரிலீஃபாக இருந்திருக்க வேண்டும். மொழி தெரியாத மாநிலத்தில் எல்லையைக் கடக்கும் ஆறு மணி நேரம் வரை பயணம் செய்யும் போது, பேசி வருவதற்கு ஒரு குரல் கிடைத்தால் யாருக்கும் சந்தோஷமே!

அவளைப் பார்வையால் தடவினேன்.

பனாமா ஐலண்ட் போட், சில தென்னை மரங்கள் பதித்திருந்த ஃப்ரீ டீ-ஷர்ட், ஸ்கை ப்ளூ ஜீன்ஸ், அழகான பூனை மூடி வாட்ச், மென் பொன்னிற ரப்பர் பேண்ட் ஹேர், சம்பந்தமே இல்லாமல் ஒரு ருத்ராட்ச மாலை, கையில் The Sky is Falling...சுத்தமான ஐ.டி. பெண்.

கம்பார்ட்மெண்ட்டில் சிலர் மட்டுமே இருந்தனர். நான், அவள், ஒரு குடும்பம், ஒரு கிழவன், ஒரு பெண். மிடில் பர்த் இன்னும் நீட்டப்படாததால், லோயரிலேயே எதிரெதிரில் அமர்ந்து கொண்டோம். "சாயா...சாயா..." ரெயில்வே டீ வந்தது. இரண்டு கப்கள் வாங்கிக் கொண்டு...

"மை நேம் இஸ் ப்ரீத்தி! இங்க ஈ அண்ட் ஒய்ல சாஃப்ட்வேர்ல இருக்கேன். நீங்க..?"கை நீட்டினாள்.

"மீ ஷ்யாம்...! இன்ஃபில! ஊருக்குப் போகணும். ஃப்ரெண்ட் மேரேஜ்." மிருதுவாக இருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி என்னால் சரளமாகப் பொய் சொல்ல முடிகின்றது? அவனது ஃப்ரெண்ட் மேரேஜுக்காக விபின் தான் போகப் போகிறான். ஐ கம் ஃபார் ஜஸ்ட் சென்ட் ஆஃப். சரி, விளையாடுவோம். எதுவரைக்கும் போகிறதோ போகட்டும்.

"நானும் எங்க கஸின் சிஸ்டர் மேரேஜுக்குத் தான் போய்ட்டு இருக்கேன். விஜயசேஷ மஹால்ல. கமிங் வெட்னஸ்டே..!"

"சேம் பிஞ்ச்! அதே வெட்னஸ்டே தான் என் ஃப்ரெண்ட் மேரேஜும்! ட்வெண்ட்டி எய்ட்த் தானா?"

"ஆமா..! அதே தான்..!"

"கடைசில சினிமா மாதிரி இருக்கப் போகுது! உங்க கஸின் சிஸ்டரைத் தான் என் ஃப்ரெண்ட் பண்ணிக்கறானோ என்னவோ..? அவங்க பேர் என்ன..?"

"காயத்ரி..! ஐ திங்க் நீங்க நிறைய தமிழ் ஃபிலிம்ஸ் பாக்கறீங்கனு தோணுது..!"

"ஊப்ஸ்! அவன் உட்பி பேரு சசி! ஒரு வேளை அது அவங்க நிக் நேமா இருக்குமோ..?"

""இம்பாஸிபிள்! என் கஸின் சிஸ்டர் சிங்கப்பூர்ல இருந்து, இந்த மேரேஜுக்காக வர்றா. அவளோட உட்பி ஜெர்மன்ல இருந்து ஃபிஃப்டீன் டேஸ் லீவ் எடுத்திட்டு வர்றார். அவர் உங்க ஃப்ரெண்ட்டா இருக்க சான்ஸே இல்ல..!"

"ஓ.கே. இட்ஸ் ஃபைன்...!"

கால் அடித்தது.

"சொல்லு நர்மி. ஆமா, நான் ட்வெண்ட்டி மினிட்ஸ் முன்னாடியே வந்திட்டேன். ஐ ஏம் வெய்ட்டிங் ஃபார் யூ..! சீக்கிரம் வாடி! பை..! நர்மி..! நர்மதா. நம்ம கூட ட்ராவல் பண்ணப் போறா..! வந்திட்டு இருக்கா..!" என்றாள்.

அடி பேதைப் பெண்ணே! நான் விளையாடுவது தெரியாமல் இவ்வளவு அப்பாவியாக இருக்கின்றாயே! விபின் இஸ் எ லக்கி கை! ரெண்டு பொண்ணுங்களோடு சென்னை வரைக்கும் ட்ரெய்ன் ட்ராவல். ஹூம்!

உயிரே..! என் உயிரே..! என்னவோ நினைக்குதடி..!

இப்போது எனக்கு.

"சொல்டா..! எங்க சிக்கிக்கிட்ட..? பி.எம்.ஜி.லயா..? அவ்ளோ ட்ராஃபிக்கா..? டக்குனு ஜம்ப் பண்ணி ஆட்டோ ஏதாவது பிடிச்சு, க்ரவுண்ட் வழியா வரப் பாரு. இன்னும் ஃபிவ் மினிட்ஸ் தான் இருக்கு..! ஓ.கே. பை..!" கட் செய்து விட்டு, "ஃப்ரெண்டுங்க. அவனும் வர்றான். இப்ப ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டான். வந்திடுவான்..! விபின்..! என்ன புக் கைல வெச்சிருக்கீங்க..?"

பிறகு எங்கள் பேச்சு அண்டர் த சன் எல்லா பக்கமும் சென்று வந்து கொண்டே இருந்தது.

விபின் வந்தான்.

"டா..! எவ்ளோ ட்ராபிக்..! சரி..! நீ கி..!"

அப்போது தான் அவளைப் பார்த்தான்.

"ஓ.! ஸாரி..! ஏதோ பேசிட்டு இருந்தீங்க போல! டிஸ்டர்ப் பண்ணிட்டனா..?"

"நோ ப்ராப்ளம். நீ வா. இவங்க தான் உன் கூட ட்ராவல் பண்ணப் போறாங்க. ஆமாங்க. ஸாரி. இவன் தான் ட்ராவலர். ஐ ஜஸ்ட் கேம் ஃபார் செண்டிங் ஆஃப் ஹிம். சும்மா உங்க கூட பேசிட்டு இருக்கலாம்னு தோணிச்சு. அதான்...! ஓ.கே. தேங்க்ஸ் ஃபார் எ நைஸ் கன்வர்சேஷன்..."

அவள் சற்று அதிர்ச்சி அடைந்தவள் போல் ஆனாள். "ஹாய் ப்ரீத்தி..!" என்று சொல்லியவாறு ட்ராவலர்ஸ் பேக்கைச் சுமந்து ஒரு பெண் எங்களை நோக்கி வந்தாள்.

கொஞ்சம் செகண்டுகள் கழித்து என்னைப் பார்த்தவாறே எழுந்து, "ஸாரி! நானும் தான்..!" என்றாள்.

Tuesday, October 21, 2008

அறிவியல் புனைகதைப் போட்டி - நன்றி!

சிறில் அலெக்ஸ் அவர்கள் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் எதிர்பாராத சிறுகதை ஒன்றுக்கு முதல் பரிசு கிடைத்திருக்கின்றது. நிறைய பேருக்கு இதில் அறிவியல் எங்கிருக்கின்றது என்று சந்தேகம். வாத்தியாரின் விளக்கங்கள் கொஞ்சம் குழப்பி அடித்திருப்பது போல் தெரிகின்றது.

கஸின் ஒருவனும் இதையே கேட்டதில்,

'நீ second person narrative-ல் இதுவரை எத்தனை கதைகள் படித்திருக்கிறாய்?'

உதட்டைப் பிதுக்கினான.

'அவ்வகையில் இது நீ படிக்கும் முதல் கதை அல்லவா?'

தலை அசைத்தான்.

'புதிதாக ஏதாவது செய்தால் அது அறிவியல் தானே...! உனக்கு இது புதிது தானே? அது தான் இதில் இருக்கும் விஞ்ஞானக் கூறு'

அரைமனதானான்.

கஸின் உலகத்தின் எத்தனை கதைகளைப் படித்திருக்கிறான் என்பது கேள்விக்குரியது என்றாலும்...!

நடுவர் ஜெயமோகன் அவர்கள் மதிப்பிடுவதற்கு எடுத்துக் கொண்ட புள்ளிகள் இக்கதையில் உள்ளன என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

நண்பர் யோசிப்பவர் நேற்று இரவு கொஞ்சம் போல் உஷார் பண்ணியதால், இன்று அவர் இடப்போகும் எதிர் வினைக்குத் தயாராக இருந்தேன். ரொம்ப காட்டமாக இல்லாமல், 'பாவம் பையன்' என்று mild ஆக எழுதியுள்ளார்.

மதியம் நடந்த ஈ-மெயில் தொடர்பில் வெள்ளைக் கொடி காட்டிக் கொண்டோம். கடித சமாச்சாரம் கீழே, கொஞ்சம் வெட்டி, ஒட்டி - கீழிருந்து மேல்!::

***

Yeah... That's Sure..!!! ;-)

-----Original Message-----
From:
Sent: Tuesday, October 21, 2008 5:35 PM
To: Vasantha Kumar R.
Subject: RE: HAI :: AN explanation FOR YOUR POST.

No Probs for me Vasanth. But mention my name as Yosippavar;-)
- Yosippavar.

________________________________

From: Vasantha Kumar R.
Sent: Tue 10/21/2008 5:11 PM
To:
Subject: RE: HAI :: AN explanation FOR YOUR POST.



Hai Yosippavar...

Yes. I accepted all the points. Shall I post these mails between us in
my blog with some censorship (especially your reply for point a..!)...?

Vasanth.

-----Original Message-----
From:
Sent: Tuesday, October 21, 2008 3:43 PM
To: Vasantha Kumar R.
Subject: RE: HAI :: AN explanation FOR YOUR POST.

Hi Vasanth,
Thanks for the mail. I dont posts uslually in afternoon. That tricks
were only for some important posts, for which I think, they need more
visibility!!;-))

a) I'll come to this point later!;-)
b) If I have wote the post yesterday night, then it will be more spicy.
But, as the time lag occur, thoughts got mild!!!
c) No. I dont. I just need only to record my views. I dont need to
popularize this thru by any other means.
d) I know about that. At the same time, as per this stupid Democracy,
I've my own rights to criticize any judge's views. Thats what I did.
e) I want to pointout that, You are certainly eligible to get that
credit, but not for this story(as for SCIFI contest. Though the story is
good). May be those lines misleading. I too dont think, the judge was
forced to credit only one story per author.
f) Thanks:-))

And now point A. As JEMOs judgemant is miscrediting, I feel it may mislead the new scifi authors.
I know you are smart. But others?!

- Yosippavar.

________________________________

From: Vasantha Kumar R.
Sent: Tue 10/21/2008 2:43 PM
To:
Subject: HAI :: AN explanation FOR YOUR POST.

Hai Yosippavar...

Today Morning I checked your blog (sinthanaikal). No post about Sci-fi.

So I checked now and got happy by seeing your post.

a. If you look my nearly 70 short stories, each and everyone will be in
entirely different themes. So don't get afraid about me, that I will
think the story which was praised will be the correct template for sci
fi stories. Don't worry; I will continue my writing in variety of
platforms.

And I believe, you know that I am not the person who runs for approval.

b. I expect much spicy, but your post is very mild in attack. ;-)

c. Did you add the link of this page as a comment in cyrilalex's result
post? So that many people will come and convey their thoughts!

d. Please think that this result is the judge's point of view. As in
democracy, we, each and everyone have their own opinions about the
result.

e. I was slightly affected by only one line.

"Vasanth submitted more or less 15 stories for this competition. Apart
from the selected one, does no other story is good to be praised?"

This line indicates that, 'the judge was forced 'whatever Vasanth wrote,
one story from him MUST be praised..!'...'.

Please think about that line once more.

f. And finally, I understood your thoughts. Don't worry. And I am always
open minded and don't want to break anyone without HIGHLY reasonable
misunderstandings.

As Thalaivar told, "Cooooooooooooooooooooollll"

;-)

Thanking You.

Best Regards,
Vasanth.

***

எனினும் தமது பற்பல வேலைகளுக்கு நடுவிலும் போட்டியை நடத்திச் சென்று, இடையில் ஏற்பட்ட தவிர்க்க இயலாத தாமதத்திற்காக வந்த 'பொன்மொழிகளை' எல்லாம் பொறுத்துக் கொண்டு, சிறப்புற நிறைவு செய்த சிறில் அலெக்ஸிடமும், இடையறாத பணிகளுக்கு இடையிலும் அத்தனை கதைகளையும் படித்து, தேர்வு செய்த எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களிடம் இருந்தும் கற்றுக் கொண்ட சில நற்குணங்களையும், போட்டிக்கு அயராது இடுகைகள் இட்ட வலை நண்பர்களையும், சில நல்ல சுவாரஸ்யமான கதைகளையும், இப்போட்டியினால் தொடர்பு கிடைத்த நண்பர்களையும் தான் உண்மையான பரிசு எனலாம்.

தேர்வு செய்யப்படாத கதை நண்பர்களுக்கு ஒரு நினைவூட்டல்!

2006 இறுதி மாதங்களில் நடைபெற்ற தேன்கூடு - தமிழோவியம் சிறுகதைப் போட்டிகளில் அதிகப் படைப்புகள் இட்டும், ஒரு பரிசும் பெறாத அபாக்கியன் நான்! எனினும் போட்டிகள் என்ற சாவியைக் கொண்டு கற்பனைக் கதவைத் திறந்து பயணம் செய்தலே மகிழ்ச்சி என்று எண்ணிக் கொண்டு தொடர்ந்து நடை போட்டு வந்ததால் தான், திரும்பிப் பார்க்கையில் இரண்டு வருடங்களில் குறிப்பிடத் தக்க அளவிற்கு கதைகளில் பக்குவம் வந்திருப்பதை உணர முடிகின்றது.

எனவே சொல்லிக் கொள்ள விரும்பும் கடைசி வரியை JOHNNIE WALKER ஏற்கனவே கூறி விட்டார் ::



கேரளத்தில் இன்று ஹர்த்தால். இதைப் பற்றி எழுதிய முன் பதிவு இங்கே!

ஒவ்வொரு காரியத்திலும் பலன்கள், தீமைகள் இரண்டும் உண்டு என்பார்கள். தீமைகளை ஏற்கனவே கொஞ்சம் சொல்லி விட்டேன். நன்மைகள் இப்போது!

ஆபீஸ் தினம் துவங்கும் நேரம் அதிகாலை 08:30 மணி. அதற்கு சோம்பேறித்தனமாய் 09:00 அல்லது 09:30 மணிக்குச் செல்லும் வழக்கம். ஆனால் பந்த அன்று, அலுவலகப் பேருந்துகள் மட்டுமே ஓடும் என்பதால், வேறு வழியே இல்லை! அலாரம் எல்லாம் வைத்து எழுந்து, எப்படியாவது கஷ்டப்பட்டு 08:00 மணிக்கு பஸ் ஸ்டாப்புக்குச் சென்று விடுவேன். பந்திற்கு அடுத்த நாளும் இதைத் தொடர முயன்று இதுவரை தோற்று வந்திருக்கிறேன். நாளையும் முயல்வேன்.

எப்போதும் லஞ்ச் உண்ணும் 'ஹோட்டல் சென்னை' இந்த நாட்களில் மூடி இருக்கும் என்பதால், வேறு வகை வித்தியாசமான உணவகங்களைத் தேடி டெக்னோபார்க்கின் உள்ளேயே அலைந்து புதிய உணவுகளைக் கண்டறியும் வாய்ப்பு கிடைக்கின்றது.

வெயில் வருவதற்கு முன்பேயே ஆபீஸ் ஏ.ஸி.க்குள் சென்று விடுவதால், ஆரம்ப ஃப்ரெஷ்னெஸ் அரை மணி நேரம் கூடுதலாக நீடிக்கின்றது.

அலுவலகப் பேருந்துகளிலேயே சென்று விடுவதால், சில சமயம் ஆறு ரூபாயோ அல்லது இருபத்தொன்று ரூபாயோ (6 + ஆட்டோ சார்ஜ்!) அனாவசியச் செலவாகுவதில் இருந்து மீள்கிறது.

மிக முக்கியமான நன்மை இது தான்! ஆட்கள் அதிகம். பேருந்துகள் குறைவு என்பதால், பந்த் நாட்களில் மட்டும் எந்த கம்பெனி உழைப்பாளியும் எந்த கம்பெனி பஸ்ஸிலும் ஏறிக் கொள்ளலாம். போதாதா? இந்த நாட்களை விட்டால், 'மாற்றான் தோட்டத்து மல்லிகைகளை' எப்படி உரிமையோடு காண்பது? உஷாராகப் பார்த்து வேலை பார்க்கும் கம்பெனி பஸ் தவிர்த்து வேறு கம்பெனி பஸ்ஸில் தான் செல்வோம்.

கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருப்பதால் தான் அவ்வப்போது பந்த்! அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் காலங்களில் வாரம் இரண்டு நாட்கள் அடைப்பு இருக்கும். எங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் எல்லாம் வாரம் மூன்று நாட்கள் தான் இருக்கும். ஹூம்! ஆஃபீஸில் இதெற்கெல்லாம் வழியே இல்லாமல் போய் விட்டதே! அந்த பொன்னான நாட்கள் இனி வருமா? என்று அங்கலாய்ப்பான் அவ்வப்போது ஒரு Fresher!

'ங்கே வந்து ஒரு வருடம் ஆகப் போகின்றது? தமிழ்நாட்டிற்கும், கேரளத்திற்கும் என்ன வித்தியாசம் காண்கிறாய்?' என்று ஒருவர் அலுவலகத்தில் கேட்டார்.

தாமதமே இன்றி, 'பெண்கள்!' என்றேன்.

'பொதுவாகக் கேரளப் பெண்களை இப்படி வகைப்படுத்தலாம். சாதாரண அழகு, அழகு, சூப்பர் அழகு, அதுக்கும் மேல! மென் மஞ்சள் நிறம், அதற்கும் மேல் மஞ்சளாக சந்தனக் கீற்று, பெரிய கண்கள், அலையலையாய் அல்லது நேரான கருங்கூந்தல், ஆரோக்கியம் (இதற்கு நெறஞ்ச மனசு என்று பொருள்!) கள்ளமில்லாது பழகுதல், புடவை உடுத்தினால் ஓரழகு, மாடர்னானால் பேரழகு! திருத்தமான முகக் களை, ஒரு பூரணத்துவம் எனக் காட்டும் நிறை முகங்கள் அவை.

தமிழ்நாட்டில் 1:100 என்றிருக்கும் இந்த அழகு ரேஷியோ, இங்கே 1:20 என்ற அளவில் இருப்பது தான் என்னைக் கவர்ந்த விஷயம்.

ஆனால் இப்போது அலுத்துப் போகத் துவங்கி இருக்கிறார்கள்!'

மெல்ல அதிர்ந்து, 'ஏன்?'

'மேற் சொன்ன அதே காரணங்கள் தான். எல்லோரும் ஒரே மாதிரி பண்புகளோடு இருப்பதால், மலையாள மங்கை என்றால் இப்படித் தான் என ஒரு டெம்ப்ளேட் செய்து விட முடிகின்றது.' என்றேன்.

சென்ற வாரம் ஒரு மின்னல் விசிட்டாக ஊருக்குச் சென்றிருந்த போது, 'சம்பந்தம் இருக்கு.. ஆனால் இல்லை' என்பது போன்ற இரு நிகழ்வுகளை கவனிக்க நேர்ந்தது.

முதலாவது, டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லியும், மக்களை அவற்றைப் புறக்கணிக்கச் சொல்லியும் பா.ம.க. நிறுவனர் திரு.இராமதாஸ் அவர்கள் முனியப்பன் சாமி கோயிலின் எதிர்ப்புறம் இருக்கும் மைதானத்தில் மீட்டிங் நடத்தினார். நகர் முழுதும் கோன் ஸ்பீக்கர் கட்டி பேச்சுக்களை பரப்பினர். குடியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மேடையில் பேசப் பேச, அவர் வார்த்தைகளைச் சோகமாக வர வைத்தார்.

ஊரெங்கும் மின்சாரம் காணாமல் போயிருந்த போதும், மீட்டிங்கிற்கு மட்டும் தடங்கல் மிகக் கொஞ்ச நேரம் மட்டும் ஏற்பட்டது.

இரண்டாவது, நீங்களே பாருங்களேன். மழையில் சரியாக விழவில்லை. ::



சில இடங்களில், 'சந்தன வீரப்பனார்' என்றும் எழுதப்பட்டிருந்தது.