Saturday, June 09, 2007
PodWorks.In - Day 1.
சென்னை டைடல் பூங்காவில் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. அங்கு தான் இருக்கின்றேன்.
காலை 10 மணி சுமாருக்குத் தான் செல்ல முடிந்தது.:-(.
கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்து, தற்போது சிறு இடைவேளை முடிந்து, பதில் நேரம் தொடங்க வேண்டியுள்ளது.
பல அடிப்படை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. சுவாரஸ்யமாகவும், அறிவுபூர்வமாகவும் உள்ளன.
Update செய்கிறேன்.
இன்னும் சற்று திறமையாகவும், பொறுப்போடும் செய்ய வேண்டும் என்ற கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வேலையாக எடுத்துச் செய்ய வேண்டியதன் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல் மாடியில், பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. NDTV- ல் வரலாம்.
பின் பாடகி சின்மயி அவர்கள், ஆடியோ பதிவு செய்யும் போது மேற்கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றிக் கூறினார். கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
ஆடியோ பாட்காஸ்டிங் செய்யும் முறைகளைப் பற்றியும், தொழில் நுட்ப நிறுவனங்கள் அவற்றில் ஈடுபடும் முறைகளையும் அறிந்து கொண்டோம்.
நல்ல உணவு, இடைவேளை சிற்றுணவு வழங்கினர்.
5 மணிக்கு நிகழ்வுகள் முடிந்ததும், வெளியூர்க் காரர்கள், ஈ.சி.ஆர் சாலையின் ரிசார்ட்டிற்குச் செல்ல, சென்னைவாசிகள் இல்லம் திரும்பினோம்.
நாளை பார்ப்போமா..?
காலை 10 மணி சுமாருக்குத் தான் செல்ல முடிந்தது.:-(.
கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்து, தற்போது சிறு இடைவேளை முடிந்து, பதில் நேரம் தொடங்க வேண்டியுள்ளது.
பல அடிப்படை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. சுவாரஸ்யமாகவும், அறிவுபூர்வமாகவும் உள்ளன.
Update செய்கிறேன்.
இன்னும் சற்று திறமையாகவும், பொறுப்போடும் செய்ய வேண்டும் என்ற கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வேலையாக எடுத்துச் செய்ய வேண்டியதன் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல் மாடியில், பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. NDTV- ல் வரலாம்.
பின் பாடகி சின்மயி அவர்கள், ஆடியோ பதிவு செய்யும் போது மேற்கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றிக் கூறினார். கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
ஆடியோ பாட்காஸ்டிங் செய்யும் முறைகளைப் பற்றியும், தொழில் நுட்ப நிறுவனங்கள் அவற்றில் ஈடுபடும் முறைகளையும் அறிந்து கொண்டோம்.
நல்ல உணவு, இடைவேளை சிற்றுணவு வழங்கினர்.
5 மணிக்கு நிகழ்வுகள் முடிந்ததும், வெளியூர்க் காரர்கள், ஈ.சி.ஆர் சாலையின் ரிசார்ட்டிற்குச் செல்ல, சென்னைவாசிகள் இல்லம் திரும்பினோம்.
நாளை பார்ப்போமா..?
Friday, June 08, 2007
நான்... ஒரு கூழாங்கல்.

சும்மா கிடக்கின்றது ஒரு கல்.
எவ்வாறோ, எதனாலோ நகர்த்தப்பட்டு, நகர்ந்து கொண்டு வந்து சேர்ந்தது ஆற்றின் போக்கிற்கு!
எங்கோ கிடந்த அதை, பேரோசையோடு தன்னுள் அணைத்து, உருட்டிப் பிரட்டி, அருவிகளில் விழுக்காட்டி, சரிவுகளில் முழுக்காட்டி, வேறு எங்கோ ஒரு புள்ளியில் கொண்டு வந்து சேர்க்கின்றது, நதி.
அப்போதைய புள்ளிக்கும், இப்போதைய புள்ளிக்குமான தொலைவை நீரால் நிரப்பி இருக்கின்றது ஒரு பயணம்.
நதியின் போக்கிற்கே தன்னை ஒப்படைத்த கல், எண்ணிய முடிவுப் புள்ளியை எட்டாமல் எங்கெங்கோ கொன்டு சேர்க்கின்றது, தன்னுள் இணைத்துக் கொண்ட ஆறு..!
எங்கெங்கோ பயணங்கள்...! ஏதேதோ நினைவுகள்..!
பாதையெங்கும் கீறிச்சென்றும், கல்லின் மேல் பாய்கின்ற நீர்த் துளிகளால், நிலை மாறுகின்றது, வெறுங்கல், கூழாங்கல்லாய்..!
எவ்வாறோ, எதனாலோ நகர்த்தப்பட்டு, நகர்ந்து கொண்டு வந்து சேர்ந்தது ஆற்றின் போக்கிற்கு!
எங்கோ கிடந்த அதை, பேரோசையோடு தன்னுள் அணைத்து, உருட்டிப் பிரட்டி, அருவிகளில் விழுக்காட்டி, சரிவுகளில் முழுக்காட்டி, வேறு எங்கோ ஒரு புள்ளியில் கொண்டு வந்து சேர்க்கின்றது, நதி.
அப்போதைய புள்ளிக்கும், இப்போதைய புள்ளிக்குமான தொலைவை நீரால் நிரப்பி இருக்கின்றது ஒரு பயணம்.
நதியின் போக்கிற்கே தன்னை ஒப்படைத்த கல், எண்ணிய முடிவுப் புள்ளியை எட்டாமல் எங்கெங்கோ கொன்டு சேர்க்கின்றது, தன்னுள் இணைத்துக் கொண்ட ஆறு..!
எங்கெங்கோ பயணங்கள்...! ஏதேதோ நினைவுகள்..!
பாதையெங்கும் கீறிச்சென்றும், கல்லின் மேல் பாய்கின்ற நீர்த் துளிகளால், நிலை மாறுகின்றது, வெறுங்கல், கூழாங்கல்லாய்..!
Tuesday, June 05, 2007
நானென்பது நீயல்லவா..

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. ஈரமான ஜன்னல் கண்ணாடிகளின் மீது துளிகள் நேர்க்கோடுகளாய் வழிந்து கொண்டிருந்தன. லேசாக வீசிக் கொண்டிருந்த காற்றில் திரை ஆடிக் கொண்டிருந்தது. மின்சாரம் இல்லாமல் போய்விட்ட இந்த மாலை வேளையில் ஏதோவொன்று நடக்கப் போகின்றது என்று உள்ளுணர்வு மட்டும் கூறியது.
மெல்லச் சுழலும் மின்னாடி, ஏகாந்தமாய் விழுங்குகின்ற இரவின் சகதியில் புதையும் போது தன்னை மறந்து சூரியன் வெளிப் படுத்தும் ஆரஞ்சுக் கதிர்கள், அறையின் கண்ணாடியின் மீது பட்டுத் தெறிக்கின்றன.
மெல்ல உள்ளே எட்டிப் பார்க்கின்றேன்.
அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள், அவள்.
நானும் சிறு வயதில் இப்படித் தான் இருந்தேன்.
கழுத்துவரை போர்த்தியிருக்கும் குளிருக்குக் கதகதப்பான போர்வை, ஜன்னல் வழியாக வழிந்து வரும் ஈரக்காற்றில் மெல்ல மெல்ல ஆடிக் கொண்டிருக்கின்ற முன் நெற்றி முடி, கட்டிக் கொண்டு தூங்க புசு புசு டெடி பியர்கள்...
என் இனிமையான குழந்தைப் பருவத்தில் நானும் இவள் போலவே இருந்தேன்.
உள்ளே சென்று அருகில் பார்க்கலாமா?
கதவை மெல்ல திறந்து உள்ளே சென்றேன். கதவின் சத்தங்கள் அவளது உறக்கத்தைக் க்லைத்து விடுமோ என்று பயப்பட்டேன். அதற்கு அவசியமில்லை. மழைக் காற்றில் கதவு ஆடிக் கொண்டு தான் இருக்கிறது.
அவளை எழுப்பலாமா? வேண்டாம். இன்னும் பள்ளி செல்லாத சிறு இளம் வயது. இப்பருவத்தை விட்டுவிட்டால், பின் நிம்மதியான மாலை உறக்கத்தை எந்த வயதில் மீண்டும் அடைய முடியும்?
எனது இந்தப் பருவத்தில் நான் என்ன நினைத்துக் கொண்டிருப்பேன்?
இதே போன்ற ஒரு மழை நாளின் மாலையில், இதே போன்று இறுக்கிப் போர்த்திக் கொண்டு படுத்திருக்கையில், துளித்துளியாகப் போகின்ற நீர்த் தடங்களால், தோட்டத்தை மறைக்கின்ற ஜன்னல் கண்ணாடியைப் பார்த்து என்ன நினைப்பேன்?
என் மூன்றாவது பிறந்த நாளன்று என்னை விட்டுப் பிரிந்து, மலையைத் தாண்டி சென்று விட்ட தந்தையைப் பற்றியா..?
பின்னல் கூடைகள் செய்தும், கிறிஸ்துமஸ் மெழுகுகள், கேக்குகள் செய்தும் என்னை வளர்க்கும் அம்மாவைப் பற்றியா..?
ஆ...! அதே புத்தகங்கள். நான் பார்த்து வளர்ந்த கதைகள். இது போன்ற பழைய நாற்காலிகளில் அமர்ந்து எவ்வளவு காலமாயிற்று? சுகமாய் இருக்கிறது.
ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்க்கையில், கண்கள் வழி கசிந்து செல்லும் கண்ணீரால் நனைகின்றன புத்தகத்தின் பக்கங்கள். மற்றுமொரு முறை இதே போன்ற வாழ்வு கிடைக்குமா..?
எட்டிப் பார்க்கின்ற நிகழ்ச்சிகளை கைகளில் ஏந்திக் கொண்டு மீண்டும் வாழ முடியுமா..?
முடியாது. ஏதோ, அறிவியலின் புண்ணியத்தில் மற்றுமொரு முறை இங்கு வந்து செல்ல முடிகின்றது. மிக்க நன்றி சொல்கிறேன்.
அவள் விழித்துக் கொண்டாள் போல் இருக்கிறது. புத்தகத்தை வைத்து விட்டு கிளம்ப வேண்டியது தான்.
நேரமாகி விட்டது. எனக்கான பணிகள் காத்திருக்கின்றன. செல்ல வேண்டும்.
மீண்டும் முடிந்தால் வருவோம்.
க்ளைமேட் சும்மா சில்லுனு இருக்கு. வெளிய மழை பெய்ஞ்சுட்டு இருக்கு. மழை எனக்கு ரொம்ப பிடிக்கும். மழையில் நனைய, பக்கத்து விட்டு ரோஸி கூட விளையாட, அப்புறம் மழை நின்னப்புறம் மரக்கிளைகளைப் பிடிச்சு உலுக்கி விளையாடறது, ஈரமா இருக்கற புல் மேல எல்லாம் படுத்துக்கறது...
எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ஆனா அம்மா இதெல்லாம் வேண்டாம்னு சொல்லுவா. அம்மாவுக்கு என்னைப் பத்தி ரொம்ப கவலை. ஆமா என்னைப் பத்திக் கவலைப்பட யாரு இருக்கா, அம்மாவைத் தவிர? அப்பா என்னோட மூணாவது பர்த்டேயப்போ, அதோ அங்க தெரியுதில்ல, பச்சை கலர்ல மலை, அதுக்கு அந்தப் பக்கம் போய்ட்டாரு.
'அப்பா எப்பம்மா வருவாரு'னு நான் அப்போ அம்மாவை அடிக்கடி கேட்பேனாம். ' அப்பா மலைக்கு அந்தப் பக்கம், சாக்லேட் வாங்கிட்டு வரப் போயிருக்கார்'னு அம்மா சொல்வாங்க. அதையெல்லாம் நம்பிட்டு இருந்தேன்.
நீங்க போய் அந்த ஜன்னல் கண்ணாடியெல்லாம் கொஞ்சம் நல்லா தொடச்சு விடறீங்களா? எனக்கு சரியா மலை தெரியல. அப்பப்போ அப்பா ஞாபகம் வரும் போதெல்லாம், அந்த மலையைத் தான் பாத்துப்பேன்.
இன்னிக்கு என்னமோ நல்ல மழை பெய்யுது. இந்த ஜன்னல், கதவெல்லாம் இந்த மாதிரி ஆடி நான் பார்த்ததில்ல. இந்தக் கதவு ஆடறதைப் பார்த்தா, யாரு வேணா உள்ள வரலாம் போல.
அம்மா எங்க போயிருக்கானு தெரியல. இந்த மழையில எதுக்கு வெளிய போகணும்? ஒரு வேளை அவ வெளிய போகும் போது, மழை பெய்யாம இருந்திருக்கலாம்.
அப்பா போனதுக்கப்புறம், அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இப்போ தான் கிறிஸ்துமஸ் கேக்கெல்லாம் செஞ்சு நெறய இடத்துக்குக் கொடுத்து கொஞ்சம் ஏர்ன் பண்றாங்க. எனக்கு கேக் ரொம்பப் பிடிக்கும். அம்மா செய்யும் போது எனக்கும் கொஞ்சம் குடுப்பாங்க. நல்லா இருக்கும், தெரியுமா?
கேக் செய்யும் போது ,அம்மா நெறைய கதை சொல்லுவாங்க. அப்ப மட்டுமில்ல, டைம் கிடைக்கும் போதெல்லாம் கதை சொல்லுவாங்க. அந்தக் கதையெல்லாம்... ஆங்..இந்த புக்கைப் படிச்சு தான் சொலுவாங்க. நான் இன்னும் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிக்காததுனால, அம்மாவே இந்தக் கதையெல்லம் படிச்சு சொல்லுவாங்க.
என்ன.. இந்த புக் நனைஞ்சிருக்கு..? ச்சீ.. மழை பெஞ்சாலே, இது வரைக்கும் நனைஞ்சிடுது. அம்மாகிட்ட சொல்லி, ஜன்னல் எல்லாம் சரி பண்ணச் சொல்லணும்.
அதுல ஒரு கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். 'டைம் ட்ராவல்'னு சொன்னாங்க. அதாவது நாமே ஃப்யூச்சருக்குப் போனதுக்கப்புறம்,மறுபடியும் நெனச்ச நேரத்துக்குப் போய்ட்டு வர முடியும். இன்னமும் அது வரலை. ஒருவேளை என்னோட ஃப்யூச்சர்ல வந்தா எங்க எல்லாம் போவனு அம்மா கேட்டாங்க.
நான் சொன்னேன், இப்ப இருக்கற சின்ன வயசுக்கு மறுபடியும் வந்து பார்ப்பேன்னு..!
படம் நன்றி : http://content.answers.com/main/content/wp/en/7/7e/Bedtime.jpg
அதனைப் போல் இருந்தோம்.. அதனாலே பிரிந்தோம்.

எதனைப் போல் இருந்தோம்?
எதனாலே பிரிந்தோம்?
அலையும், கரையும் போல்,
கரையும், நுரையும் போல் இருந்தோம்.
கலையும் மேகம் போல்,
காற்றாலே பிரிந்தோம்.
வழியும், நிழலும் போல் இருந்தோம்.
இருளாலே பிரிந்தோம்.
கண்ணும், கனவும் போல் இருந்தோம்.
ஒரு விழிப்பாலே பிரிந்தோம்.
மலரும், பனியும் போல் இருந்தோம்.
கதிராலே பிரிந்தோம்.
மனதும், நினைவும் போல் இருந்தோம்.
நீ மறந்ததினால் பிரிந்தோம்.
உனையும், எனையும் போல் இருந்தோம்.
நீ உதறிப் போனதால் பிரிந்தோம்.
Subscribe to:
Posts (Atom)