Thursday, July 10, 2008

பேசும் பொம்மை.

வெள்ளை அலுமினியம் வர்ணம் பூசிய பழைய தீரன் சின்னமலை போக்குவரத்து கழகம், திருச்சிராப்பள்ளி தடம் எண் 1 எங்களை தெற்குவாசலில் தள்ளி விட்டது.

பாத்திரக் கடைகள். விளக்கு. ரங்கநாதர் ஓவியம். புகைப்படம். லாண்ட்ரி ஷாப். புத்தகக் கடை. காரை ரோடுகள். டிவைடர். அதில் சாரதாஸ். ரிக்ஷாக்கள். ஆடியோ, வீடியோ சி.டி. ஷாப். இருளான ஓட்டு வீடுகளில் கம்பித் தடுப்பு திண்ணைகள். பூக்கடைகள். இராஜகோபுரத்தின் மேல் வர்ணங்கள். நிறைய நிறைய பொம்மைகள்.

இந்த பொம்மைகள் ஏன் என்னிடம் பேசவில்லை? அவருக்கு இவை தேவையில்லையா..?

பார்த்துக் கொண்டே நடந்தோம்.

இருவரும் பேசிக் கொள்ளவில்லை. பேசுவதற்கான சந்தர்ப்பங்களும், பேசுபொருள்களும் குறைந்து கொண்டே வந்து இன்றைய காலகட்டத்தில் மெளனத்தால் நிரப்பப்பட்டு உள்ளோம். வாசலுக்குள் நுழைந்து பிரம்மாண்ட கருடாழ்வாரை சேவித்து விட்டு, பாம்பு வால் போல் வளைந்திருந்த வரிசைகளில் கூட்டத்தில் இணைந்து கொண்டோம். வழக்கமான சனிக்கிழமை முற்பகலின் திருவரங்கம்.

"என்னங்க ஒரு மாதிரியா பாக்கறீங்க..?"

என் பார்வை செல்லும் புள்ளியை பாத்தாள். முன் மண்டபத்தின் தூண்கள். தூண்களில் ஒன்று.
பின்னிரண்டு கால்களை ஊன்றி முன்னிரண்டு கால்களைத் தூக்கிக் கொண்டு பிளிறும் குதிரை. அதன் மேலிருக்கும் வீரனின் வலக்கை வேல் கீழிருந்து பாயும் யாளியைக் குத்திக் கொண்டிருந்தது, என்னைக் கவரவில்லை. வீரனின் கண்கள் என்னையே பார்ப்பதுவும், கண் சிமிட்டுவதும் என்னை ஈர்த்தன.

நான் பஞ்சாபகேசன்.

இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. இந்நாட்களில் இது போன்ற பெயர்களை யாரும் வைப்பதில்லை. என் மகனுக்கு மகேஷ். எங்கு இருக்கிறான் இப்போது? சி.ஏ.வில் ஒரு எம்.என்.ஸி.யில் நிர்வாகத் துறையில். அவன் அவ்வப்போது அனுப்பும் டாலர் துளிகளிலும், பென்ஷன் தொகையிலும் ஜீவித்து வயலூர் அருகே ஒரு மனையில் இருக்கும் ஒரு ரிட்டையர்ட் கவர்ன்மெண்ட் சர்வென்ட் நான்.

திருச்சியும் அதன் பகுதிகளும் எனக்கு புதிதாகப் படவில்லை. சிம்லா, டேஹ்ராடூன், மைசூர் என்று தேசத்தின் பல வனப் பிரதேசங்களில் ஃபாரஸ்ட் ரேஞ்சராக இருந்து, சீஃப் செக்ரட்டரியாக உதிர்ந்தவன்.

காலையில் ஃபில்டர் காபி குடித்து விட்டு, இந்துவில் படர்ந்து விட்டு, அவ்வப்போது எழுந்து நடை பயின்று, முடிந்தால் மாநகருக்கு வந்து ஷாப்பிங் செய்து விட்டு, இடைப்பட்ட நேரங்களை குட்டித் தூக்கங்களால் கழித்து விட்டிருந்த ஒரு சாதாரணனாக இருந்தேன்.

இந்த விசித்திர பிரச்னை என்னை ஆட்கொள்ளும் வரையில்...!

சென்ற மாதத்தின் ஒரு நாள் மலைக்கோட்டைக்குச் சென்றோம். குறுகிய வாசல்களைக் கடந்து, ஜன்னல் கம்பிகளின் வழியே கீறலாய் விழுந்த சூரியக் கதிகளின் மென் வெம்மையில் நனைந்தபடி மேல் சென்றோம். டிக்கெட் வாங்கிக் கொண்டு 'ப்ஹா'வென திறந்திருந்த மலை உச்சிக்கு வந்தோம். பாறையை செதுக்கிய படிக்கட்டுகள். கம்பிகளைப் பிடித்து ஏறுகையில் 'விர்.. விர்' என அடித்த காற்றுக்கு தடுமாறினேன்.

பிள்ளையாரை வணங்கி விட்டு கீழ் இறங்குகையில் பார்த்தேன்.

ஒரு கறுப்பாடு. சில குட்டிகள். அத்தனை காற்றுக்கும், அத்தனை உயரத்திற்கும் அசையாது தாவித் தாவி மேலே ஏறியும், கீழே இறங்கியும் விளையாடிக் கொண்டிருந்தன. வியப்பாக இருந்தது. பந்திப்பூரில் பார்த்த புலிக்குட்டிகளின் அதே லாவகம், விறுவிறுப்பு, துடிதுடிப்பு இந்த ஆட்டுக்குட்டிகளிடமும்!

"ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா..?"

யார் சொன்னது? திரும்பிப் பார்த்தேன்.

அவள் கீழே சென்று சோடா கடையில் கலர் வாங்கிக் கொண்டிருந்தாள். சில கல்லூரி மாணவர்கள். ஒரு சிறுவன். நெற்றியில் குங்குமங்கள் அணிந்த ஒரு வடக்கத்து குடும்பம். காற்று. தலை விரித்து ஆடும் அரச மரம். கொஞ்சம் வெயில். கொஞ்சம் நிழல்.

வேறு யாரும் இல்லை.

வியப்பாக இருந்தது. கொஞ்சம் பயமாகவும். மனப்பிரமை என்று தீர்மானித்து கீழ் இறங்கத் தொடங்கினேன்.

"நில் பப்லு..! என்னைத் தெரியவில்லையா..?"

திடுக்கிட்டேன். பப்லு! எனது செல்லப் பெயர். இங்கே யாருக்குத் தெரியும்? உற்றுப் பார்த்தேன். பாறைகளின் செதுக்கில் ஒரு பிள்ளையார் சிலை. நான் பார்த்ததும் அதன் கண்கள் சிமிட்டின. சிரித்தது.. இல்லை.. சிரித்தார்.

"என்ன பப்லு! என்னை தெரியவில்லையா..?"

அருகில் சென்று அமர்ந்தேன். கடவுள் பேசுகிறாரா என்ன? இந்த கலியுகத்தில், ஏர்டெல் டவர்களும், நிமிடத்திற்கு ஒரு முறை பஞ்சாய் பறக்கும் விமானங்களும், கலர் குடித்து, என்னை கேள்விக்குறியாய் புருவம் வளைக்கும் சகதர்மிணி பார்க்கையில் எனக்கு கடவுள் பேசுகிறார். வியர்ட். டோட்டலி வியர்ட்.

"நீங்கள் யார்..?" எனக்கென்னவோ கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம் என்று தோன்றியது. எனது மனக்குரல் தான் வெளிப்பட்டு பேச வேண்டும் என்று நம்பினேன்.

"பப்லு..! நான் கடவுள் இல்லை. உனது பழைய முன்னோர்களில் ஒருவன். ஒரு சொத்து சம்பந்தமாக வியாஜ்யம் நடக்கின்றது அல்லவா? அதைப் பற்றி உனக்கு ஒரு உதவி செய்யலாம் என்று வந்துள்ளேன்..!"

நிஜம் தான். சிவரஞ்சனி தியேட்டர் அருகே ஒரு கையகல் நிலம் இருப்பதுவும் அது சம்பந்தமான பங்காளிச் சண்டை ஒன்று கோர்ட் வரை சென்று இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருப்பதும் நினைவுக்கு வந்தது. அதை நாங்கள் எல்லோரும் மறந்து மாற்றி மாற்றி வாய்தாவுக்கும் வக்கீலுக்குமே செலவு செய்து கொண்டிருப்பதும் கூட!

"நம்புகிறேன்..! எனக்கு மட்டும் ஏன் உதவி செய்ய எண்ணுகிறீர்கள்..? அவனுக்கும் செய்ய வேண்டியது தானே..!"

"இல்லை. நியாயம் உன் பக்கம் இருக்கிறது. அதனால் தான் உனக்கு..!"

"ஏன் இப்படி சிலைக்குள் புகுந்து பேசுகிறீர்கள்..?"

"வேறு போக்கிடம் இல்லை எனக்கு.."

"என்னங்க என்ன ஆச்சு? டயர்ட் ஆகிட்டீங்களா..? படியிலயே உக்காந்துட்டீங்க..?" வந்து விட்டாள்.

"பாரு! பார்த்தியா? சிட்டி கேஸ்ல நமக்கு உதவி செய்வதற்காக ஒருத்தர் வந்திருக்கார். இந்த பிள்ளையார் சிலை மூலமா என் கூட பேசினார்.. "

அவள் பார்த்தாள். ஒன்றும் அசைவில்லை. பிடித்து வைத்த பிள்ளையார் போலவே இருந்தார்... இல்லை, இருந்தது.

"உடம்பு சரி இல்லையா..? ஏதேதோ பேசறீங்க? சிலை பேசுதா? வெளிய சொல்லாதீங்க..."

எழுந்து நடந்தோம். எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. மலை ஏறி இருக்கிறோம் அல்லவா? குழப்பம்.

அடுத்து தாயுமானவர் கோயிலுக்கு சென்றோம். அங்கேயும் ஒரு சிலை. வேறு சிலை. பேசத் துவங்கியது.

"உன் மனைவி நம்ப மாட்டாள். அவள் மட்டும் அல்ல. யாரும் நம்ப மாட்டார்கள். ஏன் நானாக இருந்தாலும் நம்ப மாட்டேன். ஆனால் இது உண்மை..!"

நான் பயந்து போனேன் இம்முறை. எல்லா சிலைகளும் பேசின. நாங்கள் நடக்க நடக்க ஒவ்வொன்றில் இருந்து தாவித் தாவி அதுவும் வந்தது; கேட்டது.

இப்போது இந்த திருவரங்கத்திலும்!

சந்தேகமின்றி தெரிந்து விட்டது இது ஏதோ ஒரு நோய். யோசித்துப் பார்த்தேன்.

நான் யார்? ஒரு ரிட்டையர்ட் ஆபிஸர். அறுபது வருடங்களாய் காடு காடாய் சுற்றி விட்டு இப்போது கான்க்ரீட் காடுகளுக்குள் அமிழ்த்தப்பட்டு இருப்பவன். வேலை காரணமாய் ஊர் ஊராய்ச் சுற்றி விட்டு, இப்போது செய்வதற்கு வேலைகள் அற்று சும்மா சோம்பி இருப்பவன். சும்மா இருக்கும் உள்ளம் சாத்தான் விளையாடும் மைதானம். பழைய கேஸ் ஒன்று இழுத்துக் கொண்டிருக்கின்றது. அது எப்போது முடியும் என்ற கவலை.

எல்லாம் சேர்ந்து ஒரு குழப்ப நிலையில் என்னை நிறுத்தி இருக்கின்றன. என் ஆசைகள் வெளியேறி ஒரு குரலாய் உருவெடுத்து, என்னையே குழப்பி ஒரு மெண்டல் ஸ்டேட்டுக்கு கொண்டு வந்து...

பலே... பலே... என்னிடமா..?

தரிசனம் முடிந்ததும் உடனடியாக ஒரு டாக்டரைப் பார்க்க வேண்டும். சுற்றுமுற்றும் சிலைகளின் குரல்கள் என்னை தொடர்ந்து கொண்டே வந்தன. "டாமிட்..!" என்று ஒரு முறை கத்தி விட்டேன். எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள்.

ருவரும் உள்ளே இருந்தோம். டாக்டர் தேவசகாயம் சிரித்தபடி இருந்தார். அறை கொஞ்சம் சிறியதாக இருந்தது. ஒரு ஸ்டெதஸ்கோப், ப்ரஷர் மீட்டர். வாசனையான சில ஊதுபத்திகள். டேபிள். சேர். மறைவான பச்சை துணிக்கு பின் உயரமான கட்டில். ஒரு கழுத்துயர பீரோ. பீரோவின் மேல் ஒரு தியான புத்தர்.

"சொல்லுங்க.. உங்களுக்கு என்ன ப்ராப்ளம்..?"

நான் புத்தரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"இப்படித் தான் டாக்டர்..! எங்க போனாலும் ஒரு பொம்மையையே பார்த்துக்கிட்டு இருக்கார். கேட்டா, பொம்மை பேசுச்சு கேட்டியாங்கறார். வெளிய ஒரு எடத்துக்கு போய்ட்டு வர முடியல. பயமா இருக்கு. நீங்க தான் சரி பண்ணனும்..? அமெரிக்கால இருக்கற பையனுக்கு சொல்லி இருக்கேன். வர்றேன்னு சொன்னான். நீங்க சரி பண்ணாட்டி அங்க தான் கூட்டிட்டு போகணும்.."

"அழாதீங்கம்மா.. எல்லா ஃபெசிலிட்டீஸும் இப்ப இங்கயே வந்தாச்சு. நாங்க பார்த்துக்கறோம். மிஸ்டர் பஞ்சாபகேசன்! இங்க பாருங்க. உங்களுக்கு எப்ப இருந்து இந்த ப்ராப்ளம் இருக்கு. சார்! இங்க பாருங்களேன்..!"

"என்னங்க... டாக்டர் கூப்பிடறார் பாருங்க...! என்னங்க..?"

ஒரு குரல் தானே கேட்டுக் கொண்டிருந்தது? இப்போது இரு குரல்கள் கேட்கின்றனவே. ஆச்சரியமாக புத்தர் சிலையையே பார்த்தேன்.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

வானவெளியில் எண்கள்.

டிஜிட்டல் மீட்டர்கள் 360 டிகிரிகளிலும் அம்புக் குறிகள் காட்டிக் கொண்டிருந்தன. சின்ன சின்ன துளிகளாய் எல்.ஈ.டி.க்களும், செவன் ஸ்டேஜ் எல்.சி.டி.க்களும் மின்னிக் கொண்டிருந்தன. கலத்தின் சகல கண்ட்ரோல்களும் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பதை உறுதிபடுத்திக் கொண்டிருந்தோம்.

"அஜய்... டைரக்ஷன் மெஸர்மெண்ட்ல ஏதோ மிஸ்டேக் காட்டிட்டு இருந்துச்சே.. சரி பண்ணியாச்சா..?"

"டன்..."

"வெதர் ரிப்போர்ர்ட் அனலிஸிஸ் முடிஞ்சு சிக்னல்ஸ் பாஸ் ஆகிடுச்சு இல்லையா..?"

"டன்.." சிரித்தான்.

இருவரும் ஹெட்பேட்களை ரிமூவினோம்.

"இன்னும் எவ்வளவு நேரத்தில் பூமியை அடைவோம்..?"

"ஜஸ்ட் தேர்ட்டி மினிட்ஸ்.." என்றான்.

மகிழ்வாய் இருந்தான். எனக்கும் மகிழ்வாய் இருந்தது. எல்லோர்க்கும்! மிதுன், கனியா, பார்ச்சர்.. எல்லோர்க்கும்! ஒரு நிறைவு. வாழ்க்கையில் ஏதோ ஒன்றை அச்சீவ் செய்து விட்ட திருப்தி.

கிளம்பும் முன் ராய் சொன்னது நினைவுக்கு வந்தது.

"சலீம்..! ஐ எம் ப்ரெளட் ஆஃப் யுவர் டீம் அண்ட் யூ! இந்த டீம்மில் நீங்கள் சென்று சாதிக்கப் போகும் வெற்றிகள் நினைத்தாலே எனக்கு சந்தோஷத்தை தருகின்றது. நீங்கள் செய்யப் போகும் இந்த காரியத்திற்கு வரலாறு என்றும் உங்கள் பெயர்களை நினைவில் வைத்திருக்கும்... பை தி வே உங்களது கணித ஆராய்ச்சி எந்த நிலையில் இருக்கின்றது?"

"ஃபைன் சார்..!" நம்பர் தியரியில் சில அட்வான்ஸ்ட் கான்சப்டுகளை உறுதிப் படுத்தும் வேலையில் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தேன்..!. அதற்கான எக்யுப்மெண்ட்ஸ் தயாரிப்பில் சில ஸ்டேஜ்களை அடைந்திருக்கும் போது இந்த அசைன்மெண்ட்.

அனானிமஸ் சிக்னல் ப்ராபகேஷனில் கிடைத்த எதிர் சிக்னல் தான் எங்கள் பயணத்திற்கு முக்கியமான காரணம். வான வெளியெங்கும் எல்லா திசைகளிலும் பல மொழிகளில் மனித இருப்பை விசிறி அடித்துக் கொண்டே இருந்தோம். எந்த எதிர் வினையும் இல்லை.

"ஸார்...! இது போல மெஸேஜ்களை எறிவதற்கு பதிலாக 'நான் தான் மனிதன். இந்த காலக்ஸிலேயே நான் தான் பிஸ்தா..!' அப்படின்னு எல்லாம் மெஸேஜ் குடுங்க சார். அப்ப தான் எதிர்வினை இருக்கும். ஈகோவை கிளப்பி விட்ற மாதிரி அட்டாக் பண்ணினா தான் நாம எதிர் பாக்குற ரியாக்ஷன் சாத்தியம்." என்பேன் வீக்லி மீட்டிங்குகளில். பொதுவாக காஃபி குடிப்பர், சிரித்து விட்டு விலகுவர்.

எதிர்பாராத ஒரு நாளில் ரிஸீவரில் ஒரு சிக்னல் க்ராஸ் ஆகியது. அதிசயம். அனலைஸ் பண்ணி பார்த்ததில் ஆன்ட்ரமீடா காலக்ஸிக்கு அப்பால் ஒரு சிறு புள்ளி மாதிரி தெரிந்தது. அங்கிருந்து தான் வந்திருக்க வேண்டும்.

எனவே தகுந்த கால்குலேஷன்களுக்கு பிறகு ஒரு டீம் சென்று பார்த்து வருவது என்று முடிவாகி, நாங்கள் பயணித்தோம். பயணத்தில் அந்த கிரகத்தில் அப்படி எந்த ஒரு ஜீவராசியும் இல்லை என்பதும், எந்த உயிரும் சிக்னலை அனுப்பி இருக்க வாய்ப்பில்லை என்பதில் உறுதியாகினோம். களைத்தோம். திரும்பி வந்து கொண்டிருந்தோம்.

"னியா எங்கே..?" என்று கேட்டேன்.

குறும்பாக புன்னகைத்த மிதுன் செக்டார் பி.எக்ஸில் பார்க்க சொன்னான். அவன் தலையில் மெதுவாக குட்டினேன், சிரித்துக் கொண்டே. கீழ்க்குரலில் விசிலடித்தான்.

கனியா என் காதலி. அப்பழுக்கில்லாத ஒரு காதலி. ட்ரெய்னிங் சென்டரில் சந்தித்து, மீட்டிங்குகளில் வளர்ந்து, டெக்னிக்கல் ப்ராஜக்டுகளில் கிளைத்து, இப்போது பூமிக்கு மேலே க்ராவிட்டி ஃபோர்ஸ் துளியும் எட்டாத ஒரு லாங் பங்கி ஜம்ப் ப்ரதேசத்தில் என்னோடு பயணம் செய்யும் அழகி.

மேதமேடிக்ஸ் டிவைசஸ் லேப் ஒன்றை செட் செய்திருந்தேன். அங்கு எனது டிவைசஸ் இருந்தன. பார்த்துக் கொண்டிருந்த்தாள்.

வெற்றிடத்தில் மிதக்கும் வகை ஆடைகள் அணிந்திருந்து புஸ் புஸ் என மிதந்து கொண்டிருந்தாலும் அந்த காதோரம் சுருண்டிருந்த பொன் முடியும், கழுத்தோரம் படர்ந்திருந்த பூனை நிறங்களும் ஒரு பெண்ணுக்கே உரிய மயக்கத்தை அடையாளம் காட்டின.

அருகில் சென்று தொட்டேன். திரும்பி சிரித்தாள்.

"சலீம்...! சிக்னல்ஸ் கரெக்டா ட்ராவல் ஆகிட்டு இருக்கா..?"

"ம்...!"

"சீக்கிரம் பூமிக்கு போகணும்..! போனவுடனே வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற சர்ச்ல மேரேஜ். 'பரம மண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே...' சொல்லி.."

எந்த பரமமண்டலம்..? எந்த காலக்ஸி தாண்டி? என்ற ஒரு அறிவியலுனுக்கேயான குழப்பங்கள் துளிர்த்தாலும், இது போன்ற அழகான பெண் சொல்லும் போது நரகம் கூட நாலு எட்டு தள்ளி என்றால நம்பி போய் விழலாமே..!

பதிலே சொல்லாமல் அவளை தூக்கினேன். எடையே இல்லை. மிதந்தோம்.

புன்சிரித்துக் கொண்டே, "சலீம்..! இதெல்லாம் என்ன மேதமேடிக்ஸ் டிவைசஸ்! கொஞ்சம் சொல்றியா..?"

"ம்! சொல்லலாம். அதுக்கு முன்னாடி நான் பூமில இருந்தப்போ என்ன ரிஸர்ச் பண்ணிட்டு இருந்தேன்னு சொல்றேன். நாம பாக்கற எல்லாமே ஒரு குறிப்பிட்ட மேக்ஸ் ஃபார்முலாக்குள்ள அடங்கிடுது இல்லையா..? ஒரு பாலை பாக்கறோம். அது ஒரு ஸ்பியர். அதுக்கு ஒரு வால்யூம். அதோட வெயிட் இவ்ளோ. அதோட டைமென்ஷன்ஸ் இதெல்லாம். அதுல இவ்ளோ அணுக்கள் இருக்கு. சோ, இத்தனை அட்டாமிக் மாஸ். அதோட கலர் இது. அது இந்த பெய்ண்ட். அந்த பெய்ண்ட் இந்த கெமிக்கல். அதோட அட்டாமிக் ப்ராபர்டீஸ் இதெல்லாம். இப்படி ஒரு பாலை இத்தனை நம்பர்ஸ் கவர்ன் பண்ணிட்டு வருது.

இந்த நம்பர்ஸ் எல்லாம் ஒரு கூட்டா இருந்தா தான் அது பால். எல்லா நம்பர்ஸும் தனித்தனியா பிரிஞ்சு போக ஆரம்பிச்சுதுன்னா அப்புறம் அது பாலா இருக்காது. அப்படியே காணாம போயிரும். நாம அந்த பாலை நெருப்புல காட்டினா என்ன ஆகுது? இது தான். அந்த பாலை கன்ஸ்ட்ரக்ட் பண்ணி வெச்சிருக்கற நம்பர்ஸ் கிட்ட இருக்கற ஒற்றுமை கலைஞ்சு போய் பிரியுது. பேஸிக்கலா அணுக்கள் பிரியறது தான்.

மை ஐடியா இஸ், இந்த நம்பர்களுக்கெல்லாம் தன்னோட இந்த பலம் தெரியுமா..? அதாவது நாம இந்த மாதிரி ஒரு கூட்டணியில இருக்கறதுனால தான் பால்னு ஒரு வஸ்து இருக்கு. இல்லாட்டி கிடையாது. இந்த சீக்ரெட் அந்த நம்பர்ஸுக்கு எல்லாம் தெரிஞ்சா என்ன ஆகும்..? அப்படினு திங் பண்ணினேன்.."

"என்ன உளறிட்டு இருக்க..? நம்பர்ஸுக்கு தெரியறதாவது. நம்பர்ஸுங்கறது ஒரு மெஸர்மெண்ட். அவ்வளவு தான். நம்ம இஷ்டத்துக்கு மெஸர் பண்றதுக்கு ஒரு சிஸ்டம் இந்த எண்கள். அதுக்கெல்லாம் மூளைனு தனியா ஒண்ணு இருக்கா என்ன..? யூ ஆர் வெரி க்ரேஸி...!"

"இல்லை..! என்னோட ஆராய்ச்சில நான் சில நம்பர்ஸை விழிப்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி பண்ணினேன். அதில் சம் பெர்சண்டேஜுக்கு சக்ஸஸ் கிடைச்சிருக்கு. அதை இப்போது சொல்ல முடியாது. பட், இதோட விளைவுகளை எதிர்பார்த்து நான் சில டிவைசஸ் பண்ணி வெச்சிருக்கேன். அதெல்லாம் தான் இதெல்லாம்..!" காட்டினேன்.

"என்ன இதெல்லாம்..? லேஸர் பீம் எமிட்டர்...?"

"ம்ம்ம்..! ஒரு விதத்துல அப்படியும் சொல்லலாம். பட் இது எமிட் பண்றது லேஸர்ஸ் கிடையாது. இதுக்கு பேர் என்ன வெச்சிருக்கேன் தெரியுமா..? மல்டிப்ளை ஸீரோ எமிட்டர்..!"

"என்ன..? கம் எகெய்ன்..? இது என்ன எமிட் பண்ணும்..?"

"ஸீ..! நீ என்னோட மேக்ஸ் தியரியைவே நம்ப மாட்டேங்கற. உனக்கு இதைப் பத்தி சொன்னாலும் புரியாது. உனக்கு வேறு ஒன்று சொல்லித் தருகிறேன். எளிதாகப் புரியும். அதற்கு முதல் ஸ்டெப்.., உனது இந்த ஈர சிவ உதடுகளை நான் ஒற்றி எடுக்கட்டுமா? இந்த க்ளாஸை கொஞ்சம் நீக்கு...! பாலொடு தேன் கலந்தற்றே - பனிமொழி வாயில் எயிறு ஊறிய நீர்.. 1122-வது குறள்ல சொல்லி இருக்கு பார்."

கொஞ்சம் வெட்கப்பட்டது போல் இருந்தாள்.

மெல்ல நெருங்கி...நெருங்ங்ங்கி.. ஒரு ஜெர்க் அடித்தது.

"பார்த்தாயா..? க்ராவிட்டி ஃபோர்ஸே இல்லாத இந்த வானவெளியிலும் முத்தமிட நெருங்கினால் ஜெர்க் அடிக்கின்றது..!" என்றேன்.

"முட்டாளே....! ஜெர்க் மொத்த கலத்திலும் அடிக்கின்றது.." ஓடி வந்து பதற்றத்தில் சொன்னான் பார்ச்சர்.

அவசரமாக எல்லோரும் கலத்தின் முன் ஓடினோம். புள்ளி புள்ளிகளாய் தெரிந்த பிரபஞ்சத்தின் கரும் வெளியில் இருந்து உற்பத்தியாகி கொண்டிருந்தன...

எண்கள்... வெறும் எண்கள்...

9999999999
.
.
.
22222
11111

செட்.. சப் செட் என..! தொடர்ச்சியாக எண்கள். விக்கித்துப் போய் என்ன வென்றே புரியாத குழப்ப நிலையில் ஸ்தம்பித்துப் போய் இருந்தார்கள், அனைவரும்.

எனக்குப் புரிந்து விட்டது.

எண்கள். சுய அறிவு பெற்ற எண்கள். தாம் கட்டமைத்தது தான் இந்த பிரபஞ்சமும், அத்தனையும் என்ற தெளிவு பெற்று விட்ட எண்கள். எனக்கு சகலமும் விளங்கியது.

என் ஆராய்ச்சியில் கொஞ்சம் ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸை கொடுத்து உருவாக்கிய எண்கள் தமக்குள் பல்கிப் பெருகி, பைஃபர்கேட் செய்து, தம்மை வளர்த்து, இதை புரிந்து கொண்ட ஒரே ஒருவனான என்னை மற்றவர்களிடம் இருந்து பிரிப்பதற்காக சிக்னல் ரிஸீவரில் வோல்டேஜ் மெஸர்மெண்டாக பதிந்து, ஏமாற்றி என்னை வெகு தொலைவு அனுப்பி விட்டு, பூமியை ஆக்ரமிப்பு செய்து, இப்போது என்னையும் ஆக்ரமிக்க....

ஓ... மை காட்...!

"ஓடுங்கள்... விலகி ஓடுங்கள்...! செக்டார் பி.எக்ஸில் எனது மல்டிபிள் ஸீரோ எமிட்டரை எடுத்துக் கொள்ளுங்கள்..."

ஓடினோம். A.I. புகட்டப்பட்ட எண்களை அழிக்க ஒரே வழி, இது தான். பாயும் நம்பர்ஸ் மீது ட்ரிக்கரை சுண்ட மல்டிப்ளை வித் ஸீரோ அப்ரேஷனுக்கு அவை உள்ளாகும். காலி. அதன் பவர் இறந்து, அழிந்து போகும்.

கலத்தின் ஃபுல் செக்யூரிட்டி கவரை எனேபில் செய்து பாதுகாப்பித்தோம். இருந்தும் எண்கள் எங்களை சூழ்ந்து கொண்டன. ட்ரிக்கரினோம்.

ஸீரோ நம்பர்ஸ் துள்ளி வந்தன. சுற்றி சுற்றி செலுத்தினோம். சூழ வந்த எண்கள் சுருண்டு விழுந்தன. காற்றில் எங்கும் ப்ளக், ப்ளக் ஓசைகள். காலடியில் பல எண்கள். அவற்றின் ஆயுதங்கள். டிஃப்ரண்ஷியேஷன். இண்டக்ரேஷன். ஸம்மேஷன்.

மிதித்து தள்ளினோம். சட்டைகளின் மேல் சில எண்கள் இறந்து தொங்கின. உதறினோம். நெடு நேரம் போராடி களைத்து போனோம். ஸீரோ எமிட்டர் என்பதால் பவர் தனியாக தேவையில்லை. எனினும் கூட மல்டிபிள் ஆபரேஷனும் இணைக்கப்படுவதால், கொஞ்சம் போல் நானோ ஆம்பியரில் செலவாகிக் கொண்டிருந்தது.

கண்டிப்பாக அடுத்த அட்டாக் இருக்கும் என்றே தோன்றியது. ஏனெனில் நான் ஊட்டிய A.I. அப்படிப்பட்டது. க்ரைஸிஸ் மேனேஜ்மெண்ட் செய்யும் புள்ளிகளை எல்லாம் இணைத்திருந்தேன்.

சற்று நேரத்தில் ஒரு வித்தியாசமான ஒலி கேட்டது. ஏதோ ஒன்று ஊடுறுவுவது போல், சர சரவென பாம்புகள் தேயும் ஒலி. நெருங்கி நின்று கொண்டோம். கூர்ந்து கவனிக்க நடந்த நிகழ்வு எங்களை தூக்கி வாரிப் போட்டது.

கலம் மெல்ல மெல்ல எண்களாகிக் கொண்டிருந்தது. அதன் வெயிட், ஹைட், விட்த், மாஸ், டெம்ப்ரேச்சர், ஹ்யூமிடிட்டி கண்டிஷன், டைரக்ஷனல் அனலிஸிஸ் ... எல்லாம்.. எல்லாம் எண்களாகிக் கொண்டிருந்தன்.

வெருண்டு போனேன். இனி எதையும் எதிர்க்க முடியாது. எண்களைப் பணிந்து போவதே புத்திசாலித்தனம்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். கனியாவின் விரல்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன்.

புதிய எண்கள் நெருங்கிக் கொண்டு வந்தன. ஸ்கொயர் ரூட், க்யூப் ரூட், சைன் ஃபங்ஷன், ஆர்க்டேன், பை எல்லாம் வந்தன.

கண்களை இறுக்கி மூடிக் கொண்டோம். தோல் துளைகள் வழி மொத்தமாக புகுந்து, ஒரு முறை என் உடல் சிலிர்க்க, என் நினைவுகளில், என் சிந்தனைகளில்...

7&%34/2 + {0,1,...2^34)...

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

Wednesday, July 09, 2008

ஏதோ தெரிஞ்சிருக்கா..?

ந்த வருடத்தில் பிப்ரவரி மாதம் ஒரு நாள் 'வாழ்வே மயம்' என்று மகாகவி சித்தன் என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அது முடிந்ததும், சீனாவில் இருக்கும் நண்பர் அனீஸுடன் ஒரு நெடும் சாட் செய்தேன். அது கீழே ::

6:51 PM aneez: enna machi wait and c
6:54 PM me: nee mattum smiles of sharksnu vechirukke
aneez: naanga suraa'daaa
me: ethu.. intha puttu seyya use pannuvaangale.. athu thaane.. (prop:ch-28)
6:55 PM aneez: deiii
sonthamaa dialogue elutungaada
me: oooooooooo
6:56 PM ivaru ellame sonthama thaan pannuvaaru...
6:57 PM aneez: aamaa machi
atleast leassuu eduthavathu pannuvom
me: correctda...
then...
tamil blog...?
6:58 PM aneez: kattyam eluthanumdaaa
but officela konjam velai kodukuraanungaa
me: aana time thaan illaa..
corect?
aneez: within march end i will have finished some of my pathivugal
me: china time?
6:59 PM aneez: 9.30
me: DEI.....
naan kaettathu march end china timelaya...?
;'_
;-)
7:00 PM aneez: deii jokeaa athuuuu
kilinjathu pooop
me: ok.. ok.. thanda thanda cool cool
appura epdi irukku chinese kulir...?
7:01 PM aneez: romba jaasthi machi
me: suudu ethikka vendiyathu thaane..
tea, coffe kudichu
7:02 PM aneez: machi ippo thaan black daniel 2 round adichu mudichen
me: GREATDA
aneez: idhukku mela tea kudichaa vaandhi vanthurunm
7:03 PM me: chinese pixes ellam update pannalaamla
chinese padikka nalla website ethavathu sollu machi...
7:04 PM aneez: website ellam illai machi
here chinese is full of confusion
me: then
aneez: each dialect is like a different language
me: nee epdi pozakkira..
7:05 PM aneez: naan enga padikuren
padikanum machi
me: dei.. nee eppadi makkalkitta pesi pizaikkiranu kaetten..
7:06 PM aneez: enga pesuren
full sign language thaan
me: appuram ellame saikai thaanaa..
bath room enganu epdi keppa...? as usual school paiyan maathiriya enna?
7:07 PM aneez: amamdaa
ithu enna americavaa
roadlaa onnukku adikka vendiyathu thaan
me: appa namma uur maathiri thaan. prechnaiye illa..
aneez: aamaa machiii
me: sappadu ellam..
7:08 PM paambuk kari. thavalai leg soup (4 kaal vera)..
aneez: we go to some english restaurantss
epadiooo polappu poguthudaa
ellam saapudaa vendiyathu thaan
me: EDS thaana
7:09 PM aana athaiyum saappidap pazaku... life means learning....
aneez: aaama machi
here i am learning lot abt life da
7:10 PM me: Great... thats the experiences shape our journey...
7:11 PM u have to update ur travels and experiences in blogs... that will be another Yuan-swang's notes for the future generations...
aneez: kattayam machi
i am not travelling
i will start that very soon
7:12 PM innum inga salary and reimbursements varalai
once i get that i will do thingss
me: here Travelling means im not telling about spatial travel.. ur travel in time domain.. from yesterday to today and towards tomorrow... Life Travel...
7:13 PM aneez: apadinguraa
potruvommm
me: in this type of travel u have lot of experiences, which i am not having...and not me, every1 has their own experiences in this travel towards god...
those must be recorded. for the future...
7:14 PM future children...
aneez: machi spirtualityaa pesuraa
7:15 PM me: konjuundu thyaanam pannip paarththeen.. theriyaatha, puriyaatha sila vishayangal konjak konjamaa theriya varuthu.. thats our country's treasure illaiya...?
not religious, not regarding gods..
aneez: not only ourss
me: its about our body...
7:16 PM aneez: in every oriental country
meditation is there
me: correct...
thirumuularnu oru sithar enna solli irukkarna, "uunudampu aalayam. puusai koLLa vaaraay paraaparamee'ngkaraar..
7:17 PM aneez: thirumoolar have told lot ofthingsss
me: that means our body is temple. god is inside... ww have to worship him..
aneez: vaasi and moochu pathi niraya pesi erukkaar
me: but antha song namakku oru memory song-aave tamil lessonla( state board) came...
nee athaiyellam paani irukkiyaa.
7:18 PM i now only joine vethathiri maharishi's yoga practices...
aneez: try panrenn
me: seriously etho irukku machi...
aneez: nalla vishayamda athu
i have respect over vethathri maharishi
me: kannai muudi yosichaa neraiya puriyuthu,..
aneez: pollachi pakathula aaliyarula erukku avaroda asiramam
hahaa
me: s...
aneez: romba thelivu venum machi vaalkailaa
7:19 PM me: what is this life, for whom i came to this world, is this someone's wish/ dream.. if once he got up, will we vanish...
questions.. questions...
aneez: hahaa
7:20 PM life is not easy'da once this questions start to comess
me: is completing this project and sucking the customer's legs and a** is the reason for my life..
aneez: but without getting confused and diverted u have to find answerss
me: sometimes i confused regarding this...
aneez: haha machi
naan thaniya inga vanthathukku idhuvum oru kaaranam
me: romba pesaren nu ninaikkiren...
aneez: want to feel me with me
7:21 PM illaidaaa
me: muthu padam paathrirukkiya...?
aneez: thoppilaey erunthaalum ovovuru maramum thani maramnu oru siththar paadal erukku
paarthen
me: correctda...
7:22 PM athula thalaivar vayasanavara jameenkku varuvaaru.. appo 'antha veettu amma enga poi irukkaanga'nu ketpaaru
vadivel koyilikkunu solluvaaru
aneez: hmm
me: ethukkunu ketpaaru
vadivel sirichukitte koiyilukku ethukku povaanga, saami kumbidanu solluvaaru
aneez: hmm
7:23 PM me: thalaivar appo, veettukkulla irukkira vinayakar silaiyaik kaatti appo ithu yaarunu keettuttu, 'SAAMIYAI ULLAYE VECHUKITTU VELIYA THEDARAANGA'nu solli vizunthu vizunthu sirippaaru..
enna oru thaththuvamm...
really god is here, inside us...
aneez: aamadaa
7:24 PM kammunatty engeyoo ullai olinju erukaarr
thedurathukkuleyae thaavu theernthurum
kidaikkum poluthu romba thevai pada maattaar
7:25 PM me: in school days after i think 8th, appo biology padichathukku appuram, nethiyaith thattip paarthu'ithellam verum proteinsum, amino acidsum thaana..'nu ninaichup paarthathu ellam ninaivukku varuthu...;-)
god thevaip padaatha stage vera irukka enna..
7:26 PM aneez: haha
kadavullum neeyum onna aanathukku aporam avar yen thevai pada poraarr
me: think panna vechitta.
7:27 PM nee intha maari think panni irukkiya
aneez: nirayaaa
7:28 PM pala neram it was like that i am inserted into a bag called body
me: Greatda..
naanum athu pola thought
aneez: great ellam illaai
7:29 PM there are millions who think like us
the matter is who gets the truth
me: ethuvum unmai illa.. ethuvum poi illa..
7:30 PM aneez: aamaa machi
apadi illai
ellam unmai
ellam poi
bharathi sonna maadhri
Maayakannan avan
7:31 PM me: once i walked under thro chennai's anal hotty sun, i was sweated...
suddenly one thought arised.
7:32 PM aneez: ennadhu
me: this hot is from sun.. when? the earth is facing the sun, so veyil.. but apart from this very very small sun, the universe id filled with darkness..
so y i have to worry abt this thakkanoondu dun
7:33 PM thuliyoondu sun..
pirapanjsaththai nirappiyulla iruL
aneez: haha...actually spirituality is not feeling greatness by insulting the nature and co-humans
it's co-existence
7:34 PM me: illa. inot insulted sun.. i feel why i worry abt this sun..
aneez: spirituality worry'um illai
me: sun does his duty, i told y we should thitting sun for the veyil..
aneez: ethuvum illaida athuu
aanaal ellam unndu
7:35 PM who said that sun's duty is to heat???
unkitta sun vandhu soluchaa?
me: illa
aneez: ennada kathai vidureengaa
if u dont understand or know a thing then how can u say about that thing and it's duties
7:36 PM me: naan solla varathu "intha suuriyan ippadi koluthuthe"nu erichal pattukittu irukkama, namma velaiyai AMAITHIyaa paakka mudinjathu athukkappuram
7:37 PM aneez: haha yethukku nee enakku ivloo kasttapattu explain panraa???
so u r having the feeelin and fear of being mis understood?
me: s
aneez: idhuvum illai spirituality
7:38 PM being none and being one
me: then whats as ur scale
aneez: i dont have any scale
me: being none and being one
aneez: does god has any scale?
me: great point
7:39 PM no
aneez: how do u know ????
may be god has a scale or maybe he doesn't
me: ninaichen ipdi keppanu
aneez: the point is to understand that there exists no need to understand
just to feel
7:40 PM no fucking explanation
me: entha feelingai appo nee godnu solluva
7:41 PM aneez: ethukku pirikuraa ellatheyum
kolanthaiyayum kadavul thaan padaikuraar
kolanthaiyaa kolra kolaikaranaeyum avar thaan padaikuraar
7:42 PM me: ithukku enna solrathunu theriyala
antha kozantha thaan kolaikaaranaa aaaguthu illaya..
7:43 PM aneez: aamaa appo yaaru kettavan yaaru nallavan
appo kadavul'nu oruthar illaiyaa?
7:44 PM me: irukkar..
aana kadavulai epdi neenga nallathu mattum mpanravarnu eduthukkireenga
7:45 PM aneez: apadiyaa..daily africa'la oru paavamum seyyadhaa 5000 children are dying
why he is playing games with them
appo kadavuley kettadhu panraaruna naangaa panna koodathaa?
7:46 PM apadi nallathu kettadhu rendumey pannina..apppo avaroda character enna manusa characteraa???
ennada kathai vudureengaa
7:47 PM me: intha discussion kadavul irukkaraa illayaanu poittu irukku...
aneez: illaiyaee
yaaru sonna it is goind towards some characters about god
existence is one of them
me: avar enga exist?
aneez: do u ever felt ur existence without any other human beings or bodies ???
7:48 PM me: angayavathu heaven-laya.. illa un manasaula...
aneez: u always need some other thing to prove your existence
7:49 PM me: sometimes i feel other persons as a sand pot which has 9 holes on it..
me too..
athanaala yaar meelayum kobam vara maattenguthu..
aneez: hahaa....
me: sari poo nu vidath thonrathu...
7:50 PM aneez: thani perungobam venumda intha vayathil
kobam illadha vaalvu veeen machi
me: enakku kobam en meela thaan...
aneez: bharathiyae Sinam palaga solli erukkaan
7:51 PM dei nalla thelivaana manadhu thevai spirituality'kku
me: theruvila pora naayai anbaa paakkath thoonuthu..
aneez: it's not a easy one
me: athuvum oru uir thananu thoonuthu
aneez: anbum + kobam + panivu + thairiyam ipadi ellam erukanummm
naaya naaya paarkanum....
manusana manusanaaa paarkanam
7:52 PM spirituality needs lot of intelligence
self indulgence
self questioning
relentless search
me: unakkum athukkum ore uyirnu therinjappuram epdi athai kal eduthu adikka thonum?
aneez: naan kal eduthu adikalai machi
inga nalla fry panni tharuvaangaa
me: ;-)
7:53 PM aneez: athai vaangi sapida thonudhu
deiii romba thannirakkam koodathu
spirituality'laa
u need a master machi
me: naanum inga chicken fish sappittukittu thaan irukken..
aneez: yogic practices,books,self questioning and search wont suffice
me: but i think im in transition stage...
aneez: guru illaaa viththaai aadathu
nalla guruva mothala thedikkkooo
7:54 PM me: yaar gurunu theriyala
aneez: first test his qualities
athu therinjaa 50% over machi
once u got a guru surrender urself to him
he will take care of u
it takes lot of years to get the guru
7:55 PM be patient and pray,meditate relentless to the GOD for a guru
me: innum 14k days thaan life.. athukkulla naan enna ellam pannanum..?
aneez: the divine path will send u the one
unakku evan sonna apadiii
7:56 PM me: unakku onnu theriyuma..?
aneez: do u think after we lose this body everything over?
yes
me: athu theriyalaye,...
theriyaama thaane ella kozappamum...
aneez: haaha aporam ennada 14k dayss
poda poii polappa paaruu
me: kanakku pottu paaru.. 60 yearskku innum evlo naalnu...
7:57 PM aneez: mothala kadamaiyaa mudingooo kannaasss
me: athai thaanda firste sonnen..
aneez: unnnai nambi erukura un kudumbathukku seyya vendiyathu ellam senjutiyaa
me: ethu en kadamai... customer satifacion..?
illa nu ninaikkiren...
aneez: athu un vayithu polappu
niraya kadamai erukkudaa
7:58 PM me: niraiya kelvikal vara vara.. athu ellam mounathila mudiyuthu..
aneez: ellatheyum thavarama senjittey thaan sidela self realisationum nadakanum
me: ethaiyum pesama mounamaa irukka thonuthu...
aneez: goodd
unnakku aairam peru aairam padhil koduthaalum
un manam kodukura mounam thaan perusu
7:59 PM me: as a black hole questions immerse into silence..coz they arose from silence illaiyaa..
aneez: deiii manam oru maayaiii
me: last year book fair chennai i bougth The Holy QuirOn also...
and tried to read..
just 4 pages i fell..
athukku mela poga mudiyala..
8:00 PM ramakrishnar, vivekanandharnu padichup paarthutten..
bivle school daysla padichu paarthen..
8:01 PM i believe u understand im not bandhafying by telling all these secrets to you...
aneez: idhu ellam secret illaida
8:02 PM who ever searches the divine all those millions are doing this same
me: llai ithu varaikkum yaarttayum sonnathilllla..
bharathiyoda ellap paattum pidikkum athai vida antha paattu..
"nirpathuve"..
8:03 PM bharathiyum oru sithar thaannu sonnap paattu illa athu..
"yaanum oru sithanaaga vantheen"nu paadinaar illaiyaa.
aneez: amanda
avar konjam over dose
dervish'nu englishlaa solluvaangaa
antha maadhri paarty adhu
me: avar vantha neeram sari illaa..
aneez: evan sonnaa?
8:04 PM me: athanaala country pathi pada vendiyathaa poyiduthu...
aneez: dei bharathi vandha velaiyaa correctaaa pannittaan
dei siththarnnaa epppovum kadaval pathi thaan paadanumaaa
me: illaatti oru yogiyaa aaga vendiyavaru...
aneez: ennangadaa idhuuu
me: kaanbathellam verum kanavaa..?
aneez: epovumey oru dappakkuliyaa adaikuringalaey
me: enga appa iranthappo veettukku ponapp en ninaivukku vantha lines ithu...
8:05 PM naanum verum kanavaa- intha njaalamum poi thaanaa..?
aneez: machi naan sooru thinna poren...
eennna thaan aanmeegam pesinalum
me: ellam poinu ponappuram appraisal illai, increment pathalainu sandai podarathula enna arththam irukku...
8:06 PM aneez: vayitrikkum siridhu eethuruvom
me: naan intha vayasukku thakuntha aal illa..
evlo neram aagum.. have i wait..?
aneez: deiii ellam nalla thaan erukkuuu
inga time 10.30
8:07 PM me: ok.. appo eatiituu thuungu..
naallaikku paarkkalaam.
aneez: deii whatever happening to u is good and rightt
me: s...
im also beleiving that...
romba mokkai pottutoom nu ninaikkiren..
aneez: just feel it and try to do thingss
have nice time
bye d
a
me: thanks da for a very good conversation...
8:08 PM byeda...
God bless u...

இந்த சேட் நடந்த நாள் :: பிப்ரவரி 27 நைட்.

காலையில் பார்த்தால் ஹிந்துவில் 'சுஜாதா மரணம்'.

புரியல எனக்கு!

திண்ணை - சில நினைவுகள்.

2002-ம் ஆண்டு.

ஒரு நாளின் மதியம். சென்னையின் சுடும் கதிர்கள் ஹாஸ்டல் ப்ளாக்குகளின் அடர் மரங்களின் இடைவெளியில் நழுவி விழுந்து கொண்டிருந்தன. ஐந்தாவது ப்ளாக்கில் இருந்து வெளி வந்த போது அரவிந்தன் எதிர்ப்பட்டான். அவன் முகம் ஒரு சங்கடத்தில் இருந்தது. 2000-ல் ஒரு ஏப்ரல் மாத திங்கட்கிழமை காலையில் பிஸிக்ஸ் க்ளாஸில் அமர்ந்திருக்கையில், சவரிராஜ் சாரின் அனுமதி கேட்டு என்னைப் பார்க்க வந்த சுரேஷின் முகத்தில் இருந்த அதே சங்கடம்.

"வசந்த்... பாட்டி இறந்துட்டாங்களாம். ஆனா உனக்கானு தெரியல. இந்த நியூஸ் அவனுக்காகவும் இருக்கலாம்..! எதுக்கும் ஃபோன் பண்ணிக் கேட்டுக்கோ..! அவனையும் பார்த்து சொல்லணும். கே.பி., குட்டி வசந்தை எங்கயாவது பார்த்தியா..?"

எனது பெயரிலேயே, எனது இனிஷியலிலேயே மற்றுமொரு ஆர். வசந்த குமார் வகுப்பில் இருந்தான். (இதே ஸ்டேட்மென்டை அவனும் சொல்ல 100% தகுதி இருக்கின்றது.) எனக்கு தோன்றி விட்டது. இது எனக்கான செய்தி தான். அவசரமாக அறைக்குத் திரும்பி கையில் கிடைத்த சில்லறைகளைப் பொறுக்கி கொண்டு பங்க் கேண்டீன் அருகில் இருந்த எஸ்.டி.டி. பூத்திற்கு சென்றேன். கார்த்தி வீட்டுக்கு போன் பண்ணி கேட்க விஷயம் உறுதிப்பட்டது.

அறைக்குத் தளர்வாய்த் திரும்பினேன். பேக் செய்ய வேண்டும். இப்போது நேரம் என்ன? மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இண்டர்சிட்டி இரண்டு முப்பதுக்கே போயிருக்கும். நான்கு மணிக்கு திருவனந்தபுரம் எக்ஸ்ப்ரஸ் இருக்கிறது. அதைப் பிடித்தாக வேண்டும்.

சென்ற முறை போல் பஸ்ஸில் சென்று தவறு செய்து விடக் கூடாது. இருந்த கொஞ்ச துணிகளை எடுத்துப் போட்டுக் கொண்டு அங்கே இங்கே கடன் வாங்கி சென்ட்ரலுக்குச் சென்று தி.எக்ஸ்பிரஸைப் பிடித்து எப்படியோ அமர்ந்து கொண்டேன்.

இரண்டு வருடங்களில் மற்றுமொரு முக்கிய மரணம்..! கல்லூரிக் காலம் எனக்கு எப்படி எல்லாம் இருக்கின்றது!!

இரவில் ஈரோடு வந்து அடர் மெளனத்தோடு ஆயா வீட்டிற்கு வந்தேன். அமைதியாக இருந்தது. ஈரமாக, மரணத்தை மட்டுமே நினைவுபடுத்தி துக்கத்தை கிளறச் செய்யும் கதம்ப பூ வாசம். எல்லார் வீடும் அடைத்து இருந்தது. 16/20 எண்ணிட்ட பச்சை நிற ஒற்றைக் கதவைத் தட்ட போன போது தான் நினைவுக்கு வந்தது.


நாதாங்கியை பிடித்து கதவில் அடிப்பேன்.

"யாரு..?" கயிற்றுக் கட்டிலில் அசைவு ஒலி கேட்கும்.

"ஆயா... நான் தான் வந்திருக்கேன்.." பேரைச் சொல்ல மாட்டேன். பேரன் குரல் தெரியாத என்ன?

"இரு... வர்றேன்..!" கதவு திறக்கப்படும்.


இன்று என்ன என்று சொல்லி அழைப்பது? யாரை சொல்லி கூப்பிடுவது? அப்படியே பேக்கை வாசலின் ஓரம் வீழ்த்தி விட்டு நானும் ஒரு புறமாய் விழுந்தேன்.

சிவப்பு நிறம். ஓரங்களில் பூ அலங்காரம். ஒரு நீள் செவ்வகமான திண்ணை. இரு திட்டுகளால் தாங்கப்பட்டு , கீழே வீட்டிலிருந்து வரும் ஜலதாரை நீர் பாயும் வழி என்று இருந்த திண்ணை இன்று வெறுமையாக இருந்தது.

பார்க்கப் பார்க்க பொங்கி வந்த நினைவுகள் கண்களில் வெடிக்க பெருங்குரலெடுத்து அழலானேன்.

வானியில் ஒரு முக்கியமான பேருந்து நிறுத்தம் அந்தியூர் பிரிவு. ஊருக்குள் இருக்கும் மூன்று முக்கிய ஸ்டாப்புகளில் இது மட்டுமே ஸ்டாப் என்ற அந்தஸ்தைப் பெறும். மற்ற இரண்டும் பஸ் ஸ்டேண்டுகள். பழைய பஸ் ஸ்டாண்டு மற்றும் புது பஸ் ஸ்டாண்டு. இந்த இரண்டிற்கும் இடையில் இது அமைந்துள்ளது. இங்கு இறங்கி ஈரோடு செல்லும் திசையில் கோவை - பெங்களூரு நெடுஞ்சாலையில் நடந்தால் காவேரி ஆற்றுக்கு செல்லும் மூன்றாவது கட்டைத் தாண்டினால மம்மி - டாடி டி.வி.ஷோரூம் இருந்தது. அதற்கடுத்து சாமி மாவு மில் இருக்கும். அதற்கு நேர் எதிரில் மேற்குத் திசையில் பார்க்க ஒரு சந்து தெரியும். சந்தின் எண்டாக ஒரு பச்சைக் கதவு இருந்தது. நாமம் போட்டார் போல் மூன்று பிளவுகள் இருக்க, அது தான் எங்கள் வீட்டின் ஒரு வாசலாக இருந்தது. புற வாசல். புழக்கடை வாசல்.

அதனை ஒட்டியே ஒரு லைட் கம்பம் இருக்கும். அது தான் தெருவுக்கே வெளிச்சம் தரும். அதன் அருகில் தான் எங்கள் வீட்டின் திண்ணை இருக்கும்.

நான் பிறந்த பின்பும், அதற்கு நெடுங்காலம் முன்பிருந்தே எங்கள் பாட்டி அதில் தான் அமர்ந்திருப்பார். 4. இப்படி தான். திண்ணையில் அமர்ந்து இடது கையை மடக்கி வலது கையை ஊன்றி கன்னத்தை தாங்கிக் கொண்டு ஐம்பது வருடங்களாக வாழ்க்கையை ஓட்டி வந்தார்.

திண்ணை இல்லாமல் அந்தக் காலத்தில் - இருபது வருடங்களுக்கு முன்னால் - எங்கள் தெருவில் இல்லை. எங்கள் வீடு, கார்த்தி வீடு, வினோத் - ஆர்.எஸ்.பி. காம்பினேஷன் வீடு, கதிரேசன் வீடு, அமிர்தம் வீடு, அந்தப்பக்கமாய் வாத்தியார் வீடு, மணிவண்ணன் - பாபு - உமாசங்கர் வீடு, சுதா டெய்லர்ஸ் மணிகண்டன் வீடு இப்படி எல்லார் வீட்டின் முன்பும் திண்ணைகள் இருந்தன.

அந்தப்பக்கம் என்றால்... சொல்கிறேன். எங்கள் வீடு ஒரு சதுரத்தின் ஒரு பக்கம். அந்தப்பக்கம் என்றால் அது எதிர்ப்பக்கம். நடுவிலும் ஒரு வீடு இருக்கும். அதிலும் திண்ணை இருக்கும்.

இந்த திண்ணைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். எங்கள் திண்ணை கல்லால் இருந்தது. அது தெரியாமல் இருக்க அடர் சிகப்பாய் இருக்கும். அதை எங்கள் தொழிலில் கப்சாப்பு நிறம் என்பர். நடுவில் இருக்கும் வீட்டுத் திண்ணையும் அதே போல் இருக்கும். வாத்தியார் வீட்டுத் திண்ணை சுண்ணாம்பு அடித்து இருக்கும். பாபு - ம. - உ. - வீட்டுத் திண்ணையும் அதனுடன் இணைந்தே இருக்கும். சுதா டெய்லர்ஸ் வீட்டுத் திண்ணை கொஞ்சம் உயர்ந்து பக்கத்தில் படிக்கட்டுகளோடு இருக்கும். அதில் மொசைக் எல்லாம் போட்டு புள்ளிகள் வைத்திருக்கும்.

கார்த்தி வீட்டுத் திண்ணை இப்போது சுத்தமாக நினைவில்லை. வினோத் - ஆர்.எஸ்.பி கூட்டுத் திண்ணையும் மொசைக் எல்லாம் போட்டு உட்கார்ந்தாலே உச்சந்தலைக்கு ஜில்லென்று குளிர் பாஸ் ஆகும்.

அலற வைக்கும் ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் அற்ற தூர்தர்ஷன் மட்டும் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் திண்ணைகள் மாலை நேரப் பொழுது போக்கிற்குப் பெரிதும் பயன் கொடுத்தன.

ஆறு மணிக்கு மேல் கூடும் இச்சபை அங்கத்தினர்களில் பாட்டியும் ஒருவர். பலகதைகள் பேசப்படும். முன் சொன்ன போஸில் பாட்டி அமர்ந்து கொள்ள மற்றவர்கள் அவரவர் உட்காரும் வசதிக்கு தகுந்தார்ப் போல் உட்கார்ந்து கொள்ள ஊர் நியாயம் பேசப்படும். கல்யாணக் கதைகள், இழவு செய்திகள், புதுப்படக் கதைகள், படிப்புச் செய்திகள் அத்தனையும் பேசப்படும்.

பள்ளி விட்டு வந்தவுடன் ஹோம் வொர்க் எல்லாம் செய்து விட்டு, அன்று படிக்க வேண்டிய பாடங்கள் எல்லாம் படித்து விட்டு (இல்லாவிட்டால் தோசைக் கரண்டியில் முதுகு பழுக்கும்; தயிர் மத்தினால் கை முட்டிகள் பிளக்கப்படும்.) வேறு ஏதாவது (சிறுவர்மலர், காமிக்ஸ்) எழுத்துக் கூட்டி படிக்க முயல்வேன். அப்போது கரண்ட் போய் விட்டால் வருகின்ற சந்தோஷமே தனி தான். ஓடோடி வெளியே வந்து விடுவேன்.

முக்கியக் காரணம் பயம். அம்மா அப்பா வேலைக்குச் சென்று இன்னும் திரும்பாதிருக்க, பாட்டி வெளியே திண்ணையில் அமர்ந்து நியாயம் பேசிக் கொண்டிருக்க, (தம்பி என்ன செய்வான் என்று நினைவில்லை) திடீரென்று கரண்ட் போனால், பயம் வராமல் என்ன செய்யும்?

வெளியே ஓடோடி வந்து விடுவேன். தெருப் பசங்கள் எல்லோரும் வந்து விடுவார்கள். சில சமயம் திண்ணையில் அமர்ந்து கண்ணாமூச்சு விளையாடுவோம். இல்லாவிட்டால் ஐஸ் பாய், போலிஸ் - திருடன்...!

குண்டன் - குண்டி, குள்ளன் - குள்ளி, ராஜா - ராணி, இளவரசன் - இளவரசி, சுண்டைக்காய் - கொய்யாக்காய் என்று அப்போதே கலந்து கட்டி கதை சொல்லுவேன். கதை நிற்காமல் போய்க் கொண்டே இருக்கும். கரண்ட் வரும் வரை கதை போகின்ற போக்கில் போய்க் கொண்டே இருக்கும். இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கின்றது. எப்படி அந்தக் கதைகள் எல்லாம் சொன்னேன் என்று? காரணங்கள் : சிறுவர்மலர், காமிக்ஸ் புத்தகங்கள், அச்சாபீஸ் தாத்தாவுக்கு பாக்கு வாங்கி கொடுத்து படித்த நூற்றுக்கு மேற்பட்ட ராஜா கதைகள்..!

கொப்பி என்றொரு பண்டிகை நடத்தப்படுவது உண்டு.

சித்ரா பெளர்ணமி என்று நினைக்கிறேன். அதற்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பிருந்தே இதற்கான வசூல் துவங்கி விடும். 10 ரூ. முதல் 50 ரூ. வரை வீட்டிற்குத் தருவோம்.

எங்கள் தெருவிற்குத் தள்ளி கொஞ்சம் அகண்ட பகுதி இருக்கும். அங்கு தான் கொப்பி அடிப்போம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அவரை நடுவில் வைத்து சின்னப் பெண்கள், சிறுவர்கள் நாங்கள், மங்கைகள் எல்லோரும் சுற்றிச் சுற்றி வந்து கொப்பி அடிப்போம். எல்லோர் வீட்டில் இருந்து டிஃபன் பாக்ஸில் - பெரும்பாலும் பள்ளிக்கு கொண்டு செல்லும் பாக்ஸ் - ரெண்டு இட்லி, சாம்பார் அல்லது சாப்பாடு என்று வைத்து பிள்ளையாரைச் சுற்றி வைத்து விடுவோம். இரவு வந்து ஓர் ஏழு மணிக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்க் கூட்டம் களை கட்டும். அதுவரை நாங்கள் கதிரேசன் வீட்டுத் திண்ணையில் தான் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருப்போம். ( தளபதி எப்படி, தர்மதுரை கெளரி தியேட்டர்ல நூறு நாளாமே?)

சுற்றி வந்து பாட்டு எல்லாம் பாடுவோம். டயர்டாகி விட்டு சின்னதாய் பூஜை செய்து அவரவர் டிஃபன் பாக்ஸை எடுத்து அங்கேயே சாப்பிடுவோம். கொஞ்சம் பேர் திண்ணைகளில் அமர்ந்து; கொஞ்சம் தரையிலேயே.

பெளர்ணமி நாள் அன்று ஆடியோ ஆம்ப்ளிஃபயர்கள் திண்ணையில் கலர் கலர் எல்.ஈ.டி.க்களில் மின்னிக் கொண்டிருக்க, லைட் கம்பத்தில் கோன் ஸ்பீக்கர் காடி திருவிளையாடலோ, சரஸ்வதி சபதமோ வருடம் தவறாமல் ஒலிபரப்பாகும்.

"அண்ணா.. அண்ணாமலை போடுங்கண்ணா..! குணா எல்லாம் வேண்டாம்ணா..!"

"போடறேன்..! நீங்க டேன்ஸ் ஆடணும் என்ன?"

"சரிங்ணா..!"

டட்டர...டட்டர...டட்டர...டட்டர..... ஜிங்குச்சா..டடடடட...டேன்..ஹேய் வந்தேண்டா பால்காரன்...

தெருவே திருவிழாக் கோலத்தில் இருக்கும். எல்லோர் வீட்டின் முன்பும் கோலங்கள் போட்டு, வீட்டைச் சுத்தம் செய்து, பெருக்கி, வழித்து, சுண்ணாம்பு அடித்து, திண்ணைகளுக்கு காரை கட்டி..!

அன்றைய உணவு மட்டும் ஸ்பெஷலாக செய்யப்ப்டும். டிஃபன் பாக்ஸில் இல்லாமல் கொஞ்சம் பெரிய தட்டில் வாழை இலை வைத்து சூடான சாப்பாடு வைத்து விழா தொடங்கும். அன்று இரவு கொப்பி தொடங்கி விடிய விடிய பாட்டு பாடுவார்கள். முழு நிலவு அப்படியே ஜொலிக்கையில், கரண்டு போனால், வெண் பால் ஒளி பாயும். நாங்கள் திண்ணையிலேயே தூங்குவோம்.

விடிந்ததும் பிள்ளையாரை வழித்து காவிரியில் கரைத்து விட்டு வருவார்கள். நான் போனதில்லை. பெரியவர்களே செய்து விடுவார்கள். அவர்கள் வரும் வரை திண்ணைகளில் காத்திருப்போம். வந்த பின் தான் எல்லோர் வீட்டிலும் சாப்பாடு , டிபன் எல்லாம்!

தீபாவளி அன்று இந்த திண்ணைகள் படும் பாடு சொல்ல முடியாது, அவற்றால் பாவம்..!

எங்கள் திண்ணைகள் எல்லாம் வழுவழுவென பளபளவென பர்மா தேக்காலோ மார்பிள் பளிங்குகளினலோ செய்யப்பட்டிராததால், அவற்றுக்கும் வயதாகிக் கொண்டே வரும். ஓட்டை விழுந்து, பல்லிளித்து சந்துகளில் பூரான் வரும். எலிக்குஞ்சுகள் இரவெல்லாம் க்றீச்சிட்டுக் கொண்டே இருக்கும்; திண்ணைகளுக்கு அடியில் இருக்கும் சாக்கடைகளில் பெருக்கான்கள் திடீரென வங்குகளில் காணாமல் போகும். அப்படி பல ஜீவாத்மாக்களுக்கு வாழ்விடப் பாதை கொடுத்திருக்கின்றன.

ஊசிப் பட்டாசு என்று நினைவிருக்கின்றதா? ஆபத்தில்லாத வெடி. பெரிய வெடிகள் போல் காது காலியாகும் அளவிற்கு ப்ரச்னை ஏற்படுத்தாது. ரோல் கேப் போல் குழந்தைகள் விளையாடும் ரேஞ்சிலும் இருக்காது. சிறுவர்களுக்கு சிறந்த வெடி என்று காம்ப்ளான் போல் சிபாரிசில் பட்டாசுக் கடைகளில் விற்கப்படும். பற்ற வைத்தால் 27% வெடிக்காது. புஸ்வாணம் ஆகி விடும். மீதி வெடிக்கும். அதுவும் எப்படி?

'நானே செவனேனு படுத்திருக்கேன். என்னை ஏண்டா தொல்லை பண்றீங்க?' என்று கேட்டு மீண்டும் கண்களை மூடிக் கொள்ளும் தாத்தாக்கள் போல! 'பட்' என்று அல்லது 'படார்' என்று ஒரு சத்தம் வரும். அத்தோடு காலி யாகி சோலி முடிந்து போய் விடும்.

அதை வேறு எங்கும் வைக்க முடியாது. இராக்கெட் போல் பாட்டிலில் செருக முடியாது.லட்சுமி வெடி போல் தரையில் நிற்க வைக்க முடியாது. பச்சை நூலால் கட்டிய அணு குண்டுகளைப் போல் சுவற்றில் சாய்த்தும் வைக்க முடியாது. அவற்றை வைக்க ஒரே வாகான வழி திண்ணை ஓட்டைகள் தான். ரொம்ப பெரியதாகவும் இருக்காது. ஊசி நுழையக் கூட இல்லாத அளவுக்கும் இருக்காது. சரியாக ஊசிப் பட்டாசு வைத்தால் நிற்கும் அளவில் தான் இருக்கும்.

வைப்போம். எல்லார் வீட்டுத் திண்ணைகளிலும் ஊசிப் பட்டாசுகள் வைத்தே திண்ணைகள் பைத்தியங்கள்(Crack) ஆயின.

இதை விடவும் திண்ணைகளுக்கு மற்றுமொரு ஆபத்தான வில்லன் ஒருவர் உண்டு. அவர் தான் பாம்பு மாத்திரை. சும்மா அடிப்பாகம் செக்கச் செவேல் என்று நெருப்பில் ஜொலிக்க புசுபுசுவென்று சீறி வருவார் ஷாம்லி ஃப்ரெண்டார். அவரை வைக்கவும் தோதான இடம் திண்ணைகள் தாம். 'பொட்டிட்டு மையிட்டெழுதி' என்று பெரியாழ்வார் சொன்னது போல் கரும் பொட்டுகளால் திண்ணைகள் திருஷ்டிப் பொட்டிட்டு இருக்கும்.

இந்தக் கொண்டாட்டம் எல்லாம் தீபாவளி அன்று மட்டும் தான். அடுத்த நாள் பார்க்க வேண்டுமே! எங்களைத் திட்டிக் கொண்டே பாட்டி எல்லா பட்டாசுக் குப்பைகளையும் குட்டிவார். இது வருடா வருடம் நடக்கும் திருவைபவம்.

இவற்றைத் தவிர தாயக் கட்டை ஆட பயன்படும் திண்ணைகள், பேன் பார்க்க உதவும் திண்ணைகள் ( இதற்கு படிக்கட்டுகள் அருகில் அமர்ந்தவை தான் வசதிப்படும்.), கட்டிலைத் திருப்பிப் போட்டு நீளக் கால்களில் ஜமுக்காளம் கட்டி பெயர் தைக்க உதவும் திண்ணைகள், அமர்ந்து கால்களில் சின்னக் குழந்தைகளை நிற்க வைத்து ஊஞ்சல் ஆட்ட உதவும் திண்ணைகள், அம்மா வர லேட்டானால் படுத்து ஏதேதோ பயக் கற்பனைகளில் ஆழ உதவும் திண்ணைகள், ஜன்னலில் எட்டிப் பார்த்து பக்கத்து வீட்டில் டி.வி. பார்க்க உதவும் திண்ணைகள், அப்பா 'நாளைய மனிதன்' கதை சொல்ல பயந்து கொண்டே முகத்தை மூடிக் கவிழ்ந்து படுத்துக் கொண்ட திண்ணைகள்.....

ஆயிரம் கதைகள் உண்டு எனக்கு சொல்ல திண்ணைகள் பற்றி!

று நாள் காலை மயானத்திற்கு கூட்டிப் போனார்கள். தேவராஜன் பிள்ளை சந்தில் இருந்து வெளியே வந்து, நெடுஞ்சாலையைக் க்ராஸ் செய்து, பள்ளமாக இறங்கும் தெருவில் நடந்து மார்க்கெட்டைத் தாண்டி, இடது புறம் கட் செய்து நடந்தால் மயானம்.

வழியெங்கும் அவசர நாற்றங்கள். காவிரியில் பாறைகளோடு மோதி நதிநீர் ஓடிக் கொண்டிருந்தது. வான நீல கேட் திறந்து எரியூட்டும் இடத்திற்குச் சென்றோம். இன்னும் கொஞ்சம் புகை வந்து கொண்டிருந்தது. வெட்டியான் ஒரு தீய்ந்த கட்டையால் அதனைக் கிளறிக் கொண்டிருந்தார். கொண்டு போயிருந்த செம்பில் பால். அதனை ஊற்றினோம். சாம்பலில் இருந்து சில வெள்ளை எலும்புகளை எடுத்து "இது தான் உன் பாட்டி, பார்த்துக்கோ" என்றார்கள்.

வாழ்வின் அநித்தியம் புரிந்தது என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். அது தான் உண்மை.

***

பாலபாரதியின் திண்ணை தொகுப்புக்காக.

ப்ளாக்கர் கணக்குப்படி இது 400-வது பதிவாம்.

Sunday, July 06, 2008

சுத்தம் டைகர் பிஸ்கட் தரும்.

கோலேஜ் ஆஃப் இஞ்சினியரிங் காரியவட்டம் காம்பஸில் இருந்து ஏஷியன் பேக்கரி பங்கப்பரா வரை சாலை ஓரங்களை சுத்தம் செய்வதாக முடிவு செய்திருந்தோம்.

ஞாயிறு காலை 8.30 முதல் மதியம் 2 மணி வரை என்று ப்ளான். வழக்கமான நம் பங்க்சுவாலிட்டி படி காலை 8.45க்கு சென்றேன். எப்படியும் நமது அரசாங்க ஊழியர்கள் வந்து சொற்பொழிந்து கையில் குப்பைக் கூடையை எடுத்து பொஸ் கொடுத்து.. ஆரம்பிக்கவே 9.30 ஆகி விடும் என்று எண்ணி இருந்தேன். எனவே பொழுது போக்க கலீல் கிப்ரானின் The Prophet கொண்டு சென்றிருந்தேன்.

பஸ் ஸ்டாப்பில் இறங்கிப் பார்த்தால் ஏற்கனவே கொஞ்சம் பேர் வந்து கையில் கிடைத்த மரக் கிளைகளைக் கொண்டு ஓரங்களில் இருந்த சருகுகள், ப்ளாஸ்டிக் குப்பைகள் என்று தள்ளிக் கொண்டிருந்தனர். இணைந்து கொண்டேன், புக்கை பாக்கட்டில் வைத்துக் கொண்டு!

ஆதியில் இருந்தே ஒரு குழப்பம் இருந்து வந்தது. டார்கெட் என்ன? சாலையின் இரண்டு புறங்களிலும் இருக்கும் ப்ளாஸ்டிக் குப்பைகளை மட்டும் அழகாக பொறுக்கி எடுத்துக் கொள்வதா அல்லது எல்லா செடிகளையும் வெட்டி அழகுபடுத்துவதா?

இந்த கேள்விக்கு விடை யாரும் தராததால் கம்புகளை வைத்து எல்லாப் பக்கமும் விசிறிக் கொன்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில் வேனில் மண்வெட்டிகள், சீப்புக் கம்பு, டயர் வளைத்து கூடைகள் எல்லாம் வந்தன. ஆளுக்கு ஒன்றாய் எடுத்துக் கொண்டோம்.

9.10 மணி சுமாருக்கு மஞ்சள் கரை போட்ட சில ஆட்கள் வந்தனர். அவர்கள் தாம் ஸ்ரீகார்யம் பஞ்சாயத்து போர்டு உறுப்பினர்களாம். ஞாயிற்றுக் கிழமை கூட நிம்மதியாக தூங்க விட மாட்டேன் என்கிறார்களே என்ற எண்ணம் பளிச்சிட்டது கண்களில்!

வழக்கமான பேச்சைக் கொஞ்சம் (..அவர்களே,... அவர்களே etc..etc.. ) பேசி விட்டு போர்டு தலைவர் கையில் ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு கொண்ட கடுப்பை எல்லாம் ஒரு புல்லின் மேல் காட்டி ஒரு போடு போட்டார். புல் பெயர்ந்து வந்தது. வெற்றிப் புன்னகையோடு கிளம்பிச் சென்றனர்.

மண்வெட்டியால் வெட்டியும் கடப்பாரையால் குத்திக் கிளறியும் ஓரங்களை அடைத்துக் கொண்டும் இருந்த கச்சடாக்களை அள்ளிச் சேகரிக்கையில் கிடைத்த மில்மா பால் பாக்கெட்கள், சிமெண்ட் கவர், சிதைந்த யானை பொம்மை முகமூடி, பலசரக்குக் கடை ப்ளாஸ்டிக் கவர், பழைய துணிகள், பாதி புதைந்து மீதி இழுக்கப்பட கிழிந்து கையில் சிக்கிய சேலைகள், பான் பராக் பாக்கெட்டுகள், ராமச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் துணிக்கடை பேக், கலர் கலர் பஸ் டிக்கெட்டுகள், வாட்டர்லைன் சிதறல்கள், தமிழ், மலையாளம், இந்தி படப் போஸ்டர் துண்டுகள், காங்கிரஸ் போராட்டக் காகிதத் துணுக்குகள், பி.ஜே.பி.யின் கிழிந்த ராமர் பட அறிவிப்புகள், சென்ற மீட்டிங்கின் மிச்ச முதல்வர் அச்சுதானந்தனின் கைகூப்பிய போஸின் ப்ரிண்ட் அச்சுக்கள், ஒரு முனை பல்லால் கிழிந்த மூன்று முனைகள் பத்திரப்பட்ட வாட்டர் பாக்கெட்டுகள், எக்ஸ்பியரி டேட் எக்ஸ்பையர் ஆன ரோஸ் நிற ஜெலுஸில் மாத்திரை அடைத்த பாக்கெட்டுகள்.... தாய்ப்பாலையும் காதலையும் தவிர்த்து சகலமும் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் நிறைந்த, நகரத்தின் முக்கிய நெடுஞ்சாலையின் ஓரக் குப்பைகள் நமது ஜன சமுத்திரம் தூக்கி எறியும் எதிர்கால விஷ துகள்களை அடையாளப்படுத்திக் காட்டின.

மதியம் இரண்டு வரை என்று ப்ளான் செய்யப்பட்டிருக்க, இரண்டு மணி நேரத்தில் எல்லோர்க்கும் உடல் வலிக்க ஆரம்பித்து விட்டது. ஆஃபீஸ் பேருந்திலோ, கார், பைக்குகளிலோ வந்து ஒன்பது, பத்து மணி நேரங்கள் ஏ.ஸி.யிலேயே அமர்ந்திருந்து பழக்கப்பட்ட நாங்கள் பத்து மணிக்கு மேல் 'வாட்டர் ப்ளீஸ்' என்று கேட்டோம். சிலர் ஆர்வமாக கொத்திப் போட்டுக் கொண்டிருக்க, சிலர் ஓரமாக ஒதுங்கி கதை பேச ஆரம்பித்தோம். ஒருவர் தன் குட்டிக் குழந்தையை கூட்டி வந்திருக்க, அவன் கையில் சின்ன கிளையை வைத்து இலைச் சருகுகளை தள்ளினான்.

கொஞ்ச நேரத்தில் டைகர் பிஸ்கெட், ப்ரிட்டானியா 50- 50, வாட்டர் பாக்கெட்டுகள், வாட்டர் பாட்டில்கள் என்று வந்து நிறைய மாறி மாறி எடுத்து தாகத்தையும், பசியையும் தணித்துக் கொண்டிருந்தோம். உஷாராக வாட்டர் பாட்டில் மூடிகளையும், பிஸ்கெட் பாக்கெட்டுகளையும் எங்கள் குப்பை பைகளில் போட்டோம்.

இதில் நான் கண்ட மற்றொரு முக்கிய விஷயம், பெண்கள் வரவே இல்லை. இரண்டு பேர் மட்டும். ஆண்களில் கொஞ்சம் ஆர்வ மிக்கவர்கள், பெரியவர்கள் வந்திருந்தனர். வந்திருந்தவர்களை பார்க்கையில் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடிய பாரதியை நினைத்து வருந்தினேன். நான் சென்றிருந்த காரணம் நமது ஊரில் தினமும் கூட்டுகிறார்களே அவர்கள் என்ன கஷ்டப்படுகிறார்கள் என்பதை ஒரு பொழுது தெரிந்து கொள்ளத் தான். கையில் உட்புறம் பெளடர் பூசிய (சேஃப்டி!) உறைகளை மாட்டிக் கொண்டு, கேன்வாஸ் ஷூ அணிந்து கொண்டு நுனி விரலால் குப்பைகளை அள்ளிய போது இது எதுவும் இல்லாமல் பணியாற்றும் மக்களை எண்ணினேன்.

அனைவரும் டயர்ட் ஆகியிருக்க இறுதி நேரம் பனிரெண்டாக சுருக்கப்பட்டது. மணி பனிரெண்டு ஆனதும் இது வரை அள்ளிய குப்பைகளை மூட்டை கட்டினோம். அந்த மூட்டைகளில் ஒரு மூட்டை நிறைய நாங்கள் குடித்த வாட்டர் பாட்டில்கள், வாட்டர் பாக்கெட்டுகள், பிஸ்கெட்டு பாக்கெட்டுகள், கையுறைகள் அடைத்துக் கொண்டது 'ஃப்ரிக்ஷன் லாஸ்'-ஐ நினைவுபடுத்தியது.

குப்பைகளை போட்டோ பிடிக்கிறோம் என்று சொன்னவுடன் நாங்களும் சேர்ந்து நின்றோம். க்ளிக். க்ளிக். மூட்டைகளை ஸ்ரீகார்யம் பஞ்சாயத்தார் வந்து அள்ளிச் செல்ல ஆளுக்கு ஆள் சியர் அப் சொல்லி பிரிய வைபவம் இனிதே முடிந்தது.

அறைக்கு வந்து ஒரு முறை சுத்தமாக குளித்து மதியச் சாப்பாட்டை முடித்து படுத்தால் ஆங்காங்கே வலி எடுத்து.... உறங்கினேன்.