Thursday, March 04, 2010
~~~~Please check my blog...!!~~~
உண்மைத்தமிழன் அண்ணாச்சி போலவே இருக்காப்ல..!! இல்ல..?
Labels:
பாரு..பாரு..பயாஸ்கோப்பு பாரு.
Monday, March 01, 2010
Erotic ஆசிரியப்பாக்கள்.

மென்மையும் பெண்மையும் மிளிரும் தமிழ் வரிகளில் எழுதிச் செல்லும் ஆசிரியப்பாக்களில் இளமை பறக்கின்றது. வெண்பாத் தளத்தில் எழுதிய சில ::
ரோமாபேர். பதின்வயது. செவ்விளமை. கிடார்மேனி.
ரோமம் பஞ்சு.
ஆமாமாம் எனதுபதில் அழகியாவள்? எனக்கேட்டால்.
அணைத்துப் பார்க்கத்
தாம்மாவென் றாற்றளிர்ப்பூ வுடைநீக்கிப் பஞ்சணையில்
தள்ளிச் சாய்த்துத்
தேமாயென் பதாய்முடிக்கச் சொன்னாளோர் முத்தம்பின்
தேனாய் "மாமா".
மற்றோர் இலக்கணத்தின் படி ::
பார்த்துத் தடவு; பளிங்கு மேனிப்
பாவை நெருப்புக்கள்;
சேர்த்துக் கொல்; செதில் உரித்த
செம்மீன் நிலத்தில்காண்;
வேர்த்த கைகள் சொட்டும் விரலால்
வெயிலைக் குளிராக்கு;
போர்த்தும் போர்வை நழுவ வெட்கப்
பொழிலில் திளைத்துப்பார்.
கூந்தல் கலைத்துக் கண்கள் நோக்கு;
குத்தும் மார்நுனிகள்;
காந்தள் பூவை வண்டாய்க் கவ்வு;
கருமைப் புருவமிடைச்
சாந்துப் பொட்டைக் கவர்ந்துக் கம்பிச்
சன்னல் மேலொட்டி,
ஏந்தும் தளிரில் ஏஞ்சல் மலர்மேல்
எங்கும் முத்தம்தா!
இறுக்கம் தளர்த்து; இடையில் கைவை;
இதழ்மேல் வரிகளைக்கல்;
நெருக்கம் வளர்த்து ஈர முதுகில்
நகக்கோ டிழைத்துக்கொள்;
சுருக்கம் மலர்த்து; சூடாய்க் குளித்துச்
சுழலில் இறங்கிப்பெய்;
தருக்கம் தவிர்த்துக் கிறுக்காய் நடந்து
தவறைச் சரியாய்ச்செய்;
மற்றும் வேறு வகை ::
இருள்பொறிந்த தனியறைக்குள் இமைகரைத்தப் பொழுதொன்றில்
இயங்கா நின்றுள்
திருநிறைந்த வானவில்லைத் திசைகாட்டும் முள்ளொன்றின்
திணையில் பாடல்
பொருள்வயிந்த வார்த்தைகளுள் புலப்படாத மர்மத்துப்
பொருண்மை ரூபம்
உருவமைந்து வந்தாற்போல் உள்முகிழ்த்து எழுதாநின்
றுரைத்த திப்பா.
பொடக்காலி மூலயில செவப்புநிறத் தூணிருக்கு.
பாட்டி போயி
மடக்கிவெச்ச நாக்காலில மம்முதரு கணக்கா
மரிச்ச தாத்தா
கடன்வாங்கப் போனவரு காத்தாயி வர்றாருனு
கத்திச் செத்தா.
கெடந்துகனா நெனப்புலயும் நெழல்போலத் தளும்புதுசெங்
கெளவித் தூண்.
Labels:
களிப்பேருவகை (A).,
செழுந்தமிழ்.
Wednesday, February 24, 2010
Tuesday, February 23, 2010
Friday, February 19, 2010
நான்கு ஆசிரியப்பாக்கள் மற்றும் சற்று ட்வீட்டர்.

'வெண்பாக்களே கொஞ்சம் சுலபம் தான் போல' என்று நினைக்கும் வகையில் ஆசிரியப்பாவில் கடினமான விதிகளைச் சொல்லி ஆசிரியர் தமிழநம்பி எழுத வைக்கிறார். 'வெண்பா எழுதலாம் வாங்க' வலைத்தளத்திலேயே இப்போது ஆசிரியப்பா எழுதச் சொல்லித் தருகிறார்கள்.
கற்று தான் வைப்போமே! என்ன இப்ப..?
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் -1.
மெல்ல விரலைப் பிடித்திழுத்து
முத்தம் முழுதாய்ப் பதித்தெடுத்து
அல்லி இடையை அணைத்திறுக்கி
ஆறா மதுவை அகப்புகுத்தி
வெள்ளம் எனும்படி வேர்வைவர
வெப்பம் பகரும் கனிமாரைக்
கள்ளென எண்ணிக் கரம்தடவக்
காசுகள் கேட்பான் மணமகனாம்.
மற்றொரு வகை ::
நீரினை உண்ணும் கொண்டல்
நிலத்தினில் செழிக்கும் வண்டல்
வேரினில் மணக்கும் வெட்டி
வேனிலில் பெய்யும் மாரி
காரிலே காணும் திங்கள்
கனியிலே திகட்டாப் பாகல்
ஊரிலே இல்லை ஒப்பு
உள்ளது பிள்ளை எச்சில்.
வானென்ற குவளை மேலே
வந்தது பொத்தல் கோடி
காணென்று சொல்லிப் பெய்த
கடும்பனி கோடி கோடி
ஊனென்று வெள்ளை வட்டம்
உலாவரும் நிலாத் தட்டம்
வீணென்று விழுங்கி ஏப்பம்
விடும்கரும் துளையோர் மர்மம்.
ஆனையொன்று தெருவில் ஆங்கே
அசைந்தாடி நடந்தே போகும்
பானைபோன்ற வயிறு கொண்டு
பாதமெனத் தூண்கள் உண்டு
நினைத்தாலே ஊரை முட்டும்
நின்றாலே வானம் எட்டும்
தினையளவே அதற்கு மாந்தன்
தும்பிக்கை பிச்சைக் கேட்கும்.
சற்று ட்வீட்டர் சொற்கள் ::
Wanna know y Guitar is used prominently in Romantic songs? Check its structure. Damn, it's Perfectly Woman. Tune it nTouch strings. DANN!!!
Once there was a snail, It had a large tail, Using its sharp nail, Wrote an exam but got fail. - Who said writing poem is hard?
The green comments in my programs make me to remember this world, where greenary trees are getting treated as simply comments.
Wanna know the reason the mighty Greek Empire got extinct in time? Just check greek male sculptors. Gotcha...!!!
I want to believe the screensaver fishes to live behind all my opened windows.
"We never touched condoms, until AIDS was identified. Now see, how they use. Those were the golden days...!" a retired pornstar sighed.
Subscribe to:
Posts (Atom)

