தினம் கடந்து செல்கின்ற நாட்களில், கடந்து போகின்ற பாதைகளில் பீடு நடை போட்ட நாட்கள் சில உண்டு. தட்டுத் தடுமாறி கீழே விழுந்து, மூச்சு வாங்கி எழுகின்ற நாட்கள் சில உண்டு.
ஏதைத் தேடி ஓடுகிறோம் என்று தெரியாமல் தேடி, திக்குத் தெரியாமல் விழிக்கையில், சுற்றிப் பார்க்கையில் எல்லாம் இருட்டாய்த் தெரிகையில் எங்காவது சிறு ஒளி தெரியாதா என்று தவிக்கின்ற தருணங்கள்...
யாராவது கைதூக்கி விடமாட்டார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்து, ஏமாந்து தலையைத் தொங்கப் போடுகின்ற கணங்கள்...
சின்ன மின்மினியின் ஒளி...
பொட்டு பொட்டாய் மினுமினுக்கின்ற நட்சத்திரங்கள்...
எங்கோ ஒரு திசையில் தெரிகின்ற சின்ன விளக்கொளி..
இவற்றைக் காண்கையில், மனம் கடலில் தத்தளிக்கையில் இறுக்கிப் பிடித்துக் கொள்கின்ற மரக் கட்டை போல் பிடித்துக் கொள்கின்றது.
அந்த நாட்களில் நான் பிடித்துக் கொண்ட மரக்கலங்கள் இதோ, உங்கள் பார்வைக்கு...!
1.
தோல்வி நிலையென நினைத்தால்...!
2 comments:
நான் மிக மனச்சோர்வுடன் இருக்கும் நேரங்களில் நினைவுகொள்ளவிரும்பும் பாடல்களை ஒருசேரக் கொடுத்ததிற்கு நன்றி.
அன்பு மணியன் ஐயா அவர்களுக்கு,, தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள் ஐயா..
Post a Comment