Friday, January 18, 2008

எதிர்காலம் - அறிய முடியுமா?

ரு சிறு கேள்வி!

நீங்கள் அடுத்த நொடியில் உங்கள் இடது கண்ணை என்னவெல்லாம் செய்யக் கூடும்? எனக்குத் தெரிந்து கீழ்க் காணும் ஏதேனும்.

இடது புறம் கண்களின் பாப்பாவை நகர்த்திப் பார்க்கலாம்.

வலப்புறம். மேலே. கீழே.

இமையால் மூடலாம். இமையைத் திறக்கலாம். பிடுங்கி எறியலாம். கைகளால் தேய்க்கலாம். கைகளால் தேய்ப்பதை நிறுத்தலாம்.

போதும்.

இந்த உலகில் உங்கள் இடது கண் மட்டும் மற்றும் நீங்கள் தான் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கவனம். வேறு எதுவும் இல்லை.

எனவே அடுத்த நொடியில் உங்கள் இடது கண் அடையப் போகும் நிலை என்பது மேலே கூறப்பட்ட நிலைகளில் ஏதேனும் ஒன்று மட்டுமே.! நிகழ்தகவுத் தத்துவம் (Probablity Theory)உபயோகித்தால், இடது கண் அடையக் கூடிய நிலை தெரிந்து விடும் அல்லவா?

ஆனால் உலகம் இயங்கும் விதம் அவ்வளவு எளிதல்ல.

நமது இடது கண் அடையப் போகும் நிலை, பற்பல காரணிகளைப் பொறுத்து இருக்கிறது. அந்த நிகழ்வுகளின் நிகழ்தகவுகள் வேறு வேறாக இருக்கும். சார்பு நிகழ்தகவு. (Mutual Probability).

இது போல், உலகில் நிகழக் கூடிய அத்தனை நிகழ்வுகளும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வந்து விடும். உதாரணமாக கண்களால் பார்க்க மட்டுமே முடியும் அதனால் சாப்பிட முடியாது அல்லவா?

இப்படி உலகின் பொருட்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தமது செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அத்தனை அத்தனை நிகழ்வுகளின் கூட்டு நிகழ்தகவுகள் தெரிந்திருப்பின் எதிர்காலம் நாம் கணித்து விட முடியும் அல்லவா? அத்தகைய வலிய கணிணி உருவாக்கப் பட்டால், காலக் கண்ணாடி நம் எதிரே...!

Theory of Everything மாலையில் படித்ததின் விளைவு.

No comments: