Wednesday, May 07, 2008

ச்சும்மா...!

"டம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கு முபாய மறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே"

இது திருமூலச் சித்தர் வாக்கு. இதை முழுதும் சொல்லாமல் பலரும் கடைசி வரியை மட்டும் கதையின் கடைசியில் வரும் மெஸேஜ் போல் எடுத்துக் கொண்டு நன்றாக வெளுத்துக் கட்டுகிறார்கள்.

இதனை அடுத்து திருமூலர் கூறி இருப்பதை கூலாக விட்டு விடுகிறோம்.

"இருக்குமிடந்தேடி யென்பசிக்கே யன்னம்
உருக்கமுடன் கொண்டு வந்தாலுண்பேன் - பெருக்க
அழைத்தாலும் போகேன் அரனே எந்தேகம்
இளைத்தாலும் போகேன் இனி!"

என்கிறார்.

***

ள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது பரீட்சைக் காலங்களில் வருகின்ற பிரச்னைகள் பலவிதம். அவற்றிற்கு பல காரணங்கள் இருக்கும். அதிலும் பெயர்க் காரணங்களால் வருகின்ற பிரச்னைகள் ஒரு விதம்.

நான் எப்போதும் கடைசி வரிசைகளில் தான் அமர வைக்கப்படுவேன். ஆங்கில அகர வரிசை.

தேர்வு துவக்க மணி அடித்தவௌடன் என்ன நடக்கும். கண்காணிப்பாளர் வரிசையாக பேப்பரைக் கொடுத்துக் கொண்டே வருகிறார். தேர்வு நடக்கின்றது. பிரச்னை எங்கு வருகிறது என்றால், தேர்வு முடிந்தது என்பதற்கான மணி ஒலித்ததும் தான். அப்போது ஒவ்வொரு கண்காணிப்பாளரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து நான் அவர்களை மதிப்பிடுகிறேன்.

*சில கறார் பேர்வழிகள் 'அப்படியே எல்லோரும் பேப்பரை வைத்து விட்டு ஓடிப் போயிருங்க' என்பார்கள். எத்தகைய அநியாயம் இது! முதல் வரிசையை விட , நடுவில் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து, கடைசி வரிசைக்கும், முதல் வரிசைக்கும் சில நிமிட இடைவெளிகள் கிடைக்கின்றன. பின் வரிசை மாணவர்கள் அத்தனை நிமிடங்கள் பின் தள்ளப்படுகிறோம். ஆனால் முடிக்கும் போது மட்டும் எல்லோரும் ஒரே நேரத்தில் முடிக்க வேண்டும் என்பது எத்தகைய அநியாயம்!

*சிலர் எல்லோர்க்கும் மணி அடிப்பதற்கு முன்பே பேப்பர் கொடுத்து விட்டு, மணி அடித்தவுடன் எல்லோரும் சரியாக எழுந்து விட வேன்டும் என்பர். சரி.

*சிலர் பேப்பர் கொடுத்த வரிசையிலேயே கலெக்ட் செய்து வருவார்கள். இதுவும் சரியானதே!

*சிலர் இருக்கிறார்கள். முடிவு மணி அடிக்கும் போது எந்த இடத்தில் நிற்கிறார்களோ அந்த இடத்தில் இருந்தே பேப்பரை பிடுங்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த randomnessக்கு விதியைத் தவிர வேறு எதையும் காரணமாகச் சொல்ல முடியாது.


Get Your Own Hindi Songs Player at Music Plugin

No comments: