Sunday, January 27, 2008

இப்போது புரிகின்ற கணக்கு.

சிறு வயதில் கோயிலுக்குச் செல்லும் போது, படித்த ஞாபகம்.

'மந்திரங்களைச் சொல்லும் போது பிறர் காதில் விழுமாறு சொன்னால் குறைவான பலன். நம் காதில் மட்டும் விழுமாறு சொன்னால் கொஞ்சம் அதிகம். அதுவும் நமது வாயைக் கூட அசைக்காமல், நாக்கை கூட அசைக்காமல் மனதில் மட்டும் சொன்னால் மிக அதிகப் பலன்.'

அட.. இது ரொம்ப சுலபமாக இருக்கிறதே என்று தோன்றியது.

இப்போது தான் இதன் அர்த்தம் புரிகின்றது. இந்த வயதில் மனதை ஒருமுகப்படுத்தி, மந்திரமோ, பாடலோ பாடுவது எவ்வளவு கடினமாக இருக்கிறது? நொடி நேரத்திற்குள், ஆயிரமாயிரம் திசைகளில் பறந்து, இலட்சக்கணக்காண எண்ணங்களை நினைக்கின்ற மனதைக் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுத்துவது எவ்வளவு கடின செயலாக இருக்கிறது.

எனவே தான் அப்படி ஒரு கணக்கு வைத்தார்கள் என்று இப்போது புரிகிறது.

No comments: