Friday, May 16, 2008

ஆதி ஒலி நிலைக்கு...!

தாவது ஒன்றுக்காக நீ என்ன வேண்டுமானாலும் கொடுப்பாயா என்று கேட்டால், 'அம்மா செய்கின்ற பச்சைப்பயிறு குழம்பு மற்றும் பருப்பு சாதத்துக்கும்' அப்புறம் இந்தப் பாடலுக்காக எதையும் கொடுப்பேன் என்பேன்.

என்ன ஓர் அற்புதமான இசை! இது ஒன்றிற்காகவே ராஜா பிறந்துள்ளார் எனலாம். பாலுவும், ஜானகி அவர்களும் சொர்க்கத்திற்கு கொஞ்சம் கிட்ட அழைத்துச் செல்கிறார்கள்.

அடிப்படையில் அனைவரும் ஒலி மட்டுமே! எல்லாம், எல்லோரும் இறைவனின் எண்ண வடிவங்களே! எனவே இறுகிய அலை வடிவம் தான் நான், நீங்கள், பப்லு, பூனைக்குட்டி எல்லாம் என்கிறார் பரமஹன்ஸ யோகானந்தா.

இப்பாடலைக் கேட்கையில் எல்லாம் ஆதி நாளில் ஒலி அலைகளாய் உணர்ந்த நிமிடங்களை துளி அளவிற்கு வாழச் செய்கிறது, என்னை!

No comments: