Friday, September 14, 2007

மாலையின் அச்சில் வெட்கம் பறித்த கவிதை.



மெளனமாய்க் காத்துக் கொண்டிருக்கின்றேன்.

இறுக்கிப் பெய்கின்ற பெருந்துளிகள் நனைக்கின்றன என் குடையை. நகரத்தின் ஊடாக நகர்கின்ற சிறுநதி போல் சாலைகளின் குறுக்கே சக்கரங்கள் மேய்வதற்கென இடப்பட்டிருக்கின்றது இருப்புப் பாதை.

ஓராயிரம் வெண்ணோடைகளின் இழைகளில் இருந்து பிரிந்து சிதறிய பஞ்சுத் துகள்கள் ஒளிதின்னும் மாலை நேரம்.

நனைந்த பெண்ணைப் பார்ர்க்கும் பார்வைகள் என்னைப் பற்றி எனக்கே காட்டுவது போல், மழைத்துணி புனைந்த ஈரநிலம் காட்டுகிறது மயக்கத்தின் மேல் புரண்டு கிடக்கும் என்னையே...!

போகிறதென்று தள்ளி விட்ட பொழுதுகளின் வெளிச்ச நிறங்களை உறிந்து கொண்டு சிதறுகின்றது சாலை விளக்குகளின் வழி, நிறமாலையின் சலசலக்கும் வர்ணக் கோவைகள்.

பனி தூவும் முன்னிரவுக் காலங்களில் நிழல் உண்ணும் இருட்டின் துணை கொண்டு நடக்கையில், கைப்பிடித்தபடி வருகின்றது இரு விளக்கொளி, தூர இரயிலின் முன் பற்களாய் நீட்டிக் கொண்டு..!

நன்றி : http://www.artwing.com/images/Prints/EveningRain.jpg

Sunday, September 09, 2007

ஒக்க ஸ்மால் பிராப்ளம்...

ங்க.. எனக்கு ரொம்ப நாளா ஒரு பிரச்சினை... இத எப்படி சரி செய்யறதுனு தெரியலைங்க...

யாராவது அனுபவஸ்தர் இருந்தீங்கனா, கொஞ்சம் சொல்லுங்கப்பா..

அட அது ஒண்ணும் இல்லீங்க.. இன்னிக்கு தி.நகர் போய் ஒரு புக் ஷாப்புல சுத்திட்டு இருந்தேங்க. அப்போ மொழிப் புக்ஸ் கொஞ்சம் வாங்கலாம்னு நெனச்சேன். திடீர்னு ஒரு ஞானோதயம்.

'அட... அது தான் நிறைய லேர்னிங் மெட்டீரியல்ஸ் நெட்டுலயே கிடைக்குதே.. அப்புறம் இத எதுக்கு காசு செலவு பண்ணி வாங்கணும்னு' தோணுச்சுங்க..

ஒண்ணும் வாங்காம வந்துட்டேன்.

ஆனா அப்புறம் நெட்ல கண்ட கழுதையெல்லாம் பாத்துட்டு இருக்கோமே ஒழிய அந்த ஸ்டடி மெடீரியல்ஸ் டவுன்லோட் செஞ்சு படிக்கத் தோண மாட்டேங்குது...

இந்த பிரச்னை ரொம்ப நாளா இருக்குங்க.. இத எப்படி சரி பண்ணலாம்னு யாராவது அனுபவஸ்தர் இருந்தீங்கனா.. கொஞ்சம் சொல்லுங்க சாமி.. உங்களுக்குப் புண்ணியமா போகும்...