Showing posts with label செவ்வாய்ப்பாடல்.. Show all posts
Showing posts with label செவ்வாய்ப்பாடல்.. Show all posts

Thursday, October 11, 2018

நான் ஒரு பொன்னோவியம்...

ளையராஜாவின் ஒரு ரத்தினம், இப்பாடல். அதற்கான என் வரிகள்.




ஆண்:
ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

ஆண்:
ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ
பாடிவரும் பூங்குயிலோ
பால்நுரை வந்தாடிடும் வஞ்சிக் கொடியோ
பார்க்கையில் பூமரம் பழகிடும் இருதயம் பருகிடும் (ஆயிரம்)

ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியும் வரும் தணுமை

சரணம்.1:
ஆண்:
நானும் அழைத்திட நாணம் தடுத்திட
நாடகம் ஆடிடும் நாயகியே
நானும் அழைத்திட நாணம் தடுத்திட
நாடகம் ஆடிடும் நாயகியே

பெண்:
மேகமும் கூட்டியது குளிர்
மோகத்தை மூட்டியது

ஆண்:
சிறுதூறல் பெருஞ்சாரல்
மழையாதல் மதுஊறல்
துணைதேடல் உனைச்சேரல்
மகவாதல் மயங்கிடும் பொழுதிதுவே

பெண்:
சிறுமணி சிணுங்கிடும் சிலைலயம்
சிவந்த முகத்தில் சிதறும் சிரிப்பில்

ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

சரணம்.2:
பெண்:
ராகம் இசைந்திட தாளம் இணைந்திட
ராஜனின் ராஜ்ஜியம் ராத்திரியில்
ராகம் இசைந்திட தாளம் இணைந்திட
ராஜனின் ராஜ்ஜியம் ராத்திரியில்

ஆண்:
பொன்மணி ஓவியங்கள் சொல்லும்
பூந்தமிழ்க் காவியங்கள்

பெண்:
விழிபேசும் விளையாடும்
உடல்கூசும் உறவாடும்
ஒருவேகம் உருவாகும்
ஒருபோதும் விலகிட விழையாதே

குழு:
எழுதிய இசையது எழுப்பிடும்
எமது மனதில் அமைந்த அழகின்

ஆண்:
ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

சரணம்.3:
ஆண்:
வந்தோம் தினம்தினம் தந்தோம் சுகம்சுகம்
வந்ததும் தந்ததும் நானல்லவோ
வந்தோம் தினம்தினம் தந்தோம் சுகம்சுகம்
வந்ததும் தந்ததும் நானல்லவோ

பெண்:
விடையது தெரிந்ததுவே உங்கள்
விருப்பமும் புரிந்ததுவே
விடையது தெரிந்ததுவே உங்கள்
விருப்பமும் புரிந்ததுவே

ஆண்:
மனம்தேடும் உனைநாடும்
மொழிமாறும் துணைசேரும்
பகலோடும் இரவாகும்
உறவாகும் உனைத்தொடும் விழியிதுவே

பெண்:
உருகிடும் உடலிதில் உறைந்திடும்
உமது உயிரில் உணரும் உருவில்

ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

ஆண்:
பாடிவரும் பூங்குயிலோ
பால்நுரை வந்தாடிடும் வஞ்சிக் கொடியோ

பெண்:
பார்க்கையில் பூமரம் பழகிடும் இருதயம் பருகிடும்

ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

***

Monday, August 27, 2018

வேனில்தரை மழை.

ண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற 'கீத கோவிந்தம்' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் இடம்பெற்ற 'இன்கேம்..' என்ற பாடலுக்குத் தமிழ் வரிகள் கோர்த்த போது.



ததிகின தகஜனு
ததிகின தகஜனு
தரிகிட ததரின
ததம் தீமத ஆனந்தம்

வந்தான் இங்கே
கண்டான் உன்னை
தந்தேன் என்னை
என்றே சொன்னான்
பெண்ணே உன்னுள்
பொங்கும் இன்பம்
இன்றும் என்றும் பேரின்பம்


உன்னை அன்றி கண்கள் பார்க்காதே
மயிலே... இள வெயிலே...
உன்னை விட்டு எங்கும் போகாதே
ஒயிலே... எழில் குயிலே...


மின்னல் வெட்டும் வேகம் ஆளாச்சே..உன்
மின்னுமிரு கண்கள் வேலாச்சே...
பக்கம் நின்றால் வெக்கம் வேறாச்சே.. நீ
பார்த்துச் சொல்லும் சொற்கள் கேட்க
பாலும் தேனும் போலாச்சே... (உன்னை)

மாலைவரும் நிலவென அழகா
மருண்டுவரும் மானென உருவா
வேளையிது விழும்பனி கனவா
விடைதர விரும்பி வா...

மீனுமது விரும்பிடும் விழியா
மீட்டுவது கரும்பெனும் மொழியா
மீறுவதில் மகிழ்வது வருமா
மிளிரொளி பரவி வா...


நான் நடக்கும் நிலமதைத் தொடருமுன் பார்வை...
நான் முகிழ்க்கும் சிரிப்பதில் மலர்வாள் பாவை... (உன்னை)

காதலினில் கலந்திடும் பொழுதா
காத்திருக்கும் கணங்களும் பழுதா
காலைவரை அணைத்திடு முழுதாய்
கடும்குளிர் கரைக்க வா..


கோபமென எழுவதும் உனதா
கோதைமனம் விழைவதும் எனதா
கோலமிடும் விரலிடை மனதா
கொழுமலர் கனிந்து வா...

வேண்டுமென விரைந்துனைத் தழுவிடும் போது...
வேனில்தரை மழையெனக் கரைவாள் மாது... (உன்னை)

Tuesday, March 07, 2017

புது ஊர்வசி.


ஊர்வசி, ஊர்வசி, you just do it ஊர்வசி,
ஊக்கமின்றி ஓய்ந்திருந்தும், you just do it ஊர்வசி,

வாய்ப்புகள் கொட்டவே, you just do it ஊர்வசி,
வாசலைத் தட்டவே, you just do it ஊர்வசி,

கேளடி ஒளியே, ஒயிலே உலகில் வாய்ப்புகள் நூறு லட்சம்
நீயடி உளியே, சிலையே கொண்டு செல்லடி உனது பக்கம்

வாழ்க்கையில் வெல்லவே, you just do it ஊர்வசி,
வானவில் வாழ்க்கையில் வெற்றி என்பதே கான்ஸ்டன்ஸி

(ஊர்வசி)

நாலு பேரு மறுத்து சொன்னா, you just do it ஊர்வசி,
நூறு பேரு எதிர்த்து நின்னா, you just do it ஊர்வசி,
வெட்டி வேலைன்னு யாரும் சொன்னா, you just do it ஊர்வசி,
பொறுப்பே இல்லன்னு ஊரும் சொன்னா, you just do it ஊர்வசி,

கேளடி இன்றே, இங்கே உழைக்கும் கைகள் ஊரை வெல்லும்
நீயடி நின்றால், வென்றால், இமய மலையும் குனிந்து செல்லும

வாழ்க்கையில் வெல்லவே, you just do it ஊர்வசி,
வானவில் வாழ்க்கையில் வெற்றி என்பதே கான்ஸ்டன்ஸி

(ஊர்வசி)

தொட்டதும் வீணை மீட்டாது
தொல்லைகள் இருக்கும் போகாது
பூக்களால் பாதை அமையாது
புதையலோ எளிதில் கிட்டாது

வேர்களில் நீரே தங்காது
வேர்வையில் வீணே கிடையாது
இடையிலே நில்லா துழைத்தாலே
இறுதியில் தோல்வி கிடையாது.

இலக்கு ஒன்றை இருத்திக் கொண்டு, you just do it ஊர்வசி,
அதற்கும் மேலே ஆசைப் பட்டு, you just try it ஊர்வசி,
முட்டி நிற்கும் குட்டி சுவரை, you just break it ஊர்வசி,
முயற்சி செய்து முழுமை கொள்ள, you just live it ஊர்வசி,

(ஊர்வசி)

இளமையில் உழைப்பே இல்லாமல்
இருந்திட வாழ்ந்தும் என்ன பயன்?
இதயத்தில் துடிப்பே இல்லாமல்
இருப்பவர்க் குலகில் என்ன பெயர்?
விளக்குகள் சுடரே ஏந்தாமல்
விலகுமா அறையைச் சூழ்ந்த இருள்?
விடியலை நோக்கிப் போகாமல்
விழுந்துமே கிடந்தால் என்ன பொருள்?


Tuesday, July 29, 2014

தீண்டாய்...மெய் தீண்டாய்.

குழலிலே மூச்சுக்காற்றைச் செலுத்தி ராகங்களைப் பிறப்பிக்கின்ற லாவகத்தைத் தீட்டிக் கொள்ளும் பயிற்சியாக இனிய மெட்டுகளுக்குப் புது வரிகள் எழுதத் தீர்மானித்து, இதோ.

'என் சுவாசக் காற்றின்' 'தீண்டாய்'க்கு ஒரு வடிவம்.

**

பூவாய்
மென் பூவாய்
பூவாய்
உடல் பூவாய்

குளிர் இதழ் ஒன்று கண்கள் மூடியதே
உள் அனல் கங்கை உள்ளம் மூட்டியதே
மடல் அகம் ஊறிப் புறம் ஏகி உயிர்த்திட்டதே (பூவாய்)

தளிர் இலைமேலே பூக்கள் தோன்றியதோ
பெண் சிலைமேலே ஜீவன் ஊன்றியதோ
விழி இடம் சென்று வலம் வந்து முகிழ்த்திட்டதோ (பூவாய்)

முதல் போர்வை பெண்மை கொள்ளும்
உடல் வேர்வை நம்மை உண்ணும்
பொழுதோடும் தேகம் உள்ளது

முதல் பார்வை முத்தம் கேட்கும்
முகத்தோடு முட்டிப் பார்க்கும்
முடியாமல் போகும் போர்க்களம்

தொலைவானக் காட்டின் மேலே
தொலை வான மேகம் போலே
என்னை உந்தன் கைகள் ஆளுவதோ?

தொலைவானக் காட்டின் உள்ளே
தொலைவோமே பிள்ளை போலே
மழை கொண்ட மேகம் மூளுவதோ?

தணலின் எழிலே எழிலே
எனை முழுதாய்க் கொள்க

பனியே நிழலே
என் வேகம் கொள்க (பூவாய்)

விளையாடிட நேரம் உண்டு
விளையாட்டில் கூடல் உண்டு
விளைவாக நம்மைச் செய்யவோ?

விளைகின்ற பூமி மேலே
விதைபோடும் வீரம் போலே
விருந்தொன்றை நீயும் கொள்ளவோ?

இலைமூடும் கூட்டுக்குள்ளே
இளம் ஜோடிக் கிளிகள் போலே
திரண்டோடித் திசைகள் சென்றிருப்போம்

இலைநீயும் இல்லை நானும்
நிலைசேர்ந்து ஜென்மம் யாவும்
தமிழ்தீர புதிய பாடல் பாடி வைப்போம்

கடலோ கடலில் நிலவோ
உன் உடலோ என்ன

சுழலோ தழலோ
நீ நுழைந்தால் என்ன (பூவாய்)

**