Showing posts with label பதிவுகள்.. Show all posts
Showing posts with label பதிவுகள்.. Show all posts

Sunday, February 18, 2018

திருமண வாழ்த்துப் பா.

ண்பர் தமிழ்ப்பறவையின் திருமண நாள் வாழ்த்தாக எழுதியது, வெகு ஆண்டுகளுக்கு  முன். பதிவுக்காக இங்கேயும்.


காலைக் கதிரவன் நாளைத் துவக்கிடும்
வேளை நதிக்கரை நீர்நுரை - காலை
நனைகுளிர் போலும் வரும்தினம் யாவும்
மனையுடன் வாழிய நீர்.

வானில் நகர்மதி நோக்கும் மலர்ந்திடும்
ஊனில் வளர்மதி ஊக்கிடும் - தேனில்
கரையாச் சுவையுறு காதலைக் கண்டு
உரையா அடைந்திடும் நாண்.

கீழ்வான் உதித்தொளி கீறிய செவ்வரி
மேல்வான் உதிரொளி தீட்டுதல் - போல்வான்
தருநிழல் தாங்கும் தவப்பெண் அவளின்
வருங்கழல் வாங்கினன் வாழ்வு.
 

(வேறு)

வாயில் இருபுறம் வாழைப் பசுமரம்
வாழ்த்த வரும்பல வாலிபர் நங்கையர்
தாயின் கரம்பிடி தம்பியர் தங்கையர்
தந்தையின் தோளது தாங்கும் மழலையர்
பாயில் சுருட்டிய பஞ்சணைப் போர்வைகள்
பால்நிறைப் பாத்திரம் பச்சைக் கறிகாய்
 வேயின் குழலொளி வேனில் நிழலென
வீதியில் எங்கும் விளங்கும் திருநாள்.

குங்குமம் பன்னீர் குழைத்திட சந்தனம்
மங்களம் பூச மணந்திடும் மஞ்சளும்
திங்களைப் பூட்டிய தேங்காய் இருகனி
தீராப் புகைசூழ் திகழ்மண பத்திகள்
அங்கம் முழுதும் அணிந்தது புன்னகை
அன்பின் அழகின் அரும்புகள் கைகளை
தங்கும் வணங்கும் தவறா தனைவரும்
தானும் இணங்கித் தலையை அசைப்பர்.

வேதமுரை ஞானியரும் வேள்வியிலே தீவளர்ப்பர்
வேண்டியவர் சூழநின்று வாழ்த்திநலம் கூறிடுவர்
நாதமுரை நாயனமும் நல்லிசையின் மேளவொலி
நாற்றிசையும் கேட்டிடவே நல்லவரும் வாழ்த்திடுவர்
பாதம்வரைத் தேடுவரின் பால்நிலவை நாடுவரின்
பாதியுடல் தேவிகொண்ட பைரவரின் ஆசியுடன்
ஏதுகுறை யாதுமின்றி எல்லாநல் செல்வங்கள்
ஏந்திநின்று லட்சுமியும் ராஜனும் வாழியவே!

Monday, December 20, 2010

நாஞ்சில் நாடருக்கு வாழ்த்துக்கள்.



வ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி - தமிழ் விருது பெறுகின்ற எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

***

Pic Courtesy :: http://farm3.static.flickr.com/2208/2201252799_b7f192a265.jpg?v=0

Tuesday, December 07, 2010

மணற்கேணி - 2010 - அழைப்பு.



மிழ் வலைப்பதிவுகளில் பலதரப்பான தளங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றியும் அவற்றின் மேலான தங்கள் எண்ணங்களையும் அப்பதிவுகளைப் பார்வையிடுவோர் தங்கள் பின்னூட்டங்களில் பதிலிடுகின்றனர். எளிதாகக் கண்ணுக்குப் படும்வகையில் அமைவன திரைப்படம், திரை நிகழ்வுகள் மற்றும் அவற்றை ஒட்டி வாழும் துணை உறுப்புக்களான விமர்சனங்கள், ஒப்புமை கண்டறிதல்கள் போன்றன. அவற்றைத் தவிர்த்துப் பார்க்கையில் அரிதாகவே வேறு பல துறைகளைப் பேசும் பதிவுகள் கிடைக்கின்றன.

அச்சிறுபான்மைப் பதிவுகளை இன்னும் கொஞ்சம் வலுப்பெறச் செய்ய எடுக்கப்படுகின்ற ஒரு முயற்சி 'மணற்கேணி'.

சிங்கப்பூர் வாழ்த் தமிழ்ப்பதிவர்கள் தமக்குள் அமைத்துள்ள ஒரு குழுமம், இத்தலைப்பில் நம்மைச் சிந்தையால் துழாவச் செய்யும் சில கருதுகோள்களைக் கொடுத்துக் கட்டுரைகளைக் கேட்கின்றது. எளிதில்லாத ஒரு பணி என்பதால் இவ்வாண்டு இறுதிநாள் வரை நேரம் கொடுத்துக் காத்திருக்கிறார்கள்.

நடுவர்களைக் கொண்டு தேர்வு செய்யப்படும் கட்டுரையின் ஆசிரியர்களை சிங்கைக்கே அழைத்து ஒரு வாரம் முழுதும் உபசரித்துப் பற்பல நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்து, அவர்கள் தம் வாழ்நாளில் மறந்திட இயலாவண்ணம் அன்பால் தழுவி அனுப்பி வைக்கிறார்கள்.

மேலதிக விவரங்களுக்கு ::

மணற்கேணி- 2010

சென்ற ஆண்டில் கலந்து கொண்டு எழுதிய அறிவியல் கட்டுரை : ஒலிதச் சமிக்ஞைப் பகுப்பாய்தல்.

Friday, October 29, 2010

NaNoWriMo - 2010.



ன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் நானோ துவங்கப் போகின்றது. தயாராகிறீர்களா..?

முந்தைய பதிவுகள் ::

Nanoupdate.1

Nanoupdate.2

Nanoupdate.3

Nanoupdate.4

Nanoupdate.5

Nanoupdate.final

என் நானோ பக்கம் :: வசந்த்.

Thursday, October 07, 2010

Jai Hoooo....

Then....




...and now...



Cricinfo

Any differences could be found...? Nope...!!!

Tuesday, October 05, 2010

வருங்காலத்திற்கு எந்திரன் பற்றி..!



ந்திரன் என்றொரு திரைப்படம் பற்றியும் அதனைச் சுற்றிலும் நிகழ்கின்ற கூத்துக்களையும் பார்க்கிறோம். அவற்றைப் பற்றிய இரு பதிவுகளை வருங்காலத்திற்காக இங்கே சேமித்து வைக்கிறேன்.

1. தினமணி கட்டுரை ::

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!
----------------------------------------------

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.


தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!

(நன்றி :: http://deepaneha.blogspot.com/2010/10/blog-post_05.html)

2.



(நன்றி :: http://mathavaraj.blogspot.com/2010/10/blog-post_05.html)

படம் நன்றி :: http://www.wpromote.com/blog/wp-content/uploads/2009/04/pity-the-fool.jpg

Wednesday, June 02, 2010

பதிவுலகம்.



யவு செய்து அந்தப் பதிவுகளை உங்கள் மகளிடம் மனைவியிடம் காட்டி விடாதீர்கள்.

அவர்கள் கண்களை நாம் வாழ்நாளெங்கும் பார்க்க வேண்டி இருக்கின்றது.

***

Image Courtesy :: http://farm1.static.flickr.com/42/99863335_a00a8b90b0.jpg

Wednesday, February 24, 2010

Jai hooooooooooo Master Blaster...!!!!!!!!!!!!!!!!!







MASTER reached peak...!!! No words to say..!!! Tears running..!!!!

***

Images Thanks :: Cricinfo.

Wednesday, February 17, 2010

இன்னும் கொஞ்சம் ட்வீட்டுகள்.



வ்வப்போது எழுதிப் பார்க்க வெண்பா போல் ட்வீட்டர்க் கன்னி இடை சிறியதாக இருப்பது இனிப்பாக இருக்கின்றது. கை வைத்து வருட 140 கேரக்டர்களில் பதினான்கு தசாவதாரங்கள் எடுப்பது மகிழ்ச்சி.

The uneducated Assam and Bihar workers are making Trivandrum's thar roads shining. A Black form of our National Integrity.

BB was filled with announcements, jeans covered hips, catchy gals, 'excuse me' carry chair pushers and bill punching preteen boys.

Whatever happened, hpnd for gud. Whatever happens, hpns for gud. Whatever will happen, will hpn for gud. Gud means Vagina in Bengali.

S4aS:Que:What is naturally suitable for mankind? Communism, Capitalism, Socialism? Ans : Simply jism.

Erotic stories teach me how a writer can design infinite possible situations which lead to a same conclusion.

If one reads history, he cud find there will be nothing except events and decisions. One constructs other.

I want 2 study what is the use of a small plant such as 'thaathappoo chedi'. If it extincts 4m d world vat dmg it vl make 2 d env?...

...like that v hv 2 know what d dmg it will cause in which sectors if tigers extinct, is d rite way to impose 'save tigers' campaign...

...instead of making d issue emotional. As a common man i will ask 'if thr r 1k or 15k tigers whats diff 2 me?' any ans 4m d campaigners...

...and vat common ppl cud do to save tigers? Yes, im worryin abt d issue but not in d terms lyk 'our national animal' types, but as a ...

...commanding living being, v shudnt allow nature's 1 successfull design get away 4m here. V still wonder how ants run in shortest paths.

WIWS:When i was acting in a drama, i did perfect since b4 startin, dirctr instrctd clearly ho im n vat i not 2 do. God didnt dat b4 i born.

***

Image Copyright :: http://www.seoconsultants.com/twitter/images/twitter-i-love-you.png

Wednesday, February 03, 2010

சில ட்வீட்டுகள்.



140 எழுத்துக்களில் சுவாரஸ்யமாக எழுதுவதற்கு ட்வீட்டர் களமாக எனக்குப் பிடித்திருக்கின்றது. மேலும் ஸ்பெஷலாக ஆங்கிலத்தில் எழுதிப் பழகப் பயிற்சியாகவும் எடுத்துக் கொள்கிறேன்.

இப்போது 'When I was ...' என்ற வரிசையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

WIWS:When i was laughing on a madman, he danced in the middle of the road and laughed on me.

WIWS:When i was buying a book in HB in a railway station, the station came to life first. The train came ten minutes later.

WIWS:When i was unrolling a thread bundle, it fell as a modern art. I saw a dog, a sword and two suns in it.

WIWS:When i was planting a mango seed in my garden, two sparrows had sex. One day their kid may stay in my tree.

WIWS:When i was walking on the road, a crow came near 'n askd me, 'can i shit on ur head?'. I axepted, coz i knew it was Karthik's fan.

WIWS:When i was waiting in a bus stop, a bus arrived. It didn't have doors by carrying a name board 'ladies only'.

WIWS:When i was hunting for a bug, it lived happily inside a for loop by eating a buffer and corrupted an array by shitting in it.

WIWS:When i was sleeping, a rat bit my rigit earlobe. 'excuse me. You bit me. It was in my dream, right?' i asked. it replied 'no. in mine.'

WIWS: When i was walkin in a lonely beach, seen a panty.Then a tops.With raging harmones,i searched the gal.Then i saw a bangle hand lonely.

When i was walking to the washroom, a man came opposite in a hurried face. I asked the matter. He replied,'damn. again i forgot my veanie'

பெண்களின் டி-ஷர்ட்டில் என்ன வாக்கியங்கள் எழுதலாம் என்று படுத்துக் கொண்டு யோசித்ததில்,

TL4G.9. What you see are 'bra sets'. Can you jumble it? Yes...!

TL4G.8. Is this the first time you see?

TL4G.7. I am a bad girl. Care... not pad, its bad.

TL4G.6. Which comes first? Oops... I forgot the second half of the question.

TL4G.5. I love binary.

TL4G.4.(d shirt has 3 buttons.in d right half)Un, able is, paining(in d left half)touch, heart, and a(after 3 buts, @ d common bottom)crime.

TL4G.3. My eyes are more sharper.

TL4G.2. Yes, you are right. I missed my bra.

Tshirt Lines 4 Girls.1. Warning Friedman, My worlds are not Flat.

Monday, February 01, 2010

ARR Rocks Again.....



The Boss of our Cine Music, Mozart from Madras ARR rocked by winning TWO GRAMMY Awards today for the same JAI HO from SLM....!!!

Dude You deserved for these awards...!!!

Let the liars of Hatred throw their words. V will run with at most efforts to reach peaks...!!!!

JAI HOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO...!!!!!!!!!!!!!!!!!





***

சின்னச் சின்ன ஆசை... ஆஸ்கார் வாங்கிய ஆசை...!

Monday, January 25, 2010

Me 2 Tweetin..!!!

ப்போது நானும் ட்வீடுகிறேன்.

பொதுவாக குறு உரையாடல்கள், கண்ணிகளைத் தெரியப்படுத்தல் மற்றும் அன்றாட நிகழ்வுகளை உலகுக்கு அறிவித்துக் கொண்டே இருத்தல் போன்ற செயல்களின் சுவாரஸ்யம் எனக்கு கொஞ்சம் சலிப்பூட்டத் தொடங்கி விட்டது.

எனவே சின்னஞ்சிறு பொன்மொழிகளை உளறும் குட்டிப் பெட்டியாக ட்வீட்டரை உபயோகித்துக் கொள்ள நினைத்து, கொஞ்சமாய் வளர்ந்த வாக்கியங்களை எழுதுகிறேன்.

பிரபலங்களைத் தொடர்ந்தாலும், பெரும்பாலும் அவர்களது காலை, மேட்னி, ஃப்ர்ஸ்ட் மற்றும் செகண்ட் ஷோ செயல்களைத் தவிர வேறு எதுவும் சிலாக்கியமாகக் கிடைக்கவில்லை.

ட்வீட்டிய சில வரிகள் ::

At the peak, the star comes out of the word and revolve around the head...what the f*ck...!

A real number cant write poems... It doesnt have imaginary value...

'there is a beauty in everything' - i chant this ten times whenever i come across a full mirror...

I wish, i have a flat belly. Or at least a flat.

Once i was an innocent and donno acting... now i am acting as an innocent...

I said 'peacocks have 4 legs'. He laughed on me and advised, 'dont consider its horns as legs'.

When am drivin my car in de max speed of 120 kmph, a big container came ax 4m a turn. To avoid a horrible accident, i pressed 'game restart'

என் ட்வீட்டர் :: காலப்பயணி.

Thursday, August 06, 2009

அவசியம் காண வேண்டிய இரு தளங்கள்.

லை ஆர்வம் உள்ளவர்கள் அவசியம் காண வேண்டிய இரு இணையத் தளங்களைப் பார்ப்போம்.

இணைய கலைக் கூடம்.

ஹங்கேரியைச் சேர்ந்த இரு தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் கி.பி.1996-ல் ஆரம்பித்து தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் தளம் இது. பல வகையான காலகட்டத்தைச் சேர்ந்த ஓவியங்களை காட்சிக்கு வைத்துள்ளார்கள். 'மாய உலா' எனும் வகையில் நாம் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியங்களையும் காணலாம். மட்டுமல்லாது கலையின் மற்ற வடிவங்களான மர வேலைப்பாட்டு அற்புதங்கள், கண்ணாடியில் கண்கவர் சாதனைகள், துணியில் நெய்த நிகழ்ச்சிகள், மட்பாண்ட மற்றும் பீங்கான் செதுக்கல்கள் என்று ஒரு தனி துறை உள்ளது.

ஓவியர்களின் அகர வரிசையிலோ, தேடுபொறி மூலமாகவோ, காலகட்ட வகை வழியாகவோ, இரட்டை சாளரம் முறையிலோ எந்த வகையிலும் நாம் ஓவியங்களையும், ஓவியர்களையும் அலசிக் கண்டு களிக்கலாம். ஏற்கனவே சில உலா வரிசைகளை வைத்துள்ளார்கள். அதன்படியும் சென்று வரலாம்.

Gothic, Renaissance, Baroque, Neoclassicism, Romanticism and Realism கலைக் கால கட்டங்களைச் சேர்ந்த (1100 - 1850 A.D.) கிட்டத்தட்ட 22600 படைப்புகளை சேர்த்துள்ளார்கள். ஓவியங்கள் மேதோ, மேற்குறிப்பிட்ட கலை வகைகளின் மேலோ ஈடுபாடு கொண்டிருப்பவர்கள் ரசித்து ருசித்துப் பார்த்து மகிழுங்கள்.

வரலாறு

முதலில், வரும் சுதந்திர தினத்தோடு ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்கின்ற வரலாறு குழுவிற்கு என் வாழ்த்துக்கள்.

தமிழர்களின் கலை, கலாச்சாரத்தின் மிச்சம் இருக்கின்ற ஒரே கூறான கோயில்கள், அவற்றில் செதுக்கியிருக்கும் கல்வெட்டுகள், வாழ்வைக் காட்டும் சிற்பங்கள், இலக்கிய ரசனை என்று தேடித் தேடிப் பயணம் செய்வதைப் பதிவு செய்யும் தளம் இது. மாதம் ஒருமுறை மலரும் வரலாறு, மேலும் பல தொடர்களையும் சொல்லி கடந்த கால பெருமைகளை நமக்கு கட்டும் மிக உயர்ந்த பணியில் ஈடுபட்டிருக்கின்றது.

61 இதழ்கள்...910 கட்டுரைகள்..! அத்தனையும் அறிந்து கொள்ள வேண்டிய அறிவுச் சொத்துக்கள். நியாயமாக தமிழ் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை இது. இந்தப் பணியின் அவசியத்தை தமிழ்ச் சமூகம் இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து தொலைத்தவற்றைத் தேடும் போது அறிந்து கொள்ளும்.

ஆகஸ்ட் 15, 2009ல் 'பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவையின் வரலாற்றுப் பெருவிழா 2009', தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தில் நடைபெற இருக்கின்றது. அடுத்த நாள் ஞாயிறில், சென்னையைச் சுற்றி இருக்கும் முக்கியமான சோழர் காலச் சரித்திர இடங்களுக்கு கூட்டிப் போகிறார்கள். ஆர்வமிருக்கும் பதிவர்களும் கலந்து கொண்டு படப் பதிவுகள் போட்டால், அயலூர்க்காரர்கள் மகிழ்வோம்.

Thursday, July 02, 2009

கதைகள் வந்த கதைகள்.



ரையாடல் போட்டிக்கு எழுதிய இரண்டு சிறுகதைகள் எங்கிருந்து உதித்தன என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

மனையியல்.

சென்ற ஆண்டு மத்திய மாதங்களில் ஏதோ ஒன்றில் அனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு அனந்தபுரி எக்ஸ்ப்ரஸில் சென்று கொண்டிருந்தேன். அது எழும்பூர் வரை செல்லும். நான் மதுரையில் இறங்கிக் கொண்டு, பின் பேருந்துப் பயணம் செய்வேன்.

அந்த பயணத்தில், நெல்லை தாண்டி, வள்ளியூர் அருகில் என்று நினைக்கிறேன். ஒரு குட்டி ஸ்டேஷனில் கதைப் பெரியவர் ஏறினார். அவர் எங்கள் கம்பார்ட்மெண்ட்டில் விற்கும் போது தான், அவரைக் கவனிக்க முடிந்தது. கதையில் சொல்லிய அதே வர்ணனை தான்.

இட்லி பாக்கெட்டும் நான் வாங்கியது தான்.

அப்போது எழுந்த கேள்வி தான் 'இவருக்கு ஏன் இந்த வயதில் இந்த நிலைமை?'

அந்த கேள்வி இத்தனை மாதங்களாக எங்கோ ஒரு மன மூலையில் உறுத்திக் கொண்டே இருந்திருக்கின்றது. எப்படியாவது இறக்கி வைக்க வேண்டிய தவிப்பு இருந்து கொண்டே வந்தது.

கதைக்கும் அந்த சூழலுக்கும் இருந்த ஒரே தொடர்பு, இந்த கேள்வி தான்.

'இவருக்கு ஏன் இந்த வயதில் இந்த நிலைமை?'

மற்றபடி அந்தக் கேள்வியைச் சுற்றி வரைந்த கதை வட்டம் முழுக்க முழுக்க தற்செயலானது. அதுவே படைப்பின் அந்தரங்க ரகசியம் எனலாம்.

கதை சொன்னாலும் லேசாக ஒரு மனித அருமையைச் சொல்ல வேண்டும் என்ற ஆசை அந்தக் கதையில் எட்டிப் பார்க்கின்றது. கிழவர் மனதிலிருந்து இறங்கிப் போய் இப்போது கதையில் உறைந்து போய் விட்டார்.


ஓர் உரையாடல்.

சிறுகதை எழுதத் துவங்கிய ஆரம்ப நாட்களில் வெறும் உரையாடலாகவே சில எழுதினேன். அது எனக்குப் பிடித்திருந்தது. காரணம் வர்ணிக்க வேண்டிய அவசியமில்லை; பாரா பாராவாக எழுதிக் கொண்டு கதை சொல்லும் உத்தி சவாலானது அல்ல என்பது என் அபி.

உரையாடல்கள் மூலமாகவே யார் பேசுகிறார்கள், என்ன சூழல் போன்றவற்றைப் படிப்பவர் மனதிலேயே அவரே உருவகித்துக் கொள்ள வைப்பது தான் உண்மையான சவால் என்று எனக்குப் பட்டது; படுகின்றது.

வெகு நாட்களுக்குப் பின் அந்த வகையில் எழுதிய ஒரு கதை இது.

கதை எழுதிய நாளுக்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமை ஊருக்குச் சென்றிருந்தேன். பாலாஜி காலையில் ஏழு மணிக்கு அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடக் கூப்பிட்டான்.

அந்த ஞாயிறு அதிகாலையில் முகம் மட்டும் கழுவிக் கொண்டு போகையில், வழியில் அந்தக் காட்சி கண்பட்டது.

ஞாயிறின் பிஸியான கறிக்கடை. கறிக்கடைக்காரர் வெட்டிக் கொண்டிருக்கிறார். அவர் முன்னால், பத்திரமான தொலைவில் ஒரு நாய் வெட்டுவதையே பார்த்துக் கொண்டிருக்கின்றது. கொஞ்சம் தள்ளி ஓர் ஆடு கயிற்றால் ஒரு மரக் குச்சியில் கட்டப்பட்டு, தன் முறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.

நடக்கும் போது, கடக்கும் போது, சடாரென இந்த மூன்று பேரும் மனதில் பதிந்து போனார்கள். அந்த காட்சி அப்படியே பதிவாகி விட்டது.

பிறகு நான் பாட்டுக்கு போய், உடல் களைத்து விழும் வரை விளையாடி, வீட்டுக்குத் திரும்பி, குளித்து, உண்டு, ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடிப்படியில் உட்கார்ந்த போது, அந்தக் காட்சி விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.

உடனே ஒரு பரபரப்பு; இதை எழுத வேண்டும். எழுதியேயாக வேண்டும். அந்த குறுகுறுப்பு வந்து விட்டால், படைப்பாளியால் சும்மா இருக்க முடியாது. கர்ப்ப வலி போல. வெளியே தள்ளியாக வேண்டும். இல்லாவிட்டால் சும்மா உட்கார முடியாது.

எப்படி எழுதலாம் என்று யோசிக்கும் போது சில கருத்துக்கள் தோன்றின.

நாய் கறி வெட்டுபவரையே பார்க்கின்றது; ஆடும் கறி வெட்டுபவரையே பார்க்கின்றது. இரண்டுமே அவரது கருணையையே எதிர்பார்க்கின்றன. ஆனால் இரண்டின் கோரிக்கைகளும் Mutually Exclusive.

அதாவது நாய்க்கு கருணை காட்ட வேண்டுமெனில், அந்த ஆட்டை வெட்டியாக வேண்டும். அப்போது தான் சிந்தும் சிதறல்களை அந்த நாய் கவ்விக் கொண்டு பசியாறும். ஆட்டுக்கு கருணை காட்ட வேண்டுமெனில், அதை வெட்டக் கூடாது. அப்போது நாயைப் பட்டினி போட்டாக வேண்டும். கறி வெட்டுபவர் என்ன செய்ய வேண்டும்? அவர் அவர் தொழிலைப் பார்க்கிறார்.

இந்த நிலைமையில் ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்ட சூழலில் சிக்கிக் கொண்ட ஆடும், நாயும் பேசினால் என்ன பேசும் என்ற கேள்விக்குப் பதிலே, இந்த உரையாடல்.

அந்த உரையாடலில் கொஞ்சம் தத்துவம் கலந்தது முற்றிலும் தற்செயல். 'ரொம்ப வலிக்குமா?' என்ற முதல் வரி தான் நான் யோசித்தது. அதைத் தொடர்ந்து வந்து விழுந்த அத்தனை வரிகளும், நடையும் முழுக்க முழுக்க அந்த நேரத்து மன வரிகள்.

ப்போது இந்த விளக்கங்கள் எதற்காகவாம்?

கதைகள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. கொஞ்சம் கவனித்தால் போதும். சுவாரஸ்யமான கதைகள் சொல்லலாம் என்பதைச் சொல்வதற்கே!

படம் நன்றி :: http://www.suzannesutton.com/_borders/boy_desk_thinking.jpg

Wednesday, July 01, 2009

இன்னுமொரு இருநூறு - உரையாடல் போட்டி பற்றி!

ரியாக ஒன்றரை மாதங்களுக்கு முன் துவங்கி, பல வகைகளில், பல பதிவுகளில் விளம்பரப்படுத்தப்பட்டு, ஏறத்தாழ ஜூஜூ லோகோ திரட்டிகளின் 'இந்த வார ...' போட்டோக்களுக்கு இணையாக காட்சியளிக்க, கிட்டத்தட்ட தொடர்பதிவுகளுக்கு சிக்கிய சீமான்களை இழுத்துப் போட்டு சங்கிலியில் கோர்க்கும் வழிகளுடன், கிடைத்தவர்களெல்லாம் எழுதிக் குவித்த இருநூறுக்கும் மேற்பட்ட பதிவுகளில் முதலில் அடிபட்டது சிறுகதை.

பல ஆரம்ப ஆர்வங்கள் தெரிகின்றன.

நல்ல வாசிப்பனுபவம் இதுவரையில் கிடைத்திராத பலரும் சிறுகதை முயற்சியில் இறங்கியதில், பல படைப்புகள் தினம் எழுதும் பொதுவான பதிவுகள் போன்றே இருப்பதில் எனக்கு வருத்தமில்லை. காரணம், இது ஒரு துவக்கம் மட்டுமே! இப்படித்தான் எதுவும் துவங்கும். மெல்ல மெல்ல எழுதி எழுதிப் பழக, சூட்சுமங்களும், நுட்பங்களும் புரியப் புரிய நல்ல கதைகள் இவர்களிடமிருந்து வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆனால், அதற்கு தொடர்ந்து எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது.

'சிறுகதைகளை விமர்சிப்பது எப்படி?' என்று இணையத்தில் தேடிப் பார்த்தால், மிக விளக்கமாகச் சொல்லித் தருகிறார்கள். ஆனால் அப்படி விமர்சனம் செய்ய ஆரம்பித்தால், 219 கதைகளுக்கும் இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகி விடும் என்பதால், அந்தளவிற்கு நேரமும் இப்போது இல்லாததால், சுருக்கமாக ஒரு பொதுவாக எழுத விரும்புகிறேன்.

இத்தனை படைப்புகள் வந்ததற்கு வெட்டிப்பயல் சொன்ன காரணத்தை விட எனக்குத் தோன்றுகின்றன வேறு சில!

2006-ல் தேன்கூடு போட்டிகள் நடத்தப்பட்ட போதை விட, இப்போது பதிவர்கள் எண்ணிக்கை மிகக் கணிசமாக அதிகமாகி இருப்பது ஒரு காரணம். அப்போட்டிகளில் மீண்டும் மீண்டும் எழுதியவர்களே எழுதினார்கள்; எழுதினோம். புதியவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

சென்ற வருடம் 'சிறில் அலெக்ஸ்' சிறுகதைப் போட்டி நடத்திய சமயத்தில், ஒப்பீட்டளவில் இன்னும் கொஞ்சம் பதிவர்கள் அதிகமாயிருந்தாலும், அங்கே ஒரு பெரிய தடைக்கல்லாய் இருந்தது ஒரு நிபந்தனை. 'கதைகள் அறிவியல் பின்புலத்தில் இருக்க வேண்டும்'. நிறைய பேரை ஜகா வாங்க வைத்தது.

உரையாடல் போட்டியில் அத்தகைய நிபந்தனைகள் இல்லை. இதற்கே இத்தனை படைப்புகள் வந்திருக்கின்றன என்றால், 'தளத்திற்கு ஒரு கதை' என்ற முக்கிய இடர்ப்பாடு இல்லாமல் இருந்திருந்தால், இன்னுமொரு இருநூறு நிச்சயமாக வந்திருக்கும் என்றே தோன்றுகின்றது. ஆனால் அவற்றில் எத்தனை சிறுகதைகளாக இருந்திருக்கும் என்பது ?-யே!

பதிவர்கள் அதிகமாகி, தமது இருப்பை அவசரமாகப் பதிவு செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் எழுதியிருக்கிறார்கள் என்று தெரிகின்றது. பரவாயில்லை, மெருகேற்றிக் கொள்ளலாம்.

ரவி சொன்னது போல் போட்டி என்றதும், எல்லோரும் காவியம் படைக்கும் ஆசையில் சோகமும், விரக்தியும், மரணமும் சொல்ல முயலும் போது, ஒரு நகைச்சுவையோ, சரித்திரக் கதையோ, பேய்க் கதையோ வரவில்லை என்பது யோசிக்க வைக்கின்றது. ஒரு சம்பவத்தைச் சொல்வதா, ஒரு வாழ்க்கையையே சொல்வதா என்ற கேள்விகள் நிறைய பேருக்கு வந்திருக்கின்றன. பலர் கடைசி வரித் திருப்பத்தை முதலிலேயே வைத்துக் கொண்டு கதை கட்டியிருக்கிறார்கள் போல் உணர்கிறேன்.

மொத்தக் கதைகளில் பெரும்பாலும் தன்மை நிலையில் (First Person) எழுதப்பட்டிருப்பதன் மனக் காரணங்களைச் சிந்தித்துப் பார்க்க ஆசை.

கிட்டத்தட்ட பதினோரு கதைகளுக்கு, ஒன்றைத் தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நடுவர் குழுவிற்கு என் வாழ்த்துக்கள் மற்றும் வருத்தங்கள்.

-- தொடரும்.

மேற்கூறிய அத்தனையும் போட்டியில் பங்கெடுத்தவன் (2) என்ற முறையில் எனக்கும் பொருந்தும்.

Thursday, June 25, 2009

32 கேள், 32 பதில்.

ண்பர் யோசிப்பவர் 32 கேள்வி-பதில் தொடரைத் தொடரச் சொல்லிக் கேட்ட போது உடனே 'ஓ.கே.' சொல்லி விட்டேன். எழுதும் போது யோசிக்க வேண்டியிருக்கின்றது. நம்மையும் மதித்துக் கூப்பிடுகிறார் என்று சந்தோஷம் இருக்கின்றது. கொஞ்சம் பெரிய பதில்கள் வந்தால், படித்துத் தொலைத்து விடுங்கள்.

இனி..!


1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
முதலில் உண்மைப் பெயர்க் காரணம். வாத்தியாரின் செயற்கைகோள் பற்றிய புத்தகம் படித்து விட்டு, அம்மா வாத்தியாரின் ரசிகை ஆனார். பின் அவரது மற்ற நாவல்களையும் படித்து விட்டு, எல்லா அக்காலப் பெண்கள் போல், 'வசந்த்' மேல் ஈர்ப்பு. எனவே 'சுஜாதாவின் வசந்த் போல் வர வேண்டும்' என்று சொல்லி பெயர் வைத்தார்களாம். உண்மையில் அப்படி இருக்கிறேனா? நிலவரம் அவ்வளவு சிலாக்கியம் அல்ல. ரோகிணி நட்சத்திரம் என்பதால், கிருஷ்ணன் பேர் வர வேண்டும் என்பதற்காகவும் இந்தப் பேர் சூட் ஆகின்றது என்பார். கடைசியில் ஜீன்களில் வாத்தியார் அமர்ந்து இப்போது எழுதும் எதிலும் அவர் அடையாளம் வந்து விடுகின்றது என்று எல்லோரும் சொல்கிறார்கள். கண்ணன் என் காதலன் ஆகியிருக்கிறான்.

'காலப்பயணி' - இது எப்படி வந்தது என்று எனக்கும் ஆச்சரியம். சடனாக வந்து விட்டது. ப்ளாக் பேர் வைக்கும் போதே சைன்ஸ் பிக்ஷன் எழுதுவேன் என்று ஏதோ ஒரு குட்டி தேவதை காதில் சொல்லியிருந்தால் 'சூ...சூ..' என்று சொல்லியிருப்பேன். ஒரு வேளை, ஐன்ஸ்டீன் மேல் இருக்கும் அடங்காத ஆர்வம் காரணமாக அடிமனதில் இந்தப் பேர் உதித்திருக்கலாம்.

ரெண்டு பேரும் பிடித்திருக்கின்றது. உண்மைப் பெயர் எந்த மத, இன, சாதி அடையாளமும் இல்லாமல் இயற்கையைக் காட்டுகின்றது. மற்றொன்று எனக்கு மிகப் பிடித்த இயற்பியலைச் சுட்டுகின்றது.

2) கடைசியா அழுதது எப்போது?
இப்போதெல்லாம் எதற்கும் நெகிழும் மனநிலை சட்டென வாய்த்து விடுகின்றது. கடைசியாக மனம் விட்டு அழுதது, 'தாய் தின்ற மண்ணே' கேட்டு! அருண்மொழித் தேவரும், ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும், பெரிய கொடும் வேளாரும், பல்லவேந்திரனும், ஊமச்சியும், சமுத்திரகுமாரியும், அநிருத்தப் பிரம்மராயரும், தாமரைப் பாத யானை விலகலில் ரகசிய பதவியேற்பு மறுப்பும், யானையிறவு வரை புயலாய் ஓடும் யானையும்....ஈழம் கனவாய்ப் போனது, பாடலைக் கேட்கும் போது நீராய்க் கசிகின்றது.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
இதற்கொரு குட்டிக் கதை இருக்கின்றது.

மெட்ரிக்கில் குட்டி வகுப்புகள் படிக்கும் போது கையெழுத்து மகா கேவலமாய் இருக்கும். ஹோம் வொர்க் எழுதுவதற்காக ஜே.எஸ். (இப்போது டெண்டிஸ்ட்!) இங்க்லீஷ் நோட்டை வாங்கி வரும் போது, அம்மா பார்த்து பார்த்து ஆற்றுவார்கள். 'இவன் கையெழுத்து பார். எவ்ளோ அழகா முத்து முத்தா இருக்கு. உன் கையெழுத்து பார். கோழிக் கிறுக்கலாய் இருக்கு!' கோழி எப்போது கிறுக்கியது? எதற்காக கிறுக்கியிருக்கும்? போன்ற அத்தியாவசியக் கேள்விகள், தோசைக் கரண்டி விரல் முட்டிகள் மேல் விழுந்தவுடன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடும்.

மூன்றாம் வகுப்பில் ஒரு டீச்சர் தான் வேண்டிக் கொண்டு வந்தது போல், ஒவ்வொரு நாளும் காண்டு வைத்து அடிப்பார்கள். ஒருமுறை என் கண்ணாடி ஸ்கேலையே வைத்து முட்டி முட்டியாய் அடித்து உடைந்து விட, வீட்டிற்கு வந்து அப்பாவிடம் உடைந்த காரணம் சொல்லி அழ, அடுத்த நாள் மர ஸ்கேல் வாங்கிக் கொடுத்தார்கள்.

ஆனால் அத்தனை பட்ட பாடுகளுக்கும் பலன் அற்புதமாய் இருந்தது. கையெழுத்து மிக அழகாய்ச் சீரானது. எட்டாம் வகுப்பில் ட்யூஷனில் இளங்கோவன் சார் 'ஓவியம் வரைந்து பழகினால் விரல்கள் நன்கு வளையும். கையெழுத்தும் அழகாகும்' என்று ஒரு பிட்டை அள்ளிப் போட, அப்போது ஓவியக் கிறுக்கு ஆரம்பமாகி, வகுப்பிலேயே ரெண்டாவது அழகான கையெழுத்தானது. முதல் ஒரு பெண். எம்.எம்.ஸி.யில் படித்து வில்லிவாக்கத்தில் ஜெனரல் மெடிசின் ப்ராக்டிஸ் செய்கிறார். இப்போது ப்ரிஸ்க்ரிப்ஷன் வாங்கிப் பார்க்க வேண்டும். ஹா..ஹா..!

இப்போதும் அவ்வப்போது மனதில் இருக்கும் எழுத்துப் படைப்புகளின் பெயர்களை எழுதிப் பார்ப்பது வழக்கம். பிடித்தவர்கள் பெயரையும் எழுதி, 'பார்ப்பேன்.' :)

4) பிடித்த மதிய உணவு?
அம்மா செய்யும் எதுவும் பிடிக்கும். முதல் பச்சைப்பயறு குழம்பு. அடுத்தது அரிசிம்பருப்புச் சாதம். கொங்கு வட்டாரத்து உணவு. அதுவும் குக்கரில் முழுக்க சவுண்ட் விட்டு விடக் கூடாது. ரெண்டேமுக்கால் சவுண்டிலேயே அடுப்பை நிறுத்தி விட்டு, கொஞ்சம் ஈரம் இருக்கும் போதே, ஆவி பறக்க எடுத்து தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்க்காளி, கறிவேப்பிலை, பூண்டு எல்லாம் பருப்புடன் கலந்து மஞ்சள் மகிமையில் மஞ்சழுப்பு நிறத்தில் மணக்கும். நடுவில் குழி செய்து, நல்லெண்ணெய் ஊற்றி, ஈரத்துடன் கலந்து பிசைந்து, நக்கின் அடியில் பரப்பினால்....ம்ம்ம்ம்... ராகு, கேதுவே அமிர்தத்திற்கு இங்கு வந்திருக்கலாம்.

அப்புறம் வழக்கமான தமிழனின் பருப்பு சாம்பார் மிகப் பிடிக்கும்.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?
கொஞ்சம் சீரியஸா யோசிச்சுப் பார்த்தா கஷ்டம் தான். என் கேரக்டர் அப்படி.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
என்னங்க இப்படிக் கேட்டுப்போட்டீங்க..? கடல்ல குளிச்சத்தில்லீங்க. தட்டுத் தடுமாறி விழுந்து, புரண்டு எந்திரிக்கறதெல்லாம் குளியல்ல சேர்த்தி இல்லீங்க. நமக்கு நெம்ப பிடிச்சது அருவி தாங்க. மூணாறு டூர் போயிருந்தப்ப, நான் மட்டும் அந்தக் குளிரிலேயும், துண்டைப் போர்த்திக் கொண்டு, தங்கியிருந்த ஃபாரஸ்ட் ரிசார்ட் பின்னாடியே கொஞ்சம் தள்ளிக் காட்டுக்குள் இருந்த வெள்ளை அருவியிலே, 'இயற்கை குளியல்' போட்டு, வாய்க்கு வந்த பாட்டை நடுங்கும் குளிரில் பாடி... என்ன டைமுங்க அது.!

இப்ப இருக்கற மலை நாட்டுல, கல்லார்ல மீன்முட்டி அருவின்னு ஒண்ணு இருக்கு. அந்த அனுபவத்த தான் கீழே கண்ணிகளை க்ளிக் பண்ணி படியுங்களேன். அப்புறம் கோவைக் குற்றாலம், பாபநாசம் அகத்தியர் அருவி இங்கெல்லாம் குளிச்சிருக்கேனுங்க. அருவியில குளிக்கறது கூட வேணாம், நனையுறதப் பத்தி ஒரு பதிவு அப்புறமா போடுறேங்க.

http://kaalapayani.blogspot.com/2008/02/blog-post_18.html

http://kaalapayani.blogspot.com/2009/01/blog-post_27.html

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
கண் கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

8) உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?
பிடி : எதையாவது பண்ணனும்ன்னு அப்பப்ப தோன்றி ஏதாவது விசித்திரமாக கத்துக்க ஆரம்பிப்பது.

!பிடி: அப்படி ஆரம்பித்த எதையுமே முழுதாக முடிப்பதற்குள், அடுத்து சம்பந்தமே இல்லாமல் வேறு ஏதாவது பிடித்துப் போவது.

9)உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
சரியாகத் தெரியவில்லை. எங்க இருக்காங்களோ..? (இந்த இடத்தில ஒரு கட் ஷாட் வெக்கறோம். மேடம், 'நான் இங்க இருக்கேன்பா!'னு காலையில் எட்டு மணிக்கு பெட்ஷீட்ல இருந்து எட்டிப் பார்க்கறாங்க!)

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
அப்பா.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
என்பு தோல் போர்த்த உடம்பு, பழுப்பு ஜ, கட்டம் போட்ட அழுக்கு லு, கை வைக்காத ப, கலைந்த கேசம், தொங்கும் மீசை, முள் தாடி.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
கேட்பது : 'ஸ்ரீ ரங்க ரங்க நாதனின்' லூப்பில் வின் ஏம்ப்பில் ஓடுகின்றது. பத்து வருட வயதான க்ராம்ப்டன் க்ரீவ்ஸ்ஸின் சலிப்பில்லாத வொய்ட் நாய்ஸ்.

பார்ப்பது : தோஷிபா மானிட்டர். ஜப்பானிய மொழியில் 'ட' இல்லை. எனவே இனி 'தோஷிபா', 'தோக்கியோ' என்போம்.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
எப்போதும் சிவப்பு. I love RED.

14) பிடித்த மணம்?
பெட்ரோல் புகை.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
தமிழ்ப்பறவை : ஏனெனில் நான் எதை எழுதினாலும், கமெண்ட் போடுகின்றார். ஏனெனில் மதுரை வழியாக வருகின்றேன் என்பதற்காக எனக்காக இரண்டு மணி நேரம் மதுரையில் காத்து, சுற்றி சில நூல்கள் வாங்கிப் பரிசளித்தார். ஏனெனில் எனக்குத் 'துணைவி'யான ஓவியத்தில் இவர் பிஸ்தா. ஏனெனில் கேட்டவுடன் சரியென்றார்.

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
யோசிப்பவர் என் கதை ஒன்று முதல் பரிசுக்குத் தேர்வானது குறித்து காட்டமாய் எழுதியது எனக்குப் பிடித்திருக்கின்றது. அப்படி எழுதும் முன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டதால், கொஞ்சம் தயாராக இருந்தேன். உண்மையான விமர்சனவாதி. இவரது குறுக்கெழுத்துப் பதிவுகள் பக்கம் நான் எட்டிப் பார்ப்பதில்லை. வாரமலர் குறுக்கெழுத்தோடு என் தளம் ஓவர். மூளைக்கு வேலை கொடுக்கும் இவரது பதிவுகளைப் பார்த்தால், தலைகீழாக ஓடி விடுவேன். இவர் சொல்லிய முறையால், முதல் தடவையாக அச்சில் என் கதை ஒன்று உருவெடுத்தது.

பிடிவாதமாக அறிவியல் புனைகதை மட்டும் எழுதுகிறார். சகஜமான சமூகக் கதைகள் முயற்சி செய்யலாமே என்று சொன்னால், 'நிறைய பேர் இருக்கிறார்கள். தனித்திருக்கிறேன்'. சமீபத்தில் இருவரும் ஆளுக்கு ஒரு சவால் விட்டிருக்கிறோம்.

17) பிடித்த விளையாட்டு?
Batடும் Ballலும் இடம்பெறும் விளையாட்டுகள்.

18) கண்ணாடி அணிபவரா?
இதுவரை இல்லை.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
'எல்லா' மாதிரியான படங்களும் பிடிக்கும்.

20) கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்டரில் கடைசியாக திருச்சி ஸ்டாரில் 'பசங்க'. நெட்டில், எஸ்டெல்லா வாரனின் சில வீடியோக்கள். (யூட்யூபிலேயே இருக்கின்றன.) எனக்கென்னவோ எஸ்டெல்லா பார்த்தால், கொஞ்சம் கொஞ்சம் ஸ்ரேயா ஜாடை இருக்கின்றது. முழுப்படம் என்றால் Sex and Zen II.

21) பிடித்த பருவ காலம் எது?
சந்தேகமே வேண்டாம். கொட்டும் மழைக் காலம் தான்.

மழை ரகளை.

மழை பெய்தலினால்...!

ஒரு மழை நாளின் இரவில்.

இவன்..!

தூறல் போடும் மேகங்கள்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
நரசய்யாவின் 'மதராசபட்டினம்', Dubliners by James Joyce, பைபிள் புதிய ஏற்பாடு, கமலாம்பாள் சரித்திரம், ஸ்ரீ ரங்க மகாத்மியம், குறிஞ்சி மலர் - நா.பா., பழைய இதழ்கள்.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
பிடித்து, காட்சிப்படமாக வைத்த படத்தை விட வேறொரு படம் பிடித்துப் போனால் அதன் மேலே இதை வைப்பேன். இப்போது இந்தக் குட்டி க்யூட் கண்ணன் இருக்கிறான். இவனின் மேனுஃபேக்சரர்களைக் காண ஆசை.



24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
எல்லா சத்தமும் பிடிக்கும். சத்தங்கள் அனைத்தும் மெளன விரதம் இருந்தால் எனக்கு புவ்வா கிடைக்காது. ஆடியோஃபைல் தொழில். எனவே சத்தங்களே என் சாப்பாடு. (ஹை!).

பிடிக்காத சத்தம் : பொய்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
கற்பனையில் எங்கெங்கோ. நிஜத்தில் ஹைதை.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
இருக்கிறது என்று தான் நினைக்கிறேன். அதைத் தேடித் தான் 8-வது கேள்விக்குப் பதில் படி நடந்து கொள்கிறேன். இன்னும் கண்டு கொண்ட பாடில்லை.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ரொம்ப நேரம் யோசிச்சேன். தெரியவில்லை.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
ஷ்.....!!

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
காடுகள்; அருவிகள் இருக்கும் இடங்களெல்லாம் என் தலங்கள்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?
கதைகளில் வருகின்ற கேரக்டர்கள் எல்லாம் பின்னே யாராம்?

31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
ஒன்றைத் தவிர மற்ற அத்தனையையும்!

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.
நூறு ஆண்டுகள், வெறும் 36525 நாட்கள்.

கூண்டினுள் பக்ஷி - ஒரு பதிவர்.



ரு பதிவர். வலைச்சரத்தில் நவீன கவிஞராக அடையாளப்பட்டவர். ஆதியில் பொழுது போகாத நேரங்களில், பெய்ண்ட் ப்ரஷ் வராத பொற்காலங்களில் வாட்டர் கலர் தெறித்த ஓவியங்களை அவ்வப்போது பதிவில் இட்டு ஆச்சர்யப்படுத்துவார். பழைய தாகம் தீராமல் தூரிகை தொட்டு காரிகைகள் வரைந்து ஜிலுஜிலுப்பூட்டுவார். சார், தற்போது தற்காலிக சிறையில்!

சார் பணியாற்றும் தொழிற்சாலையில் கடைகட்ட ஊழியர்கள் கல்யாணப் பந்தி லிஸ்ட் நீளத்தில் கோரிக்கைகளைப் பட்டியலிட்டு, மேலிடத்திற்கு அனுப்ப, அவர்கள் தலைகளை இடதும், வலதுமாக ஆட்டித் தொலைக்க, மோட்டார்கள் நிறுத்தப்பட்டன; ஃபேக்டரி சங்கொலி உச்சமாக ஒலிக்கப்பட்டு, கேட்டுகள் இழுத்துச் சாத்தப்பட்டன.

சார் இடை நிலை பதவியில் இருக்கிறார். ரெண்டாவது ஷிஃப்டில் உள்ளே போனவர் மூடப்பட்ட கதவுகளுக்குள் மாட்டிக் கொண்டுள்ளார். வெளியே விட மறுப்பதற்கு ரெண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, 'மெளன ராகம்' மோகன் போல் இவர்களுக்கு சராமரியாக அடி விழ அத்தனை சாத்தியங்கள் இருக்கின்றன; இரண்டாவது, இவர்களும் போய் விட்டால், ப்ரொடக்ஷன் முழுக்க நின்று போய் விடும் அபாயம் சூழ்ந்திருக்கின்றது. எனவே மேனேஜ்மெண்ட் இவர்களை உள்ளேயே உண்ண உணவூட்டி, படுக்க பாய் காட்டி, பத்து மணி நேரம் ஆபரேட்டர்கள் வேலையைச் செய்யச் சொல்லி விட்டது.

சாருக்கு முதலில் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கின்றது. அனலடிக்கும் வெயில் காலத்தில் ஃபுல் ஏ.ஸி.யில் இரவெல்லாம் படுத்துக் கொள்ள முடிகின்றது. அலுவலகமே சாப்பாடு போட்டு விடுகின்றது; தேடிப் போகும் அலைச்சல் இல்லை; இதுவரை செய்திராத கீழ்மட்ட அஸெம்ப்ளிங் வேலைகள் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு; கூட இருக்கும் அலுவலர்களுடன் இன்னும் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பங்கள். ஆரம்பத்தில் திளைத்திருக்கிறார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு அலுக்கத் தொடங்கியிருக்கின்றது. தினம் இரவு மாமி மெஸ்ஸில், தோசை, இட்லி, சாப்பாடு சாப்பிட்டவர், இப்போது மூன்று வேளைகளும் பாவ் பாஜி, சப்பாத்தி என்று வெறுத்துப் போயுள்ளார். வெளியே பனியனோடு கூச்சல் போட்டுப் போராடும் ஒருவரிடம் ஓர் உதவி கேட்க, 'மென்னியைக் காட்டு; முறிக்கிறேன்!' பதில் கேட்டு பின்வாங்கியுள்ளார்.

குளியலறைகளில் கும்பல் கும்பலாக குளிக்க, கூச்சம் காணாமல் போக ஆரம்பித்திருக்கின்றது.. காலையில் நேரத்தில் எழுந்து, பத்து மணிகள் உடல் உழைப்பு கேட்கும் பணிகளில் ஈடுபட்டு, பத்து மணிக்கெல்லாம் படுத்தவுடன் கண்கள் செருகி, ஒரு வித என்.ஸி.ஸி. கேம்ப் அனுபவங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்.

நேற்று பேசும் போது, 'பதிவுலகம் எப்படி போய்க் கொண்டிருக்கின்றது?' என்று கேட்டார். 'உரையாடலுக்கு ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் நினைத்து வைத்திருந்தேன். எழுத முடியாது போலிருக்கிறது. நீ எழுதுகிறாயா?' என்று கேட்டார். 'ஆளை விடு..!' என்றிட்டேன்.

துவக்கத்தில் ஜிமெயில் கனெக்ட் இருந்தது. இப்போது அதையும் கட் செய்து விட, நகத்தைக் கடித்துக் கொள்கிறார். இடைவேளை நேரங்களை வீணாக்காமல், வான் பார்த்து, 'ஓ நிலாவே!' என்று கவிதை எழுதுகிறார். (வெளி வந்தவுடன் கண்டிப்பாக பதியப்படும் என்று உறுதியளித்துள்ளார்.) கொஞ்சம் சிவந்த இரத்தம் பாயும் நம் பதிவர், இப்போது முதலாளிகள் பக்கம் இழுத்துக் கொள்ளப்பட்டு, தொழிலாளர் போராட்டத்தில் பங்கு பெற முடியாமல் இருப்பதை நினைத்து மனம் அவ்வப்போது வெதும்புகிறார்.

திங்களில் ஆரம்பித்த ஸ்ட்ரைக் இன்று உச்சம் நோக்கி நகர்ந்து விட்டிருக்கின்றது. தொழிலாளர்கள் இப்போது யூனிஃபார்ம் போட்டு கோஷமிடுகிறார்களாம். துளியாய் அவர்களுக்குள் விரிசல்கள் ஏற்பட்டு, கொஞ்சம் பேர் வேலைக்குத் திரும்பலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். மேனேஜ்மெண்ட் சைடிலும் ரெண்டு அடி இறங்கி வந்திருக்கிறார்களாம். பொலிட்டீஷியன்கள் சிலர் வந்து சற்று சூடேற்றி விட்டுப் போயிருக்கிறார்களாம். கம்யூனிஸ்ட்கள் வலுவற்ற இப்பிரதேசத்தில் வேறெதோ இயக்கம் தீவிரமாக இந்த ஸ்ட்ரைக்கில் இறங்கியிருக்கின்றது என்றார். அதிக கவலை ஏற்படுத்தும் மற்றொரு விஷயம், நாளை வெள்ளி.

நாளைக்குள் ஏதேனும் முடிவு தெரியாவிட்டால், அடுத்த இரண்டு நாட்கள் முழுக்க முழுக்க அலுவலகத்திலேயே கழிக்க வேண்டி வரும். தலையைப் பிய்த்துக் கொண்டாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்.

சீக்கிரம் எல்லாம் நலமாக நிறைவுற கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்றேன்.

அவர் 'எந்தூர்' என்று மட்டும் கேட்காதீர்கள். சொல்ல மாட்டேன்.

Wednesday, April 01, 2009

சில பதிவுகள்.

. சாரு நிவேதிதாவின் வலைமனையில், மலாவியில் இருந்து ஆனந்த் என்பவர் எழுதி இருக்கிறார். அழகான நடை. நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டே வந்து, கடைசி பத்தியில் அவரது சொந்த அனுபவத்தையும் பளிச்சென்று சொல்லி விடுகிறார். ஜில்லென்றது. கவிதைகள் இரண்டும் எழுதி வைத்துக் காட்டுகிறார். நன்றாகவெ இருந்தன.

சாரு புனை பெயர் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். நான் சிபாரிசு செய்வது, 'மலாவி மன்னன்' (அ) 'மலாவி மைந்தன்'.

கண்ணி.

ஆ. எஸ்.ராமகிருஷ்ணனின் வலைமனையில் இன்று படித்த 'ரயிலோடும் தூரம்' பதிவைப் படித்த போது சிலிர்த்துப் போனேன்.

இரவு ரயிலில் கூட அத்தனை பேருடன் பயணிக்கும் போது, குறிப்பாக ரிசர்வேஷன் பெட்டியில் நாம் தனிமையாகவே பயணிப்போம். கூட நமக்குத் துணையாக வருவது ஒற்றையாய்க் காயும் நிலாவே! இருள் தின்னும் பெட்டிக்குள் ஜன்னல் கம்பிகளோடு கன்ன்ம் ஒட்டி, ஏதோ ஒரு வளைவில் அந்தரத்தில் தொங்கும் நிலா சட்டென்று பின் தங்கி விடுவதை ஏக்கத்தோடு பார்த்திருக்கிறேன்.

கதவைத் திறந்து வைத்துக் கொண்டு, கைகளால் இரு பக்கக் கம்பிகளைப் பிடித்து, முழு உடலையும் வெளியே எறிந்து மோதும் பேய்க் காற்றில் மிதப்பதை எத்தனை முறை செய்திருக்கிறேன்!

சேலத்தில் இருந்து முதன் முறையாக பெங்களூர் ரயில் பயணத்தில் நடு இரவில் சென்ற போது, பெளர்ணமி இரவு அது! அப்படியே பனிப்புகையின் உள்ளெல்லாம் பாவு நூலாக வெண்ணொளி அமுதத் துளிகள் கரைந்து நிறைந்திருந்தன.

கவிஞனுக்கு மழையும், ரயிலும், நிலவும், காற்றும் வாரி இறைக்க இறைக்க வற்றாத ஜீவ சுரப்பிகள். அவனது அடி மனதில் ஊறிக் கிடக்கும் வரிகளை அவையே திரட்டி மேலெழுப்புகின்றன.

நன்கு மழை பெய்து கொண்டிருக்கும் ஓர் இரவுப் பெளர்ணமி நேரத்தில் வேகமாக கிராமத்தில் காடுகளுக்குள் செல்லும் ரயிலின் இருள் கவ்விய பெட்டியொன்றின் பக்கவாட்டுப் படுக்கையில் சாய்ந்து படுத்து, அந்த தடதடப்பு ரிதத்தில் மெளனமாக இயற்கையோடு கரைவது என்பது எத்தனை சுகமானது....!!!!

PS: தினமும் பார்க்கும் ஓவியத் தளத்தில் இன்று பார்த்த போது டேவிட் காக்ஸ்ஸின் படம் பட்டது..! என்ன ஓர் ஆச்சர்ய ஒற்றுமை!

படத்தின் பெயர் : இரவு ரயில்.



இ. தி.க.சிவசங்கரன் அவர்கள் பற்றிய ஜெயமோகன் பதிவு அவர் எழுதியது தானா என்ற சந்தேகம் படிக்கத் துவங்கிய போதிலிருந்து இருந்தது. அவ்வளவு நகைச்சுவையாக எழுதி இருக்கிறார். வழக்கமாக அவர் 'நகைச்சுவை' என்று லேபிள் குத்தும் பதிவுகளில் சொல்லி விட்டாரே என்பதற்காக ' நகைச்சு வை'க்க முயலலாம். இப்பதிவில் இயல்பான நடைப் புன்னகை இருக்கின்றது.

Thursday, August 07, 2008

பாவ் குட்டியோடு ஒரு வஜனம்.

சிந்தாநதியின் பாவனா கவுஜ/வஜனப் போட்டிக்காக எழுதிய வஜனம் ::



"ஹாய் பாவ்.."

"ஹாய்டா..!"

"அதிகாலையில் இருந்து தண்ணீரில் நீ நிற்கலாமா? தண்ணிக்கே ஜல்பு பிடிச்சுற போகுது..!"

"ரொம்ப Ice வைக்காத..!"

"என்கிட்ட இருக்கறதே ரெண்டு Eyes தான்! அதை தான் உன் மேல ஆல்ரெடி வெச்சிட்டேனே..!"

"சரி..! நான் அதிகாலையில் இருந்து நிற்கிறேன்னு உனக்கு எப்படி தெரிந்தது..?"

"விடிகாலையில் வானம் நீல நிறமா இருந்தது. அது அப்படியே மெல்ல மெல்ல குளத்தில் படர்ந்தது. நீ வந்து நின்ற உடன் உன் ஆடையில் ஏறி.. இப்போது குளம் நீல நிறத்தை இழந்து விட்டது.. உன் உடைகள் மட்டுமே நீல நிறமாய்..!"

"ஸ்...!"

"அது மட்டுமா? உன் நீல வளையல்களைப் பார்த்து தான் கொஞ்சமாய் குழம்பி, கிறங்கி ஐன்ஸ்டீனும் வானம் வளைவானது என்று சொன்னார் போலும்!"

"அவரை ஏண்டா இங்க கொண்டு வர்ற? ப்ளூ கலர் ட்ரெஸ்ல ஏறுவதற்கு முன்னாடி என் ட்ரெஸ் என்ன வொய்ட் கலர்லயா இருந்தது?

"சந்தேகம் என்ன? தேவதைகள் எல்லாம் வெள்ளை நிற ஆடைகள் தானே அணிந்திருப்பர். சரி! அது என்ன கையில் ஐந்து தலை பாம்பு?"

"ம்..! உன்னைப் போன்ற ஜொள்ளர்கள் வந்தால் தீண்ட விட..!"

"ஓ..! அப்படி எனில் ஒரு கவிதை சொல்லி விட்டு ஓடி விடுகிறேன்.."

"சொல்லு! பார்க்கலாம்..!"

"சூரியனைச் சுற்றி வட்டமாய் புயல்கள் இருந்தால், அங்கே கரோனா!
நிலாவைச் சுற்றி கூட்டமாய் பயல்கள் இருந்தால், அங்கே பாவனா...!"

"வசந்த் இவிட வரணும்! ஞான் இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரான்...!"

ல்லோரும் புகுந்து கலக்குங்க....! வாங்க...!

Tuesday, August 05, 2008

நீ ரஜினி ரசிகனா? ரஜினி வெறியனா? - பதில்.

ன்பு வெண்பூ,

ஷா - இன் - ஷா என்ன சொன்னார்? என்ற எனது பதிவிற்கான உங்களது கமெண்ட் இது ::


வசந்த்.. கண்டிப்பாக நான் உங்கள் கருத்தில் இருந்து வேறுபடுகிறேன் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். ரஜினியைத் தாக்கி எழுதினால் உடனே எல்லோரும் கவனிப்பார்கள் என்பதால் நான் உட்பட பெரும்பாலோர் அதைச் செய்யவில்லை. உங்களுக்கு என் பதில்கள்:

1. ஒகேனக்கல் பிரச்சினை கிடப்பில் இருப்பது குறித்து எத்தனையோ முறை நானே பின்னூட்டமிட்டுள்ளேன். அது குறித்த எல்லா தகவல்களையும் பெற முடியாததால் என்னால் அதுகுறித்து பதிவிட முடியவில்லை. அது அரசியல்வாதிகளால்தான் கிடப்பில் இடப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

2. ஊருக்கு இளைத்தவன் என்பதால் அவர் மீது மட்டும் சேறு வாரி இறைப்பதாக சொல்வதில் சிறிதும் உண்மையில்லை. அரசியல்வாதிகள் அத்தனை பேருமே அவரவர் சுயநலங்களால் பதிவர்களால் சாடப்படுவது கண்கூடு.

3. உங்கள் தலைவர் உத்தமராகவே இருக்கட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர் வருத்தம் தெரிவித்தது அரசியல்வாதிகளாலேயே என்று இருக்கட்டும். அவர் வருத்தம் தெரிவித்ததற்கு 17 பிரிண்ட் ஓடவேண்டும் என்பது காரணம் இல்லை என்பது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் இத்தனை நாள் கழித்து மிக மிகச் சரியாக அந்த 17 பிரிண்ட்கள் ரிலீஸ் ஆவதற்கு 1 நாள் முன்னால் எதற்கு சாமி மன்னிப்பு கேட்க வேண்டும்? அதற்கு பின்னால் அவர்க்கு பிஸினஸ் மைண்ட் இல்லை என்று நீங்கள் நம்பலாம். எல்லோரும் அதையே செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

அவரைப் பொறுத்தவரை அவரால் தான் சொன்னதைக் காப்பாற்றமுடியவில்லை என்றால் படத்தில் மட்டும் நடிக்கட்டும். அதுதான் அவரது எல்லா படங்களையும் ரசிக்கும் என் போன்றோர் எதிர்பார்ப்பது. நானும் ரஜினி ரசிகன் தான். வெறியன் இல்லை.


எனது பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பல பதிவர்களில் நீங்களும் ஒருவர் என்று நீங்கள் எவ்வாறு சரியாகப் புரிந்து கொண்டீர்களோ, அதே போல் நானும் ரஜினி ரசிகன் தான். வெறியன் இல்லை என்று நீங்கள் சொல்லியிருப்பதன் வாயிலாக நீ ரசிகனா இல்லை வெறியனா என்ற கேள்வி என்னை நோக்கி எறியப்பட்டு இருக்கின்றது என்பதை மிகச் சரியாக புரிந்து கொண்டுள்ளேன் என்பதையும் இங்கே தெளிவுபடுத்துகிறேன்.

மூன்று நாட்கள் தாமதமாக உங்களுக்கு பதில் கொடுப்பதற்கு மன்னிக்கவும்.

இந்நேரத்திற்கு உங்களுக்கே ரஜினி அவர்களின் குரலுக்கான காரணங்களும், விளக்கங்களும், ஆதரவுக் குரல்களும் கிடைத்திருக்கும். இல்லாவிடில் சில இணைப்புச் சுட்டிகள் இதோ ::

http://www.rajinifans.com/

http://onlysuperstar.blogspot.com/

http://mayavarathaan.blogspot.com/

நான் ரஜினி ரசிகனா இல்லை வெறியனா என்ற கேள்விக்கு எனது சில பழம் பதிவுகளைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ரஜினியும் நாசரின் முகமும்...!

இப்ப என்ன செய்ய?

மோக்ளியின் ஷா - இன் -ஷா.

வளர் பருவத்தில் நீங்கள் அவரது படங்களோடு வளர்ந்திருப்பின் மட்டுமே அவரின் தாக்கம் உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று ஒரு பதிவில் படித்தது நினைவுக்கு வருகின்றது.

நான் ஒரு சாதாரண ரஜினி ரசிகன். புதுப்படங்களை பார்த்து விசிலடித்துக் கொண்டாடி, அதே சமயம் அவரது பழைய படங்களைப் பார்த்து இனி இது போல் நடிக்க மாட்டாரா என்று வருந்தி, மீண்டும் அவர் இளமை வேஷம் பூசி வேக நடையில் வரும் போது, அத்தனையையும் மறந்து விசிலடித்து, டிக்கெட் கிழித்து பறக்க விட்டு, ஆட்டம் போடும் கோடிக்கணக்கான அவரது ரசிகர்களில் ஒருவன்.

மற்றுமொரு நண்பருடன் பேசிய ஈ-மெயில் உங்கள் பார்வைக்கு (கீழிருந்து படித்து வரவும்.)::

From: Vasantha Kumar R.
Sent: Monday, August 04, 2008 3:41 PM
To:
Subject: RE:



Yes.. I have to publish another post to ask sorry for mentioning “apologise” in my post.



Some loosus told why he worried about 1.5 crores which come from Karnataka zone..?



They forgot or don’t want to remember that thalaivar returned crores to the distributors who got lose from BABA. If these sathyaraj, TR guys start to pay like that, they have to come to platform and have to start begging.



If he doesn’t bother abt Karnataka market, he won’t have any problem. But it will lead a new way. That all tamil films get stopped showing in KA, because all the film ppl attended that fast. It will lead that effect in all the areas. Like udipi hotel should be shut down in TN. Hotel Sangeetha has to be closed in TN.



All nair tea shops to be closed in TN. The lakhs of ppl who settled in all the other states has to return to their home state…

Then it leads to disintegration of India. And the country will break into pieces like USSR got broken into Russia and all other ‘…isthan’ countries.



His one speech stops all these things. He is the leader.


--------------------------------------------------------------------------------

From:
Sent: Monday, August 04, 2008 3:26 PM
To: Vasantha Kumar R.
Subject: RE:



Even now he has not apologised any where.He just clarified what he has said before to those karnataka chamber guys and others.


--------------------------------------------------------------------------------

From: Vasantha Kumar R.
Sent: Monday, August 04, 2008 3:11 PM
To:
Subject: RE:

Even a man with very small common-sense can understand that thalaivar’s “we have to kick them” was towards who were all oppose to the hogenakkal water project.



These guys are always waiting for chances to remove thalaivar’s supremo from the Tamil Film Industry.. but they fail as usual.



In tamil blogosphere also everyone shout “Rajini is disloyal to tamilians..blah..blah” all these craps..!



I opposed them very strongly in my blog.



All of main guys in the industry as KB, Bharathiraja, ameer, seeman all appreciate thalaivar’s speech.



These waste guys like sathyaraj (he thinks he became periyar because of he acted as that legend. Poor guy…!), Sarath kumar (another poor man… he is trying to popularize his party’s name(I think max 100 ppl know the name) by any means..) and TR (I wonder why this guy still not recognized that he is getting treated as a comedian in tamil cinema and political arena. He has a lot of other works to do. For example controlling his son’s finger and middlefinger and advised him to stop destroying a beautiful actress’s life... sure, that will take a lifetime effort…) all are stomach burning ppl…



We fans are behind him.. He is a true leader…who betted his fame for his film’s distributors, producers and fans in Karnataka…! And not only for his film’s, but for the entire tamil cinema!



The political leaders ordered their followers if they feel problems to cut down the trees or to burn three young students in a bus and to kill innocent workers even they are not responsible for any thing


But our thalaivar never order his fans to do such things even he was attacked severely by many ppl. Amma, manorama , Bharathiraja, PMK and now sathyaraj!


A true leader is the one who leads his followers by simply showing his life. Not necessarily he has to speech or advise.



After this incident, I am really happy for being a fan to such a big man and really proud to call him “THALAIVAR”.

--------------------------------------------------------------------------------

From:
Sent: Monday, August 04, 2008 2:47 PM
To: Vasantha Kumar R.
Subject: RE:

stupid people.This T.R dirty fellow,as if some body asked him he is giving comments...

every one making politics of it...

actually this is the most clear of all the thalaivar's speech.

--------------------------------------------------------------------------------

From: Vasantha Kumar R.
Sent: Monday, August 04, 2008 2:41 PM
To:
Subject: RE:

Officially 1 hour. Ok..!

Unofficially how much time…?

Did you notice how thalaivar’s speech is transformed by ugly magazines and news channels..?


--------------------------------------------------------------------------------

From:
Sent: Monday, August 04, 2008 2:34 PM
To: Vasantha Kumar R.
Subject: RE:

Here 1 hour power cut afternoon 12 -1

***

எனது வாதங்கள் முட்டாள்தனமாக தோன்றினால் நன்றி.

இங்கே சிலருக்கு (உங்களை அல்ல!) ரஜினி ரசிகன் என்று கூறிக் கொள்வதில் தயக்கமும், ஏதோ ப்ரெஸ்டீஜ் இஷ்யூவும், இருப்பது போல் தோன்றுகின்றது. தமிழ் வலையுலகத்தில் இதை விட மகா ஆட்களை கேள்விப்பட்டும் பார்த்தும் வருகிறோம்.

எங்களுக்கு அதில் தயக்கம் இல்லை.

ஆனால் இது போன்ற எந்த வித ஆதாரமும் இல்லாத, உடனடி பரபரப்பு செய்திகளை நம்பி இந்த நல்ல மனிதரை இழிவு படுத்த யார் விரும்பினாலும் நாங்கள் அதை எதிர்த்து உண்மைக்கு கொஞ்சம் அருகே கூட்டிச் செல்ல முயல்வோம்.

அன்றி, நாங்கள் வம்புகளுக்கு ஒதுங்கிப் போவதும் இல்லை; ஒடுங்கிப் போவதும் இல்லை.

இனியும் உங்களுக்குப் புரியவில்லை என்றால், ஸாரி தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்புவதற்கு எங்களுக்கு நேரம் இல்லை.

நன்றி!