Saturday, May 31, 2008

நெம்பர் சிஸ்டம்.

போன வாரம் தான் இங்கு பஸ்களுக்கு நம்பர் சிஸ்டம் இல்லை. எல்லோரும் நன்கு படித்துள்ளதால், ஊர்ப் பெயரை வைத்தே ட்ராக் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியது தான் என்றேன்.

கவர்ன்மெண்டுக்குப் பொத்துக் கொண்டு விட்டது. எப்படி, நீ அப்படி சொல்லலாம் என்று. இப்போது திருவனந்தபுரத்தில், பஸ்களுக்கு எண்கள் கொடுத்து விட்டார்கள்.

Bus Route Numbers Introduced in Trivandrum
Route no
Destination
Via route

111
Kovalam
Beach , Thiruvallam, Pachallur

111A
Kovalam
Beach Bypass

111B
Kovalam
Beach Pallichal Venniyyoor,Panagode,Muttaykadu

115
Attukal temple
Manakkadu Attukal

136
Venganoor
Thiruvallam, Panangode

136A
Venganoor
Thiruvallam, Agricultural College,Peringamala

143
Peringamala
Thiruvallam, Panangode,Venganoor

143A
Peringamala
Thiruvallam,Agricultural College

149
Vizhinjam
Thiruvallam, Pachallor

149A
Vizhinjam
Thiruvallam,Venganoor

155
Veli
Palayam ,Sanghumugham,Vettukadu

155A
Veli
Valiyathura,Sanghumugham,Vettukadu

155B
Veli
Palayam, Pettah, All Saints College ,Madhavapuram

151
Sanghumugham
Palayam, Petta, All Saints College

151A
Sanghumugham
Valiyathura, airport

171
Puthenthope
Palayam, Petta, All Saints ,Madhavapuram

171A
Puthenthope
Valiyathura,Sanghumugham,All Saints College

101
Airport
Valiyathura

101B
Airport
Valiyathura, Sulaiman theruvu

161
Kochu Veli railway station
Palayam Petta Chakka all saints college

175
Karikkakam Temple
Palayam Chakka Byepass

175A
Karikkakam Temple
Palayam Petta Anayara Venpalavattom

105
Bheema palli
Valiyathura

105A
Bheema palli
Mukkola

105B
Bheema palli
Kallumoodu

173
KIMS
Palayam Petta Anayara Venpalavattom

555
Medical College
Palayam Pattom

555A
Medical College
Palkulangara, Pallimukku Kannammola

555B
Medical College
Palayam ,Kannammola

511
Akkulam
Palayam Pattom Ulloor Kesavadasapuram

511A
Akkulam
Palayam Pattom medical college

511B
Akkulam
Palayam Kannamoola Medical college

529
Engineering College
Palayam Pattom Ulloor Kesavadasapuram Srikaryam Chavadimukku

529A
Engineering College
Palayam Pattom Ulloor Medical college
Srikaryam Chavadimukku

543
Chempazhanthi
Palayam Pattom Ulloor Kesavadasapuram Srikaryam

543A
Chempazhanthi
Palayam Pattom Ulloor Kesavadasapuram Srikaryam Akkulam

543B
Chempazhanthi
Palayam Pattom Ullor medical College Srikaryam

551
Pothencode
Palayam Pattom Ulloor Kesavadasapuram Srikaryam Paudikonam

552
Santhigiri
Palayam Pattom Ullor Kesavadasapuram Srikaryam Pothencode

552A
Santhigiri
Palayam Pattom Ulloor Medical College Srikaryam Pothencode

581
kazhakkoottam
Palayam Pattom Ulloor Kesavadasapuram Srikaryam Karyavattom

581A
kazhakoottam
Palayam Pattom Ulloor Kesavadasapuram Srikaryam Kulathoor

585
Kaniyapuram
Palayam Pattom Ullor Kesavadasapuram Srikaryam Kazhakootam

585A
Kaniyapuram
Palayam Pattom Ulloor Kesavadasapuram Srikaryam Kazhakootam ChanthaVila

404
Peroorkada
Palayam Vellayambalam Ambalamukku

404A
Peroorkada
Nanthancode

404B
Peroorkada
Sasthamangalam Paipinnoodu

421
Vellanadu
Peroorkada karakkulam Erumba Aruvikkara

429
Aryanadu
Palayam Vellayambalam Sasthamangalam Vattiyorrkavu nettayam

429B
Aryanadu
Jagathi Poojapura Peyadu Vilappilsala Uriyakode

434
Nedumangadu
Palayam Vellayambalam Kavadiyar Peroorkada

477
Aruvikkara dam
Palayam Vattiyoorkavu Nettyam

477A
Aruvikkara dam
Palayam Vellayambalam Kavadiyar Peroorkada Erumba

477B
Aruvikkara dam
Palayam Vellayambalam Kavadiyar Peroorkada karakulam Azhikode

493
Puliyarakonam
Palayam Vellayambalam Sasthamangalam Vattiyorrkavu Vellaikadvu

493A
Puliyarakonam
Jagathi poojapura peyad

493B
Puliyarakonam
Palayalm Pangode thirumala Peyadu

197
Malayinkeezhu
Karamana Pappanamkode Malayam

197M
Malayinkeezhu
Jagathi PeyaduKolachira

399
kattakada
Palayam Bakery DPIThirumala Peyadu

399B
kattakada
Palayam Bakery Pangode Thirumala Peyadu

501
Vikas Bhavan
Palayam

631
Vattapara
Palayam Pattom Kesavadasapuram Mannathala

631A
Vattapara
Perrokada Kudappanakunnu Mukkola Kallayam

647
Venjaranmoodu
Palayam Pattom Kesavadasapuram Mannathala Vattapara Vembayam

647A
Venjaranmoodu
Palayam Pattom Kesavadasapuram Mannathala Vettinadu Knochira Velavoor

647B
Venjaranmoodu
Palayam Pattom Kesavadasapuram Sreekaryam Paudikonam

191
Pappanamkode
Karamana

299
Neyyattinkara
Karamana Pappanamkode Pravachambalam Balaramapuram

299A
Neyyattinkara
Karamana Thirumala Peyad Malayinkeezhu Oorootambalam Vandannor perumpazhuthoor.

581B
Kazhakuttom
Palayam Pattom Medical College Ulloor Sreekaryam Kulathur

581C
Kazhakuttom
Palayam Kannamoola Medical College Sreekaryam Kulathur

581J
Kazhakuttom
Palayam Petta Anayara Bypass

585E
Kaniyapuram
Eenchakkal Bypass Technopark Kazhakuttom

என்னத்த சொல்ல.

நா.எ.செ.வே.?

நான் என்ன செய்திருக்க வேண்டும்?

இருங்கள். முதலில் இந்த ஸினேரியோவைச் சொல்லி விடுகிறேன்.

நான் எங்கிருக்கிறேன்? ஓர் ஒற்றை அறையில். பிரம்மச்சாரி வாழ்க்கையின் சர்வ லட்சணங்களும் பொருந்திய அறையில். இரண்டு கட்டில்கள். பாய். தலையணை. அழுக்கின் அடையாளங்களைச் சுமந்த சட்டை, பனியன்கள், உள்ளாடைகள். ஊசித்துளைக்கு எது வெளிப்புறம், உட்புறம் என்பது போல், உள்ளே / வெளியே எட்டிப்பார்க்க ஒரு ஜன்னல். குறுக்குக் கம்பிகளே எலும்புகளாகக் கொண்ட ஒரு சதுரப் பிண்டம், அது.

என்ன நடந்தது? நல்ல மழை. இரண்டு மணி நேரம் விடாது பெய்து தள்ளியது. எனக்கு மழை மிகப் பிடிக்கும். ஜன்னலின் அருகே ஒரு சிறிய ப்ளாஸ்டிக் சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு, ஒரு கையில் சூடான டீயையும், மறு கையில் வில்ஸையும் குடிக்க, சொர்க்கம் கொஞ்சம் கிட்டத்தில் தெரிந்தது.

அப்போது தான் அதை கவனித்தேன். பச்சைத் தாள். முழு ஐநூறு ரூபா நோட்டு. கீழே வீட்டு உரிமையாளர் வீடு. ஒரு மளிகைக் கடை. கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்ட எஸ்.டி.டி. பூத். கம்பி கேட். வெளியே ஸ்ரீ முருகன் ஸ்டோர்ஸ் என்று மஞ்சள் பெய்ண்டில் எழுதப்பட்ட A ஷேப்பில் ஒரு போர்டு.

போர்டு மழையில் நனைந்து கொன்டே இருந்தது. என் கவனம் அதில் இல்லை. Aயின் இரண்டு செவ்வக முதுகுகளுக்கும் இடையில் ஒரு கொக்கி இருந்தது. அதன் தலைக்கும், வாலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருந்தது. புது நோட்டு. மழை ஈரம் கூட தீண்டாமல் படபடத்துக் கொண்டிருந்தது.

கோவலன் தம்பதியை 'வாரல் என்பது போல் மறித்துக் கைகாட்ட' என்று மீன் கொடி அசைந்ததைப் போல், இந்த பச்சை நோட்டு என்னை ஆசையோடு அழைத்து அசைந்தது.

'வா! என்னை பயன்படுத்து! உன் நெடுநாள் ஆசை என்ன? கால் ப்ளேட் பிரியாணி, ரெண்டு ப்ளேட் லெக் பீஸ், பச்சை நிறத்தில் கோடு போட்ட இரண்டு சட்டை, கறுப்பு பேண்ட். என்னைக் கொண்டு உன் ஆசைகளைக் கொள்'.

எட்டிப் பார்த்தேன். ஈரச் சாலையில் யாரும் இல்லை. மசூத் கறிக்கடை, சரவணா லாட்டரி மற்றும் டீ ஸ்டால், அம்மா மளிகைக் கடை.. எல்லாம் இறுக்கச் சாத்தி இருந்தன.

முடிவெடுத்தேன். இந்த நோட்டு எனக்குத் தான். கதவை இழுத்துச் சாத்தினேன். படிகளில் சத்தமே இல்லாமல் இறங்கினேன். பதுங்கிப் பதுங்கி வந்து விட்டேன்.

அப்போது தான் அது நிகழ்ந்தது.

ன்னா வெக்க சார், இது? சை...

வெய்யக் காலத்துல ஒரே சல்ல. வெளிய போனா அனலு மாரி காத்து வீசுது. சர்தான்னு வூட்டுக்குள்ள ஒக்கார முடியுதா? அதுவும் முடியல. ஃபேன போட்டா அதுவும் நெருப்ப மேல கொட்டுது. ரொம்பக் கொடும சார் இங்க இருக்கறது...

போன தபா வெயிலு கொஞ்சம் கம்மி மாதிரி இருக்கு. இப்போ இந்த போடு போடுது சார். மனுசன் இந்த ஊருல இருக்கறதா என்னன்னே புர்ல. பேசாம தூத்துக்குடி பக்கமா போயிரலாமானு நெனக்கறேன். எனக்கு இன்னா வேலன்னா, ஹார்பர்ல சரக்கு வந்து எறங்கும். சரக்குன்னா நீ என்னமோ நெனச்சிக்காத சார். கரி. அப்பால நெறய வரும். அத்தையெலலம் உன்னாண்ட சொல்ல முடியாது. எல்லாம் சீக்ரெட்டு.

போட்டுல இருந்து, லாரிங்களுக்கு கை மாத்திக் குடுக்கணும். நடுவுல பூந்து கொஞ்சம் சரக்குல கை வெக்க எல்லாம் முடியாது. பெண்டு களட்டிடுவாங்க. அப்பால ஹார்பருக்குள்ளயெ நொளய முடியாது. அதான் செரி, இந்த வெயிலுக்கு பயந்துகினு கொஞ்ச நா, தூத்துக்குடி பக்கம் இல்ல கொச்சின் பக்கமா போலாம்னு பாக்கறன்.

எங்க. குடும்பம்னு ஒண்ணு ஆயிட்டாலே ரோதன சார். கல்யாணமாகாம இருக்க சொல்லோ, எத்தினி சாலியா இருந்துச்சு. நானு, சோசப்பு, கபாலி அல்லா பேரும் போட்டு எட்த்துக்கினு கடலுகுள்ளாற போய்டுவம். அப்பால ஒரு நாலு நாளைக்கு தண்ணி தான் நம்ம நாடு, ஊரு அல்லாமே!

இப்ப என்ன ஆச்சு? கடலுக்குள்ள எல்லாம் போகக் கூடாது. துறைமுகத்துலயே போய் வேல பாருன்னுட்டா! இன்னா பண்றது? சை...

யப்பா..! கொஞ்சமாச்சும் மழ வந்துச்சு. இன்னா மழ இது! சும்மா பின்னிப் பெடலெடுத்திடுச்சு! ரெண்டு மண் நேரம். இப்பத் தான் நின்னுருக்கு.

கொஞ்சம் வெளிய போய்ப் பாக்கலாம். இன்னாது? பச்சை நோட்டு. ஐநூறு ரூபா. போய் எடுத்துறலாமா? வேணாம். ரோடு எப்டி இருக்கு. சைலண்டா இருக்கு. எல்லாரும் நல்லாத் தூங்கினு இருக்காங்க போல இருக்கு.

வெய்ட் பண்ணலாம்.

அட, இன்னா இது? யாரு வர்றது?

ரு நீளக் கார் வந்து நின்றது. காண்டெஸா. சின்னக் கரடி பொம்மை தொங்கிக் கொண்டிருந்த முன் இருக்கையில் இருவர் அமர்ந்திருந்தனர்.

"ஸ்வப்னா! நீ சொல்றதெல்லாம் உண்மையா..?"

"எஸ்..!" அந்த ஸ்வப்னா எனப்பட்டவள் கூறினாள். அழகான பல்வரிசை இருந்தது, தெரிந்தது.

"எப்படி தெரிந்தது..?"

"தெரியல! இதுக்குத் தான் நான் அப்பவே சொன்னேன். வீட்டுக்கெல்லாம் வராதீங்கனு. கேட்டீங்களா? இப்ப பாருங்க. எப்படியோ அவருக்குத் தெரிஞ்சிடுச்சினு நினைக்கிறேன். இப்ப என்ன செய்யட்டும்..?"

"பேசம நீ எங்கூட வந்திடு. ராணி மாதிரி வெச்சுக் காப்பாத்தறேன்."

"ஐயோ.. குழந்தைங்களை விட்டுடா..?"

"பார் ஸ்வப்னா. உனக்கு குழந்தைங்க தான் முக்கியம்னா, அவன் கூடவே இருந்துக்கோ. இல்ல, நான் வேணும்னா எங்கூட வந்திடு, அவனோட குழந்தைங்களை மறந்திட்டு. என்ன சொல்ற..?"

"..."

"எனக்கு உன் மெள்னத்தோட அர்த்தம் தெரியல. பட் நாம சீக்கிரம் முடிவு செஞ்சாகணும். நாளைக்கு காலையில பதினொரு மணிக்கு கால் பண்ணுவேன். ஒரு முடிவைச் சொல். இப்ப கிளம்பலாம்..."

A முன் நின்று கொண்டிருந்த கார் கிளம்பியது. மழைத் தண்ணீர் தேங்கியிருந்த குழியில் இறங்கி எழ, சேறு பாய்ந்தது. ரூபாய் நோட்டின் மேல் விழுந்தது. சிக்கிக் கொண்டிருந்த நோட்டு, விடுபட்டது. காற்றின் போக்கில் மிதந்தது. காரின் பின் பானெட் மீது சென்று ஒட்டிக் கொண்டது.

கார் சீனில் இருந்து நீங்கியது, ரூபாய் நோட்டுடன்.

இருவரும் யோசித்தார்கள்.

'நான் என்ன செய்திருக்க வேண்டும்..?'

Thursday, May 29, 2008

நினைத்த நேரம்.

"...!" என்றேன்.

மாலை ஐந்து முப்பதைப் பார்த்து ரொம்ப நாள் ஆகின்றதே என்று ஒரு கவலை வந்தது. இன்று கிளம்பினேன். ஆஃபீஸ் பேருந்துகளில் ஒன்றில் தொற்றிக் கொண்டேன். கடைசி நீள இருக்கையில் வலது புறம் அமர்ந்து கொண்டேன். கழக்குட்டம் ஜங்க்ஷனில் திரும்பி, கொல்லம் நெடுஞ்சாலையில் நுழைந்து, கேரளா யூனிவர்ஸிடி (கழக்குட்டம் கேம்பஸ்), காரியவட்டம், சாவடிமுக்கு கடந்து ஸ்ரிகார்யம் நெருங்குகையில் வழக்கமான சாலை நெருக்கடி. எஸ்.பி.ஐ.யின் ஏ.டி.எம்-ஐப் பார்த்து எழுந்து கொண்டேன். பேருந்து டிஸ்க்ரீட் புள்ளிகளாய் நின்று நின்று நகர்ந்து கொண்டிருக்க, ஒரு புள்ளியில் இறங்கினேன். ஒரு நடையில் கொஞ்சம் வெம்மை பூத்திருந்த கஃபேயில் நுழைந்து, ப்ளாக்கரைத் திறக்கையில், அவளைப் பார்த்தேன்.

மே மாதத்தின் அந்திம நாட்களில், வெயில் நாடெங்கும் நாற்பது டிகிரியைத் தொட்டுக் கொண்டிருக்க, இங்கு மஞ்சு பூத்திருந்தது. கருப்பின் குடைகள் மூடி, லேசாகத் தூறல் விழத் தொடங்க, அவள் நுழைந்தாள்.

மெல்லிய சந்தனக் கீற்று. காது மடல்களின் மேலே இரு, முடிக்கற்றைகளை எடுத்து, பின்னலிட்டு, பூச்சூடி இருந்தாள். சாமந்தி. கட்டம் கட்டமாய்ப் போட்டிருந்த பாவாடை, சட்டை இறுக்கிப் பிடித்திருக்க, துப்பட்டாவின் அவசர அவசியத்தை யாரும் சொல்லாததை எண்ணி வியந்தேன். சிரிக்கும் கண்கள். இரண்டு க்யூபிக்கிள்கள் தள்ளி இருந்த சிஸ்டத்தில் அமர்ந்தாள்.

ஜிமெயில், தேன்கூடு, தமிழ்மணம், மாற்று, டெக்னோரட்டி, என்றெல்லாம் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு, யாரோ உற்றுப் பார்ப்பதன் செல்கள் அலாரம் அடிக்க, சுற்றிப் பார்க்க, அவள் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்தேன். கஃபேக்காரர் அருகின் மெடிக்கல் ஷாப்புக்கோ, பேக்கரிக்கோ, மளிகைக் கடைக்கோ சென்றிருக்க வேண்டும். கதவு சாத்தப் அப்ட்டிருக்க, மொக்கையாக இயங்கிக் கொண்டிருந்த ஏ.ஸி.யின் 'பம்'மென்ற சத்தமும், வெண்டிலேட்டரின் ஏலியாஸிங்கை மீறிய முக்கரங்களின் சுழலும் மட்டுமே இருந்தன.

"எந்தா ப்ரஸ்னம்..?"என்று கேட்டவாறே அருகில் இருந்த ப்ளாஸ்டிக் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தேன்.

குடிகுரா, சாவ்லான், மல்லிகை, ரோஸ் மில்க் எல்லாம் கலந்த ஒரு கூர்மையான வாசம் மிதந்தது. நாசியின் இரண்டு துவாரங்களுக்கும் இடையின் சின்ன எலும்பை ப்ளேடால் கீறிச் செல்லுவது போல், மணம் ந்யூரான்களை நிரப்பியது.

மெயிலின் திரையைத் திறக்க திணறிக் கொண்டிருந்தாள். யாஹூ மெயிலின் அ முதல் ஃ வரை சொல்லிக் கொடுத்தேன். பாஸ்வேர்டைப் பற்றிக் கேட்டதும் ********** என்று அடித்தாள்.

சற்று நேரத்தில் மழை நின்று போனது. 'தாங்க்ஸ் அங்கிள்' என்றாள். அவளது பெயர் 'அனிருத்தா' என்றாள். எதற்காக இந்த மெயில் ஐ.டி. என்று கேட்டேன். பெங்களூருவில் இருக்கும் அவள் உட்பியுடன் சாட் செய்வதற்கு என்றாள்.

வழி விட்டேன். வெளியே சென்ற பின் ஒரு முறை பார்த்து மையமாகச் சிரித்தாள். சிரிக்கும் போது தான் கவனித்தேன். அவள் ஒன்றும் அவ்வளவு அழகில்லை என்று தோன்றியது.

மீண்டும் வந்து கவனம் திருப்புகையில், மற்றுமொரு கொலுசொலி கேட்டது.

"ஹ...!" என்றேன்.

Wednesday, May 28, 2008

பாயப் போகும் வேங்கையைச் சாயச் செய்யும் மான் இது.! (A)



மெள்ள, மெள்ள.. நம்மை மெல்ல, மெல்ல இரவு பெரும் பசியோடு வருகின்றது. வெப்பம் ஏறிய மாலையின் மேற்றிசைக் கரங்கள் கொதிக்கின்ற சிவப்பின் குருதியின் அடையாளங்களைப் பதித்துச் செல்கின்றன, வானின் பெரும் பரப்பெங்கும்..!

புதுத் துளிகளைத் தெளித்துச் செல்லும் குளிர் நிரம்பிய காற்றின் பயணம், தினம் தினம் ஒரே தடத்தில் பதித்துச் செல்கையிலும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் புதிதாய்க் குளிர்கிறது.

இரகசிய ஓசையில் ஒரு குரல் நகர்த்திச் செல்லும் இடங்கள், புது இருளில் குளிக்கின்ற பறவையின் சிறகை சிலிர்க்கச் செய்து அனுப்புகின்றது. வியர்க்கின்ற வெப்பம் பரவுகின்ற யுகம் போல் பரவி நிற்கின்ற தொடல், ஒரு நிலையில் உறையச் செய்யும் இதயத் துடிப்பை!

உஷ்...! என்று ஒரு மெளனத்தைப் பரப்பச் சொல்கின்ற மதம், இரவுகளில் மட்டும் இயக்கம் பெறும் அதிசயம் என்ன என்று, யாரிடம் கேட்பது? புள்ளிகளைப் பதித்து, பொழிகின்ற பனியின் கரங்களில் நனைகையில், இருளின் வேகம் கண்களின் வெம்மையில் பதுங்கிப் பின்பாய்வதென்ன?

சின்னச் சின்ன மொட்டுகளைத் தாண்டி, பெருங் கள்ளைப் பெறுங் காலம் கண நேரமாயினும், வெறுங் கனவாய்ப் பின் மறக்காமல், பரு பூக்கச் செய்தும் ஊருக்குக் காட்டுகின்றது, ஒரு நாடகத்தின் திரை விழுந்ததை அல்லது திரை விலக்கப்பட்டதை...!




Get Your Own Hindi Songs Player at Music Plugin