Thursday, February 26, 2009

சல்யூட் பாஸ்..!

ரு வருடம் போனது; உங்கள் எழுத்துக்கள் மேல் சறுக்கி விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

Wednesday, February 25, 2009

பண்ணாரிக்குப் போனேன்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 10:30 மணிக்கு பாலாஜி வந்தான். 'இன்னும் ரெடியாகலியா..?' என்று கேட்டபடியே படுக்கையில் விழுந்தான். அவன் வருவதை உறுதிப்படுத்திக் கொண்டு தான் துவங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனவே பிறகே குளிக்கச் சென்று, குளித்து விட்டு, எல்லா துணிகளும் நீரோடு செம்புலப் பெயலாக கலந்து விட்டபடியால் ஒரு பழைய டீ ஷர்ட்டை அணிந்து கொண்டேன். சொல்லப்போனால், இன்னும் முன்னதாக எட்டு மணிக்கே கிளம்ப வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஏனெனில் போட்டிருந்த ப்ளான் அப்படி..!

பவானியில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் அப்படியே கொஞ்சம் தெற்காகப் போய், தே.நெ.47-ஐக் கைப்பற்றி கோவை பாதையில் சென்று சித்தோட்டில் முற்றிலுமாக மேற்காகத் திரும்பி, கவுந்தப்பாடி தாண்டி, கோபியைக் கடந்து, குன்னத்தூர் வழியாக சத்திக்குள் நுழைந்து, தொலைத்து, கோயமுத்தூரில் இருந்து தாளவாடி, சாம்ராஜ்நகர், மைசூர் செல்லும் சாலையில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று, திரும்பும் வழியில், சத்தி, கள்ளிப்பட்டி, அத்தாணி, அந்தியூர் ரூட்டில் மீண்டும் பவானியை அடைவது!

அங்கங்கே கொஞ்சம் எலி கறண்டிய ஒரு முழு வட்டப் பயணம்.

சொன்னவுடனே பாலாஜி சுத்தமாக மறுத்தான். "நம்ம வண்டில காலையில ஆரம்பிச்சமுன்னா நீ சொன்ன ரூட்ல போய்ட்டு வந்தா, திங்கள் மதியம் வந்து சேரலாம்..." என்றான். எனவே திட்டம் திருத்தப்பட்டு நேர்க்கோட்டிலேயே போய் வருவது என்று ஒல்லியாக்கப்பட்டது.

அவன் மாமா ஞாயிற்றுக் கிழமை வெளியே கிளம்பினால் மட்டுமே வண்டியை ஜூட் விட்டு வரமுடியும். அன்றைக்குப் பார்த்து அவர் 11 மணிக்குத் தான் கிளம்பினார். எனவே நேரம் ரெண்டு மணிநேரம் ஷிஃப்ட் அடிக்க வேண்டியதாகப் போனது.

11:30 மணிக்கு இருவரும் டாடா காட்டி விட்டு, டி.வி.எஸ்.50-ஐக் கிளப்பினோம்.

'தி மோட்டர்சைக்கிள் டைரீஸ்' பார்த்து ஏற்கனவே ஊற்சுற்றியான எனக்கு இன்னும் கால்கள் கள் அடித்தது போல் சுற்ற ஆசை ஏறி விட்டுருந்தது. கொஞ்சம் அது போல் அனுபவங்களும் ஏற்பட்டன.

'முள்'ளென்று வெயில் அடித்தது. முதலில் வண்டியின் கண்டிஷன் அறுபது கி.மீ தாங்குமா என்று பார்த்துக் கொண்டோம். பவானியின் மேற்கு எல்லையில் இருக்கும் முனியப்பன் கோயில் அருகே இருக்கும் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்கில் 50 ரூபாய்க்கு பெட்ரோல் அடிக்க, டாங்க் தளும்பியது. தாங்கும் என்று ஸ்திரமானோம். ஏர் செக் வேறு எங்காவது போய் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.

காடையம்பட்டி, திப்பிசெட்டிபாளையம், சின்னமோளபாளையம் ரோடுகளில் பெயர்ந்திருந்த திட்டுக்களில் குதித்து, கண்ட்ரோல் பண்ணி, சில டி.டி.எஸ்-களை, பல்ஸர்களைக் கடந்தோம். கைப்பிடி கடைசி ம்றுக்கில் இருந்தது. இதற்கு மேல் திருப்ப முடியாத நிலையில் பறந்தது. இருவர் கையில் ஒரு நாரையோடு ஹோண்டாவில் 'ஹோ'வென போய்க் கொண்டிருக்க, அதன் கண்களில் கொஞ்சம் பயம் ஒளிந்திருந்தது.

ஜம்பையைத் தாண்டி ஒரு குறுகலான மோரி வரும். 'மோரி' என்றால் சிற்றோடைகளைக் கடக்கும் குறும்பாலம். பெரிய மோளபாளையம் தாண்டி தளவாய்பேட்டை வரை ஸ்டாப்பிங்கே கிடையாது. சும்மா 'சல்'என செல்...!!!

தளவை தாண்டி பள்ளியில் படிக்கும் போது பச்சையாய்க் கண்டிருந்த கரும்பு வயல்கள் நிரவப்பட்டு, வரிசையாக அளவுகளோடு கற்கள் பதிக்கப்பட்டு, இரு குச்சிகள் தோள் கொடுக்க வெடவெட போர்டு ஒன்று ஏதோ ஒரு நகர் வரப்போவதாகக் கட்டியம் கூறிக் காற்றில் ஆடியது.

ஒரிச்சேரி, ஒரிச்சேரிப் புதூரில் துருபடர்ந்த ரஜினி, விஜயகாந்த் போர்டுகள் நடப்பட்டிருந்த பஸ் ஸ்டாப்பில் இன்னும் பிள்ளையார் கருங்கல்லில் பிரம்மச்சாரியாக இருந்தார். புதூர் தாண்டி விஜயா காலனி போகும் ஒரு வளைவில் கொத்திக் குதறப்பட்டிருந்த சாலையைக் குதித்து குதித்துத் தான்டினோம். அங்கே சில வீடுகள் புதிதாக அழகாய் இருந்தன.

அதற்குள் கரும்பு காய்ச்சும் வாசம் காற்றோடு கலந்து வர, பத்து வருடங்கள் பின்னோக்கிப் போய் நினைவுகளை மீண்டும் புதுப்பித்து, அன்றும் இன்றும் தாவினோம்.

தொழுநோய் மருத்துவமனையில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் சரிவில் ரோட்டோரம் இருந்த சரஸ்வதியில் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' வந்திருந்தார். நால்ரோட்டின் நடுவில் துளியூண்டு பசியப் பூங்கா இருந்தது. சக்தி சுகர்ஸ் மெய்ன் கேட்டுக்குக் கொஞ்சம் மேடு ஏற வேண்டும். அதற்குள் எத்தனை ஞாபகங்கள்...!!

பாலு சார் ட்யூஷன் முடிந்தவுடன் கத்தரித்த வாழை இலைத் துண்டில் சூடாக பஜ்ஜியும், காரச் சட்னியும் யார் காசிலாவது சாப்பிடுவோம். அந்தச் சட்னி அன்று எலக்ஷனில் நின்றிருந்தால், எதிர்த்தவர்களுக்கு டெப்பாஸிட் கூட கிடைத்திருக்காது. அதற்கு அத்தனை அடிமைகள்..! அண்ணன் சைக்கிளை அழுத்த பாரில் அமர்ந்து வரும் பூனை மீசை வைத்திருந்த சதீஷ் ஒன்பதாவதில் ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று இன்னும் தெளிவில்லை..! மலை முருகன் கோயிலைத் தாண்டி, பவானி ஆற்றின் மறுகரையின் பெருந்தலையூரில் இருந்து பச்சை ஒயர்கூடையில் கொஞ்சம் புத்தகங்களை ஒளித்து சைக்கிளை மிதித்து வரும் அசோக் இன்று சிங்கப்பூரில் இருக்கிறான்.

குனிந்து பார்க்கும் எலெக்ட்ரிக் விளக்குகள் சோடியம் மஞ்சள் பூசி இருக்கின்றன. டீக்கடைகள் கொஞ்சம் வளர்ந்து பேக்கரி ஆகி இருக்கின்றன. கொஞ்சம் புதுக் கட்டிடங்கள் வந்து, ஒரு புதுப் பள்ளி வந்து, பெட்ரோல் பங்குகள் குட்டி போடிருந்தாலும், அந்த கந்தன் மலையும், ஊர்வலக் கரும்பு வண்டிகளும், பேக்டரிக் கறுப்புப் புகையும், சாய்ச்சும் போதை வாசமும், க்வார்ட்டர்ஸ் வாசல் அரசமரப் பிள்ளையார் எண்ணெய்த் திரிகளும் இன்னும் மாறவேயில்லை.

ப்ரம்மாண்ட ஏரிக்கரையில் ஒரு ஆலமரம் இருந்தது. இன்று இல்லை.

ரைஸ் மில் ஸ்டாப்பிங்கில் ஒரு மைல்கல்லில் உட்கார்ந்து கதை அளப்போம். கடக்கையில் சில யூனிஃபார்ம் சிறுவர்கள் அதே போல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்தக் குடிசை டீக்கடையும், திட்டு வைத்த டீ பாய்லரும் அப்படியே..!

பள்ளி முகப்பைப் பார்த்துக் கொண்டோம். 'கன்ஸ்யூமர் க்ளப்' போன்ற புதுப் புது போர்டுகள் மின்னின. எஸ்.ஐ.டி.யின் வாசல் இன்னும் கொஞ்சம் முன் வைத்து கோட்டை போல் வடிவத்திருந்தனர்.

காலனியின் வாசல் பஸ் கூரையின் கீழ் எதேச்சையாகப் பார்க்க திருமுருகன் இருந்தான். பொழுதே போகாத ஞாயிறின் முற்பகலில் சோம்பி இருந்தவனிடம் கொஞ்சம் போல் பேசி விட்டு மீண்டும் மேற்கு நோக்கிப் போனோம்.

மூங்கில்பட்டி அல்லது கீழ்வாணி என்று குறிக்கப்படும் கீவானியில் ஒரு பள்ளி இருக்கின்றது. அந்த வழியில் கண்ட ஊர்களான அத்தாணி, பங்களாபுதூர், கள்ளிப்பட்டி அத்தனையிலும் தெற்கை நோக்கி ஒரு தார் வரப்பு வெட்டப்பட்டு, 'கோபிக்கு செல்ல இங்கே திரும்புக' என்று அம்புக்குறிகள் மூக்கை நீட்டிக் கொண்டிருந்தன.

கள்ளிப்பட்டியில் சந்தை. குறுகலான சாலையில் புகுந்து புகுந்து சென்றோம். ஊரை விலக்கி, கொஞ்சம் தூரம் செல்ல, மெய்ன் ரோட்டை முறைத்துக் கொண்டு கணக்கம்பாளையம் ஊருக்கு செல்லும் பாதை இருபுறமும் மரங்கள் கூடு கட்டியிருக்க, செம்மண் படர்ந்திருந்தது.

தூக்கநாய்க்கன்பாளையத்தில் இருக்கும் ஜே.கே.கே. கல்லூரியைப் பார்த்துக் கொண்டு அபாய வளைவைக் கடந்து எதிர் பாய்ந்த கார்களை அலட்சியத்து, இன்னும் வேகம் பிடித்து, ரிவ்யூ மிரரில் தெரிந்த வெள்ளைக் காண்ட்ஸாவை முந்த விடக் கூடாது என்ற அபத்த முறுக்கலில், கதறியது டி.வி.எஸ்.50....!

இதுவரை எல்லாம் நலமே...!!!

ர்களை மீறி, சுற்றிலும் அலையாடிய பச்சை வயல்கள் பரப்பில் வண்டி அலைபாய்ந்ததை உணர்ந்தேன். தடாரென்று ஓரங்கட்டி செக் செய்ய, பின் டயர் பஞ்சர்...!!!

திக்கென்றானது. எந்த ஊர் என்று தெரியாது; இந்த ஊர்களில் ரிப்பேர் கடைகள் இருக்குமா என்ற சந்தேகம்;

இறங்கிய பின் தான் அடிக்கின்ற வெயிலின் சுட்டெரிப்பு தெரிந்தது. ஓட்டி வந்த என் கைகள், கால்களில் அந்த 'புறுபுறுப்பு' சுறுசுறுவென கூசிக் கொண்டிருந்தது. கொஞ்ச தூரத்தில் முந்தானையால் தலையை மூடி, அந்த வெயிலிலும் மற்றொரு பெண்ணிடம் ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தார்.

"அக்கா... இங்க பஞ்சர் ஒட்டற கடை எங்க இருக்குங்கா..?"

தைரியம் பெற்ற அக்கா, "இப்புடியே போனீங்கனா மேட்டுல ஒரு கட இருக்குதுங்க..." என்றார்.

பாலாஜி 'வினையே' என்று தள்ளிக் கொண்டு போகத் தொடங்க (இல்லாவிட்டால் மாமாகிட்ட வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்குமே..!), நான் பொறுமையாக நடக்கத் தொடங்கினேன். அப்போது தான் சுற்றுப்புறத்தைக் கவனிக்க...!!



விசிறி அடித்திருந்த வெயில்; உதறிப்போட்ட துணிகள் போல் கலைந்திருக்கும் மேகங்கள் துளியும் இல்லை; குறுக்கும் நெடுக்குமான மின் வயர்கள்; கேபிள் கடத்திகள்; சாலையோரப் புளிய மரங்கள்; முகம் கிடத்தி வைத்திருக்கும் மாட்டு வண்டிகள்; அச்சாணி செருகி கறுப்பு எண்ணெய் வட்டமாய்ப் புசின மரச் சக்கரங்கள்; ஒரு பக்கம் கிழிந்த இலை வாழைத் தோப்புகள்; ஓங்கி உயர்ந்து உலகளந்த தென்னைக் கூட்டங்கள்; சோளக் கருதுக் குருத்துகள்; புகையிலை மூட்டைகள்; சிதறியிருந்த கரும்புச் சக்கைகளும், பழுத்து, கழன்று காற்றில் சுற்றி விழுந்திருந்த பழுப்புத் தென்னை ஓலைகளும், செம்மண் பூமியும், காப்பாக வளர விட்டிருந்த நெருஞ்சி முள் செடிகளும், ஆடுகளும், கொஞ்சம் கிட்டத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக மடிப்புக்குள் படலம் படல்மாய் வகிடெடுத்து வளைந்து தொடர்ந்து வரும் மேற்குத் தொடர் மலைகளும், கூடவே மதியத்தின் மெளனமும்....!!!!





மேட்டில் ஏறிச் சென்றால், பஸ் ஸ்டாப்பில் ஒரு தள்ளுவண்டி இருந்தது. அதில் மோர் மிளகாய், மிளகாய்ப் பொடி தடவிய அரிந்த மாங்காய்த் துண்டுகள், டயர் மேல் கிடத்திய பானைகளில் மோர், கம்புச் சோற்றுக் கூழ், இளநீர் என்று எல்லாம் இருந்தது. அவரிடம் கேட்க ரோட்டின் அந்தப்பக்கம் கை காட்டினார். அங்கே ஒரு சரிந்த புளியமரக் கிளையில் கட்டிய கிணற்றுக் கயிறில் சில டயர்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அது ஓர் அடையாளம். சைக்கிள் ரிப்பேர் ஷாப்புக்கான அடையாளம். நன்றி சொல்லி விட்டு அங்கே நகர்ந்தால், அந்தக் கடை பலகைகளால் மூடப்பட்டு, பூட்டு தொங்கியது. பக்கவாட்டில் இருந்து சத்தம் வர, அங்கே ஒரு தாத்தா - பாட்டி இருந்தனர். தளர்ந்த உடல். நடுங்கும் குரல். ஆனாலும் கேட்ட போது, "இங்க கட இல்ல சாமி. அவங்க காலி பண்ணிட்டு போய்ட்டாங்களே... கீழாக்க போனீங்கனா ஏளூர்ல கட இருக்கும் கண்ணு..." என்று பாசம் பொழிந்த அவர்கள் அமர்ந்திருந்த திண்ணையை ஒட்டி இருந்த வீடு வெளியே பூட்டியிருந்தது.

இன்னும் தள்ளிக் கொண்டே மேற்கு நோக்கிச் செல்ல, ஒரு பள்ளம் இரங்கி ஏற, ஏளூர் வந்தது. 'எழூர்' என்று அரசாங்க மஞ்சள் போர்டு சொல்லியது. தனியார் கடை போர்டுகளோ 'ஏளூர்'!

கொஞ்சம் ஒப்பிட பெரிய ஊர் போல் தெரிந்தது. எண்ணிப்பார்க்க நூறு/ நூற்றைம்பது பேர் அப்போது கண்ணில் பட்டனர். ஒரு சைக்கிள் கடை தெரிய, அங்கே விசாரித்தோம். அவரே டி.வி.எஸ்ஸையும் பார்ப்பார் என்று சொல்ல, அவரிடம் பாலாஜியையும் வண்டியையும் தள்ளி விட்டு, கொஞ்சம் சுற்றுமுற்றும் ஊர் சுற்றிப்பார்த்தேன்.

புளியமரத்தினடியில் இக்கடை. பின்பக்கம் ஒரு சாக்கடைக் குழி. கொஞ்சம் ஓடிக் கொண்டிருந்தது. அதன் பின்புறம் வரிசையாகக் கடைகள். ஒரு சலூன். இரண்டு பேர் காத்திருந்து அன்றைய தினத்தந்தியைப் படித்துக் கொண்டிருக்க, உள்ளே ஒருவர் தலை கொடுத்திருந்தார். குறுக்காக கடந்த ஒரு தார் ரோட்டின் அந்தப்பக்கம் ஒரு பலசரக்குக் கடையில் பாட்டிலில் பொருட்கள் சிறைப்பட்டிருந்தன. உள்ளே ப்ரிட்ஜில் கலர்கள். வெளியே நீர்த் தொட்டியில் குண்டடைத்த சோடாக்கள். எதிர்ப்புறம் ஒரு கோயில். வெக்கை படர்ந்திருந்தது. பஸ் ஸ்டாப்பில் சிலர். அவர்களில் கொஞ்சம் சிலர் உட்கார்ந்திருக்க, மிச்ச சிலர் படுத்திருந்தனர். அக்கூட்டத்தில் சேராமல், குடை பிடித்த பெண்மணி. மூன்று கழுதைகள் நாங்கள் அங்கிருந்து கிளம்பும் வரை அசையாமல் அவை நின்ற போஸிலேயே நின்று கொண்டிருந்தன. மற்றொரு பஞ்சர் ஷாப் தெரிந்தது. அது கொஞ்சம் நவீனம். காற்றடிக்க ப்ரெஷர் மெஷின். பூச்சிமருந்துக் கடையும், ஏரியா மூட்டைகள் அடுக்கிய உரக்கடையும் தெரிந்தன. ஒரு மளிகைக் கடை, ஒரு டீக்கடை, ரோட்டோர மரங்கள், நின்றிருந்த சைக்கிள்கள், ஒரு என்ஃபீல்டு, பால் டின்கள் இவற்றோடு கொஞ்சம் தாண்டினால், சரேலென விரியும் பச்சை வயல்கள் என்று டிபிக்கல் தமிழ்க் கிராமமாகக் காட்சியளித்தது.



நாங்கள் கொடுத்திருந்த சைக்கிள் ஷாப்பில் சின்னப் பையன்கள் நான்கு பேர் ஒரு சைக்கிளைப் போட்டுப் படாத பாடு படுத்திக் கொண்டிருந்தனர். ஒருவன் கவிழ்த்துப் போட்டு சீட் ஸ்ப்ரிங்குகளை அழுத்திப் பிடிக்க, மற்றொருவன் செய்ன் பாடி மேலேயே ஏறி அமர்ந்து கொண்டு ஸ்க்ரூ ட்ரைவரால் திருப்பிக் கொண்டிருக்க, மற்றொருவன் டயரைச் சுற்றிக் கொண்டிருக்க, மீ இளையன் மட்டும் தள்ளி நின்று கற்றுக் கொண்டிருந்தான். எனக்குப் பார்க்கையில், மாட்டிற்கு லாடம் அடிக்கும் காட்சி நினைவுக்கு வந்தது.

அவ்வப்போது இவர் அதட்டிக் கொண்டிருந்தாலும், அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. அவரும் இப்படியெல்லாம் செய்து தான் சைக்கிள் ரிப்பேர் செய்யக் கற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

பஞ்சர் இல்லையாம். வந்த உச்ச வேகத்தில், பதினொரு மணி கொதி வெயிலில் கொப்பளித்துக் கொண்டிருந்த தார் ரோட்டின் சூடு ஏறிப் பரவி, உரசல் வெப்பத்தில் ஏற்கனவே பஞ்சர் ஒட்டிய பகுதி பிய்த்துக் கொண்டு வந்திருக்கின்றது. அதை மீண்டும் ஒட்டி, அடைத்து, காற்றை கைப்பம்பில் நிறைத்து முக்கால் மணி நேரத்தில் தயாரித்திருந்தார். இருபது ரூபாய்.

ப்ரதேசப் பொருளாதாரத்தின் மேல் நம்பிக்கை வைத்து, இருந்த மற்றொரு கடையில் ஏர் செக் செய்து, ப்ரெஷர் கருவியில் காற்றை இன்னும் கொஞ்சம் ஏற்றி விட்டோம். 'எவ்வளவு தரணுங்க..?' என்று கேட்டோம். 'ஒரு ரூபா குடுங்களேன்...' என்றார், ஏதோ புள்ளைங்க குடுக்க ஆசப்படறாங்க, தடுப்பானேன் என்ற பாவனையில்! இந்த வேலைக்கெல்லாம் இந்த ஊரில் காசு குடுக்க மாட்டாங்க. இதெல்லாம் காலெஜுக்குப் போகும் போது அவசர அவசரமாக சலூனுக்குள் நுழைந்து கிடைத்த சீப்பில் தலைவாரிக் கொண்டு, போய்க் கொண்டே இருப்பது போல்! என்று மனதிற்குப் பட்டது.

மீண்டும் பயணம் கிளம்பினோம். மற்றொரு நால்ரோடு குறுக்கிட்டது. நேராகப் போனால் சத்தி. இடது திரும்பினால் பெரிய கொடிவேரி. வலதில் மாதேஸ்வரன் மலைக்கு! நேராகப் போனோம். கொடிவேரி பெயரைப் பார்த்தவுடன் தான் மனதில் வரும் போது அங்கும் ஒரு விசிட் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி உறுதி செய்து கொண்டோம்.

ஒரு வழியாக சத்தி நெருங்கினோம். ஆனால் சத்தி நகருக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. இன்னும் நேராகச் சென்றாலே மைசூர் ஹைவேயைப் பிடித்து விடலாம் என்று சொன்னார்கள். சத்தியிலிருந்து ஒன்பது கி.மீ. பண்ணாரி கோயில். எனவே நகருக்குள் சென்று ட்ராஃபிக் இன்னல்களில் சிக்கிக் கொள்ள இச்சை இல்லாததால், கொஞ்சம் ரோடு மோசமாகவே இருந்தாலும் பரவாயில்லை என்று லெஃப்ட் கட் அடித்து நகருக்குள் செல்லாமல், நேராகவே சென்றோம். வழியில் ஒரு கல்யாண மண்டபம், ஒரு சுடுகாடு, சில வயல்கள், ரோஸ் பூசிய புதுக் கட்டிடங்கள், அரட்டைக் குழாம் ஒன்று என்று கண்ணில் பட்டனர்.

ஹைவேயை அடையும் வரை தத்தளித்து தான் தவித்து சிக்கி முக்கி, தட்டுத் தடுமாறிச் என்ற வண்டி, பின் ஜிவ்வென்று பறந்த்து.

கொஞ்ச தூரம் செல்லும் போதே ஏதோ கர்நாடகாவிற்கே சென்றது போல் உணர்வு. அத்தனை கே.எஸ்.ஆர்.டி.ஸி. பஸ்கள் கடந்தன. கோவை - மைசூர், சத்தி - மைசூர் / சாம்ராஜ் நகர் / தாளவாடி என்று கலர் பஸ்கள், ட்ராவலர்ஸ்கள், சரக்கேற்றிய லாரிகள் அத்தனையையும் பார்த்தோம். வண்டி தரைத் தளத்தில் இருந்து, மலையேறிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. ஊரே தென்படவில்லை. அங்கங்கே சில ஓட்டு வீடுகள் மட்டுமே. திடீரென 'வனச் சரகம் வரவேற்கிறது' போர்டு வந்தது. பாரஸ்ட் ரீஜன் என்று புரிந்தது. யானை படம் போட்ட போர்டு தென்பட்டது. சுற்றிலும் காடுகள்; வறண்ட காடுகள்; முட் செடிகள்; புளிய மரங்களில் புளியங்காய் அடித்துக் கொண்டிருந்தனர். அப்படி அடித்தே மூட்டைகள் நிரம்ப இறுக்கக் கட்டியிருந்தனர். பார்க்கும் போதே நாவூறியது.

(நீங்கள் புளியங்காய் சாப்பிட்டு இருக்கிறீர்களா..? அதுவும் நம் வீட்டில் போடும் புளி அல்ல. அது வேறு தினுசில் செய்யப்படும். மரப்புளியின் சுத்திகரிக்கப்பட்ட எச்சம். மரத்தில் இருந்து அடித்து..? சாலையில் அரசாங்கப் புளிய மரங்கள் வெள்ளையும் கறுப்புமாய் வர்ண அடையாளம் பூசியிருக்கும். அவற்றில் குச்சித் தொடர்போடு தொங்கிக் கொண்டிருக்கும் புளியங்காய்கள். கல்லெடுத்துக் குறி பார்த்து அடித்தாலோ, அல்லது கொத்தாய்ப் பிடித்து உலுக்கினாலோ சிந்திச் சிதறும். அவ்வையாரைக் கேள்வி கேட்ட முருகச்சிறுவன் பற்றிய பயமின்றி எடுத்து ஊதித் தட்டுவோம். பின் பிரிக்க வேண்டும். அந்தக் காம்பைப் பிடித்து மெல்ல பிரித்தால், சுவையாக ஒரு வாசம் பரவும் பாருங்கள். யப்பா...! சமையற்கட்டில் இருக்கும் புளியின் வாசம் எல்லாம் இதற்கு உறை போடக் காணாது. பிறகு அதை அப்படியே கடித்துச் சாப்பிட்டால..... ம்ம்ம்ம்ம்...!!! அதெல்லாம் அந்தக் காலம்...!!)

சரேலென ரோடு வளைகிறது; ஏறுகிறது; இறங்குகிறது; நதி மட்டும் அல்ல, பெண்ணுக்கு நெடுஞ்சாலையும் ஒப்புமை சொல்லலாம் என்று தோன்றியது.

ண்ணாரி என்பது ஊரல்ல; அது ஒரு கோயில் மட்டுமே என்று பார்த்தவுடன் நினைத்தோம். சாலையோரக் கோயில். அதனைச் சுற்றி சர்வைவல் கடைகள்; இளநீர், மோர்க் கடைகள்; ஐஸ்க்ரீம், தண்ணீர், உப்பு, விளையாட்டுச் சாமான்கள் என்று கலந்து கட்டிய கடைகள்.

ஒதுங்கியிருந்த ஒரு கட்டிடத்தின் அருகிலேயே நிறுத்தி விட்டு, மேலே விளையாடிக் கொன்டும், ஓடிக் கொண்டும், தாவிக் கொண்டும் இருந்தா முன்னோர்களைக் கொண்டு கொஞ்சம் மிரட்சி இருந்தாலும், காட்டிக் கொள்ளாமல் நகர்ந்து கோயிலுக்குள் நுழைந்தோம்.

அன்று பிரதோஷம். அடுத்த நாள் மகா சிவராத்திரி. எனவே கூட்டம் கணிசமாக இருந்தது, அந்த மதியம் 13:30லும்! வளைந்து சென்ற நான்கு வரிசைக் கம்பித் தடுப்பான்களில் மெல்ல நகர்ந்தோம்.

ஓர் அம்மா மாவிளக்கு ஏற்றி வந்தார். வெண் பஞ்சு போல் இருந்த சிறு பெண்குட்டி அடுத்த வரிசை ஆளிடம் கொஞ்சினாள். சிவப்பு ட்ராயர் பையன் அதை இழுத்து விட்டுக் கொண்டேயிருந்தான். லைட் ப்ளூ மாருதியில் வந்த ஒரு குடும்பம் அவ்வப்போது விசிறிக் கொண்டது. தேங்காய் உடைத்து உடைத்துக் கொடுத்தவர் "நகருங்..நகருங்..நகருங்..நகருங்..." என்று பீரியாடிக்காக சொல்லிக் கொண்டேயிருந்தார். பர்தா அணிந்த பெண்ணும் நின்றதை யாரும் வித்தியாசமாகப் பார்க்கவில்லை.

உச்ச வரிசைக்கு வந்து அலங்காரத்தில் இருந்த மாரியம்மனை வணங்கிக் கொண்டே வெளியே வந்து விட்டோம். கருப்பாக சாம்பல் போன்ற ஒன்றைத் தான் ப்ரசாதமாகத் தருகிறார்கள். அதை வாங்கி பிரகாரம் விட்டு வந்தவுடன் நாம் காலண்டர் தாளைத் தேடுவதைக் கண்டு, இருவர் சூழ்ந்து தயாராக வைத்திருந்த துண்டுக் காகிதங்களைக் கொடுத்து ரெண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு அடுத்த ஆளைப் பார்த்தார்கள்.

மண்டபத்தை விட்டு வெளியே குண்டத்திற்காகத் (ஏப்ரல் 4) தயார் செய்யப்ப்டும் தீ மிதிக்கப்படும் இடத்தைப் பார்த்தோம். அதைச் சுற்றிலும் கன்னடக் கொடி நிறம் பூசிய கம்பங்கள் காவலுக்கு இருந்தன. ஊஞ்சல் இருந்தது. ஆட்டி விட்டு வணங்கினோம். குண்டத்தில் இருந்து கல் உப்பைக் கொஞ்சம் எடுத்து சுவைத்துக் கொண்டு மீண்டும் மண்டபத்திற்கு வந்து இளைப்பாறு முன் பஞ்சாமிர்தம் வாங்கினோம்.

ஸ்தல வரலாறு படித்து விட்டு, கோவை, ஈரோடு செல்லும் பேருந்துகளைப் பார்த்து விட்டு, ஓரமாக குத்த வைத்திருந்த பாட்டியிடம் மோர் ரெண்டு டம்ளர்கள் குடித்து விட்டு, கொதித்த தாரில் நடந்து மீண்டும் வண்டியைக் கிளப்பு முன் சில க்ளிக்குகள் ::













மலைக்கு அந்தாண்ட கர்நாடகம்.



கோயிலில் இருந்து திரும்ப சத்திக்கு வரும் போது, காட்டுப் பகுதி அல்லவா, "இப்ப திடீர்னு புலி ஒண்ணு எதுக்க வந்தா எப்டி இருக்கும்..? யான வந்தா எப்டி இருக்கும்..?" என்று கிலியூட்ட முயன்று கொண்டே வந்தான் பாலாஜி. மேற்சொன்னவை வராமல் வேறொன்று வரப் போவதாகத் தெரிந்தது. காலையில் வண்டியில் கிளம்பியதில் இருந்தே எங்கும் டவுன்லோட் செய்யாததால், ஆள் அரவமற்ற இடம் பார்த்து கண்டுபிடிக்க ஒரு போர்டு இருந்தது. 'வன விலங்குகள் கடக்கும் பகுதி'. வழி தவறிக் கன்னட / கேரள நிலத்தில் இருந்து ஏதேனும் விலங்குகள் வந்து விட்டால், எங்கே கடக்க வேண்டும் என்பது தெரியாமல் குழம்பி விடக் கூடாது என்ற அக்கறையில், மும்மொழிக் கொள்கைப்படி 'WILD ANIMAL CROSSING'.



அங்கே போய் ரிலாக்ஸ் ஆகி விட்டு, அந்த போர்டுக்கு சத்திய ஆதாரமாக இருந்த அடையாளத்தையும் புகைப்படமாகச் சேகரித்து விட்டு மீண்டும் உற்சாகமாக முறுக்கினேன்.



ஒரு வளைவில் சில வண்டிகள் நின்று சாலையின் அந்தப்புறத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். 'என்னடா'வென்று பார்த்தால், அட, காட்டு யானைக் குடும்பம் ஒன்று குளித்துக் கொண்டிருந்தது. நம்மாட்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா..? குளிப்பது யானையோ, த்ரிஷாவோ, பூமிகாவோ, வேடிக்கை பார்ப்பது என்றால் அல்வா சாப்பிடுவது போல் தானே!

இலக்கணத்திற்கு கொஞ்சமும் மாறாமல் நாங்களும் கீழ் இறங்கிப் பார்த்தோம்.

ஒரு யானைக் கூட்டம். நீளமான தந்தத்துடன் ஒரு கொம்பன். சுற்றியும் அவரது மனைவிகள். இரண்டு குட்டிகள். வெயில் காலத்தில் காட்டுக்குள் நீர் ஆதாரங்கள் வறண்டு விட, ஊருக்குள் வந்து எல்லோரையும் மிரட்டக் கூடாது என்று விலங்குகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு டீல் போல, ஆங்காங்கே நீர் நிரம்பிய தொட்டிகள் / குளங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மோட்டர் மூலம் பம்புகள் வழியாக குபுகுபுவென நீர் பாய்ந்து கொண்டே இருந்தது. நாங்கள் அவர்களை, அவர்கள் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். 'மானங்கெட்ட பயலுவ, அடுத்தவங்க குளிக்கறத எப்புடி வேடிக்க பாக்கறானுவோ" என்று ஒன்று சொல்ல, மற்றவை 'இதை நாங்கள் வழிமொழிகிறோம்' என்று பதில் பிளிறின.



பார்த்தார்கள்...! நாங்கள் நகருகின்றதாக இல்லை என்று புரிந்து கொண்டதும், 'பொளப்பத்த மனுசனுக..' என்று முனகிக் கொண்டே, அவை குளத்தில் இருந்து வெளியேறி, மண்ணை வாரி தன் மேல் இறைத்துக் கொண்டு, எங்களுக்குப் பழிப்பு காட்டி வனத்திற்குள் செல்லத் துவங்கின.

அவை சென்ற பின் தான் ஒரு மரத்தின் அடியில் மான் ஒன்று நிற்பதைப் பார்த்தோம். இந்நேரம் வரை அது கண்ணில் படவில்லை.

மீண்டும் நகருக்குள் நுழைவதற்கு முன் இந்த படம் ஒரு ஹைக்கூவாகத் தோன்றியது. க்ளிக்கினேன்.



இந்தப் பயணப் பதிவிற்கு 'அலீம் பீடியும் அய்யனார்களும்' என்று Catchyயாகத் தலைப்பு வைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்...?

த்தி பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த ஒரு சுத்தமான வெஜ் ஹோட்டலுக்கு நுழையும் முன் அம்மா call செய்தார்கள். கோயிலுக்குப் போய் விட்டு வருவதால், சண்டே என்று பார்க்கக் கூடாது.வெஜ் தான் லஞ்ச் சாப்பிட வேண்டும் என்று கண்டிஷனாகக் கூறினார்கள். எனவே அந்த வெஜ் ஹோ.க்குச் சென்று காளான் ரைஸ் ஆர்டரிட்டு ஈட்டினோம். காளான் வெஜ் தானா என்ற சந்தேகம் இருந்தாலும் பசிக்கு முன் எடுபடவில்லை.

பெட்ரோல் அடித்து விட்டு, ஊருக்குத் திரும்பலாம் என்று செல்லும் வழியில் கொடிவேரி சென்று ஒரு விசிட் அடித்து விட்டு வரலாம் என்று ட்ராக் திருப்பி உள்ளே ஏழு கி.மீ சென்று ஓர் ஒற்றையடிப் பாதையில் ஜிங் ஜிங் என்று ஆடி ஆடி, ஒரு குட்டையோரமாகவே போய், காக்கிக் காரர் இருவர் தூங்கிக் கொண்டிருக்க, சீட் கிழித்துக் கொண்டிருந்தார் ஒருவர். அவரிடம் ஏழு ரூபாய் சீட் வாங்கி அணைக்கட்டுக்குச் சென்றோம்.

என்னவாகி விட்டது என்றால், நாங்கள் சென்றது அணையின் மறுகரை. இங்கே குளிக்க வழியில்லை. அக்கரைக்குச் என்றால் தான் குளிப்பதற்கான வசதிகள் இருக்கின்றன. செம கடுப்பாகிப் போய் விட்டது. பரிசல்காரர்கள் ஒரு ட்ரிப் அடித்து அங்கு போய் வரலாம் என்றார்கள். ஆனால் வண்டியை இங்கே விட்டுப் போய் வருவதற்குத் தயங்கினோம். அந்தக் கரைக்குப் போவதென்றாலோ, மீண்டும் வந்த 7 கி.மீ. தூரம் ரிட்டர்ன் அடித்து, சத்திக்குள் புகுந்து நகருக்குள் ஊர்ந்து கோபி செல்லும் மெய்ன் ரோட்டைப் பிடித்து கோபி நோக்கி விரைய, சத்தியிலிருந்து நான்கு கி.மீ தள்ளி இந்த அணைக்கான கட் பிரிந்து உள்ளே இரண்டு கி.மீ. வர அக்கரை வருமாம்.

பார்த்தோம். 'இது ஆவறதில்லை' என்று முடிவு செய்து, இன்னொரு நாள் முழுக்க ஆட்டம் போட வருவோம் என்று சோகமாக (இருக்காதா பின்னே..? ;-( காலுக்கெட்டிய அருவியில் குளிக்காமல் போகிறேனே..!!! காண்க :: தலைக்குள் சிக்லெட்ஸ்! பொன்முடி ) சில க்ளிக்குகள் மட்டும் அடித்து திரும்பினோம்.





இந்தப் படத்தைப் பார்க்கும் போதே அள்ளி அள்ளிக் குடிக்கணும் போல இருக்கு இல்ல..?









முதலில் இதைப் பார்த்து விட்டு 'இது தான் அருவியா'ன்னு பாலாஜி கேட்டான்.



வசர அவசரமாக மாலை மங்கிக் கொண்டு, மேலை அடிவானமெங்கும் விரிந்திருந்த பொன் மஞ்சள் போர்வை எங்களை ஜொலிக்க ஜொலிக்க மூடிக் கொண்டு வர, அந்த ஞாயிற்றுக்கிழமை அற்புதமான ஒரு நாளாக நிறைவுற்றதை மனதில் இருந்த களிப்பும், உடலில் இருந்த களைப்பும் உணர்த்திக் கொண்டே இருக்க, கடைசியாக எடுத்த இந்த இரு படங்களோடு திரும்பிக் கூட பார்க்காமல் வந்த வழியிலேயே வீடு நோக்கி விரைந்தோம்.

ஒரு பக்கம் மொட்டை வெயில்...!



மறுபக்கம் பச்சை நிழல்...!



ஆதியும் தெரியாமல் அந்தமும் அறியாமல் இரண்டிற்கும் இடையில் ஊடுறுவிச் சென்று கொண்டே இருக்கின்றது பயணம்...!

சின்னச் சின்ன ஆசை... ஆஸ்கார் வாங்கிய ஆசை...!

ல்லிகைப் பூவாய் மாறி விட ஆசை... தென்றலைக் கண்டு மாலையிட ஆசை... மேகங்களை எல்லாம் தொட்டு விட ஆசை... சோகங்களை எல்லாம் விட்டு விட ஆசை.... கார்குழலில் உலகைக் கட்டி விட ஆசை.....



என்..... கனவில்.... எவனோ..... ஒருவன்.... என்.... இரவில்.... ஒளியாய்... தெரிவான்... வான் மழை போல்.... உயிரில்..... விழுவான்.... தினம் நான்..... விரும்பும்.... வகையில்.... பொழிவான்..... என் இதழைத்.... தினம் தந்து மாயாது... இனி பாற்.... கடலில்...... அலை என்றும் ஓயாது..... வந்து நான்.... மண்ணிலே.... ஏன்.... பிறந்தேன்..... என்ற கேள்வி வாராது.. இங்கு நீ.... இருந்தால்..... ஒரு தோல்வி நேராது.....



குண்டு மல்லி ரெண்டு ரூபாய்... உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்... பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்... நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்...



நிலவிடம் வாடகை வாங்கி, விழி வீட்டினில் குடி வைக்கலாமா.... நாம் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே தகுமா...தேன் மலைத் தேக்குக்கு நீ தான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா... நான் சாய்ந்திடும் தோள் மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமா...



உள்ளே பூ பூக்குது... அடி உச்சி ஏன் வேக்குது... ஆசை பாய் போட்டது.. அட, அச்சம் தாழ் போட்டது....



படைத்தான் இறைவன் உனையே... மலைத்தான் உடனே அவனே... அழகைப் படைக்கும் திறமை முழுக்க உன் உடன் சார்ந்தது... என் விழி சேர்ந்தது... விடிய விடிய மடியில் கிடக்கும் பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி....விரைவினில் வந்து கலந்திடு... விரல் பட மெல்லக் கனிந்திடு... உடல் மட்டும் இங்கு கிடக்குது... உடன் வந்து நீயும் உயிர் கொடு...



இது இருளல்ல... அது ஒளியல்ல... இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்.... இது இருளல்ல... அது ஒளியல்ல... இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்....தலை சாயாதே.. விழி மூடாதே... சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்... பெண்ணே.... கண்ணே...பூலோகம் எல்லாமே தூங்கிப் போன பின்னே... புல்லோடு பூ பேசும் ஓசை கேட்கும் பெண்ணே... நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம்.. தாலாட்ட நிலவுண்டு.....



எழுந்து விட்டோம்... எழுந்து விட்டோம்.. இமயம் போலே... இமயம் போலே... உயர்ந்து நிற்கும் சிகரம் எல்லாம் நமக்கு கீழே... நமக்கு கீழே.... ஆணையிட்டால்... ஆணையிட்டால்... விண்ணும் கூட... விண்ணும் கூட... வந்து நிற்க வேண்டும் நமது காலின் கீழே... காலின் கீழே...



கண்டமனூரு மைதார கண்ணுல வெச்சா ஆகாதா... மைய வெக்கும் சாக்க வெச்சு கைய வெப்ப தெரியாதா... அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு சேந்து போனால் ஆகாதா... மாடப் புடிச்ச முடிச்ச கையில் மயில புடிப்ப தெரியாதா...



உலகில் ஏழல்ல அதிசயங்கள்... வாய் பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே... வான் மிதக்கும் உன் கண்கள்... தேன் தெளிக்கும் கன்னங்கள்... பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே...



http://vistaprakash.wordpress.com/a-r-rahman-childhood-pictures/

தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்.. சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்.. வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்.. மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்...



தகிட தாங்குதா........குஜாக்கு குஜ...தகிட தாங்கு தக தா......தகதிமி தகதிமி தகிட தகிட தக தகதிமி தலாங்கு தா.......தலாங்கு தக தத்தி தக தக ஜுமி தஜதுமி தலாங்கு தா....



அலை நதியின் புன்னகை.. மழை முகிலின் புன்னகை... நீ காதலின் புன்னகை... அந்த பெளர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை... உன் வருகையில் பூத்ததிந்த என் வாழ்க்கையின் புன்னகை...என் வாழ்க்கையின் புன்னகை...



நரம்புகளில் மின்னல் நுழைகிறதே... உடல் முழுதும் நிலா உதிக்கிறதே... வெண்ணிலவை இவன் வருடியதும் விண்மீனாய் நான் சிதறி விட்டேன்...



உன் பேரைச் சொன்னால் ஸ்வாஸம் முழுதும் சுஹ வாசம் வீசுதடி... உன்னைப் பிரிந்தாலே வீசும் காற்றில் வெயில் என் நெருக்கமடி....



வெள்ளாம நீதான்..வெள்ளாடு நான் தான்.. வெக்கத்த விட்டுத் தள்ளம்மா.. வெள்ளாமக் காட்ட விட்டுத்தர மாட்டா..பண்பாடு கட்டிக் காக்கும் கருத்தம்மா...



நேற்று நீ எங்கு இருந்தாய்... காற்றே நீ சொல்வாய் என்றேன்... சுவாசத்தில் இருந்ததாகச் சொல்லிச் சென்றாய்...



பள்ளிக்கூடம் போகயிலே... பள்ளப்பட்டி ஓடையிலே... கோக்குமாக்கு ஆகிப்போச்சு எனக்கு...இத குத்தமின்னு சொன்னா அவன் கிறுக்கு...



காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை சிங்கார சங்கீதம்.. முத்தாடும் நீரின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும் தவளைக்குள் ஓசை சங்கீதம்...



என் எண்ணம் என்ற ஏட்டில் நான் என்னைப் பார்த்த போது... நானே என்னை நம்பவில்லை.. எந்தன் கண்ணை நம்பவில்லை...



தங்கமே.. தமிழுக்கில்லை தட்டுப்பாடு.. ஒரு சரக்கிருக்குது...முறுக்கிருக்குது... மெட்டுப் போடு... எத்தனை சபைகள் கண்டோம்.. எத்தனை எத்தனை பகையும் கண்டோம்... அத்தனையும் சூடங்காட்டி சுட்டுப் போடு...



Thanks :: http://www.arrahman.com/v2/

வாழ்க... வாழ்கவே.... வாழ்க நீயும்... வானம் உள்ளவரை வாழ்க என்றும்... வாழ்க வாழ்கவே காதல் வாழும் வரை வாழ்கவே...



***

ஆகஸ்ட் 22, 2006-ல் எழுதிய ஒரு பதிவின் Excerpt ::


கொஞ்சம் பக்கமா India Today-ல நம்மள மாதிரி யூத் மக்களை 'உங்க ஐடியல் யாரு'னு கேட்டிருக்காங்க போல..
நிறைய பேரு சொல்லி, முதல்ல வந்தது யாரு தெரியுங்களா..? நம்ம சச்சின் தானுங்க...

சச்சின் பத்தி படிக்கும் போதோ, இல்ல ஏதாவது விஷயம் கேள்விப்படும் போதோ, நமக்கு ஒண்ணு தோணுங்க... நமக்கு எப்பவுமே, சச்சினும், ஏ.ஆர்.ரகுமானும் ஒரே மாதிரி தோணுங்க...

ரெண்டு பேரும் கொஞ்சம் குள்ளமாக இருப்பாங்க..ஆனா 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது'ங்கற மாதிரி, அவங்கவங்க ஏரியாவில Giant-ஆ தான் இருக்காங்க...

ரொம்ப முக்கியமான விஷயம் ஒண்ணு வந்து, அவங்க குரல்ங்க...ரெண்டு பேர்க்கும் ஒரே மாதிரி குரல்ங்க...எனக்கென்னமோ ரகுமான் பாடிக் கேக்கும் போதும், சச்சின் பேட்டில பேசிக் கேக்கும் போதும் 'சில்'லுனு இருக்குங்க... இப்போ கூட ரகுமானோட 'சில்லுனு ஒரு காதல்'ல ' நியூயார்க் நகரம் தூங்கும் நேரம்' தாங்க கேட்டுட்டு இருக்கங்க..என்ன வாய்ஸ்ங்க....

....

http://kaalapayani.blogspot.com/2006/08/blog-post_115625086371115296.html

.....


Get Your Own Hindi Songs Player at Music Plugin