Friday, May 02, 2008

You are in my Heart.

Teresa Teng அவர்களின் ஒரு நல்ல பாடல்.



பாடலில் கேட்கின்ற சில இசைக் குறிப்புகளும், கடைசியில் மெளனத்துடன் இவர் கண்கள் தாழ்த்தி, தலை குனிவதும் ஏதோ செய்கின்றன, மனதை! மொழி புரியாமலும் இசை மயக்கும் என்பதை மற்றுமொரு முறை நிரூபிக்கின்றது, பாடல்.

இன்று ஹர்த்தால்.



'ஸோ வாட்?' என்கிறார்கள் கேரளாக்காரர்கள்.

இது ஒரு மாதம் இருமுறை சடங்காகவோ அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வரும் விழாவாகவோ இங்கு நடத்தப்படுகின்றது. ஒரு மாதிரி இதை எல்லாம் எதிர்பார்த்திருப்பது போலவே இவர்கள் நடந்து கொள்கிறார்கள். வின்சென்ட் வான்கா எவ்வாறு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனக்கு ஏற்படும் மனப்பிறழ்வுக்கு தயாரானாரோ, அதுபோல் இம்மக்களும் ஹர்த்தாலுக்கு தயாராகவே செய்கிறார்கள். முந்தின நாள் மாலையே அரிசி, பருப்பு, உப்பு, மிளகாய் எல்லாம் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். மறு நாள் போலிஸ் பேட்ரல் அவ்வப்போது நகர்வலம் வர, கொட்டாவி விட்டுக் கொண்டு சூர்யா டி.வி.யிலோ, ஏஷியாநெட்டிலோ ஆழ்ந்து நாளைக் கழிக்கிறார்கள்.

ப்ளெய்ன் ஷ்ரட், டார்க் பேண்ட், பூப் போட்ட டை, பாலிஷ்ட் ப்ளாக் ஷூ என்று ஒப்பனைகளோடு கம்பெனிக்கு செல்ல நடந்து போகையில் அடைந்த கதவுகளோடு ஷாப்புகளையும், இறுக்க மூடிய பலகைகளோடு பெட்டிக் கடைகளையும் பார்க்க கொஞ்சம் பயம் வருகிறது. வழியில் யாராவது செங்கொடித் தோழர்களோ, காவிக் கொடி அன்பர்களோ கேட்டால், கொளுத்து வேலைக்குப் போகிறேன் என்று சொன்னால், போக விட்டு பொடனியில் அடிப்பதற்கான சாத்தியங்கள் இருநூறு சதம் இருப்பதால், பயத்துடனே நடக்க வேண்டியதாக இருக்கிறது.

நகரின் வெவ்வேறு இடங்களில் இருந்து டெக்னோபார்க் வரை வருபவர்களின் பாதுகாப்பிற்காக ஆஃபிஸ் பேருந்துகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவலரோடு வர, ஒரு மாதிரியான ஸேஃப்டியோடு வருகிறார்கள். ஐ.டி. பார்க் வாசலிலும் காக்கித் தொப்பைகள் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள்.

வெளியில் உள்ள ஹோட்டல்கள் மூடி இருப்பதால், டெக்னோபார்க்கின் உள்ளே இயங்கும் கஃபே மோஜோ, நிலா, பவானி உணவகங்களில் கூட்டம் அப்புகிறது. ஒரு மசால் தோசை, கொஞ்சம் கெட்டிச் சட்னிக்காக காலையில் ஒரு மணி நேரம் காத்திருக்க நேர்கையில், எதற்காக இந்த பந்த் என்று யோசித்தேன்.

விலைவாசி உயர்விற்காக பா.ஜ.க. நடத்தும் பந்த் என்கிறார்கள். இது போன்ற போராட்டங்களினால் எத்தனை கோடி நஷ்டம், எத்தனை பேருடைய தினப்படி வாழ்க்கை அவதிக்குள்ளாகிறது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இத்தகைய போராட்டங்கள் வலுவிழந்து வருகின்றன என்பது இவர்களுக்கு இது ஒன்றும் எறும்பு கடித்த அளவுக்கு உணர்வை கூட ஏற்படுத்தவில்லை என்பதில் இருந்து புரிகிறது. ஆறு மணிக்கு வெளியே வந்து வேஷ்டியை மடித்து விட்டு, சாயா குடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தம்மபதம் பாகம் - 5ல் புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறுவதை 'நிகழ்ச்சி' என்கிறார் ஓஷோ. அது 'செயல்' அல்ல, 'நிகழ்வு' என்கிறார். ஹர்த்தால் ஒரு செயலாக இங்கு உருப்பெற்று விட்டது என்பதும், கேரளம் ஏன் இத்தனை வளங்கள் பெற்றும், ஒரு மோசமான நிலையில் (ஒப்பீட்டில்!) உள்ளது என்பதும் உ.நெ.யாக விளங்குகிறது.

Thursday, May 01, 2008

பிச்சைக்காரனுக்கு செக்கூரிட்டி பிச்சைக்காரனே!





புளியன் பிரியாணி:



நோகாம நோம்பி கும்பிடறவன்யோ...!:



சங்கூதற வயசுல சங்கீதா..?



செகப்புனா செகப்பு... அப்படி ஒரு செகப்புண்ணே...!



ஆல் - இன் - ஆல் அழகுராஜா அல்லது மேண்டில் :



கலைனு வந்திட்டா... கொல கூட பண்ணலாமா?



புலி நக்கினாலே செத்திடுவ :



நாட்டாமை டு பங்காளி, பங்காளி டு நாட்டாமை :



நாட்டுல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலப்பா..! :

வ.வா.வின் வா.வ.

சென்ற வாரம் ஊருக்குச் சென்ற போது நடைபெறத் துவங்கிய நூல் அழகத்தில் இருந்து சில புத்தகங்கள் வாங்கி வந்தேன். அவற்றுள் இரண்டு புத்தகங்கள் பற்றி.

ஒரு காலத்தில் தூர்தர்ஷன் மட்டும் நாங்கள் பார்த்து வந்த போது ஞாயிறு என்றாலே பரவசமாக இருக்கும். சுவையான சாப்பாடு, விடுமுறை, மதியம் ஏதாவது ஒரு மாநில மொழித் திரைப்படம், மாலை ஏதேனும் ஒரு தமிழ்ப் படம் என்று பொழுது பறந்து போகும். படம் பார்த்து முடிந்ததும் இரவு உணவு முடித்து விட்டு உறங்கப் போகலாம் என்று முடிவுக்கு வரும் போது ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

அமுல் சுரபி.



சித்தார்த் ரே மற்றும் ரேணுகா சஹானே (ஆஹா! என்னவொரு வாய் கொள்ளாத சிரிப்பு இவருக்கு!) இருவரின் கலந்துரையாடலில் நிகழ்ச்சி இனிமையாக இருக்கும். சித்தப்பா , பெண் போல் இருவரும் விடாமல் பேசிக் கொண்டும், அவ்வப்போது பலப்பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவதுமாக நல்லதொரு நிகழ்ச்சி.

அமுல் ப்ராண்டின் ஒரு விளம்பர நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒரு பயனுள்ள நிகழ்ச்சியாக இருந்தது. 'Utterly Butterly Delicious' என்ற வாசகம் ஞாயிறின் இரவுகளோடு ஒன்றிப் போனது.

குஜராத்தின் ஒரு மூலையில் இருந்த ஆனந்த் என்ற கிராமத்தை இந்திய பால் வளத்தின் மையப்புள்ளியாக்கி அமுல் ப்ராண்டை நாடெங்கும் அறிமுகப்படுத்தி, ஒரு சிறந்த கூட்டுறவு உற்பத்திப் பொருளாக ஆக்கிய திரு.வர்கீஸ் குரியன் அவர்களின் வாழ்க்கை வரலாறு நூல் தான் முதலாவதாகப் படித்தது.



கேரளாவின் கள்ளிக்கோட்டையில் '21ல் பிறந்து வில் பணியாற்றி, அமெரிக்காவில் மெட்டாலஜி மற்றும் அடாமிக் ஃபிஸிக்ஸில் முதுநிலைப் பட்டம் பெற ஆசைபட்டு, பால்வளப் பொறியியலுக்கே அரசு உதவித் தொகை கிடைக்கப் பெற்று, ஆனந்தில் கைரா கூட்டுறவு பால் நிறுவனம் அமைத்து, 'விவசாயிகளே உரிமையாளர்கள்' என்ற உண்மையான கூட்டுறவுக் கொள்கையை அமல்படுத்திய ஒரு இந்தியாவில் ஓர் அரிய மனிதரின் வாழ்க்கையைக் கூறுகின்றது இந்நூல்.

ஓர் எளிய மனிதர் எவ்வாறு அரசின் இறுகிய கொள்கைகளுக்கு மத்தியிலும் ஒரு நிறுவனத்தின் சக்தியைக் கைக் கொண்டு, இலட்சக்கணக்கான ஏழைக் குடியானவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்க முடிந்தது என்ற இக்கதை நாம் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய வாழ்க்கை வரலாறு.



புத்தகம் : எனக்கும் ஒரு கனவு (I TOO HAD A DREAM)

புத்தக வகை : வாழ்வுக் கதை.

ஆசிரியர் : வர்கீஸ் குரியன்

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்.

விலை : 150 ரூ.

டுத்ததாக வின்சென்ட்.

இந்த ஓவியரின் ஓவியங்கள் அவர் இருந்த காலகட்டத்தில் யாரும் சீந்தாமல் இருந்தன. இவரது மறைவிற்குப் பிறகு அவை இன்று உலகமெங்கும் ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களின் வரவேற்பறைகளிலும், பணக்காரர்களின் ஹால்களிலும் அலங்கரிப்புக்காக தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவரது 'உருளைக்கிழங்கு உண்பவர்கள்' மற்றும் 'சூரியகாந்திப் பூ' என்ற ஓவியங்கள் இன்றும் அவரது பாண்டித்யமையை இன்றும் கூறி வருகின்றன.

அவரது குடும்பப் பெயரைச் சொன்னால் போதும். எல்லோர்க்கும் தெரியும்.

வான்கா.



வான்கா கேலரி.

இர்விங் ஸ்டோன் எழுதிய 'Lust For Life' என்ற வான்காவின் வாழ்க்கை வரலாற்றை சுரா மொழிபெயர்த்து வந்த வரலாற்று நூல். பிறந்த நாள், இடம், பெற்றோர் யார் என்பன போன்ற அந்த வரிகளோடு கண்ணையும், கவனத்தையும் கடந்து போகின்ற தகவல்களால் நிரப்பப்படவில்லை. மாறாக அவரது வாழ்வின் நிலைகளோடு நாமும் பயணப்படும் வகையில் நகர்ந்து கொண்டே இருக்கிறது, நூல்.

கலை வடிவத்தின் ஏதாவது ஒரு கூறோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வாழ விரும்புகிற வாழ்வை, இயற்கையை, அதன் கடைசிச் சொட்டு வரை ருசித்துக் குடித்த ஓவியன், அவன்.

நூலில் இருந்து சில என்னைக் கவர்ந்த பகுதிகள்.

***

"அப்பா... ஒரு வேளை நீங்க சொல்றது சரியாக இருக்கலாம்.ஆனா, ஆரம்பத்துல இயற்கை ஒரு கலைஞனையோ, ஓவியனையோ எதிர்க்கத்தான் செய்யும்" - பென்சிலைக் கையில் பிடித்தவாறு வின்சென்ட் சொன்னான்: "இயற்கையோட எதிர்ப்பை ஒரு பொருட்டா நினைக்காம பலத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாச் சேர்த்துக்கிட்டு அதை எதிர்த்துப் போராடினா மட்டுமே ஒருவனால் கடைசில வெற்றி பெற முடியும்."

***

"வின்சென்ட், நான் சொல்றதை நம்பு. ஒரு கலைஞன் தான் அடைய வேண்டிய இடத்தை மிகவும் சீக்கிரமாகவே போய் அடைஞ்சான்னு வச்சுக்கோ. அவனோட கலை அதே மாதிரி சீக்கிரமே அழிஞ்சிடும். தற்காலிக வசதிக்ககவும் - புகழுக்காகவும் முயற்சி பண்ரவனோட கலை, தற்காலிகமா மட்டுமே அவன்கிட்ட இருக்கும். உண்மையிலேயே ஒரு கலைஞனுக்கு அவசியம் வேண்டியது என்ன தெரியுமா? உண்மை, நேர்மை, மனசாட்சிக்கு விரோதமில்லால நடத்தல். நாலு பேரோட கை தட்டலையும், பாராட்டையும் பெறணும்ன்றதுக்கக சாலையில் போற கண்ட புழு, பூச்சி பின்னாடி எல்லாம் ஓடாம, ஒழுங்கா கத்துக்க வேண்டிய விஷயங்களைக் கத்து உன்னோட கலை பற்றிய அறிவை வளர்த்துக்கிறதுக்கு வழியைப் பாரு."

***

'உள்ளதை அப்படியே பார்த்து வரைவதாக இருந்தால், அது வீண். அது தோல்வியில் தான் முடியும். உள் மனதிலிருந்து புறப்பட்டு வரும் உணர்ச்சிகள் அமைதியாக, மெதுவாக படைப்பின் மீது இறங்க வேண்டும். அப்படி நடந்தால், இயற்கை தானே படைப்பிற்குப் பின்னால் வந்து நிற்கும்' - பீட்டர்ஸென் சொன்ன வார்த்தைகள் வின்சென்ட்டின் ஞாபகத்தில் வந்தன. தன் முன் மாடல் அமர்ந்திருந்தது, தன் பார்வையை திசை திருப்பியிருக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். இயற்கையின் பிடிக்குள் தன்னையே உருக்கி அர்ப்பணித்தான் வின்சென்ட். இதுவரை இயற்கையை உருக்கி தன் பிடிக்குள் கொண்டு வர முயற்சித்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான காரியம் என்று அவன் மனமே உணர்ந்தது.

***

வின்சென்டிற்கு கிடைத்தது போன்ற ஒரு தம்பி (தியோ) கிடைத்தால், கலை ஆர்வம் பெருக்கெடுத்து கட்டுகளில் இருந்து விடுபட்டு ஓடத் துடிக்கும் ஒருவனின் வாழ்க்கை தான் எத்தனை அதிர்ஷ்டவசமானது! ஆனால் வின்சென்ட் அப்படி ஒன்றும் அதிர்ஷ்டக்காரனாகத் தன் வாழ்வை வாழவில்லையே...

புத்தகம் : வான்கா

புத்தக வகை : வாழ்வுக் கதை.

ஆசிரியர் : இர்விங் ஸ்டோன் (தமிழில் : சுரா)

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

பதிப்பகம் : புதுமைப்பித்தன் பதிப்பகம் (piththan@yahoo.com)

விலை : 100 ரூ.


வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

Wednesday, April 30, 2008

இரு பிரம்மாண்டங்கள்.



ல்லாரும் கண்டு களித்த காட்சி தான். நான் கண்டு உணர்ந்த சில நுணுக்கமான புள்ளிகளை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

*'வீரம்னு நெனச்சுக்கிட்டு இருக்கறது முட்டாள்தனம்'- சொல்லி விட்டு கமல் விறுக்கென்று தூணின் பின்புறம் மறைகிறாரே! அப்போது 'முட்டாள்தனம்' குரல் கூட சட்டென்று கம்மி விடுகிறது.

*'நான் செத்துருவேன் போலிருக்கே' - கேட்டவுடன் சிவாஜியின் கண்கள் சுருங்குவதும், முகம் ஓர் அதிர்ச்சியைக் காட்டுகிறது. அதற்குப் பிறகு அவரது குரல் வருத்தத்திலும், துக்கத்திலும் சட்டென குறழ்கிறது. கைகள் ஒரு வினாடி உறைகிறது. அதிகமாகப் பேசி விட்டோமே என்று கமல் தலை குனிகிறார். ஆஹா!

*'நான் போறேன்' - என்றவுடன் பாய்ந்து சட்டையைக் கவ்வுகிறார் பாருங்கள். சிம்மமே தான்!


***

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

உதிர்ந்த முத்துக்கள்.

ன்று படித்த சில அழகான முத்துக்கள்.

In science one tries to tell people, in such a way as to be
understood by everyone, something that no one ever knew before.
But in poetry, it's the exact opposite.
Paul Dirac

Like the ski resort full of girls hunting for husbands
and husbands hunting for girls, the situation is not as
symmetrical as it might seem.
Alan MacKay

Never express yourself more clearly than you think.
Niels Bohr

To guess what to keep and what to throw away takes considerable
skill. Actually it is probably merely a matter of luck, but it
looks as if it takes considerable skill.
Richard Feynman, 1965

Examinations are formidable even to the best prepared, for
the greatest fool may ask more than the wisest man can answer.
Charles Caleb Colton, 1825

There is frequently more to be learned from the unexpected
questions of a child than the discourses of men, who talk
in a road, according to the notions and prejudices of their
education.
John Locke, 1693

I do hate sums. There is no greater mistake than to call
arithmetic an exact science. There are hidden laws of number
which it requires a mind like mine to perceive. For instance,
if you add a sum from the bottom up, and then again from the
top down, the result is always different.
Mrs. La Touche, 19th c.

He who serves two masters has to lie to one.
Portuguese Proverb

Knowledge is two-fold, and consists not only in the affirmation
of what is true, but in the negation of that which is false.
Charles Caleb Colton, 1825

If I cannot brag of knowing something, then I brag of not
knowing it.
R. W. Emerson, 1866

The first mark of intelligence, to be sure, is not to start
things; the second mark of intelligence is to pursue to the
end what you have started.
Panchatantra, c. 5th c.

The sole cause of all human misery is the inability of people
to sit quietly in their rooms.
Blaise Pascal, 1670

The shortest path between two truths in the real domain
passes through the complex domain.
Jacques Hadamard

6accdae13eff7i3l9n4o4qrr4s8t12ux.
Isaac Newton, 1676

I hope that posterity will judge me kindly, not only as to
the things which I have explained, but also as to those
which I have intentionally omitted so as to leave to others
the pleasure of discovery.
Rene Descartes, 1637

I see I have made myself a slave to Philosophy, but if I get
free of Mr. Linus's business I will resolutely bid adew to it
eternally, excepting for what I do for my private satisfaction
or leave to come out after me. For I see a man must either
resolve to put out nothing new or to become a slave to defend it.
Isaac Newton, 1677

Of all the communities available to us there is not one that
I would devote myself to, except for the society of true
searchers, which has very few living members at any time.
Albert Einstein, 1949

That, if a straight line falling on two straight lines makes
the interior angles on the same side less than two right angles,
the two straight lines, if produced indefinitely, meet on that
side on which the angles are less than two right angles.
Euclid, c. 300 B.C.

Your manuscript is both good and original. However, that which
is good is not original, and that which is original is not good.
Samuel Johnson

I have made this letter longer than usual because I lack the
time to make it shorter.
Blaise Pascal

ஃப்ளாஷ்பேக்...!

நேற் றுரை என்னுடனே நீ இருந்தாயே
சேற்றுத்தா மரை போலே சேர்ந்திருந்தாயே
காற்றனல் தனில் கற்பூரம் நீ கரைந்தாயே
தேற்றுவர் எனையாரோ தேமாவே!

- அழுகையுடன் இரா.வசந்த குமார்.

இப்பாடல் புதுமையான இரட்டுற மொழிதல் வகையைச் சேர்ந்தது.

1. சென்ற நாள் வரை என்னுடன் நீ இருந்தாயே; நெல்லும், துவரையும் (நெல் + துவரை = நேற்றுவரை; நெல் ஆதி நீடல் எனும் பண்பிற்கேற்ப நேற் என ஆனது) போன்ற உணவுப் பொருட்கள் ஒரு நாள் மட்டுமே உடலில் தங்கியிருக்கும் எனக் காட்டி எந்தவொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையே இருக்கும் என்ற தத்துவத்தை உணர்த்திச் சென்றாயே.

2.சேற்றில் மலர்ந்த தாமரை சேற்றுடன் சேர்வது போலச் சேர்ந்திருந்தாயே. நீ என்னிடம்; சகதியான சேற்றில் தாவும் மான் சிக்கி, அங்கேயே மாண்டு மண்ணாவது போல் என்னிடம் நீ இருந்தாயே;

3.சிறிதளவு வெப்பம் கொண்ட காற்றிலேயே கற்பூரம் கரைந்து விடுமா? (விடாது). ஆனால் ஒரு மிகச்சிறு தட்டலுக்கே என்னாசை அட்டையே நீ உடைந்தது ஏனோ?

4.உன்னைப் பிரிந்து வருத்தத்தில் இருக்கும் என்னைத் தேற்றுபவர் யாரோ தேமாவே (அட்டை = அட் + டை = நேர் நேர் = தேமா);


தேனையும் மாவையும் கலந்து இனிப்புப் பண்டங்கள் செய்து, உண்பது போ டால் என்ன இனிப்பு இருக்குமோ, அத்தனை போன்ற சொற்சுவையுடைய, பொருட்க...


தேனையும் மாவையும் கலந்துப் பண்டம் செய்துண்டால் தரும் இனிப்புச் சுவை போன்று இனிமையுள்ள சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்ட தீந்தமிழ் வார்த்தைகள் தன் மேல் எழுதக்கண்டு பேருவகை கொண்ட உனைக் கண்டு மனமகிழ்வு உற்ற என்னை உனைப் பிரிந்ததனால் ஆறுதல் கூறித் தேற்றுவர் எவருமில்லையே?

(16.11.95 மதியம் நிகழ்ந்த கைகலப்பில் உடைந்த அட்டையைக் (Pade) குறித்துப் பாடிய இரங்கற்பா)

***

சென்ற வாரம் வீட்டுக்குச் சென்று பழைய புத்தகங்களைக் கிளறிக் கொண்டு இருந்த போது, '94-ம் வருட அறிவொளி இயக்க டைரி கிடைத்தது. தும்மல்களுக்கு இடையே புரட்டிப் பார்த்த போது, இந்தக் கவிதை(?) கிடைத்தது.

துளியும் சென்ஸார் செய்யாமல் மேலே கொடுத்துள்ளேன்.

பத்தாம் வகுப்பு ட்யூஷனில் நடந்த ஒரு சின்ன சண்டையில் L.K.G. முதல் எக்ஸாம்க்கு என்று வைத்திருந்த பரிட்சை அட்டை உடைந்தது. அதை அவ்வளவு ராசியாக கருதி இருந்தேன். மிகவும் மனம் வருந்திப் போனேன். அப்போது எழுதிய கவிதை இது.

அந்தத் துக்கத்திலும் சிலேடை (அதாங்க டபுள் மீனிங்) வகையில் எழுதி இருக்கிறேன் என்பதும், அதை டைரியில் எழுதி வைத்து, விளக்கம் வேறு கொடுத்து, கூட என்ன காரணத்திற்காக, என்று எழுதப்பட்டது என்றும் குறித்து வைத்திருப்பதை எண்ணிப் பார்க்கையில், மனித மூளையின் செயல்பாட்டைப் பற்றி வியப்பு தான் வருகிறது.

God doesn't play dice என்று தலைவர் சொன்னது உண்மையாக இருக்கலாமோ?

PS: (L.K.G.க்கு நீ ஸ்லேட்டு உபயோகப்படுத்தாமல், பேப்பர் வெச்சு எழுதினியா? என்ன கதை விடுற? என்று கேட்கும் டவுட் பேர்வழிகளுக்கு ஒரு கதை சொல்லப்படும் பின் ஒரு பதிவில். ஆமாங்க, அதுக்கும் ஒரு ஸ்டோரி இருக்கு.)

Tuesday, April 29, 2008

நீங்கள், நான் மற்றும் நான், நீங்கள்.

ங்களை மட்டும் அனுமதிக்கிறேன். வேறு யாராவது பார்த்தால் ஏழு வருடம் புழலிலோ, வேலூரிலோ களி திங்க வேண்டி வரும். தெரிந்திருக்கும். நான் ஒன்றும் தண்ணீர்த் தொட்டி திறந்து வைக்கப் போவதில்லை; மேம்பாலம் ரிப்பன் கட் செய்யப் போவதில்லை என்று!

கொலை சார்...! சூடாக அப்படியே கழுத்தின் கோட்டில் மெல்ல வழுக்கிக் கொண்டு வரும் வகையில் ரத்தம் வழிய வேண்டும். கண்கள் துடிக்க, கைகள் காற்றில் விசிற, கால்கள் மெல்ல அடங்க செய்ய வேண்டும்.

யாரை? அவளை.

அவள் யார்? சொல்கிறேன்.

அதற்கு முன் நான் என்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும். அவளைச் சத்திக்க வேண்டும்; கடைசியாக ஒருமுறை என்று சொல்லி இருக்கிறேன். யாருக்கு என்பதை மறைத்து விட்டேன். எதற்கு சொல்ல வேண்டும்? அவளாகவே தெரிந்து கொள்ளட்டுமே..! பட், தெரிந்து கொள்ள அவள் இருக்க மாட்டாள்.

முதலில் ஷேவ் செய்து கொள்ள வேண்டும். பளிச்சென்று இருந்தல் தான் அவளுக்குப் பிடிக்கும். இனிமேல் அவளுக்குப் பிடித்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?

நுரை ததும்பி முகமெங்கும் பொங்க, முதலில் இடது கன்னத்தில் இழுத்தேன். கன்னம் பளிச்சென்று மாறியது. பொட்டுத் துளியாய் ஒரு இரத்தப் புள்ளி.

முதலில் வலது கன்னத்தை ஷேவ் செய்வது என்பது பழக்கத்தில் வந்துவிட்டது. காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்க இது நேரம் இல்லை. இருந்தாலும் சொல்லி விடுகிறேன். நான் முடிக்கும் வரை நீங்கள் யோசிக்கலாம் அல்லவா? வலது பக்கம் செல்வது என்பது எல்லோர்க்கும் இங்கு பதிந்து போய் விட்டது. ரோட்டில் செல்லும் போது வலது புறமே செல்ல வேண்டும். பேருந்துகளில் வலதுபுறமே படிக்கட்டுகள். கொஞ்சம் பேர் வலது கையில் சாப்பிடுகிறார்கள்.

முதலில் பூத்த இரத்தத் துளியைத் துடைத்து விடுவதற்குள், இடது புறமும் சில துளிகள் எட்டிப் பார்க்கின்றன. பொறுத்துக் கொள் அருண்! இந்த எரிச்சலை அனுபவி! பரபரவென சொறிந்து கொள்ள வேண்டுமென்ற அரிப்பை அடக்கிக் கொள்! உள் ஊறும் கோபத்தை அவள் மேல் திருப்பு !

டெரிகாட்டன் க்ரீன் ஷர்ட். ஃபுல் ஹேண்ட். பீட்டர் இங்லாண்ட் ப்ளாக் நிற பாண்ட். அடிடாஸ் வாட்ச். சம்பந்தமே இல்லாத டை மட்டும் தான் கட்டவில்லை. அப்பட்டமான ப்ரொபஷனல் போல் இருந்தேன். நான் ஒரு கொலை செய்யப் போகிறேன் என்று கிளி ஜோசியக்காரனே வந்து சொன்னாலும் யாரும் நம்பப் போவதில்லை.

யூனிகார்னை எடுத்துக் கொண்டேன். சரியான குதிரை சார் இது! ஈ.ஸி.ஆர் ரோட்டில் இரவுகளில் நடக்கும் ரேஸ்களில் டோல்கேட் தாண்டி மகாபலிபுரம் வரை பறக்கின்ற வண்டிகளில் இது அடிக்கடி ஜெயித்து விடும் குதிரை.

அவளைப் போல! எங்கே பார்த்தேன் முதலில்?

கிண்டி ஸ்டேஷனில்!

ஒரு காலை! சென்னையின் காலை நேரங்களை இரண்டு வகைகளாக மட்டுமே வகைப்படுத்தலாம். வேலை நாட்கள். விடுமுறை நாட்கள். மற்றபடி நாட்கள் கணக்கில் வித்தியாசமே சொல்ல முடியாது. அப்படி ஒரு செவ்வாய்க் கிழமை தான் அவளைப் பார்த்தேன்.

தாம்பரத்தில் இருந்து பீச் வரை செல்லும் மின்புயல் வந்து நின்றது. கொத்துக் கொத்தாய் இறங்கியும், ஏறியும், கால்களை மிதித்தும், பெட்டிகளை நசுக்கியும், வியர்வை கொதி வெயிலில் குளித்துக் கசங்க, விசில் அடித்தது. மெல்ல நகர்கையில் அவள் ஓடி வந்தாள்.

மஞ்சள் சுடிதார். ரோஸ் துப்பட்டா. கையில் கொஞ்சம் புத்தகங்கள். சின்னப் பொட்டு. ஒற்றைப் பின்னல். 'இந்த வண்டி மிஸ் பண்ணினால், அரை நாள் லீவ் விழுந்து விடுமே' என்ற அச்சம் அவள் கண்களில் தெரிந்தது. முடிவு செய்தேன். வலது கையில் 'ப' கம்பித் தொங்கலை இறுக்கிப் பிடித்து, இடது கையை நீட்டினேன். அரைக்கும் அரை நொடி தயங்கியவள், வலக்கையில் புத்தகங்களை இறுக்கப் பிடித்து, சட்டென்று அவளது இடக்கையை நீட்டினாள்.

அப்படியே இழுத்துக் கொண்டேன். யாருக்கும் அப்படியொரு ரோஜாப் பூ அழகியை தவிர்க்க மனம் வராததால், கொஞ்சமே கொஞ்சம் இடம் விட்டார்கள். ஒற்றை இடக்கால் உள்ளே இருக்க (யாருடைய கால்களை எல்லாம் மிதித்தாளோ? ஒரு முணுமுணுப்பு கூட கேட்கவில்லை!) வலக்கால் வெளிக் காற்றில் அலைபாய, அடையாறு சாக்கடையை (அது நதியா? சரி தான்!) கடக்கையில் மட்டும் இறுக்கக் கண்களை பூட்டிக் கொண்டாள். 'தடக்..தடக்' என ஒவ்வொரு காலாய்க் கடக்க, கொஞ்சம் உள்ளேயே இழுத்துக் கொண்டேன். புத்தகங்களை யாரோ வாங்கிக் கொள்ள மற்றொரு கை என் தோள்களை அழுத்திப் பிடித்திருக்க, மேலேயே சரிந்து இருந்தாள்.

உடனே காதல் முளைத்திருக்குமே? புரிகிறது. உங்கள் பார்வையிலிருந்து தெரிந்து கொள்கிறேன், உங்கள் கேள்வியை!

தெல்லாம், மஞ்சள் கலர் டாய்லெட்டும், கொஞ்சம் உயர ப்ளாட்பாரங்களில் ஒண்ணுக்கடித்து அடித்து, பழுப்பு சாயம் ஏறி நாற்றமெடுத்த, மூலைகளில் வெற்றிலை, புகையிலை துப்பல்கள் நிறமேற்றிய திரையரங்குகளில் ஓடும் மூன்றாம் தர தெலுங்கு டப்பிங் படங்களில் மட்டுமே சாத்தியம் ஆகும்.

காலை பத்து மணி சென்னை வெயில் கொளுத்தித் தள்ள, உள்ளாடை வரை உருகி உருகி வியர்வை பெருகி ஓட, நசநசக்கும் கூட்ட நெரிசலில் உயிர் பிழைத்திருக்கவே ஒரு 'ப' கம்பியை நம்பி அந்தரத்தில் பயணம் செய்யும் யுவனுக்கும், யுவதிக்கும் Survival எண்ணம் மட்டுமே மிச்சம் இருக்கும்.

சைதையில் துளியூண்டு மன்பதை இறங்க, கிடைத்த இடத்தில் நுழைந்து கொண்டாள். பின்பு, நுங்கம்பாக்கம் வரை நடந்த உரையாடலை நீங்கள் எல்லாக் கதைகளிலும், படங்களிலும் கொஞ்சம் ஒத்த வசனங்களோடு கேட்டிருக்கலாம். இருந்தாலும் உங்களுக்காக:

"ரொம்ப தேங்ஸ் சார்!!"

"இட்ஸ் ஓ.கே. இட்ஸ் மை ட்யூட்டி! பை த வே, நோ மோர் சார். அடுத்த ட்ரெய்ன்ல வரக்கூடாதா?"

"இல்லை. இதுல தான் கரெக்ட் டைம்க்கு காலேஜ்க்கு போக முடியும்."

"அப்ப, கொஞ்சம் சீகிரமாகவே வந்திருக்கலாம் இல்லையா?"

"எப்பவுமே முன்னாடியே வந்திடுவேன். இன்னிக்கு வீட்டில கொஞ்சம் வேலை அதிகமா வந்திடுச்சு! அதனால...."

"பஸ்ல போகலாம் இல்லையா?"

"பஸ்ல ரொம்பக் கூட்டம். அது மட்டும் இல்ல. அப்பாக்கு ரெயில்வே பாஸ் இருக்கு. அதைத் தான் நான் யூஸ் பண்ணிப் போய்க்கிட்டு இருக்கேன்."

"எந்த காலேஜ் நீங்க?"

மவுண்ட் ரோட்டின் ஒரு பூஞ்சோலையைச் சொன்னாள்.

"நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?"

"நான்..."பாக்கெட்டில் இருந்து ஒரு ஐ.டி. கார்டை எடுத்துக் காட்டினேன்.

லது கை 'ப'வைப் பிடித்திருக்க, இடது விரல்களில் மினுமினுத்த காந்த அட்டையில் என் ஜாதகமே பதிக்கப்பட்டு இருந்தது. அதைக் கண்ணுற்றவள் அதிசயித்தாள்.

"நீங்க அந்தக் கம்பெனியிலயா ஒர்க் பண்றீங்க? அதில தான் எங்க அக்கா ஹஸ்பண்டும் இருக்கார். நீங்க எந்தா ஆஃபீஸ்?"

"ராயப்பேட்டை. சர்ச் பார்க் கான்வெண்ட் கட்ல திரும்பி இராயப்பேட் ஃப்ளைஓவர் பார்த்து நடந்தோம்னா வரும்."

"அவர் அம்பத்தூர் ஆஃபீஸ்..!"

அதற்குள் நுங்கம்பாக்கம் வந்திருக்க, "பை..!" "பை..!"

மேலும் வளர்ப்பானேன்?

தினமும் கிண்டியில் இருந்து நுங்கை வரை ஒரு காதல் தடம் உருவானது. ப்ராட் கேஜா, மீட்டர் கேஜா என்று குழம்பாமல், பொன் பாதை உருவானது. எனக்கும் கவிதை எழுத வந்தது.

'நீ
இரும்புத்
தண்டவாளத்தில்,
நடந்து வரும்
ஒரு
கரும்பு'

என்று உடைத்து, உடைத்து எழுத 'கவிதை சூப்பர்' எனப் பொய்ப்பட்டது.

சத்யம், தேவி, ஈகா, அபிராமி, மாயாஜால், 6டிகிரி, பிரார்த்தனா என்று தியேட்டர்களின் மென் சீட்டுகளின் புதைகளில் புதைந்து வளர்ந்தது. சங்கீதா, தோஸா கார்னர், ஷேக்ஸ் அண்ட் க்ரீம்ஸ், முருகன் இட்லி கடை, சரவணபவன், சவேரியா என்று சுவைக்கப்பட்டது. மயிலை, பெசன்ட் நகர், வடபழனி, தி.கேணி என்று தெய்வீகமாக்கப்பட்டது. போத்தீஸ், சென்னை சில்க்ஸ், சங்கரபாண்டியன், குமரன் என்று பளபளவென செலவழிக்கப்பட்டது.

ன்று அவளை வரச் சொல்லி இருக்கிறேன். ஓர் இருட்டின் அறைக்கு. ரெஸ்டாரண்ட்டில் நமது காதலுக்கு ஒரு சமாதி. இனி உன் வழி தனி. என் வழி தனி. இனிமேல் உனக்குப் பார்த்தவனை மணக்கலாம். இரு அழகிய குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம். அவை உச்சா போக டயஃபர் மாற்றி, மதியத்தின் சீரியல்களில் மூழ்கி கண்ணீர் விட்டழ, மாலையில் வீடு திரும்பும் புருஷனுக்கு கால் அமுக்கி விட்டு, காபி கலந்து கொடுத்து, இரவுகளில் இயல்பிழந்து, தலை நரைத்து வெகு காலங்களுக்குப் பிறகு, சென்ற கோடானு கோடி ஜீவன்களில் நீயும் ஒரு புகையாகிச் செல்லலாம். அதற்கு முன் ஒரு முறை சந்திக்கலாம், வா!

வருகிறாள். இன்று. இப்போது.

நீங்களும் வரலாம் சார். தவறு இல்லை.

அதோ அங்கே உட்கார்ந்திருக்கிறாள் பாருங்கள். தெரிகிறது. உங்கள் கண்களில் அந்த ஆச்சரியம், பிரமிப்பு. எவ்வளவு அழகி அல்லவா? எனக்கும் அப்படித் தான் இருந்தது. கழிந்த
இனிப்புப் பொழுதுகளில்! கவிதை போல் சொல்கிறேன் அல்லவா? எச்சம்.

பாவி. அதே ட்ரெஸ் அணிந்திருக்கிறாள். அதைச் சொன்ன அதே நாளில் அணிந்திருந்த ஆடை.

"சொல்லு வைஜூ! எதுக்கு என்னை அவசரமா வரச் சொன்ன?"

"அருண்! எங்க வீட்டுல எனக்கு கல்யாணம் பண்ணி வெக்கிறதா முடிவு பண்ணிட்டாங்க!"

"என்ன சொல்ற? இன்னும் படிப்பே முடியல? அதுக்குள்ள எப்படி..?"

"தெரியல. நம்ம விஷயத்தை யாரோ சொல்லி இருக்காங்க. அதான் அவசரப்படறாங்க..."

"சரி..! நான் வந்து வீட்டுல பேசட்டுமா?"

"அய்யய்யோ! வேற வினையே வேணாம்..!"

"பின்ன என்ன தான் பண்றது?"

"எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்க. சிங்கப்பூர்ல இருக்கார். அடுத்த மாசம் மேரேஜ். நீங்க என்னை மறந்திடுங்க.."

"வாட் இஸ் திஸ்...? சின்ன சின்ன ஸ்டேட்மெண்ட்ல உன் வாழ்க்கையையே சொல்லிட்டா, எல்லாம் முடிஞ்சுதா? அப்ப நம்ம காதல்? சாந்தி தியேட்டர் இருட்டு மூலைகளில்..."

"ஸ்டாப் திஸ் அருண்! எல்லாம் ஓவர். எங்க வீட்டுல நம்ம காதலைச் சொன்னா உடனே எங்கப்பா, அம்மாவை உயிரோடயே பார்க்க முடியாது..! நீங்களும் என்னை மறந்திடுங்க.. ப்ளீஸ்...!"

"வாட் பிஸ்னெஸ் இஸ் திஸ்...? சிங்கப்பூர் மாப்பிள்ளைனு சொன்னதும் மயங்கிட்டயா..?"

"திஸ் இஸ் த லிமிட் அருண். நீங்க வரம்பு மீறிப் பேசறீங்க. அண்டர்ஸ்டாண்ட் மை சிச்சுவேஷன்..."

"என்னடி புரிஞ்சுக்கறது..? காதல், காதல்னு சுத்தறது. அப்புறம் டாட்டா காட்டிட்டு போறது.."

"ஓ.கே. அருண். நீங்களும் ஆவரேஜ் ஆம்பளைனு காட்டிட்டீங்க. ஃபேமிலி ப்ரெஸ்டீஜ் தான் முக்கியம்னு நான் முடிவு பண்ணிட்டேன். குட்பை..!"

ஸ்கூட்டியின் வலது புறத்தில் இவளும், இவளின் இடது புறத்தில் ஸ்கூட்டியுமாக நகர 'இரண்டையும் உதைத்தால் என?' என்ற எண்ணம் முளைத்தது. ஏறி 'FREE LEFT' போர்டின் கீழ் வலது கை காட்டி, வளைத்து மறைந்தாள்.

வளை என்ன செய்யலாம்? சொல்லுங்கள்.

அப்படியே கடித்துத் தின்றால், என்ன? வெனிலா மேல் செர்ரி க்ரீம் உருகி ஊற்றுகிறது அல்லவா, அது போல் ஒரு இரத்தாக் கோடு வழிந்தாக வேண்டும் என்று கை பரபரக்கிறது. பொறு. கூட்டம் குறையட்டும்.

அவளுடன் பேசுகிறேன். ஏதேதோ. வழக்கமான டயலாக்குகள். நீங்களும், நானும், அவளும் ஸினிமாக்களில் கேட்டுக் கேட்டுச் சலித்த வசனங்கள்.

'ஏன் இப்படி?',' வேற வழியே இல்லையா?','வீட்டில வந்து பேசட்டுமா?',' ஓடிப் போயிடலாம், வா!'..

எல்லாம் வெறும் விளையாட்டு என்று எனக்குத் தெரிகிறது. பெல்ட் இடுக்குகளில் மறைத்த கத்தி லேசாக குத்துகிறது.'எப்போது வேலை கொடுக்கப் போகிறாய்?'. பொறு. என் ஆசைக் கத்தியே. உனக்கு வெண்ணை போன்ற ஒரு கழுத்தைத் தருகிறேன். ஆசை தீர எடுத்துக் கொள்...

ருவரும் வாஷ் பேஸினுக்குப் போகிறோம். இரண்டு பேஸின்கள். ஒன்று எனக்கு. மற்றொன்று அவளுக்கு.. இல்லையில்லை அவளது சூடான இரத்தத்திற்கு... ப்ளாஸ்டிக், எலாஸ்டிக் பூ போட்ட நீலப் படுதாக்களால் எங்களை மறைத்துக் கொள்ளும் முன் எட்டிப் பார்க்கிறேன். அந்த ஃபேமிலி ருமில் வேறு யாருமில்லை. நானும், என் இனிய,அழகிய எதிரியும் மட்டும்.

குனிந்து, கண்ணாடி பார்த்து, துப்பட்டாவை இழுத்து மறைத்துக் கொண்டாள்.கள்ளி..!

மெதுவாக அருகில் நெருங்கினேன். பெல்ட் இடைவெளியில் பொதிந்த கத்தியை மெல்ல, மெல்ல எடுத்தேன். அவள் கவனிக்கவில்லை. முகம் கழுவிக் கொண்டிருந்தாள்.

'சரேல்...'

வலது தோள் பட்டையில் ஒரு சின்ன மச்சம் அவளுக்கு உண்டு. அதன் அருகு வரை ஒரு சிவப்புக் கோடு வழிந்தது.

னது வலது கை அவளது சிவந்த உதடுகளைச் சேர்த்து இறுக்கப் பிடித்திருக்க, அவளது வலது தோள் பட்டையில் ஒரு இழு, இழுத்தேன். இடது கையில் இருந்த கத்தியின் நுனி 'சுடச் சுட நனைந்தது'.

எப்படி பூ மாதிரி சரிகிறாள், பாருங்கள்.

திரடியான பாடல்கள் காற்றை நிரப்பிக் கொண்டிருந்ததால், அவளது சிறு முனகலும் கேட்க முடியாமல் ஆனது. அப்படியே சரித்து, ஒரு திட்டின் மேல் அமர வைத்தேன். சரிந்து விழுந்தாள்.

ஒழிந்தாள் த்ரோகி!

கத்தியைக் கழுவினேன். நிமிர்ந்து பார்த்தேன்.

வன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அச்சமில்லாத பார்வை. எதற்கும் கலங்காத, அதற்கும் தயாராய் வந்திருப்பவன் போல் நின்றிருந்தான். அவனது சிவந்த டீ-ஷர்ட்டில் ஒரு மென் சிவப்புத் தீற்றல். இடப்பக்கம் முழுதும் ஒரு இறகு போல் சிதறி இருந்தது.

என்ன செய்கிறான்...? குனிந்து அதைக் கழுவிக் கொள்ளத் துவங்குகிறான்.

முதலில் இந்தக் கறை போக கழுவ வேண்டும். வாரி, வாரி தண்ணீரை இறைத்துக் கொண்டேன். ஓரளவு போனதும், அங்கிருந்த ஒரு கல்லை எடுத்தேன். சோப்பு நுரைகளால் நிரம்பி வழுவழுவென இருந்தது.

ரே அடி...!

ண்ணாடி சுக்குநூறாய், இல்லை சுக்கு ஐநூறாய் நொறுங்கியது. அவன் சிதறினான். கூரான முக்கோணங்களாய், ஒழுங்கற்ற சதுரங்களாய் அவன் சிதறினான். அவன் முகம் நொறுங்கியது. அவன் உடல் நொறுங்கியது. அவன் கையில் இருந்த கல் நொறுங்கியது. அவன் முன் நீர் பாய்ந்து கொண்டிருந்த வாஷ் பேஸின் சிதறியது. அவன் அருகில் நின்று கதை கேட்டுக் கொண்டிருந்தவன் சிதறினான். அவனது வலப்புறமாய்ச் சரிந்து, சத்தியமாய்ச் செத்திருந்த இடப்புறத் தோள் பட்டையில் கடுகு மச்சத்தில் இரத்தம் தேங்கி இருந்த அவள், சிதறினாள்.

ந்தோஷம். மகிழ்ச்சி. நான் செய்த கொலையைப் பார்த்த ஒருவனும் இல்லை. அவனை உடைத்து விட்டேன். நீங்கள் பயப்படாதீர்கள் சார். உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன். வாருங்கள் போகலாம். யாரேனும் வந்து விடப் போகிறார்கள்.

"என்ன சார்.. உங்க ஷர்ட் ரைட் சைடு ஃபுல்லா ஈரமா இருக்கு..?" ரெஸ்டாரண்ட் ஓனரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், விரைகிறோம்.

"சார்... மீதி வேணாமா...?" காற்றில் உலர்ந்து உறைகிறது அவர் குரல்.

ஹேப்பி...! இனிமேல் நிம்மதியாய் உறங்கலாம். ஒரு த்ரோகி இல்லை இப்போது. கண்ணாடி வழி பார்த்த சாட்சியும் இல்லை..! உடைத்து நொறுக்கியாயிற்று...!

கன்னத்தில் காலை வெட்டுப் பட்ட காயம் அரித்தது.

தேய்த்து விட்டுக் கொண்டு கண்ணாடி பார்த்தேன்.

வன் அங்கு நின்று கொண்டிருந்தான், என்னைப் பார்த்துக் கொண்டு.

திர்ச்சியாய்...

...இருந்தது....!

***

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

Monday, April 28, 2008

பூனைகள் ஆறறிவு பெற்றிருந்தால்..!

"வ்வுலகத்தின் அதிபதி" என்று சாத்தான் வேதத்தில் குறிக்கப்பட்டுள்ளான். அவன் தேவனுக்கும், தேவனுடைய உயர்ந்த சிருஷ்டியான பூனைக்கும் பிரதான விரோதி. பூனைகளாகிய நாம் தவிர்க்க இயலாத ஓர் யுத்த களத்தில் இழுக்கப்பட்டுள்ளோம். கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் விரோதமாக யுத்தம் குமுறுகிறது. உம் சொந்த தளகர்த்தராக இவ்விருவரில் யார் இருப்பார் என்பதை நீர் தெரிந்துகொள்ள வேண்டும்.

...

சாத்தான் பலவித முறைகளில் பூனைகளை ஏமாற்றவும், தவறான வழிகளில் நடத்தவும் விழைகிறான். ஆராதனைக்குறியவர் யார் என்பதே முடிவான பிரசினை. நம் அனைவரையும் உருவாக்கின கிறிஸ்துவே எல்லா ஆராதனைக்கும் பாத்திரர் ஆவர். ஆராதிக்கப்படுகிறவரோடு நாம் நம்மை ஒன்றுபடுத்துகிறோம். உலகமனைத்திலும் சாத்தான் பூனைகளை கவர்ச்சிக்கிற முறைகளாவன:

1.தேவனைவிட்டு சுயாதீனமாயிருத்தல்
2.பிசாசுகளுக்கு கீழ்ப்படிதல்.
3."பாவ பூனையை" ஆராதித்தல்
4.அதனுடைய "உருவத்தை" ஆராதித்தல்.
5.அதனுடைய அடையாளத்தை உடலில் குறியிட்டுக் கொள்ளுதல்.

இவையாவற்றிற்கும் நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.

வாட்சன் குட்மேன்.

நன்றி: சாத்தானுக்கு விரோதமாக கிறிஸ்து.
(இலவசம். இது விற்பனைக்குறியது அல்ல.)

பைபிள் கரஸ் கோர்ஸ்.