Saturday, April 25, 2009

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்.

ழுதும்போது எந்த அளவு தற்செயல்களை நம்பியிருக்கிறோம் என்பது ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் வியப்பு தருவதாகும். அத்தனை எழுத்தாளர்களும் படைப்புத் தொழிலை மிகவும் மர்மமானதும், மிகவும் புனிதமானதும் மிகவும் அபூர்வமானதுமான ஒரு நிகழ்வு என்று கருதுவதும் இதனால்தான்.

(பக்கம் 68.)


புரியாத வார்த்தைகளில், விளங்காத எழுத்துக்கள், 'மனச்சோர்வு' என்ற வார்த்தை இல்லாமல் கதைகள் இருக்காது, அலுப்பு, சலிப்பு, சோகம், துயரம் போன்ற பொதுப்புத்தி அமங்கல வார்த்தைகள் புழங்கும் தமிழின் மற்றொரு தளத்தில் இயங்கும் எழுத்துக்கள் பற்றி மக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகளைக் களைய எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருக்கும் இப்புத்தகம், நாளை எழுதத் துவங்கும் முன் இன்று எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்றாக நினைக்கிறேன். அவை மட்டுமின்றி பொதுவாக வாசித்தல், அதிலிருந்து சாறுகளை உறிஞ்சி கொள்ளுதல் பற்றியும் எழுதியிருக்கிறார்.

அறிமுகம், அடிப்படைகள், வரலாறு, இலக்கிய இயக்கங்கள் என்ற நான்கு பகுப்புகளில் தமிழில் நவீன எழுத்திலக்கியம் பற்றி சொல்கிறார்.

எப்படிப் படிக்க வேண்டும், யாரெல்லாம் முடிசூடி ஆண்டார்கள், கண்டுகொள்ளப்படாத சக்ரவர்த்திகள், வணிக எழுத்து, இலக்கியத்தின் அவசியம் தான் என்ன, அழகியல் இயக்கப் பெயர்கள் (நவீனத்துவம், பி.ந., etc..), போலிகள், தலைமுறை தலைமுறையாகத் தாவி வரும், மாறி வரும் எழுதும் முறைகள் பற்றியெல்லாம் எளிதாக சொல்லிச் செல்கிறார்.

ஒரு விமர்சகராக சிபாரிசு செய்கின்ற சிறுகதை, நாவல், கவிதைகள், பொழுதுபோக்கு படைப்புகள் ஆகியவற்றை ஒரு முறை படிப்பது, எப்படி எழுத வேண்டும், யார் யார் எப்படி எழுதி இருக்கிறார்கள், ஒவ்வொருவரின் தனித்திறமை என்பது எது, சொல்லும் முறை எப்படி, எப்படி கவனத்தைக் கவர்வது, எழுதுபவர்களின் சூழல் அவர்களை எந்தளவில் பாதிக்கிறது என்பவற்றைப் புரிந்து கொள்ள அவசியம் என்று படுகின்றது.

பின்னிணைப்பாக கொடுத்துள்ள கலைச்சொற்கள் இலக்கிய ஊடகங்களில் இலங்கும் வார்த்தைகளை அறிமுகம் செய்து கொள்ள உதவுகின்றன.

இதுவரை நமக்கு முன் இருந்தவர்கள், இருப்பவர்கள் செய்தது என்ன என்பதை ஓரளவாவது (இது எனக்காக!) தெரிந்து கொண்டு எழுத உட்கார்வது, ஒரு தெளிவு கிடைக்க உதவும் என்பது உறுதி.

***

புத்தகம் : நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

புத்தக வகை : கட்டுரைகள்.

ஆசிரியர் : ஜெயமோகன்.

கிடைக்குமிடம் : உயிர்மை பதிப்பகம்.

பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம். நூற்கடைகள்.

விலை : 175 ரூ.

இராஜ விஷம் போலொரு முத்தம்.

க்ரில் கதவைத் தள்ளி திறக்கும் போது, கழுத்து சங்கிலியைத் தாண்ட முடியாத 'வள்' கேட்டது. ஆனந்த் கையை இறுக்கினேன். தோளில் தொங்கி கொண்டிருந்த பயணப் பையில் இருந்த துணிகள் அழுத்தின. வீடு கொஞ்சம் உள்ளே இருந்தது. இடைப்பட்ட பிரதேசத்தில் ஈஸி நாற்காலியில் கை வைத்த பனியன், நைட் பேண்ட்டில் சாய்ந்து படித்து கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தார். மேலே, ரொம்ப மேலே இருந்து கொஞ்சம் நிலா வெளிச்சம் வந்தது. வீட்டு வாசலின் நெற்றிக்கு மேலே பாம்பு போல் வளைந்திருந்த குடைக்குள் குண்டு பல்பு ஒன்று மெல்ல கூவிக் கொண்டிருந்தது. காம்பவுண்ட் எல்லைகளை ஒட்டி கிளைத்திருந்த செடிகள் இருட்டாக இருந்தன. நேற்றைய மழையின் ஈரத்தில் உற்பத்தியான 'கொரக்..கொரக்..' சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. அரை கி.மீ.யில் தள்ளி கிடக்கும் ரெயில்வே ட்ராக்குக்ள் நீளமாய் தேய்படும் ஒலிகள் கேட்டன.

"அங்கிள் நான் தான் ஆனந்த். ஸ்டீஃபன் ஃப்ரெண்ட். ஸ்டீஃபன் இருக்கானா..?" கேட்டுக் கொண்டே முன் செல்ல, தொடர்ந்தேன். அவர் எதுவும் சொல்லவில்லை. சத்தியமான வெறுப்பு முகத்தில் 'உங்களைப் பிடிக்கவில்லை' என்று அழுத்தமாகப் பதிந்து, பத்திரிக்கையில் புதைந்தார்.

கதவு திறந்தது. ஒரு பையன் வந்தான்.

"வாடா..! உள்ள வா. இது தான் உன் கஸினா..? வா.." என்றான்.

அவன் தான் ஸ்டீஃபனாக இருக்க வேண்டும். வெளியே ஓர் ஆள் இருந்ததையோ, அவருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நினைப்போ இல்லாமல் எங்களை உள்ளிழுத்துக் கொண்டான்.

வீட்டு வாசலில் ஒரு காலடி மிதி இருந்தது. அதில் இருந்த 'welcome'ஐ மிதித்து, திரைச்சீலையை விலக்கி உள்ளே போனேன். நைட் லேம்ப் உமிழும் வெளிச்சக் கீறுகள் அறையெங்கும் வியாபித்திருந்தன. ஆங்காங்கே ஆணிகள் அடித்து இரத்தம் சொட்டும் தேவகுமாரன் படங்கள், ஆணியடித்து தொங்கின. கருணை வழியும் கண்கள் கொண்ட மேரி மாதா சிலை முன் ஒரு மெழுகு கரையலாமா, அணையலாமா என்ற யோசனையில் இருந்தது. ஒரு சோபா செட் இருந்தது. அதன் வயிற்றுக்குள்ளிருந்து தேங்காய் நார்கள் பிதுங்கி வந்து, உள் ஸ்ப்ரிங்குகளைக் காட்டின. ஜன்னல்களில் கட்டியிருந்த ஸ்க்ரீன்களில் பூக்கள் எம்ப்ராய்டரி. ஸ்டேண்ட் தலை மேல் உட்கார்ந்திருந்த டயனோரா முகத்தை ஒரு திரை மறைத்திருந்தது. அதன் மேல் ரெண்டு பக்கமும் சின்ன ப்ளாஸ்டிக் பூத் தொட்டிகள் இருக்க, நடுவில் இருந்த ஒரு ப்ரேம் செய்யப்பட்ட புகைப்படம் முதுகில் ஒரு வாலால் சாய்ந்திருந்தது. அதில் ஒரு பெண் இருந்தாள். இயல்பாய், வானம் பார்த்து சிரித்து, கண்கள் அகன்ற அற்புத கணத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கழுத்தில் ஒரு சுருள் முடி பரவியிருக்க, அதன் இடைவெளிகளுக்குள் ஒரு மச்சம்.

"இது தான் என் ரூம். இங்க வாங்க." என்று கதவைத் தள்ளி ஒற்றை அறைக்குள் அமர்த்தினான். ஒவ்வொருத்தருக்கும் ஓர் அறையா? ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

அவன் படுக்கை மேல் பிறழ்ந்திருந்த தலையணைகளோடு போட்டி போட்டுக் கொண்டு பருமனான புத்தகங்கள். ஒரு மூலையில் சுருண்டிருந்த போர்வை.

"சாப்பிட்டீங்களா..?"

"ஆச்சுடா. வீட்ல இருந்து கிளம்பும் போதே சாப்ட்டு வந்திட்டோம். நீயும் சாப்டயில்லடா..?" ஆனந்த் என்னைக் கேட்டான். தலையாட்டினேன்.

"எத்தன மணிக்கு ட்ரெய்ன் வருது..?"

"நைட் ரெண்டரைக்கு..!"

"நீ இங்க படுத்துக்கோ. நானும் ஸ்டீஃபனும் மாடில படுத்துக்கறோம். லேசா தூங்கு. நல்லா தூங்கிடாத. ரெண்டு மணிக்கு எழுந்துக்கணும். பாத்ரூம் போகணுமா?" ஆனந்த் கேட்டான். ஏதோ தயக்கத்தில் வேண்டாம் என்று தலையாட்டி விட்டேன். சொன்னவுடனே போகணும் போல் இருந்தது. எரிந்த குழல் பல்பை சட்டென நிறுத்தி விட்டு, நீல சிமிட்டியை ஏற்றி விட்டு, கதவை சாத்தி அகன்றார்கள்.

எழுந்து வெளியே நோக்கும் ஜன்னல் வழியாக பார்க்க, அவர்கள் இருவரும் வெளிக்கதவைத் திறந்து செல்வதைப் பார்க்க முடிந்தது. நிச்சயம் சிகரெட்.

படுக்கையில் படுத்துக் கொண்டு போர்வையால் கண்கள் தவிர்த்து மூடிக் கொண்டு அறையைப் பார்த்தேன். அலமாரியில் புத்தகங்கள். ஏராளம். ஏராளம். கண்ணாடிக் கூண்டுகளுக்குள் சிறைப்பட்டிருந்தன. டேபிள் லேம்ப் ஒன்று இருந்தது. டேபிள் மேல் தலைகீழாக கவிழ்ந்திருந்த புத்தகம். பென்சில்கள். பேனாக்கள். சுவரில் ஒரு பெண் அழுத்தமான முதுகு காட்டி இடுப்பு வரை ஓவியமாய் நின்றாள். அவள் கைகள் அவசியம் இல்லாமல் முன்பக்கம் மறைக்க முயன்றிருந்தன. அவள் மெல்லத் திரும்பி கண்ணசைத்தது போல் இருந்தது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. சட்டென போட்டோவில் பார்த்த பெண் யாராய் இருக்கும் என்று தோன்றியது. ஸ்டீஃபன் தங்கையாக இருக்கக் கூடும். மூக்குகள் கூர்மை, 'ஆம்' என்றது. எங்கே அவள்..?

இப்போது வீட்டில் நானும், அந்த வெட்டவெளிக் கிழவரும், ஒரு நாயும், கொஞ்சம் பொருட்களும், துடிக்கும் அஜந்தா வால் க்ளாக்கும், வெகுவாய் அமைதியும் மட்டும் இருக்கின்றோம் என நினைத்தேன்.

இல்லை.

மூன்று மணி நேரத்தில் சனிக்கிழமை திறக்கிறது. கிழக்கில் விடியல் கோடுகள் விழும் போது கோவை சென்றிருக்க வேண்டும். அங்கே தலை வால் மாற்றப்பட்டு, திசை மாறி ஓடும் நீலகிரி எக்ஸ்ப்ரஸ்ஸில் காலை மேட்டுப்பாளையம் சேர்ந்திருக்க வேண்டும். பின்னிரவு ரெண்டரைக்கு ஈரோடு ஜங்ஷன் வரும். ஊரிலிருந்து அப்போது கிளம்புவது பஸ்ஸின்மையால் அசாத்தியம். எனவே இரவு ரயில் நிலைய ஒதுக்குப்புறத்தில் சிதறியிருக்கும் பல வீடுகளில், ஒன்றில் இருக்கும் தன் நண்பன் வீட்டில் இராத்தங்கி விட்டு, நேரமாய்ப் பிடிக்கலாம் என்ற திட்டம், ஆனந்துடையது. நானும் ஒட்டிக் கொண்டேன்.

பாத்ரூம் போக வேண்டும் போலவே இருந்தது. கதவைத் தாழ்ப்போட்டு போனார்களா என்று தெரியவில்லை. இழுத்துப் பார்க்கலாமா? மெல்ல தூக்கம் வந்தது. தொலை தூரத்தில் இருந்து ஊளைகள் கேட்டன. தெரு நாய்களாக இருக்கும். இறங்கி ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க வெளிக்கிழவரைக் காணவில்லை. ஈஸி நாற்காலியில் அந்த பத்திரிக்கை காற்றில் அலையடித்தது. எங்கே போயிருப்பார் கிழவர்? வாசலின் குண்டு பல்பு தெளித்த வெளிச்ச வட்டம் குறைவான எல்லைக்குள் குறுகி விட, தெரு விளக்குகள் கொஞ்சம் கொஞ்சம் பொட்டு வைத்த பூஞ்சை ஒளித் துளிகள் தவிர்த்து, மிச்சம் முழுதும் இருள் இராஜ தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது.

சட்டென மின் செத்துப் போக, கறுப்பு பாய்ந்து வந்து கவ்விக் கொண்டது. லேசாக காற்று விசிறியடித்துக் கொண்டிருந்தது. படுக்கையில் படுத்துக் கொண்டு இழுத்துப் போர்த்திக் கொண்டேன். ஏதோ ஒரு பயம் உள்ளுக்குள் உருளத் தொடங்கியது. காதுகள் மேல் ரீங்கார கொசுக்கள். கழுத்தோரம் நசநசத்தது. தூங்கலாமா, வேண்டாமா? கொஞ்ச நேரத்தில் பழகிப் போன கருமைக்குள் கடிகாரம் காண, உச்ச இணைவுக்கு பெரிய நீளமான முள் அழகிய சின்ன முள்ளை நிமிடக்கணக்கில் நெருங்கிக் கொண்டிருந்தது.

அறைக்கதவு லேசாகத் திறக்கும் சத்தம் கேட்டது. திடுக்..திடுக்.. நெஞ்சோடு, கதவின் சின்ன இடைவெளியில் கசிந்த நிலவொளியைப் பார்த்தேன்.

ஒரு பெண். அடையாளங்கள் உறுதிப்படுத்தின. கட்டிலின் அருகில் வந்து நின்றாள். ஜரிகை நனைத்த தேன் போல் ஒரு சுகந்த வாசம் அவளைச் சுற்றி மிதந்தது. நுரையீரல்கள் பெருக்க பெருக்க உள்ளுறிஞ்சிக் கொண்டேன். உற்றுப் பார்த்தாள். அசையவேயில்லை நான். இறுக்கி பிடித்துக் கொண்ட பொம்மை போல். மூலையில் ஒண்டியிருந்த நெடும் பீரோ காதைப் பிடித்துத் திருகி, திறந்து என்னென்னவோ எடுத்து, கையோடு கொண்டு வந்த பெட்டியில் அடுக்கினாள். அவ்வப்போது சிணுங்கும் சத்தம் வந்தால், என்னை பார்ப்பாள். மூச்சு விடவில்லையே நான்!

பீரோவை மூடி, பெட்டியைப் பூட்டி எடுத்து விலகிச் சென்று... இல்லை, திரும்ப வந்தாள். கட்டில் நுனியில் மெல்ல அமர்ந்து, என் முகத்தை நெருங்கினாள். முகத்தில் குபுகுபுவென்று பொங்கிக் கொண்டே வந்தது வியர்வை. இதயத்துடிப்பு தடதடவென்றானது. ட்ராக்கில் கடந்த ரயில் சத்தம் போல்.

மெல்ல போர்வையை விலக்கி, என் முகத்தை நெ..ரு..ங்..கி...ஓர் ஆழ்ந்த முத்தமிட்டாள், உதடுகளில்...!!

when i was young
we did it again

when i was young
we did it again

when i was younger
you did it first

then,

i keep you in the hall
you keep me on the wall

you come near
i come near
we come out of fear

you catch my hips,
then
you smooch my lips

you smooch my lips
you smooch my lips

we search of what thro tongues
omg, i fly by waving wings

i hear your heartbeat
you feel my heart

you pour your words in mine
i swallow them as shivering wine

i fill in yours my heat
you burn as you are meat

i smooch your lips
i smooch your lips

the sugaratic smell and taste, hmmm...
gimme now gimme now, i sure have rum

why we close eyes like mouths, baby
returning from moon, its our hobby

heaven, heaven..where are you
here, here... i am in you

oh... for me the time stopped and i feel eternity
perhaps, einstein may tell, i travel in light velocity

you smooch my lips
i smooch your lips
you and i smooch our lips
like, we have none except lips

when depart, a 'cling' sound in my throat
the shyness returns and i land by my foot

still your hands on my hips like you dont want to miss
as i want, i need, i like, i love like this, a STRONG kiss.

திருப்பூர் தாண்டி பாய்ந்து கொண்டிருந்தது ப்ளூமவுண்டன். ரிசர்வ்ட் கோச்சுகள் இருட்டாய் இருக்க, எல்லைகளில் மட்டும் துவாரபாலகர்கள் போல் சிறைப்பட்ட வெளிச்சங்கள். திசைக்கொன்றாய் திரும்பியிருந்த காற்றாடிகள் யாருக்கோ காற்று தந்தன. ஒன்றின் மேல் செருப்புகள். ஜன்னல்கள் வழி காட்சிகள் வேகமாய் மாறிக் கொண்டிருந்தன. மிடில் பெர்த்தில் போர்வை இழுத்துப் போர்த்தியிருந்த பெண்ணின் கால்களின் கொலுசுகள் மட்டும் மறைய முடியாமல், மினுமினுத்தன. கீழே செருப்புகள் ரேண்டம் கோணங்களில் திரும்பியிருந்தன. லேசான குறட்டை 'கொர்' எங்கிருந்தோ கிளம்பி வந்தது. ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. 'கூஊஊஊ..........' நீளப் பிளிறல் ஒலித்த ரயிலின் சத்தம் தீண்டாத நினைப்பில் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருந்த எனக்குள் இரண்டு கேள்விகள் மிச்சம் இருந்தன.

யார்..? யாருக்கான முத்தம் அது..?

Wednesday, April 22, 2009

சில பத்திரிக்கைகள்.

சிறுவர்மலரில் துவங்கியது. பூந்தளிர், அம்புலிமாமா, லயன்/முத்து/ராணி காமிக்ஸ்கள், மாலைமதி, விகடன், குமுதம், குங்குமம், நக்கீரன், தராசு, உங்கள் ஜூனியர், ஆத்மா, பாக்கெட் நாவல்கள் என்று பரிணாம வளர்ச்சி பெற்று இப்போது வேறு சில எல்லைகளில் பத்திரிக்கைகள் படிக்கத் துவங்கி இருக்கின்றேன். ஜனரஞ்சக தளத்தில் இருந்து வேறுபட்ட ஆனாலும் படிக்க தோதாக இருக்கின்ற அவற்றைப் பற்றி நான் படித்தவரை(கை)யில் எழுத விரும்புகிறேன்.

இவை விமர்சனங்கள் அல்லன. பத்திகளைப் படித்ததும் தோன்றியன எனலாம்.

பசுமை விகடன் - ஏப்ரல் 10, 2009.

விகடன் குழுமத்தில் இருந்து வெவ்வேறு இயல்களில் வரும் பத்திரிக்கைகளில் தற்போது உபயோகமாய் இருப்பது என்று எனக்குத் தோன்றுவது பசுமை விகடன். வேளண்மை தொடர்பான செய்திகளுடன் பற்பல உருப்படியான கட்டுரைகளுடன் உள்ளது. மாதம் இருமுறை வெளிவரும் இவ்விதழின் ஏப்ரல் 10, 2009 தேதியிட்ட பதிப்பில் உள்ளன பற்றி சில.

மார்ச் 21, உலக காடு வளர்ப்பு தினம் பற்றி தலையங்கத்தில் பா.சீனிவாசன் எழுதியுள்ளார். காட்டுத் தீ பற்றியும், அதன் காரண, விளைவுகள் பற்றியும் வருத்தப்படுகிறார்.

மரத்தடி என்ற பகுதியில் ஏரோட்டும் ஏகாம்பரம், வாத்தியார், காய்கறி கண்ணம்மா விவசாய நிலைமைகள் பற்றி அலசுகிறார்கள். கள் விற்பனை, வெங்காய விதை, பால் விலை கோரிக்கை போராட்டங்கள், நாமக்கல்லில் வெங்காய விதை மோசடி, கோவையில் வனத்துறையே சந்தன மரங்களை வெட்டுதல் பற்றி பேசியிருக்கிறார்கள்.

மகசூல் பகுதியில் கோடைக்கேற்ற வகையில் தர்பூசணி விளைச்சல் பற்றி கூறுகிறார்கள். சொட்டுநீர்ப் பாசன முறையில் தஞ்சை வேங்கராயன்குடிகாடு குரு ஏக்கருக்கு 12/10 டன் பழம் எடுத்து, அதன் சாகுபடி பாடம் எடுத்திருக்க, இராமநாதபுரம் பெருங்குளம் அப்துல் நாபீக் இயற்கை வேளாண்மை முறையில் 16 டன் ஏக்கருக்கு விளைவித்த சாகுபடி முறையை விவரித்திருக்கிறார்.

'பக்கத்து வயலில்' உலகில் நடக்கும் விவசாய செய்திகளைச் சொல்கிறார்கள். 'ஸ்வெர்ட்டியா சிரையிடா'வின் வேரில் தயாரிக்கப்படும் கஷாயம் டைப்2 டயாபடீஸை குணப்படுத்துவதும், சகாராவில் சூரிய சக்தியை மின்னாக்கும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் இறங்கியிருப்பதும், இயற்கை விளைபொருட்கள் வர்த்தகத்தில் இந்தியா 300 கோடி அளவிற்கு பங்கு பெறுவதையும் சொல்கிறார்கள்.

கால்நடை பராமரிப்பில் இயற்கை மூலிகைகளைக் கொண்டே கால்நடைகளுக்கு வரும் நோய்களை விரட்டியடிப்பதைப் பற்றி சொல்கிறார்கள். வரப்புச்சண்டையில் சட்ட ஆலோசனைகள் தருகிறார்கள். மகசூல் பகுதியில், தமிழகத்தில் அரிதாக நடக்கும் கோதுமை சாகுபடி பற்றி தெரியப்படுத்துகிறார்கள். கேரள மாநிலத்தில் வீரிய ரக கோதுமை விளைச்சலைப் பற்றிச் சொல்லும் அதே நேரம், உடுமலைப்பேட்டையில் சம்பா கோதுமை போட்டிருக்கிறார்கள்.

'இயற்கை'யில் நாடு முழுவதும் 100 இயற்கை வேளாண் மாவட்டங்கள் தேர்ந்தெடுத்து, மானியம் வழங்குவது பற்றிய பிரதமரின் அறிவிப்பையும், தெளிப்பு நீர்ப்பாசன வசதி செலவைக் குறைக்கும் முறைகள் பற்றி ஒரு விவசாயி அனுப்பியுள்ளதையும் நம்மாழ்வார் எழுதுகிறார்.

நீங்கள் கேட்டவையில் நமது கேள்விகளுக்கு, துறைக்கேற்ற வல்லுநர்களைக் கேட்டு பதில் தருகிறார்கள். மொத்த இதழிலும் மிக மிக உபயோகமான பகுதி 'வர்றாரு வல்லுநரு'. நிலம் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமலும், தவறாகச் செய்து நஷ்டமடைந்திருப்பவர்களின் கவலைகள் தீர்க்க வல்லுநர்களை அழைத்து சரிசெய்ய வேண்டிய பகுதிகள் என்ன என்று விளக்கமாகச் சொல்கிறார்கள். இந்த முறை, திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா செல்வராஜுக்கு, உப்புத் தண்ணீர் நிலத்திலும் உயர்வான வெள்ளாமை செய்யச் சொல்லித் தருகிறார் ஏங்கல்ஸ் ராஜ்.

ஜீரோ பட்ஜெட் வகுத்துக் கொடுத்த சுபாஷ் பாலேக்கரின் ஆலோசனைகள் இடம் பெறும் பகுதி 'ஏன்... எதற்கு?'. பசுமை சந்தையில், கொடுக்கல் வாங்கல் விளம்பரங்கள் வருகின்றன. கடுதாசியில் வாசகர் கடிதங்களும், பிரச்னையில் புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டை சுற்றிய கிராமங்கள் பதட்டப்படும் வகையில் எழுப்பப்படும் சாராய ஆலையால் நிலத்தடி நீர் அசுரத்தனமாக உறிஞ்சப்படும் நிலை பற்றியும் எழுதப்பட்டுள்ளது. 'இதுதாங்க கிராமம்' பகுதியில் ராலேண்சித்தி கிராமம் எவ்வாறு அண்ணா ஹஜாரேவால் பொன் விளையும் பூமியாக மாற்றப்பட்டது பற்றி தொடராக வருகிறது.

அடுத்தகட்டம் பகுதிகளில் முன்பு வந்த செய்திகளின் விளைவுகள் பற்றி ஃபாலோஅப் செய்கிறார்கள். கோவணாண்டி இந்த முறை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு பகிரங்க கடிதம் எழுதியிருக்கிறார். 'சாட்டை'யில் விவசாய சரிவுகளில் எப்படி பொருளாதார மந்தம் இருக்கிறது என்று அலசுகிறார்கள். 'தீர்வு என்ன?'வில் கங்காணி ஒவ்வொரு திங்களும் மாவட்டங்களில் நடக்கும் விவசாயிகள் குறை தீர்ப்பு நாளில் நடப்பவைகளை நேரில் கண்டு எழுதுகிறார். தேர்தல் முடியும் வரை இக்கூட்டங்கள் ஒத்தி வைக்கப்ப்ட்டுள்ளனவாம். 'தண்டோரா'வில் பயிற்சி முகாம்கள், கோர்ஸ்கள் பற்றிய அறிவிப்புகள் வருகின்றன. 'வழிகாட்டி'யில் விவசாயியாக அடுத்த நிலைக்கு முன் செல்வது எப்படி என்பது பற்றிய தயாரிப்பு வழிகள் சொல்லப்படுகின்றன.

மற்றும் பக்கங்களில் தூவப்பட்டிருக்கும் பெட்டிச் செய்திகளும் முக்கியமானவை.

தமிழகம் மற்றும் புதுவையில் ரூ.10 மற்றும் பிற மாநிலங்களில் ரூ.12க்கும் கிடைக்கின்ற இப்பத்திரிக்கை விவசாயிகளுக்கு மட்டுமின்றி, வெகு வேகமாக நகரமயமாகி வரும் நிலத்தின் பிரச்னைகள் பற்றி எல்லோரும் அறிந்து கொள்ள படிக்க வேண்டிய ஒன்று.

தன்னம்பிக்கை மாத இதழ்.

கோவை ஆர்.எஸ்.புரம்., திவான் பகதூர் சாலை, 79-ல் இருந்து மாதம் ஒரு முறை அட்டைகளுடன் சேர்த்து அறுபது பக்கங்கள் வரும் 'தன்னம்பிக்கை' என்ற மாத இதழ் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்ற கேள்விக்கு பதில் நமக்கு கேட்காமலேயே தெரியும். 1989-ல் டாக்டர் இல.செ.கந்தசாமி அவர்களால் துவக்கப்ப்ட்டு அவர்களது தள தகவலின் படி தற்போது 20K பிரதிகள் வெளிவருகின்றன.

முழுக்க முழுக்க தனிமனித மேம்பாடு, எண்ண முன்னேற்றம், நேர்மறை சிந்தனை வளர்ச்சி ஆகியவற்றையே நோக்கமாக கொண்டு போதிப்பவர்களின் கட்டுரைகளையும், சாதித்தவர்களின் பேட்டிகளையும், தன்னார்வ பயிற்சி முகாம்கள் பற்றிய செய்திகளையும், அன்னபூர்ணா விளம்பரங்களையும் தாங்கி வருகின்றது இப்பத்திரிக்கை. ஒவ்வொரு வார்த்தையும் நம்மை செயல்முறையில் தூண்ட வேண்டும் என்பதற்காக, விலை என்று சொல்லாமல், முதலீடு என்றே ரூ.15-ஐ சொல்கிறார்கள்.

அனைவரும் படிக்க வேண்டிய பத்திரிக்கை.

குமுதம் தீராநதி - ஏப்ரல் 2009.

குமுதம் குழுமத்தில் இருந்து பக்கம் முழுதும் ஆக்ரமிக்கும் குறையாடை நடிகைகள் அற்ற இதழ் இது. அரைப்பக்க, கால் நொடிக் கதைகள் இல்லாமல் விலாவரியான எழுத்துக்கள் வரும் பத்திரிக்கையான தீராநதியின் ஏப்ரல் 2009 பதிப்பில் கண்டன ::

பவுத்த அய்யனார், சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களைச் சந்தித்து கண்ட நேர்காணல் விரிவாக வந்திருக்கின்றது. வருண் கூறிய வார்த்தைகள் பற்றி பெங்களூரில் இருந்து வாஸந்தி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். 'நான் கடவுள்' பற்றி நந்தா ஒரு வித்தியாசமான மதிப்பீடு வைக்கிறார். 'அருகில் ஒளிரும் சுடர்' தொடரில் பாவண்ணன் தெரு கிரிக்கெட்டின் விதிகளில் தெரியும் ஆதிக்க அனுபவம் எழுதுகிறார். 'பெண்களும் அரசியலும்' தொடரில் சிவகாமி (ஐ.ஏ.எஸ்.?) பெண்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டியது பற்றி சொல்கிறார். எஸ். ராமகிருஷ்ணன், அவரது தளத்தில் எழுதிய காவல் கோட்டம் பற்றிய நீண்ட (சாட்டையடி) விமர்சனத்தின் இரண்டாம் பகுதி வந்திருக்கின்றது. சென்ற மார்ச் இதழில் வெளிவந்த முதல் பகுதிக்கு எதிர்வினையாக ச.தமிழ்ச்செல்வன் எழுதிய மறுப்பும் வந்திருக்கின்றது. 'பேசாப்பொருளை பேச நான் துணிந்தேன்' தொடரில் அ.மார்க்ஸ், அம்பேத்கர் பற்றி தொடர்கிறார். பா.செயப்பிரகாசம், 'முத்துக்குமாரை கொலை செய்தோம்' என்ற கட்டுரை எழுதியிருக்கிறார்.

ஜீவன் பென்னி, சுகந்தி சுப்ரமணியன், புவனராஜன், தேன்மொழி.எஸ். எழுதிய கவிதைகள் வந்திருக்கின்றன.

மது பற்றியும், போதை பற்றியும் ஜீவன் பென்னி எழுதிய கவிதைகளில்,

அரசு மதுபான விடுதி...

மாலை களினிதே துவங்கிவிட்டன
எல்லா யிருக்கைகளையும் நிரப்பிவிட்டோம்
ஒரே சொல்லாக எல்லாத் துரோகங்களையும்
நிம்மதியின்மைகளையும், வெறுப்புகளையும்
மிகுதியான பெரும் மகிழ்ச்சிகளையும்
திரும்பத் திரும்ப சொல்லிச் சொல்லி
விருமடங்கு நஷ்டங்களுடன்
உலகின் எல்லா அழுக்குகளுடனும்
குடிக்கத் துவங்குகிறோம்
பரிசுத்தமான இப்பிராந்தியை.

-யில் வரும் அந்த 'ஒரே சொல்' என்னவாக இருக்கும் என்று யோசிக்கலாம்.

கோகுலக் கண்ணன், 'காலமும் நெருப்புத் துண்டங்களும்' என்ற சிறுகதை எழுதியிருக்கிறார். 'வரவேற்பறைக்கு வந்த வானம்' தொடரின் ஆறாம் பகுதியாக தென் ஆப்ரிக்க எழுத்தாளரான Nadine Gordimerன் கதையை 'ஆறடி நிலம்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார், திலகவதி.

விலை ரூ.15.