'உள்ளூர் சரக்கு விலை போகாது'ங்கறது உண்மையாத் தான் இருக்கும் போல...!
யாரு பெத்த புள்ளயோ..! நீ நல்லா இருக்கணும் ராசா..! நீ யாரு என்னனே தெரியல..!
என்னோட வலைப்பதிவை 'Top Links'-ல போட்டிருக்கியேப்பா, உனக்குத் தான் எவ்ளோ பெரிய மனசு...! பார்த்தாலே புல்லரிக்குதுப்பா..! ஆனாலும் கொஞ்சம் பயமாத் தான் இருக்கு.., நீ போடற போஸ்ட் எல்லாம் பார்த்தா..!
"என்ன மாம்ஸ், பீச் போய்ட்டியா..? சாரிடா. என்னால வர முடியல..." அருண்.
"சரி விடு. நானும் அடையார் வழியா போக முடியல. ஏதோ ஊர்வலமாம். அதனால் மயிலாப்பூர் வழியா போய் சாந்தோம் போற ப்ளான்ல இருந்தேன். இப்போ சிட்டி சென்டர் போய் கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ண வேண்டியது ஞாபகம் வந்திடுச்சு. அதனால் ராதாகிருஷ்ணன் ரோடுல போய்க்கிட்டு இருக்கேன். சரி, நான் அப்புறம் கால் பண்றேன். வெண் புறா போலிஸ் போன்ல பேசிட்டே வர்றதைப் பார்த்துட்டார்னு நினைக்கிறேன். நீ உன்னோட ரிலேஷனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடு." சஞ்சய்.
செல்போனை அணைத்து விட்டு யு-டர்ன் அடித்து உள்ளே நுழைந்தான். பார்க்கிங் ப்ளாக்கில் ஹோண்டாவை நிறுத்தி விட்டு, நடக்கும் போது தான் கவனித்தான்.
அந்த பெப். அதே எண்.
பரபரப்பானான் சஞ்சய். உடனே செல்லினான்.
"அருண், சீக்கிரம் உன்னோட ரிலேஷனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டு, உடனே சிட்டி சென்டர் வா. அந்த பெப் இங்க நிக்குதுடா..."
"என்னடா சொல்ற...? நான் இன்னும் வடபழனியே தாண்ட முடியல. Full Traffic. நீ ஒண்ணு பண்ணு. எப்படியாவது அந்த பெப் சென்டரை விட்டுப் போகாத மாதிரி பார்த்துக்கோ. நான் எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ, வர்றேன்.." அருண்.
"நீ கவலைப்படாதே. நான் பார்த்துக்கறேன்." அணைத்தான்.
கொஞ்ச நேரம் யோசித்தபடியே நின்றவன், வெளியே வந்தான். சாலையோரமாய் இருந்த சாவி ரிப்பேர் செய்பவரைக் கேட்டு, சிறிய பூட்டு, சாவி, சின்ன சைஸ் செயின் வாங்கினான். பயந்து போய் பார்த்த அவரது பார்வையை அலட்சியத்து, உள்ளே நுழைந்து, பெப் அருகில் வந்தான்.
முன் சக்கரத்தின் பற்களுக்கு இடையே செயின் விட்டு, அதன் பிரேக் ஒயரோடு இழுத்துக் கட்டினான். பூட்டைச் சேர்த்து பூட்டி, சாவியைப் பத்திரப்படுத்தினான். எழுந்து நின்று திரும்ப, செக்யூரிட்டி அவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து, செக்யூரிட்டியைப் பார்த்து சிரித்தான், தலையைக் குனிந்து அடிக்கண்ணால் பார்த்தான். வெருண்டு போன செக்யூரிட்டி வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.
சிரித்துக் கொண்ட சஞ்சய், சென்டர் உள்ளே நுழைந்தான்.
சிட்டி சென்டர் பளபளத்துக் கொண்டிருந்தது.
ஐ-நாக்ஸ் பால்கனியில் நின்றவாறு டிஜிட்டல் டி.வி.யில் கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா. செல்லடித்து அழைத்தாள்.
"நிகில்.. இப்படி போய் டிக்கெட் புக் பண்ணனுமா? ஆன்லைன்ல பண்ணலாம்னு சொன்னா கேக்கறியா...?"
ஸ்பீக்கரை ஆன் செய்து இருந்தாள் மலர்.
"அக்கா.. என்னைத் திட்டாதீங்க. நான் உண்மையைச் சொல்லிடறேன். இங்க மலரக்கா கிள்ளறாங்க. இருந்தாலும் சொல்லிடறேன். நான் ஆன்லைன்ல பண்ணிடலாம்னு தான் சொன்னேன். அக்கா தான் வெளியே போய் தான் புக் பண்ணனும்னு சொன்னாங்க.உங்ககிட்ட சொல்லக் கூடாதுனு சொன்னாங்க..."
"ஓ... அது தான் மேட்டரா..? எனக்குத் தானே தெரியும், ஏன் மலரக்கா இன்னிக்கு வெளியே போக ஆசைப்பட்டாங்கனு... இருக்கட்டும்..."
புன்னகைத்கவாறே செல்லை அணைத்து எலிவேட்டரில் நின்று கொண்டாள். மெல்ல , மெல்ல இறங்கத் தொடங்கியது. அடுத்த ஃப்ளோரை அடைந்து நடக்கத் தொடங்கினாள்.
"ஹலோ மேடம்.. நில்லுங்க.." குரல் கேட்டு திரும்பினாள்.
சஞ்சய் வந்து கொண்டிருந்தான்.
"யார் நீங்க..?"
"என்ன.. அதுக்குள்ள மறந்திட்டீங்க. நேத்து ஸ்பென்சர்ல சண்டை போட்டு கீழே விழப் போனீங்க.. நான் தான் காப்பாத்தி.. well, i am sanjay.." கை நீட்டினான்.
சட்டென்று ஞாபகம் வந்து விட்டது. ஆனாலும் இவனைத் தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளக் கூடாது. இன்னும் நேரம் இருக்கிறது. கடவுள் இருக்கிறாரா பார்ப்போம்.
"சாரி.. தெரியல.."
"என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. சரி, என்னை விடுங்க. என் ஃபிரெண்ட் அருண். நல்ல பையன். உங்க கூட வந்தவங்க யாரு, என்னனு என்னைத் துளைச்சு எடுக்கிறான். அவங்க யாரு உங்க தங்கையா? இருக்கலாம். இருந்தாலும் உங்களைப் பார்த்தா அவ்ளோ வயசானவங்களா தெரியல. ஒரு 35 இருக்குமா, உங்க வயசு..?" அவள் தெரியவில்லை என்ற கடுப்பில் போட்டு வாரத் தொடங்கினான்.
என்னடா, ஓவராப் பேசி நாமே காரியத்தைக் கெடுத்து விட்டோமோ?
குழம்பிப் போய் அவளைப் பின் தொடர்ந்து போனான் சஞ்சய்.
CMBT பரபரப்பாக இருந்தது. ஞாயிற்றுக் கிழமையாதலால் கூட்டம் அள்ளிக் கொண்டு இருந்தது.
பார்க் செய்து விட்டு, சேலத்தில் இருந்து வர வேண்டிய வண்டிக்காக காத்திருக்கத் தொடங்கினான் அருண். ஒரு India Today வாங்கி விட்டு அதில் தலையை முழுக்கிக் கொண்டான்.
காரைப் பார்க் செய்து விட்டு, மலரும், நிகிலும் டிக்கெட் புக் செய்யும் கவுண்டரை நோக்கி நடக்கத் துவங்கினார்கள்.
நிகில் மலரின் மாமா மகன். அவளை விட பத்து வயது குறைவு.
"என்ன சந்தியாக்கா.. இன்னிக்கு என்ன அக்கா ரொம்ப கவலையா இருக்காங்க.."
குறும்புச் சிரிப்புடன் "இருக்காதா பின்ன.. வேற யாரையோ எதிர்பார்த்து நான் சொல்றதுக்கு முன்னாடியே அவசரமா ஓடிப் போய்க் கதவைத் திறந்து பார்த்தா, குரங்குக் குட்டி மாதிரி நீ ஜங்குனு வந்து குதிச்சிருப்ப.. அது தான்.. இல்ல மலர்..?" என்று கேட்டாள்.
"அப்படியா.. யாரைக்கா அப்படி எதிர்பார்த்துட்டு இருக்கீங்க..?" என்று மலரைக் கேட்டான்.
"டேய்.. நீ வாடா. வீட்டுக்குப் போகலாம். நானே உன்னை வரச் சொல்லிட்டு.. வா வீட்டுக்குப் போகலாம் வா. இந்த பேகை நீ எடுத்துக்கோ. சந்தியா , நான் வர்றேன். சென்டர் போகும் போது வீட்டுக்கு வா.."
"நிகில், அக்காவைப் பத்திரமா பார்த்துக்கோ. யாராவது பூச்சாண்டி வந்து தூக்கிட்டு போயிடப் போறான்.. மலர் Deal மறந்திடாதே.."
"சந்தியாக்கா, இன்னிக்கு ஒரே பூடகமாவே பேசிட்டு இருக்கீங்க.. இருக்கட்டும், கண்டுபிடிக்கறேன்.." என்றபடி மலரின் பேகை எடுத்துக் கொண்டான்.
"ஸ்டோரி நல்லாத் தான் இருக்கு. பட் இன்னும் ஹீரோ ஹீரோயின் லவ்வே ஸ்டார்ட் ஆகலையே.."
"ஜஸ்ட் ஒரு வாரம் டைம் கொடுங்க. எப்படியாவது அவளைக் கண்டு பிடிச்சு, உங்க முன்னாடி நிறுத்தறேன்.."
"ஓ.கே. ஜஸ்ட் one week. அவ்ளோ தான். அப்புறம் இன்னொரு விஷயம். நம்ம ரிலேஷன் ஒருத்தர் இன்னிக்கு 5 மணிக்கு அங்க வர்றார். அவரைக் கோயம்பேட்டில கரெக்டா போய்க் கூட்டிட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போ..அடையாளம் எல்லாம் எஸ்.எம்.எஸ். பண்றேன்.Bye."
"சந்தியா.. இருந்தாலும் நீ இப்படி சண்டை போடக் கூடாது. பாவம் அவன்.." என்றாள் மலர்.
"போதும் மலர். ஸ்பென்சர்ல கிளம்பினதுல இருந்து இதையே சொல்லிட்டு வர்ற. நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். உனக்கு என்ன அவன் மேல திடீர்னு ஒரு Soft Corner. அவன் என்னவெல்லாம் சொன்னான் தெரியுமா? என் பெப்பை பார்த்து, 'பிஸ்கட்' வண்டியாம். எருமை மாடு மாதிரி ஒரு வண்டியை வெச்சுக்கிட்டு அவன் நம்ம வண்டியைச் சொல்றான். அப்புறம், நம்ம வண்டியை உதைக்கறான்டி. அவனை அப்படியே விட்டுட்டு வரச் சொல்றியா? போலீஸ் வரைக்கும் போயிருப்பேன். நீ இருந்தியேனு பார்த்தேன்.."
"பாவம்.. அவனுக்கு என்ன பிரச்னையோ..? அவன் முகத்தை நான் தான் பார்த்துட்டே இருந்தேனே.."
தலைமுடியை அள்ளிப் பிரித்துக் கொண்டிருந்த சந்தியா தடாரென திரும்பினாள். படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து, தலையணையை மடியில் வைத்துக் கையை ஊன்றிக் கொண்ட மலரைப் பார்த்துக் கேட்டாள்.
"இது எப்படி நடந்துச்சு..? அவன் முகத்தைப் பார்த்திட்டே இருந்தியா..? எப்ப? எங்க? நான் கவனிக்கவேயில்லை.."
"நீ தான் Boutique-ல் நுழைஞ்சவ வெளியே வரவேயில்லையே... நான் அப்பப்போ வெளியே போய்ட்டு வந்தேன். அப்பப்போ அவனை பார்த்திட்டு தான் இருந்தேன். ஐஸ்க்ரீம் ஷாப், லேண்ட்மார்க், சென்டர் ஸ்டேஜ், எலிவேட்டர்ஸ் எல்லா இடத்திலும் அவனையே தான் பார்த்திட்டு இருந்தேன். பாவம் யாரையோ தேடிட்டு இருந்தான் போல..."
"And One more thing. இனிமேல் அவன் அப்படினு எல்லாம் சொல்லக் கூடாது. அவர்னு தான் சொல்லணும். நான் மட்டும் தான் அவன்னு சொல்லுவேன்.." சிரித்தாள் மலர்.
"எப்படி மலர் இப்படி மாறினே? ஆபிஸில இவனை.. ஓ.. ஸாரி.. இவரை விட பர்சனாலிட்டியா நிறைய பேர் ப்ரபோஸ் பண்ணினாங்க. அவங்களை கூப்பிட்டு வெச்சு, கொடுத்த அட்வைஸ்ல உனக்கு 'Queen Elizabeth'னே பேர் வெச்சிருக்காங்க. நீயா இப்படி கவுந்துட்டே.."
"அது தான் எனக்கே தெரியல சந்தியா. Its really a magic, girl. நானா இப்படினு வரும் போது தான் நெனச்சுப் பார்த்தேன். ஒரு வேளை இதுக்காகத் தான் காத்திட்டு இருந்தேன்னு நினைக்கிறேன்..."
"Are you sure? Do you love him...?"
"Yeah. Sure"
"Then, shall we play a game? இப்படி பண்ணிப் பார்க்கலாம். இன்னிக்கு ஒருத்தரைப் பார்த்திருக்கே. Good. அவன் தான் உனக்கானவன்னு நினைக்கிற. தப்பேயில்லை. இவ்ளோ பெரிய சென்னையில் அவன் ஒரு மூணு மணி நேரம் உன் கண்ணுல பட்டிருக்கான். இனிமேல் அவன் படுவானோ, மாட்டானோ தெரியாது. இரு, அடிக்காத. தலையணை பஞ்செல்லாம் பிஞ்சு வந்திடும். சொல்லி முடிச்சிடறேன். The Great Almighty அவன் தான் உனக்குனு முடிவு பண்ணியிருந்தார்னா, நீ எங்க இருந்தாலும் அவன் உன்னைத் தேடி வந்திடுவான் இல்லையா? ஓ.கே. நாமா அவனைத் தேடிப் போக வேணாம். அதாவது நாமா அவனைத் தேடற எந்த முயற்சியும் எடுக்கக் கூடாது. ஒரு Time Frame வெச்சுக்குவோம். One Month...வேணாம். One day வெச்சுக்குவோம். அதுக்குள்ள அவனா நம்மைத் தேடி வந்து, உன்னைப் பார்த்துப் பேசிட்டான்னா, கவனம், உன்னைப் பார்த்துப் பேசணும். அப்படி நடந்திச்சுனா, Believe me my friend, நானே உங்களைச் சேர்த்து வைப்பேன். என்ன சொல்ற.. Deal?"
கொஞ்ச நேரம் அமைதி நிலவியது.
"எனக்கும் இதிலே சுவாரஸ்யம் இருக்கும்னு தான் நினைக்கிறேன்.Deal."
"O.K.இப்ப போய் நிம்மதியா தூங்கு. இல்லை, உன்னைப் பார்த்தா தூங்கப் போற பொண்ணு மாதிரி தெரியல. எனக்குத் தூக்கம் வருது. நாளைக்கு சிட்டி சென்டர் போகலாம்னு இருக்கேன். ஸ்பென்சர்ல சில ஐட்டம்ஸ் கிடைக்கல. அங்க கிடைக்கும்னு ஜானு தான் சொன்னா. நீயும் வர்றியா..ம்ஹூம் உன்னைப் பார்த்தா.. அதுக்குள்ள கனவுக்குள்ள போய்ட்டியா..Good Night. Sweet Dreams..."
முந்திய இரவு அல்லது அடுத்த நாள் அதிகாலை என்று எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். அது இரண்டு மணி. வெளியே இருட்டாக இருந்தது.
"டேய், இதெல்லாம் அநியாயம். ஸ்பென்சர் போய்ட்டு வந்ததில் இருந்து எட்டு டீ குடிச்சாச்சுடா. வயிறெல்லாம் ஒரு மாதிரியாவே இருக்கு. நானே கஷ்டப்பட்டு இப்ப தான் தூக்கம் வந்து படுத்திருக்கேன். ஆமா எதுக்கு இப்படி டீ குடிச்சுக்கிட்டே இருக்கே..? தூக்கம் வரக் கூடாதுன்னா?"
"என்னடா.. உங்கம்மா மறுபடியும் கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சுட்டாளா..?"
"பாருங்க டாட். எப்ப பார்த்தாலும் மேரேஜ் பத்தியே பேசுறாங்க. நான் தான் ஆல்ரெடி சொல்லிட்டேனே, நானே ஒரு பொண்ணைப் பார்க்கணும். பார்த்தவுடனே அப்படியே ஜிவ்வுனு பறக்கற மாதிரி அழகா இருக்கணும். மாடர்னா இருக்கணும். ஆனா மங்களகரமா இருக்கணும். சுடிதார் தான் போட்டிருக்கணும். ஆனா சூப்பரா இருக்கணும். அட்லீஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ் லவ் பண்ணனும். அதுவரைக்கும் Marriage is Drainage. Who falls in are Garbage."
"போதும்டா. நீ ஒண்ணும் கவலைப்படாத. நான் பார்த்துக்கறேன் உங்கம்மாவை. நீ உன்னோட டேஸ்ட்க்கு பாரு. ஆனா கொஞ்சம் சீக்கிரம்... ஓ.கே.வா? உங்கம்மா மூட் அவுட் ஆகி இருக்கா. நான் போய் சமாளிக்கறேன். பை. டேக் கேர்.."
மீண்டும் கண் விழித்துப் பார்க்கையில், 6:10 மணி. பரபரப்பாக எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்து, டிராக் சூட் எடுத்து மாட்டிக் கொண்டு, பீச்சுக்கு கிளம்பும் போது சரியாக காலை 6:30 மணி.
சனிக் கிழமை மாலையின் அலங்காரத்துடன் ஸ்பென்சர் ப்ளாசா மின்னிக் கொண்டிருந்தது.
அருணும், சஞ்சயும் ஸ்ப்ளெண்டரில் வந்து என்ட்ரென்ஸில் நுழைந்தார்கள்.
"அருண்..! ஹோல்ட் ஆன்! நிறுத்து. நான் போய் எந்த ஃப்ளோர் போகலாம்னு பார்த்திட்டு கால் பண்றேன். நீ இந்த கூட்டத்தில கரெக்டா பார்க்கிங் ஸ்பேஸ் கண்டுபிடிச்சு நிறுத்திட்டு வந்திடு.." என்றான் சஞ்சய்.
அருண் சடாரென ஓரம் கட்ட ஃலெப்ட் பக்கமாய் ஒடிக்க, பின்புறம் 'க்ரீச்' என சத்தம். திரும்பிப் பார்த்தார்கள்.
பிங்க் பெப் சரிவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது. இரண்டு பேர் வந்திருப்பார்கள் போல் இருக்கின்றது. இடப்பக்கமாய் சாய்ந்து கால்களை ஊன்றி நிற்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.
"நாங்க லெஃப்ட்ல க்ராஸ் பண்ண வந்தது எங்க தப்பு தான். அந்தப்பக்கம் பாருங்க. ஆப்போஸிட்ல ஒரே ரஷ். அதுவும் ஜென் ரெண்டு கார் வரிசையாய் வந்ததினால தான் நாங்க லெப்ட்ல திரும்பப் பார்த்தோம். இது ஸ்டாப்பிங் ப்ளேஸ் கிடையாது. நீங்க ஸ்டாப் பண்ணி இருக்கவே கூடாது. ஓ. கே. ஸ்டாப் பண்ண ட்ரை பண்றீங்க். அப்ப என்ன பண்ணி இருக்கணும். பின்னாடி யாராவது வர்றாங்களானு பார்த்திருக்கணும். அதுவும் செய்யல. ஹெல்ப் பண்ண வர்றவரையும் தடுக்கறீங்க..."
பொரிந்தாள் அவள்.
'ஆமா, அவன் எதுக்கு ஹெல்ப் பண்றான்னு தெரியாதா..' முனகினான் அருண். தப்பு தன் பேரில் தான் என்று தெரிந்திருந்ததால், அமைதியாக முனகினான்.
பின், ஸ்ப்ளெண்டரை ஸ்டார்ட் செய்து, செக்யூரிட்டி துணையுடன் பார்க்கிங் ஸ்பாட்டுக்குச் சென்று நிறுக்தினான். நிறுத்தி விட்டு வெளியே வருகையில், 'சரக்'.
"அதெப்படி சும்மா sorry கேட்டா விட்ருவோமா? இதே பசங்க தெரியாம வந்து இடிச்சுட்டா கூட, ஊரையே கூட்டிடறீங்களே. இதை சும்மா விடப் போறதில்ல. செக்யூரிட்டி.." விடுவதில்லை இதை என்று முடிவே செய்திருந்தான்.
"சார்.. விடுங்க.. இனிமேல் இந்தப் பக்கம் வர்றதில்லைனு முடிவே பண்ணிடறேன். ஓ.கே.வா..?"
"எனக்கென்ன இதில் ஓ.கே.? செக்யூரிட்டி, இந்த மாதிரி பிஸ்கட் வண்டியெல்லாம் ஸ்ப்ளெண்டர் பக்கமா நிறுத்த எப்படி allow பண்றீங்க.."
பிஸ்கட் வண்டி என்று சொன்னதில் அவள் முகம் சுருங்கி போனதில், அவனுக்கே கொஞ்சம் வருத்தமாகி விட்டது. கொஞ்சம் ஓவராகத் தான் சொல்லி விட்டோமா?
"Leave it" என்றபடி திரும்பி நடந்தான்.
ப்ளாஸாவின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். என்ட்ரென்ஸைக் கடக்கையில் யாரோ தன்னை உற்றுப் பார்ப்பது போல் உணர்ந்தான். சடாரென இடதுபுறம் திரும்பிப் பார்க்க, இரு கண்கள். இரு கண்கள் மட்டுமே தெரிந்தன.
மஞ்சள் துப்பட்டாவில் முழுவதுமாக மூடிய முகம். கண்கள் மட்டும் வெளியே தெரிந்தன. அவனையே உற்றுப் பார்ப்பது நன்றாகவே உணர்ந்தான். வேறு எதையும் அவனால் பார்க்க முடியவில்லை. எங்கே இருக்கிறோம், யாருடன் இருக்கிறோம், இது என்ன நேரம், இது என்ன ஆண்டு எல்லாம் மறந்து போனது. நினைவுகள் அப்படியே உறைந்து போயின. எங்கோ சுழலில் சுழல்வது போல் இருந்தது.
"எக்ஸ்க்யூஸ் மீ.. கொஞ்சம் மூவ் பண்றீங்களா.." குரல் எங்கோ, எப்போதோ கேட்பது போல் கேட்டது. யாரோ மெல்ல தள்ளி விட்டு செல்ல, தடுமாறி விழப் பார்த்தான். அருகில் இருந்த கதவை பிடித்துக் கொள்ள நிலை நின்றான். அந்த வாசலில் அமர்ந்தே விட்டான்.
நினைவுகள் மெல்ல மெல்ல திரும்பின. வெளியே அடித்துக் கொண்டிருந்த சென்னையின் வெப்பக் காற்றும், பிளாசாவின் உள்ளிருந்து வந்து கொண்டிருந்த ஜில் காற்றும் , மாறி மாறி நினைவுகள் சென்று கொண்டிருந்த அவனது நிலையை ஒத்திருந்தன.
தடாரென அந்தக் கண்கள் இருந்த திசையைப் பார்த்தான். அவள் இல்லை.
சுற்று முற்றும் தேடிப் பார்த்தான். இல்லை.
செல் மினுக்கியது. சஞ்சய்.
"அருண், எங்கடா இருக்க. பார்க் பண்ணிட்டு வர்றதுக்கு இவ்ளோ நேரமா? பார்க் போய் பார்க் பண்ணப் போய்ட்டியா?"
"வேறெங்கே இருக்கப் போறேன்? லேண்ட்மார்க் வந்திடு. செம ஜாலியா இருக்கு. ஒரு இடத்துல நின்னு முழு புக்கையுமே படிச்சிடறாங்க. நமக்கு எதுக்கு புக் படிக்கிற வேலை எல்லாம். சிடி ஸ்டால் பக்கமும், புக்ஸ் பக்கமும் சுத்திக்கிட்டே இருக்கேன். சும்மா சொல்லக் கூடாதுடா. பொண்ணுங்களுக்கு படிக்கிற ஆர்வம் அதிகமாகிட்டே போகுது. நமக்கும் நல்லது தான். அதிலயும் ஒரு கையில கரடி பொம்மை வெச்சிக்கிட்டு, ஹாரி பாட்டர் புக் வாங்கியிருக்கிற பொண்ணு போட்டிருக்கிற டீ ஷர்ட் என்ன சொல்லுதுனா..."
"Stop it, Man. நீ அங்கயே இரு. நான் உடனே வர்றேன்." செல்லை கட் செய்து வைத்தான்.
லேண்ட்மார்க் புத்தகங்களாலும் கை படாத சி.டி.களாலும் நிரம்பி இருந்தது. பின்னிசையாக Bryan Adams.
"உண்மையா தான் சொல்றியாடா? எனக்கு அந்த மாதிரி feeling எல்லாம் வர்றதில்லடா. எனக்கு வேற feeling எல்லாம் வேற. அப்படி தான் போன வாரம் டெல்லி போகும் போது, ஜி.டி.ல அப்பர் பெர்த்ல..."
"சஞ்சய். This is limit. இது வேற மாதிரிடா. "
"புரியுது. இப்ப என்ன? அந்தப் பொண்ணை, ஓ சாரி, அந்தக் கண்களை இந்தப் ப்ளாசாவில எங்கனு தேடிக் கண்டுபிடிக்கணும். அவ்ளோ தானே. விடு கவலைய. எங்க போயிருப்பாங்க. இங்க பொண்ணுங்க போகற மாதிரி இருக்கற ஷாப்ஸே கொஞ்சம் தான். மியூசிக் வேர்ல்டு போகலாம். காஃபி ஷாப் போகலாம். வேற ஏதாவது க்ளாத் ஷாப் போகலாம். கிளம்பு."
எலிவேட்டர்களில் மேலும் கீழும் பிரயாணித்தார்கள். ஆங்காங்கே பொறியும் சோளப் பொறி வாங்கிக் கொறித்தார்கள். காஃபி ஷாப்பில் Cold Coffee உறையும் வரை காத்திருந்து குடித்தார்கள். துணிக்கடைகளில் நுழைந்து புடவைகளைத் தடவிப் பார்த்து விற்பனையாளரின் கேள்விப் பார்வைக்கு அசடு வழிந்தார்கள். Music World-ல் எம்.எஸ். கலெக்க்ஷன் பட்டியலைப் படித்துப் பார்த்தார்கள். லேண்ட் மார்க்கில் சி.டி.க்களை சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். புத்தகங்களின் பக்கங்களை விசிறி அடித்தார்கள்.
"என்னடா.. எங்கயாவது பார்த்தியா?"
உதட்டுப் பிதுக்கலையே பதிலாய்க் கொடுத்தான் அருண்.
இரவு 8:30.
"அருண்.. விடுடா. அவளை மறுபடியும் பார்க்கணும்னா எப்படியும் பார்ப்போம். இப்ப கிளம்பலாம். வா. டைம் ஆச்சு." என்றான் சஞ்சய்.
"இன்னொரு முறை Music World போய்ப் பார்த்திட்டு வந்திடுவோமா..?" பரிதாபமாகக் கேட்டான் அருண்.
அவன் ஸ்ப்ளெண்டருக்கு முன்னால் அந்த பெப் தலை சாய்த்து நின்று கொண்டிருந்தது.
சோகம், அலைச்சல், எரிச்சல், பைக் எசகு பிசகாக நின்று கொண்டிருக்க எடுக்க முடியாத நிலைமை எல்லாம் சேர்ந்து வர, ஒரே உதை விட்டான் அருண்.
"என்ன பண்றீங்க? எவ்ளோ தைரியம் இருந்தா எங்க பெப்-ஐ இப்படி பண்ணுவீங்க.." அவளே தான். வேகமாக வந்து கொண்டிருந்தாள்.
இந்த மூஞ்சியைப் பார்த்திட்டதால தான் இப்படி ஆகி விட்டது. வார்த்தைகளில் காரம் ஏற ஆரம்பித்தது.
"உங்களை யாரு இங்க நிறுத்தச் சொன்னது? இப்ப நான் எப்படி என்னோட பைக் எடுக்கறது..?"
"அதுக்காக இப்படி தான் பண்றதா? Tribal Dog " என்று கடைசியாக முனகினாள்.
"என்ன சொன்னீங்க? Come Again" பரபரத்தான் அருண்.
"Nothing..".
பிறகு செக்யூரிட்டி வந்து சண்டையைப் பிரித்து சமாதானப் படுத்தி வைக்க, அவள் பெப் எடுத்தாள். அதற்குள் அவளது செல் அடிக்க ஆரம்பித்தது.
வேண்டுமென்றே பாதி வழியில் நிறுத்தி விட்டு, செல்லை எடுத்தாள்.
" ஆமாம்டா.. இங்க ஒரு சின்ன பிரச்னை. அதே பார்ட்டி தான். வரும் போது பிராப்ளம் பண்ணினானு சொன்னேன்ல அதே தான். இப்ப ஒண்ணும் இல்லை. நீ அங்கயே வெய்ட் பண்ணு. நான் வந்துகிட்டே இருக்கேன்..."
அவள் மெதுவாக பெப் எடுத்து, ஸ்டார்ட் செய்து வெளியேறினாள்.
பின் அவனும் ஸ்ப்ளெண்டர் எடுத்து வெளியே வர, அதுவரைக்கும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சஞ்சய்,
"என்னடா இப்படி நடந்துக்கற. பொண்ணுங்க கிட்ட இப்படி Harsh-ஆ நடந்துகிட்டேனு வை. ஒண்ணும் நடக்காது.."
தூரத்தில் அந்த பெப் நகர்ந்து கொண்டிருந்தது. பெப்பின் பின் சீட்டில்...
பின் சீட்டில்..
அதே மஞ்சள் சுடிதார்.
"டேய்.. அவ தான்டா.. அந்த பெப் பின்னாடு உட்கார்ந்துகிட்டு போறாடா. My God. நான் அந்தப் பொண்ணு கிட்ட அப்படி நடந்துகிட்டேனே. அவளோட friend போல இருக்குடா.."
"அந்தப் பொண்ணா..? அவளைத் தான் இவ்ளோ நேரமா தேடிட்டு இருந்தியா..? நான் வரும் போதே பார்த்துட்டேனே.."
"எப்படா பார்த்த.. நான் கவனிக்கவே இல்லை.."
"நீ தான் சண்டை போடறதுலயே Busy-யா இருந்தியே.."
அருண் பார்த்துக் கொண்டேயிருக்க, அந்த மஞ்சள் சுடிதார் திரும்பியது. இப்போதும் வெறும் கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தது. அவனையே பார்த்தது. கண்கள் சிரித்தன. அருண் சிலிர்த்துப் போனான். முன்னேறிப் போக முடியாமல், நெரிசல் அள்ளியது.
"போறாங்கடா.. போறாங்க.. போய்ட்டாங்க.."
பெப் அண்ணா சாலையின் பூச்சிகளில் ஒன்றாகக் கலந்தது.
" Dont worry தம்பி. யாமிருக்க பயமேன்? தேடிக் கண்டுபிடிச்சிடலாம் விடு."
"என்ன உளர்ற? இவ்ளோ பெரிய சென்னையில எத்தனை பெப் இருக்கு. எப்படிக் கண்டுபிடிப்பது?"
"எத்தனையோ இருக்கலாம். ஆனா ஒரு பெப் மட்டும் தான் இந்த number-ரோட இருக்கும், இல்லையா?"
பார்க்கிங்குக்கு கொடுத்த ரசீதுச் சீட்டைக் காட்டினான். அதில் ஒரு டூ-வீலர் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் இருந்தது.
ஒவ்வொரு வயதினர்க்கும் அவர்கள் பார்த்த கிரிக்கெட் மேட்ச்களில் ஏதாவதொரு மேட்ச் கண்களிலேயே தங்கியிருக்கும். எப்போது நினைத்துப் பார்த்தாலும், அதே பரவச உணர்வு.!
நான் பார்ப்பதே மிகச் சொற்ப மேட்சுகள். அதிலும் மறக்க முடியாத மேட்ச், 1999 ஆஸி - தென் ஆப் இடையே நடந்த அரையிறுதி.
என்ன மேட்சுங்க அது..! அதுவும் அந்தக் கடைசி ஓவர். மறக்கவே முடியாது.
க்ளூஸ்னர் இரண்டு பவுண்டரிகள் அடித்ததும், எழுந்து கத்தி விட்டேன். மணி இரவு 2 மணி. என்ன பரபரப்பு..! 4 பந்துகளில் 1 ரன்.
பிறகு தடாலடியாக ஆட்ட வியூகமே மற்றப்பட்டது. ஒரு ரன் தானே என்ற அலட்சியம் இல்லாத தென் ஆப் அணி, அந்த ஒரு ரன்னையும் எடுக்க முடியாதபடிக்கு ஆஸியின் க்ளோஸ் ஃபீல்டிங்.... அட்டகாசம்.!
மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆன ஜோடியின் கைகளில் அணியின் 20 ஆண்டு கால கனவு..! அத்தனையும் அடுத்த பந்தில் மாறிப் போனது.
மிகவும் வருத்தமாகி விட்டது.
ஆனால், பாக்.-ஐ ஆஸி சுருட்டி வீசியதில் இருந்த வருத்தம் இறுதிப் போட்டியில் மறைந்தது.
சில காலங்களுக்கு முன் நோக்கியா 3230 வாங்கினேன். (அக்டோபர் 2006).
நல்லாத் தான் இருக்கின்றது. ஆனால் என்ன பிரச்னை பாருங்கள், சொல்லாமல் கொள்ளாமல் ரீ-ஸ்டார்ட் ஆகி விடுகின்றது.
அதுவும் முக்கியமாக கேம் விளையாடிக் கொண்டு இருக்கும் போது, கடைசி பாலில் ஓர் ரன் அடித்தால் டிரா. டக் வைத்தால் காலி என்ற நிலைமை. எப்படித் தான் இந்த போனுக்குத் தெரியுமோ, அப்படியே ஆவி ரூபமாக உறைய வைத்து, பின் ரீ-ஸ்டார்ட் ஆகி விடுகின்றது.