Friday, January 25, 2008

இது உனக்குத் தேவையா?

நேத்து பண்ணின பந்தாவுக்கு ஒரு அடி விழுந்து விட்டது.

தொண்டர் 1: தலைவர் ஏன் கோபமா இருக்கார்?

தொண்டர் 2: அவர் கட்சி ஆரம்பிச்சதை விளையாட்டுச் செய்திகள்ல சொல்லிட்டாங்களாம்.

இப்படி ஒரு நிலைமை வந்து விட்டதே, குமாரா!

நான் எவ்ளோ உணர்ச்சி பூர்வமா கதை எழுதிட்டு இருக்கேன். அதைப் போய் விளையாட்டுச் செய்திகளில் சொல்லி விட்டார்களே..!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......!

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

ல்லோர்க்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

Thursday, January 24, 2008

யாரு பெத்த புள்ளயோ?



'ள்ளூர் சரக்கு விலை போகாது'ங்கறது உண்மையாத் தான் இருக்கும் போல...!

யாரு பெத்த புள்ளயோ..! நீ நல்லா இருக்கணும் ராசா..! நீ யாரு என்னனே தெரியல..!

என்னோட வலைப்பதிவை 'Top Links'-ல போட்டிருக்கியேப்பா, உனக்குத் தான் எவ்ளோ பெரிய மனசு...! பார்த்தாலே புல்லரிக்குதுப்பா..! ஆனாலும் கொஞ்சம் பயமாத் தான் இருக்கு.., நீ போடற போஸ்ட் எல்லாம் பார்த்தா..!

நல்லாயிருங்கடே..!

Wednesday, January 23, 2008

இது ஒரு காதல் கதை...? - 4

"ன்ன மாம்ஸ், பீச் போய்ட்டியா..? சாரிடா. என்னால வர முடியல..." அருண்.

"சரி விடு. நானும் அடையார் வழியா போக முடியல. ஏதோ ஊர்வலமாம். அதனால் மயிலாப்பூர் வழியா போய் சாந்தோம் போற ப்ளான்ல இருந்தேன். இப்போ சிட்டி சென்டர் போய் கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ண வேண்டியது ஞாபகம் வந்திடுச்சு. அதனால் ராதாகிருஷ்ணன் ரோடுல போய்க்கிட்டு இருக்கேன். சரி, நான் அப்புறம் கால் பண்றேன். வெண் புறா போலிஸ் போன்ல பேசிட்டே வர்றதைப் பார்த்துட்டார்னு நினைக்கிறேன். நீ உன்னோட ரிலேஷனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடு." சஞ்சய்.

செல்போனை அணைத்து விட்டு யு-டர்ன் அடித்து உள்ளே நுழைந்தான். பார்க்கிங் ப்ளாக்கில் ஹோண்டாவை நிறுத்தி விட்டு, நடக்கும் போது தான் கவனித்தான்.

அந்த பெப். அதே எண்.

பரபரப்பானான் சஞ்சய். உடனே செல்லினான்.

"அருண், சீக்கிரம் உன்னோட ரிலேஷனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டு, உடனே சிட்டி சென்டர் வா. அந்த பெப் இங்க நிக்குதுடா..."

"என்னடா சொல்ற...? நான் இன்னும் வடபழனியே தாண்ட முடியல. Full Traffic. நீ ஒண்ணு பண்ணு. எப்படியாவது அந்த பெப் சென்டரை விட்டுப் போகாத மாதிரி பார்த்துக்கோ. நான் எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ, வர்றேன்.." அருண்.

"நீ கவலைப்படாதே. நான் பார்த்துக்கறேன்." அணைத்தான்.

கொஞ்ச நேரம் யோசித்தபடியே நின்றவன், வெளியே வந்தான். சாலையோரமாய் இருந்த சாவி ரிப்பேர் செய்பவரைக் கேட்டு, சிறிய பூட்டு, சாவி, சின்ன சைஸ் செயின் வாங்கினான். பயந்து போய் பார்த்த அவரது பார்வையை அலட்சியத்து, உள்ளே நுழைந்து, பெப் அருகில் வந்தான்.

முன் சக்கரத்தின் பற்களுக்கு இடையே செயின் விட்டு, அதன் பிரேக் ஒயரோடு இழுத்துக் கட்டினான். பூட்டைச் சேர்த்து பூட்டி, சாவியைப் பத்திரப்படுத்தினான். எழுந்து நின்று திரும்ப, செக்யூரிட்டி அவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து, செக்யூரிட்டியைப் பார்த்து சிரித்தான், தலையைக் குனிந்து அடிக்கண்ணால் பார்த்தான். வெருண்டு போன செக்யூரிட்டி வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

சிரித்துக் கொண்ட சஞ்சய், சென்டர் உள்ளே நுழைந்தான்.

சிட்டி சென்டர் பளபளத்துக் கொண்டிருந்தது.

ஐ-நாக்ஸ் பால்கனியில் நின்றவாறு டிஜிட்டல் டி.வி.யில் கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா. செல்லடித்து அழைத்தாள்.

"ஹேய் மலர்.. CMBT போய்ட்டியா?.."

"இல்ல.. ரொம்ப நெரிசலா இருக்கு. ஊர்ந்து ஊர்ந்து போய்ட்டு இருக்கோம்.."

"நிகில்.. இப்படி போய் டிக்கெட் புக் பண்ணனுமா? ஆன்லைன்ல பண்ணலாம்னு சொன்னா கேக்கறியா...?"

ஸ்பீக்கரை ஆன் செய்து இருந்தாள் மலர்.

"அக்கா.. என்னைத் திட்டாதீங்க. நான் உண்மையைச் சொல்லிடறேன். இங்க மலரக்கா கிள்ளறாங்க. இருந்தாலும் சொல்லிடறேன். நான் ஆன்லைன்ல பண்ணிடலாம்னு தான் சொன்னேன். அக்கா தான் வெளியே போய் தான் புக் பண்ணனும்னு சொன்னாங்க.உங்ககிட்ட சொல்லக் கூடாதுனு சொன்னாங்க..."

"ஓ... அது தான் மேட்டரா..? எனக்குத் தானே தெரியும், ஏன் மலரக்கா இன்னிக்கு வெளியே போக ஆசைப்பட்டாங்கனு... இருக்கட்டும்..."

புன்னகைத்கவாறே செல்லை அணைத்து எலிவேட்டரில் நின்று கொண்டாள். மெல்ல , மெல்ல இறங்கத் தொடங்கியது. அடுத்த ஃப்ளோரை அடைந்து நடக்கத் தொடங்கினாள்.

"ஹலோ மேடம்.. நில்லுங்க.." குரல் கேட்டு திரும்பினாள்.

சஞ்சய் வந்து கொண்டிருந்தான்.

"யார் நீங்க..?"

"என்ன.. அதுக்குள்ள மறந்திட்டீங்க. நேத்து ஸ்பென்சர்ல சண்டை போட்டு கீழே விழப் போனீங்க.. நான் தான் காப்பாத்தி.. well, i am sanjay.." கை நீட்டினான்.

சட்டென்று ஞாபகம் வந்து விட்டது. ஆனாலும் இவனைத் தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளக் கூடாது. இன்னும் நேரம் இருக்கிறது. கடவுள் இருக்கிறாரா பார்ப்போம்.

"சாரி.. தெரியல.."

"என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. சரி, என்னை விடுங்க. என் ஃபிரெண்ட் அருண். நல்ல பையன். உங்க கூட வந்தவங்க யாரு, என்னனு என்னைத் துளைச்சு எடுக்கிறான். அவங்க யாரு உங்க தங்கையா? இருக்கலாம். இருந்தாலும் உங்களைப் பார்த்தா அவ்ளோ வயசானவங்களா தெரியல. ஒரு 35 இருக்குமா, உங்க வயசு..?" அவள் தெரியவில்லை என்ற கடுப்பில் போட்டு வாரத் தொடங்கினான்.

சட்டென சூடாக ஆனாள்.

"பாருங்க மிஸ்டர், நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது. இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல InDecentடா behave பண்ணினீங்கனா உங்களைப் போலீஸ்ல பிடிச்சுக் குடுத்திட்டு, நான் பாட்டுக்கு போய்ட்டே இருப்பேன்.. நேத்தே மாட்டி விட்டிருக்கணும்.."

"ரொம்ப தேங்ஸ்ங்க. நீங்களே ஒத்துக்கிட்டீங்க. நீங்க அவ்ளோ சீக்கிரம் இங்கிருந்து போயிட முடியாது. ரொம்ப செக்யூரிட்டி போட்டிருக்கோம். உங்க friend பத்தி கேட்டு, அருண் என்னைத் தொந்தரவு பண்றான். சொல்லுங்க ப்ளீஸ்... ஹலோ.."

அவனைத் தவிர்த்து நடக்க ஆரம்பித்தாள்.

என்னடா, ஓவராப் பேசி நாமே காரியத்தைக் கெடுத்து விட்டோமோ?

குழம்பிப் போய் அவளைப் பின் தொடர்ந்து போனான் சஞ்சய்.

CMBT பரபரப்பாக இருந்தது. ஞாயிற்றுக் கிழமையாதலால் கூட்டம் அள்ளிக் கொண்டு இருந்தது.

பார்க் செய்து விட்டு, சேலத்தில் இருந்து வர வேண்டிய வண்டிக்காக காத்திருக்கத் தொடங்கினான் அருண். ஒரு India Today வாங்கி விட்டு அதில் தலையை முழுக்கிக் கொண்டான்.

காரைப் பார்க் செய்து விட்டு, மலரும், நிகிலும் டிக்கெட் புக் செய்யும் கவுண்டரை நோக்கி நடக்கத் துவங்கினார்கள்.

- தொடரலாமா?

Tuesday, January 22, 2008

இது ஒரு காதல் கதை...? - 3

ஞாயிறு காலை 9 மணி.

"சந்தியா.. உன்னோட ஏண்டா deal வெச்சுக்கிட்டோம்னு இருக்கு.."

"என்ன, பயமா இருக்கா..?"

"இல்ல., இப்பவே 9 மணி ஆகிடுச்சு. இன்னும் அவர் வரலையே.."

"இங்க பாருடா.. என்னமோ அவர் டைம் சொல்லிட்டு போன மாதிரி பேசற. இன்னும் 15 மணி நேரம் இருக்குல்ல, வெய்ட் பண்ணு.."

"நீ என்ன பண்ணப் போற...?"

"எனக்கு வாஷ் பண்ற வேலை இருக்கும்மா. உனக்கென்ன, உன்னோட கஸின் வீடு திருவான்மியூர்ல இருக்கு. அங்க போய் வாஷிங் மெஷின்ல குடுத்து வாஷ் பண்ணிக்குவே..."

"உன்னோட துணியையும் குடுன்னு சொன்னா நீ கேட்டா தானே..?"

"இல்ல, நாம பார்க்கற ஆஃபீஸ் ஒர்க்குக்கு ஒடம்பு அசையறதே இல்லை. அட்லீஸ்ட் துணி துவைச்சாவது கொஞ்சம் வேர்வை வர வைப்போம்.. நீ என்ன பண்ணப் போறே?"

"அது தான், கஸின் வீட்டுக்குப் போறேன்.."

"ஆனா, மறந்திடாதே. அங்க போய் அவனைத் தேடற வேலையெல்லாம் வெச்சிக்கக் கூடாது..."

"என்னனு சொல்லித் தேடறது.? தளபதி மாதிரி 'என்னோட இவனே, நீ எங்க இருக்கே'னு மொட்டை மாடில போய் கத்தினா தான் உண்டு."

"சரி. நான் சிட்டி சென்டர் சாயந்திரம் மூணு மணிக்குப் போறேன். அப்ப உன்னை வந்து கூட்டிட்டுப் போறேன்.."

சேனல் மாற்றி மாற்றிப் பார்த்தும் நேரம் நகர்வதாய் இல்லை, அருணுக்கு. பல் விளக்கிக் கொண்டிருந்த சஞ்சயிடம் கூறினான்.

"என்னடா புரோக்ராம் எல்லாம் போடறாங்க. எல்லாமே செம கடியா இருக்கு. டைம் பாஸ் பண்ணலாம்னு பார்த்தா, எல்லாரும் கையில ரம்பத்தோட இருக்காங்க.."

"தம்பி, இந்த டைம்ல எல்லாம் அப்படித் தான் இருக்கும்.."

"ஆமாண்டா.. இந்த சண்டேனாலே ரெண்டு தான் போல். ரெட்டைத் தலைவலி.."

"நான் அதை சொல்லல. உனக்கு காதல் வந்திடுச்சு. அந்த டைமைச் சொன்னேன்.."

"சும்மா அதையே சொல்லிட்டு இருக்காதே. நீ என்ன பண்ணப் போறேன்னு சொல்லு.."

"கவலைப்படாதே.. நல்லா ரெஸ்ட் எடு. மதியத்துக்கு மெலே மெரினா போய்ட்டு வரலாம். மதியம் சத்யம் போகலாமா? ஸ்டுடியோ - 5ல 'பம்பாய் டு பாங்காக்'னு ஒரு படம். பேரே நல்லா இருக்குல்ல?"

"நான் படத்துக்கெல்லாம் வரலை. நல்லாத் தூங்கப் போறேன். நீ மெரினா போகும் போது, எழுப்பி விடு. எத்தனை மணிக்கு..?"

"வாங்க மூணுக்குப் போகலாம்.."

காலிங்பெல் அடித்தது. சந்தியா நிமிர்ந்து மணி பார்த்தாள். 10:30.

"மலர். நான் துணியெல்லாம் ஊற வெச்சுக்கிட்டு இருக்கேன். போய் யாருன்னு பாரு.."

பதிலே வராமல் போகவே, கைகளைக் கழுவி விட்டு, ஹாலை எட்டிப் பார்க்க, முகத்தில் சோகத்துடன் மலர், நிகில்.

நிகில் மலரின் மாமா மகன். அவளை விட பத்து வயது குறைவு.

"என்ன சந்தியாக்கா.. இன்னிக்கு என்ன அக்கா ரொம்ப கவலையா இருக்காங்க.."

குறும்புச் சிரிப்புடன் "இருக்காதா பின்ன.. வேற யாரையோ எதிர்பார்த்து நான் சொல்றதுக்கு முன்னாடியே அவசரமா ஓடிப் போய்க் கதவைத் திறந்து பார்த்தா, குரங்குக் குட்டி மாதிரி நீ ஜங்குனு வந்து குதிச்சிருப்ப.. அது தான்.. இல்ல மலர்..?" என்று கேட்டாள்.

"அப்படியா.. யாரைக்கா அப்படி எதிர்பார்த்துட்டு இருக்கீங்க..?" என்று மலரைக் கேட்டான்.

"டேய்.. நீ வாடா. வீட்டுக்குப் போகலாம். நானே உன்னை வரச் சொல்லிட்டு.. வா வீட்டுக்குப் போகலாம் வா. இந்த பேகை நீ எடுத்துக்கோ. சந்தியா , நான் வர்றேன். சென்டர் போகும் போது வீட்டுக்கு வா.."

"நிகில், அக்காவைப் பத்திரமா பார்த்துக்கோ. யாராவது பூச்சாண்டி வந்து தூக்கிட்டு போயிடப் போறான்.. மலர் Deal மறந்திடாதே.."

"சந்தியாக்கா, இன்னிக்கு ஒரே பூடகமாவே பேசிட்டு இருக்கீங்க.. இருக்கட்டும், கண்டுபிடிக்கறேன்.." என்றபடி மலரின் பேகை எடுத்துக் கொண்டான்.

"இரு, காபி போட்டு எடுத்திட்டு வர்றேன். அப்புறம் அக்கா வீட்டுக்குப் போனேன். பச்சைத் தண்ணி கூட தரலைனு சொல்லுவ. சுடு தண்ணியே குடிச்சிட்டு போ.." என்றபடி சந்தியா சமையலறைக்குச் சென்றாள்.

நிகில் மலரைப் பார்க்க, மலர் சந்தியாவைக் காண்பித்து, நெற்றியில் வட்டமாக்ச் சுற்றிக் காண்பித்தாள்.

அவர்கள் இருவரும் கிளம்பும் போது, மணி 11:00.

செல்போன் கிணுகிணுத்தது.

தூக்கத்தில் இருந்த அருண், எடுத்துப் பார்த்தான். அப்பா.

"சொல்லுங்க டாட்.."

"என்னடா தூக்கமா? பகல்ல தூங்கினா நல்லதில்ல தெரியும்ல..?"

"அப்ப ஆஃபீஸ்ல தூங்கறதெல்லாம் கணக்கில் வராதா டாட்..?"

"உன்கிட்ட பேசி முடியாது. அடுத்த வாரம் உனக்குப் பொண்ணு பார்க்கப் போகலாம்னு இருக்கோம். என்ன.. தூக்கம் கலைஞ்சிடுச்சா..?"

"டாட்.. என்ன இது குண்டைத் தூக்கிப் போடறீங்க.."

"இல்லடா.. ரொம்பவும் உங்கம்மாவை சமாளிக்க முடியல. எனக்கும் பாவமா இருக்கு. அவ சொல்றது தான் சரினு படுது..."

"டாட்.. வெய்ட்..உங்ககிட்ட ஒரு கதை சொல்லணும்..."

"என்ன சொல்லு.."

"நேத்து ஸ்பென்சர் போயிருந்தேன்.."

......

"ஸ்டோரி நல்லாத் தான் இருக்கு. பட் இன்னும் ஹீரோ ஹீரோயின் லவ்வே ஸ்டார்ட் ஆகலையே.."

"ஜஸ்ட் ஒரு வாரம் டைம் கொடுங்க. எப்படியாவது அவளைக் கண்டு பிடிச்சு, உங்க முன்னாடி நிறுத்தறேன்.."

"ஓ.கே. ஜஸ்ட் one week. அவ்ளோ தான். அப்புறம் இன்னொரு விஷயம். நம்ம ரிலேஷன் ஒருத்தர் இன்னிக்கு 5 மணிக்கு அங்க வர்றார். அவரைக் கோயம்பேட்டில கரெக்டா போய்க் கூட்டிட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போ..அடையாளம் எல்லாம் எஸ்.எம்.எஸ். பண்றேன்.Bye."

திரும்பி டைம் பார்த்தான். 1:30.

- தொடரலாமா?

இது ஒரு காதல் கதை...? - 2

"ந்தியா.. இருந்தாலும் நீ இப்படி சண்டை போடக் கூடாது. பாவம் அவன்.." என்றாள் மலர்.

"போதும் மலர். ஸ்பென்சர்ல கிளம்பினதுல இருந்து இதையே சொல்லிட்டு வர்ற. நானும் பார்த்துட்டு தான் இருக்கேன். உனக்கு என்ன அவன் மேல திடீர்னு ஒரு Soft Corner. அவன் என்னவெல்லாம் சொன்னான் தெரியுமா? என் பெப்பை பார்த்து, 'பிஸ்கட்' வண்டியாம். எருமை மாடு மாதிரி ஒரு வண்டியை வெச்சுக்கிட்டு அவன் நம்ம வண்டியைச் சொல்றான். அப்புறம், நம்ம வண்டியை உதைக்கறான்டி. அவனை அப்படியே விட்டுட்டு வரச் சொல்றியா? போலீஸ் வரைக்கும் போயிருப்பேன். நீ இருந்தியேனு பார்த்தேன்.."

"பாவம்.. அவனுக்கு என்ன பிரச்னையோ..? அவன் முகத்தை நான் தான் பார்த்துட்டே இருந்தேனே.."

தலைமுடியை அள்ளிப் பிரித்துக் கொண்டிருந்த சந்தியா தடாரென திரும்பினாள். படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்து, தலையணையை மடியில் வைத்துக் கையை ஊன்றிக் கொண்ட மலரைப் பார்த்துக் கேட்டாள்.

"இது எப்படி நடந்துச்சு..? அவன் முகத்தைப் பார்த்திட்டே இருந்தியா..? எப்ப? எங்க? நான் கவனிக்கவேயில்லை.."

"நீ தான் Boutique-ல் நுழைஞ்சவ வெளியே வரவேயில்லையே... நான் அப்பப்போ வெளியே போய்ட்டு வந்தேன். அப்பப்போ அவனை பார்த்திட்டு தான் இருந்தேன். ஐஸ்க்ரீம் ஷாப், லேண்ட்மார்க், சென்டர் ஸ்டேஜ், எலிவேட்டர்ஸ் எல்லா இடத்திலும் அவனையே தான் பார்த்திட்டு இருந்தேன். பாவம் யாரையோ தேடிட்டு இருந்தான் போல..."

"ஓ.. மேடம் வேற என்னவெல்லாம் பார்த்தீங்க..?" புன்னகையுடன் கேட்டாள் சந்தியா.

"ஆனாலும் அவனோட Colour-க்கும் Height-க்கும் Dressing சரியா இல்லை. இன்னிக்குப் போட்டிருந்த டீ-ஷர்ட் ஜீன்ஸுக்குப் பதிலா, லைட் யெல்லோ பைஜாமாவும், Casual pant-ம் போட்டு வந்திருந்தான்னா இன்னும் அட்டகாசமா இருந்திருக்கும். அப்புறம் கையில டிஜிட்டல் வாட்சுக்குப் பதிலா, ஸ்ட்ராப் வாட்ச் இருந்திச்சுனா இன்னும் Manly-ஆ இருந்திருக்கும்..."

"இந்த அளவுக்குப் போயாச்சா..? அப்ப சரி. சாரிம்மா. உங்க அவனைப் பத்தி, தப்புத் தப்பா சொல்லிட்டேன்.."

"And One more thing. இனிமேல் அவன் அப்படினு எல்லாம் சொல்லக் கூடாது. அவர்னு தான் சொல்லணும். நான் மட்டும் தான் அவன்னு சொல்லுவேன்.." சிரித்தாள் மலர்.

"எப்படி மலர் இப்படி மாறினே? ஆபிஸில இவனை.. ஓ.. ஸாரி.. இவரை விட பர்சனாலிட்டியா நிறைய பேர் ப்ரபோஸ் பண்ணினாங்க. அவங்களை கூப்பிட்டு வெச்சு, கொடுத்த அட்வைஸ்ல உனக்கு 'Queen Elizabeth'னே பேர் வெச்சிருக்காங்க. நீயா இப்படி கவுந்துட்டே.."

"அது தான் எனக்கே தெரியல சந்தியா. Its really a magic, girl. நானா இப்படினு வரும் போது தான் நெனச்சுப் பார்த்தேன். ஒரு வேளை இதுக்காகத் தான் காத்திட்டு இருந்தேன்னு நினைக்கிறேன்..."

"Are you sure? Do you love him...?"

"Yeah. Sure"

"Then, shall we play a game? இப்படி பண்ணிப் பார்க்கலாம். இன்னிக்கு ஒருத்தரைப் பார்த்திருக்கே. Good. அவன் தான் உனக்கானவன்னு நினைக்கிற. தப்பேயில்லை. இவ்ளோ பெரிய சென்னையில் அவன் ஒரு மூணு மணி நேரம் உன் கண்ணுல பட்டிருக்கான். இனிமேல் அவன் படுவானோ, மாட்டானோ தெரியாது. இரு, அடிக்காத. தலையணை பஞ்செல்லாம் பிஞ்சு வந்திடும். சொல்லி முடிச்சிடறேன். The Great Almighty அவன் தான் உனக்குனு முடிவு பண்ணியிருந்தார்னா, நீ எங்க இருந்தாலும் அவன் உன்னைத் தேடி வந்திடுவான் இல்லையா? ஓ.கே. நாமா அவனைத் தேடிப் போக வேணாம். அதாவது நாமா அவனைத் தேடற எந்த முயற்சியும் எடுக்கக் கூடாது. ஒரு Time Frame வெச்சுக்குவோம். One Month...வேணாம். One day வெச்சுக்குவோம். அதுக்குள்ள அவனா நம்மைத் தேடி வந்து, உன்னைப் பார்த்துப் பேசிட்டான்னா, கவனம், உன்னைப் பார்த்துப் பேசணும். அப்படி நடந்திச்சுனா, Believe me my friend, நானே உங்களைச் சேர்த்து வைப்பேன். என்ன சொல்ற.. Deal?"

கொஞ்ச நேரம் அமைதி நிலவியது.

"எனக்கும் இதிலே சுவாரஸ்யம் இருக்கும்னு தான் நினைக்கிறேன்.Deal."

"O.K.இப்ப போய் நிம்மதியா தூங்கு. இல்லை, உன்னைப் பார்த்தா தூங்கப் போற பொண்ணு மாதிரி தெரியல. எனக்குத் தூக்கம் வருது. நாளைக்கு சிட்டி சென்டர் போகலாம்னு இருக்கேன். ஸ்பென்சர்ல சில ஐட்டம்ஸ் கிடைக்கல. அங்க கிடைக்கும்னு ஜானு தான் சொன்னா. நீயும் வர்றியா..ம்ஹூம் உன்னைப் பார்த்தா.. அதுக்குள்ள கனவுக்குள்ள போய்ட்டியா..Good Night. Sweet Dreams..."

முந்திய இரவு அல்லது அடுத்த நாள் அதிகாலை என்று எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். அது இரண்டு மணி. வெளியே இருட்டாக இருந்தது.

"மாம்ஸ்.. மாம்ஸ்..." உலுக்கி எழுப்பினான் அருண்.

"என்னடா.. என்ன.." தூக்கக் கலக்கத்தில் அதிர எழுந்தான் சஞ்சய்.

"போய் ஒரு டீ சாப்பிட்டு வரலாமா..?"

"டேய், இதெல்லாம் அநியாயம். ஸ்பென்சர் போய்ட்டு வந்ததில் இருந்து எட்டு டீ குடிச்சாச்சுடா. வயிறெல்லாம் ஒரு மாதிரியாவே இருக்கு. நானே கஷ்டப்பட்டு இப்ப தான் தூக்கம் வந்து படுத்திருக்கேன். ஆமா எதுக்கு இப்படி டீ குடிச்சுக்கிட்டே இருக்கே..? தூக்கம் வரக் கூடாதுன்னா?"

"எப்படி கரெக்டா சொல்ற..?"

"எதுக்கு தூக்கம் வரக்கூடாது? விடிஞ்சவுடனே ஆர்.டீ.ஓ. ஆஃபீஸ்ல விசாரிக்கறதுக்கா..?"

"நிஜமாலுமே அறிவாளிடா நீ..!"

"நாளைக்கு.. இல்ல.. இன்னிக்கு சண்டேடா. ஆஃபீஸ் லீவா இருக்கும். இப்ப படுத்து தூங்கு. மண்டே பார்க்கலாம். ஆஃபீஸுக்கு லீவ் போட்டாவது போய் விசாரிப்போம். என்ன..?"

"எனக்கு தூக்கம் வரலை. சரி, இன்னிக்கு என்ன பண்ணப் போறோம்.? எங்க போகப் போறோம், சொல்லு..?"

"அதை எப்படிடா இப்பவே சொல்றது. விடியட்டும், பார்க்கலாம்... இப்ப தூங்க விடுடா.. ப்ளீஸ்.."

"எனக்குத் தூக்கம் வரலையே.. என்ன பண்றது..?"

"போய் டி.வி.பாரு.இல்ல வெளியே ஊரைச் சுத்த போ. ஏதாவது செய். என்னைத் தொல்லை பண்ணாதே.."

"இன்னிக்கு எங்க போறதுனு மட்டும் சொல்லு. நான் அதுக்கான preparation-ல இறங்கறேன்.."

"டேய்.. உன் தொல்லை தாங்க முடியலயே.. கடல்ல தான் போய் விழலாம்னு நினைக்கிறேன்.."

"கரெக்ட்டா.. மெரினா போகலாம்.ஏன்னா ரொமாண்டிக் மூடுக்கு வந்தா பீச் தான் பெர்ஃபெக்ட் ப்ளேஸ், இல்லை..?"

"எது நம்ம மெரினாவா.. ஆமாண்டா ரொமாண்டிக் ப்ளேஸ் தான். இப்ப என்னை ஆளை விடு. குட் நைட்.."

"இல்ல.. குட் மார்னிங்.."

போர்வையை தலையோடு இழுத்துப் போர்த்திக் கொண்டான் சஞ்சய்.

வர்களைப் பார்த்துச் சிரித்தார் ஒருவர். விதியார்.

- தொடரலாமா?

இது ஒரு காதல் கதை...? - 1

Part2
Part3
Part4
Part5

They lived happily thereafter.

But....

'ரு மாலை இளவெயில் நேரம்..'

அருண் கவிழ்ந்து இருந்த செல்போனை எடுத்து பார்த்தான். அம்மா. மினுக் மினுகென்று மின்னிக் கொண்டிருந்த டிஜிட்டல் வாட்சில் நேரம் பார்த்தான். 5:30.

"சொல்லும்மா.."

"என்னடா தூங்கிட்டு இருந்தியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?"

"இல்லம்மா. குளிச்சிட்டு, பூஜா ரூம்ல காயத்ரி மந்திரம் சொல்லிட்டிருந்தேன். நம்பறயா..?"

"கோவிச்சுக்காத கண்ணு. வேற எப்ப ஃபோன் பண்றது, சொல்லு. எப்ப பண்ணாலும் ஆஃபீஸ்ல இருக்கேன்னு சொல்லிடற. நைட் எப்ப பண்ணாலும் ஆபீஸ்லயே இருக்கற. அதான் இப்ப பண்ணினேன். இப்படி ஒடம்ப கவனிச்சுக்காம ஆஃபீஸே கதினு இருக்காதப்பா. இதுக்குதான் ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பாக்கணும்னு கேட்டுக் கிட்டே இருக்கேன். நீயும், உங்கப்பாவும் கேக்கவே மாட்டேங்கறீங்க..."

"சுத்திச் சுத்தி கல்யாணத்துக்கு வராதம்மா. நான் எத்தன தடவை சொல்லிட்டேன். I have to meet my girl. அதுவரைக்கும் நோ கல்யாணம். நோ வாழை மரம்."

"போடா...! நீ எப்ப பொண்ணு பாக்கறது. நான் எப்ப.."

"சரி.. சரி.. ஆரம்பிச்சுடாத. அப்பா கிட்ட இருக்காரா. இந்நேரம் வாக்கிங் போய்ட்டு வந்திருக்கணுமே?"

"எல்லாம் வந்திட்டாரு. இந்தா பேசு.."

"ஹாய் டாட்.."

"என்னடா.. உங்கம்மா மறுபடியும் கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சுட்டாளா..?"

"பாருங்க டாட். எப்ப பார்த்தாலும் மேரேஜ் பத்தியே பேசுறாங்க. நான் தான் ஆல்ரெடி சொல்லிட்டேனே, நானே ஒரு பொண்ணைப் பார்க்கணும். பார்த்தவுடனே அப்படியே ஜிவ்வுனு பறக்கற மாதிரி அழகா இருக்கணும். மாடர்னா இருக்கணும். ஆனா மங்களகரமா இருக்கணும். சுடிதார் தான் போட்டிருக்கணும். ஆனா சூப்பரா இருக்கணும். அட்லீஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ் லவ் பண்ணனும். அதுவரைக்கும் Marriage is Drainage. Who falls in are Garbage."

"போதும்டா. நீ ஒண்ணும் கவலைப்படாத. நான் பார்த்துக்கறேன் உங்கம்மாவை. நீ உன்னோட டேஸ்ட்க்கு பாரு. ஆனா கொஞ்சம் சீக்கிரம்... ஓ.கே.வா? உங்கம்மா மூட் அவுட் ஆகி இருக்கா. நான் போய் சமாளிக்கறேன். பை. டேக் கேர்.."

மீண்டும் கண் விழித்துப் பார்க்கையில், 6:10 மணி. பரபரப்பாக எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்து, டிராக் சூட் எடுத்து மாட்டிக் கொண்டு, பீச்சுக்கு கிளம்பும் போது சரியாக காலை 6:30 மணி.

னிக் கிழமை மாலையின் அலங்காரத்துடன் ஸ்பென்சர் ப்ளாசா மின்னிக் கொண்டிருந்தது.

அருணும், சஞ்சயும் ஸ்ப்ளெண்டரில் வந்து என்ட்ரென்ஸில் நுழைந்தார்கள்.

"அருண்..! ஹோல்ட் ஆன்! நிறுத்து. நான் போய் எந்த ஃப்ளோர் போகலாம்னு பார்த்திட்டு கால் பண்றேன். நீ இந்த கூட்டத்தில கரெக்டா பார்க்கிங் ஸ்பேஸ் கண்டுபிடிச்சு நிறுத்திட்டு வந்திடு.." என்றான் சஞ்சய்.

அருண் சடாரென ஓரம் கட்ட ஃலெப்ட் பக்கமாய் ஒடிக்க, பின்புறம் 'க்ரீச்' என சத்தம். திரும்பிப் பார்த்தார்கள்.

பிங்க் பெப் சரிவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது. இரண்டு பேர் வந்திருப்பார்கள் போல் இருக்கின்றது. இடப்பக்கமாய் சாய்ந்து கால்களை ஊன்றி நிற்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

சஞ்சய் உடனே ஓடிப் போய் பெப்-ஐ தங்கிக் கொண்டான்.

"ஸாரிங்க.." என்றான்.

"டேய்.. நீ எதுக்குடா சாரி கேக்கற. அவங்க லெஃப்ட்ல க்ராஸ் பண்ண ட்ரை பண்ணினது அவங்க தப்பு." அருண்.

ஓட்டி வந்த பெண் அருணை நிமிர்ந்து பார்த்தாள்.

"நாங்க லெஃப்ட்ல க்ராஸ் பண்ண வந்தது எங்க தப்பு தான். அந்தப்பக்கம் பாருங்க. ஆப்போஸிட்ல ஒரே ரஷ். அதுவும் ஜென் ரெண்டு கார் வரிசையாய் வந்ததினால தான் நாங்க லெப்ட்ல திரும்பப் பார்த்தோம். இது ஸ்டாப்பிங் ப்ளேஸ் கிடையாது. நீங்க ஸ்டாப் பண்ணி இருக்கவே கூடாது. ஓ. கே. ஸ்டாப் பண்ண ட்ரை பண்றீங்க். அப்ப என்ன பண்ணி இருக்கணும். பின்னாடி யாராவது வர்றாங்களானு பார்த்திருக்கணும். அதுவும் செய்யல. ஹெல்ப் பண்ண வர்றவரையும் தடுக்கறீங்க..."

பொரிந்தாள் அவள்.

'ஆமா, அவன் எதுக்கு ஹெல்ப் பண்றான்னு தெரியாதா..' முனகினான் அருண். தப்பு தன் பேரில் தான் என்று தெரிந்திருந்ததால், அமைதியாக முனகினான்.

பின், ஸ்ப்ளெண்டரை ஸ்டார்ட் செய்து, செக்யூரிட்டி துணையுடன் பார்க்கிங் ஸ்பாட்டுக்குச் சென்று நிறுக்தினான். நிறுத்தி விட்டு வெளியே வருகையில், 'சரக்'.

மீண்டும் அதே பெப்.

"என்னங்க.. ஆள் வர்றது தெரியாம, வர்றீங்க.." ரிவர்ஸ் அட்டாக் அடித்தான்.

"ஓ.. சாரிங்க. இப்ப தப்பு என் மேல் தான். சாரி."

"அதெப்படி சும்மா sorry கேட்டா விட்ருவோமா? இதே பசங்க தெரியாம வந்து இடிச்சுட்டா கூட, ஊரையே கூட்டிடறீங்களே. இதை சும்மா விடப் போறதில்ல. செக்யூரிட்டி.." விடுவதில்லை இதை என்று முடிவே செய்திருந்தான்.

"சார்.. விடுங்க.. இனிமேல் இந்தப் பக்கம் வர்றதில்லைனு முடிவே பண்ணிடறேன். ஓ.கே.வா..?"

"எனக்கென்ன இதில் ஓ.கே.? செக்யூரிட்டி, இந்த மாதிரி பிஸ்கட் வண்டியெல்லாம் ஸ்ப்ளெண்டர் பக்கமா நிறுத்த எப்படி allow பண்றீங்க.."

பிஸ்கட் வண்டி என்று சொன்னதில் அவள் முகம் சுருங்கி போனதில், அவனுக்கே கொஞ்சம் வருத்தமாகி விட்டது. கொஞ்சம் ஓவராகத் தான் சொல்லி விட்டோமா?

"Leave it" என்றபடி திரும்பி நடந்தான்.

ப்ளாஸாவின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். என்ட்ரென்ஸைக் கடக்கையில் யாரோ தன்னை உற்றுப் பார்ப்பது போல் உணர்ந்தான். சடாரென இடதுபுறம் திரும்பிப் பார்க்க, இரு கண்கள். இரு கண்கள் மட்டுமே தெரிந்தன.

மஞ்சள் துப்பட்டாவில் முழுவதுமாக மூடிய முகம். கண்கள் மட்டும் வெளியே தெரிந்தன. அவனையே உற்றுப் பார்ப்பது நன்றாகவே உணர்ந்தான். வேறு எதையும் அவனால் பார்க்க முடியவில்லை. எங்கே இருக்கிறோம், யாருடன் இருக்கிறோம், இது என்ன நேரம், இது என்ன ஆண்டு எல்லாம் மறந்து போனது. நினைவுகள் அப்படியே உறைந்து போயின. எங்கோ சுழலில் சுழல்வது போல் இருந்தது.

"எக்ஸ்க்யூஸ் மீ.. கொஞ்சம் மூவ் பண்றீங்களா.." குரல் எங்கோ, எப்போதோ கேட்பது போல் கேட்டது. யாரோ மெல்ல தள்ளி விட்டு செல்ல, தடுமாறி விழப் பார்த்தான். அருகில் இருந்த கதவை பிடித்துக் கொள்ள நிலை நின்றான். அந்த வாசலில் அமர்ந்தே விட்டான்.

நினைவுகள் மெல்ல மெல்ல திரும்பின. வெளியே அடித்துக் கொண்டிருந்த சென்னையின் வெப்பக் காற்றும், பிளாசாவின் உள்ளிருந்து வந்து கொண்டிருந்த ஜில் காற்றும் , மாறி மாறி நினைவுகள் சென்று கொண்டிருந்த அவனது நிலையை ஒத்திருந்தன.

தடாரென அந்தக் கண்கள் இருந்த திசையைப் பார்த்தான். அவள் இல்லை.

சுற்று முற்றும் தேடிப் பார்த்தான். இல்லை.

செல் மினுக்கியது. சஞ்சய்.

"அருண், எங்கடா இருக்க. பார்க் பண்ணிட்டு வர்றதுக்கு இவ்ளோ நேரமா? பார்க் போய் பார்க் பண்ணப் போய்ட்டியா?"

"மொக்க போடாத. உங்கிட்ட ஒண்ணு சொல்லணும். எங்க இருக்கே...?"

"வேறெங்கே இருக்கப் போறேன்? லேண்ட்மார்க் வந்திடு. செம ஜாலியா இருக்கு. ஒரு இடத்துல நின்னு முழு புக்கையுமே படிச்சிடறாங்க. நமக்கு எதுக்கு புக் படிக்கிற வேலை எல்லாம். சிடி ஸ்டால் பக்கமும், புக்ஸ் பக்கமும் சுத்திக்கிட்டே இருக்கேன். சும்மா சொல்லக் கூடாதுடா. பொண்ணுங்களுக்கு படிக்கிற ஆர்வம் அதிகமாகிட்டே போகுது. நமக்கும் நல்லது தான். அதிலயும் ஒரு கையில கரடி பொம்மை வெச்சிக்கிட்டு, ஹாரி பாட்டர் புக் வாங்கியிருக்கிற பொண்ணு போட்டிருக்கிற டீ ஷர்ட் என்ன சொல்லுதுனா..."

"Stop it, Man. நீ அங்கயே இரு. நான் உடனே வர்றேன்." செல்லை கட் செய்து வைத்தான்.

லேண்ட்மார்க் புத்தகங்களாலும் கை படாத சி.டி.களாலும் நிரம்பி இருந்தது. பின்னிசையாக Bryan Adams.

"உண்மையா தான் சொல்றியாடா? எனக்கு அந்த மாதிரி feeling எல்லாம் வர்றதில்லடா. எனக்கு வேற feeling எல்லாம் வேற. அப்படி தான் போன வாரம் டெல்லி போகும் போது, ஜி.டி.ல அப்பர் பெர்த்ல..."

"சஞ்சய். This is limit. இது வேற மாதிரிடா. "

"புரியுது. இப்ப என்ன? அந்தப் பொண்ணை, ஓ சாரி, அந்தக் கண்களை இந்தப் ப்ளாசாவில எங்கனு தேடிக் கண்டுபிடிக்கணும். அவ்ளோ தானே. விடு கவலைய. எங்க போயிருப்பாங்க. இங்க பொண்ணுங்க போகற மாதிரி இருக்கற ஷாப்ஸே கொஞ்சம் தான். மியூசிக் வேர்ல்டு போகலாம். காஃபி ஷாப் போகலாம். வேற ஏதாவது க்ளாத் ஷாப் போகலாம். கிளம்பு."

எலிவேட்டர்களில் மேலும் கீழும் பிரயாணித்தார்கள். ஆங்காங்கே பொறியும் சோளப் பொறி வாங்கிக் கொறித்தார்கள். காஃபி ஷாப்பில் Cold Coffee உறையும் வரை காத்திருந்து குடித்தார்கள். துணிக்கடைகளில் நுழைந்து புடவைகளைத் தடவிப் பார்த்து விற்பனையாளரின் கேள்விப் பார்வைக்கு அசடு வழிந்தார்கள். Music World-ல் எம்.எஸ். கலெக்க்ஷன் பட்டியலைப் படித்துப் பார்த்தார்கள். லேண்ட் மார்க்கில் சி.டி.க்களை சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். புத்தகங்களின் பக்கங்களை விசிறி அடித்தார்கள்.

"என்னடா.. எங்கயாவது பார்த்தியா?"

உதட்டுப் பிதுக்கலையே பதிலாய்க் கொடுத்தான் அருண்.

ரவு 8:30.

"அருண்.. விடுடா. அவளை மறுபடியும் பார்க்கணும்னா எப்படியும் பார்ப்போம். இப்ப கிளம்பலாம். வா. டைம் ஆச்சு." என்றான் சஞ்சய்.

"இன்னொரு முறை Music World போய்ப் பார்த்திட்டு வந்திடுவோமா..?" பரிதாபமாகக் கேட்டான் அருண்.

"உன்னைப் பார்த்தாலும் பாவமா இருக்கு. சரி, வா. போய்ட்டு வரலாம்."

"Leave it டா. ஒரு நல்ல படத்துக்குப் போறோம்.ஜாலியா எஞ்சாய் பண்றோம். வெளியே வந்தவுடனே கொஞ்ச நேரத்தில, மறந்திடறோம் இல்லையா? அதுபோல இதையும் நினைச்சுக்கிட்டு பைக்கை எடு கிளம்பலாம்."

சோகம் கவ்விய முகத்தோடு பார்க்கிங் ஸ்பேஸுக்கு வந்தார்கள்.

அவன் ஸ்ப்ளெண்டருக்கு முன்னால் அந்த பெப் தலை சாய்த்து நின்று கொண்டிருந்தது.

சோகம், அலைச்சல், எரிச்சல், பைக் எசகு பிசகாக நின்று கொண்டிருக்க எடுக்க முடியாத நிலைமை எல்லாம் சேர்ந்து வர, ஒரே உதை விட்டான் அருண்.

"என்ன பண்றீங்க? எவ்ளோ தைரியம் இருந்தா எங்க பெப்-ஐ இப்படி பண்ணுவீங்க.." அவளே தான். வேகமாக வந்து கொண்டிருந்தாள்.

இந்த மூஞ்சியைப் பார்த்திட்டதால தான் இப்படி ஆகி விட்டது. வார்த்தைகளில் காரம் ஏற ஆரம்பித்தது.

"உங்களை யாரு இங்க நிறுத்தச் சொன்னது? இப்ப நான் எப்படி என்னோட பைக் எடுக்கறது..?"

"அதுக்காக இப்படி தான் பண்றதா? Tribal Dog " என்று கடைசியாக முனகினாள்.

"என்ன சொன்னீங்க? Come Again" பரபரத்தான் அருண்.

"Nothing..".

பிறகு செக்யூரிட்டி வந்து சண்டையைப் பிரித்து சமாதானப் படுத்தி வைக்க, அவள் பெப் எடுத்தாள். அதற்குள் அவளது செல் அடிக்க ஆரம்பித்தது.

வேண்டுமென்றே பாதி வழியில் நிறுத்தி விட்டு, செல்லை எடுத்தாள்.

" ஆமாம்டா.. இங்க ஒரு சின்ன பிரச்னை. அதே பார்ட்டி தான். வரும் போது பிராப்ளம் பண்ணினானு சொன்னேன்ல அதே தான். இப்ப ஒண்ணும் இல்லை. நீ அங்கயே வெய்ட் பண்ணு. நான் வந்துகிட்டே இருக்கேன்..."

அவள் மெதுவாக பெப் எடுத்து, ஸ்டார்ட் செய்து வெளியேறினாள்.

பின் அவனும் ஸ்ப்ளெண்டர் எடுத்து வெளியே வர, அதுவரைக்கும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சஞ்சய்,

"என்னடா இப்படி நடந்துக்கற. பொண்ணுங்க கிட்ட இப்படி Harsh-ஆ நடந்துகிட்டேனு வை. ஒண்ணும் நடக்காது.."

தூரத்தில் அந்த பெப் நகர்ந்து கொண்டிருந்தது. பெப்பின் பின் சீட்டில்...

பின் சீட்டில்..

அதே மஞ்சள் சுடிதார்.

"டேய்.. அவ தான்டா.. அந்த பெப் பின்னாடு உட்கார்ந்துகிட்டு போறாடா. My God. நான் அந்தப் பொண்ணு கிட்ட அப்படி நடந்துகிட்டேனே. அவளோட friend போல இருக்குடா.."

"அந்தப் பொண்ணா..? அவளைத் தான் இவ்ளோ நேரமா தேடிட்டு இருந்தியா..? நான் வரும் போதே பார்த்துட்டேனே.."

"எப்படா பார்த்த.. நான் கவனிக்கவே இல்லை.."

"நீ தான் சண்டை போடறதுலயே Busy-யா இருந்தியே.."

அருண் பார்த்துக் கொண்டேயிருக்க, அந்த மஞ்சள் சுடிதார் திரும்பியது. இப்போதும் வெறும் கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தது. அவனையே பார்த்தது. கண்கள் சிரித்தன. அருண் சிலிர்த்துப் போனான். முன்னேறிப் போக முடியாமல், நெரிசல் அள்ளியது.

"போறாங்கடா.. போறாங்க.. போய்ட்டாங்க.."

பெப் அண்ணா சாலையின் பூச்சிகளில் ஒன்றாகக் கலந்தது.

" Dont worry தம்பி. யாமிருக்க பயமேன்? தேடிக் கண்டுபிடிச்சிடலாம் விடு."

"என்ன உளர்ற? இவ்ளோ பெரிய சென்னையில எத்தனை பெப் இருக்கு. எப்படிக் கண்டுபிடிப்பது?"

"எத்தனையோ இருக்கலாம். ஆனா ஒரு பெப் மட்டும் தான் இந்த number-ரோட இருக்கும், இல்லையா?"

பார்க்கிங்குக்கு கொடுத்த ரசீதுச் சீட்டைக் காட்டினான். அதில் ஒரு டூ-வீலர் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் இருந்தது.

"இதை எப்படா எழுதுன..?" ஆச்சரியத்துடன் கேட்டான் அருண்.

"இதுக்கு தான் experienced ஆளு தேவைங்கறது."

ஒரு நொடி ஆச்சரியத்தில் மூழ்கிப் போனவன், மறு நொடியில் சந்தோஷம் அள்ள, அதிர அதிர சிரித்தான் அருண்.

- தொடரலாமா?

Monday, January 21, 2008

वो लङकि हे कहां?



1999 - அரையிறுதி.

வ்வொரு வயதினர்க்கும் அவர்கள் பார்த்த கிரிக்கெட் மேட்ச்களில் ஏதாவதொரு மேட்ச் கண்களிலேயே தங்கியிருக்கும். எப்போது நினைத்துப் பார்த்தாலும், அதே பரவச உணர்வு.!

நான் பார்ப்பதே மிகச் சொற்ப மேட்சுகள். அதிலும் மறக்க முடியாத மேட்ச், 1999 ஆஸி - தென் ஆப் இடையே நடந்த அரையிறுதி.

என்ன மேட்சுங்க அது..! அதுவும் அந்தக் கடைசி ஓவர். மறக்கவே முடியாது.

க்ளூஸ்னர் இரண்டு பவுண்டரிகள் அடித்ததும், எழுந்து கத்தி விட்டேன். மணி இரவு 2 மணி. என்ன பரபரப்பு..! 4 பந்துகளில் 1 ரன்.

பிறகு தடாலடியாக ஆட்ட வியூகமே மற்றப்பட்டது. ஒரு ரன் தானே என்ற அலட்சியம் இல்லாத தென் ஆப் அணி, அந்த ஒரு ரன்னையும் எடுக்க முடியாதபடிக்கு ஆஸியின் க்ளோஸ் ஃபீல்டிங்.... அட்டகாசம்.!

மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆன ஜோடியின் கைகளில் அணியின் 20 ஆண்டு கால கனவு..! அத்தனையும் அடுத்த பந்தில் மாறிப் போனது.



மிகவும் வருத்தமாகி விட்டது.

ஆனால், பாக்.-ஐ ஆஸி சுருட்டி வீசியதில் இருந்த வருத்தம் இறுதிப் போட்டியில் மறைந்தது.

Nokia 3230.

சில காலங்களுக்கு முன் நோக்கியா 3230 வாங்கினேன். (அக்டோபர் 2006).

நல்லாத் தான் இருக்கின்றது. ஆனால் என்ன பிரச்னை பாருங்கள், சொல்லாமல் கொள்ளாமல் ரீ-ஸ்டார்ட் ஆகி விடுகின்றது.

அதுவும் முக்கியமாக கேம் விளையாடிக் கொண்டு இருக்கும் போது, கடைசி பாலில் ஓர் ரன் அடித்தால் டிரா. டக் வைத்தால் காலி என்ற நிலைமை. எப்படித் தான் இந்த போனுக்குத் தெரியுமோ, அப்படியே ஆவி ரூபமாக உறைய வைத்து, பின் ரீ-ஸ்டார்ட் ஆகி விடுகின்றது.

ஏதாவது வழிமுறைகள் இருக்கின்றதா சரி செய்ய?

Sunday, January 20, 2008

Big B - பாடல்.

ழுந்து ஆட்டம் போட வைக்கும் Big B பாடல்.

இவன் அன்று சொன்னான்.. இவர் இன்று...!

ருவன் அன்று சொன்னான். எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் இதையே இன்று கூறி உள்ளார்கள்.

புகைப்படத்தைக் கிளிக்கிப் பார்க்கும் முன், இப்பதிவைப் படித்து விட்டு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்.

இப்போது படம்.




சிலிசிலுவென திரிசா படம் போட்ட குங்குமம் 17-1-2008ல் இக்கட்டுரைப் பக்கம் 87.