Saturday, April 26, 2008

எனவே, நான், வேண்டாம். - 5

"டாக்டர்..! நான் க்ளீனா சொல்லிட்டேன். பெங்களூர்ல இருந்து வரும் போது சந்த்ரூ என்ன எல்லாம் சொன்னானோ அதை எல்லாம் க்ளியரா சொல்லிட்டேன். என்ன ப்ராப்ளம் அவனுக்கு?" ராக்கேஷ் கேட்டான்.

அறை : டாக்டர் கைலாசபதியின் கன்சல்டிங் ரூம்.

யாவர் : ராக்கேஷ், சந்த்ரூவின் பெற்றோர், சில இளைய மருத்துவர்கள், நான் மற்றும் நீங்கள்.

"மிஸ்டர் ராக்கேஷ்! நீங்க சொல்றதை எல்லாம் வெச்சுப் பார்க்கும் போது எனக்கு சில முடிவுகள் எடுக்கத் தோணுது. பட் ஸ்டில் சில கொஸ்டின்ஸ் பாக்கி இருக்கு, உங்க கிட்ட கேக்கறதுக்கு! நீங்க அவர் கூட ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் படிச்சிருக்கீங்க இல்லையா?"

"எஸ் டாக்டர்!"

"சந்த்ரூக்கு காலேஜில் ஏதாவது காதல் அனுபவம் இருக்கா?"

தயக்கமாக சந்த்ரூவின் பெற்றோரை ஏறிட்டு,"இருந்தது சார்!"

"அதைப் பத்தி நீங்க கொஞ்சம் சொல்லணும்"

"அவனும், ஒரு நார்த் இண்டியன் கேர்ளும் ரொம்ப டீப்பா லவ் பண்ணாங்க. ரீமா. அது தான் பொண்ணு பேர். அவ எஸ்.ஐ.ஈ.டி. நாங்க லயோலா. ரெண்டு பேரும் ரொம்ப ஜோவியலா சுத்துவாங்க. தியேட்டர்ஸ், ரெஸ்டாரண்ட்ஸ், நிறைய தடவை அவுட்டிங் எல்லாம் கூட போயிருகாங்க. அவ்வளவு லவ்வபிள் கப்பிளா இருந்தாங்க. இவன் நல்லா படிக்கிற பையன். சடனா எல்லாம் உடைஞ்சு போச்சு. ஏதோ ப்ரச்னை அவங்களுக்குள்ள. இவன் ஏதோ எல்லை மீறிட்டதா வதந்தி எங்களுக்கு கிடைச்சுது. அதில அந்தப் பொண்ணு கோபமாகி, அவன் கூட லவ்வை ப்ரேக் பண்ணிடிச்சு. அதில இவன் ரொம்ப சீரியஸா மெண்டல் அப்செட் ஆகிட்டான். அதில் ரேங்க் குறைஞ்சு போய்... என் கூட சி.ஏ. பண்ண வேண்டிய பையன் சார். இப்ப ஏதோ ஒரு கால் சென்டர்க்கு வேலைகுப் போய்ட்டு இருக்கான் டாக்டர். நீங்க தான் அவனை எப்படியாவது சரி பண்ணனும். ப்ளீஸ்...!"

"ஓ.கே. மிஸ்டர் வெங்கட் ராகவன் உங்க கிட்ட ஒரு கேள்வி. மிஸ்டர் சந்த்ருவுக்கு சின்ன வயசில அவர் மனசில ஏதாவது பாதிப்பு ஏற்படற மாதிரி நிகழ்ச்சிகள் ஏதாவது நடந்ததுண்டா? அதை நினைச்சு அவர் பயந்திருக்காரா?"

அந்த மிஸ்டர் வெ.ரா. யோசித்துக் கொண்டிருக்க, மிஸஸ் வெ.ரா. குறுக்கிட்டார்.

"டாக்டர்! நான் சொல்றேன். ஒரு தடவ சின்ன வயசில கிராமத்துக்கு ஆனுவல் லீவ் போயிருந்தப்ப, ஒரு குடும்பமே தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அவன் போயிருந்தது பாட்டி விட்டுக்கு. இவர் அம்மா வீடு. அந்தக் குடும்பம் இவங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்திருக்கு. ரெண்டு பெரியவங்க, ரெண்டு சின்னப் பசங்க, ஒரு குட்டிப் பொண்ணு... எல்லோரும் இறந்திருந்தாங்க. கடன் தொல்லை. ஒரே ஒரு பாட்டி மட்டும் உயிரோட இருந்திருக்காங்க. அவங்க ஒவ்வொரு பிணமா கட்டிப் புரண்டு அழறது இவன் மனசில அப்பப்டியே பதிஞ்சிருக்கணும். ஏன்னா, அப்புறம் அவன் லீவு முடிஞ்சு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமும் அப்பப்போ தூக்கத்தில் இருந்து திடீர் திடீர்னு முழிச்சுக்குவான். நடுங்கும் உடம்பு. அது மறையவே ரெண்டு வருஷம் ஆச்சு. அது ஒண்ணு தான் எனக்குத் தெரிஞ்சு மன அளவில பாதிப்பு அவனுக்கு.." கண்களில் துளிர்த்த உப்பு நீரைத் துடைத்தபடியே அவர் பேசினார்.

டாக்டர் தீவிரமாக யோசித்தார். அறையின் மெல்லிய கடிகாரம் முட்களைத் தள்ளிக் கொண்டிருந்தது.

டாக்டர் பேச ஆரம்பித்தார்.

"ராக்கேஷ்! உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். A Beautiful Mindனு ஒரு படம் வந்திச்சு. 2001ல. Schizophreniaனு ஒரு Psychiatric Disease . அதாவது அவங்க, அவங்களே க்ரியேட் பண்ணிக்கிட்ட ஒரு உலகத்தில் வாழ்வாங்க. அதில அவங்களே கேரக்டர் ஃபார்ம் பண்ணிக்குவாங்க. அந்த கேரெக்டர் என்ன செய்யும், என்ன செய்யணும் எல்லாம் இவங்க தான் முடிவு பண்ணுவாங்க.

அது போல் ஒரு நோய்.. நோய்னு சொல்லலாமானு தெரியல. அது தான் இப்ப சந்த்ருவுக்கு வந்திருக்கு.

ஏன் சந்த்ருவுக்கு மட்டும் வரணும்? குட் கொஷன். எல்லோரையும் போல் வாழாத அப்நார்மல் லைஃப். நைட் லைஃப். அதில் அவர் பேர் வேற. வேற விதமான கல்ச்சர் உள்ள மக்களோட பேச வேண்டி இரூகு. அந்த நைட்ஸ் மட்டும் அவர் வேற ஒரு ஆளா மாற வேண்டி இருக்கு. வேற ஒரு பேரோட், வேற ஒரு கல்ச்சர்ல பேசிக்கிட்டு, சுற்றி இருக்கிற உலகத்தோட சம்பந்தமே இல்லாம எங்கயோ இருக்கற வேற ஒரு மக்கள்கூட... சுற்றி இருக்கிற உலகம் தூங்கினப்புறம் இவர் விழிக்க வேண்டி இருக்கு. இவர் தூங்க போகும் போது, உலகமே - இவரைச் சுற்றின் இருக்கிற உலகமே - தன் வேலையைப் பார்த்து ஓடுது. இப்படி இவர் வேலை இவருக்கு வேற ஒரு உலகத்தைக் காட்டுது.

இவர் உடல் மட்டும் இங்க இருக்கு. மனம் ரெண்டு விதமான உலகங்களுக்கு போய்ட்டு போய்ட்டு வருது. அதுவும் தினமும். பகல்ல ஒரு உலகம். இரவில் சம்பந்தமே இல்லாத வேற ஓர் உலகம்.

அங்கயே அவருக்கு ரெண்டு விதமான கேரக்டர்ஸைக் கொடுக்குது.

கால் சென்டர்ல ஒர்க் பண்ற எல்லார்க்கும் இப்படித் தான் இருக்குமா? நாட் நெசசரி. இப்படி இரு வேறு வாழ்க்கையையும் எஞ்சாய் பண்ணி வாழ்றவங்களையும் எனக்குத் தெரியும்.

பட் சந்த்ரு கொஞ்சம் வேற மாதிரி. இவருக்கு ஒரு டீப் லவ் இருந்திருக்கு. அது உடைஞ்சிருக்கு. இவரையும் உடைச்சிருக்கு. அதில சிதறிப் போனவர் இன்னும் சரியா ஒட்டல. அந்த லவ் டீப்ப அவருக்கு இருந்திருக்கு. அதை விட அந்த லவ் இப்ப இல்லைங்கற உண்மை அவர் மனசில, அடியாழத்தில் ஒரு நெருப்பா புகைஞ்சிட்டே இருந்திருக்கு.

லெட் இட் பி.

தென் அனதர் இம்ப்பார்ட்டண்ட் திங். சின்ன வயசில கிராமத்தில் பார்த்த மரணங்கள். அந்தப் பதிவுகள் துடைக்கவே முடியாதபடி இவர் சப் கான்ஷியஸ் மைண்ட்ல இருந்திருக்கணும்.

மாறுபட்ட வாழ்க்கை முறைகள், நைட் லைஃப், உடைஞ்ச காதல், கேக்க ஆள் இல்லாத தனிமை, அடியாழத்தில் இருந்து கிளம்பி வந்த மரணங்கள்.... எல்லாம் சேர்ந்து இவரை ஒரு கொலாப்ஸ்ட் ஸ்டேட்ல கொண்டு போயிருக்கு. ஒரே அழுத்தம். அந்த மெண்டல் ப்ரஷர்ல இருந்து தப்பிக்கறதுக்கு இவர் தேர்ந்தெடுத்த வழி அந்த அழுத்தங்கள் கேட்கிற காட்சிகளை மனதிற்கு கொடுத்து அதை நம்ப வைக்கிறது. இந்த மெதட்ல மனம் நம்பிடுச்சுனா, அந்த அழுத்தங்கள் அப்புறம் இருக்காதுனு நம்பி இருக்கார்.

அப்ப வெளி வந்த ஒரு கேரக்டர் தான் அழகர்சாமி.

அந்த கேரக்டர் யாரும் இல்ல. மரணம் அடைஞ்ச ஒரு பையனை இவர் உருவாக்கறார். இவர் கிராமத்து மனிதர்கள், அங்கிருந்து வெளியே வர்ற ஸ்டூடண்ட் எப்படி இருப்பான் அப்படின்னு இவர் படிச்சதை வெச்சு ஒரு பிம்பம் வெச்சிருக்கார். அதில் இந்த அழகிரிசாமியை மோல்ட் பண்றார்.

கிராமத்து பையன்கள் பண்ற மாதிரி ஒரு வாழ்க்கையை அந்த கேரக்டருக்கு கொடுக்கறார். மால்களைப் பார்த்து வியப்பது, சிட்டி பொண்ணுங்களை ஆச்சரியமாப் பாக்கறது.. இத்யாதி, இத்யாதி. இப்படி இவர் வில்லேஜ் பசங்களைப் பற்றி வெச்சிருக்கிற பிம்பம் தான் அழகர்சாமி.

நெக்ஸ்ட் அந்த கேரக்டரை இவர் போகணும்னு நெனச்ச வேலைக்கு அனுப்பறார். இவர் காதலிச்ச பொண்ணையே காதலிக்க வைக்கிறார். நல்லாக் காதலிக்கும் போது, சப் கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கற காதல் தோல்வி வெளிய வருது. 'அது எப்படி நான் காதலிச்சுத் தோற்று போன பொண்ணை, இவன் காதலிக்கலாம்'னு கேள்வி கேக்குது.

மனிதனோட பேஸிக் இன்ஸ்டின்க்ட் ஜெலஸி. பொறாமை ஒரு அடிப்படை குணம். அது வெளிய வந்தப்புறம், இவரே அந்தக் காதலை முடிச்சு வைக்கிறார். அதுக்கு இவர் யூஸ் பண்ணின டெக்னிக் இவர் காதல் தோல்வி அடைந்த விதம். அதே டயலாக்ஸ். மனசிலிருந்து வெளியே எடுத்து இவர் யூஸ் பண்ணி இருக்கார்.

அழகர்சாமியோட காதலை முடிச்சு வைக்க இவர் போட்ட திட்டம் தான், அப்படி ஒரு பொண்ணே இல்லைனு அழகர்சாமி காரெக்டரை நம்ப வெக்கிற சிட்சுவேஷன்ஸ்.

அப்படியே அவனைக் கொலையும் பண்ணி அவன் காரெக்டரை சாகடிச்சிடறார்.

காதல் தோல்வில அழகர்சாமி சூசைட் பண்ணிக்கிற மாதிரி, இவர் அந்த கேரக்டரை முடிச்சு வெச்சிட்டார்.

எப்படி ஓர் எழுத்தாளர் ஒரு கேரக்டரை கதைக்கு உள்ள கொண்டு வந்து, அதை அவர் ஏற்படுத்தற சிச்சுவேஷன்ஸ்ல நடமாட விட்டு, அதை செயல்பட வைக்கிறாரோ.. அதே போல் சந்த்ரூவும் அழகர்சாமினு ஒரு கேரக்டரை உருவாக்கி அதை செயல்பட வெச்சு, கடைசியில் அது இவர் காதலுக்கு போட்டின்னு வந்ததுக்கு அப்புறம், இவரே அந்த கேரக்டரை முடிச்சு வைக்கிறார்.

விஷுவல் ஹாலுஷினேஷன் படி சந்த்ரு உருவாக்கின அழகர்சாமி கேரக்டருக்கு , விசுவல் ஹாலுஷினேஷன் படி காதலி இல்லைனு செயல்படுத்தினார்னா, மனம் என்ற ஒன்றைப் பற்றி என்ன சொல்றது சொல்லுங்க?

வாட் டு சே ஃபர்தர்? மனித மனம் என்பது இன்னும் புரிபடாத ஒரு மாயக் கரும் குகை. அதில் நாம் போக வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ இருக்கு.

அவராகவே ரெண்டு கேரக்டரா இருந்து, ஒரு கேரக்டரை முடிச்சு பட் இன்னும் அந்த கேரக்டரை விட்டு வெளியே வராம இருக்கார். வி ஹேவ் டு ட்ரீட் ஹிம் இன் தட் வே.

திஸ் கேஸ் இஸ் சம் ஹவ் ரிடிகுலஸ்.

தட்ஸ் ஆல்..."

(முற்றும்.)

எனவே, நான், வேண்டாம். - 4.

சிலுசிலுவென தான் இருந்தது.

ரூஃப் டாப்பில் இருக்கும் கேண்டீனில் இருந்து உயரமான, ஒல்லி கப்பில் கார்ன் சூப்பும், வெனிலாவும் வாங்கி வந்து அமர்ந்தேன். ப்ளாஸ்டிக் சேர்களில் இருந்து வித்தியாசப்பட்டு இருந்தது. மடிவாலா ஃப்ளை ஓவர் இன்னும் தெளிவாகவே தெரிந்தது. வரும் போது ஃப்ளைட்டில் சரியாகத் தெரியவில்லை. அடைத்துக் கொண்டு இருந்த சின்னச் சின்ன கார்களும், பைக்குகளும் இண்டு இடுக்கில் கூட வியர்வை உதிர நின்று கொண்டும் நகர்ந்து கொண்டும் இருந்த ஜனங்களின் தலைக்கு மேல் பறந்து 09:20 மணிக்கு பெங்களூர் ஹெச்.ஏ.எல். ஏர்போர்ட்டில் வந்து சேர்ந்த போது ,தெரிந்தது.

இன்னும் அந்த குளிர் மாறவேயில்லை.

"Good Morning Gentleman! Welcome to the Communication Triangle Workshop. And as you know me.."

அந்த ஜெர்மானியனின் கெட்ட ஆங்கிலம் இன்னும் காதுக்குள் வட்டமிட்டபடி இருந்தது. இவன் பேசும் மொழிக்கு, அழகர்சாமியின் ஆங்கிலம் கொஞ்சம் தேவலாம் போல் இருந்தது.

சட்டென ஞாபகம் வந்தது. என்ன ஆனது அவனுக்கு? ஏன் இன்னும் ஃபோன் செய்யவில்லை?

காலை இடைவேளையில் நடந்தது என்ன?

எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. நான் கண்டறிந்த்து உண்மை தானா? இல்லை நான் தான் குழப்பிக் கொள்கிறேனா?

அழகர்சாமி பேசிய கடைசிக் காலுக்கு நானும் கால் செய்தேன். ஆனால் கிடைத்த பதில் அதிர்ச்சி அளித்தும், கொஞ்சம் நான் நினைத்தது சரி தான் என்றது போலும் தோன்றச் செய்தது. அப்படியெனில் அப்படி ஒரு எண்ணே இல்லையா? க்வின்ஸ்லேண்ட் சென்று வந்த டிக்கெட் ரசீதை மறுபடியும் தான் செக் செய்தேனே! அதில் ஒரே ஒரு Allow தானே சீல் குத்தி இருந்தது. மற்றொரு டிக்கெட் அவளிடம் இருக்கலாம். இல்லாவிடில் கிழே தூக்கி எறியப்பட்டு இருக்கலாம். அல்லது ஏதேனும் ஆகி இருக்கக் கூடிய லட்சக்கணக்கான வாய்ப்புகளில் ஏதேனும் ஒரு வாய்ப்பைத் தேர்வு செய்து அதன் விதி அமைந்திருக்கலாம்.

அதைச் செக் செய்து கொள்ளத்தானே கால் செய்து பார்த்தோம்.

அப்படி ஒரு எண்ணே இல்லை என்றால், யாருடன் அ.சாமி அப்படிக் காதலோடும் கத்தலோடும் பேசிக் கொண்டு இருந்தான்?

ஒரு முறை கூட நான் பார்க்கவில்லையே அவளை! அவளைப் பற்றி என்ன எல்லாம் சொல்லி இருக்கிறான்? Accumulate செய்! எங்காவது லாஜிக் இடிக்கிறதா, இல்லை உள்ளதா என்று பார்ப்போம்!

"எக்ஸ்க்யூஸ் மீ சார்! திஸ் இஸ் நோ ஸ்மோக்கிங் ஸோன்! சோ ப்ளீஸ்...!" மென்மையாக மறுதலித்தான் வெண்ணுடை பேரர் ஒருவன்.

இரண்டாக மடித்து, நொறுக்கி 'வா.. என்னை உபயோகி' என்று காதலுடன் பார்த்த கரடி வாய் டஸ்ட் பின்னில் விசிற்னேன் ஃபில்டரை!

மாடியில் விளிம்பில் நின்று கொண்டு யோசித்தேன்.

அவள் பெயர் என்ன சொன்னான்..? என்ன? என்ன?.. மறந்து விட்டது. அப்புறம் ஞாபகம் வரும். படுத்திக் கொள்வோம். அவள் இவனுடன் படித்தவளா? ஆ.. எப்படி இருக்க முடியும். இவன் இருந்தது மதுரையில்! அவளோ வட நாடு என்றான். சரி! எப்படிப் பழக்கம்! சென்னையின் நெரிசல்களில் காதல் பற்றிக் கொள்ள ஆயிரம் நேரங்கள் இருக்கின்றன. மற. எங்கெல்லாம் சென்றான்? பலவித ரெஸ்டாரண்ட்கள். தியேட்டர்கள். பார்க்குகள். கடைசியாக க்வின்ஸ்லேண்ட். எங்கே தங்கி இருப்பதாகச் சொல்லி இருக்கிறான். ஏதோ ஒரு ஹாஸ்டல்? விசாரிக்க வேண்டும். அவனைத் தவிர வேறு யாராவது அவளைப் பார்த்திருப்பார்களா. அவன் சொன்ன அத்தனையும் நிஜமாய் இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக ஓர் ஆயிரம் பேராவது பார்த்திருப்பார்கள்.

அழகர்சாமி மயங்க வேண்டும் என்பதற்கு அவள் ரம்பையோ, மேனகையோ என்று இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பெண்ணாய்ப் பிறந்தாலே குறைந்தது 237 பேர்களின் (ஆண், பெண் சேர்த்து!) காதலுக்கு ஆளாகிறாள் என்று புள்ளி விவரங்கள் கூறுவது நினைவுக்கு வந்தது. மற்றும் ஒருவர் ஒரே ஒருவர் அவளைப் பார்த்திருப்பதாக தெரிய வந்தால்.. போதும்.

எனது கணிப்பு தவறாகி விடும் அப்படித்தான் ஆக வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.

எதற்கும் ஒரு முறை கால் செய்து பார்ப்போம் அவனுக்கு!

மற்றும் ஒரு முறையா?

காலையில் ஷேவ் செய்து கொள்ளும் போது, ராகேஷ்ஷிடம் (ராகேஷ் யார்? அவன் என் பால்ய நண்பன். இந்தக் கதைக்கு இந்த இடத்தில் மட்டும் தேவைப்படுபவன். வேறு எந்த சீனும் இல்லை. எனவே இந்தக் கதையை நாடகமாக எடுப்பவர்கள், இக்கேரக்டருக்கு வெறும் குரலை மட்டும் யூஸ் செய்து கொள்ளவும். இல்லாவிடில் 'நடிப்பே என் மூச்சு' என்று கூறி அடங்க மறுக்கும் உங்கள் மச்சானுக்கு இந்த வேடத்தை ஒதுக்கி, அதைச் சொல்லி உங்கள் சகதர்மிணியிடம் இரண்டு நாட்கள் ஜாலிலோ ஜிம்கானா!) ஃபோன் செய்து பார்க்க சொன்னேன். பலமுறை முயற்சி செய்தும் அந்த நம்பர் கிடைக்கவே இல்லை என்று உதட்டைப் பிதுக்கினான். (ட்ராமா டைரக்டர்'ஸ் அட்டென்ஷன் : இல்லடா! லைன் கிடைக்கவே மாட்டேங்குது!)

பிறகு நான் முயற்சி செய்து பேசித் தான் மெல்ல மெல்ல விஷயத்தைக் கூறினேன். எப்படி பாலிஷாக கூறுவது என்று ஃப்ளைட்டில் உருப் போட்ட வசனங்கள் மறந்து போயின.

"அழகர்! இப்ப உங்கிட்ட ஒண்ணு சொல்லப் போறேன். அதிர்ச்சி அடையக் கூடாது! டென்ஷன் ஆகக் கூடாது. இது சில பேர்க்கு.. வொய் நாட், சில டைம்ஸ் எல்லார்க்கும் ஏற்படறது தான். சோ இதை ஒரு நோயா நீ பார்க்கக் கூடாது. இல்ல... குறுக்க ஏதும் பேசாத. நான் சொல்லி முடிச்சிடறேன். நீ காதலியா நெனச்சுக்கிட்டு இருக்கியே.. பேர் எல்லாம் வேணாம். எதுவும் பேசாத. சொல்றத கேளு. அந்தப் பேர் பொய். இல்ல, அவளே பொய். எல்லாம் பொய். நீ க்வீன்ஸ்லேண்ட் போய்ட்டு வந்ததா, அவ கூட ரெஸ்டாரண்ட்ஸ் போனதா, தியேட்டர்ஸ்ல இருட்டு மூலைகள்ல லிப் கிஸ் அடிச்சது.. ஆமா, கொஞ்சம் ஈரமா இருந்ததுனு சொன்னியே.. அது தான்.. எல்லம் பொய். ஷி இஸ் யுர் இமாஜினேஷன். ஜஸ்ட் இமாஜினேஷன். அப்படி ஒரு ஆளே கிடையாது. என்ன, நான் உளற்ரனா?

மை டியர் பாய்! நான் பொய் சொல்லல! அவள் உன்னோட ப்ரெய்ன் போட்ட ஒரு ட்ராயிங். நீ பார்த்த பல பெண்களோட பல பார்ட்ஸை வெச்சு நீயா வரைஞ்சுகிட்ட ஒரு பிக்சர். ஆமா.. அதே தான் நீ சொன்ன அந்த டைமன்ஷன்ஸ் எல்லாம் ஒரு பொண்ணுக்கு, அதுவும் நம்ம கண்ட்ரி பொண்ணுக்கு சாத்தியமே இல்ல. இட்ஸ் ப்யூர்லி எக்ஸ்ட்ரா ஆர்டினரி. அவள் உன்னோட கற்பனை. நீ அது மாதிரி பொண்ணு கூட வாழணும்னு நெனச்சு உன் கற்பனையில ஒரு லைஃப் வாழற. வெளிய வா.சரி.. அழாத... நெனச்சுப் பார். ஐ நோ யு ஆர் என் இண்டலிஜெண்ட் ஃபெல்லோ. யு கேன் அண்டர்ஸ்டாண்ட். இரு...! நான் வர்ற வரைக்கும் எங்கயும் போகாத. அந்த நம்பர்க்கு கால் பண்ணாத. இப்ப தான் பேசினியா...? இட்ஸ் தட் மேன். அது உன் கற்பனை.

ஒண்ணு செய்.

அந்த நம்பரை வேற ஒருவர்க்கு குடுத்து அவரைக் கால் பண்ணச் சொல். என்ன பதில் சொல்றார்னு மட்டும் சொல். அதை எனக்கு கால் பண்ணி சொல். அது வரைக்கும் எங்கயும் வெளியே போகாத. நம்ம பெருமாள் கிட்ட மட்டும் குடுத்துப் பேசச் சொல்.

நான் இந்த கான்ஃப்ரன்ஸ் முடிஞ்ச உடனே வந்திடுவேன். அது வரைக்கும் வெளியே எங்கயும் போகாத. ஃபுட் எல்லாம் ஃப்ரிட்ஜ்லயே இருக்கு. சாப்பிடு. நான் இன்னிக்கு வந்திடுவேன். தென் வி வில் டிஸ்கஸ்.. ஓ. கே.வா? பை."

ன் இன்னும் அவன் கால் பண்ணவே இல்லை? நான் சொன்ன மாதிரி செய்தானா? இல்லை... நான் சொல்லாததையும் செய்து கொண்டானா..! மை காட். தென் இட் வில் பி வெரி சீரியஸ்! ஐ ஹேவ் டு கோ டு சென்னை soon.

"ராக்கேஷ்..! ஆமா நான் தான்.. இல்ல, உடம்புக்கு ஒண்ணும் இல்ல. நான் இப்ப உடனே சென்னை போகணும். ஹவ் மச் soon இட்ஸ் பாஸிபிள்....! ஃப்ளைட் இப்ப இருக்காது. கார்..! உடனே ஒரு கார் அரேஞ்ச் பண்ணு! வொய் ஐ ஏம் ஒர்ரி? சொல்றேன். எல்லாக் கதையும் உனக்குச் சொல்றேன். உடனே வா! கான்ப்ரன்ஸா? லீவ் சொல்லப் போறேன் இப்ப..! உடனே வா! ஆமா! மாரத்தஹள்ளி இண்டல் ஆஃபீஸ்க்கு எதிர்ல, செகண்ட் க்ராஸ்..! ஜல்தி மேன்..!"

வியர்த்து விட்டிருந்தது எனக்கு! அவன் ஏதாவது விபரீதமாகச் செய்து விடப் போகிறான்.

ரவு எட்டு மணிக்கு வீட்டை அடைந்தோம் நானும், ராக்கேஷும்.

ஒரு மாதிரி ஓடினேன் என்று சொல்லலாம். ராக்கேஷ் காரை நிறுத்தி விட்டு வருவதற்குள்! கதவைத் திறந்து பார்க்க..

அழகர்சாமி சோஃபாவில் படுத்திருந்தான். அமைதியாக. லாங் ட்ராவலுக்கு டிக்கெட் புக் செய்து கன்பார்ம் செய்யப்பட்டவன் போல், மிக அமைதியாக. அவன் கைகளில் ஒரு குட்டி டப்பி. மாத்திரை டப்பி போல் தெரிந்தது. என்ன அதில் வெள்ளை வெள்ளை மாத்திரைகள்? ஸ்லீப்பிங் பில்ஸ்...! மை காட். உதறி விட்டு அழகர் சாமியை உலுக்கினேன்.

"அழகர்..! எழுந்திருடா..! என்னடா பண்ணிட்டே? ஏன்டா? உண்மையைத் தாங்க முடியாம இப்படி பண்னிட்ட. நான் தான் வர்றேன்னு சொன்னேன் இல்ல...!" இது நான் தானா என்றே எனக்குத் தெரியவில்லை. அழுகிறேன் நான்.

ராக்கேஷ் உள்ளே நுழைவதைப் பார்க்கிறேன்.

"பார்த்தியாடா அழகரை! நான் சொன்னேன் இல்ல! சீக்கிரம் போ, போன்னு! பார், இங்க செத்துக் கெடக்கறான்! அவன் காதலி ஒரு கற்பனைக் கேரக்டர்னு நான் சொன்னதை அவனால் ஜீரணிக்க முடியாம சூசைட் பண்ணிக்கிட்டான் பாரு! டேய் ஏண்டா செத்தா? ஏண்டா?"

அழகர்சாமியின் கழுத்துக் காலரைப் பிடித்து உலுக்கினேன்.

அகஸ்மத்தாய் அவள் பேர் ஞாபகம் வருகிறது. அவள்? அழகர்சாமியின் காதலி. கற்பனைக் காதலி.

ரீமா....

நெஞ்சில் ஏதோ பெரிய துக்கம் அலையலையாய் பொங்கிப் பொங்கி பாய்கிறது. நூறாயிரம் கீறல்கள் குறுக்கும் நெடுக்குமாய், ஆயிரமாயிரம் விசிறல்களால் நிரம்பிய என் மூளைக்குள் ஏதோ பெரும் ப்ரளயம் வெடித்தது போல் இருந்தது. கண்கள் பெரு வெளிச்சக் குடுவையாய் மாறித் துடித்தன. சிதறியது.

சூன்யம். இருளின் சூன்யம். அமைதி. காலங்கள் எல்லாம் கடந்தும் காற்றின் மேனி எங்கும் ஒரு ஆடை போல் பழங்கும் அமைதி.

மயங்குகிறேன் என்று நினைக்கி......

ராக்கேஷ் ஸ்விஃப்ட்டை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு வந்தான். சந்த்ரூவின் அப்பார்ட்மெண்ட்டுக்கு நுழையும் போது ஒரு விசித்திரம். அவனது பழைய ஹீரோ ஹோண்டா பல வருட தூசிகளோடும், அழுக்கோடும் நின்று கொண்டிருந்தது.

கதவைத் தள்ளித் திறந்து பார்த்தவன், மூச்சு விட மறந்து நின்றான்.

வரவேற்பறை அமைதியாக இருந்தது. சந்த்ருவின் பழைய துணிகள் தரையெங்கும் சிதறிக் கிடந்தன. அலமாரி பாதி திறந்திருந்தது. கால் வைக்கும் இடங்களில் எல்லாம் ஃபேர் அன் லவ்லி, ஃபேர் எவர் க்ரீம்கள் வழிந்திருந்தன. பிதுங்கிய ட்யூப்கள் உடல் முழுதும் ஒடுங்கி இருந்தன. பழைய 1100 ஒன்று ஓர் ஓரமாய் அமர்ந்திருந்தது, வெறும் உடலாக!

சோபாவில் சந்த்ரூ அழுது கொண்டு அமர்ந்திருந்தான். ரக்கேஷைப் பார்த்தான்.

"பார்த்தியாடா அழகரை! நான் சொன்னேன் இல்ல! சீக்கிரம் போ, போன்னு! பார், இங்க செத்துக் கெடக்கறான்! அவன் காதலி ஒரு கற்பனைக் காதலினு நான் சொன்னதை அவனால் ஜீரணிக்க முடியாம சூசைட் பண்ணிக்கிட்டான் பாரு! டேய் ஏண்டா செத்தா? ஏண்டா?"

ராக்கேஷ் பார்த்தான். சோஃபாவின் மேல் போடப்பட்டிருந்த பூப்போட்ட பெட்ஷீட்டைப் பிடித்து குலுக்குதல் போல் உதறினான் சந்த்ரு.

மற்றபடி அங்கு யாரும் இல்லை.....!

எங்கோ ஒரு பூனை முனகும் சத்தம் மட்டும் கேட்டது.

எனவே, நான், வேண்டாம். - 3.

ழகர்சாமியின் வாழ்வில் ஒரு பெண் வந்தாள் என்று சொல்லாமல், அ.வா.ஒ.பெ.வ. என்று நினைக்கிறேன் என்று சொல்லி இருந்தேன் அல்லவா? சொல்கிறேன். காரணங்கள் இருக்கின்றன.

அழகர்சாமி வாழ்வும் எல்லா Call Center பேச்சுலர்கள் போலவும் ஒரு சாரமற்றதாக இருந்தது. இரவு எழுந்தவுடன் வேலை; பின் களைப்பு நீக்க காபி; பகல் முழுதும் உறக்கம் என்று வழக்கப் படுத்திக் கொன்டிருந்தான். நான் கிளம்பும் போது என்னுடனே கிளம்பி விடுவான்; நான் திரும்புகையில் அவனும் திரும்பி வந்து விடுவான்.

மால்களில் அவன் கண்கள் விரிய காணும் போது, 'இவர்களை பெற்றார்களா இல்லை செய்தார்களா?' என்ற ஆதி நாள் ஐயத்தை உமிழ்வான். டி - ஷர்ட்களில் எழுதி இருக்கும் வாசகங்களைப் படித்தே அவனது ஆங்கில அறிவு விபரீதமான எதிர்த் திசைகளில் விஸ்வரூப தரிசனம் கண்டது. (உதா :Still U Think Twin Towers Demolished?)

அவனது வாழ்விலும் ஒரு பூங்காற்று வீசியது. அக்காற்று தென்னகக் காற்று அல்ல; வடக்குக் காற்று.

சில நாட்களில் புதியதாகக் காதலில் சிக்கியவர்கள் படும் அவஸ்தைகளில் மாட்டினான். தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினான். என்னிடமே 'ஃபேர் எவர், ஃபேர் அன்ட் லவ்லி.. எது மிக்க வலியது?' என்று விசாரித்தான். நான் இரண்டையும் வாங்கிக் கொடுத்தேன். என்னவோ, எனக்கு அவனிடம் விளையாடிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மிக்கிருந்தது, அப்போது.

அவனது காதலியைப் பற்றியும், அவனுக்காக அவள் எதுவும் செய்யத் தயாராய் இருப்பதையும், வேண்டுமெனில் அவனுக்காக கட்டிய புடவையோடும் வருவாள் என்றும் (வேண்டாம். அசிங்கமாய் இருக்கும். ரவிக்கையும் போட்டுக்கோ.! நன்றி:எஸ்.வி.சேகர். (1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி.)), கூறலானான்.

சில சமயங்களில் அவன் கூறும் அவன் செய்த, அவள் செய்த காதல் காரியங்களில் எனக்கு பொறாமை கூட தோன்றியதுண்டு.

பின், எனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று ஒவ்வொரு முறை சொல்லும் போதும், ஏதோ ஒரு தடங்கல் ஏற்படல் ஆனது.

சில சம்பவங்கள் சொல்கிறேன்.

ஒரு தடவை ரெஸ்டாரண்டில் நாங்கள் இருவரும் காத்திருந்தோம். வெய்ட்டர் தளும்ப, தளும்ப தண்ணீர் கொண்டு வந்து, வைத்து விட்டு என்னிடம் "வாட் டு யு வான்ட் சார்?' என்றான். அழகர்சாமி சட்டென சுருக்கிட்டு, "என்ன இருந்தாலும் நகரத்து லுக் லுக் தான் . இல்ல?" என்று மெதுவாக என்னிடம் கேட்டான். கர்வத்துடன், "டூ சிகன்65.டூ சிக்கன் லாலிபாப். டூ பட்டர் நான் செட்" என்றேன். எனக்கு அவன் காதலி இன்று வர மாட்டாள் என்ற சந்தேகம் வலுப்பெற்றிருந்தது. பேரர் என்னிடம் "ஆர் யூ வெய்ட்டிங் ஃபார் சம் ஒன் சார்?" என்று பட்டர் ஆங்கிலத்தில் கேட்டான். அழகிரிசாமிக்காக "எஸ்!" என்றேன்.

அவள் வரவேயில்லை.

மற்றொரு முறை இருவரும் க்வின்ஸ்லேண்ட் செல்கிறோம் என்று சொல்லி விட்டு சென்றான். இரவு வெகுநேரம் கழித்து வருகையில் நன்கு நனைந்து இருந்தான். செல்போன் எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்று அவள் பத்திரமாக ஹாஸ்டல் போய் சேர்ந்து விட்டாளா என்று விசாரிப்பதாகச் சென்னான். யதேச்சையாக (யதேச்சையாகத் தானா?) அங்கு சென்ற நான் தவிர்க்க இயலாமல் அந்த உரையாடலைக் கேட்க வேண்டியதாயிற்று.

"ஹாய்! நான் தான்!"

"என்ன, பத்திரமா ஹாஸ்டல் போய்ச் சேர்ந்திட்டியா?"

"நான் இப்ப தான் வந்தேன்!"

"இல்ல. சார் இன்னும் தூங்கல. எனக்காக முழிச்சுக்கிட்டு இருந்தார்."

"நீ நாளைக்கு பார்க் வந்திடற இல்ல?"

"என்னது? எந்த பார்க்கா?ம்.. பனகல் பார்க்!"

"பின்ன தெரியாத மாதிரி கேட்டா?"

"ஆமா. அதே தான்..."

"வர மாட்டியா? என்ன, இன்னும் சண்டையை ஞாபகம் வெச்சிருக்கியா?"

"சரி! அது தான் தவுஸன்ட் டைம்ஸ் சாரி கேட்டுட்டன் இல்ல..."

"எனக்கும் கோபம் வரும். அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்குத் தெரியாது!"

"ஏய் என்னடி! ரொம்ப ஓவரா பேச்சிட்டே போற! நீ தான் பரவால்லனு சொன்ன. அதனால தான் தொட்டேன். என்னவோ என்னோட வீக்னஸ் மாதிரி பேசற!"

"போடி எனக்கும் சொல்லத் தெரியும். குட்பை. குட்பை..."

எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. மானாமதுரை அழகிரிசாமியா இப்படிப் பேசியது? அப்பாவி போல் வந்தவனா இந்தப் போடு போடுகிறான்.? இதில் எனக்கு ரொம்ப குழப்பம் வந்த இடம் ஒன்று தான். அ.சாமி பேசிய வாக்கியங்கள் மட்டுமே எனக்குக் கேட்டன. அந்த பெண் பேசிய எதுவும் துளி கூட கேட்கவில்லை. காற்றே கொஞ்சமும் வீசாத சென்னையின் கொடும் இரவு நேரத்தில் மற்றொரு பாதி டயலாக் கேட்க முடியாமல் போனது ஆச்சரியமாக இருந்தது.

என்னதான் காதலியுடன் பேசுபவன் காற்றுக்கும் கேட்காத குரலில் பேசுவான் என்றாலும், அதற்காக இவ்வளவு கோபம் கொண்டு ஒருவன் கத்தும் போது, எதிர் முனையில் இருந்தும் அதே அளவிற்கு ஒரு கத்தல் இருந்திருக்க வேண்டும். ஆனால் கேட்கவே இல்லை.

எனக்கு வந்த சந்தேகம் உரக்க தன் குரலை எழுப்பியது.

உண்மையில் அழகர்சாமிக்கு காதலி என்று ஒருவள் இருக்கிறாளா? இல்லை இது ஏதாவது மெண்டல் டிஸ் ஆர்டரா? அவனாகவே காதலி என்று ஒரு பெண் இருக்கிறாள் என்று முடிவு செய்து கொண்டு கற்பனை உலகில் வாழ்கிறானா?

அன்று இரவு முழுதும் அமர்ந்து யோசித்துக் கொன்டிருந்தேன்.

பதினைந்து சிகரெட்டுகள், முப்பது பெக் ஜானி வாக்கர் என்று செலவிட்டுக் கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுத்ததில் அந்த எண்ணம் சரி என்றே தோன்றியது.

ழகர்சாமி. மானாமதுரை என்ற டவுனில் இருந்து வருகிறான். அவனுக்கு கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை இருந்து உள்ளது. தன் லுக் சிட்டி இளைஞன் போல் இல்லை. தன்னால் அவர்கள் போல் ஆங்கிலம் பேச முடியவில்லை. தான் பார்க்கும் அழகிய இளங்கள் பெண்கள் இவன் பக்கம் திரும்பக்கூட இல்லை. இவற்றை எல்லாம் எண்ணி எண்ணி, குமைந்து, குழம்பி, ஏதோ ஒரு நிலையில் மூளை குழைந்து ஒரு காதலியை சிருஷ்டித்துக் கொண்டான். அவளுடனே வாழ்கிறான். அவளுடனே ஊர் சுற்றுகிறான். அவளை எனக்கு அறிமுகம் செய்து வைக்க நினைத்த நிகழ்வுகள் ஒன்று கூட பலிக்கவில்லை. என்ன காரணம்? அவளுடனே சண்டை வேறு போடுகிறான்.

சில விஷயங்கள் செய்தால்,என் முடிவு ருசுப்படுத்தப்படும்.

மெல்ல, மெல்ல அவனது அறைக்குள் நுழைந்தேன். தலையணையைத் தலைக்கு கீழ் அழுத்தி, தூங்கிக் கொண்டிருந்தேன். அவனது மணிபர்ஸ் டேபிள் மீது, 'ஆ'வென வாய் பிளந்து கிடந்தது. மெதுவாக அதை எடுத்துப் பிரித்து தேடினேன். நான் தேடியது கிடைத்தது. சற்று உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டு, மனதிற்குள் குறித்துக் கொன்டேன். அவனது செல்போன் தலைகீழாய்த் தூங்கிக் கொண்டு இருந்தது. ரீசன்ட் கால் லிஸ்டில் இருந்த கடைசி கால்ட் நம்பரைக் கையில் குறித்துக் கொன்டு வெளியே வந்தேன்.

எனது செல்போனில் அந்த எண்ணை அழைத்தேன்.

"The Number U r trying to reach does not exist!!!"

(தொடரும்.)

Friday, April 25, 2008

எனவே, நான், வேண்டாம். - 2.

ழகர்சாமி கொஞ்சம் கொஞ்சமாக மாறிப் போகலானான்.

இரண்டு மாதத்திற்கு முன்னால் என் ஆஃபீஸுக்கு முன் மலங்க, மலங்க விழித்த மதுரைக்கார மச்சான் இல்லை இப்போது! வேறு தினுசில், வேறு வகையில் மாறி இருந்தான்.!

ஒரே மாதத்தில் கோடம்பாக்கம் ரெயில்வே ஓவர் பிரிட்ஜில் ஏறி இறங்கி, லெஃப்ட் டர்ன் செய்து, மேனகா கார்ட்ஸ் கார்னரில் ரைட் டர்ன் அடித்து, உள்ளே சந்துகளில் இருக்கும் மற்றொரு கால் சென்டரில் அவனுக்கு வேலை கிடைத்து விட்டது.

ஒரு விதத்தில் அவனுக்கு சரியான வேலை தான். ஃபாரின் கஸ்டமர்ஸ், ஊர் சுற்றிகள், ஹிப்பிகள், கை நிறைய, பாஸ் புக் நிறைய, கிரெடிட் கார்டுகளையும், பணத்தையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் சிவந்த கனவான்களுக்கும், சீமாட்டிகளுக்கும் உலகம் முழுதும் டூர் அரேஞ்ச் செய்து தரும் அமெரிக்க நிறுவனத்தின் சப்போர்ட் டீம் இந்த கால் சென்டரில்! அ.சாமி தான் பி.ஏ. ஹிஸ்டரி ஆயிற்றே! அந்த ஒரு தகுதிக்காகத் தான் அங்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்! மற்றபடி அவனது ஆங்கில உச்சரிப்பு மேல் எனக்கே, அவனுக்கே துளியும் நம்பிக்கை இருந்ததில்லை.

நானும் அங்கு ஒரு முறை ட்ரை செய்தேன். அதிகச் சம்பளம். கிடைக்கவில்லை! அதுவும் கூட அழகர்சாமியின் மாற்றங்களுக்கு காரணமாய் இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை.

வீட்டிற்கு வந்த புதிதில், The Indian Express கொடுத்து படிக்கச் சொன்னேன். எடுத்தவுடனே The Hindu வேண்டாம். அது மிக்க ஆங்கிலம் என்று பலர் சொல்லி இருக்கிறார்கள். அ.சாமி பத்திரிக்கையைப் பார்த்து விட்டு 'இது ரெயில்வே பத்திரிக்கையா?' என்று கேட்டான். புரிந்தது. சிரிப்பதா, வேண்டாமா என்று முடிவெடுக்கவில்லை! விளக்கி வாய் விட்டுப் படிக்கச் சொன்னேன்!

ஆரம்பத்தில் தடுமாறினான். மப்பில் மட்டையாகி விட்டு, அடுத்த நாள் காலையில் எழும் போது, முகமெல்லாம் அந்த கெட்ட வாடை அடிக்குமே, அது போல், தென்னக வாசம் அவனது ஆங்கிலத்தில் பரவி இருந்தது.

பகலில் நான் தூங்கிப் போனவுடன் அவன் என்ன செய்வான் என்றே தெரியாது. உணவு செய்து வைத்து விட்டு, தூங்கி விடுவேன். சாயந்திரம் விழித்துப் பார்த்தால் சாப்பாடு அப்படியே இருக்கும். விழித்துப் பார்த்தால் அவன் இருப்பான். 'எங்கே சாப்பிடுகிறான்?' என்று கேட்டால் மழுப்பலாகச் சிரித்து சமாளிப்பான். ஒருமுறை ரொம்பக் கட்டாயமாகச் சொல்லி விட்டேன். நீயும் இங்கு தான் இனிமேல் சாப்பிட வேண்டும் என்று! அன்று இரவு விழித்துப் பார்த்தால் பூனை உருட்டியது போல் பத்திரங்களை உருட்டி வைத்திருந்தான். தலையில் அடித்துக் கொண்டேன்.

சில சமயம் பகலிலேயே கண்ணில் தென்பட மாட்டான். அப்போதெல்லாம் அவனைப் பற்றி நினைக்கவே மாட்டேன். இரவில் வேலையில் இருக்கும் போது, 'திடீரென அவன் நினைவு வரும். பகலில் எங்காவது இண்டர்வ்யூ சென்றிருப்பான் என்று சமாதானப் படுத்திக் கொள்வேன்.

இருவருக்கும் கிடைக்கின்ற லீவுகளில் மெரினா பீச், சமாதிகள், செத்த ம்யூஸியம், உயிருள்ள ம்யூஸியம், மயிலை கோயில், பறக்கும் ரயில், அஷ்டலட்சுமி கோயில், எலியட்ஸ் பீச், கிண்டி ரேஸ் கோர்ஸ் (7-ம் நம்பர் இன்னிக்கு கெலிச்சிடுச்சு சார்!), மின்சார ரயில் (கள்ளழகர் வைகையில் எறங்கும் போது, இருக்கற கூட்டம் மாதிரி இல்ல இருக்கு!), 21G, 12B, கோயம்பேடு, மால்கள், சென்ட்ரல், மவுண்ட் ரோடு ஹிக்கின் பாதம்ஸ், பர்மா பஜார் (சார்! சி.டி., டி.வி.டி., எல்லாம் போதுமா சார்? நம்ம கையுல நல்ல குட்டிங்க இருக்குது! சுத்தம். எந்த நோயும் இருக்காது! எல்லாம் டீஸ்ண்டான கேள்ஸ்! அவருக்கு 100 ரூபா தான். வர்றியா சார்?), ஹை கோர்ட், மண்ணடி லாரி ஆபீஸ்கள், ஹார்பர், தி.நகர் எறும்பு மனிதர்கள், கடைகள், புரசை துணிக் கடை.. இல்லை. துணிக் கடல்கள், திருவல்லிக்கேணி பாதசாரி புத்தக கடைகள், லஸ் கார்னர் ஆழ்வார் புத்தக விரிப்பு, சாந்தோம் சர்ச், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் (அப்பாடா! இது ஒண்ணு தான் எங்க ஊர்ல இருக்கற மாதிரி இருக்கு!), L.I.C., The One and Only கூவம்.....

தருமமிகு சென்னையின் பெருமைகளைக் கிராமத்து Migrantக்கு காட்டவேண்டியது, தலைமுறை சென்னைவாசியின் தார்மீகக் கடமை என்றே உறுதியாக நம்பினேன்.

முதல் மாற்றம் செல்போனில் வந்தது.

நான் பயன்படுத்தி ஓரம் கட்டி இருந்த, ஒரு மாடல் செல்போனைக் கொடுத்தேன். (இப்போது அந்த மாடல் Production-லேயே இல்லையாமே!). ராமரிடம் பாதரட்சையை வாங்கும் போது பரதன் கூட அப்படியொரு பணிவு காட்டி இருக்க மாட்டான். அப்படி ஒரு பணிவுடன் வாங்கிக் கொண்டான். நானே ரீசார்ஜ் செய்து கொடுக்க, முதல் கால் எனக்கே பேசினான்.

பக்கத்து பக்கத்து சோபாவில் அமர்ந்து கொண்டு இருவரும் போனில் பேசுவது, அவனுக்கு மிக்க வினோதமான காரியமாகத் தோன்றியிருக்க வேண்டும். முகம் கொள்ளாத சிரிப்பு அவனுக்கு!

பீரோவில் இருந்த என்னுடைய பழைய உடைகளை எடுத்துக் கொடுத்தேன். அணிந்து கொண்டான். அவனுக்கு ஓரளவு சரியாகத் தான் இருந்தன.

"வண்டி வாங்கலாம்னு இருக்கேன்! எது பெஸ்ட் சொல்லுங்க சார்! DTS-i, Pulsar, Unicorn?" என்று ஒரு தோரணையில் கேட்டான்.

பணம் ஸார், பணம்.

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்! பணத்தை எல்லாம் பாட்டிக்கு அனுப்பிட்டு, என்னோட பழைய வண்டியை யூஸ் பண்ணிக்கோ!" என்றேன். சரி என்றான் உடனடியாக. Hero Honda.

இப்படியாகச் சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்வில், இல்லை... இல்லை.. மானாமதுரை அழகர்சாமியின் வாழ்வில் ஒரு பெண் வந்தாள்....

என்று நினைக்கிறேன்.

(தொடரும்.)

எனவே, நான், வேண்டாம். - 1.

Chapter 2.
Chapter 3.
Chapter 4.
Chapter 5.

***

நான் சந்த்ரு.

வெள்ளி இரவு ஸ்ப்ளெண்டரை எடுத்துக் கொண்டு, ஈ.சி.ஆர் ரோட்டில் வேகமாய்ப் பறந்து, பாண்டியில் சரக்கடித்து, பின்னிரவில் வீட்டுக்கு வந்து தூங்கி, சனி அரைநாளில் எழுந்து, இரவு டாஸ்மாக் சரக்குகளை மிக்ஸ் செய்து அடித்து விட்டு, ஞாயிறு எப்படிப் போகின்றது என்றே தெரியாமல் போய், ஸ்பென்ஸரிலோ, அல்சா மாலிலோ, சிட்டி சென்டரிலோ. இஸ்ஃபானியிலேயோ கூட்டத்தில் கலந்து, அடுத்த நாள் காலை எலெக்ட்ரான் எழுத்துக்களைப் பீச்சியடிக்கும் எந்திரத்தின் முன் தொலைந்து போகும் கணிப்பொறி அடிமைகளில் ஓர் இந்தியப் பிரஜை நீங்கள் என்றால், நான் உங்களால் புரிந்து கொள்ளப்படுவேன்.

இது என்னைப் பற்றிய கதை அல்ல.

என்னைப் பற்றியும் சொல்லிக் கொள்ள சில பத்திகள் உள்ளன. மீ இளம் வயதில் மெரீனா அலைகளில் தொலைந்து போக இருந்தது, கிராமத்துக்குச் சென்ற ஒரு மாத லீவில் கிணற்றில் இருந்து வரிசையாக எடுக்கப்பட்ட ஒரு குடும்பப் பிணங்கள், காலேஜின் சிம்லா டூரில், ஓர் இரவின் குளிருக்கு கம்பளிப் போர்வையின் உள் சூடு ஏற்றிக் கொண்ட லாட்ஜ் இரவு...

இது அழகர்சாமி பற்றிய கதை.

அ.சாமி யார்? சொல்கிறேன். எங்கும் போகப் போவதில்லை நான். இன்று லீவ் சொல்லி விட்டேன். எதற்கு? உங்களுக்கு இந்தக் கதை சொல்ல. அவ்வளவு அவசரமா? ஆம். ஏன்? தெரியவில்லை. சொல்லி விடுகிறேன். அழகர்சாமி என் வாழ்வில் வந்தது முதல், அவனுக்கு இருந்த நோயை நான் கண்டறிந்தது, (நோய் என்று சொல்லலாமா, Mental Disorder எனலாம். நன்றி : விக்கிபீடியா.), அவன் இப்போது அடைந்துள்ள நிலைமை...! அனைத்தும் சொல்கிறேன். சென்னைக்குப் போக 6 மணி நேரம் ஆகும். அதுவும் பெங்களூரின் தெருவின் கோலிக் குண்டு ட்ராஃபிக்கில் இருந்து மீண்டு...!

அழகர்சாமி மதுரையில் இருந்து வந்தவன். கேட்டால் அப்படித் தான் சொல்லுவான். 'எனக்கும் மதுரை தெரியும். தெற்கு மாசி வீதியில், கல்யாணி கவரிங் ஒட்டிய சந்தில் தான் என் நண்பன் சந்திரசேகரன் வீடு என்று சொல்லுங்கள். உடனே சினேகமாவான். பின் சொந்த ஊர் மானாமதுரை என்பான். அங்கே எந்த மாசி வீதியையும், எந்த சுந்தரபாண்டியனையும், சொக்கநாதனையும் தெரியாததால், நான் அதற்கு மேல் வற்புறுத்திக் கேட்கவில்லை. உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் கேட்டுப் பார்க்கலாம். கூட வருகிறீர்கள் தானே? நல்லது.

சென்னையின் அழுக்கான வடபழனி டிப்போ பின்புறம் உள்ள முத்தம்மாள் காலனியின் அடுக்கு வீடுகளில் பிறந்து வாழும் சந்த்ருவுக்கும், மதுரை தந்த மாணிக்கம் அழகர்சாமிக்கும் எப்படி தொடர்பு?

இந்த இடத்தில் என் வேலையைப் பற்றி சொல்லி விடுவது அவசியமாகிறது. வேளச்சேரியின் இடுக்குகளில் உள்ள ஓர் 'அழைப்பு மையத்தில்' பணியாற்றுகிறேன். Call Center என்று சொன்னால் என் மேல் தார் பூசவும், எனது கொடும்பாவி எரிக்கவும் சிலர் எப்போதும் தயாராக இருப்பதாக தகவல்!

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஒரு Customer Products கம்பெனியின் Customer Support Division, இந்த Call Center -உடன் ஓர் ஒப்பந்தம்! அவர்களது மைக்ரோ அவன், ஃபிரிட்ஜ், குண்டூசி, பின்னூக்கு, காண்டம் வரைக்கும் ஸப்போர்ட் செய்கிறோம்.

உதாரணத்திற்கு சில கஸ்டமர் Queries -ம், அதற்கு எங்கள் Solutions -ம் என்று சொல்லி, உடனடியாக இந்தக் கதைக்கு A முத்திரை குத்திக் கொள்ள நான் விரும்பவில்லை.

ழகர்சாமியை ஒரு சாதாரண நாளில் - எந்த ராக்கெட்டும் ஏவப்படவில்லை, இந்திய அணி ஜெயிக்கவில்லை, மின்சாரம் தடையின்றிப் பாயவில்லை, காற்று ஒலிப்பான்களை நகர எல்லையில் உபயோகிக்காமல் இல்லை - மிகச் சாதாரண நாளில் சந்தித்தேன். எங்கே? என் அலுவலகத்தின் வாசலில்! பூப்போட்ட பிளாஸ்டிக் பேக், நீலம் பரவிய ஒரு ஃபுல் ஹேண்ட் சட்டை, ஒட்டிய உடலோடு, இறுக்கப் பிடித்த பழுப்பு பேண்ட், கண்டக்டர் ஷூ, நகரத்தின் பிரம்மாண்ட வெளிச்சப் புள்ளிகளை, வெறியோடு ஓடும் பெட்ரோல் பூச்சிகளையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

"யார் நீங்க? இங்க என்ன பண்றீங்க..?" கேட்டேன்.

மிரண்டான். எனது அலங்காரம் அவனுக்கு கொஞ்சம் பயத்தைத் தந்திருக்க வேண்டும். பளிச்சென்ற ஷேவ் செய்த முகம், இன் செய்த அயர்ன்ட் மெரூன் ப்ளெய்ன் ஷர்ட், ரோஸ் நிற பக்கிள் இறுக்கத்தில் ஹோலோகிராம் மின்னலில் பெல்ட், பேண்ட், கட் ஷூ என்றதோடு இல்லாமல், அலுவலகத்தின் நாய்ப் பட்டையும் அணிந்து, நகரத் திமிர் திகழும் 21-ம் நூற்றாண்டின் நாகரீக வேலைக்காரனைக் காணும் கிராமத்தானின் மிரட்சியை அட்சர சுத்தமாகக் காட்டினான்.

"சார்! நான் இங்க வேலைக்கு இண்டர்வ்யூக்கு வந்தேன்! கிடைக்கல! அதான் என்ன பண்றதுன்னு தெரியாம நிக்கறேன்!"

"ஊருக்கு கிளம்ப வேண்டியது தான்! வேறென்ன செய்றது? எந்த ஊர் நீ?" வேலை இல்லாதவன் என்றதும் திமிர் எகிறியது. 7 பாராக்களுக்கு முன் படித்துப் பாருங்கள் தயவு செய்து! அந்த பதிலைத் தான் சொன்னான். எனக்குப் பாவமாக இருந்தது.

"விவசாயம் இல்லை! நெலம் எல்லாம் காஞ்சு போச்சு! ஊருல என்ன சார் இருக்கு இனிமேல! ஒண்ணும் இல்ல! ஏதோ கொஞ்சம் படிச்சிருக்கேன்! அமெரிக்கன் காலேஜ்! பி.ஏ., ஹிஸ்டரி! எதுவும் வேலை கிடைக்கல! மெட்ராஸ்ல கால் சென்டர்ல தான் கொத்துக் கொத்தா ஆள் எடுக்கறதா கேள்விப்பட்டேன். அதனால தான் இங்க வந்தேன்! வேலை கெடைக்காம ஊருக்குப் போனா... அது மரியாதையா இருக்காது சார்!" என்றான்.

எனக்கு கொஞ்சம் பரிதாபமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது. இது போன்ற வாழ்க்கை தேடி கிராமத்தில் இருந்து வருபவனுக்கு உதவி செய்வதன் மூலம், நானும் சமூக அக்கறை உள்ளவன் என்று சொறிந்து கொள்ள நினைத்தேன்.

"சரி! உனக்கு நான் ஒரு ஹெல்ப் பண்றேன்! உனக்கு வேலை கிடைக்கற வரைக்கும் என் வீட்டுல தங்கிக்கலாம். ஜாப் கிடைச்சதுக்கு அப்புறம் உன் வசதிப்படி மாறிக்கலாம். நான் இப்ப தனியா தான் இருக்கேன். பேரண்ட்ஸ் ரூர்கி போய் இருக்காங்க! அக்கா ஹஸ்பண்ட் யூனிவர்சிட்டு ப்ரொபஸர். அக்கா ப்ரெக்னன்ட். டெலிவரிக்கு ஹெல்ப் பண்ண போயிருக்காங்க! எங்கூட இருக உனக்கு ஓகேவா?"

"சார்! ரொம்ப தேங்க்ஸ் சார்!"

"உனக்கு ஊர்ல யார் இருக்கா?"

"யாரும் இல்ல சார்! ஒரே ஒரு பாட்டி மட்டும் தான்!" என்றான்.

"சந்த்ரு! அங்க என்ன பண்ணிட்டு இருக்க? ஹெட் கூப்பிடறார் பாரு!" மதி இரைந்தான்.

இவனிடம் சொல்லலாமா என்று நினைத்தேன். சட்டென்று மாற்றிக் கொண்டேன். கம்பெனியில் ரிஜக்ட் பண்ணப்பட்ட ஒரு கேண்டிடேட்டை எம்ப்ளாயி கூட தங்க வைத்துக் கொண்டால், அது ஏதாவது பிரச்னையாக ஆக்கப்படலாம்.

எனவே, வேண்டாம்!

"நத்திங் மதி! கொஞ்சம் வீடு வரைக்கும் போய்ட்டு வர்றேன்! ஒரு ஆஃப் அன் ஹவர் மட்டும் என் டெர்மினல்ஸ்க்கு Stand By போடச் சொல்லு! இல்லாட்டி ட்ரெய்னிங் பேட்சில் ராஜாராமன் இருப்பான் பார்! அவனை பார்த்துக்கச் சொல்! நான் வந்திடறேன்!"

படை வீரர்களைப் போல் நின்றிருந்த இரட்டைக் கால் குதிரைகளில் இருந்து, பல்ஸரை உருவினேன்.

என் பல்ஸர்.

(தொடரும்.)

***

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

Thursday, April 24, 2008

ஒளியிலே தெரிவது...

சென்ற அழகிய நிலாக் காலங்களில் ,வெள்ளிக் கிழமை இரவுக்காகக் காத்திருப்போம். ஏழரை ஆனவுடன் ஓடிப் போய் டி.வி.யில் மூழ்கிப் போவோம். 'ஒளியும் ஒலியும்'க்காக. அதில் காட்சி எங்கிருந்து வருகின்றது? டி.வி.யின் கேதோடு குழாயில் இருந்து. அந்த எலெக்ட்ரான் கதிர்கள் திரையில் மோதி, நமக்கு காட்சிகளாய்ப் புலர்ந்தன. இதில் ஒளி எங்கிருந்து வருகின்றது?

உண்மையில் ஒளி என்பது என்ன?

ஒரு பண்டிதர் மிக்க படித்த கர்வத்தோடு ஊர்வலம் வந்தார். அவரை அனைவரும் பணிந்து வணங்கினர். ஆனால் ஒரு சிறுவன் மட்டும் அவரை கவனியாது விளையாடிக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த பண்டிதர், அவனிடம் வந்து 'எனக்கு தெரிந்ததை விட உனக்கு தெரியுமா? என்னை மதிக்க மாட்டேன் என்கிறாயே?' என்று கேட்டார். அவன், 'ஐயா, நான் கேட்கிற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்' என்றான். ஒத்துக் கொண்டார் பண்டிதர். ஒரு தீக்குச்சியை எடுத்து, தீப்பெட்டியில் உரசிப் பற்ற வைத்தான். 'ஐயா, இந்த நெருப்பு எங்கிருந்து வந்தது?' என்று கேட்டான். பண்டிதர் திகைத்துப் போய் தோல்வியை ஒத்துக் கொண்டு, அவனையே பதில் கூறுமாறு கேட்டார். அவன் உடனே தீக்குச்சியை ஊதி அணைத்தான். 'ஐயா, இப்போது நெருப்பு எங்கே போனதோ, அங்கிருந்து தான் வந்தது..!' என்று கூறி விட்டுப் போனான். பண்டிதரும் கர்வம் விட்டொழிந்தார் என்பது கதை.

சிக்கி முக்கிக் கற்கள், தீப்பந்தம், இலாந்தர் விளக்கு, தீக்குச்சி - தீப்பெட்டி, கேண்டில், மேண்டில், பிளாஸ்டிக் சுவிட்சுகள் என்று வந்து விட்டாலும் அணைத்தவுடன் அந்த வெளிச்சம் எங்கு தான் போகின்றது என்பது நமக்குத் தெரிகின்றதா?

கொஞ்சம் நான் படித்த கதைகளை பார்க்கலாம், நான் புரிந்து கொண்டதைப் பொறுத்து...!

கிழக்கு நோக்கி 100 கி.மீ. வேகத்தில் பைக்கில் போகின்றோம். நம்மோடு இணையாக மற்றொருவன் 100 கி.மீ. வேகத்தில் கிழக்கு நோக்கியே வருகிறான். நமக்கு அவன் என்ன வேகத்தில் போவதாகத் தெரியும்? நம்மோடு இணையாக வருவதால், அவன் நிலையாக நிற்பதாகவே தெரியும். நன்று. அதே சமயம் நமக்கு இணையாக மேற்கு நோக்கி மற்றொருவன் 100 கி.மீ. வேகத்தில் வருவதாகக் கொள்வோம். அவனது வேகம் நம்மைப் பொறுத்த வரை 200 கி.மீ.

அதாவது எதிரெதிராகப் பயணிக்கையில் வேகங்கள் கூடும், ஒரே திசையில் பயணிக்கையில் வேகங்கள் கழிக்கப்படும் - ஒரு நகர்கின்ற ஊடகத்தில் இருக்கின்றவருக்கு!

ஐன்ஸ்டீன் ஐயாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது. 'ஒளிக்கற்றை ஒன்று காற்றில் போகையில், நாமும் அதன் வேகத்தில் அதே திசையில் சென்றாலோ, அதற்கு எதிரான திசையில் சென்றாலோ, நாம் உணர்கின்ற ஒளியின் வேகம் என்னவாக இருக்கும்?'

இதை அவருக்கு முன்பே மைக்கல்சன் - மார்லே என்ற இரு விஞ்ஞானிகள் செய்து பார்த்திருக்கிறார்கள். எப்படி?

ஆனால் அவர்கள் இந்த சிந்தனையில் ஆய்வு செய்யவில்லை. நீர் அலைகள் செல்ல நீர் என்ற ஓர் ஊடகம் தேவை. அது போல ஒளி அலைகள் செல்லவும் ஓர் ஊடகம் தேவை என்று நினைத்தனர். ஆனால் ஒளியானது காற்றே இல்லாத வெற்றிடத்திலும் பாய்கின்றது என்பதால் (இல்லாவிடில் பூமியின் காற்றுமண்டலத்திற்கு அப்பால் உள்ள வெற்றிடத்தில் இருக்கும் சூரியனிடம் இருந்து ஒளி நம்மை வந்து அடைய முடியுமா?) வெற்றிடத்தில் ஒளி பாயக் கூடிய 'ஈதர்' என்ற ஊடகம் இருக்க வேண்டும் என்று நம்பினர்.

அவர்களது சோதனையின் மூலம் 'ஈதர்' என்ற ஊடகம் வெளியில் இல்லை என்றும், ஒளியின் வேகமானது எத்திசையில் இருந்து அளவிட்டாலும் சமமாகவே இருப்பது அறிந்து வியந்தனர்.

நாம் ஒளிக்கு எதிராகப் பயணம் செய்தாலோ, ஒளியோடு சேர்ந்து பயணம் செய்தாலோ, ஒளியின் வேகம் ஒரே அளவாகவே இருப்பது கண்டறியப்பட்டது.

Time Dilation



ஒளிப்படம் 1 : Time Dilation.

இரு விண் கப்பல்கள் ஏறக்குறைய ஒளியின் வேகத்தில் செல்வதாக வைத்துக் கொள்வோம். (ஏன் சரியாக ஒளியின் வேகத்திலேயே செல்ல முடியாது? பார்ப்போம்.) ஒன்று மேலும், ஒன்று கீழுமாக! மேலிருக்கும் கப்பல் ஒளித் துணுக்குகளை கீழ் நோக்கி அனுப்புகிறது. கீழ் இருக்கும் கப்பல் ஒளித்துணுக்குகளை திருப்பி அனுப்புகிறது. இப்படியாக இவர்களது பயணம் இருக்கிறது. மேல் கப்பலிலோ, கீழ் கப்பலிலோ இருப்பவர்கள் ஒளியின் பயணம் நேர்க்கோட்டில் இருப்பதாகவே பார்ப்பார்கள். இப்போது இக்கப்பல்களின் பயணத்தை நிலையாக நிற்கின்ற (கப்பலகளைப் பொறுத்து) கிரகத்தில் இருந்து ஒருவர் பார்க்கின்றார். அவருக்கு ஒளித்துணுக்கு செல்லும் பாதையானது நேர்க்கோட்டில் இல்லாமல், 'V' வடிவத்தில் இருக்கின்றது.

ஒளித்துணுக்கு உண்மையில் கடக்கும் தொலைவு தான் என்ன? இரு கப்பல்களுக்கு இடையே இருக்கும் தொலைவு தான் என்பர் கப்பலில் இருப்பவர்கள். 'V' வடிவத்தின் நீளம் என்பார் கிரகத்தில் இருப்பவர்.

எனில் எது உண்மை?

ஒளியின் வேகம் மாறாதது. ஒளி கடந்த தொலைவும் மாறாதது. எனவே எது தான் மாறி இருக்கின்றது? நேரம். அளவிட்ட நேரம். ஒருவரைப் பொறுத்து ஒருவர் நகர்ந்து கொண்டே இருக்கையில், அவர்கள் அடுத்தவரின் நேரம் குறைவாகவே போகும் என்று கணிக்கிறார்கள். இதுவே Time Dilation.

கணிப்பொறி எல்லாம் வருவதற்கு முன்பே சிந்தித்தே இதை எல்லாம் சொல்லி விட்டார் ஐன்ஸ்டீன் அவர்கள்.



படம் 1 : ஒளி சென்ற தூரம் கணக்கீடு.

இப்போது ஒரு சின்னக் கணக்கு. ஏன் ஒளியின் வேகத்திலோ, அதையும் தாண்டிய வேகத்திலோ எதுவும் / யாரும் செல்ல முடியாது என்று புரிகிறதா, பார்ப்போம்.

இரு கப்பல்களுக்கு இடையே ஒளி கடந்த தொலைவு = ct.

c = ஒளியின் வேகம்.

t = ஒளி இரு கப்பல்களுக்கு இடையே உள்ள தொலைவைக் கடக்க எடுத்துக் கொண்ட காலம்.

கிரகத்தில் இருந்து பார்ப்பவரைப் பொறுத்து, இரு கப்பல்களுக்கு இடையே ஒளி கடந்த தொலைவு = cT.

T = கிரகத்தில் இருந்து பார்ப்பவரைப் பொறுத்து, ஒளி இரு கப்பல்களுக்கு இடையே உள்ள தொலைவைக் கடக்க எடுத்துக் கொண்ட காலம்.

ஒளி கப்பல்களுக்கு இடையே போய் வருகையில் கப்பல் கடந்த தூரம் = vT.

v = ஏறக்குறைய ஒளியின் வேகம். கப்பலின் வேகம்.


பிதாகறஸைக் கூப்பிடுங்க. கணக்கு போட்டுப் பார்த்தால், இரண்டு பேரும் கணிக்கின்ற நேரங்களுக்கு இடையே இருக்கின்ற வித்தியாசம் தெரிகின்றது.





இந்த மதிப்பில் நாம சில விளையாட்டு விளையாடிப் பார்க்கலாமா?

1.முதலில் v=0. என்ன அர்த்தம்? கப்பல்கள் நகரவே இல்லை. அப்படியே நிற்கின்றன. அப்ப இதோட மதிப்பு என்ன. சுழி. அப்ப ரெண்டு பேரும் கணக்கிடுகின்ற நேரம் சமமாகவே இருக்கும். சரி தான். எப்படின்னா, இரு கப்பல் பைலட்டுகளைப் பொறுத்தவரை, இரு கப்பல்களும் நகரவே இல்லை. அப்போது, அவர்கள் கணிக்கின்ற நேரம் சமமாகவே இருந்தது அல்லவா?

2. இப்போது v = c. அதாவது மிகச் சரியாக ஒளியின் வேகத்திலேயே கப்பல்கள் போகின்றன. அப்போது, இதன் மதிப்பு 1/0. கணிக்கவே முடியாத மதிப்பு ஆகின்றது.

3. v = 3c. அதாவது ஒளியின் வேகத்தை விட, அதிக வேகத்தில் கப்பல்கள் போகின்றன. அப்போது இதன் மதிப்பு என்ன? ரூட்டுக்குள் நெகட்டிவ் வருகின்றது. நடைமுறையில் வரவே இயலாத முடிவு. எனவே எந்த ஊர் ராசாவாக இருந்தாலும், ஓடுவதில் ஒளியோடு போட்டி போட முடியாது என்பது தெளிவாகின்றது.

ஒளி தான் கிங்.



சுவிட்ச் ON பண்ணுங்க. ஒளி எப்படி ஓடுது?

சும்மா பிச்சுகினு ஓடுது இல்ல?

எப்டி?

சும்மா பிச்சுகினு...!

ஒளியார் யார்?

சென்ற நூற்றாண்டு வரைக்கும் ஒளியைப் பற்றி ஒரே தியரி தான் இருந்ததாகத் தெரிகின்றது. ஒளி அலை வடிவம் தான் என்றார்கள். அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் குழப்பம் வர ஆரம்பித்தது. ஐன்ஸ்டீன் வந்தார்.

ஒளியைக் கேட்டார்."நீ யாரு? அலையா, துகளா?"

எஸ்.ஜே.சூர்யா மாதிரி, "அலை தான். ஆனா இல்லை. துகள் தான். ஆனா இல்லை". குழப்பம் தான்.

சில ஆய்வுகள் ஒளி அலைதான் என்று கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்தன. மற்ற சில ஆய்வுகள் ஒளி துகள் தான் என்று துண்டு போட்டுத் தாண்டின.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1."ஏன்னா, பூத் சாத்திடப் போறான். வராண்டால உக்காந்து பேப்பர் படிச்சது போதும். போய் பால் வாங்கிட்டு வாங்கோ.." சமையல் அறையில் இருந்து சகதர்மிணியின் குரல் கேட்கின்றது. ஆனால் அவரது உருவம் தெரிவதில்லை. என்ன காரணம்? குரல் ஒலி அலைகளால் ஆனது. சுவர்கள் தாண்டி பாய்ந்து வருகின்றது. அவரது உருவத்தின் மீது ஒளி விழுந்து சுவர்கள் தாண்டி வருவதில்லை. எனவே ஒளி துகள் தான். அலை கிடையாது.

2. கண்ணாடியில் பட்டு எதிரொலிக்கின்றது. ஊடுறுவுகின்றது. சிதறுகின்றது.எனவே அலை தான்.

3.நம்மை பூமி இழுக்கின்றது புவி ஈர்ப்பு. காரணம் நமது உடல் அணுத் துகள்களால் ஆனது. ஒலியை புவி ஈர்ப்பு விசை இழுப்பதில்லை. ஏனெனில் அது அலைகளால் ஆனது. துகள் பிஸ்னெஸே கிடையாது.

ஆனால் ஐன்ஸ்டீன் ஐயா செய்த சில ஆய்வுகளில் ஒளி துகள் தான் என்று உணர்ந்தார். எனவே தொலைதூர நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளி சூரியனின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டிருக்கும். அதனால் அது சற்று தள்ளியே நம்மை வந்தடையும் என்றார். 1919ல் நிகழ்ந்த ஒரு சூரிய கிரகணத்தில் அது மெய்ப்பிக்கப்பட்டு, as they told ஐன்ஸ்டீன் 'ஒரே இரவில் உலகப் புகழ் பெற்றார்'.

அதைப் பற்றிய பத்திரிக்கைச் செய்தி.:



உள் அழுத்தம் அதிகமாக, அதிகமாக ஈர்ப்பு விசை அதிகமாகி, நட்சத்திரங்கள் அழியும் காலத்தில் உச்ச ஈர்ப்பு விசை அடைந்து எல்லாவற்றையும் அசுரப் பசியோடு விழுங்கும். ஒளி கூட அதில் இருந்து தப்ப முடியாது. (இதைத் தான் 'அணையப் போற விளக்கு பிரகாசமா எரியும்'னு நம்ம ஊருல சொன்னாங்களோ? யோசிக்க வேண்டிய விஷயம் தான். இதை வெச்சிட்டு BlackHoles பற்றி நமக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்குனு சொல்வது சரியல்ல.)அவை கருந்துளைகள் (Black Holes) எனப்படும் என்று கண்டுபிடித்து பல முன்னேற்றங்கள் அடைந்திருக்கிறார்கள்.



ஸ்டீபன் ஹாக்கிங் இன்னும் மேலே சென்று எதிர் அணுக்கள் என்று ஒன்று மட்டும் தப்பிக்கும் என்கிறார். (Black Holes and Baby Universes and Other Essays).

ஒரே குழப்பம் தான்.

ஒளி, நீங்க அலையா, துகளா...?

தெரியலையேப்பா..!

ம்மாளுங்க என்ன சொல்லி இருக்காங்க?

இறைவனை ஒளி வடிவில் பார்க்கிறார்கள். சூரியனை தலைவனாகக் கொண்டு இந்து மதத்தில் ஒரு பிரிவே இருந்திருக்கின்றது. நெருப்பு போல் தூய்மை இருக்க வேண்டும் என்றார்கள். வீடுகளில் விளக்கேற்றுகிறோம். மகர ஜோதி பார்க்கிறோம். விஷேசங்களில் பந்தமோ, விளக்கோ ஏற்றுகிறோம். திருமுறைகளையோ, இலக்கியங்களிலோ பரிச்சயம் இருப்பவர்கள் இன்னும் சொல்லலாம்.



நாம் சின்னதாக ஒன்றை மட்டும் சொல்லி முடித்துக் கொள்வோம்.

அருட்பெருஞ்சோதி, அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்சோதி...!


http://en.wikipedia.org/wiki/Michelson-Morley_experiment

http://www.glenbrook.k12.il.us/gbssci/phys/Class/light/u12l1a.html

http://www.lightandmatter.com/

***

இப்பதிவில் ஏதாவது பிழை இருப்பின் தயவித்து தெரிவித்தால் மகிழ்வேன். திருத்திக் கொள்வேன்.

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

இரட்டைக் கிளவி..!



'லகல கலகல ரெட்டைக்கிளவி
தகதக தகதக ரெட்டைக்கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ!

பிரித்து வைத்தல் நியாயமில்லை
பிரித்துப் பார்த்தால் பொருளுமில்லை
ரெண்டல்லோ ரெண்டும் ஒன்றல்லோ!'

மாடர்ன் மங்கையாக ஓர் ஐஸும், தாவணி போட்ட தீபாவளியாக மற்றோர் ஐஸும் கலந்து கட்டி ஆட, எஸ்.வி.சேகர் கோக்கில் விஸ்கி கலந்து கொடுத்து இரண்டு ப்ரசாந்த்களையும் மயக்க, அவை இல்லாமலேயே நாம் கிறங்கிப் பார்க்க இரகுமானின் இசையில், வெங்கியின் கிராபிக்ஸ் காட்சிகளில் எலும்புக்கூடு பரத வணக்கம் சொல்லி எட்டு வைத்துப் போகும் 'கண்ணோடு காண்பதெல்லாம்' பாட்டில் தான் இரட்டைக் கிளவி தெளிவாகப் புரிந்தது.

ஒரே வார்த்தை இரண்டு முறை வரும். சேர்ந்து படிக்கும் போது அர்த்தம் இருகும். பிரித்து வைத்தால் ஒரு பொருளும் கொடுக்காது. அதுவே இரட்டைக் கிளவி என்று அறிகிறோம்.

அடுக்குத் தொடர் என்று ஒன்றும் இருக்கின்றது. 'அவள் அந்த டைட்டான டீஷர்ட்டில் மப்பும் மந்தாரமுமாக, கொப்பும் குலையுமாக நின்றாள்.' என்று படித்தால் புரிந்து கொள்கிறோம். மப்புக்கும், மந்தாரத்திற்கும், கொப்புக்கும், குலைக்கும் தனித்தனியே அர்த்தங்கள் இருக்கும் போது அவை சேர்ந்து வருகையில் வேறோர் அர்த்தம் தருகின்றன அல்லவா?

'ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி கலகல என வீதியிலே'

என்ற பழைய பாடலிலும் சரோஜா தேவி (இந்த ச.தேவி. நடிகைங்க..!) பாடிச் செல்வார். அதிலும் இரட்டைக் கிளவி வருகின்றது.

'காத்து சும்மா சிலுசிலுனு வீசுது.'

'க்ளைமேட் குளுகுளுனு இருக்கில்ல?'

'எங்கப்பா படிபடினு உயிர் எடுக்கிறார்.' - இது இரட்டைக் கிளவியா? அடுகுத் தொடர் என்று நினைக்கிறேன்.

'மரத்துல சும்மா விறுவிறுனு ஏறிட்டான்.'

'சதுப்பு நிலம் சொதசொத என்று இருக்கும்.'

வற்றை விட அட்டகாசமா இரட்டைக் கிளவி நாம அடிக்கடி கேட்ட ,கேட்கிற பாடல்ல வருதுங்க. அதே தாங்க.. கந்தர் சஷ்டி கவசம் தான்.

பாடல் நடுவில,

ரகன பவச ர ர ர ர ர ர ர
ரிகன பவச ரி ரி ரி ரி ரி ரி ரி

னும்,

செக கன செக கன செக கன செகன
மொக மொக மொக மொக மொக மொக மொகன
நக நக நக நக நக நக நகென
டிகு குன டிகு டிகு டிகு குன டிகுன

ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர ர
ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி ரி
டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு
டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு

னும் கேட்டிருக்கோம். இதுக்கெல்லாம் ஆழ்ந்த அர்த்தங்கள் கண்டிப்பாக இருக்கும். இல்லாம சும்மா இந்த மாதிரி எழுதி இருக்க மாட்டார், தேவராய சுவாமிகள். ஆனால் முதலில் பார்க்கும் போது இதெல்லாம் இரட்டைக் கிளவி மட்டும் இல்லை, அதையும் தாண்டி எக்கச்சக்க கிளவிகள் போல தெரிகின்றது அல்லவா?


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ஆனா...

டண்டணக்கா ஏ டணக்குணக்கா
ஏ டண்டணக்கா ணக்கா ணக்கா ணக்கா ணக்கா ணக்கா ணக்கா...

இது மட்டும் எந்த கேட்டகிரில வரும் என்று தெரிய மாட்டேன் என்கிறது.

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

Wednesday, April 23, 2008

என்ன தலைப்பு வைக்கலாம்?

தெள்ளுக் கன்னடத்து மொழியில் படுக இனப் பாடல். கேட்டு, கண்டு மகிழ்வோம்.



கீழே காணும் இரு பாடல்களுக்கும் உள்ள பல ஒற்றுமைகளில் ஒன்றே ஒன்றை மட்டும் கீழே கொடுத்து உள்ளேன்.





இரண்டுமே பழைய அசின், மல்லுக்குட்டி நதியாவின் பாடல்கள்.

இது ஒரு சத்தியமான மொக்கை என்பதால், ஏற்றுக் கொள்ள(ல்ல)ப்படும் என்று நம்பி இதையும் போட்டிக்கு இணைக்கிறேன்.

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

இது நாடகம்?

ழக்குரைஞர் அலுவலகம்.

வக்கீல் இருக்காரா?
இருக்கேன், யாரு?
நான் முனியன்.
என்ன விஷயம்?
கேஸ் போடணும்.
என்ன கேஸ்?
டைவர்ஸ் கேஸ்!
யார் மேல?
என்னாங்க கேள்வி?
பொண்டாட்டி மேலயா?
ஆமாங்க சார்.
என்ன காரணம்?
ஒத்து வரலைங்க.
அதான் ஏன்?
காசு வேணுங்கறா!
எதுக்கு காசாம்?
குடும்பம் நடத்தவாம்.
சம்பாதிச்சுக் குடு!
என்னது சம்பாதிக்கறதா?
வேற எப்படி?
திருட்டு, கொள்ளை.
எல்லாம் தப்பு.
வெட்டிப் பேச்சு.
வேற என்ன?
டைவர்ஸ் தான்.
பொண்டாட்டி எங்க?
எதுக்கு அவ?
கொஞ்சம் பேசணும்.
வர மாட்டா.
எங்க இருக்கா?
வீட்டுக்குப் போய்ட்டா.
யார் வீட்டுக்கு?
அவ அம்மா!
அடிச்சியா நீ?
லேசாத் தொட்டேன்!
அது பிரச்னை!
பொண்டாட்டியைத் தொடறதா?
நீ தொடல!
சரி, அடிச்சேன்!
அப்ளை பண்ணிடறேன்!
எதுக்கு அப்ளை?
டைவர்ஸ் வாங்கய்யா!
சீக்கிரம் பண்ணுங்க!

ஃபேமிலி கோர்ட்.

மை லார்ட்!
வக்கீல் சார்!
இரு, சொல்றேன்!
இங்க வாங்க!
என்ன சொல்லு?
ஹியரிங் நிறுத்துங்க!
என்ன சொல்ற?
வாபஸ் வாங்கறேன்.
எதை கேஸையா?
ஆமா உடனே!
ஏன் திடீர்னு?
சேர்ந்து வாழணும்னு!
ஆசை வந்திடுச்சா?
ரொம்ப ஆசை!
காரணம் தெரிஞ்சுக்கலாமா?
பணம் கெடச்சிருக்கு!
யாருக்கு, உனக்கா?
இல்லை அவளுக்கு!
எவ்வளவு பணம்?
ரெண்டு லட்சம்!
எப்படி அவ்வளவு?
லாட்டரி மூலமா!
இங்க Banned.
அங்க இல்லை.
எங்க வாங்கினா?
அம்மா ஊருல.
எந்த ஊரு?
கோட்டயம், கேரளா!
அதிர்ஷ்டம் தான்!
ரெண்டு பேர்க்கும்!
உனக்கும், எனக்கும்!
ஆசை தான்.
வேற யாருக்கு?
எனக்கும் அவளுக்கும்!
கேஸை வாபஸ்...
அப்பவே சொல்லிட்டேன்!
என்னோட ஃபீஸ்?
ரெண்டு நூறு!
அவ்வளவு தானா?
அதுவே அதிகம்!
ஏன் குறைச்சல்?
பேசினது குறைச்சல்!
எவ்வளவு பேசினேன்?
மை லார்டு!
சரி தான்..!

****

இது நாடகம்?
யார் சொல்றது?
நீ மட்டும்!
நாடகம் இல்லையா?
உதை வாங்குவ!
வேற என்ன?
உரையாடல்னு சொல்லலாம்!
அப்படியே சொல்லிக்கோங்க..!
உனக்குப் பரவால்லயா?
ஓகே தான்!
எதுக்கு எழுதின?
ஒரு ஸ்பெஷலா!
என்ன அப்படி?
ரெண்டே பேர்!
முனியனும், வக்கீலும்!
ரெண்டே சிச்சுவேஷன்!
ஆபீஸும், கோர்ட்டும்!
டயலாக் எப்படி?
என்ன எப்படி?
ரெண்டே வார்த்தை!
எதுக்கு இப்படி?
வ.வா.ச. ரெண்டுக்காக!
*&%$# க1^#!@(}!
என்ன அர்த்தம்..!
சொல்ல முடியாது...!


வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

Tuesday, April 22, 2008

நன்று என்று ஆன பின்!



நீலக்கடலில் இருந்து
உறிந்து கொண்டதா
தனது அலங்காரத்தை
வானம்?
இல்லை,
வானின் நிறத்தில்
இருந்து
தனக்கான ஆடையை
அணிந்து கொண்டதா
கடல்?

அசைந்தாடும் காற்றில்
இருந்து
அறிந்து கொண்டதா
மஞ்சள் நிறத்தை
வெயில்?
இல்லை,
கொதிக்கும்
கதிரிலிருந்து
கற்றுக் கொண்டதா
பகலின் நிறத்தைக்
காற்று?

பனியின்
மினுமினுப்பில் இருந்து
பறித்துக் கொண்டதா
வெண்மையின் அழகை
நிலா?
இல்லை,
வெண்ணிலவின்
அமுதிலிருந்து
பகிர்ந்து கொண்டதா
குளிர்மையை
பனித்துளி?

பச்சைக்
குளிர் நீரைப்
பார்த்து
பசியல் ஆனதோ
தாவரம்?
இல்லை,
பச்சையம் கரைந்து
பாசிகளால்
ஆனதோ
பாயும் நீர்?

பெண்மையின்
மென்மையில்
பதுங்கிக் கொண்டதோ
ஆண்?
இல்லை
ஆணின்
வன்மையில்
வழுவிக் கொண்டதோ
காதலின் பெண்?

இரண்டென்று
ஏதுள?
எல்லாம்
ஒன்று
என்று
ஆன
பின்!

சேர்தலே
நன்று
என்று
ஆன பின்!

***

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

ரெண்டுன்னு சொன்னா என்ன எல்லாம் தோணுது?

ரெண்டுன்னு சொன்னா என்ன எல்லாம் ஞாபகத்துக்கு வருது?

* ஒளவையார். 'இன்பம் - துன்பம், இரவு - பகல், ஆண் - பெண், சிவம் - சக்தி! இப்படி எல்லாமே ரெண்டு ரெண்டா தான் இருக்கு. அதனால முருகா ரொம்ப காண்டு ஆகாம, மறுபடியும் பேமிலி கூட போய் சேர்ந்துக்கோ..'

* மேடி நடிச்ச படம்.

* ரெண்டு வரியில உலகப் பொது மறை கொடுத்த வள்ளுவர் தாத்தா.

* 'நான் நம்பர் 2 தான்'...!

'இப்ப ஒரு குழந்தைகிட்ட ஒரு மிட்டாய் வேணுமா, ரெண்டு மிட்டாய் வேணுமானு கேட்டா, அந்த குழந்தை என்ன சொல்லும்?'

'ரெண்டு மிட்டாய்னு தான் சொல்லும்'

'ஒரு கொரங்குகிட்ட ஒரு வாழப்பழம் வேணுமா, ரெண்டு வாழப்பழம் வேணுமானு கேட்டா அந்த குரங்கு என்ன கேட்கும்?'

'ரெண்டு வாழப்பழம் தான் கேட்கும்'

'இப்ப உங்ககிட்ட ஒரு ரூபா வேணுமா, ரெண்டு ரூபா வேணுமானு கேட்டா நீங்க என்ன சொல்லுவீங்க?'

'ரெண்டு ரூபானு தான் கேட்பேன்'

'அப்ப ஒண்ணு பெருசா, ரெண்டு பெருசா..?'

'ரெண்டு தான் பெருசு'

'அப்ப நான் தான் பெருசு...!'

'அப்படிப் போட்டுத் தாக்கு!!!!'



* 'இந்தாங்கண்ணே!

'என்ன இது?'

'பழம்'

'நான் உங்கிட்ட எத்தன வாங்கிட்டு வர சொன்னேன்'

'ரெண்டு'

'ஒண்ணு இருக்கு. இன்னொண்ணு எங்க?'

'இன்னொண்ணு தாங்க இது!'

'டேய்...! நான் உங்கிட்ட என்ன சொன்னேன்?'

'பழம் வாங்கிட்டு வரச் சொன்னீங்க!'

'எவ்வளவு குடுத்தேன்?'

'ஒர்ரூபா!'

'ஒர்ரூபாய்க்கு எத்தன பழம்?'

'ரெண்டு பழம்!'

'ஒண்ணு இந்தா இருக்கு!இன்னொண்ணு எங்க?'

'இன்னொண்ணு தாங்க இது..!'



* மதியம் ரெண்டு மணி என்பது கடை முடிந்து மதிய உணவிற்காக அப்பா வீட்டுக்கு வரும் நேரம்.

* டாய்லட் விஷயம்.

* நாம (அட்லீஸ்ட் நான்) எதையும் ரெண்டு ரெண்டாவே பார்த்து வெச்சிருக்கோம். ரஜினி-கமல், விஜய்-அஜீத், கவுண்டமணி- செந்தில், வடிவேல்-விவேக், லாரல்-ஹார்டி, ஜாக்கி சான் - ஜெட்லீ, அ.தி.மு.க. - தி.மு.க., எம்.ஜி.ஆர்.- சிவாஜி, ராஜேஷ் குமார் - பி.கே.பி., கல்கி - சாண்டில்யன், பிஸிக்ஸ் - கெமிஸ்ட்ரி, மேக்ஸ் - பயாலஜி, தினமலர்-தினத்தந்தி, விக்டன் - குமுதம், ஜூ.வி-ரிப்போர்ட்டர், ஹிந்து-முஸ்லீம், ராஜா-ரஹ்மான், SRK-அமீர், டெண்டுல்கர்-கங்குலி, இந்தியா-பாகிஸ்தான், எஸ்.பி.பி - மனோ, சித்ரா-ஜானகி,வ.வா.ச - ப.பா.ச. இப்படி நெறய...

* கைகேயி வாங்கிய ரெண்டு வரம்.

* 'ஒன்லி டூ மினிட்ஸ்! நூடுல்ஸ் ரெடி!'

* வெட்டு ஒண்ணு! துண்டு ரெண்டு!

கடைசியா ஒரு மொக்கை :

ரெண்டுன்னு ஒண்ணு தான் இருக்க முடியும்.
ஆனா ஒண்ணுனு ரெண்டு இருக்க முடியுமா..?

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

கடைசிப் பக்கங்கள்.

பி.கே.பி. தளத்தில் இருந்து இன்று சுஜாதாவின் கணையாழி கடைசிப் பக்கங்களை இறக்கிப் படித்தேன்.

அனலாக் டிவைசஸ் ஷார்க் ப்ராசஸர் டேட்டா ஷீட்டையும், விஷூவல் ஆடியோவில் கஸ்டம் ஃப்ரேம்வொர்க் இன்டக்ரேஷன் ஷீட்டையும் திறந்து வைத்து, அவற்றின் பின்புலத்தில் படிக்க ஆரம்பித்து, முழுதும் முடிக்க 17:25 ஆனது. ப்ரிண்டருக்கு அருகிலேயே இருக்கை இருப்பதால், அவ்வப்போது ப்ரிண்ட் எடுக்க வருபவர்களுக்காக மற்ற ஷீட்டுகளைப் பார்ப்பது போல் நடித்து, ஜப்பான் கஸ்டமர் கொடுத்த கார் வடிவ சவசவ சாக்லேட்டுகளை மென்று தின்று கொண்டே படித்து முடித்தேன்.

தமிழ், பாவண்ணன், வண்ணதாசன், சாகித்ய அகாடமி, பம்பாய், ஜப்பான், டெல்லி, லெமூரியா, சென்னை, நாட்டுப்புறப் பாடல்கள், தமிழ் சினிமா, கன்னட நாடகங்கள், சத்யஜித் ரே, கமலஹாஸன், திராவிடம், மொழி, குமுதம், கணையாழி, சிறு பத்திரிக்கைகள், எலெக்ட்ரானிக்ஸ், தொல்காப்பியம், ஹைக்கூ, புறநானூறு, தமிழ்ச்சங்கம், ரோபோட், கழிநெடிலடி வெண்பா....

என்ன தான் இல்லை..? அவரது பரந்துபட்ட ஆர்வங்களும், அவற்றை அவர் எழுதி நம்முடன் பேசுவது போல் வழுவிச் செல்லும் பாங்கும்... தொகுப்பை முழுதும் படிக்க வைக்கின்றன என்று சொன்னால், அது அவர் பாணியில்... வாசகனின் ஆதார உற்சாகம்.

குறிப்பாக ஒன்றே ஒன்று..! அக்காலச் ('72) சினிமா பாடல்க்ளைச் சொல்லும் போதும், அரசியலாரைப் புகழ்ந்து கவிஞர்கள் பாடுவதும் பற்றி ஒரு வார்த்தை கூறுகிறார்... 'அவை ராஜவேர்வை..!'.

ராஜவேர்வை - அட்டகாசமான வார்த்தை.

க்ளிக்.

Monday, April 21, 2008

பாப்பா போட்ட தாப்பா...

பாப்பா போட்ட தாப்பா...

இருவரும் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டோம்.

பிளாஸ்டிக் நார் பைகளில் புத்தகங்களையும், கழுவி வைத்து வெயிலில் காயப் போட்ட டிபன் பாக்ஸ்களையும், கழட்டிப் போட்டு சுருட்டி வைக்கப்பட்டிருந்த பள்ளிச் சீருடைகளையும், காம்பஸ் ஆணிகளால் பொறிக்கப்பட்டிருந்த பெஞ்சுகளையும், 'விளையாட்டு வகுப்பு' என்று பெரிதாக எழுதியும், 'மொட்டு :38 மலர்:35" என்று வலது ஓரத்தில் எழுதி இருந்த ப்ளாக் போர்டையும், சுண்ணாம்புக் காரையைப் பெயர்த்து தொங்கிய காந்தி புகைப்படத்தையும் தவிர்த்து வகுப்பறையில் நாங்கள் இருவர் மட்டும் இருந்தோம்.

மாஞ்சள் சாணி பேப்பாரில் இருந்தது 'குயில்'. முன் அட்டையில் ஜெயமாலினி உதட்டைக் கடித்து கீழ் பார்வை பார்த்தார். அதன் பின்புறம் புள்ளி புள்ளிகளாய்த் தெரிந்த கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் சோப்பு நுரைகளில் நெஞ்சு தாழ படுத்திருந்த நடிகை பெயர் தெரியவில்லை. முதல் பக்கத்திலேயே கதை ஆரம்பித்து விட்டது.

இருவரும் எச்சில் விழுங்கிக் கொண்டோம்.

நெற்றியில் வியர்வை பூத்திருந்தது. உள்ளங்கைகள் வேர்த்திருந்தன. கம்பி ஜன்னல்கள் வழியாக அனல் காற்று அடித்தது. எல்லா இடத்திலும் வேர்த்தது.

சுரேஷ் மெதுவாகப் படித்தான். ஒவ்வோரு வாக்கியத்தின் மேலும் விரல்களால் தடவியபடி படித்தான். பாடப் புத்தகம் போல்...! அப்படிப் படித்தால் தான் அவனுக்குப் படிக்க வரும்...!

"பாப்பா பதினெட்டு வயது கிளி. அவள் பண்ணையாரின் ஒரே மகள். அன்று குளிப்பதற்காகப் பம்பு செட்டுக்குச் சென்றாள். அப்போது கட்டிளம் காளையான கோபால் அங்கே...."

"டேய்..! என்னடா பண்ணிட்டு இருக்கீங்க , ரெண்டு பேரும்..?"

ஒரு அதட்டல் கேட்டது.

அப்படியே விதிர்விதிர்த்துப் போய் விட்டோம். சண்முகவேல் ஐயா. முறுக்கு மீசையும், முங்கில் பிரம்பும், தோளில் துண்டும், சட்டையின் கீழ் இரண்டு பட்டன்களைத் தள்ளிக் கொண்டு பிதுங்கும் தொப்பையுமாக வந்து நின்றார். கணித ஆசிரியர்.

"விளையாட்டுப் பீரியட்னு போட்டிருக்கு..! ரெண்டு பேரும் போகாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க..?" கேட்டுக் கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்து அருகில் வந்தார்.

அனிச்சை செயல் போல் எழுந்து நின்றோம். கை கால்கள் நடுங்கத் தொடங்கின. இன்னும் வேர்வை அதிகமாகியது. நாக்கு அப்படியே உலர்ந்து போய் விட்டது. இதயம் துடிப்பது துல்லியமாகக் கேட்டது.

சுரேஷ் அப்போது ஒரு வினோதமான காரியம் செய்தான்.

தடாலென கீழே விழுந்தான். தரையில் அல்ல. நின்றிருந்து அப்படியே டெஸ்க்கில் தலை விழுந்து, பெஞ்சுக்கும், டெஸ்க்குக்கும் இடையே இருந்த இடைவெளியில் உடல் விழுந்து, அப்படியே படர்ந்தான். சார் இன்னும் வேகமாக வந்தார். பெஞ்சில் இருந்த ஆணியின் தலைநுனி பட்டு கீறல் விழுந்து இரத்தம் வர ஆரம்பித்தது.

"என்னடா பிரச்னை..?" பதற்றத்தோடு கேட்டார்.

இடையில் ஸ்கூல் பேக்குகள் இருந்ததால் அவரால் அவன் முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. நான் பார்த்து குனிகையில் என்னைப் பார்த்து கண்ணடித்தான். புரிந்து கொண்டேன். கையில் இருந்த புத்தகம் அவன் ஒருக்களித்துப் படுத்திருந்ததால், அப்படியே வலது உடம்போடு ஒட்டிக் கொண்டது.

"சார்..! சார்..! இவனுக்கு அடிக்கடி மயக்கம் வரும் சார். அதுவும் இப்ப சம்மர்ல, வெயிலில நடந்தாலே டீஹைட்ரேட் ஆகி மயங்கி விழுந்திடுவான் சார். அதான் இன்னிக்கு கேம்ஸ் பீரியடுக்குப் போக வேண்டாம்னு இங்கயே இருந்திட்டான் சார். அவனுக்குத் துணைக்கு நானும் இருக்கேன். இப்போ திடீர்னு உங்க மிரட்டல்ல பயந்து மயங்கி கீழ விழுந்துட்டான்... இப்ப என்ன சார் பண்றது...?" நடிப்பாகவே இருந்தாலும், சுரேஷின் நெற்றியில் இருந்து ரத்தம் கோடாய் வழிவதைக் கணடு பதற்றம் இயல்பாகவே வந்தது.

"சரி..! சரி..! பேசிட்டு இருக்காத..! அவனைத் தூக்கு. ஃபர்ஸ்ட் எய்ட் ரூமுக்கு கூட்டிட்டு போவோம்..!"

"சார்! நான் கூட்டிட்டு வர்றேன் சார்..! நீங்க போய் ஃபர்ஸ்ட் எய்ட் ரெடி பண்ண சொல்லுங்க சார். நீங்க சொன்னா தான் கேப்பாங்க. நானே போய் சொன்னா, விக்ஸ் சாப்பிட வர்றதா நெனச்சிட்டு அய்யாசாமி துரத்திடுவார்...!"

"சரி..! நான் போய் சொல்லிட்டு, அவனை வரச் சொல்றேன்.." என்றபடி சுரேஷை ஒருமுறை பார்த்தபடி வெளியேறினார்.

அடுத்த கணம் சுரேஷ் எழுந்து உட்கார்ந்தான். என் கர்ச்சீப்பை எடுத்து ரத்தத்தைத் துடைத்தேன். பெஞ்சின் மீது ஏறி, புத்தகத்தை கூரைகளின் இடுக்கில் செருகி வைத்தான்.

"டேய்..! தப்பிச்சோம்டா..! கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தது, மானமே போயிருக்கும். கடவுளாப் பார்த்து நமக்கு வார்னிங் குடுத்திருக்காருடா. இனிமேல் இந்தத் தப்பெல்லாம் பண்ணக் கூடாது..." என்றேன்.

"ஆமாண்டா..! இனிமேல் இந்த மாதிரி புக்கெல்லாம் படிக்கக் கூடாது. ஸ்கூல் விட்டவுடனே இந்தப் புக்கை பாரிகிட்ட திருப்பிக் குடுத்திடணும்...!". பாரி +2 மாணவன். சீனியர்.

"சரி..! சரி...! படுத்துக்கோ..! அய்யாசாமியும், மேக்ஸும் வர்றாங்க..!ரொம்ப வலிக்குதாடா..?"

"இல்ல..! இப்ப பரவால்ல...!"

"பரி..! பர்ஸ்ட் ஷோ ரத்னால அலெக்ஸாண்ட்ரியா போட்டிருக்கான். வர்றியா போகலாம்.."

"என்னடா படம் அது..?"

"சூப்பர் படம்டா..! நேத்து தான் மார்க்கெட் போகும் போது போஸ்டர் பார்த்தேன். கரெக்டான எடத்துல போஸ்டர் ஒட்டி மறைச்சிட்டான்டா..! அப்பயும் நெறய கில்பான்ஸ் இருந்ததுடா..! நீ வர்ற இல்ல...! இன்னிக்கு காலையில பதினோரு மணிக்கு..!"

"டேய்..! போன வாரம் தான் புக் படிச்சு மாட்டிக்க வேண்டியது. தப்பிச்சோம். இனிமேல் இந்த மாதிரி தப்பெல்லாம் பண்றதில்லைனு சத்தியம் பண்ணிட்டோம். மறந்திடுச்சா..?"

"அப்படி சத்தியம் பண்ணலயே..! புக் படிக்கறதில்லைனு தான் சத்தியம் பண்ணினோம். படம் பாக்க மாட்டோம்னு பண்ணலயே..!"

"அடப்பாவி...!"

"நீ வராட்டி போ..! இந்த தடவ நாம மாட்டுவோம்னு தோணல...!"

"எப்படிடா சொல்ற..?"

"அங்க பாரு லைன்ல யாரு நிக்கறாங்கனு...!"

பார்த்தேன். ரெண்டு பேர் பளிச்சென தெரிந்தார்கள். சண்முகவேல் சாரும், பாண்டியன் சாரும்...!

***

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

ரெண்டு ரெண்டு பேராத் தான் போகணும், என்ன?

"ல்லாரும் அமைதியா இருங்க..! யாரும் பேசக் கூடாது..! எங்க போறதா இருந்தாலும் ரெண்டு ரெண்டு பேரா தான் போகணும். என்ன புரிஞ்சுதா?" கல்யாணி டீச்சர் கேட்டார்.

"எஸ் மிஸ்..!" எல்லோரும் கோரஸாய் சொன்னோம்.

மொட்டை வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. செயின்ட் பால் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் என்று எழுதப்பட்டிருந்த துணி காற்றில் பறந்து கொண்டிருந்தது. மொட்டை வெயிலில் மகாபலிபுரத்திற்கு வந்து சேர்ந்திருந்தோம். ப்ரின்சிபால் தேவசகாயம் சாரும், பவா மிஸ்ஸும் டிக்கெட் கவுண்டருக்கு சென்றிருந்தார்கள். நானும், ஆனந்தும் சண்டை போட்டுக் கொண்டிருந்தோம்..

"அருண்! சிப்ஸ் பாக்கெட் எனக்குடா..?"

"போடா.. இது எங்க அம்மா எனக்காக வாங்கிட்டு வந்து குடுத்தாங்க..! உனக்குத் தர மாட்டேன் போ!" சிப்ஸ் பாக்கெட்டை தூர நகர்த்திக் கொண்டேன்.

"அப்ப உனக்கு இந்த ஜெம்ஸ் வேணாமா?" ஜெம்ஸ் பக்கெட்டை காட்டினான். புது ஜெம்ஸ் பாக்கெட். அம்மா வாங்கியே தர மாட்டாங்க. கேட்டா,பல் எல்லம பூச்சி வந்திடும். நைட் தூங்கும் போது, அந்த ஜெம்ஸ் எல்லாம் குச்சி எடுத்து குத்தும் அப்படினு சொல்லி இருக்காங்க. ஆனா இங்க தான் அம்மா இல்லையே.

"சரி..! இந்தா உனக்கு சிப்ஸ். நான் ஒரு சிப்ஸ் தருவேனாம். நீ ஒரு ஜெம்ஸ் தருவியாம்! என்னா?"

"ஹை! ஆசையப் பாரு! உன்னோட சிப்ஸ் பாக்கெடில தான் நெறைய சிப்ஸ் இருக்கே! என்கிட்ட கொஞ்சம் ஜெம்ஸ் தான இருக்கு! அதனால் நான் ஒண்ணு தருவேன். நீ ரெண்டு சிப்ஸ் தரணும் ஓ.கே.வா?"

"ஓ.கே.டா" என்றபடி நான் சிப்ஸ் ரெண்டு கொடுக்க, அவன் ஒரு ஜெம்ஸ் கொடுத்தான்.

உய்ய்ய்ய்ய்ய்ய்...

விசில் சத்தம் கேட்டது. பி.டி.சார் தான் ஊதி இருக்கிறார். இது எங்களுக்கு பழக்கமான சத்தம் தான். ஒரு விசில் அடித்தால் எல்லோரும் பஸ்ஸிலிருந்து இறங்கி ரெண்டு ரெண்டு பேராக நிற்க வேண்டும். இரண்டு விசில் அடித்தால், எல்லோரும் பஸ்ஸில் ஏறுவதற்கு வந்து நின்று விட வேண்டும்.

இப்போது எல்லோரும் இறங்கிக் கொண்டோம்.

"அருண், ஆனந்த்.."

"எஸ் ஸார்.." என்றோம் இருவரும். பின் இரண்டு இரண்டு பேராக கூப்பீடுக் கொண்டே வந்தார். எல்லோரும் வரிசையக நின்றோம். நான் அருணின் இடது கையையும், அவன் என்னுடைய வலது கையையும் பிடித்துக் கொண்டோம். மற்ற கைகளில் ஜெம்ஸும், சிப்ஸ் பாக்கெட்டும் இருந்தன.

"டியர் சில்ட்ரன் எல்லோரும் இப்படியே போகணும், என்ன? யானை, பஞ்சபாண்டவாஸ் ஸ்கல்ப்டர், எல்லாத்தையும் பார்த்திட்டு அஃப அன் அவர்ல இங்கயே வந்து நிற்கணும். நிர்மலா மிஸ் நீங்க உங்க டீமை கூட்டிட்டு போங்க..."

நாங்கள் ஒரு பத்து பேர் நிர்மலா மிஸ் டீமில் இருந்தோம். நடந்தோம்.

வெயில் கொஞ்சம் குறைவாக இருந்தது. ஒரு குடையை எடுத்து மிஸ் பிடித்துக் கொண்டார்கள். நாங்கள் ஏற்கனவே சொல்லி இருந்த படி, கர்ச்சீப்பை எடுத்து தலையில் போட்டுக் கொண்டோம். மிஸ் பிடித்திருந்த குடையைப் பார்த்தவுடன் எனக்கு அம்மா ஞாபகம் வந்தது. அம்மாவும் இதே போன்ற ரோஸ் கலர் குடை தான் வைத்திருப்பார்கள். எனக்கு திடீரென்று எப்போ இந்த டூர் முடியும் என்று தோன்ற ஆரம்பித்தது.

ஆஃப் ஏர்லி எக்ஸாம் முடிந்ததும் டூர் போவது என்பது எங்கள் ஸ்கூலில் பழக்கம். ஒவோரு வருடமும் பெங்களூர், மைசூர், கன்யாகுமரி என்று கூட்டிப் போவார்களாம். நான் இது வரைக்கும் போனதில்லை. இது தான் ஃபர்ஸ்ட் டைம். எங்கள் ஃபோர்த் ஸ்டாண்டர்ட்க்கு இப்போ தான் ஃபர்ஸ்ட் டூர். இந்த தடவை மெட்ராஸ், மகாபலிபுரம், வேளாங்கன்னி என்று டூர் ப்ரோக்ராம் போட்டிருந்தார்கள். அதன்படி இப்போது இங்கே!

நைட் இங்கேயே ஒரு டூரிஸ்ட் ரிசார்டில் ரூம் போட்டிருந்தார்கள். எல்லோரும் பாடினோம். மலர் என்று ஒரு கேல் இருக்கிறாள். அவள் தான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். நன்றாக டான்ஸ் ஆடினாள். நான் ஒரு பாட்டு பாடினேன். பாதிப் பாட்டிலே குரல் இழுத்து விட்டது. எல்லாம் மதியம் சப்பிட்ட ஜெம்ஸ் தான் காரணம். சளி பிடித்து விட்டது. அவள் கேலியாகச் சிரித்தாள். எனக்கு கோபம் வந்து விட்டது. இனிமேல் உங்கூட டூ என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்.

ஒரு பெரிய ஹால் இருந்தது. எல்லோரும் அதிலேயே படுத்துக் கொண்டோம். அப்படியே தூங்கிப் போனோம்.

திடீரென்று தூக்கம் போய் விட்டது. கையில் இருந்த மிக்கி வாட்சில் டைம் கேட்டேன். 'தி டைம் நவ் இஸ் ஃபைவ் தேர்டி' என்றது. பக்கத்தில் திரும்பிப் பார்த்தேன். ஆனந்த் இல்லை. எங்கே போனான்?

எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். அரை இருட்டில் அவனைக் காணவில்லை. மெதுவாக எழுந்து ஹாலைத் தாண்டி, வெளியே வந்தேன்.

லைட் ஹவுஸின் லைட் மட்டும் சுற்றிச் சுற்றி விழுந்து கொண்டிருந்தது. கொஞ்சம் தூரத்தில் அலை சத்தம் கேட்டது. அங்கேஅவன் நின்றிருப்பது போல் தெரிந்தது. வாட்ச்மேன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். சத்தமே இல்லாமல் நடந்து நானும் பீச்சுக்கு வந்தேன். ஆனந்த் தான்.

"ஆனந்த்! என்னடா பண்ற இங்க?" என்று கேட்டேன்.

தடாரென்று திரும்பிப் பார்த்தான். "ஒண்ணும் இல்லடா..!"

"மிஸ் என்ன சொல்லி இருக்காங்க? எங்க போனாலும் ரெண்டு ரெண்டு பேராத் தான் போகணும்னு சொல்லி இருக்காங்கல்ல..? நீ பாட்டுக்கு இப்ப என்ன விட்டுட்டு தனியா உக்காந்திட்டு இருக்க...?" கேட்டேன்.

"எனக்கு வீட்டுக்கு போகணும் போல இருக்கு எப்படா டூர் முடியும்?"

"எனக்கும் அப்படித் தான்டா இருக்கு..! சீக்கிரம் முடிஞ்சிடும். கவலைப் படாத என்ன? இன்னிக்கு நைட் நாம கிளம்பிரலாம்..."

"சாரிடா..! நான் உனக்கு ஜெம்ஸ் குடுத்ததனால தான நீ இன்னிக்கு சரியா பாட முடியாம போய்டுச்சு..! எல்லாரும் சிரிச்சாங்கள்ள...?"

"அத விடு! இப்ப நான் பாடறேன்..! நீ டேன்ஸ் ஆடறியா..?"

"சரிடா.." என்றான்.

"அப்படிப் போடு..! அப்படி போடு..! பாடினேன். ஆனந்த் ஆடினான். எங்களோடு சேர்ந்து பீச்சும் ஆடினது போல் இருந்தது.

"டேய்.. டேய்..! அங்க பாரேன்...!" ஆனந்த கை காட்டின இடத்தைப் பார்த்தேன்.

கடலில் இருந்து பெரிய பெரிய அலைகள் வந்தன. பெரியதாக.. எங்க வீட்டுத் தோட்டத்தில தென்னை மரம் இருக்கும். அந்த உயரத்துக்கு அலைகள் வந்தன.

நாங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

***


வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

Sunday, April 20, 2008

Deliver us....



டியோ டெஸ்டிங்கிற்காக சில படங்களின் கிளிப்புகள் உபயோகப்படுத்துவோம். அதில் கவர்ந்து முழுப் படத்தையும் பார்க்க வைத்த ஒன்று, The Prince of Egypt. மோசஸ் கதை என்று சொல்லப்பட்டிருக்கும் இப்படம் சிறந்த முறையில் அனிமேட்டட் காட்சிகள் கொண்டும், ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் அத்தனை அற்புதமாகவும் இருக்கும்.

Deliver Us என்று தொடங்கும் இப்பாடல் உத்வேகம் அளிக்கும் இசையுடன் துவங்கி, சென்டிமெண்டில் மெதுவாக ஓடி, முடிக்கையில் மீண்டும் வீரத்துடன் முடிகின்றது.

சொந்த நிலம் தேடி போராடும் எல்லோர்க்குமான பாடல் இது.



பாடல் வரிகள் ::

[Egyptian Guards]
Mud...Sand...Water...Straw...Faster!
Mud...And lift...Sand...And Pull
Water...And raise up...Straw...Faster!

[Slaves]
With the sting of the whip on my shoulder
With the salt of my sweat on my brow
Elohim, God on high
Can you hear your people cry:
Help us now
This dark hour...

Deliver us
Hear our call
Deliver us
Lord of all
Remember us, here in this burning sand
Deliver us
There's a land you promised us
Deliver us to the promised land...

[Yocheved]
Yal-di ha-tov veh ha-rach
(My good and tender son)
Al ti-ra veh al tif-chad
(Don't be frightened and don't be scared)
My son, I have nothing I can give
But this chance that you may live
I pray we'll meet again
If He will deliver us

[Slaves]
Deliver us
Hear our prayer
Deliver us
From despair
These years of slavery grow
too cruel to stand
Deliver us
There's a land you promised us
Deliver us
Out of bondage and
Deliver us to the promised land...

[Yocheved]
Hush now, my baby
Be still, love, don't cry
Sleep as you're rocked by the stream
Sleep and remember my last lullaby
So I'll be with you when you dream

River, o river
Flow gently for me
Such precious cargo you bear
Do you know somewhere
he can live free?
River, deliver him there...

[Young Miriam]
Brother, you're safe now
And safe may you stay
For I have a prayer just for you:
Grow, baby brother
Come back someday
Come and deliver us, too...

[Slaves]
Deliver us
Send a shepherd to shepherd us
And deliver us to the promised land

[Yocheved]
Deliver us!


Thanks :: http://www.allmusicals.com/lyrics/princeofegyptthe/deliverus.htm