Friday, June 29, 2018

வா..வா..காமா..




சென்றெதிர் கொள் இப்பனி இரவு முழுதையும்!
குளிர் நீர் துளைக்கும் எலும்புகள் நடுங்க, மூழ்கி அடி காண்!
மென்மல்லி மணம் முகர்ந்தறி!
பிறை வளைவு தடவி பிறவிப் பலன் அடை!
முள் காட்டில் முன் சென்று குருதித்துளி பூத்திடு!
கூம்பிய தாமரை மொட்டு மலர்த்தி மகரந்தம் சுவை!
பின்னலிட்ட கிளைகளைப் பிரித்து சிற்றிலைக் கீழ் உருண்ட சிறு செங்கனி கடி!
வான் நிறை மீன்களை எண்ணி முடி!
வாடைக்காற்று தூண்டும் சூட்டைத் தணி!
நடுங்கிக் கொண்டே நில்லாது நகர்!
கணுக்கால் ஊன்றி மாடத்து விளக்கை அணை!
மழையென்றொன்றைப் பெய்து உலர் தரை நனை!
திரண்ட முகில்கொத்துகளை ஈரம் சுரக்கச் செய்!
பேரரவு ஊரும் தடம் பதி!
வெயில் அருவிக் கீழ் வேர்த்த சுனை ஆகு!
திரை விலக்கி நாடகம் உணர்!
திசைகள் தெரியா தீ எழுந்தெரிக்கப் புணர்!