Friday, November 20, 2009

NaNoWriMo.Update.3

ப்போதைய நிலவரத்தில் இருபதாயிரத்திற்கு ஐநூறு வார்த்தைகள் பின்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

இதுவரை எழுதிய அளவில் பார்க்கும் போது, என்ன நடக்கின்றது என்பதைச் சொல்கிறேன். ஒரு காட்சியின் துவக்கத்தை மட்டும் கற்பனை செய்கிறேன். பின் அது அதன்பாட்டுக்கு எங்கெங்கோ என்னை இழுத்துச் சென்று, எனக்கே ஆச்சரியமூட்டும் அளவிற்குக் காட்சிகளும், அவற்றிற்கேற்ற வசனங்களும் தம்மைத் தாமே உருவாக்கிக் கொண்டு வளர்கின்றன.

பிறகு எங்கே எவற்றைச் சொல்லி முடிய வேண்டுமோ, அந்த இடத்தில் ஆச்சரியமாக காட்சித் தொடர் நிறைவு பெற்று நின்று விடுகின்றது. எப்படி முடிவுப் புள்ளி தெரிகின்றது என்று யோசித்தால், அதற்கு ஆழ்மனத்தை இத்தனை நாட்கள் சிறுகதைகள் எழுதிப் பழகிய பழக்கம் என்று புலனாகிறது.

நாவல் துவக்கத்தில் கொஞ்சம் தடுமாறினேன். இப்போது ஊதுவத்தி புகைகள்போல் சுருள் சுருளாகத் தமக்குள் கிளர்ந்து எழுந்து உருவாகி, உருண்டு, திரண்டு...ஒரு வடிவமைப்பிற்குத் தாமே கெட்டித்து வந்து ஒரு சேப்டராக ஓடி நின்று விடுகின்றது.

ஒவ்வொரு சேப்டரும் இப்போது ஒவ்வொரு சிறுகதையாகவே எழுதுகிறேன். முன்னோர்கள் சொன்னதன் காரணம் இப்போது தான் அதன் பலனை எஞ்சாயிக்கிறேன்.

'எழுதுபவனுக்கு இரண்டு மனம் இருக்குமோ?' என்று வாத்தியார் சொன்னதை நன்றாக அனுபவிக்கிறேன்.

எழுதியபடி ஓர் ஆழ் மனம் முன்னோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றது; வெளி மனம், ஒரு வாசகன் போல் அதன் பின்னோக்கி ஓடி அந்த எழுத்துக்களை அனுபவித்து மகிழ்ந்து, ஆழ்மனம் வாசகன் என்ன உணர்வை அடைய வேண்டும் என்று தீர்மானித்து உருவாக்கிக் கொண்டு போகின்றதோ, அந்த உணர்வை வெளிமனம் திகட்டத் திகட்ட அனுபவிக்கின்றது.

நேற்று எழுதியதன் ஒரு பகுதியை கீழே வெளியிடுகிறேன். அந்தப் பகுதியை எழுதும் போது, உடலுக்குள் ஏதோ ஒரு சாத்தான் புகுந்து கொண்டது போல், என்னால் உட்காரவே முடியாமல், அந்த எக்ஸைட்மெண்ட் தாங்க முடியாமல், எழுந்து கிறுக்கன் போல் குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கி விட்டேன். அழுகையே வரத் தொடங்கி விட்டது.

அந்தக் கிளர்ச்சியை மொத்தமாகக் கொட்ட வேண்டும் என்று பண்ண முடியாமல் ஒவ்வொரு எழுத்தாக எழுத வைக்கிறானே கடவுள் என்று கோபம் கூட வந்தது. ஒவ்வொரு எழுத்தாக டைப் அடிக்க அடிக்க, காட்டாற்று வெள்ளம், ஸலைன் குழாயில் சொட்டுகிறது.

சம்பவங்கள் கண் முன் நடந்தன; திடீரென ஒரு கேரக்டர் உதித்து மறைகிறான். அவனுக்கும் பிரத்யேகமாக ஒரு வசனம் தோன்றி மறைகின்றது. அவனுக்கும் ஓர் இயல்பு.

இந்த நாவலை முடிக்கவே முடியாது என்றும் தோன்றுகிறது. இன்னும் முதல் பாகத்தையே முடிக்கவில்லை. எழுத நினைத்திருந்த எட்டாவது சேப்டரே மூன்றாவது பாகமாக, 8.a, 8.b, 8.c என்று போய்க் கொண்டிருக்கின்றது.

எழுத்தாளனாக இருப்பது வரமா, நரகத்தைத் தின்னும் சாபமா என்று புரியவில்லை. என்னை உருக்கிக் கொண்டிருக்கின்றது இது..!

இந்த நாவல் ஒரு காயசண்டிகை; இந்த மூளை ஓர் அட்சயப் பாத்திரம்; அது தீராப் பசியோடு 'இன்னும்....இன்னும்...' என்று ரத்தம் பாயும் நாக்கைச் சுழற்றிக் கேட்டுக் கொண்டேயிருக்க, இது தீராப் பிரியத்தோடு 'இந்தா....இந்தா...' என்று பருக்கைகள் கொட்ட அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்க...இரண்டுக்கும் இடையில் ஓர் அற்ப மானுட உடல் சிக்கிக் கொண்டு துடிக்கின்றது..!

ஆனால் ஒன்று..! நிஜ வாழ்வில் என்னைச் சுற்றியிருக்கும் நெருப்பு கக்கும் ட்ராகன் பிரச்னைகளிலிருந்து கொஞ்ச நேரமாவது என்னைக் கண்ணீரில் பொத்திக் காக்கிறார்கள் என் கேரக்டர்கள்..!

ஆனாலும் அந்தக் கண்ணீரும் நெருப்பைப் போல் சுடுகின்றதே...! என் செய்வேன்...?

<***>

"this is a big ground with red soil for a hard soccer match...!" vinod told by looking the ground.

"but your clothes will get a reddish layer, if you fight in this field. or the blood will drench if you play hard like in the november semis..! " pawan told.

"like Manchestar United jersey...!" vinod twinkled.

vinod was a soccer fan. not simply a fan, but an admirer.

last november the sports club of the college arranged a soccer tournament between departments to select fresh batch soccer team. we had seen a completely different vinod there. there he appeared, as he wasnt a boy who spoke about girls; got interested about latest flicks; flirtous. in the soccer section which was at the eastern part of the college ground, vinod showed a soldier inside him; the bravefull, the fighter, the never tired spiritful and the never give up warrior.

all the matches in which vinod's batch participated were one sided, excpet three matches.

the first one was between vinod's E batch vs C batch. that was a third league one. since everyone was fresher, none knew one's capability better. there was a friend of EEE named Tilak in C batch. He showed a powerfull knock in the second league match between A and C. He became a star immediately after he goaled a second one in that A vs C. so it was spread that this E vs C would become one sided. but it wasnt.

upto the first half of the match, null was for the two teams. but it seemed vinod and tilak found the other's knowledge in handling the ball, passing and the tricks. in the very five minutes of the second half, tilak made a goal straight forward. none was in the line; that was straight to the post. (Rhitam murmured to me that ‘the ball passed like light particle’) before twenty minutes for the end, the ball was in vinod's legs; literally. he was dancing; practically. he reached the post and simply passed to vinay. after that a rat could do, vinay did. goal. equal. the time was going to finish. we were shouting as 'penalty....penalty...'. very surprisingly tilak put one more goal. but this time, it was not direct shot. there was two sets of legs in between him and the post. A won.

That night me, aman and pawan went to vinod’s room for taking him to dinner. his roomies were already gone. the door wasnt locked. inside it was pure dark. we opened it and lit up. vinod was the only person there and lying in the bed with a collapsing sheet.

"vino..! come for dinner..!" aman asked. i went and sat nearby him. "vinod..! get up..!" i told. he opened his eyes. those were in red. and he started crying...yes man... the romantic boy cried.

both aman and pawan came near. vinod lied on my lap and continued. "vinod..!" pawan came to tell something. i signalled them to leave and assured will-bring-vinod. they left and closed the door.

"vinod..! it was just a game. and also it was a league one. still you have a chance to go quarters..!" i tried to cool him.

"kowshi..! you dont know that. soccer is my girl friend. she is my lover. the ball starts rolling in me from my age three. i cant imagine a life without soccer. and a defeat in that was equivalent to rub my brain in mud..!"

"understood dude..! but you have to pass it..!"

"how..? Were you be the same if you lose your girl..? did you feel that..?"

i was dumb strucked. I know my friend. i felt that loss.

"vinod..! let the past be past. you want to take a revenge for this defeat, right..?"

"damn sure.!"

"then, there is only one chance. by the point calculations, C was already in quarters. E has three matches before that. you have to make win in all that matches to do two things. one, to make sure E's entry in to quarters. two, to show the arrival of a fighter who could stop tilak. do you accept that..?"

" entirely..! "

"then, you have to play all these matches. to accomplish that, by the laws of nature you have to be alive. because i never heard the news, ghosts played soccer. because of they do not have legs to kick the ball or the keeper. so, to keep youself alive, you have to come with me and take the heavenly food, chappathis and kuruma, provided by our motherly mess..! "

vinod laughed. mission completed.

after he came with a washed face, he asked, " can you tell me what rhitam could tell if you ask whether ghosts can stand..?"

"might be the same reason, 'no. because ghosts dont have legs..' " i replied.

" that would be a layman's answer. but i am sure, rhitam, as a physics geek, would tell ' since they dont have legs, the center of gravity which make a thing to stand still, gets confused on where to present. so, even if they try to stand, they couldn't..!"

i busted. and i was happy vinod gained his form back. then i asked the question, " vinod, do you think the laws of gravity apply to ghosts too..?"

and we continued our pointless chat for the entire night.

The second match was three days later. it was the last league match. it was between E and B. E was already in quarters by winning the other two games they played. B was already out of the tournament. but that match showed the perfect defence game by vinod. exactly i could tell that match was an example of vinod's controlled play. E was already in a safe region with three goals in the first half. out of that one was by vinod. there was no goal in the second half made by neither one. there was very close four tries by B. vinod captured two of them and stopped two of them. if the ball goes into vinod's legs in that match, he never make it to come near any of the posts. the ball revolved nearby the center of the ground. 3 – 0. obviously, E won.

since E was already in the next round, the victory celebrations were not big. we walked out the dark ground and towards the hostel block, pawan asked, " so you must be happy now... vinod...?"

"ofcourse. but not fully..! " vinod replied.

"yes..! because he has to prove E = m C square..!" who else, rhitam.

"why again to prove..? and why vinod..?" aman asked with enough confused tone.

"not that what old albert told. vinod has to prove, that E batch has the power equal to multi times, m for that, of even of two C batches..! am i right..? " rhitam explained.

"rhitam.. come here..!" pawan called peacefully. rhitam was coming near to vinod.

"what yaar..? " rhitam told by came near to pawan. Pawan made a big pat on rhitam's left back. it was like spanking him. rhitam's reply for that was a small 'ouch..!'

needless to say that everyone was in different batches, we never think about winning of our batches, but our friends. out of us four, vinod was the only one played and what a player he was..! we gave importance to friends over batches, because the later would end after the first sem.

The third one which never forgettable was the second semi. fortunately or not, the chance for the clash between E and C didnt happen in the quarters. they separately played against some medium teams and easily won. in the semis it was D vs A. E vs C. in the first semi D won with 2 - 1.

the grand match between E vs C was conducted on one friday. i was surprised by the presence of huge crowd. it didnt contain not only our freshers but seniors too. it was because the fame of both tilak and vinod reached immensely in the campus.

the match started. the new ball started to roll between legs. the gallery was small compared to the crowd sitting there. and not only in that, students were standing around the ground wherever space was present.

within the first ten minutes everyone understood that was not a game between two teams; but between vinod and tilak. the ball struggled between them. slowly the others treated to help their own team superstar to handle the ball. after fifteen minutes from the start, tilak made a goal. the crowd shouted. within two minutes vinod equaled it. The crowd shouted for this too. that was the status upto five minutes before first half. but tilak made a pass to anand and he made it simply.

2 - 1…! I had seen small clouds started to gather then.

they exchanged the sides and the second half started. one of a friend from geo named hari came near to me and told, "kowshi..! this half would be one sided. because that side is a lucky one to tilak. he made many goals when they played from that side. so this must be a easy win to them. i go to room and just tell me the same result. ok..?" he smiled and left.

from the play within five minutes i understood the strategy by C. Tilak, Tarun and Anand played the aggressive play and the remaining in defence. I was sure that even a layman fan as me understood that, so vinod must knew that. i was correct. but vinod took a reverse strategy opposed to everyone expected. since E was in need of goals, i thought many of them took up aggressive and less to stop C from goaling.

surprisingly, vinod single handedly took up the aggressive play and the others were kept in defence. that was a remarklable move by vinod and it paid twice. he made two goals with five minutes apart. then the game turned towards C. 3 - 2.

after that we have seen the tempo increased in the crowd, in the ground and in the sky too. The small clouds stayed there became big black bodies waiting there to pour. the last fifteen minutes came. then it happened.

tarun passed the ball from the middle of the ground and it came into tilak's. he rolled that here and there and came near to the post and collect his full power then kicked. vinod was jumping from his position eight steps from the post and floated in the air and exactly carried the ball on his ....nose.

the crowd shouted; we shouted and jumped into the ground. i thought rhitam would tell this time 'it was like a comet dashed on earth'. but he was strucked by seeing the sight. a blood flood started to flow from the nose. we went and teared the hand kerchief of aman and tried to stop the red thing.

'"vinod..! come...will go to clinic urgently...!" i shouted more than the crowd's large noisy shouts, so that it would be hearable by him. he was highly shocked happened to him but shouted firmly, " go out of the ground friends..! i have to play....!

we were surprised in heart and left him and aman's kerchief in the ground. everyone in the ground was taken aback by vinod's words but they thought not to allow vinod’s words make them to lose, it seemed.

the game started again. the aggressiveness continued in both sides and especially from C. but it failed miserably. because vinod made one more goal with his broken nose and un broken faith.

when the whistle arrived from the refree and flag was shown, everyone in the ground ran to vinod, who was at that time near his post and surrounded him. tilak hugged vinod tightly and shouted, "vinod...! you deserved this...! you deserved this dude...!"

we took vinod to the campus clinic. The doctors scolded us as a good doctor has to do. Vinod was kept there for one hour.

We went to the medium size hotel afterwards to celebrate vinod’s attitude.

Before we went I told "boys, wait for one minute. i will come.!". They confused but started to wait in the then empty ground. i went to the ground floor of our block and to the room nearby bathrooms. i knocked it. one boy came from inside and opened the door.

"oh kowshi..! what's the result..? as i told, right..?" he asked. He had a book of ‘ Mastering Astrology within 10 days’ in his hand.

i told calmly, " your luck side fucked off...!".

do you want, that I have to say E batch won the final vs D and the Sports Club Soccer Trophy – 99 and both Vinod and Tilak were selected for the college soccer team directly..?

<***>

கண்ணன் காலடிகளில் கொஞ்ச நேரம் படுத்துக் கொள்ள வேண்டும் போல் இருக்கின்றது..!!!

Tuesday, November 17, 2009

NaNoWriMo.Update.2

ன்று இரவு 23:20க்கு 10000 வார்த்தைகளைக் கடந்து விட்டேன். கணக்குப்படி இருபத்தைந்தாயிரத்திற்கும் மேல் போயிருக்க வேண்டும். இருந்தாலும் ரீச் செய்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

NaNoWriMo My User Page.

எழுதுவதன் சில ஆச்சரியங்கள் ::

பதிவுகளில் எழுத வந்த பிறகு, வாழ்க்கையில் நிகழ்கின்ற அதிசயங்களுக்கிடையே, எழுதும் போதும் நடைபெறுகின்ற ஆச்சர்யங்கள் என்னை மாயம் பற்றிய சில கேள்விகளைச் சிந்திக்க வைக்கின்றன; பதில்களை அல்ல.

திடீரென்று வேறு விதமாக எழுத வேண்டும் என்று தோன்றி சென்ற வருட மத்திய மாதம் ஒன்றில் ஓர் அறிவியல் புனைகதை எழுதினேன். நினைத்ததெல்லாம் கோர்த்துக் கொண்டே வந்து ஒரு வித 'க்ரே ஹ்யூமர்' வகையில் முடித்தேன். அனுஜன்யா, அதை 'tongue in cheek' என்றார். அடுத்த நாள் காலையில் பார்த்தால், சிறில் அலெக்ஸ் அறிவியல் புனைகதை போட்டி அறிவித்திருந்தார்.

இதை எந்த வகைத் தற்செயல் என்பது?

அவரது போட்டி ஆரம்பிப்பதற்கு சற்று முன்பே (இந்திய நேரத்தில்) எழுதி விட்ட படியால், அவரது அனுமதி கேட்டு போட்டியில் இணைத்தேன். நானாகவே அறிவியல் புனைகதைகள் எழுதும் 'மூடில்' இருந்ததால், போட்டிக்கென மிகவும் சிரமப்படாமல் 18 கதைகள் வரை எழுத முடிந்தது. அவற்றில் சிறும்பாலும் அ.புனைகதையே இல்லை என்று சில காலம் பேச்சுக்கள் எழுந்தன. ஜெயமோகன் முதல் பரிசுக்கு என தேர்ந்தெடுத்த அந்தக் கதை அந்தச் சிறும்பாலுமில் அடங்கும் என்று சொன்னார்கள்; கேட்டுக் கொண்டேன்.

இதில் எப்படி, எனக்கு sci-fi எழுத வேண்டும் என்று தோன்றிய அடுத்த அமெரிக்க நாளில் அலெக்ஸ் போட்டி அறிவித்து, என் கதைக்கு முதல் பரிசு கிடைத்தது என்பதில் ஏதேனும் மாயச் சங்கிலித் தொடர்பு இருந்ததா என்று தெரியவில்லை; மிக முற்றிலும் தற்செயலாகவே இருக்கலாம்.

அடுத்தது,

சென்ற மாதத்தில் திடீரென்று ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று தோன்றி, 'I am a rain freak.' என்று ஆரம்பித்து கைக்கு வந்தபடி எழுதிக் கொண்டே போனேன். அதில் ஒரு கதாநாயகன், யகி, ஒரு குடும்பம், பக்கத்து வீட்டில் ஒரு ப்ரொபஸர், அவரது நெல்லை மனைவி, அவர்களது மகள்... இப்படி போய்க் கொண்டே இருந்தது. வானவில் வீதி கார்த்திக்கிடம் அனுப்பி படிக்கச் சொன்னால்,' நீங்கள் தமிழிலேயே ஓரளவுக்கு எழுதுகிறீர்களே..! எதற்கு ஆங்கிலம் கொல்லும் ஆசை?' என்று கேட்டார். அத்தனை இலக்கணப் பிழைகள். எனக்கும் புரிந்தது. பின் காரணங்கள் இருக்கின்றன.

எல்.கே.ஜி. முதல் நான்காம் வகுப்பு தவிர்த்து +2 வரை தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலப் புத்தகங்கள் எதுவும் படிக்காதது போன்றவற்றால் ஆங்கிலத்தின் புனைவு மொழி தெரியாது. தொழில்நுட்பப் பேச்சு பேசி விடலாம். வீக், அவுட்லுக், கட்டுரைகளைப் படிக்கிறேன். ஆனால் புனைவுக்கென்று இருக்கும் மொழிக்கு நடிகைகள் கூறும் சிட்னி ஷெல்டன் கூட படித்ததில்லை. இனிமேலாவது படிக்க வேண்டும்.

அடுத்த நாள் காலை கஸின் பாலாஜியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

அதில் டெல் கணிப்பொறி நிறுவனத்தார், ஒரு போட்டி நடத்துவதாகவும், அதில் டிசைன், போட்டோகிராபி மற்றும் புனைவு எழுத்து ஆகிய பிரிவுகளில் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன என்று இருந்தது. முதல் இரண்டும் எனக்கு அலர்ஜி என்பதால், பிரியமான புனைவெழுத்தை எடுத்துக் கொண்டேன். கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் மற்றும் சிறுகதைகள் எழுதலாம். நிபந்தனை : ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.

இதனை என்ன சொல்வது? ஏன் எனக்கு அந்த கடிதம் வருவதற்கு முன் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று தோன்ற வேண்டும்..?

மற்றுமொரு யதேச்சை நிகழ்வாக NaNoWriMoவிலும் இணைந்து விட்டேன். என்ன தைரியம்..!

ஆங்கிலப் புனைவு மொழி தெரியாது; சொல் வளம் சட்டைப் பாக்கெட்டின் அளவு கூட தேறாது; இலக்கணப் பிழைகள் எக்கச்சக்கமாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசம்; துணிந்து இணைந்து எழுதத் தொடங்கி 20% முடித்து விட்டேன்.

இதற்கெல்லாம் முன்பாக 'ஆங்கிலத்தில் எழுதிப் பார்!' என்று எனக்கு கட்டளையிட்ட குரல் யாருடையது..?

டெல் போட்டிக்கான படைப்புகள் :

A bunch of cloud and me

The scent of the rivers

Indianness

உச்சகட்ட அதிர்ச்சி நேற்று கிடைத்தது.

நாவலைப் பகுதிகளாகப் பிரித்து ப்ளாட் போட்டு வைத்திருந்தேன். அதில் க்ளைமாக்ஸில் வில்லன்கள் யார், அவர்கள் என்ன செய்கிறார்கள், அதை கதை நாயகர்கள் எப்படித் தடுக்கிறார்கள் என்று ஒரு வடிவம் கொடுத்து வைத்திருந்தேன். அந்தச் சம்பவங்கள் நடக்கும் பகுதியாக ஓர் இடத்தைக் குறித்து வைத்திருந்தேன். அதைப் பற்றிப் படித்தால் வர்ணனையில் உதவியாக இருக்கும் என்று தேடி விக்கியில் படித்தால், நடு மண்டை நச்..!

நான் என் கற்பனை இடத்திற்கு என்ன நடப்பதாகக் குறித்து வைத்திருந்தேனோ, அந்தக் கற்பனை இடத்திற்கு இணையான உண்மை இடத்தில் அதே நிகழ்ச்சி உண்மையாக்வே நடந்து விட்டிருக்கின்றது.

இதனை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை.

முற்றிலும் தற்செயல் என்று தள்ளிவிட முடியவில்லை.

சில கேள்விகளை எழுப்பி விட்டிருக்கின்றது.

ஒரு சம்பவம் என்பது (முடிந்ததாகவோ, இனிமேல் நடக்கப் போவதாகவோ) என்ன? அது ஓர் எண்ணம் என்ற அளவில் என்றைக்கும் சாஸ்வதமாக நிலவிக் கொண்டேயிருக்கும் ஒன்றா? அதற்கேற்ப ட்யூன் செய்யப்பட்ட மனம் கிடைத்ததும் அங்கே ஒரு சிந்தனையாகப் புகுந்து கொள்கிறதா..?

நமது சுயமான எண்ணங்கள் என்று எதுவும் இல்லையா? எல்லாமே ஏற்கனவே இங்கே உலவிக் கொண்டிருப்பது தானா? நாம் அதற்கேற்றாற்போல் சிந்தித்தவுடன் வந்து 'சாமி இறங்குகிறதா?'

அத்தனை சம்பவங்களையும் ஏற்கனவே யாராவது ஒருவர் நினைத்து வைத்திருப்பார்களா அல்லது தெரியாமலே பின்பு ஏதாவது ஒரு காலத்தில் (2012-ல் எதுவும் ஆகாமல் இருந்தால்! :) ) யாரவது ஒருவரால் நினைக்கப்படுமா..?

உண்மையில் கதை என்பதும், வாழ்க்கை என்பதும் கால இடைவெளிகளால் பிரிக்கப்பட்ட.... என்ன சொல்வது...ஒரே வஸ்து தானா..?

இன்னும் இவற்றைப் பற்றிச் சிந்திக்கச் சிந்திக்க parallel universe,multiple worlds, baby universes என்றெல்லாம் சூடேற ஆரம்பித்ததால், விட்டு விட்டேன்.

இனிமேல் நான் நினைத்ததை எழுதினாலும் அதைக் கற்பனை என்று யார் சொல்லுவார்? நடந்ததை எழுதினான் என்று சொல்லப்படும்; மட்டும் அல்லாது ஒரிஜினல் வில்லன்கள் ஆட்டோ அனுப்பக் கூடும்.

நிஜத்தில் நடந்ததை என்னால் தடுத்திருக்க முடியாது; ஆனால் என் கற்பனை உலகில் அந்த வில்லன்களைத் தோற்கடிக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அதே முடிவைக் கொண்டு எழுதலாம் என்றே நாவலைத் தொடர்கிறேன்.

தமிழ் மூலம் ::

டெல் போட்டிக்காக எழுதிய 'The Scent of the rivers - ன்' உண்மையான தமிழ் மூலம் கீழே உள்ளது. ஆங்கிலப்படுத்தியது எந்த அளவுக்கு மொன்னையாக வந்துள்ளது என்பதைப் பார்த்தால்.... கண்ணீர் வருகிறது...காரணம், தமிழ் ஆனந்தமா, ஆங்கிலச் சோகமா என்று தெரியவில்லை..! :)


ஆற்றின் மணம் காற்றில் தவழ்கிறது.

மலை உச்சிகளில் பொழிகின்ற அடர்ந்த கருத்த மேகங்கள், ஈரக் காடுகளின் தீராத மெளனத்தைக் கரைத்துக் கொண்டு சரிகின்றன. வெயில் ஊடுறுவாத இருட்டிய இடுக்குகளின், பெருமரங்களின், படர்ந்த சின்னப் பூக்களின் வாசங்களைக் களவாடி வருகின்றது. மலைத்தொடர்களின் இறுதிச் சமவெளிகளின் எல்லைகளில் ததும்பித் ததும்பி மோதும் பாறைகளின் மேனிகளில் சுழித்துச் சுருண்டு, அவற்றின் பேரிரைச்சல்களைச் சுமந்து அர்வியாய் விழுகின்றது. சலசலக்கும் பேராறாய் மாறி,துள்ளித் துள்ளி ஓடும் போது, அதன் அடிவாரக் கூழாங்கற்களின் சிணுங்கல்களையும், முனகல்களையும் அது சேர்த்துக் கொண்டு வாய்க்கால்களில் ராகம் படித்துப் பிரிகின்றது. கிணறுகளில் அது சென்று சேர்க்கின்ற தாளங்கள் ஜிலுஜிலுப்பில் உறைகின்றன. வயல்களில், தானியங்களின் நரம்புகளில் ஆறு ஊடுறுவும் போது, தன் மேனியில் சுமந்து வந்த வாசங்களை மலர்களில் சேர்க்கின்றது. செம்மண் கரைசல்களில், முகில் முனைகளில் அதன் வாத்ஸல்யமும், தன் வசந்த காலப் பின்னிரவுகளில் ஆதார நறுமணமும், யுகயுகாந்திரங்களாய் மிதக்கின்றன, ஒரு ஜோதியில்..!


முதலில் தமிழில் எழுதிப் பின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது, 'ததும்பித் ததும்பி' போன்ற உணர்ச்சி எழுச்சிகளுக்கெல்லாம் மீபொருத்தமான ஆங்கில வார்த்தைகள் தெரியாமல், பிறகு மொழிபெயர்க்கும் வேலையை விட்டு விட்டு நானாகவே எனக்குத் தெரிந்த வார்த்தைகளைப் போட்டு அங்கே வேறு வகையான கவியுரை (poetic prose) எழுதி விட்டேன்.

சர்வேசன் போட்டி ::

சர்வேசன் அவர்கள் நடத்திய 'நச்'சிறுகதைப் போட்டிக்கு வந்த அத்தனை கதைகளையும் படிக்கவில்லை. சிலவற்றை மட்டும். கடைசி 'நச்' மட்டும் வைத்துக் கொண்டு, கதையை அதனை நோக்கித் தள்ளி விடும் முறைகள் தெரிந்தன. மற்றும் சிலவற்றில் பாதியில் இருக்கும் போதே முடிவு எப்படி இருக்க முடியும் என்ற பாஸிபிளிட்டிகள் தெரிந்து விடுகின்றன. எனவே 'நச்'சின் வலிமை குறைவாகத் தான் இருந்தது. ஆனால் இவை எல்லாம் முதன்முறை கதை எழுத வரும் அனைவரும் செய்வது என்பதால் வரவேற்கிறேன்.

ஒரு பார்வை பார்த்ததில் அறிவியல் புனைகதை யாரும் முயன்றதாகத் தெரியாததால் (யோசிப்பவர் பின்னால் தான் நின்று கொண்டிருந்தார். கவனிக்கவில்லை! :) ), கடந்த வெள்ளிக்கிழமை வானவில் வீதி கார்த்திக்குடன் பேசிக் கொண்டிருந்த 'கருந்துளை என்னவாக இருக்கும்?' என்ற இயற்பியல் கருத்துக்களை வைத்து நானும் ஒரு கதை எழுதி, ஈசன் பொறுப்பில் விட்டு விட்டேன்.

எழுத்தாளன் தீர்க்கதரிசியா..?

'பதவிக்காக' நாவலை எழுதும் போது வாத்தியார் என்னவெல்லாம் அரசியலில் நடக்கும் என்று எழுதினாரோ, அதெல்லாம் (எம்.எல்.ஏ.கடத்தல், சட்டசபையில் செருப்படி, வேட்டி அவிழ்ப்பு நடனங்கள்) பின்பு நடந்தன. அதனால் 'எழுத்தாளன் தீர்க்கதரிசியா?' என்ற கேள்வி கேட்டு, புத்தகமாக வந்த போது முன்னுரையில் பதிலும் சொல்லியிருந்தார். (இல்லை!)

சில நாட்களுக்கு முன் சென்னையிலிருக்கும் தம்பி போன் செய்தான். அவன் என்னைப் போன்று இல்லை. டிஸ்கவரி சேனல்கள் எல்லாம் பார்ப்பான். அதில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு 'உன் ஓர் அறிவியல் புனைகதையில் வந்தது போல நிஜமாலுமே வந்து விடும் போல் இருக்கின்றது' என்றான். அந்த கதை இது :: குரல்.

டிஸ்கவரியில் அடுத்த தலைமுறை வீடுகளில் என்னென்ன நவீனங்கள் சேர்ந்திருக்கும் என்று அனிமேஷனில் காட்டினார்களாம். அதில் ஒரு வீடு முழுவதையும் குரல் ஒன்று கட்டுப்படுத்துவதாகக் காட்டினார்களாம். உதாரணமாக, ஸ்கூல் பையன் படித்துக்கொண்டிருக்கிறான். ஒரு குறிப்பிட்ட நேரம் ஆன பின்பு, குரல் தானாக ஏக்டிவேட் ஆகி, 'தம்பி, படிச்சது போதும். இது தூங்கும் நேரம். போ படுத்துக் கொள்.'என்று சொல்லி விட்டு, விளக்குகளைத் தானாகவே அணைத்து விட்டு, ஃபேன் போட்டு விட்டு, கதவைச் சாத்தி விட்டு, அந்த அறைக்குள் டீ-ஏக்டிவேட் ஆகி விடுகின்றதாம்.

எனது கதையில் கொஞ்சம் அது போல் இருக்கின்றது. உண்மையில் அந்தக் கருத்து வாத்தியாருடையது. அவருடைய 'அடிமை' என்ற அறிவியல் புனைகதையில் இதே போன்று ஒரு குரல் வீட்டைக் கட்டுப்படுத்தும். ஓரளவுக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத நாயகன் அதனிடமே கேட்டு அதன் இயக்கத்தை நிறுத்தி விட முயல்வான். என் கதையில் என்னால முடிந்த ஜிகினாக்களை எக்ஸ்ட்ராவாகப் பரவ விட்டு, கடைசியில் நாயகனின் கேள்வியை மட்டும் மாற்றி விட்டேன். எனவே நிஜமாலுமே அது போன்ற 'குரல் கட்டுப்படுத்திகள்' வந்தால் பெருமை வாத்தியாருக்கே போய்ச் சேர வேண்டும்.

ஆனால் தம்பி சொன்ன பிறகு, ஒரு முடிவெடுத்து விட்டேன். இனி எழுதும் போது நன்றாக யோசித்து தான் எழுத வேண்டும் என! தற்காலத் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சி, எதிர்காலத்தில் எத்தகைய நீட்சி அடைய முடியும் என்று யதார்த்தமாகக் கற்பனை செய்து எழுத வேண்டும் என்ற முடிவு. சரி தானே..?

வலைச்சரத்தில் ::

இந்த வாரம் வலைச்சரத்தில் அ.மு.செய்யது என்ற பதிவர் 'காலப்பயணி'யையும் 'காலத்தை வென்ற கதைசொல்லிகள்' என்ற பட்டியலில் சேர்த்து விட்டார். மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கின்றது. இப்படி ஓர் ஆசாமி இந்த வலைப்பதிவைப் படிக்கிறார் என்பதே இன்று தான் எனக்குத் தெரிகிறது. இப்படி எத்தனை பேர் மூச்சு காட்டாமல் படிக்கிறார்களோ, தெரியவில்லை. சந்தோஷம் தான்.

சமீப காலமாக Mountainview, CA-விலிருந்து ஒரு தமிழர் 'kaalapayani.blogspot.com/' என்று URL கொடுத்தே கூகுளில் தேடிப் படிக்கின்றார். அந்த மர்மப் புள்ளி யார்..? ஏன் இந்த முறையில் தேடுகிறார்...?

மற்றொரு முகமூடி ஆசாமி பற்றி முன்பே சொல்லியிருந்தேன். அவர் இப்போது ரிமூவி விட்டார் போல் இருக்கிறது. இங்கே க்ளிக்கினால் முதல் கண்ணியில், முன்பு 'காலப்பயணி' இருந்தது தெரிய வரும். யார் இந்த தளத்தை அர்னால்டு அண்ணாச்சிகள் வரிசையில் உட்கார வைத்தார்கள் என்றே தெரியவில்லை. :)

கடைசியாக,

ஏன் இவ்ளோ பெரிய பதிவு என்று கேட்கிறீர்களா..? ஒன்றுமில்லை. இந்த My Camp நாவலுக்காக, முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே எழுதிக் கொண்டிருப்பதால், ஒரு ரிஃப்ரெஷ்ஷுக்காக தமிழில் எழுத நினைத்தேன்.

மீண்டும் அடுத்த அப்டேட்டில் சந்திக்கிறேன்.

Sunday, November 15, 2009

Blackhole..!

ன் உடைமைகள் அனைத்தும் க்ரஷ் செய்யப்படுகின்றன.

அதிகமில்லை, இந்த சிட்டி கவுன்ஸில் அனுமதிக்கும் அளவிற்கு மேல் ஒரு தனி மனிதன் வைத்துக் கொள்வது இயலாத காரியம். நகரம் முழுதும், தெருக்களில் எங்கும், வீடுகளின் அத்தனை அறைகளிலும் ஃபைபர் நரம்புகளின் பேட்டரிக் கண்கள் எங்களைத் துரத்திக் கொண்டேயிருக்கும்.

என்னிடமும் அத்தனை பொருட்கள் இல்லை. சில மெமரி ஸ்டிக்குகள், ஒரு படுக்கை, பூமி நினைவாகச் சில புத்தகங்கள் (ஆர்க்கியாலஜி சொஸைட்டியிடம் இவற்றுக்கு இன்றைய மதிப்பு அரை லிட்டர் சூடான நீர்!), ஒரு மேகத் தலையணை மற்றும் இப்போது நான் அமர்ந்திருக்கும் லேசர் சுழலி.

எனக்கு நேற்றோடு இருநூற்றைந்து வயதாகின்றது. ஜி.௭.8.1.45ல் வாழ்ந்தது போதும் என்றாகி விட்டது. இதன் வசதிகள், வளமைகள், காற்றில் மிதக்கும் களிப்புகள், இங்கு கொஞ்சிய சிமுலேட்டட் கன்னிகள் அத்தனையும் அலுத்துப் போய் விட்டன. பூமிக்குத் திருபி விடலாமா என்று சில நாட்களாக தோன்றிக் கொண்டேயிருந்தது. மனித உரிமைக் குழுவிற்கு விண்ணப்பித்ததில், இன்று அனுப்பி வைக்கிறார்கள்.

"இன்னும் ஏழு நிலா மணிகளில் நான் ரிப்போர்ட் செய்தாக வேண்டும். இந்த வயதில் பூமிக்குப் போக வேண்டும் என்று என்ன அடம்..!" என் உத்தம புத்திரன் மகி தான்.

ப்ளேனட்டின் ஸிந்தட்டிக் வெயில் ஜெனரேட்டரின் க்ரூப் வைஸ் ஹெட். பிறக்கும் போதே, இவன் இதற்குத் தான் என்று வகைப்படுத்தப்பட்டு, அதற்கான டெக்னிக்கல் தகவல்கள் ஸிரப்புகளாகத் தரப்பட்டு... எதற்கு உங்களுக்கு டெக்னிக்கல் ஜார்கன்கள்..? அவன் அதற்கானவன்.

"பாவம் மாமாவுக்கு என்ன ஆசையோ..! கொஞ்ச காலம் போய்ட்டுத் தான் வரட்டுமே..!" என்றாள் என் மருமகள் நிசி. அவளுக்கு என் மேல் எப்போதும் கொஞ்சம் பிரியம் அதிகம். என் மகனுக்காக என் நண்பனின் மகளான இவளைத் தேர்ந்தெடுத்தது நான் தானே!

நான் அமைதியாகவே இருந்தேன். சுழலியை நகர்த்தி, வெளியே வந்து பார்த்தேன். வானம் அதிக வெண்மையாக இருந்தது. இன்று நிறைய ஐஸ் கட்டிகள் நிரம்பியிருந்தன. எங்கேயோ ஓர் எரிமலை இருமுவதை லேசான வெம்மைக் காற்று (வென்றல்!) வீசிச் சொல்லியது. இன்னும் ஐந்து பூமிநொடிகள் தான் இருக்கின்றன. என்னைக் கூட்டிச் செல்லும் வாகனம் வந்து விடும். ஒரு சிறப்பு ஆப்ஷனாக எம்.ஆர்.1432 கேட்டிருந்தேன். காரணம், அது எனக்குப் பிடித்தது. என் மகன் பிறந்த போதும், கவுன்ஸிலுக்கு அதுவே கூட்டிச் சென்றது.

என் இரட்டைப் பேரன்கள் மிது1, மிது2 இருவரும் வி.ஆர். விளையாட்டுகளில் கிலோபைட் எதிரிகளாகி, வெட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு என்னைக் கவனிக்க நேரமில்லை. நானும் அப்படித் தானே இருந்தேன். பூமியிலிருந்து இந்த துணைக் கிரகத்தில் காலனி அமைப்பதற்காகக் கிளம்பும் போது, அப்பா அழுதார். இதன் செல்வங்கள், அற்புத வாழ்க்கைக்கான வாய்ப்புகள் அவரை மறைத்தன.

எம்.ஆர். 1432 வந்து விட்டது. நான் என் சொத்துகளோடு பின்புறம் ஏறிக் கொண்டேன். மகன் முன்புறம் அமர்ந்து கொண்டான். மையக் கட்டுப்பாட்டு அறை மூலம் இயக்கப்படும் இந்த வாகனத்தில் இருவரும் அமர்ந்து கொள்ள, கிளம்பி விட்டது. ஒரே ஓர் ஐஸ்கட்டி பக்கத்தில் விழுந்தது.

ன்னல்கள் வழியாகப் பார்த்துக் கொண்டே வந்தேன். காலம் தான் எத்தனை வேகமாக மாறிக் கொண்டே வருகின்றது..! முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு முதன் முறையாக வந்த போது, கே.ஓ. 187, ரி.ஜெ.65-டி, போ.ஜி.09௩எ அத்தனையும் பனிக் காடுகள். முழுக்க முழுக்க பனிப் போர்வையால் மூடப்பட்டிருந்தன.

"எஸ் நிரு..! நீங்கள் வரும் போது அப்படித் தான் இருந்தன. இன்று நீங்கள் பார்ப்பது நமது தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு சிறு கூறு! இவற்றைச் சூழ்ந்திருந்த பனிப்பாளங்கள் உடைக்கப்பட்டு, செயற்கை வெயில் ரிஸீவர் ஆண்டெனாக்கள் நடப்பட்டு, நமது கிரகத்திலிருந்து வெப்பக் கற்றைகள் ட்ரான்ஸ்மிட் செய்யப்பட்டு... அத்தனை 'பட்டு'க்களின் பயனாக இப்போது சில கரப்பன்பூச்சிகளைச் சில பல்லிகளைச் சோதனைக்காகப் பூமிலிருந்து கொண்டு வந்திருக்கிறோம். அவற்றால் வாழ முடிகின்றதா என்ற சோதனைக்காக..!" புன்னகைத்தது ஸ்பீக்கர்.

என் எண்ணங்கள் உடனடியாகச் சோதனை செய்யப்பட்டு, ஆச்சரியங்களுக்கான விடை உடனடியாக எனக்குத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்தனை கிரகங்களிலும் ஒளித்தூறல்கள்..! எத்தனை வர்ணங்கள்..! எத்தனை குதூகலங்கள்..! பால்வீதி முழுதும் விழாக் கொண்டாட்டங்கள். எத்தனை ஜ்வலிப்பு..! எத்தனை பிரகாசம்..!சில நட்சத்திரங்கள் சாகின்றன; சில பிறக்கின்றன; சில வெள்ளைக் குள்ளர்களாகி அழுகின்றன; சில சிவப்பு ராட்சதர்களாகிப் பயமுறுத்துகின்றன.

சலார்...புலார் என்று வாகனங்கள் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஆங்காங்கே காந்தப் புலக் கட்டுப்பாடுகளுக்காக ஆட்டோமேட்டிக் திசை திருப்பான்கள் திருப்பி விடுகின்றன. ஐ.ஆர். சாலைகள் நேர்க்கோட்டில் போடப்பட்டுள்ளதால், கிரகங்களுக்குத் திரும்பாமல், நேராகச் செல்ல முடிகின்றது. ஜி.ஈ. (ஜி டு எர்த் வரை) நெடுஞ்சாலை வழுக்கிக் கொண்டு செல்கின்றது. அதில் தான் சென்று கொண்டிருந்தோம்.

"பயணிகளின் கனிவான கவனத்திற்கு..! சாலையில் தற்போது ஒரு கருந்துளை புதிதாக ஏற்பட்டுள்ளதால், இருபத்தேழு ஒளி ஆண்டுகள் தூரத்திற்கு வளைந்து செல்ல வேண்டியுள்ளது..! தயாராக இருக்கவும்..! நன்றி..!" ஸ்பீக்கர் கரகரப்பின் பின் எனக்கு ஆர்வமாக இருந்தது.

நான் இதுவரை கருந்துளைகளைப் பார்த்தில்லை. மகி காது நோண்டிக் கொண்டிருந்தான்.

"மகி..! நீ ப்ளாக்ஹோல்ஸ் பார்த்திருக்கியா..?"

"பல தடவை..! என் பயணங்களில் பலமுறை அவற்றைக் கடந்து போயிருக்கிறேன்..!"

"அதுல என்ன இருக்கும்..?"

"இதுவரை தெரியல..! நாம நிறைய வளர்ந்திருக்கோம். பல கிரகங்களை ஆக்குபை பண்ணி, அங்கே எல்லாம் சுக வாழ்விற்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கிறோம்..! பட், இன்னும் ப்ளாக்ஹோல் பத்தி ஒண்ணுமே தெரிஞ்சுக்க முடியல..! வர வர நாங்களும் அதைப் பற்றி ஒண்ணும் கண்டுக்கறதில்லை. நம்மைத் தொந்தரவு பண்ணாம அதுபாட்டுக்கு ஒரு மூலையில இருந்தாச் சரின்னு விட்டாச்சு..!"

நான் சிரித்துக் கொண்டேன்.

"கருந்துளை அருகில்..! மாற்றுப் பாதையில் செல்லவும்..!" லேஸர் போர்டு மிதந்து திசை காட்டியது.

சாலை அங்கே கொஞ்சம் வளைந்து, சுற்றிச் சென்றது. கருப்பாய்த் தெரிந்தது. ஒரு பெரும் கறுப்பு வட்டம். அது ஒரு குழியாய் இருக்குமா, சமதளமா ஒன்றும் தெரியவில்லை.

திடீரென நெஞ்சு வலி போல் உணர்ந்தேன். குப்பென்று வியர்த்து விட்டது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. "பயணி எண் 2 இறந்து கொண்டிருக்கி..." அவ்வளவுதான் என்னால் கேட்க முடிந்தது. அப்படியே சரிந்தேன். மகி ஏதோ கத்த, என் அருகின் ஜன்னல் விலகி விட, அப்படியே கருந்துளைக்கு மேல் விழுந்தேன்.

விழித்த போது இருட்டாய் இருந்தது. சுத்தமான கறுப்பு. கொஞ்சம் தொலைவில் ஓர் ஒளிப்புள்ளி தெரிந்தது. அதை நோக்கி நடந்தேன். மிதப்பது போல் இருந்தது. அருகில் செல்லும் போது, அந்த ஒளி ஃபோட்டான்களை ஒரு கை பிடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. தொட்டி மீன்கள் போல் அந்த ஒளித் துகள்கள் அந்தக் கைகளுக்குள் நீந்திக் கொண்டிருந்தன. யாருடைய கை என்று தெரியவில்லை.

"நான் எங்கே இருக்கிறேன்..?" கேட்டேன்.

மிக மென்மையான குரல் அங்கிருந்து வந்தது.

"relax..!
We are programmed to receive.
You can checkout any time you like,
But you can never leave!"

மெல்ல அந்த ஒளிகளை கை விசிறியடிக்க, அந்தப் பிரதேசம் தெரிய, அவன் தெரிந்தான். தலையில் கொம்புள்ள க்ரீடமும், பெரிய மீசையும் தெரிய அவன் புன்னகைத்த போது, எங்கோ எண்ணெய் கொதிக்கின்ற வாசம் வந்தது.

***

(சர்வேசன் 'நச்' சிறுகதைப் போட்டி - 2009க்கு எழுதியது.)

ஆங்கிலம் நன்றி :: Hotel California - Eagles.