Friday, February 11, 2011

ஙு.



பின்னொரு குரல் கேட்டது. இருள் பரவியது. மழை பெய்ததன் பின் ஈரம் உணரப்பட்டது. குதிரைகள் களைத்து விட்டிருந்தன. குளத்தில் அலைகள் நகர்ந்து கொண்டிருந்தன. உடுப்புகள் நனைந்து ஒட்டின. இலைகளில் துளிகள் தேங்கி விழுந்தன. மலைமுகடுகளில் புகை எழும்பியது. மேகங்கள் காத்திருக்கவில்லை. குளிர் தரித்திருந்த காற்றில் புழுக்கள் மிதந்தன. போர்வைகளின் மேல் எழுதிய ரோமானிய மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டன. பாதையில் புழுதி படர்ந்தது. குட்டைப் பாவாடைப் பெண்களின் சின்ன மார்புகள் ருசிக்கப்பட்டன. கிளைகளில் பட்டைகள் உரிந்தன. மையச்சதுரம் மஞ்சள் வர்ணமடிக்கப்பட்டது. புத்தத் துறவிகள் புன்னகைத்தனர். வெண்கல மணி அதிர்ந்தது. நீலப் பறவைகளின் குச்சிக் கால்களில் மோதிர வளையங்கள். ஏரி தளும்பியது. புதர்களில் முள். உச்சிக்கூடுகளை அசைத்தார்கள். மதுக்குப்பிகளில் நுரை பொங்கியது. சாலை மகளிரின் செயற்கை மேடுகளில் குளிர்ப்படலம். நதிக்கரை நாகரிகம். தெரு விளக்கின் ஓசையில் பூச்சிகள். மூன்றாம் மாடி ஐந்தாம் அறையில் ஒரு தற்கொலை. ஜன்னல் கம்பிகளில் ஈக்கள். கடைசி விளிம்பில் ஆழ்ந்த முத்தம். குப்பைக்கூடையில் கசங்கிய முகம். பூமி நிரம்பியிருந்தது.

வெகு தூரம் வந்து விட்டோம்.

***

pic coutesy :: http://dark.pozadia.org/wallpaper/Figure-in-the-Dark/