Tuesday, November 12, 2013

வெண்பாவின் ஈற்றுச் சீராகத் தனி எழுத்து வரலாமா? - ஒரு ஃபேஸ்புக் விவாதம்

Naga Chokkanathan
2 hours ago near Bangalore, Karnataka ·

Hari Krishnan அண்ணா, ஒரு சந்தேகம் (எப்போதும்போல்

இன்று நண்பர் Vasantha Kumar Raju Angappan ஒரு கேள்வி கேட்டார், வெண்பாவின் ஈற்றுச் சீர் ஒற்றை எழுத்தாக வரலாமா?

ஒற்றை எழுத்து என்பது (குறில் அல்லது நெடில்) நாள் என்ற வாய்பாட்டில் அடங்கும்தானே?

’இதில் என்ன சந்தேகம்?’ என்று சிரிக்கவேண்டாம். திருக்குறளை அதிவேகமாகப் புரட்டினேன், முழுமையாக அல்ல, ஆனால் நான் பார்த்தவரை ஒரு பாடலில்கூட ஒற்றை எழுத்து ஈற்றுச் சீர் இல்லை. ஆகவே, ‘நாள்’ என்பது குறில் அல்லது நெடில் + ஒற்று என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்று ஒரு சந்தேகம்.

ஆனால் ‘மலர்’ என்பதற்கு இணையாக இரண்டு குறில்களைக் கொண்டு பல திருக்குறள்கள் வருகின்றன. அவற்றில் ஒற்றெழுத்து இல்லை. காசு, பிறப்பு ஆகியவற்றில் இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் கட்டாயம் இருக்கும் என்பதால் அதிலும் பிரச்னையில்லை.

ஆக, என் சுருக்கமான கேள்வி (விஷயத்துக்கு வந்துட்டேன்) வெண்பா ஈற்றுச் சீரில் 2 எழுத்துகள் குறைந்தபட்சம் இருந்தாகவேண்டுமோ? ஒரே எழுத்தில் நிறையும் பழந்தமிழ் வெண்பா ஏதும் உண்டா?
Unlike · · Unfollow Post · Share · Hide from Timeline
You, Natarajan Srinivasan and 4 others like this.

Natarajan Srinivasan "வெற்றியின் கொற்றமே வா"ன்னு சரஸ்வதி தேவி பத்தி எங்கேயோ படிச்ச மாதிரி நினைவு
about an hour ago via mobile · Like

Shanmuga Sundar Lakshmanan இலந்தையார்(உங்களுக்கு அவரைத் தெரியும்னு நினைக்கிறேன். இருந்தாலும் - ஹரியண்ணா, அவர், பசுபதி ஐயாவெல்லாம் வழிகாட்டுவதால்தான் சந்தவசந்தம் போன்றதொரு குழுமம் நன்றியங்குகிறது) ஒரு வெண்பாவில் "கே" என்ற ஒற்றை எழுத்தில் முடித்திருந்தார்.
about an hour ago via mobile · Like

Naga Chokkanathan Shanmuga Sundar Lakshmanan சில ஆண்டுகளுக்குமுன் இலந்தையாரை நன்கு அறியும் பேறு கிட்டியது. எங்கள் தினம் ஒரு கவிதை குழுமத்துக்காக ‘விருத்தம் எழுத வருத்தம் எதற்கு’ என்ற தலைப்பில் ஒரு தொடர்கூட எழுதி கௌரவித்தார்!

பசுபதி ஐயா நூல்களைப் படித்துள்ளேன், ஃபேஸ்புக்கில் நட்புக் கோரிக்கை அனுப்பியுள்ளேன்
about an hour ago · Like

Suresh Babu சங்கத் தமிழ்மூன்றும் தா.
about an hour ago · Unlike · 5

Vasantha Kumar Raju Angappan கிளை ஐயம்.

‘சங்கத்தமிழ் மூன்றும் தா’ என்ற பாடலில் ஈற்றுச்சீர் ஓர் எழுத்தாக இருப்பினும் அது தனித்து ’தருதல்’ ஒரு பொருளைச் சொல்கிறது. எனவே இதை ஓர் எழுத்தாகக் கொள்வதை விட, ஒரு சொல்லாகக் கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதே போல் கோ, நீ, போ...See More
about an hour ago · Like · 1

Naga Chokkanathan Vasantha Kumar Raju Angappan இருங்க, ரூல்ஸை மாத்தாதீங்க, இதுமாதிரி தனிச்சு நிற்கற ஒரு சொல்லோடயாவது திருக்குறள் (அல்லது பழந்தமிழ்ப் பாடல் வேற) முடிஞ்சிருக்கான்னு முதல்ல கன்ஃபர்ம் செய்வோம்

Suresh Babu செம உதாரணம். If no other (older) songs exist, ஔவையார் ஆசிர்வாதத்தோட இதைத் தொடரலாம்
about an hour ago · Unlike · 2

Suresh Babu வசந்தகுமாருடன் ஒத்துப்போகிறேன். கடைசி வார்த்தை தனிப்பொருள் தருமாயின் சரி. சும்மா நம்ம டெண்ட்டிங்குக்காக ஒரு வார்த்தையைப் பிரிச்சு விட்டு தளைதட்டலைன்னு சொல்றது போங்காட்டம்.
about an hour ago · Like · 1

Naga Chokkanathan Suresh Babu இதென்ன கூத்து? ’திண்மைஉண் டாகப் பெறின்’னு திருவள்ளுவர் ஒரே வார்த்தையைப் பிரிக்கலையா? வார்த்தையை எப்படிப் பிரித்தாலும் தளை தட்டாதவரை சரி என்றுதான் எனக்குப் பாடம்
about an hour ago · Like

Naga Chokkanathan Suresh Babu ’மழலைச்சொல் கேளா தவர்’ன்னு திருவள்ளுவர் எழுதறதும் போங்காட்டமா?
about an hour ago · Like · 1

Suresh Babu நடுவில பிரிக்கறது ஓக்கே.. கடைசி வார்த்தை (மாடிஃபைட்) - மாடல்ல மற்றையும வைன்னு வச்சா போங்கில்லையா?
about an hour ago · Unlike · 1

Naga Chokkanathan Suresh Babu அதுவும் போங்கில்லைன்னுதான் நான் நினைக்கறேன், Hari Krishnan அண்ணா தீர்ப்பு சொல்லட்டும்
about an hour ago · Unlike · 1

Vasantha Kumar Raju Angappan கிளையில் கிளைத்த மற்றொரு கிளை ஐயம்.

’மாடல்ல மற்றையும வை’ என்ற ஈற்றடியில் வை என்பது தனிச் சொல்லாகவும் கருதப்படலாம். (வைத்தல்!). ஆனால், இங்கு வை தனித்து இயங்கும் ஆற்றல் அற்றது. ’மற்றையும’ சொல்லை நிறைவு செய்ய வருவது. அதே சமயம் ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ வில் தா முன் சொல்லுக்கு எவ்வகையிலும் தேவைப்படாத ஒன்று.
about an hour ago · Edited · Like · 1

Kannan Rajagopalan ஒற்றைச் சொல் வரலாம் நாகாஸ்.. நெய்யொழுகு வெண்பொங்கல் தா..
about an hour ago · Like

Naga Chokkanathan Kannan Rajagopalan அதெல்லாம் ரொம்ப மாடர்ன் வெண்பா கண்ணன்
about an hour ago · Like

Kannan Rajagopalan .http://www.tamilbrahmins.com/... இந்த லிங்க்ல சில ஒற்றைச் சொல் வருது.. ஆனா பழசு இல்லை..
கவிதையில் யாப்பு - Page 6
www.tamilbrahmins.com
4.7.4.10. எதுகை மோனை அடிநிலைக் கĬ
about an hour ago · Like

Hari Krishnan சொக்கன் சொல்வது யாப்பிலக்கண விதிப்படி மிகமிகமிகமிகமிகமிகமிகமிகச் சரி.. ஒரு சொல்லை இப்படி சீர்களுக்குத் தக பிரிப்பதற்கு வகையுளி என்று பெயர். போங்காட்டம் எல்லாம் இல்ல. எதுக்கும் கொஞ்சம் எலக்கணப் புஸ்தகத்தப் பொரட்டிப் பாத்துடுங்க.
about an hour ago · Like · 2

Sundar Lakshmanan நாள் மலர் என்பது நேர் நிரை என்ற பொதுவிலக்கணத்தில் இருந்து சிறப்பித்தது அதற்காகத்தான் என நினைக்கிறேன், சொக்கன். சான்று கிடைத்ததும் பகிர்கிறேன்.
about an hour ago · Like · 1

Naga Chokkanathan Hari Krishnan நன்றி அண்ணா முதல் கேள்விக்கும் இதுவே பதிலாக எடுத்துக்கொள்ளலாமா? வெண்பா ஈற்றுச் சீரில் ஒரே ஒரு எழுத்து இருக்கலாமா? அது ‘நாள்’ வாய்பாடு என ஏற்றுக்கொள்ளப்படுமா? திருக்குறளில் அப்படி உள்ளதா?
about an hour ago · Unlike · 1

Naga Chokkanathan திருக்குறளை வைத்துச் சில நூறு தலைப்புகளில் சொல் ஆராய்ச்சி செய்யலாம்போல!
about an hour ago · Like

Hari Krishnan நாள் மலர் காசு பிறப்பு என்பது வெண்பாவின் ஈற்றுச் சீருக்கான வகைகள். பாவுக்கு வேறிடங்களில் இருந்தால் தேமா புளிமா எட்செட்ரா. வெண்பாவின் ஈற்றுச் சீராக நான்கு வகைதான் வரமுடியும். நேர், நிரை, நேர்நேர், நிரைநேர். இதைத்தான் நாள் மலர் காசு பிறப்பு என்று சொல்கிறோம். (நாள், மலர், காசு, பிறப்பு என்ற சொற்களை அலகிட்டுப் பாருங்க. அதே நேர், நிரை, நேர்நேர், நிரைநேர் வரும்... மற்ற எல்லா வாய்பாடுகளுக்கும் இது பொருந்தும். தேமா தொடங்கி, கருவிளநறுநிழல் வரைக்கும்.)
57 minutes ago · Like · 2

Hari Krishnan சொக்கன்: தனி எழுத்தாக வெண்பாவின் ஈற்றுச் சீர் வரலாம். தனிக்குறில் வரக்கூடாது என்பார்கள். வந்திடுக வே. இது ரைட். குறில் வரக்கூடாதுங்கறது ஒரு கட்சி. ஆனா காளமேகம் வெண்பாக்கள்ள, குக்லிச்சி குங்கலைச்சிக் கு... குடத்திலே கங்கையடங் கும்... என்றெல்லாம் தனிக்குறில் ஈற்றுச்சீர்களைப் பார்க்கலாம்.
51 minutes ago · Like · 3

Sundar Lakshmanan சே, எங்க கட்டுரையிலும் மலருக்கு ஒற்று கட்டாயம் வருமாறு எழுதியிருந்தாலும் சோம்பற்பட்டு நாளுக்குப் பதில் நேரையே பயன்படுத்தியிருக்கிறோம் என இப்போதான் பார்க்கிறேன்.

http://www.persee.fr/web/revues/home/prescript/article/befeo_0336-1519_1988_num_77_1_1744
MetricalTextParser TI2010 Paper
www.scribd.com
Scribd is the world's largest social reading and publishing site.
51 minutes ago · Like

Naga Chokkanathan Sundar Lakshmanan மரபுப்பா எழுத / பிழை திருத்த உதவும் மென்பொருள் ஒன்று வந்தால் நன்றாக இருக்கும், வெண்பாவில் தொடங்கலாம்.

I am visualizing something like:

* Write the VeNpa
* Show wrong usages in a different color
* Click on the error
* Know why it is wrong
* Correct
* Error vanishes
* Continue until whole poem is done
49 minutes ago · Like · 1

Naga Chokkanathan Hari Krishnan நன்றி அண்ணா. பாக்களுக்கும் history timeline உண்டா? எது முதல், எது பிறகு என்று?
48 minutes ago · Like

Hari Krishnan சங்கத் தமிழ்மூன்றும் தா. ஈற்றுச் சீர் தனி நெடில். ஆட்சேபணையே இல்ல. தனிக்குறிலுக்குதான் சில பண்டிதர்கள் ஆட்சேபிப்பார்கள். அதற்கும் அடிப்படை இல்லைங்கறதுக்குதான் காளமேகத்தின் எடுத்துக் காட்டு. நளவெண்பாவைக் கொஞ்சம் பொரட்டிப் பாருங்க... ஈற்றடிகளை மட்டுமாவது கவனிச்சிட்டு வாங்க.
47 minutes ago · Like

Naga Chokkanathan Hari Krishnan //நள வெண்பா// இந்தக் கோணத்தில் வாசித்ததில்லை, திருக்குறளையே நம்பி இருந்துவிட்டேன்
46 minutes ago · Like

Sundar Lakshmanan Naga Chokkanathan, we built such a web parser and hosted it at visaineri.net for some time. Couldn't sustain it. The code is still available if someone wants to host that. CC: Ishwar, Kishore, Sanjeeth
33 minutes ago · Edited · Like

Naga Chokkanathan Sundar Lakshmanan What is the technology? We can ask around who can host it, Can I try it in my localhost?
44 minutes ago · Like

Sundar Lakshmanan http://www.persee.fr/.../befeo_0336-1519_1988_num_77_1_1744 is the authority in modern times, but that's also silent on the otru part. நான் என் தமிழம்மாவிடம் எழுதி வாங்கிய விதிமுறைகளையும் பார்க்கிறேன். பச்சை அரங்க நக்கீரன் போன்றோர் கேட்டுச் சொல்லலாம்.
Persée
legacy.persee.fr
43 minutes ago · Like

Hari Krishnan சொக்கன்: கிடைத்திருப்பதிலேயே மிகப் பழைய வெண்பாக்கள், முத்தொள்ளாயிரம்.
43 minutes ago · Like · 2

Sundar Lakshmanan Naga Chokkanathan, the latest version is Python. You can try the code at https://github.com/thamizha/visaineri Later when you publicly host, we'll share you proper attribution text to put on the site.
visaineri
github.com
visaineri - "Visaineri" is created on the basis of rules governing the tamil grammar. When a Verse is entered, it is parsed with grammar rules which we have specified in Backus-Naur format and if succeeds, the Verse will be displayed with its constituents like Character, Syllable, Word, Line, etc......
32 minutes ago · Edited · Like

Naga Chokkanathan ஆஹா, முத்தொள்ளாயிரத்தில் ஈற்றுச்சீராக தனி எழுத்து உள்ளது:

வீறுசால் மன்னர் விரிதாம வெண்கொடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை
40 minutes ago · Edited · Unlike · 2

Naga Chokkanathan முத்தொள்ளாயிரத்திலிருந்து இன்னொரு ஈற்றுச்சீர் தனி எழுத்து உதாரணம்:

நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து
முந்தந்த மன்னர் முடிதாக்க-இன்றுந்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ!
40 minutes ago · Edited · Like · 1

Sundar Lakshmanan நன்றி Hari Krishnan.
40 minutes ago · Like

Vasantha Kumar Raju Angappan அந்த ஈற்றுச் சொல் தனித்துப் பொருள் தர வேண்டிய கட்டாயம் உள்ளதா, இல்லையா..?
40 minutes ago · Like

Naga Chokkanathan இந்த இரண்டு உதாரணங்கள்தான், வேறு இல்லை. ஆக, ஒரு பிரச்னை தீர்ந்தது, மிகப் பழமையான வெண்பா நூலிலேயே ஈற்றுச் சீராக தனி எழுத்து வந்துள்ளது, நம் எழுத்திலும் வரலாம்

Hari Krishnan நன்றி அண்ணா!

இந்த இரண்டு தனி எழுத்துகளும் (கை, கோ) தனிப்பொருள் தருகின்றன. அப்படி இல்லாதபடி சொற்களை தனி எழுத்துச் சீராகப் பிரிக்கலாமா என்பது வேறு பஞ்சாயத்து. வெண்பா இலக்கணப்படி தனிப்பொருள் இல்லாமல் சொற்களைப் பிரிக்கலாம் என்பதால் அதுவும் ஓகே என எண்ணுகிறேன்.

”மடி”யாக எழுத விரும்புவோர், தனி எழுத்து தனியே பொருள் தந்தால்மட்டும் அதனை ஈற்றுச் சீராகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்
36 minutes ago · Unlike · 2

Naga Chokkanathan Will check Sundar Lakshmanan
34 minutes ago · Like · 1

Naga Chokkanathan நண்பர்காள்,

யாரேனும் இந்த விவாதத்தைத் தொகுத்துத் தங்கள் Blogல் சேர்த்தால் நல்லது, நிரந்தரமாக கூகுள் சர்ச்சில் எவர்க்கும், எப்போதும் கிடைக்கும்.
31 minutes ago · Like · 2

Hari Krishnan <<அந்த ஈற்றுச் சொல் தனித்துப் பொருள் தர வேண்டிய கட்டாயம் உள்ளதா, இல்லையா..>> இல்லை என்பதுதான் பதில். குறள், நாலடியார், நளவெண்பா, முத்தொள்ளாயிரம் என்று எதை வேண்டுமானாலும் புரட்டிப் பாருங்கள். ஆயிரக்கணக்கான எடுத்துக்காட்டுகள் கிடைக்கும். காளமேகப் பாடல் ஒன்றின் ஈற்றடியை மேலே கொடுத்திருந்தேன்--குக்கலிச் சிங்கலைச்சிக் கு. இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்: தீரம்உள்ள சூரிக்கத் தி. கு, தி.. எல்லாத்துக்கும் தனியா பொருள் இருக்கா?
25 minutes ago · Like · 1

Hari Krishnan நன்றியா? கணக்கில்ல தம்பிசொக் கா.
23 minutes ago · Like · 1

Pugazhenthi K. Saidai மிக அருமையான விவாதம், தமிழ் இனி மெல்ல வளருமோ? இல்லையில்லை வளர்கிறதோ? அனைவருக்கும் நன்றி. மொழி ஆர்வம் என்பது இதுவன்றி வேறொன்றுமில்லை.
9 minutes ago · Like

Vasantha Kumar Raju Angappan நன்றிகள் Natarajan Srinivasan Naga Chokkanathan Hari Krishnan
about a minute ago · Like