Thursday, February 04, 2010

என் வாழ்வில் மர்மமான சில சம்பவங்கள்.



'கடவுள் இருக்கிறாரா?' என்ற மின்னூலைப் படித்தேன். வாத்தியாருடையது.

நூல் இரண்டு பகுதிகளாக இருக்கின்றது. முதல் பகுதி 'கடவுளின் இருப்பைப்' பற்றி இயற்பியல், நம்மாழ்வார், கேனோபதேசம், ஷ்ரோடிங்கர் என்று வாத்தியார் கலந்து கட்டி எழுதி, முடிக்கும் போது, 'அறிவியலின் பதில் 'இருக்கலாம்'; ஆன்மீகத்தின் பதில் 'இருக்கிறார். என் பதில், 'இட் டிபெண்ட்ஸ்' என்று சொல்கிறார்.

இந்தப் பதிவை நான் எழுதுவதற்கான காரணம் இரண்டாம் பகுதியில் உள்ளது. 'என்ன ஆச்சரியம்' என்ற தலைப்பில் உலகில் நடந்த ஆச்சர்யச் சம்பவங்களைச் சொல்லி வியப்பில் சிந்திக்க வைக்கிறார். கொத்திலிருந்து ஒரு கனியை மட்டும் இங்கே கொடுக்கிறேன்.

......

கடைசியாக இந்த சம்பவத்தைப் பாருங்கள்.

ஜோசப் எய்கனர் என்பவர் ஒரு சித்திரக்காரர். தன் 18-ம் வயதில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார். இது வியன்னாவில் 1836ம் ஆண்டில் நடந்தது. அந்த தற்கொலை முயற்சியை கடைசி கணத்தில் காப்புச்சின் இயக்கத்தைச் சேர்ந்த சாமியார் ஒருவர் வந்து தடுத்தார். எய்கனர் நான்கு வருஷம் கழித்து புடாபெஸ்ட் நகரில் மறுபடி தற்கொலை முயற்சி செய்தபோது அதே சாமியார் வந்து தடுத்தார். எட்டு வருஷம் கழித்து எய்கனர் கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார். கடைசி சமயத்தில் ஒரு சாமியார் சொல்லி தூக்குமேடையிலிருந்து காப்பாற்றப்பட்டார்.

அதே கப்புச்சின் சாமியார்! இறுதியில் 68 வயதில் எய்கனர் தன் விருப்பப்படியே துப்பாக்கியில் தன்னைச் சுட்டுக்கொண்டு உயிர் துறந்தார். அவருடைய அந்திமக் கிரியைகளை நடத்திக் கொடுத்தவர்? ஒரு சாமியார்... அதே சாமியார்தான்! அவருடைய பெயரை எய்கனர் இறுதிவரை தெரிந்துகொள்ளவே இல்லை. வந்துபோனது சாமியாரா... இல்லை ஏதோ ஒரு தேவ தூதரா? இந்தக் கதை ரிப்ளியின் 'நம்பினால் நம்புங்கள்' புத்தகத்தில் உள்ளது.


......

இப்போது எனது 'நான் கடவுள்' என்ற கதையைப் படித்துப் பாருங்கள்.

ஆச்சரியம் என்னவென்றால் அந்தக் கதையை எழுதியது ஜனவரி 4, 2008. அந்த வருட தீபாவளிக்குச் சென்னை போய் வீட்டுக் கணிணியில் மின்னுல்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது, மேற்சொன்ன சம்பவத்தைப் படித்து ரொம்பவே ஆச்சரியப்பட்டுப் போனேன்.

எனக்கு நன்றாகத் தெரிந்த வரையில் மின்னூலை தீபாவளி சமயத்தில் தான் முதன் முதல் படிக்கிறேன். எனில், அதே போன்ற சம்பவத்தை எப்படி ஒரு கதையில் எழுதியிருக்க முடியும்..? சம்திங் ஸ்ட்ரேஞ்ச்.

***

இதுவரையான இருபத்தெட்டு ஆண்டு வாழ்க்கையில் என்னால் மறக்கவே முடியாத மற்றொரு மர்மச் சம்பவம் என் அப்பா இறந்தது. இறப்பில் மர்மம் இல்லை. அந்த விஷயம் எனக்குத் தெரிய வந்த விதத்தில் இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு தான் வீட்டில் இருந்து கால் செய்து பேசினோம். அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. அதைச் சொல்ல வேண்டாம் என்று அப்பா சொல்லி விட்டதால், அம்மா சொல்லவில்லை.

அடுத்த நாள் திங்கட்கிழமை. ஏப்ரல் 10, 2000. காலையில் நோட்டுகளை எடுத்துக் கொண்டு வகுப்புக்குச் சென்று விட்டேன். செகண்ட் செம். காலையில் இருந்தே ஏதோ ஓர் உறுத்தலாகவே இருந்தது என்று பொய் சொல்லவில்லை. சாதாரணமாகவே இருந்தேன். இயற்பியல் வகுப்பு. ரீசஸுக்கு முந்தைய க்ளாஸ். சபரிநாதன் சார் நடத்திக் கொண்டிருக்கிறார். சுரேஷ் வந்து வாசலில் நின்று, 'எக்ஸ்க்யூஸ் மீ சார்' என்கிறான்.

சுரேஷ் அறைத் தோழன். மெக்கானிக்கல் துறை. மொத்த வகுப்பும் பாடம் கவனிக்கிறது. அவன் வந்து நின்றவுடனே எனக்கு ஏதோ தோன்றி விட்டது. என்னைத் தான் கூப்பிட வந்திருக்கிறான் என்று. லாஜிக்கலாக ரீஸன் இருக்கலாம். என் அறைத் தோழன். ஆனால் என் மற்றொரு ரூம்மேட், அதே எலெக்ட்ரானிக்ஸ் துறை சண்முகமும் என் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தான். அவனைக் கூப்பிட வந்திருக்கலாம் அல்லவா?

அவன் வந்து நின்றவுடனே 'நான் கிளம்பியாக வேண்டும்' என்ற எண்ணம் வந்து விட்டது. எங்கிருந்து வந்தது..? தெரியாது. எல்லா புத்தகங்களையும் நோட்டுகளையும் அடுக்கி வைத்துக் கொண்டு அவன் என்னை அழைக்கப் போகும் அந்த விநாடிக்குத் தயாராகி விட்டேன். எது என்னை அப்படி ஒரு முடிவுக்கு அத்தனை உறுதியாகக் கொண்டு வந்தது..? தெரியாது.

அத்தனையையும் விட 'அப்பா இறந்து விட்டார்' என்பதைச் சொல்லத் தான் வந்திருக்கிறான் என்பது எப்படி 'அவனைப் பார்த்தவுடனே' என் மனதில் தோன்றியது என்பதை இந்த நொடி வரை என்னால் கணிக்க முடியவில்லை.

'என்ன..?'

'வசந்த் கூட பேசணும்..!'

அவன் முடிக்கும் முன்பாகவே எழுந்து விட்டேன். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. எலெக்ட்ரானிக்ஸ் வகுப்பிலேயே மற்றொரு 'ஆர்.வசந்த குமார்' இருந்தான். God Forbid, ஏன் அந்தச் செய்தி அவனுக்காக இருக்கக் கூடாது என்று எனக்கு ஏன் தோன்றவில்லை. புத்தகங்களை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.

தனியாகக் கூட்டிப் போய், 'உங்க அப்பா செத்துட்டாராம். வரச் சொல்லி போன் வந்துச்சு.' என்றான்.

தனியாக அறைக்குச் செல்லும் வரை ஒன்றும் புரியவில்லை. தனியாய்க் கட்டிலில் உட்கார்ந்து ஒருபாட்டம் அழுது முடித்துக் கையில் கிடைத்த துணிகளை அள்ளி பையில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டேன்.

பாதி வழியில் ஈ.ஈ.ஈ. நிஷாந்த் பார்த்து, 'என்னடா ஊருக்கு போறியா..? ஹேப்பி ஜர்னி!' என்று சிரிப்பாய்ச் சொன்னான். பதிலுக்குப் புன்னகைத்து அவனைக் கடந்தேன்.

சென்னைக்கு வந்து அரை வர்டம் தான் ஆகியிருந்தது. ரயில் நேரங்கள் தெரியாது. ரயிலில் அவ்வளவாகப் போனதில்லை அதுவரை. பஸ் மட்டும் தான் தெரியும். பாரீஸுக்குப் போனேன். சேலம் பஸ் ஒன்று காலியாக இருந்தது. ஏறி உட்கார்ந்ததும், எதனாலோ அத்தனை களைப்பு! நீள் வரிசைச் சீட்டில் படுத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை அழுகை.

கண்டக்டர் வந்து பார்த்து, 'படுக்க எல்லாம் கூடாது..' என்று சொல்லி விட்டுப் போனார். பயந்து உட்கார்ந்து கொண்டேன்.

மர்மம் இத்துடன் முடியவில்லை. இன்னும் இருக்கின்றது.

அந்த பஸ்ஸை என் வாழ்க்கையிலேயே மறக்க மாட்டேன். மன்னிக்கவும், ..த்தா... பாடு பஸ் அது..!

வண்டியை அரைமணி நேரம் கழித்து எடுத்தான். அஞ்சு மணிக்கெல்லாம் சேலம் போய்டும் என்றார்.

செங்கல்பட்டு தாண்டி கேசட் போட்டு ஒலிக்கிறது 'சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால்...' மறக்கவே மாட்டேன்.

மலைகளைத் தாண்டிய பிறகு, ஒரு நீள ட்ராஃபிக் ஜாம். கேட்டால், எங்கோ முன்னாடி லாரி ஒன்று கவிழ்ந்து ரோடு ப்ளாக்காம். அந்த கணமே மனதுக்குள் ஏதோ தோன்றி விட்டது. இன்றைய சம்பவங்கள் ஏதோ ஒருவிதத்தில் மறக்க முடியாமல் இருக்கப் போகின்றன என்று..! யோசித்துக் கொண்டே, பாக்கெட்டில் வைத்திருந்த அப்பாவின் இளம் வயது போட்டோவைப் பார்த்துப் பார்த்து தவணை முறையில் அழுது கொண்டே வருகிறேன்.

கொஞ்ச நேரம் நின்று பார்த்து விட்டு, வண்டியைத் திருப்பி ஒரு காட்டுக்குள் செலுத்தினார்கள்.

உத்திரமேரூர் வழியாகப் போய் ஏதோ ஓர் ஊரை நெருங்கும் போது (வாயில வர்ற எல்லா வார்த்தைகளையும் சொல்லிக் கொள்கிறேன் இங்கே) டயர் பஞ்சர்..!

ஒன்றரை மணி நேரம் நோண்டி நோண்டி எடுத்து அப்புறம் வண்டி கிளம்புகிறது. நெருப்பாய்க் கொதித்துக் கொண்டிருந்தேன்.

ஏன் அன்றைக்கு ஒரு ட்ராபிக் ஜாம் ஆக வேண்டும்..? அதில் ஏன் அந்த வண்டி சிக்கியிருக்க வேண்டும்..? ஏன் மாற்றுப் பாதையில் செல்லும் ஐடியா வந்திருக்க வேண்டும்..? அங்கேயும் ஏன் பஞ்சராய்த் தொலைக்க வேண்டும்..? தெரியவில்லை.

பிறகு விழுப்புரம் மோட்டலில் அரை மணி நேரம் ஹால்ட். சாப்பிடவே தோன்றவில்லை. இருந்த பூத்தில் சித்தப்பா வீட்டுக்கு கால் செய்தால், அக்கா எடுத்து, 'ஒண்ணும் இல்லை. நீ வா சீக்கிரம்..! இன்னும் என்ன பண்ணிட்டிருக்க அங்க..?' என்கிறார். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அது என்ன ஊர் என்றே தெரியவில்லை. 'வந்துட்டே இருக்கேன்' என்று சொன்னேன்.

அந்த பாடாவதி ******* *** ******** ** **** பஸ் சேலத்துக்கு எத்தனை மணிக்கு வந்து சேர்ந்தது தெரியுமா..? ராத்திரி பத்து ஐம்பதுக்கு!

பதினோரு மணிக்கு சேலத்திலிருந்து பவானிக்கு கடைசி பஸ். நல்லவேளை, அது கிளம்பிக் கொண்டிருந்தது. அதில் தொற்றிக் கொண்டேன். பவானியை அடையும் போது நடு இரவு 12.30.

ஊரே இருட்டாய் இருந்தது. கரண்ட் கட்.

மயானத்திற்குப் போய் விட்டார். பஸ் அந்தியூர் முனையில் நிற்கும் போது, லூனாவில் ஒரு சொந்தக்காரர் பார்த்து அங்கேயே என்னை இறக்கி நேராக மயானம் கூட்டிச் சென்று விட்டார். அதற்கு மேல் வேண்டாம்.

ஏன் அன்றைய சம்பவங்கள் அப்படி நடக்க வேண்டும்..?

இல்லை, ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் ட்ராபிக் ஜாம் ஆவது எதிர்பார்க்கக் கூடியது தான். ஒரு துணைச் சாலையில் போகும் போது பஞ்சர் ஆவது சாத்தியமான ஒன்று தான். ஆனால் சுரேஷ் வந்து சொல்லும் போதே எனக்கு உறுதியாகத் தோன்ற ஆரம்பித்து, அந்தச் சம்பவங்கள் அனைத்தும் தனித்தனியாக நிகழ்ந்து, அத்தனை நிகழ்ச்சிகளிலும் பொதுவான ஓர் ஆசாமியான என்னால் அவற்றைக் கோர்க்க முடிகின்றதோ..?

பாரீஸில் இருந்து என்னோடு வந்து, ட்ராபிக் ஜாமில் சிக்கி, வண்டி பஞ்சரில் எரிச்சலடைந்த விழுப்புரத்தில் இறங்க வேண்டிய ஒருவருக்கு, இந்தச் சம்பவங்கள்... இவற்றில் இருக்கும் மர்மக் கேள்வியான 'ஏன் அன்று..?' என்பதற்கான தாக்கம் என் அளவுக்கு இருக்காதோ...?

நடப்பதற்கான கோடிக்கணக்கான வாய்ப்புகளில் நிகழ்வுகள் எங்கெங்கும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவற்றின் ஊடாக 'நான்' என்ற ஓர் ஆகிருதி இணைத்துக் இணைத்து நடந்து அந்தத் தொகுப்புக்கு உள்ளே இருக்கலாம் என்ற ஒரு மர்மத்தைத் தேடும் ஆதிவாசியாக இன்னும் இருக்கிறோமோ..?

எண்ணங்கள் என்ற ஒரு சின்ன புத்தகம். எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் எழுதியது. அக்கா படித்த கல்லூரிகளில் பாடப் புத்தகமாகவும் இருந்தது. ஆறாவது படிக்கும் போதே அதைப் படித்திருக்கிறேன். எண்ணங்களின் வலிமையைப் பற்றி அதில் சொல்லி இருப்பார்.

பெரியப்பா இறந்த செய்தியை எனக்குச் சொல்லவில்லை. அடுத்த முறை வீட்டுக்குப் போன போது மெதுவாக அம்மா சொன்ன போது, உடனே நான் நினைத்தது தான் நினைவுக்கு வந்தது. கூடவே 'எண்ணங்கள்'.

அன்றிலிருந்து முடிந்த அளவுக்கு நல்லதையே நினைக்க முயற்சிக்கிறேன். யாராவது ஏதாவது செய்தால் கூட 'நல்லா இருங்க' என்று சொல்லித் தவிர்க்கவே முயல்கிறேன்.

***

பிப்ரவரி 27, 2008. இரவு ஒன்பது மணிக்கு மேல்.

மகாகவி பாரதி பற்றி ஒரு பதிவு எழுதி விட்டு, அதில் கீழ்க்காணும் வரிகளை எழுதியிருந்தேன்.

**
பிறந்ததில் இருந்து உடல் மாறிக் கொண்டிருக்கின்றது. மனம் மட்டும் அதே போல் இருக்கின்றது. இன்று உடல் பருமனாக இருக்கின்ற மனிதன், ஒரு மாதம் உணவே உண்ணாமல் இருந்தால், உடல் வற்றி மிக இளைத்தவன் ஆகின்றான். அப்போது அவன் அவன் இல்லையா? அவனை அடையாளம் கண்டு கொள்ள மாட்டோமா? அப்போதும் அவன் அவன் தானே! அப்படியானால் இந்த உடல் என்பது அவன் இல்லை.

பிறகு ஏன் உடல் முற்றும் இல்லாது போன நிலையில் அவனை நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை? அந்த மனம், ஆன்மா அது தான் அவனா?

பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் ஒரு துளியினும் துளியாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில், வாழ்க்கை நடத்த என்ன காரணம்?

நாம் வருவதற்கு என்ன காரணம்? நம் வாழ்வே யாரோ ஒருவருடைய கனவோ? அவன் கனவு கலைந்து விழித்தால் நான் தொலைந்து விடுவேனா?

எரிகின்ற விளக்கை ஊதினால், அந்த நெருப்பு எங்கு சென்று விடுகின்றது? அது போல் இந்த நினைவும், எண்ணங்களும் எங்கு செல்லும், பின்? ஒரு பானை நிறைய நீர் வைத்து, ஒரு துளையிட்டால் நீர் முழுதும் ஓடி விட்டு பானை காலியாகி விடுகின்றதே. இந்த மண்பாண்ட மனித உடலில் இருந்து எதுவும் சென்று விடுவதில்லையே, ஏன்?

இந்த மூளையும், எலும்பும், வெறும் புரதங்களாலும், அமினோ அமிலங்களாலும், டி.என்.ஏக்களாலும் தான் ஆனதோ? உயிரியல் ஆய்வகத்தில் தொங்கும் எலும்புக் கூடு தான் நானுமோ?

அடுத்த நாள் இளங்காலையில் சாம்பலில் இருந்து தேடி ஒரு எலும்பை எடுத்துக் காட்டி 'இது தான் உன் பாட்டி' என்றார்களே, அந்த கணத்தில் புரிந்த மாயை எக்கணத்தில் மனதை விட்டு மறையும்? அதற்குப் பின் பார்க்கின்ற மனிதர்கள் எல்லாம் அவ்வப்போது, அடையாளங்கள் அற்ற 'என்பு தோல் போர்த்த உடம்பு' என்று உணர்கின்ற போது எந்த உணர்வும் அற்ற வெற்று வெள்ளைத் திரையாய் மனம் மாறுகின்றதே, அது எதனால்?

**

பதிவை எழுதி முடித்து விட்டு, ஜிமெய்ல் உரையாடியில் அப்போது வுஹானில் இருந்த அனீஸிடம் பேசினேன். அதில் பேசியவை இந்தப் பதிவில் இருக்கின்றன.

அதிலும் பெரும்பாலும் மரணம், துக்கம் என்பது பற்றியே பேசினோம்.

அடுத்த நாள் காலை. அலுவலகத்திற்குக் கிள்மபிக் கொண்டிருந்து விட்டு, ஹிந்துவைப் புரட்டினால், உள்ளே 'Eminent Tamil Writer Sujatha was no more'. நேரம் நாங்கள் சோகம் பேசிக் கொண்டிருந்த அதே ஒன்பதரை மணி.

என்னவென்றே புரியவில்லை.

Wednesday, February 03, 2010

சில ட்வீட்டுகள்.



140 எழுத்துக்களில் சுவாரஸ்யமாக எழுதுவதற்கு ட்வீட்டர் களமாக எனக்குப் பிடித்திருக்கின்றது. மேலும் ஸ்பெஷலாக ஆங்கிலத்தில் எழுதிப் பழகப் பயிற்சியாகவும் எடுத்துக் கொள்கிறேன்.

இப்போது 'When I was ...' என்ற வரிசையில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

WIWS:When i was laughing on a madman, he danced in the middle of the road and laughed on me.

WIWS:When i was buying a book in HB in a railway station, the station came to life first. The train came ten minutes later.

WIWS:When i was unrolling a thread bundle, it fell as a modern art. I saw a dog, a sword and two suns in it.

WIWS:When i was planting a mango seed in my garden, two sparrows had sex. One day their kid may stay in my tree.

WIWS:When i was walking on the road, a crow came near 'n askd me, 'can i shit on ur head?'. I axepted, coz i knew it was Karthik's fan.

WIWS:When i was waiting in a bus stop, a bus arrived. It didn't have doors by carrying a name board 'ladies only'.

WIWS:When i was hunting for a bug, it lived happily inside a for loop by eating a buffer and corrupted an array by shitting in it.

WIWS:When i was sleeping, a rat bit my rigit earlobe. 'excuse me. You bit me. It was in my dream, right?' i asked. it replied 'no. in mine.'

WIWS: When i was walkin in a lonely beach, seen a panty.Then a tops.With raging harmones,i searched the gal.Then i saw a bangle hand lonely.

When i was walking to the washroom, a man came opposite in a hurried face. I asked the matter. He replied,'damn. again i forgot my veanie'

பெண்களின் டி-ஷர்ட்டில் என்ன வாக்கியங்கள் எழுதலாம் என்று படுத்துக் கொண்டு யோசித்ததில்,

TL4G.9. What you see are 'bra sets'. Can you jumble it? Yes...!

TL4G.8. Is this the first time you see?

TL4G.7. I am a bad girl. Care... not pad, its bad.

TL4G.6. Which comes first? Oops... I forgot the second half of the question.

TL4G.5. I love binary.

TL4G.4.(d shirt has 3 buttons.in d right half)Un, able is, paining(in d left half)touch, heart, and a(after 3 buts, @ d common bottom)crime.

TL4G.3. My eyes are more sharper.

TL4G.2. Yes, you are right. I missed my bra.

Tshirt Lines 4 Girls.1. Warning Friedman, My worlds are not Flat.

Tuesday, February 02, 2010

+2 டிசம்பர்ச் சுற்றுலா!.1.

தினமும் பகலில் பழகிய பள்ளியை இரவில் உணர்வது புதிதாய் இருந்தது.

அரை கி.மீ. தள்ளிய தொழில்நுட்பக் கல்லூரியின் இராஜபாட்டையின் சோடியம் விளக்குகள் மஞ்சள் மொழி பேசின; சுற்றிலும் இருந்த சோளக் காடுகளில், கரும்பு வயல்களில் ஈசல் பூச்சிகள் கச்சேரித்தன. ஆறு முதல் பத்து வரையிலான கூரை வகுப்புகள், கும்மிருட்டில் குழுமியிருக்க, கான்க்ரீட் செவ்வகத்தில் அத்தனை ட்யூப் லைட்களும் எரிந்தன.

எப்போதும் சீருடைகளில் கண்ட பெண்களைத் தாவணியில் காண்பது 'ஜிலீர்' கொடுத்தது. அவர்கள் ஃபோட்டான் பிரதேசத்தின் பத்திரத்தில் அரட்டையடித்தார்கள்; பையன்கள் கொத்துக் கொத்தாய்த் தனித்திருந்தோம்.

பொது போர்டில் வரையப்பட்டிருந்த காந்தியும் ஒரு பெரிய ரோஜாவும் அன்றைய பொன்மொழியும் டிசம்பர்ப் பனியில் நனைந்தனர். இயற்பியல் ஆய்வகத்தில் டார்ச் அடிக்க, ஸ்பெக்ட்ரோமீட்டரும், பாதரசக் குடுவையும் தெரிந்தன. வேப்ப மரத்தின் கீழ்க் குடிநீர்க் குழாயில் தண்ணீர் சொட்டாய்ப் பாய்ந்தது; ஜூ லேபில் எட்டிப் பார்த்தால், குடல் தெரிய முறைத்த தவளைக் கண்களுடன், ஆணியில் தொங்கவிட்ட எலும்புக்கூடு அசைந்தது; செடிகளில் செம்பருத்திப் பூக்கள் சிரித்தன; சைக்கிள் ஸ்டேண்ட் காலியாக இருந்தது. வகுப்பறைகளை டங்ஸ்டன் வெள்ளம் நிரப்பியது; தவளைகள் கொரக்..கொரக்கின; தேசியக் கொடியின்றி மரம் அம்மணமாய் நின்றது; டீக்கடையிலிருந்து கடைசிச் செய்திகள் மிதந்து வந்தன; ஃபேக்டரியின் மேல் நோக்கிய குழாய்களில் புகைச் சுருள் இனிப்பாய்க் கிளம்பியது; தூரத்து நகரங்களில் ஒளிப்பூக்கள் இறைந்திருக்க, மேற்குத் தொடர் மலைகளின் விளிம்புகளில் ஆரஞ்சுக் கோடு வளைந்திருக்க, வானப் பெரும் கம்பளத்தைக் கோடானுகோடி நட்சத்திரப் பூச்சிகள் அத்தனை ஆர்வமாய்க் கொறித்த போது, ஃபுட்பால் மைதானத்தை ஒற்றை நிலா கொளுத்திக் கொண்டிருந்தது.

பேருந்து இன்னும் வரவில்லை. மீ அதிகாலை இரண்டு அல்லது மூன்று கூட ஆகலாம் என்றார்கள் ஆசிரியர்கள்.

பேச்சு; பேச்சு; தீராத பேச்சு. முதல் பிரிவு, இரண்டாம் பிரிவு, ஸ்டாட்ஸ், சயின்ஸ் போன்ற அர்த்தமற்ற லேபிள்கள் அந்த அர்த்த ராத்திரியில் கரைந்து போய் எவரையும் நட்பக்கிக் கொள்ளும் பேச்சுக்கள். குளிரோடு கதை பேசிக் களிக்க நேரம் நகர்ந்து, நடந்து பின் தலைதெறிக்க ஓடியதில், ஒரு மணிக்கெல்லாம் பஸ் வந்து சேர்ந்தது. ட்ரைவர் வேறொரு பயணத்தை முடித்து விட்டு நேராக இங்கே வந்தார்.

அத்தனை களைப்புகளும், காத்திருந்த சோர்வுகளும் பளிச்சென்றாகிப் பரபரப்பு பற்றிக் கொண்டது. தூங்கி விட்டவர்களை எழுப்பினோம். முகம் கழுவினோம். ட்ராவல் பேக்குகளை எடுத்துக் கொண்டோம். டீ வந்தது; சூடு விடாமல், சொட்டு விடாமல் குடித்தோம். பிரிவுகளுக்கு ஏற்ப ஒதுக்கிய பேருந்துகளில் ஏறி வாகான இடம் பிடித்தோம். (பாலாஜி மட்டும் என்னுடன் வந்து விட்டான். காரணம்... ❤) கடைசி சீட்டில் சேர்ந்து கொண்டேன். செக் லிஸ்ட் எடுத்துச் சரி பார்த்துக் கொண்டதும், அபாரக் கைதட்டல்களோடு பேருந்துகள் கிளம்பின.

ஆரவார உற்சாகம் தெறித்த பேருந்தில் ஜன்னல்கள் வழி நள்ளிரவுக் குளிர்க் காற்று இரைச்சலாய்ப் பாய, நால்ரோடு பெட்ரோல் பங்கில் டீசல் குடித்து விட்டு பேருந்து நகர்ந்த போது, தட்சிணாமூர்த்தி, 'பாட்டு போடு...!' என்று உரக்க குரல் கொடுத்தான். 'அவ்ல் வருவாளா.... அவள் வருவாளா... உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா...' ஸ்பீக்கர்களில் ஹரிஹரன் ஜூரம் இறக்க, விசில்கள் வெவ்வேறு அதிர்வெண்களில் எழும்பியதுடன் சென்னை நோக்கிய எங்கள் சுற்றுலா தொடங்கியது.

சென்னை என்பது அன்றைய நாட்களில் எனக்கு ஜாம் தடவிய மாயா லோகம். திரைப்படங்களில் கண்டிருந்த அந்த மாநகரின் வனப்புகள், இருள் பேட்டைகள், அவசர மனிதர்கள் ஒரு கிளர்ச்சியை எனக்குள் ஏற்படுத்தியிருந்தனர். விகடனில் ஒருமுறை வெளிவந்திருந்த 'பகலில் - இரவில்' பகுதியில் எல்.ஐ.சி.யின் இரவு நேரப் புகைப்படத்தை வெட்டி, பீரோவில் ஒட்டி, எஸ்.ராமகிருஷ்ணன் போல் பார்த்துக் கொண்டேயிருப்பேன். முன்பே இரு தடவைகள் சென்றிருந்த போதும், மதுரை, திருச்சி, கோவை நகரங்களில் உறவினர்கள் இருப்பதால் பலமுறைகள் சென்றிருந்தாலும், சென்னையில் எவரும் இல்லாத ஏக்கம் இருந்ததும்... தலைநகர் ஒரு போதையை எனக்குள் திரும்பத் திரும்ப ஊற்றிக் கொண்டேயிருந்தது. (எஸ்.ரா.ன்னு சொன்னவுடனே இப்படி எழுத வருதே..! மாத்து..! மாத்து..!)

பள்ளியில் ஜூனியர் நண்பன் ஒருவன் ஹையர் செகண்ட்ரிக்கு சட்டென அம்பத்தூருக்குப் படிக்க போன போது எனக்குள் எழுந்த மிக மெல்லிய பொறாமைக் கோடும், அவன் விடுமுறைகளுக்கு வந்து சொல்லும் கதைகளும் அந்த நகர் மேல் எழுந்த மோகத்தை இன்னும் தூண்டுவதாய் இருந்தன.

ஆனால் பிறகு, ஒரு பத்தாண்டுகள் சென்னை என்னை ஓர் அன்னை போல் தான் கவனித்துக் கொண்டது. கல்வி தந்தது. உலகம் காட்டியது. நட்பு கொடுத்தது. நாகரீகம் சொன்னது. பசிப் பட்டினியை அவற்றின் உச்சம் வரை காட்டியது. வேலை கொடுத்தது. வெயில் ஊற்றியது. விளங்காப் பெருநகரின் திருட்டுத்தனக்கள், தனிமைகள், சில அற்புதக் கணங்கள், மெல்லெனக் கொல்லும் துயரங்கள், துளிப் பெருமிதங்கள், துரோகங்கள், அத்தனையையும் கொடுத்திருந்தாலும் நான் சென்னையைக் காதலிக்கிறேன்....இன்னும்!

ளுந்தூர்பேட்டையை நெருங்கும் உத்தேசத்துடன் பேருந்து போய்க் கொண்டிருந்த போது, கீழ் வானம் வெயில் வேஷம் போடத் தொடங்கியது. அரைத் தூக்கத்தில் இருந்து நழுவிச் சுகமான அரை விழிப்பில் மிதந்து கொண்டிருந்தேன். கொஞ்சம் பேர் மட்டும் முழுக்க விழித்து, ஜன்னல்கள் திறந்து வெளிக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருக்க, மிச்சம் பேர் இன்னும் உறக்கத்தில் இருந்தனர்.

நெடுஞ்சாலையில் ஒரு மோட்டலில் பேருந்துகள் நின்றன. அங்கேயே கடன்களை முடித்து விட்டுப் பல் விளக்கி, பசி விலக்கினோம். பிறகு கிளம்பி, மீண்டும் ஸ்பீக்கர்கள் அதிரும் பயணத்திற்குப் பின் நின்ற இடம் வண்டலூர்.

காடும் காடு சார்ந்த இடமும் முல்லைத் திணை எனப்படும். தமிழகத்தில் வேக வேகமாகக் குறைந்து வரும் இந்தத் திணையில் கொஞ்சம், சென்னைக்கருகில் வண்டலூராய் இருந்தது. அதே புலிகள், மான்கள், மயில்கள், சோம்பலாய்ச் சிங்கங்கள். சாலை தேயத் தேய நடந்து விட்டு வெளியே வந்து, மரங்களுக்கு அடியில் அமர்ந்து கொண்டு அந்த கட்டுப் புளி சாதம், தயிர்ச் சாதங்களைக் காலி செய்தோம். பை எடை குறைந்தது.

கத்திப்பாராவில் நேருவின் கைகளில் இருந்து புறா சிறகடித்துத் தப்ப முயன்று உறைந்து போய் நின்றது. சுற்றியும் நில்லாத வாகனங்கள் சென்றன. 'சென்னை மாநகராட்சி தங்களை வரவேற்கிறது' வளைவுக்குப் பின்னே கிண்டி மேம்பாலப் பணிகள் ஆரம்பித்திருந்தன என்று நினைக்கிறேன்.

எழும்பூர் அருங்காட்சியகம் சென்றதாக நினைவு. ஏற்கனவே ஒருமுறை பார்த்திருந்ததால், ஓய்வுக்காக அமைக்கப்பட்டிருந்த மர நாற்காலிகளில் தங்கித் தங்கிச் சென்றேன். செப்புக் காசுகள், வெள்ளையர் வாள், மிதக்கும் திமிங்கல எலும்புக்கூடு எல்லாம் இருந்தன. பிறகு பிர்லா கோளரங்கம்.

(இவ்வளவு நேரம் பி.பி. போனதே நினைவில் இல்லை. சட்டென அங்கே நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்ததால் தான் ஞாபகம் வருகின்றது.)

இதுவும் நான் ஏற்கனவே பார்த்த ஒன்று தான் என்பதால், அதுவரை வந்திராதவர்களுக்கு 'அங்க போலாம்; ஏரோப்ளேன் இருக்கும்; இங்க வா, இந்த குண்டைத் தள்ளு' என்று சீன் காட்ட உதவிகரமாய் இருந்தது.

பிறகு பிரசித்தி பெற்ற காட்சியரங்கம். நாங்கள் போன நேரத்திற்கு ஆங்கில உரை தான் என்றார்கள். ஏ.ஸி. அரங்கம்; விளக்கெல்லாம் அணைத்து விட்டு முற்றாக இருள்; மாநகரின் இரைச்சலகளை வெளியிலேயே கழுவி விட்டு சூழ்ந்த பேரமைதி; நூற்று முப்பத்தைந்து டிகிரிக்குச் சரியும் சீட்டுகள்; முந்தின இரவில் பஸ்ஸில் ஆட்டம் பாட்டம்; போதாக்குறைக்கு ஆங்கில வசனங்கள் வேறு! கேட்க வேண்டுமா..? நடுவில் இருந்த அசுர ப்ரொஜக்டரிலிருந்து கிளம்பிய நட்சத்திரங்கள் அரைவட்டக் கூரைகள் மேல் படிந்து மெல்ல மெல்ல கீழிறங்கி எங்கள் மேல் விழும் போது எல்லோரையும் பார்த்தால்.... தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

மாலையில் மெரினா. கடற்கரைச் சாலையில் ஹார்பரை ஒட்டி பார்க் செய்து விட்டு மணலில் புதைந்தால், வங்காளக் கடல்; சீரணி திடல்; பட்டம் விடல்; பலூன் சுடல்.

மசாலா தடவிய மீன்கள் எண்ணெயில் பொறிந்தன; நண்டுகள் அத்தனை கால்களையும் இழந்து மணந்தன; கட்டுமரங்களை ஒட்டி காதலர்கள் அவசரமாக எதையோ தேடினர்; கால்களை மடக்கி கைகளைக் கோர்த்த பெண்கள் பஞ்சு மிட்டாய்த் தின்னும் குழந்தையைப் பார்த்தனர்; கம்பீரக் குதிரைகள் ரெண்டு ரூபாய்க்குச் சவாரி காட்ட, கடிவாளம் பிடித்தவர்கள் ஒல்லியாய் ஓடினர்; அலை நனைக்கும் பிரதேசத்திற்கு அருகிலேயே குழி பறித்து பெரிய சைஸ் படியில் நன்னீர் எடுத்தனர்; வேற்றூர்க் குடும்பங்களை 'ஐந்து ரூபாய் ஒரு போட்டோ' எடுக்க போட்டோகிராபர் கெஞ்சிக் கொன்டிருந்தார் (செல்போன் காலத்தில் இவர் என்ன தொழில் செய்கிறார்?); சோளத்தைத் தீயில் சுருட்ட, தெறித்துப் பறந்ததன நெருப்பா, சோளமா என்று தெரியாத, மாநிலக் கல்லூரியில் மறைந்த சூரிய மிச்சங்களாய் ஆரஞ்சடித்த மஞ்சள் கதிர்கள்; பழைய செருப்புக்களையும், காய்ந்த இளநியையும் கடல் உருட்டி உருட்டி மறுபடியும் கரைக்கே தள்ளிக் கொண்டிருக்க, பேண்ட் மடித்த ஆடவர்கள், சிரித்து அலறிக் குதிக்கும் மகளைப் பிடித்துக் கொண்டு காலடியில் பள்ளம் பறிக்கும் அலைகளை ரசிக்க, மகன்கள் இன்னும் இன்னும் உள்ளே செல்ல விழைவதையும், அம்மாக்கள் மறுத்து அழைப்பதையும், பரமக்குடிச் சிறுவர்கள் சுண்டலுக்குப் பேப்பர் சுருட்டுவதையும், கறுப்புக் கோல் கிழவிகள் கைரேகை பார்ப்பதையும், கட் அவுட் போட்டோ ஸ்டூடியோக் காரர்களையும், மணல் வீடு கட்டுபவர்களையும், மாஞ்சா தடவுபவர்களையும், பெட்ரோமாக்ஸ் கடைகளையும், குப்பத்துக் குடிசைகளையும், ஸ்ட்ரெய்ட் ஷாட் கிரிக்கெட் பையன்களையும், வாலிபால் வாலிபர்களையும் வீசும் உப்புக்காற்று மோத, இடைவெளிகளில் நின்ற தமிழ்ச் சிலைகளுக்குப் பக்கத்தில் சோடியம் விளக்குகள் உயிர் பெற்று வீரியம் கொள்ளத் துவங்கும் போது, சாந்தோம் லைட்ஹவுஸ் எங்கள் மேல் ஒளிப்பட்டையை விசிறியடித்தது.

உலகின் இரண்டாம் பெரிய கடற்கரையில் கண்ணில் பட்ட அளவில் கழிப்பறை இல்லை. எங்களில் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் அவசரம். ஆசிரியர் ஒருவரிடம்,

'சார்..! இங்க பாத்ரூம் எங்க சார் இருக்கு?'

'ஒன் பாத்ரூம் போகணுமா..?'

'ஆமா சார்..! அர்ஜெண்ட்..!'

'அப்படியே ஓரமா போ..! நான் மெட்ராஸ்ல படிக்கும் போது..'

அவர் சொல்வதன் மேலே பிஸ் அடித்துக் கொண்டிருந்தோம்.

டையார் ரோட்டில் பஸ்களை நிறுத்தினார்கள். அநேகமாக ஆடிஸி ஒட்டி இருக்கும் இடம் என்று நினைக்கிறேன். இரவு ஆகி விட்டிருந்தது. படேல் சாலையின் ஓரமாகவே ஒரு குடிநீர்க் குழாய் சென்றது. அதிலிருந்து பிரிந்த கிளையில் டேப் திருகி, தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார் ஒரு பெண். தண்ணீர் சன்னமாக வந்து கொண்டிருக்க, பலகையின் கீழே சாக்கடை பொங்கி ஓடிக் கொண்டிருந்தது.

இந்தக் காட்சி ஏன் இன்னமும் என் மனதில் இருக்கின்றது என்று தெரியவில்லை. ஒருவேளை அந்த வயதில் காவிரிப்பையன் மனதில் ஒரு முரண்பாட்டை உணர்த்தும் காட்சியாக இருந்திருக்கலாம். ஆனால் கல்லூரியில் படித்த காலத்தில் முதல் மூன்றாண்டுகள் பெரும் பஞ்சமாகவும், கடைசி ஆண்டு அதுவரையிலான வரலாறு காணாத வெள்ளமாகவும் சென்னை இருமுகம் காட்டியது.

அன்றிரவு எங்கே உணவு என்று நினைவில்லை. கொண்டு வந்திருந்த பாட்டில் காவிரி காலியாகி விட்டிருக்க, மெட்ரோ பாட்டிலைக் கேட்டால் யானை விலை சொன்னார்கள். நானும் கோவிந்தராஜனும் 'தீர விசாரித்து, ஆலோசித்து, சிந்தித்து' ஒரு முடிவெடுத்தோம். பாட்டில் வாங்குவது என்று முடிவெடுத்த பிறகு, எதற்காகத் தண்ணீர் பாட்டில் என்று, கோக் பாட்டில் (2 லிட்டர்) வாங்கி வைத்து விட்டோம்.

பஸ்ஸில் போகையில் தூக்கம் வரும். யாரும் எடுத்துக் குடித்து விடக் கூடாது என்பதற்காக, மாறி மாறித் தூங்குவதாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தினோம்.

கிழக்குத் திசையை ஒட்டியே பேருந்துகள் போயின. எல்லோரும் தூங்கி விட்டிருக்க, ஜன்னல்கள் வழி குளிர்க் கடற்காற்று மட்டும் விறிவிறுவென அடித்துக் கொண்டிருந்தது. மெல்லிய நீல விளக்கொளி மட்டும் சூழ்ந்திருந்தது. நான் கடைசி வரிசையில் இருக்க, படிக்கட்டுக்கு மேலே இருக்கும் பச்சைப் பாய் கீழே இறங்காமல் சண்டித்தனம் செய்ததால், அத்தனைக் குளிரையும் அப்பிக் கொண்டு விறைத்துப் போய் உட்கார்ந்து வந்தேன். என்னோடு க்ளீனர் மட்டும் விழித்திருந்தார். வேகமாகப் போய்க் கொண்டிருந்த பேருந்து சட்டென மெதுவாகி, மெல்ல நிற்கும் நிலைக்குச் சென்று பின் வளைந்து செல்லும் போது, என்ன காரணம் என்று வெளியே எட்டிப் பார்த்தேன்.

ஒரு ஜீப் இடது கைப்புறமாகக் கவிழ்ந்திருந்தது. கொஞ்சம் பேர் நின்று கொண்டிருந்தார்கள். அங்கங்கே டார்ச் வட்டங்கள். ட்யூப் லைட்கள் மட்டுமே இருமிக் கொண்டிருந்த பிரதேசம். ஒரு லைட் கம்பத்தின் கீழே ஒரு தலை உருண்டிருந்தது.. தலை மட்டும்!

"இந்த ரோட்டுல போகறப்ப எல்லாம், இந்த மாதிரி ஒரு பலி பாத்திடறேன்..!"

மஹாபலிபுரம் நோக்கிச் சீறும் இன்றைய ஓ.எம்.ஆர். சாலையில் விரைந்து கொண்டிருந்தோம்.








(...)

Monday, February 01, 2010

7.கண்ணன் 'அம்மா' என்றழைத்தல்.



வழ்ந்து தொடங்கிய தங்கப் பகல்மேல்
கவிழ்ந்து மறைத்தது கொண்டல். - அவிழ்ந்த
சுருள்நுரையாய்ப் புட்கள் சுழலாய்ப் பறக்க
வருகின்ற தந்ததிரு நாள்.

கோவினங்கள் காடுதேடி கூட்டமாய்ப் போயின;
பாவினங்கள் கோயிலில் பாடுவர். - ஆவினங்கள்
கட்டியக் கூரைத் தொழுவத்தில் மேய்ந்திடத்
தொட்டிலில் கண்ணன் எழுச்சி.

பக்கம்போய்த் தட்டிக் கொடுத்துப் பாலூட்டிப்
பார்த்துக் கவனமாய் நீராட்டிப் - பாலன்னம்
சோறிட்டுத் தாலாட்டிச் சொக்கி உறங்குமுன்
கூறினான் காதினில் "மா!"

குழல்நாதம் கொஞ்சம் குறுவீணை கொஞ்சம்
கழலுரசல் சேர்த்துக் கனித்தேன், - பழரசம்,

செஞ்சாந்து, யாழிசை, சேரும் அலையோசை
மஞ்சள் குளிரை மயனென்பான் - மிஞ்சியச்

செங்கரும்புச் சாற்றில் சிறுசிறு செம்பருத்தித்
தங்கக் குழம்பைத் தளிர்வாழை - எங்கும்

ஏந்திப் பனிக்கட்டிப் பாறைகள் ஊறிட,
காந்தி ஜொலிக்கும் குயில்மொழி - நீந்தி

எடுத்ததோர் முத்து எலுமிச்சை கோர்த்துத்
தொடுத்ததாம் கண்ணன் குரல்.

***

Image Courtesy :: http://www.netglimse.com/images/events/janmashtami/krishna_bakasura.jpg

ARR Rocks Again.....



The Boss of our Cine Music, Mozart from Madras ARR rocked by winning TWO GRAMMY Awards today for the same JAI HO from SLM....!!!

Dude You deserved for these awards...!!!

Let the liars of Hatred throw their words. V will run with at most efforts to reach peaks...!!!!

JAI HOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO...!!!!!!!!!!!!!!!!!





***

சின்னச் சின்ன ஆசை... ஆஸ்கார் வாங்கிய ஆசை...!

Sunday, January 31, 2010

6.கண்ணன் நடைபழகுதல்.



றங்கும் கதிரவன் வான விளிம்பைத்
திறந்துப் புரவிகள் தேரில் - இறங்கித்
திரைநீலம் யாவையும் தீயாக்கும் போலே
தரைமேல் குழந்தை தவழ்ந்து.

கொத்து மலர்களே கால்கொண்டு கைபதித்துத்
தத்தித்தத் தித்தண்ணீர்ச் சந்திரனாய் - முத்துக்கள்
சிந்திச் சிதறும் திசையெங்கும் சீதளபன்
உந்திபட ஊன்றித் தவழ்ந்து.

பாக்கியம் செய்தன பாத விரல்களின்
நோக்கிய மென்மை நகங்களே - ஆக்கிய
கோடுகள் நந்தன் நிலத்தில் நான்காகத்
தோடுகள் அசையத் தவழ்ந்து.

***

Image Courtesy :: http://members.rediff.com/sirparetn/res/kanna.jpg