Wednesday, June 18, 2008

Paradise.




Could it be the little things you do to me
feelings that I'm feeling are so new to me
I'm going through so many changes
nothing ever felt as strange as
how my heart goes crazy when you look at me

When I'm with you it's paradise
No place on earth could feel so nice
Through the crystal waterfall I hear you call
Just take my hand it's paradise
You kiss me once I'll kiss you twice
As I gaze into your eyes i realize it's paradise
Ooohhh yea

Now I know the sweetest dreams can all come true
Cuz I found heaven here on earth when I found you
Its nothing I can ever make up
oh I hope I never wake up
just to find this isn't true reality

When I'm with you it's paradise
No place on earth could feel so nice
Through the crystal waterfall I hear you call
Just take my hand its paradise
You kiss me once I'll kiss you twice
As I gaze into your eyes I realize it's paradise
Ooohhh

The world around us dissapears without a trace
Telling me that I have found the perfect place
Let us stay this way forever deep in love
and may I never
spend another day w/out you close to me

Ohhh Paradise
Yea yea yea yea yea
Ohhhhhhh

Just take my hand it's paradise
you kiss me once I'll kiss you twice
as I gaze into your eyes I realize it's paradise

Just take my hand it's paradise
you kiss me once I'll kiss you twice
as I gaze into your eyes I realize it's paradise

As I gaze into your eyes I realize it's paradise
oh yea
oh (it's paradise)
ohhh


Thanks :: http://www.lyrics007.com/Kaci%20Lyrics/Paradise%20Lyrics.html

Tuesday, June 17, 2008

காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சு...



ரு ஊரில ஒரு பாட்டி இருந்தாளாம். அந்தப்
பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருந்தாளாம். அப்ப அந்தப் பக்கமா ஒரு காக்கா வந்துச்சாம். அது என்ன பண்ணுச்சு? பாட்டி அந்தப் பக்கமா திரும்புன போது, டக்குனு ஒரு வடையைத் தூக்கிட்டு பறந்துச்...

ஹோல்டான்..! ஹோல்டான்..!

ரொம்ப நாளா இந்தக் கதையைச் சொல்லிட்டு இருக்காங்க. இப்ப இருக்கற காக்காக்கள் எல்லாம் வடையை மட்டும் எடுத்துக்கிட்டு பறக்கறதில்ல. இன்னிக்கு என்ன ஆச்சுன்னு சொல்றேன், கேளுங்க.

வீட்டை விட்டு வெளி வந்தேன். பூட்டினேன். ஒரு புக்கையும், கர்ச்சீஃப்பையும் உள்ளேயே வைத்து விட்டதை உணர்ந்தேன். ஒரு கையில் செல்போன், ஒரு கையில் பெரிய வீட்டுச் சாவி. விதி வேலை செய்ய ஆரம்பித்தது. மறுபடியும் இவற்றைத் தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல சோம்பல். வெளியில் இருந்த திட்டில் செல்போனையும், சாவியையும் வைத்து விட்டு, உள்ளே சென்றேன். புக்கை எடுத்து விட்டு, வெளியே வர கதவைத் திறக்க, பார்த்தேன்.

ஒரு காகம், என் செல்போனை கவ்வியது. என்னைப் பார்த்தது. ஒரு கண் சிமிட்டியது. மறு கண்ணையும் சிமிட்டி இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.

பறந்தது.

நிஜமாகப் பறந்தது. இரண்டு நொடிகளுக்குப் பிறகே நிலைமை எனக்குப் புரிந்தது. நடந்த நிகழ்வின் உண்மை மூளையில் பதிந்து, உணர அவ்வளவு நேரம் பிடித்தது. அசந்தர்ப்பமாக 'காக்கா செல்போன் எடுத்துட்டு போச்சுனு சொன்னால், யாராவது நம்புவார்களா..?' என்ற சந்தேகம் வந்தது. உதறி விட்டு, சுற்றுமுற்றும் பார்த்தேன்.

கொஞ்ச தூரத்தில் ஓர் அரசமரம் இருக்கிறது. அதன் ஒரு கிளையில் அமர்ந்திருந்தது. காலில் செல்போனை வைத்து, அதன் மேல், கீழ் இரு கால்களை வைத்து, ஒரு மாதிரி பாலன்ஸில் அமர்ந்து சுற்று முற்றும் பார்த்து கொண்டிருந்தது.

போன தடவை, ஜப்பானில் இருந்து வந்த ஒரு சொந்தக்காரப் பையன் கொடுத்த ஸ்ஸ்ஸ்லிம் போன் அது. எடுத்துச் செல்லும் போது கையில் இருப்பதன் பளுவே இருக்காது. பல சமாயங்களில் அதை எடுத்துச் செல்லாமலே, எடுத்து செல்கிறோம் என்று நினைக்கும் அளவிற்கு குழப்பி அடிக்கும் மென் வஸ்து.

காக்கா என்ன, ஒரு கொசு கூட தூக்கிச் செல்லும் என்று தோன்றியது.

இப்போது, எப்படி அதன் கையில் இருந்து... இல்லை, காலில் இருந்து என் போனை பிடுங்குவது என்று யோசிக்க வேண்டும். என்னை கவனித்து விட்டது. ஒரு மாதிரி முறைத்தது. இந்த காக்கா யாரா இருக்கும் என்று யோசித்தேன்.

இந்த முறை முறைக்கிறதே... தெருக்கோடி கோபாலாக இருக்குமோ? அவன் தான் நோ பால் போட்டு விட்டு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இதே போல் முறைப்பான். இல்லை, எதிர் வீட்டு பாட்டியாக இருக்குமோ? அவள் தான், கொட்டைப் பாக்கை இடித்துக் கொண்டே இருப்பாள். அதைப் போலவே, இந்தக் காகமும் பட்டன்களைக் கொத்துகிறது.

"சூ.. கொத்தாத...." கத்தினேன்.

சம்பந்தமே இல்லாமல், சின்ன வயதில் பாட்டி சொன்ன ஒரு டெக்னிக்கலான கதை நினைவுக்கு வந்தது. வேறென்ன? அந்த குரங்கு - குல்லா கதை தான்.

குரங்குக்கு ஒரு குல்லான்னா, காக்காக்கு கைப்பேசியா?

எங்கிட்ட வேற செல்போன் இல்லையே..? என்ன பண்றது...?

பக்கத்தில் ஒரு மெடிக்கல் ஷாப். முருகன் துணிக்கடைகடல். வீரபாண்டியன் அரிசிக் கடை. எஸ்.டி.டி. பூத். ராஜா ஸ்நாக்ஸ் அண்டு டீ பார். அங்கே பஜ்ஜி சுட்டுக் கொண்டிருந்தனர்.

போனேன். இரண்டு வடைகள் வாங்கினேன். அரச மரத்தடைக்கு வந்தேன்.

காக்காவைக் கூப்பிட்டேன். படித்த சி, சி++, ஜாவா, ஏ.எஸ்.பி., ஜெ.எஸ்.பி, எதுவும் உதவிக்கு வரவில்லை. இப்போது பயன்படுத்த வேண்டியது ஒரே பாஷை தான்.

'கா...கா..க்கா....க்கா....'

'அட அற்பமே...' என்பது போல் என்னை ஒரு பார்வை பார்த்தது. 'போன தலைமுறைக் காகங்கள் போல் நான் இல்லை' என்பது போல் ஒரு பக்கமாகத் திரும்பி முறைத்தது. இறுக்கமாக செல்போனைப் பிடித்துக் கொண்டது. பறந்தது. பறந்தது. அந்த மரத்தை விட்டே பறந்து சென்றது. கண்ணில் இருந்தே மறைந்தது.

வேறென்ன செய்வது..? அலுவலகத்திற்கு வந்தேன்.

"உனக்கு கால் பண்ணிட்டே இருந்தேனே..? ஏன் எடுக்கல...?"

"செல்போன் மிஸ் ஆகிடுச்சு..."

"அப்படியா..? எப்படி..?"

"காக்கா தூக்கிட்டு போயிடுச்சு..."

படம் நன்றி :: http://www.stardel.com/fiveacres/image/20050316crow.jpg

பால்கோவா பாவைகள்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அறையை விட்டு வெளி வந்து விட்டோம். உப்புக்காற்று கரிப்புச் சுவையோடு வீசிக் கொண்டிருந்தது. கதவைத் திறந்தவுடன், கொஞ்சம் சிலுசிலுப்பாக இருந்தது. பரந்து விரிந்த பாரத தேசத்தின் பாத நுனி. குமரி.

இருள் இன்னும் விலகி இருக்கவில்லை. காந்தி மண்டபத்தை ஒட்டிய ஒற்றைச் சந்தில் கீழிறங்கி கொஞ்சம் கிழக்காக நடந்து, கீழிறங்க, 'ஹா'என்று பரந்து விரிந்திருக்கின்றது கடல். எந்தக் கடல்? தெரியாது. மூன்று பெரு நீர்ப்பரப்பும் அலைகளை எடுத்து வீசிக் கொண்டிருந்தன.

நிறைய பேர் இருந்தனர். சைக்கிள் டீ, காபி வியாபாரம் சூடாக நடந்து கொண்டிருந்தது. கழுத்தில் மஃப்ளர், தலையில் துண்டு, இத்யாதிகளோடு நிறைய பேரைப் பார்க்க முடிந்தது.

விதவிதமான மனிதர்கள்.

பெரு மீசையோடு பெருத்த மனிதர்கள், கலர் கலராக சேலைகள் அணிந்த வடபாரத பெண்கள், சின்னஞ்சிறு வர்/மி கள், கல்லூரி கலர்கள், தூக்கக் கலக்கத்தில் உட்கார்ந்தவாறே உறங்கும் கணவர்கள், கடலில் குளிக்க நச்சரிக்கும் குழந்தைகள்.. எதிர்பார்த்தது விட சுவாரஸ்யமாகவே இருந்தது அதிகாலைக் கடற்கரை.

நேரமாக, நேரமாக விவேக் மண்டபத்திற்கு கொஞ்சம் கிழக்கே ஆரஞ்சு கலர் படரத் தொடங்கியது. மக்கள் ப்ளாட்பாரத்தில் பாய்கின்ற எலெக்ட்ரிக் ட்ரெயினைப் பிடிக்கப் போகும் அவசரத்தில் கிழக்குப் பக்கமாக ஓடினர். மற்றவர்களை விட அரைக் கால் இஞ்ச் நொடிகள் முன்பே சூரியனைப் பார்த்து விட வேண்டும் என்ற அல்ப ஆசையில் கடல் மணலில் இரங்கி, பாசிப்பாறைகளின் மேலும் படையெடுத்துச் சென்றனர்.

பெரும்பாலும் நார்த் மக்கள் தான் இருந்தனர். தம் வாழ்நாளிலேயே கடலைப் பார்த்திராத ராஜஸ்தான் மக்கள் தான் நிறைய இருந்தனர். மிக்க லூசாக கட்டப்பட்ட கலர்ஃபுல்லான புடவைகள், பெயர் தெரியாத வர்ணங்களில் எல்லாம் மூக்குத்திகள், தோடுகள் எல்லாம் அந்த நேரத்திலும் அணிந்து குந்தி இருந்தனர்.

பஞ்சாப் பால்கோவா பாவைகள் பலரைப் பார்த்தேன். டைட் டீ-ஷர்ட், ஜீன்ஸ் பாண்ட். தூக்கக் கலக்கத்திலும் அழகாகவே இருந்தனர்.

சூரியன் மெல்ல மெல்ல வந்தான். கடலில் இருந்து அல்ல. திடீரென வானத்தில் இருந்து தான் உதித்தான். யாரைப் பற்றியும் கவலை இன்றி 8 நிமிடம் 20 செகண்டுகள் கழித்தே எங்களுக்குக் காட்சியளித்தார் ஆதித்யர். எல்லோரும் சடார், புடாரென காமிராக்கள், செல் போன்கள் மூலம் அவனைப் படம் பிடித்தனர்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதே ஆளைத் தானே தினமும் பார்க்கிறோம். இங்கு வந்து கடலில் பார்ப்பதில் அப்படி என்ன ஆர்வம். வழக்கமாக இதே வேளையில் வீட்டில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டு இருப்போம். இல்லாவிடில் சென்னையிலேயே பீச்சில் பார்த்திருக்கலாம். அதே சூரியனை, அதே வங்கக் கடலில் உதிப்பதை 1000 கி.மீ. தாண்டி வந்து பார்ப்பதில், சில செகண்டுகள் காலத்தில் பின் போயிருப்போமா என்ற ஐயம் வந்தது.

நாங்கள் கிழக்குப் பக்கம் பார்த்து நிற்கும் போது, "இப்ப திடீர்னு சூரியன் பின்னாடி உதிச்சா எப்டி இருக்கும்?" அம்மா கேட்டார்கள்.

"என்ன பண்றது..? திரும்பி நின்னு பாக்க வேண்டியது தான்.." என்றேன்.

"சூரியனே வர்லைனா என்ன பண்றது..?"

" நல்லதாப் போச்சு..! இன்னும் சண்டே வர்லைனு போய் தூங்க வேண்டியது தான்.." அதுக்கப்புறம் அம்மா எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

அடுத்த அரை மணி நேரத்திற்கு கூட்டமாக நின்று, தனியாக நின்று பலப்பல போஸ்கள் கொடுத்து போட்டோக்கள் எடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

நாங்கள் கிளம்பி வந்து விட்டோம்.

காலை 8 மணிக்கு விவேக் மண்டபத்திற்குச் செல்ல வரிசையில் நிற்கும் போது, அதிகாலையில் கடற்கரையில் பார்த்த ஒரு பால்கோவா சொன்னது புரிந்தது.

"ச்சே..! என்ன வெயில்..!"

MicroSoft 'In'Look...

From: Kodoora_Kurangu.
Sent: Tuesday, June 17, 2008 9:27 AM
To: Cubicle_No_13.
Subject: RE:GM.

Tnx mam... ;-)

From: Cubicle_No_13.
Sent: Tuesday, June 17, 2008 9:27 AM
To: Kodoora_Kurangu.
Subject: RE:GM.

Hmmm... nee therave maatte..

From: Kodoora_Kurangu.
Sent: Tuesday, June 17, 2008 9:27 AM
To: Cubicle_No_13.
Subject: RE:GM.

Ganesh kooda Coffee kudikkap poren...

From: Cubicle_No_13.
Sent: Tuesday, June 17, 2008 9:26 AM
To: Kodoora_Kurangu.
Subject: RE:GM.

Ippo enna pannap pore...

From: Kodoora_Kurangu.
Sent: Tuesday, June 17, 2008 9:26 AM
To: Cubicle_No_13.
Subject: RE:GM.

Junion-nu sollu... y waste respect... ok... 10 mins then mail panren...

From: Cubicle_No_13.
Sent: Tuesday, June 17, 2008 9:26 AM
To: Kodoora_Kurangu.
Subject: RE:GM.

Pinnadi junior oruthan nikkaran..

From: Kodoora_Kurangu.
Sent: Tuesday, June 17, 2008 9:25 PM
To: Cubicle_No_13.
Subject: RE:GM.

Y sudden-a work panra idea...

From: Cubicle_No_13.
Sent: Tuesday, June 17, 2008 9:25 AM
To: Kodoora_Kurangu.
Subject: RE:GM.

Sari.. vaangara paisakku konja neram, velai paakkalaama... ;-)

From: Kodoora_Kurangu.
Sent: Tuesday, June 17, 2008 9:24 AM
To: Cubicle_No_13.
Subject: RE:GM.

Mudiyala... ;-(

From: Cubicle_No_13.
Sent: Tuesday, June 17, 2008 9:24 AM
To: Kodoora_Kurangu.
Subject: RE:GM.

Enna sathame kekkala.. PADAAR..PADAAR nu illa adichirukkanum... ;-)))

From: Kodoora_Kurangu.
Sent: Tuesday, June 17, 2008 9:23 AM
To: Cubicle_No_13.
Subject: RE:GM.

Thalaiyla adichukitten..

From: Cubicle_No_13.
Sent: Tuesday, June 17, 2008 9:23 AM
To: Kodoora_Kurangu.
Subject: RE:GM.

Athu enna ()kkulla...

From: Kodoora_Kurangu.
Sent: Tuesday, June 17, 2008 9:22 AM
To: Cubicle_No_13.
Subject: RE:GM.

Aiyo... Aiyo...(padaar... padaar..) :-&

From: Cubicle_No_13.
Sent: Tuesday, June 17, 2008 9:22 AM
To: Kodoora_Kurangu.
Subject: RE:GM.

Ithu kooda purinchikka mudiyala... nee yellaam 1 SW Er.,? 1st sonnathu ponnusamy, aduthathu ramprasad... puri? ;-)))

From: Kodoora_Kurangu.
Sent: Tuesday, June 17, 2008 9:21 AM
To: Cubicle_No_13.
Subject: RE:GM.

Nee enga irunthu vara... Keezpakkam..?

From: Cubicle_No_13.
Sent: Tuesday, June 17, 2008 9:21 AM
To: Kodoora_Kurangu.
Subject: RE:GM.

GirlGod illa RampraSeven... ;-))

From: Kodoora_Kurangu.
Sent: Tuesday, June 17, 2008 9:20 AM
To: Cubicle_No_13.
Subject: RE:GM.

Aana purse-i mattum thirakkave thirakkaathe... enga pogalam neeye sollu...

From: Cubicle_No_13.
Sent: Tuesday, June 17, 2008 9:20 AM
To: Kodoora_Kurangu.
Subject: RE:GM.

Pre planned-a irukkanum maame...

From: Kodoora_Kurangu.
Sent: Tuesday, June 17, 2008 9:19 AM
To: Cubicle_No_13.
Subject: RE:GM.

Opicekku vanthu 0.5 n hour aagala.. athukkulla Lunch-a...

From: Cubicle_No_13.
Sent: Tuesday, June 17, 2008 9:19 AM
To: Kodoora_Kurangu.
Subject: RE:GM.

Lunch enga pogap pora..

From: Kodoora_Kurangu.
Sent: Tuesday, June 17, 2008 9:18 AM
To: Cubicle_No_13.
Subject: RE:GM.

Naan enga ponen..? Pasanga kooda pesum pothu ottikichu...

From: Cubicle_No_13.
Sent: Tuesday, June 17, 2008 9:18 AM
To: Kodoora_Kurangu.
Subject: RE:GM.

OO... :-o Nee eppa Blr pona...

From: Kodoora_Kurangu.
Sent: Tuesday, June 17, 2008 9:17 AM
To: Cubicle_No_13.
Subject: RE:GM.

Ithu Blr baashai...;-)

From: Cubicle_No_13.
Sent: Tuesday, June 17, 2008 9:17 AM
To: Kodoora_Kurangu.
Subject: RE:GM.

Ithu enna puthusa 'Thumba'... <:->

From: Kodoora_Kurangu.
Sent: Tuesday, June 17, 2008 9:16 AM
To: Cubicle_No_13.
Subject: RE:GM.

Thumba kashtam thaan... ;-)

From: Cubicle_No_13.
Sent: Tuesday, June 17, 2008 9:16 AM
To: Kodoora_Kurangu.
Subject: RE:GM.

Ithni timekku... ;-) yenda intha Chennai slang-i maathave maatya...

From: Kodoora_Kurangu.
Sent: Tuesday, June 17, 2008 9:15 AM
To: Cubicle_No_13.
Subject: RE:GM.

Ethni timekku vantha...

From: Cubicle_No_13.
Sent: Tuesday, June 17, 2008 9:14 AM
To: Kodoora_Kurangu.
Subject: RE:GM.

Good Morning daa...

From: Kodoora_Kurangu.
Sent: Tuesday, June 17, 2008 9:14 AM
To: Cubicle_No_13.
Subject: GM.