Tuesday, May 14, 2013

பக்கத்தில் சேராத உந்தன் வெட்கத்தை என் செய்வது?

லையாளத்தில் ‘ஓலங்ஙள்’ என்ற படத்தில் ‘தும்பி வா’ என்ற பாடல், தாய் குழந்தைகளை நோக்கிப் பாடுவதாக அமைந்திருக்கும். இசை இளையராஜா. அவர் அதே மெட்டில் ‘ஆட்டோ ராஜா’ என்ற தமிழ்ப் படத்தில் ஒரு காதல் இணைப் பாடலை இசைத்திருப்பார். தமிழ்ப் பாடலைக் கேட்கும் போது, தாளத்திற்கும் சந்தத்திற்கும் இசைந்தாற் போல் சொற்களைப் பின்னியிருப்பார் புலவர் புலமைப்பித்தன். அதே மெட்டிற்கு மாற்று வரிகளை அமைத்துப் பார்ப்பது நெடுநாள் கனவாக இருந்தது. நேற்றிரவு நிறைந்தது.




பல்லவி:

பக்கத்தில் சேராத உந்தன்
வெட்கத்தை என் செய்வது?
வித்தைகள் கூறாத மொழியொடு
முத்தத்தை யார் எய்வது? - இதழ்ப்


சரணம் 1:

பெண்மைக்குள் பூக்கின்ற இளமை
கண்மைக்குள் கூர் தீட்டுதோ?
வான்மைக்குள் ஆகாய நிலவென
ஆணமைக்குள் சேர்ந் தாடவருதோ?

என்னுள்ளும்
உன்னுள்ளும்
வெள்ளைப்பூ மீதூறும் இரவில்
முல்லைப்பூ போலான ஈரிதழ்ப் (பக்கத்தில்)

சரணம் 2:

முந்தைநாள் போய்விட்ட பழமை
இன்றேதான் நம் நர்த்தனம்
முந்திப்பாய் கொண்டாடும் உறவில்
முந்திப்பாய் கொண்டாடும் அழகை

அந்திப் போம் வரை
சந்திப் போம்

முன்னிற்கும் மெய்யென்ற மெய்யை
உன்வெப்பம் தீய்க்காத பூவிதழ்ப் (பக்கத்தில்)

சரணம் 3:

நேரம் ஏன் வெண்மேக நதிபோல்
நேராக செல்கின்றது?

மேலாடை மூள்கின்ற பெரும்போர்
மேலாடும் காலத்தின் கரங்கள்

என் மேலும்
உன் மேலும்

தீண்டாமல் நீங்காத பொழுது
தீயாகும் நீர்மேனிச் சிவப்பிதழ்ப் (பக்கத்தில்)