Thursday, October 11, 2018

நான் ஒரு பொன்னோவியம்...

ளையராஜாவின் ஒரு ரத்தினம், இப்பாடல். அதற்கான என் வரிகள்.




ஆண்:
ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

ஆண்:
ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ
பாடிவரும் பூங்குயிலோ
பால்நுரை வந்தாடிடும் வஞ்சிக் கொடியோ
பார்க்கையில் பூமரம் பழகிடும் இருதயம் பருகிடும் (ஆயிரம்)

ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியும் வரும் தணுமை

சரணம்.1:
ஆண்:
நானும் அழைத்திட நாணம் தடுத்திட
நாடகம் ஆடிடும் நாயகியே
நானும் அழைத்திட நாணம் தடுத்திட
நாடகம் ஆடிடும் நாயகியே

பெண்:
மேகமும் கூட்டியது குளிர்
மோகத்தை மூட்டியது

ஆண்:
சிறுதூறல் பெருஞ்சாரல்
மழையாதல் மதுஊறல்
துணைதேடல் உனைச்சேரல்
மகவாதல் மயங்கிடும் பொழுதிதுவே

பெண்:
சிறுமணி சிணுங்கிடும் சிலைலயம்
சிவந்த முகத்தில் சிதறும் சிரிப்பில்

ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

சரணம்.2:
பெண்:
ராகம் இசைந்திட தாளம் இணைந்திட
ராஜனின் ராஜ்ஜியம் ராத்திரியில்
ராகம் இசைந்திட தாளம் இணைந்திட
ராஜனின் ராஜ்ஜியம் ராத்திரியில்

ஆண்:
பொன்மணி ஓவியங்கள் சொல்லும்
பூந்தமிழ்க் காவியங்கள்

பெண்:
விழிபேசும் விளையாடும்
உடல்கூசும் உறவாடும்
ஒருவேகம் உருவாகும்
ஒருபோதும் விலகிட விழையாதே

குழு:
எழுதிய இசையது எழுப்பிடும்
எமது மனதில் அமைந்த அழகின்

ஆண்:
ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

சரணம்.3:
ஆண்:
வந்தோம் தினம்தினம் தந்தோம் சுகம்சுகம்
வந்ததும் தந்ததும் நானல்லவோ
வந்தோம் தினம்தினம் தந்தோம் சுகம்சுகம்
வந்ததும் தந்ததும் நானல்லவோ

பெண்:
விடையது தெரிந்ததுவே உங்கள்
விருப்பமும் புரிந்ததுவே
விடையது தெரிந்ததுவே உங்கள்
விருப்பமும் புரிந்ததுவே

ஆண்:
மனம்தேடும் உனைநாடும்
மொழிமாறும் துணைசேரும்
பகலோடும் இரவாகும்
உறவாகும் உனைத்தொடும் விழியிதுவே

பெண்:
உருகிடும் உடலிதில் உறைந்திடும்
உமது உயிரில் உணரும் உருவில்

ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

ஆண்:
பாடிவரும் பூங்குயிலோ
பால்நுரை வந்தாடிடும் வஞ்சிக் கொடியோ

பெண்:
பார்க்கையில் பூமரம் பழகிடும் இருதயம் பருகிடும்

ஆயிரம் செந்தேன் துளி சிந்தும் இதழோ

குழு:
இனிமை குளுமை இனியுமதில் வரும் தணுமை

***