Saturday, July 26, 2008

ஹாஸ்டல் டு கேண்டீன் - ஓர் என்ன(ண்ண)ப் பயணம்.

குப்புறப்படுத்து தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக்கை எழுப்ப முயன்று...முயன்று..முயன்று.. வென்றேன்.

"ம்..சொல்லு..!"

"டேய்..! ஏதாவது சயின்ஸ் ஃபிக்ஷன் கான்செப்ட் சொல்லுடா. போட்டிக்கு எழுதி அனுப்பணும். முடிய இன்னும் ஒரு வாரம் கூட இல்லைடா..!"

"டேய்... எல்லாமே அறிவியல் தான்டா..! ஓடும்..இல்லை...பறக்கும் குருவியைப் பார். ஓடும் கூவத்தைப் பார். எல்லாமே ஆனந்தம். எல்லாமே அறிவியல்.சிந்தித்துப் பார். தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்...!" சொல்லி விட்டு மீண்டும் போர்வையை இழுத்துப் போர்த்தி The Mummy போஸில் தூங்கிப் போனான்.

ஹூம்..! இவனைச் சொல்லி குற்றமில்லை. நேற்று இரவு ஒரு பிரபல சாமியாரின் கான்ஃபரன்ஸ்க்கு (இப்படித்தான் சொல்ல வேண்டுமாம்!) போய் வந்து லேட்டாக படுத்த எஃபெக்ட்.

ஆனாலும் இவன் கூற்றிலும் ஓர் அர்த்தம் இருக்கத் தான் செய்கிறது. எல்லாமே அறிவியல் தானே!

எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஹாஸ்டல் ரூமில் இருந்து கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரலாம். கண்ணில் என்ன எல்லாம் படுகின்றதோ அதில் இருக்கும் அறிவியலை புரிந்து கொள்ள முயற்சித்து, அதில் ஏதாவது கதைக்கு தேறுமா என்று பார்ப்போம். எழுந்து கிளம்பினேன். எது வரை செல்ல..? யோசித்தேன்.

கேண்டீன் வரை செல்வோம் என்று முடிவெடுத்ததற்கு பசி என்ற மற்றுமொரு காரணியும் இருந்தது உங்களிடம் சொல்வதற்கில்லை.

"வெளிய போறப்ப கதவை பூட்டீட்டு போ! பாலாஜி வர்றேன்னு சொல்லி இருக்கான் ஆறு மணிக்கு! சர்க்யூட் தியரி படிக்கறதுக்கு! கேண்டீனுக்கு போனயினா ரெண்டு செட் பூரி பார்சல் வாங்கிட்டு வந்திரு..!" மம்மியிடம் இருந்து குரல்.

வெற்றிடத்தை இரு செவ்வகங்களாகப் பிரித்து இருந்த கதவுகளை இழுத்துப் சாத்தினேன். அறைக்கு உள்ளே இருக்கும் வெற்றிடத்தை, வெளியே இருக்கும் வெற்றிடத்தில் இருந்து பிரிக்கின்றது கதவு. வெற்றிடம் - வெற்றிடம் = வெற்றிடமா? ஸீரோ - ஸீரோ = ஸீரோ. இன்பினிட்டி - இன்பினிட்டி = இன்பினிட்டி. எனில் ஸீரோவும், இன்பினிட்டியும் ஒன்றா..? இல்லை ஒரு வட்டத்தின் இரு அருகில் இருக்கும் எதிர் முனைகளா? கணக்கு சிந்தனையை ஆரம்பித்து வைத்தது.

லாக்கை எடுத்து மாடி, பூட்டை இழுத்து, சாவியால் பூட்டிய பின் உயிரியல் ஆஜரானது. எல்லாமே இதே தத்துவம் தானே? பூட்டைத் திறத்தல், சட்டையில் பட்டன் போடுதல், ஜன்னல் கொக்கி, பவர் ப்ளக்... எல்லாமே உயிரின் இரண்டாம் அடிப்படை செயலைக் கொண்டு வடிவமைக்கப்பட்டதா..? இல்லை தற்செயலாக இவ்வாறு அமைந்ததா? இதைப் பற்றி எழுதலாமா?

வேண்டாம்..! தமிழ்நாட்டில் பால் குடித்து விட்டு, க்ரீச்சில் விட்டுப் போகும் அம்மாக்களுக்கு டாட்டா காட்டி விட்டு, தலை மறைந்த உடன் தவழ்ந்து ப்ரெளசிங் சென்டருக்குப் போய் திரட்டியைப் பார்த்து *** கதைகள் படித்து கெட்டுப் போகின்ற பச்சிளம் பாலகர்கள் என் கதையைப் படித்து கெட்டுப் போவானேன்? அவர்களுக்குத் தான் 'மானாட மயிலாட' இத்யாதிகள் இருக்கின்றனவே!

செகண்ட் ஃப்ளோரில் இருந்து கீழே இறங்கி வந்தேன். இயற்பியல் எண்ட்ரி கொடுத்தது. ஏன் படிக்கட்டுகள் இப்படி இருக்க வேண்டும்? ஸ்ட்ரெய்ட்டாக இறங்க என்ன வழி, லிப்ட் தவிர்த்து? பாடி பேலன்ஸ், மாடி பேலன்ஸ், க்ராவிட்டி ஃபோர்ஸ், கொத்தனார் வேலை, தச்சர் வேலை இவைகள் தான் காரணமாக இருக்க வேண்டுமா?

க்ரெளண்ட் ஃளோருக்கு வந்தவுடன் 'க்ரிங்..க்ரிங்..'.

அய்யாசாமி பாய்ந்து வந்து எடுத்து," ஹலோ..! ஆமா.. நைந்த் ப்ளாக் தான். யாரு? மணிகண்டனா..? எந்த ரூம்..? நாப்பத்தஞ்சா..? ஒரு நிமிஷம்..!" ரிஸீவரை வலக்கையில் ஏந்தி, இடக்கையில் ஒரு சுவிட்சைத் தட்டினார்.

"ரூம் நம்பர் நாப்பத்தஞ்சு..! மணிகண்டன்..! ஃபோன் வந்திருக்கு! திண்டுக்கல்ல இருந்து உங்கப்பா கூப்பிடறாங்க..! உடனே வரவும்ம்!" ப்ளாக் முழுவதும் எதிரொலித்தது. "மணிகண்டன்..! மணிகண்டன்...!"

எலெக்ட்ரானிக்ஸ் எட்டிப் பார்த்தது. எங்கிருந்தோ கம்பி வழி வரும் குரல் மறுபடியும் மற்றொரு குரலாய் மாறி, கம்பி வழியே பயணம் செய்து காற்றில் படபடக்கிறதே! செய்தி செல்லும் பாதை ஏன் இப்படி அன்பே சிவம் போல் மாறி மாறி இருக்கின்றது? செல்ஃபோன் இல்லா ஏழைப் பிள்ளைகளுக்கு வேறு ஏதும் வழி? டெலிபதி..! இது கணபதி போல் ஆதி கால கான்செப்ட்! வேறு ஏதாவது..?

ஒன்றும் தோன்றாமல் ரோட்டைக் கடந்தேன். மெஸ்ஸைத் தாண்டினேன்.

'மெஸ்ஸில் ஒரு கிஸ்!'

ஆஹா என்ன ஒரு தலைப்பு!

காலக்ஸியைக் கைக்குள் போட்டுக் கொண்ட மனிதக் குலத்தால், இந்த மெஸ் இட்லியின் ஸ்ட்ரக்சரையும், அவற்றுக்குள் இருக்கும் கெமிக்கல்ஸின் propertiesகளையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறி, கடைசியில் ஓர் ஏலியனை கொண்டு வருகிறார்கள், சோதனைக்காக! எல்லா விதமான எக்ஸ்ப்ரிமெண்ட்ஸும் செய்து பார்த்ததால் சோதனை எலிகள் எல்லாம் ஐ.க்யூ.வில் எக்கச்சக்கமாக எகிறிப் போய் ,யூனியன் அமைத்து, ஐ.நா.சபையில் ஸ்டே ஆர்டர் வாங்கி விட்டதால், கிடைத்த இளிச்சவாய் ஏலியனின் வாய்க்குள் இட்லிகளைத் திணிக்க, அது தின்று விட்டு ஒரு மாதிரி கிறக்க உணர்வடைந்து, மோக நிலைக்குப் போய் இட்லி பரிமாறிய பெண்ணின் கன்னத்தில் கிஸ் அடித்தது.

இல்லை.. இது மிக குழந்தைத்தனமாக இருக்கின்றது! வேண்டாம். போட்டின்னா இன்னும் கொஞ்சம் கெத்தா யோசிப்போம்!

அடுத்து ஹாஸ்டல் எதிர்ப்பட்டது.

'ஹாஸ்டலுக்கு வந்த போஸ்டல்!'

வெளியே கிளம்பிக் கொண்டிருந்த மதுமிதாவின் கைகளில் ஒரு போஸ்டல் கவர் திணித்து விட்டு சிட்டாய்ப் பறந்து சென்றாள் காவ்யா. அவள், அதன் தலையைப் பார்க்க அதிர்ச்சி. I Know what you did in last Data Structures and Algorithms Exam. அவளுக்கு திக்கென்று ஆனது. வசுவையும், பாரதியையும் பார்த்து எழுதியதா, மிலனுடன் பேப்பர் எக்ஸ்சேஞ்ச் செய்ததா, ரெனால்ட்ஸ் மூடிக்குள் சுருட்டி வைத்த லிங்க்ட் லிஸ்ட் அல்காரிதமா என்று குழம்பினாள். கவரைத் தடவிப் பார்க்க அதில் பெளடர் போல் மெதுமெதுக்க, 'ஆந்த்ராக்ஸாக' இருக்குமோ என்று பயம் கவ்வ, அதை தவற விட்டாள். பின் கூட்டம் கூடி, கவரை அனாதைப்படுத்தி, போலீஸுக்கு தகவல் பறந்து, வந்து ஸ்கேன் செய்து, ஃப்ரம் அட்ரஸ் பார்க்க வைசாக், ஆந்தரப்ரதேஷ் என்றிருக்க, கீதாவுக்கு 'ஆந்த்ராவிலிருந்து வந்த ஆந்த்ராக்ஸ்' என்ற ஹைக்கூ தோன்ற, மெடிஸினரி மக்கள் பாக்கெட்டை பத்திரமாக எடுக்கையில் கை தவறி கீழே விழுந்து Spinz Powder வாசம் பரவியது. எல்லோரும் பயம் நீங்கி சிரிக்க மாலினி மட்டும் 'ஹச்' என்று தும்மினாள். எல்லோரும் அவளையே பயமாகப் பார்த்தார்கள்.

ச்சே..! இது கொஞ்சம் பயமுறுத்தும் வகையில் இருக்கின்றது. வேண்டாம்.

இன்னும் உங்ககிட்ட இருந்து நான் நிறைய எதிர்பார்க்கிறேன் என்றது மனசாட்சி.

ஹாஸ்டலைத் தாண்டி க்ரெளண்டை அடைவதற்கு முன் இருக்கும் ரோட்டை கடக்க முயல்கையில்..

க்றீச்ச்.

"சாவுகிராக்கி.." ஆட்டோவில் இருந்து பாட்ஷா எட்டிப் பார்த்து பொழிந்து விட்டுப் போனார்.

இந்த வார்த்தை என்னை வசீகரித்தது. இதற்குப் பொருள் என்ன? மரணத்திற்கு அவ்வளவு கிராக்கியா? எல்லோரும் விரும்புகிறார்களா? இல்லை சாவுCracki? பைத்தியமா? மொழியியல் வந்து "ப்ரெஸன்ட் சார்" சொன்னது.

மொழி என்பது எப்படி வந்திருக்க வேண்டும்? சைகையில் ஆரம்பித்து, கையில் கல்லில் எழுதி, சொல் வந்து, எழுத்து வந்து, கற்றவர்கள் சேர்ந்து, குருகுலத்தில் மாணவர்கள் கீழ் அமர்ந்து, ஆசிரியர்கள் மேல் இருந்து, சொல்லிக் கொடுத்து, தப்பாக சொன்னால் தலையில்...

ணங்...!

லைட் கம்பத்தில் இடித்துக் கொண்டேன். கெமிஸ்ட்ரி லேபின் தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த இரு ஃபர்ஸ்ட் இயர் சிட்டுக்கள் சிரித்தன. ஜிவ்வென்று ஆங்காங்கே கிளுகிளுப்பானது.

வேதிகாவா, வேதியியலா?

நகரத்திலேயே பெரும் புள்ளியின் மகள் வேதிகா. எம்.பி. கோட்டாவில் சீட் வாங்கி காலேஜையே அதகளம் செய்து கொண்டிருப்பவள். அவளது ஒவ்வோர் அங்க அழகிலும் பணக்காரத் தனம் செழிப்பாய்த் தெரியும். பள்ளியில் இருந்தே அப்ளிகேஷன் போட்ட பலருக்கும் பல்பு கொடுத்துக் கொண்டு எஸ்கேப்பாகி வந்தவள், கல்லூரியிலும் அதே திருப்பணியைத் தொடர்ந்தாள். ஆனால் அவளே மயங்கும் அளவிற்கு கட்டழகாகவும், கடும் உறுதியோடும் தினேஷ் இருந்தான். அவனிடம் மனம் பறிகொடுத்தவள், ஒரு நாள் தனிமையில் ப்ரபோஸ் செய்தாள். அவன் கொஞ்சம் யோசித்து விட்டு என்னுடன் குடும்பம் நடத்துவது கஷ்டம் எனக் கூற, அவள் ஏன் எனக் கேட்க, கெமிஸ்ட்ரி லேபிற்கு அவளை அழைத்துச் சென்று ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டையும் மெத்தில் ஆல்கஹாலையும் கலந்து குடித்துப் பார்த்து, 'சரக்கு டேஸ்ட் கொஞ்சம் கம்மி தான். இப்பல்லாம் இதிலயும் கலப்படம். உப்பு கம்மியா இருக்கு' என்று சொல்லி ஸோடியம் குளோரைடை ஒரு டீஸ்பூனிலும், பொட்டாசியம் பாஸ்பேட்டை ஒரு டீஸ்பூனிலும் எடுத்து லேசாக மிக்ஸிங் அடித்து ப்யூரெட்டில் போட்டு அடியில் சூடு வைத்து தொட்டுக் கொண்டு, 'ஆஹா..! என்னா டேஸ்ட்! இது தான் என்னோட கட்டழகுக்கு காரணம். இது போல் உன்னால் தினமும் சமைத்து தர முடியுமா?' எனக் கேட்க வேதிகா அதிர்ச்சியில் நின்றாள்.

கெமிஸ்ட்ரி "நாங்களும் இருக்கோம்ல..!" என்றது.

எனக்கு கொஞ்சம் பயம் தோன்ற ஆரம்பித்தது. இத்தனை இயல்களிலும் அறிவியல் புனை கதைகள் எப்படி எழுத முடியும்?

சுழல் கம்பிக் கதவைச் சுற்றி க்ரெளண்டுக்குள் நுழைந்தேன்.

டவுன் ஈஸ்ட்டில் ஃபுட்பால் மேட்ச்சும், டாப் வெஸ்ட்டில் கிரிக்கெட் டோர்னமெண்ட்டும் நடந்து கொண்டிருக்க, ஓர் ஓரமாக ரன்னிங் ட்ராக்கில் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப்புக்கான பயிற்சிக்காக ஓடிக் கொண்டிருக்க, ஓரப் புல்வெளிகளில் தீயும் வாசனை கிளர்ந்து கொண்டிருக்க, இது எதிலும் கலந்து கொள்ளாமல் ஆங்காங்கே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க... சனிக்கிழமை மாலையிலும் கூட்டம் இருக்கத் தான் செய்தது.

மேலே ஒரு ப்ளைட் பறந்தது.

விமானத்தில் இருந்து, ஒரு தனி இறக்கை பிரிந்து வந்து, நாங்கள் டைம் மெஷின் வைத்திருக்கிறோம். இந்தப் போட்டிகளின் முடிவுகள் என்னவாகும் என்று அறிந்து கொள்ள ஆசையா? இதில் காணலாம். இதன் விலை வெறும் 2700 ரூபாய் மட்டுமே. விற்பனைச் சலுகையாக 100 ரூபாய் கழித்தும், ஆடித் தள்ளுபடியாக 100 ரூபாய் கழித்தும் வெறும் 2500 ரூபாய்க்கே தருவதாகச் சொல்ல, எல்லோரும் கூட்டம் கூடி நின்று பார்க்க, ஒருவன் 'தேர்ட் அஸஸ்மெண்ட்' கொஸ்டீன் பேப்பரும், அதோ, அங்க போறாங்களே ப்ரியா அண்ட் கோபிகா ரெண்டு பேரும் லவ்வர்ஸா கிடைப்பாங்களானு இதில் பார்க்க முடியுமா ?' எனக் கேட்க எல்லோரும் அவனை பொது மாத்து மாத்துகிறார்கள்.

இதற்கு என்ன தலைப்பு வைக்கலாம்..?

விமானம் - விழுந்த மானம்.

கிரிக்கெட் பந்து சிக்ஸர் அடித்து காலரியில் செட்டில் ஆகி இருந்த ஒரு பேரின் இடையே கரடியாய் விழுந்தது.

"டேய்..! இந்த பாலையும் கொஞ்சம் கவனிச்சு எடுத்துப் போடுடா..!" என்று மைதானத்தில் இருந்து குரல் பறக்க, அவள் தலை குனிந்து ஓடினாள்.

வெயில் இறங்கி, மறைந்து கொண்டே இருக்க, அஸ்ட்ரானமி "நானும் உள்ளே வரலாமா?" என்றது.

ஸாரி, ஸ்க்ரீனில் மிஸ்டேக்!

ஒரு நாளின் இரவு முழுதும் கழிந்து, பகல் விடியும் போது, வெளியே வந்து பார்த்த அனைவரும் அதிர்ந்து போனார்கள். வானம் முழுதும் இரத்தச் சிவப்பாக மாறி இருந்தது. வேறு நிறமே வானில் இல்லை. பயந்து போனார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் பொலிட் பீரோவில் அவசரக் கூட்டம் போட்டு தங்கள் கொடியின் நிறமே இப்போது வானின் நிறமாகி விட்டதால், பிரபஞ்சமே கம்யூனிஸ தத்துவத்தை ஏற்றுக் கொண்டதாக பாதி பேர் அறிவிக்க, மீதி பேரோ இந்த பிரபஞ்ச சிவப்பு நிறத்தில் தங்கள் கொடியின் நிறமே மக்களுக்குத் தெரியாமல் போய் விட்டதால், தனித்துவத்தை இழந்து விட்டோம், எனவே வேறு நிறத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று சொல்ல, கட்சி இன்னும் இரண்டாக உடைந்து, கம்(சி), கம்(!சி) என்று மாறி, ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ள, 'உடன்பிறப்பே! பார்த்தாயா உதயசூரியனின் ஆட்சியை! வானெங்கும் நம் கட்சிக் கொடியின் பாதி! பூமியிலே மீதி! கண்மணி எழுந்திடு! பேரன்களை நம்பாமல், பிள்ளைகளை மட்டும் நம்பி கட்சிப் பணிக்கு கரம் கொடுக்க பறந்து வா!' என்று முரசொலியில் கவிதை வர, எல்லோர் மீதும் சிவப்பு நிறம் படிய, பேர் அண்ட் லவ்லி வகையறாக்கள் கருப்பாக மாறும் க்ரீமை ப்ரொடக்ஷனில் துவக்கி, நந்திதா தாஸையும், வில்லியம்ஸ் சகோதரிகளையும் வளைத்துப் போட்டு விளம்பரம் எடுக்க, ஒபாமாவுக்கு இன்னும் செல்வாக்கு கூட, இன்னும் பல மாற்றங்கள் வர, சடாரென ஒரு நோட்டீஸ் எல்லார் வீட்டிலும். 'மன்னிக்கவும்! எனது கனவில் ரெட்டிஷ் எலெக்ட்ரோடு கொஞ்சம் அதிகம் கரண்ட் பாஸ் ஆனதால் ஸ்க்ரீனில் சிவப்பு அதிகமாகத் தெரிகின்றது. சர்வீஸ் போய்க் கொண்டிருக்கின்றது. நாளை காலையில் இருந்து மறுபடியும் பழைய RGB எலெக்ட்ரோடு ட்யூப்கள் ஒழுங்காக வேலை செய்யும். Sorry for the Inconveniences Caused. - கடவுள்!'

அஸ்ட்ரானமியும் அஸ்ட்ராலஜியும் கூட்டணி அமைத்துக் கொண்டு ஒரு கதை எழுதி விட, பல வித இயல்களின் தாக்குதல்களால் பயந்து போய் காலரியில் இருந்து இறங்கி ஓட ஒருமுறை தடுமாறி விழுந்து, மண்ணில் இறங்கி, எழுந்து துடைத்த போது, லூஸா நீ..? ஏன் இப்படி ஓடற..?" என்று கடந்து போன ஒரு குயில் கேட்க, அறிவு பூர்வமாய் சிந்தித்துக் கொண்டே போனால் லூஸ் என்கிறார்கள் எனில் புத்திசாலியும் முட்டாளும் ஒரே புள்ளியிலா? என்று குழம்ப, எனக்குள்ளிருந்து சாக்ரடீஸ் எழுந்து, தான் போர்த்தி இருந்த பெட்ஷீட்டை எடுத்து விசிறிக் கொண்டு, கானா உலகநாதன் போல் கையை நீட்டி "உன்னை நீ அறிவாய்" என்று ஃபிலாஸபியை வீசினார்.

எந்த நானை அறிந்து கொள்வது?

"நான் சொன்னேன்ல. இன்பினிட்டியும் ஸீரோவும் ஒரு வட்டத்தின் அருகருகாமை புள்ளிகள் என்பது போல் அறிவாளியும், முட்டாளும் ஒரே புள்ளிகள் தான்! அதனால் தான் நீ விழுந்தாய்" என்று கணக்கு சொல்ல, "அதெல்லாம் இல்லை! நீ விழுந்ததற்கு காரணம் உனது புவி ஈர்ப்பு மையம் சமநிலையில் இல்லை. அதனால் தடுமாற்றம்." என இயற்பியல் விளக்க, "ரப்பிஷ்! உன் கால்களுக்கும் மூளைக்கும் இடையே செய்திகள் சரியாகப் பாஸாகவில்லை. பயாலாஜிக்கல் இம்பாலன்ஸ்..!" என்று உயிரியல் முஷ்டியை உயர்த்த, "சரி! அதற்கு யார் காரணம்? கெமிக்கல்ஸ்! கெமிக்கல் சர்க்குலேஷன் பிட்வீன் ஆர்கன்ஸ் சரியாக ஓடவில்லை.!" என்று கெமிஸ்ட்ரி கோதாவில் குதிக்க, "உனக்கு இப்படி இங்கு விழ வேண்டும் என்று இருக்கின்றது. அது விதி. உன் ஜாதகக் கட்டத்தில் கிரகங்கள் சாதகமாக இல்லை. இதனையே இப்போது சயின்ஸில் கேயாஸ் தியரிப்படி ஒத்துக் கொள்கிறார்கள்!" என்று அஸ்ட்ராலஜி அள்ளிப் போட, " நீ பகலில் வந்ததே இதற்கெல்லாம் காரணம். இரவில் நிலவின் க்ரேவிட்டி ஃபோர்ஸ் கொஞ்சம் கூட இருக்கும் போது நீ சமாளித்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன..!" தனது கூட்டணி, மூன்றாம் அணியை விட சீக்கிரம் முடிவுக்கு வந்ததில் கடுப்பான அஸ்ட்ரானமி தன் பங்கு வாதத்தை சொல்ல, நவீன இலக்கியம் தன் பங்கிற்கு,

இயல்களின் இருப்பியல் சிக்கல்களில் சிக்கிக் கொண்ட மனிதனின் இயல்பான இருப்பு பிரபஞ்சத்தில் நிலையான ஓர் இலை வீசுகின்ற எதிர்க்காற்றில் நில்லாமல் அசைந்து கொண்டும் அதே சமயத்தில் காம்பு மூலம் மரத்தோடு தொடர்ந்த தொடர்பில் இருக்கின்றதாயும் உள்ள ஒரு குழப்பமான காலகட்டத்தில், பூக்கின்ற சிந்தனைகளில் எந்த வித பயமும் இல்லாத, பவ்யமும் இல்லாத நடுநிலையான நிஜக் கனவுகளைத் தேடி எட்டுப் போட்டு நடந்து செல்கின்ற பாதங்களின் வலியை மனம் மிக உணர்ந்து கொண்டு அதனால் பாதிக்கப்படக் கூடியதாய் இருந்தாலும் பாதிக்கப்படாமல், நினைத்துப் பார்த்தால், கஷ்டப்படும் ஓர் பார்வையை தாங்கிக் கொள்கின்ற தயக்கமான தர்ம பொழுதுகளில் அது சூழப்பட்டிருக்கின்ற சூன்யவெளியின் புள்ளிக் கோணங்களைத் தாண்டிச் சென்று...

"Stop all the Non-sense...!" என்று கத்தியவாறு கேண்டீனை நோக்கி ஓடினேன்.

நல்ல வேளை..! இந்தக் கடின குழப்பமான மனநிலையிலும் கார்த்திக்குக்காக வாங்க வேண்டிய பூரி செட் ஞாபகத்திற்கு வந்தது.

"என்ன சார் வேணும்..?" கவுன்டரில்.

"முதல்ல கொஞ்சம் சூடான தண்ணி குடுங்க..! அப்படியே ரெண்டு செட் பூரி பார்சல் போட்டிருங்க..!"

கைக்கு அருகில் இருந்த பட்டன் பெல்லை அடித்தார். க்ணிங். இது என்ன ஃப்ரீக்வன்ஸி..? எந்த ஹார்மோனிக்ஸ்..? என்றெல்லாம் யோசித்துக் கொண்டு இயற்பியலில் தொலைய இருந்த நேரத்தில்,

"இங்க ரெண்டு பூரி செட் Forsaaale" என்று மொழியியல் வந்து என்னைக் காப்பாற்றியது.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

ஆனந்தப் பிரவாகம்!



"நேற்று யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாமே..!"

"ஆம்..! அதை ஏன் கேட்கின்றாய்! என் பசுக்களையும், கன்றுகளையும் ஆற்றங்கரையுல் மேய விட்டு விட்டு இன்றைய வைபவத்தை எண்ணி இன்பூதி கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் 'அம்மா.. அம்மா' என்று குரல்கள் கேட்டன. கண் திறந்து பார்த்தால், ஆஹா..! அதை எப்படி சொல்லுவேன். கரைகளைக் கரைத்துக் கொண்டு ஆங்காரமாய், அலங்காரமாய் யமுனா வந்து கொண்டிருந்தாள்..."

"ஆங்காரமாய்... தெரிகின்றது. அது என்ன அலங்காரமாய்..?"

"நீ அறிந்ததில்லையா..? இமயம் முதல் தன் கரையெங்கும் பூத்திருக்கும் , காய்த்திருக்கும் , கனிந்திருக்கும் பூக்களையும், காய்களையும், கனிகளையும் அள்ளிக் கொண்டு, தன் உடலெங்கும் மணக்கவும் யமுனா வந்தாள்..!"

"ஓஹோ! நீ என்ன செய்தாய்..?"

"முன் நின்று கேட்டேன்! 'ஹேய் யமுனே! என்ன செய்கின்றாய்? நந்தரின் ஊருக்குள், கோபாலனின் நகரத்திற்குள் நீ இப்படி தறிகெட்டு, பாயலாமோ? இது உனக்குத் தகுமோ?'. அவள் வெட்கத்துடன் கூறினாள்.'ஐயா..! நாளை நடக்க இருக்கும் கண்ணனின் திருநீராட்டு வைபவத்தைக் காணவே ஓடோடி வந்துள்ளேன். அவனுக்காகவே நான் இத்தனை மலர்களையும், பழங்களையும் அள்ளிக் கொண்டு வந்துள்ளேன். தயவித்து என்னை அனுமதிக்க வேண்டும்..'"

"அடடே..! பிறகு நீ என்ன செய்தாய்..?"

"உண்மையைக் கூறினேன்! "அம்ம..! யமுன தேவி! கண்ணன் மேல் எத்தனை அன்படி உனக்கு! எத்தனை ப்ரேமையடி உனக்கு! ஆஹா! எங்களுக்கு உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கின்றது. நீ இப்படி கண்ணனின் நீராட்டு வைபவத்திற்கு வர வேண்டிய அவசியம் என்னடி? இன்னும் கொஞ்ச காலம் சென்றால், அவன் பாலகனான பின் தினம் ஸ்நானிக்கவும், கொஞ்சிக் குதூகலித்து விளையாடவும், குதித்து கும்மாளமிடவும், நர்த்தனம் ஆடவும் உன்னிடத்திலே தான் வரப் போகிறான். அப்போது முழு ஆனந்தம் கொள்ளடி தேவி! உன் வெண் நுரைகளால், அந்தக் கார் வண்ணனை அள்ளிக் கொஞ்சு! பனிநீரால் அவனைக் குளிப்பாட்டு! ஆநிரைகள் மேய்த்து வந்து ஆசுவாசப்படுத்திக் கொள்பவனுக்கு ஆனந்தம் கொடு! எங்களுக்கெல்லாம் உன்னைக் காண ஆனந்த அழுக்காறடி! இப்போது சென்று வாயடி!' என்றேன். மகிழ்வுடன் திரும்பிச் சென்றாள்.."

"நன் காரியம் செய்தாய்...!"

"டியே..! செய்தி அறிந்தனையோ?"

"என்னடி..!"

"இதோ இவள் இருக்கின்றாளே, எனக்கு வலது புறமாய் இருக்கின்றாளே! இவல் நேற்று மோர் கடைந்து வெண்ணெய் எடுத்தாளாம். எடுத்து உறியில் பானைகளில் இட்டு, கட்டி வைத்து, காலையில் கண்டால் காணவில்லையாம்..இது என்னடி..? ஏதேனும் மந்திர மாயமா இல்லை இந்திர ஜாலமா..?"

"நீ இன்னும் விஷயம் அறியாதவளாக இருக்கிறாயே..! ஈதெல்லாம் அந்த கண்ணனின் விளையாட்டுகள் தான்..!"

"யார்..? இன்று நீராட்டு வைபவம் நடக்கும் நந்தகோபனையா சொல்கிறாய்..? அந்த சிறு பிள்ளையையா?"

"அவன் சிறு பிள்ளை இல்லையடி! மாயப் போக்கிரி!





























படம் உதவி நன்றி ::http://www.astrologyforu.com/img/festivals/lord-krishna.jpg

Friday, July 25, 2008

இருநிலையும் ஒருநிலை.

'ரிதாஸ்' ஸினிமா பார்ப்பதற்காக கமலாம்பாளுடன் ஸ்ரீமுருகா டாக்கீஸுக்கு குதிரை வண்டி கட்டி கொண்டு போன போது, வண்டியின் குலுக்கலில் மேலும் , கீழும் புரண்டு எழுந்ததும், பாகவதர் போல் சிகை வளர்த்து, சீஃப் துரையிடம் மண்டகப்படி வாங்கியதும், திருச்சி ஜங்ஷனுக்கு காந்தி வருகிறார் என்று ரெயில்வே ட்ராக்கைத் தாண்டி குதித்து தூரத்தில் ஒரு புள்ளியாய் கையசைத்துப் போனவரைப் பார்த்ததும், 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே' என்று துவக்கப் பள்ளியில் இருந்து கேட்ட பாடலுடன் கிடைத்த சுதந்திரமும்... பிறகு..பிறகு..

நாகேஸ்வரத்தில் இருந்து கடலூருக்கு மாற்றப்பட்டதும், லக்ஷ்மி பிறந்ததும், மிஸ்டர்.விநாயகமூர்த்தி பெண் பார்க்க வந்து தட்சணையாக பத்தாயிரம் கேட்டதும், கமலாக்குட்டி பிறந்ததும், மனைவி இறந்ததும், எமெர்ஜன்ஸியில் முட்டியிலேயே லத்தி அடி வாங்கியதும்... பிறகு... பிறகு...

நினைவுகள் வெகு வேகமாக காலியாகிக் கொண்டே வருகின்றன. பாத்திரத்தில் இருக்கும் ஜலம் ஆவியாகிக் கொண்டே போவது போல் எல்லாம் மறைந்து கொண்டே போகின்றன.

வலுவாக மீண்டும் மீண்டும் நினைவுகளை எழுப்ப முயற்சித்தேன்.

உறியடியில் தடி தவறாகப் பாய்ந்து, ஜன்னல் வழி பார்வையை வெளியே அனுப்பி இருந்த சீதாவின் மேல் விழுந்து, பின் திருக்கோயிலின் மண்டபத்தில் அவளை சந்தித்து, கண்ணீரைத் துடைத்து, கன்னத்தில் முத்தம் கொடுத்து, கைகளை கீழே கொண்டு சென்று....

"ஸ்ஸ்..ஆ" என்றேன்.

ஒரு இவள்..இவள்...மறந்து போய் கொண்டே இருக்கின்றது. வந்து விட்டது. மருத்துவச்சி. ஊசியைக் குத்தி விட்டு என் இடுப்பில் தடவுகிறாள். எனக்கு கூச்சமாகப் போய் விட்டது. கைகளை நீட்டி அரைத் துணியால் மூடப் பார்க்கிறேன். ஆஹா.. என் கைகள். தொங்கிப் போய் இருக்கின்றன. அசைக்கவே முடியவில்லை. விரல்கள் எல்லாம் சுருங்கிப் போய் இருக்கின்றன.

கால்களை நகர்த்தி ஒரு மாதிரி சரி செய்து கொள்ள முயல், அவள் என்னைப் பார்க்க, வெட்கம் என்னை அள்ளி துண்டு போட்டு தின்றது.

"துணியை இழுத்துப் போர்த்தி விட்டுப் போ.." என்று சொல்ல நினைத்து, வாய் திறந்து சொல்ல முயல, வார்த்தைகளே மறந்து போய், மொழியே தொலைந்து போய் வெறும் சங்கேத ஒலிகளாயக் குழறினேன்.

சிரித்து விட்டுப் போனாள்.

என் நிலைமையை சொல்லி விடுகிறேன்.

கை விரல்கள் எல்லாம் சுருங்கிப் போயிருக்கின்றன. வாயில் இருந்து எச்சில் வடிகின்றது. கண்களைக் கொஞ்சமாகத் தான் திறக்க முடிகின்றது. தலையில் சிகை பஞ்சு போல் ஆகி, ஃபேன் காற்றில் தடவுகின்றது. என்னை மெல்ல தூக்கிக் கொண்டு வந்து இங்கே படுக்க வைத்திருகிறார்கள்.

முகங்கள் எல்லாம் மறந்து போய், வார்த்தைகளும் காணாமல் போய், வாய் திறந்து திறந்து மூட ஒரு நீளக் கொட்டாவி...! ஒருக்களித்து ஒரு முறை படுத்துக் கொண்டேன்.

நினைவுகளும், வார்த்தைகளும் மெல்ல மெல்ல தொலைந்து கொண்டே போய் ஒரு மாதிரி ஃப்ரெஷ் நோட்டுப் புத்தகம் போல் மனம் ஆகிக் கொண்டே வருவதை உணர்ந்தேன். ஏதோ ஒன்று என்னில் இருந்து விடுபட்டு, என்னை நானே எட்டிப் பார்ப்பது போல் ஆகி, எனக்கு நானே தூரம் போய் என்னை விட்டுத் தொலைந்து போனேன்.

தூக்கம் தூக்கமாய் வருகின்றது.

"குழந்தை பேர் சொல்லுங்க..?" என்று கேட்டாள் ஒரு நர்ஸ் என் அம்மாவிடம்!

***
(
"ஆமா ! உங்களுக்கு எந்த ஊரு..?"

"தஞ்சாவூர்..!"

"தஞ்சாவூரா..? அந்த காவேரித் தண்ணியோட மகிமையே மகிமைங்க..!"

"சத்தியமான வார்த்தைங்க. எங்கப்பா தஞ்சாவூருக்கு மொதல்ல வரும் போது அவரால பேச முடியாது. நடக்க முடியாது. யாராவது தூக்கி நிக்க வெச்சா பொத்துனு கீழ விழுந்திடுவாரு. பேசவே முடியாது. ஆனா தொடர்ந்து நாலு மாசம் காவேரித் தண்ணி குடிச்சாரு பாருங்க, அப்புறம் கிடுகிடுன்னு ஓட ஆரம்பிச்சிட்டாரு. நடக்க ஆரம்பிச்சிட்டாரு.."

"ஆமா, உங்கப்பா அங்க எப்ப போனாரு..?"

"நாலு மாசக் குழந்தையா இருக்கும் போது...பேஏஏஏஏஏ"

கதைக்கு ஐடியா கொடுத்த மைலாப்பூர் எம்.எல்.ஏ. அண்ணன் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு நன்றிகளுடன்!)

எப்போ அடுத்த ரெண்டு கல்யாணங்கள்?

தாஜ் மகாலுக்குள் சென்று பூஜை செய்த சிவசேனைக்கு எதிர்ப்பாகவோ, அதை தடுத்து கைது செய்த மதச்சார்பற்ற மத்திய அரசுக்கு எதிர்ப்பாகவோ, அமர்நாத் கோயிலுக்கு கொடுத்த நிலத்தை திரும்ப பெற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பாகவோ, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பாகவோ, மாநிலத்தை குஜராத்தாக மாற்றும் திட்ட முதற்படியாகவோ வைத்த குண்டுகளில் அதிர்ந்து போன பெங்களூருவுக்கும், அதன் மக்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதுடன், 'இது கண்டனத்துக்குரியது' என்ற வழக்கமான டெம்ப்ளேட்டை எடுத்துப் போட்ட சிவராஜ் பாட்டீலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகிறேன்.

ண்மையில் ஷேக்ஸ்பியரின் ஃப்ரேஸஸ் படித்துப் பார்த்த போது, பல நாம் தினம் பயன்படுத்துவனவாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இனி தைரியமாக நாமும் சொல்லிக் கொள்ளலாம், "ஷேக்ஸ்பியர் என்ன சொன்னாருனா...".

All that glitters is not gold / All that glisters is not gold

Love is blind

If music be the food of love, play on

Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon 'em

Stony hearted

To be or not to be, that is the question

Too much of a good thing

What a piece of work is man

When sorrows come, they come not single spies, but in battalions

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet.

நன்றி :: Phrases தொகுப்பு..

ழாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை பவானியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் 14-வது கி.மீ.யில் இருக்கும் சக்தி க்ரூப்ஸுக்கு சொந்தமான பள்ளியில் தான் படித்தேன். சுகர்ஸ் ஃபேக்டரி அமைந்திருக்கும் பிரம்மாண்ட பகுதி ஆப்பக்கூடல்.

இதன் முழுப் பொருளாதாரமும் ஃபேக்டரியை நம்பியே இருக்கும். கரும்பு கொண்டு வரும் விவசாய வண்டிகள், மொலாசஸ் எடுத்துச் செல்லும் ட்ராக்டர்கள், முக்கியமான ஜங்ஷனில் இருப்பதால் பலதரப்பட்ட ஊர்க்காரர்கள் வந்து செல்வதால் அவர்களை நம்பி ஹோட்டல், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்கு, தள்ளுவண்டி, லாட்டரிக் கடை, ஃபேன்சி ஸ்டோர், டெய்லரிங் ஷாப்ஸ், தியேட்டர்கள், குன்று, குன்றின் மேல் குமரன், கிரிக்கெட் விளையாட்டு காடு, ட்யூஷன் சென்டர், எலெக்ட்ரானிக்ஸ் ஷாப், மாவரைக்கும் மில், டெலிஃபோன் பூத் இவற்றோடு சில கட்சிக் கொடிகள்.

இங்கு சொல்லப் போவது ஒரு நண்பனின் வீட்டைப் பற்றியது.

நால்ரோட்டில் இறங்கி கொஞ்சம் போல் மேடேறி, பெட்ரோல் பங்கை கடந்து, விவேகானந்தா பள்ளியைத் தாண்டி வலச் சந்துக்குள் புகுந்து செல்ல அவன் வீடு வரும். அவர்கள் பயோகேஸ் தயாரித்து அதன் மூலம் அடுப்பெரித்தது அந்நாட்களில் அதிசயமாகத் தெரிந்தது. ஒரு பெருங்குடையைக் கவிழ்த்தாற் போல் சேம்பர். அதற்கு மாட்டுச் சாணியைக் (எஸ்! த ஸேம் புல்ஷிட்!) கரைத்து குழாய் வழியாக இணைப்பில் இணைத்து, வெயிலில் சூட்டைக் கிளப்பி, இன்னும் எனக்குப் புரியாத சில மெதட்கள் வழியாக கேஸ் எடுத்து மற்றொரு பைப்லைன் வழியாக வீட்டுக்குள் எடுத்துச் சென்று எனக்கு பருப்புக் குழம்பும், பூசணிக்காய் கூட்டும் செய்து தருவார்கள்.

இதைப் போல் பல வீடுகளிலும் கேஸேம்பர்கள் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. இன்னும் டீப்பான கிராமப் பகுதிகளில் சென்று பார்த்திருந்தால் இருந்திருக்கலாம்.

அமெரிக்காவின் மொத்த மின்சாரத் தேவையில் 3%-ஐ மாட்டுச் சாணிகளிலும், வீணாகும் தொழுவப் பொருட்களிலும் இருந்து பெற்று மில்லியன் கணக்கான நாட்டின் வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மைக்கெல் வெபர், அமண்டா டி க்யூலர் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர்.

காண்க :: மாட்டுச் சாணியில் இருந்து மின்.

அணு மின்சார அவசரக்காரர்கள் பார்க்க வேண்டிய விஷயம் இது.

செம ஹிட்டாக தலைகால் புரியாமல், பின்னங்கால் பிடரியில் இடிக்க, விழுந்தடித்துக் கொண்டு ஓடிய ஹாலிவுட் படங்கள் சிலவற்றில் இருக்கும் அறிவியல் அபத்தங்களை பட்டியல் போட்டுக் காட்டுகின்றது யாஹூ மூவீஸ்.

இவர்கள் பேரரசு படங்களையும், கேப்டன் மீசையை முறுக்க ஆள் பறக்கும், பாலண்ணா 'ஜெய் ஆஞ்சநேயா' சொல்லி தொடை தட்ட, இரயில் ஓடும் அற்புதங்களையும், இன்ன பிற சங்கதிகளையும் பார்க்கவில்லை போலும்!

இரண்டு செய்திகளுக்கும் நன்றி :: இயற்பியல் மற்றும் இயற்பியன்.





மிச்சமிருக்கும் ரெண்டு பேருடைய திருமணங்கள் எப்போன்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க சேரன் சார்!

Thursday, July 24, 2008

டகால் பாச்சா!

டல் மிக அமைதியாக இருந்தது.

இந்தப் பகுதிகளில் இப்படி அமைதியாக இருப்பது அசாதாரணம். எந்த வித காற்றும் இல்லாமல், மெல்லிதாக ஒரு குளிரில், நசநசவென்ற உப்புப் படிவம் படிந்த சுற்றுப்புறம். முக்கால் முழு நிலா மற்றொரு நேர்க்கோட்டு இறுதியில் மெல்ல, மெல்ல எழுந்து கொண்டிருக்க, சிறிது சிறிதாக கிளம்பி கரை நோக்கிச் சென்ற அலைகளில் வெண்ணிறக் கதிர்கள் தடவியதில் ஒரு பட்டு நூற்கண்டாய் அவை தளும்பின.

மாபெரும் விளக்கில் எண்ணெய் ததும்புவதாய் கடல் அசைந்திருக்க, திரியில் எரியும் ஜோதியாய் நிலவு ஜொலித்திருக்க, விளக்கில் விழுந்த ஈசல் போல் படகு தள்ளாடித் தள்ளாடி நகர்ந்து கொண்டிருந்த நிலையில், பாச்சா பீடி பற்ற வைத்தான்.

படகின் அடித்தளத்தில் குமாரு, சோசப்பு, முனியன், பீட்டரு தூங்கிக் கொண்டிருந்தனர். இன்றைய இரவில் படகைச் செலுத்தும் பொறுப்பு பாச்சா உடையது. நான்கு நாட்களாய் பார்டரைத் தாண்டிப் போய் இண்டர்நேஷனல் லிமிட்டில் மீன்கள் பிடித்துக் கொண்டு, கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

"இன்னா பாச்சா, எல்புக்கு வரட்டுமா..?" உள்ளே புரண்டு கொண்டிருந்தான் குமாரு.

"இல்ல குமாரு. ஒண்ணியும் வாணாம். நீ தூங்கு. நான் பாத்துக்கறேன்..!"

வெகு தூரத்தில், ஒரு டார்ச் லைட் கற்றையாய் லைட் ஹவுஸ் ஒளி பாய்ச்சிக் கொண்டிருப்பது தெரிந்தது. தொலைவின் சென்னை நகரின் வெளிச்சப் புள்ளிகளை விட தலைக்கு மேல் இருக்கும் நட்சத்திரங்கள் அருகில் இருப்பது போல் தெரிந்தன.

இது போன்று அமைதியாய் செலுத்துவது அரிது எனப் பட்டது பாச்சாவிற்கு. சில சமயங்களில் கப்பல்கள் க்ராஸ் செய்யும் போது, பார்த்து ஹேண்டில் செய்ய வேண்டும். பல சமயங்களில் நேவி கார்ட்ஸ் வந்து... ரப்சராய் இருக்கும். பீடியின் நுனியில் இருந்த சிவப்புப் புள்ளி மினுக் மினுக்கென்று காற்றுக்கு உயிர் பெற்று, இறந்தது.

மிச்சப் பீடித் துண்டை சைடு வாக்கில் தூக்கிப் போடும் போது தான் கவனித்தான். இல்லை, அப்படி சொல்லி விட முடியாது. யதேச்சையாய்ப் பார்த்தான். பிறகு உன்னிப்பாக கவனித்தான்.

பளபளப்பாய் ஒரு பெண். பெண் முகம். வட்டமான முகம். நீள கழுத்து. அம்சமான உடல்.....! இடுப்புக்கு கீழே தண்ணீருக்குள்! மிதந்து கொண்டிருந்தாள். பயந்து போனான் பாச்சா..! அவள் இவனையே பார்த்துக் கொண்டிருந்தது, பாச்சாவின் முதுகுத் தண்டுக்குள் ஐஸ் நீர் பாய்ச்சியது.

"டேய்..! எளுந்திருங்கடா..! பேய்..! பேய்!" கத்தினான்.

எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருக்க,

"அன்பரே! ஏன் இந்த பயம்? என்னைப் பார்த்து பயமா? நான் பேயல்ல..!" என்றாள்.

பாச்சாவிற்கு பயம் கொஞ்சம் களைந்து, இப்போது ஆச்சரியத்திற்குப் போனான்.

அவனுக்கு இந்த சூழ்நிலை இன்னும் அர்த்தமாகவில்லை.

கடல். மாகடல். 'வையம் தகளியா வார்கடலே நெய்யாக' என்ற பொய்கையாழ்வாரின் கடல். முக்கால் முழு நிலவு. தனியாக விழித்திருக்கிறான். சுற்றிலும் நட்சத்திரங்கள். ஒரு அழகான பெண் கடலில் மிதக்கிறாள்.

"இல்ல.. நீ இன்னா பொண்ணா இல்ல பேயா..? மோகினி க்ரூப்பா..?"

சிரித்தாள். வெண்ணொளிக் கதிர்கள் பட்டு பிரகாசித்தன.

"இல்லை. நானும் ஒரு பெண் தான். கடற்கன்னி என்று கேள்விப்பட்டதுண்டா நீங்கள்? அந்த வகை நான்! நீங்கள் டிஸ்கவரி சேனல் எல்லாம் பார்ப்பது இல்லையா? "

"டிஸ்கோரியா? அத்த எல்லாம் எங்க பாக்கறது? மிட் நைட் மசாலா பாக்கறதுக்கே பொளுது சரியாப் போவுது! ஆமா, அந்த சேனல் எல்லாம் உனக்கு எப்டி தெர்யும்..?"

"கடலுக்கு அடியில் வந்து தானே படம் எடுக்கிறார்கள். அவர்கள் கண்ணில் படாமல் நாங்கள் மறைந்து இருந்து அவர்களை கவனித்துக் கொண்டே தான் இருப்போம். எங்களை அவர்களால் படம் பிடிக்க முடியாது. கடலின் அடியாழத்தில், மகா இருட்டுக்குள் நாங்கள் வசிக்கிறோம். தனி மாளிகை. முத்துக்களாலும், பாசிகளாலும் கட்டப்பட்ட மாளிகைகள். ஒரு ராஜாங்கம். அழகழகான பெண்கள். நானும் அதில் ஒருத்தி...!"

"நீ யாரா வேணா இருந்துட்டுப் போ! அப்பால போயிடு! எனக்கு பயம் போகல..!"

"பயம் வேண்டாம், அன்பரே! நான் வந்ததற்குக் காரணம் உங்களைக் காண்பதற்குத் தான். உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களது சுருண்ட கேசம். கறுப்பான நிறம். கூரான மூக்கு. இந்த உடை அலங்காரத்தில் இன்னும் அழகாகத் தெரிகிறீர்கள்..!"

பாச்சாவிற்கு கூச்சம் வந்து விட்டது. கடற்காற்று அடிக்கடி கலைத்து விடும் என்று லுங்கி கட்டாமல், முண்டா பனியனும் (அதில் டோரண்டோ), அரைக்கால் ட்ரெளசரும் போட்டிருந்தான். இதிலேயே அழகாக இருக்கிறேனா? இன்னும் என்னோட தீவாளி ட்ரெஸ்ஸான கட்டம் போட்ட புல் ஏண்ட் சட்டையும், கோடு போட்ட கொழாயும் போட்டுகினு வந்தா சொக்கிடுவா போல! அவனுக்கு பரிமளம் ஞாபகம் வந்தது. 'இன்னா பரிமளம்! கேட்டுக்கின இல்ல? இந்த மேக்கப்புக்கே அய்யாவுக்கு மவுசு எங்கயோ இருக்குது! என்னயா புடிக்கலன்ன? சர்தான் போடி!'

"இன்னாடா இது! என்ன போய் சூப்பரா கீறேனு சொல்லுது இந்த பொண்ணு!"

"ஆம்! நான் உங்களை பார்ப்பது இது முதன் முறை அன்று. பலமுறை பார்த்திருக்கிறேன். பெளர்ணமி நாட்களில் பலமுறை! உங்களோடு தனிமையில் பேச வேண்டும் என்று முயன்றிருக்கிறேன். ஆனால் முடிந்ததில்லை. எப்போதும் உங்கள் நண்பர்களோடு தான் இருக்கிறீர்கள். நீங்கள் அறியாமல் உங்களை தொடர்ந்து வந்து, இன்று தான் உங்கள் தனிமையைப் பங்கு போட நேரம் வாய்த்தது..!"

"சரி! இப்ப இன்னா பண்ணனுங்கற..?"

"அன்பரே! நீங்கள் என் மனதைக் கவர்ந்து விட்டீர்கள். என்னோடு வாழ வாருங்கள். உங்களுக்காக ஒரு மாளிகை கடலுக்கடியில் காத்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள். முத்துக்களால் ஆன ஒரு மாளிகை. பவழங்களால் ஆன படுக்கைகள். பளிங்கினால் செய்தது போன்ற நான். வேண்டாமா? நாளை முழுப் பெளர்ணமி. என்னுடன் இருக்க வாருங்கள். நான் கிளம்புகிறேன். சத்தம் கேட்கின்றது. நாளை. இதே நேரம். இதே இடத்திற்கு வாருங்கள்! காத்திருப்பேன்..!" சரேலென உள் குதித்து மறைந்தாள்.

"இன்னாடா சத்தம்..? யாருகூட பேசிகினு இருந்த..?" பீட்டர் நெட்டி முறித்தான். சட்டென நழுவப்பார்த்த லுங்கியைப் பிடித்து, ஒரு முனையை வாயில் கவ்வி, மறு முனையை இறுக்கி, முடிச்சு போட்டு கட்டிக் கொண்டான். வெற்று மேலுடம்பில் கடற்காற்று தழுவ சில்லென்றிருந்தது.

நான்கு கம்பி படிக்கட்டுகளைத் தாண்டி வந்து, ரோப்பில் கால் சிக்காமல் தாவி, ரைடிங்க் சீட்டுக்கு வந்தான். செருகி இருந்த பீடிக் கட்டில் இருந்து ஒன்றை உருவி பற்ற வைக்க... இரண்டாம் முயற்சியில் வென்றான்.

பாச்சா ஒன்றும் பேசாமல் கடலையே பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

"இன்னாடா கேட்டுகினே இருக்கேன்? கம்முனு இருக்க..? இன்னா ஆச்சு..?"

"இல்ல பீட்டரு..! ஒரு பொண்ணு..கடலுக்குள்ள இருந்து வந்து.."

"ஒங்கிட்ட பேசுனாளா..? இது எல்லாம் சகஜம் தான். நாலஞ்சு நாளா கடலுக்குள்ளயே சுத்திகினு இருக்கோம்ல.. இப்புடி தான் கெட்ட கெட்ட கெனாவா வரும். குப்பத்துக்குப் போனவுடன பரந்தாமனுக்கு ஒரு கால் பண்ணி சொல்லி போய்ட்டு வந்தா எல்லாம் செரியாகிடும்...! நீ இப்ப போய் தூங்கு போ..! இந்த நெலமைல ஒங்கிட்ட போட்ட குடுத்தா எங்கயாவது கவுத்துருவ..! நான் பாத்துக்கறேன். நீ தூங்கப் போ...! ஆமா, நாயித்துக்கெளம இல்ல இன்னிக்கு?"

ஒன்றும் பேசாமல் அடித்தளத்திற்கு வந்து ஆளுக்கொரு மூலையில் சிதறிக் கிடந்தவர்களின் இடையே படுத்துக் கொண்டான் பாச்சா. ஓட்டும் போது நினைவிலேயே இராத மோட்டாரின் ரீங்காரம், உப்புத்தண்ணி ஒழுகிக் கொண்டு ஓட, கவிச்சி நாற்றமும், பீடிப் புகைகளும் அலையடித்துக் கொண்டு பிணமீன்கள் குவிந்திருந்த இந்த இடத்தில், எக்கோ எஃபெக்டில் அவன் காதுகளுக்குள் படையெடுத்துக் கொண்டிருந்தது.

அவள் முகம் கண்களுக்குள் பதிய மெல்ல தூங்கிப் போனான்.

"ப்ப நான் சொல்றத நம்ப மாட்டீங்க, அப்டி தான...?"

வெயில் பலமாகவே அடித்துக் கொண்டிருந்தது. குடிசையின் கீறல்களில் முட்டை வடிவ புள்ளிகளாக வெப்பக் கரங்கள் நீட்டி, சூரியனின் பயணத்திற்கேற்ப நீளமாகிக் கொண்டிருந்தன.

"டேய் குமாரு, கிங்கை எறக்குடா..! மன்சூரு, பாய்கிட்ட அல்லா மீனயும் குடுத்துக்கின இல்ல? துட்ட கரீட்ட எண்ணிக்கிட்டு வாங்கினு வந்தியா? எங்க காட்டு?ஆங்... இந்தா இத்த சேட்டாண்ட.. இன்னாடா முளிக்கற.. புள்ளயாரு கோயிலாண்ட இருக்காருல அவருகிட்ட போய் குடுத்துட்டு, பீட்டரண்ணன் குடுக்கச் சொன்னாருன்னு சொன்னயின்னா, ஒரு பித்தள அண்டா தருவாரு. அத்த என்னோட வூட்டுல.. வூடு தெரியும்லடா... எலெக்ட்ரிக் ட்ரெய்ன் ப்ரிட்ஜுக்கு கீழயே போனயினா, ஐஸ் அவுஸுக்குப் பின்னாடி வர்ற நாலாவது வூடு... இன்னா பிரிஞ்சுதா..? ஓடு.. போ..! இன்னா பாச்சா நீ ஏதோ சொல்லிக்கினு இருந்தியே! இன்னோரு தபா சொல்லு..?"

"இன்னாடா வெள்ளாடறீங்களா..? அதான் பல தபா சொன்னேனடா..! கடலுக்குள்ள ஒரு பொண்ணு, சொம்மா நமீதா கணக்கா, நேத்து வந்து..."

"போச்சு! ஏஸை வுட்டுட்டான். ஏண்டா கொமாரு! எத்தினி தபா ரம்மி ஆடுற..! இன்னும் டெக்னிக்க கத்துக்கலயே நீ! ஒயுங்கா ஆடாட்டி ஒன்ன மன்சூரு க்ரூப்புல சேத்துப்புடுவேன். அப்பால நீ இஸ்கூலு பசங்களோட தான் வெளயாடணும். பாச்சா! நீ சொல்றதெல்லாம் சரிதான். எனக்கு கூட தனியா போட் வுட சொல்ல கடலுக்குள்ள, சொறா சொறாவா தெர்யும். சோசப்பு உனிக்கு இன்னாடா தெரிஞ்சுது..?"

"அத்த ஏன் கேக்கற முனியண்ணே! எனக்கு ஒரு தபா சிலுவ தெரிஞ்சுது..! அப்டியே மெர்சலாயிட்டேன். ஸ்டீரிங்க வுட்டுட்டு, அப்டியே மண்டி போட்டு ஸ்தோத்தரம் சொல்ல ஆரம்பிச்சுட்டன். அப்பால நம்ம கபாலி தான் உசுப்பி உட்டான். ஒரு மாரி...கனவு மாரி தெரிஞ்சுதுண்ணே, அது..!"

"அதான் பாச்சா..! அல்லாம் ப்ரம்மை. வந்தவுடன பரந்தாமனுக்கு ஒரு கால் அடிக்கறேனு சொன்ன.. நீ வேணானுட்ட. இப்ப இன்னும் ஒளறிகினு இருக்க..! டேய் க்யூன் த்ரீ, ஜோக்கர் ஒண்ணு இங்க பாரு..!"

"என்னடா யாருமே நம்ப மாட்டேங்கறீங்க...? நெசமாலுமே நான் ஒரு பொண்ண பாத்தேண்டா..!"

"இன்னா பாச்சா..! இன்னா சொல்ற நீ? கடலுக்குள்ள பொண்ண பாத்தியா? இவனுங்க கிட்ட சொன்னியினா இவனுங்களுக்குப் பிரியாது. ஆட்ட முசுவுல இருக்கானுக. நான் நம்பறேன். ரொம்ப நாளுக்கு மின்னாடி மன்சூரு நைனா, அதான் என் புருசனும் இத்த மாரி சொல்லிகினு இருந்தார் கொஞ்ச நாளா! நான் கூட மெரண்டு போனேன். அப்பால தான் பயந்துகினு அத்த கடலுக்குள்ளயெல்லாம் போ வேணாம். கரயிலயே தொளிலு பாருன்னு இப்ப மீனு விக்குற வேலைக்கு வுட்டுருக்கன். அது பாட்டுக்கு கடலுக்குள்ள பொண்ண புடிச்சேன்னு எவளயாவது வூட்டுக்கு கூட்டிகினு வந்துட்டாருனா இன்னா பண்றது? அதான்."

பாத்திரம் தேய்த்துக் கொண்டு, தேங்காய் நாரைத் தூக்கிப் போட்ட பாயக்கா குடிசையின் சுத்தத்திற்கு உத்திரவாதி. வெற்றிலையை ஜன்னலுக்கு வெளியே துப்பினாள்.

பொளிச்.

பாச்சா அகமகிழ்ந்து போனான். தன் வாதத்திற்கு வலு சேர்க்க மற்றுமொரு ஆத்மா இருப்பது அவனுக்கு நிரம்ப மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.

"செரி! இப்போ நைனா எங்க? அவர இட்டாந்து இவனுங்க கிட்ட சொல்ல வெக்கிறன்..!" குரலிலும் ஒரு வலு எதிரொலித்தது.

"அக்காங்! இப்ப அது ஆந்துராவுக்கு இல்ல போயிருக்கு! நம்ம குப்பத்துல இல்லாத மீனெல்லாம் அங்க இருந்து லோடு அட்ச்சுகினு வர போயிருக்கு..! வர ஒரு வாரம் ஆகும்..!"

புஸ்ஸென்று தோற்றுப் போன எம்.எல்.ஏ போல் ஆனான்.

"ஆமா...! ஆந்துரால இருந்து எவளையாவது ஓட்டிகினு வந்தா இன்னா பண்ணுவ..?" முனகினான்.

"அவ சிண்ட புடிச்சி, நாலு அப்பு அப்பி மறுக்கா அங்கயே ஓடிப் போயிறுனு தொரத்தி வுட்டுற மாட்டன்? அப்டி இல்லாம இந்தாளு கடலுக்குள்ள இருந்து புடிச்சினு வந்தன்னு சொல்லி ஒருத்திய கொண்டு வந்து வெச்சா, அவளை மறுபடியும் கடலுக்குள்ள தள்ளி வுட்டுற முடியுமா? வேற வளி இல்லாம வூட்டுக்குள்ளயே வெச்சுக்க வேண்டியதா போய்டும் இல்ல..? நீ சொன்ன மாரி செஞ்சுடுவானா அந்தாளு..?" வரட் வரட் என்று அவள் தேய்த்த தேய்ப்பில் தேங்காய் நாரோடு, அலுமினியத்தட்டு 'க்றீச் க்றீச்' என கதறியது.

"செரி! ஆந்துரால கடலுக்கு போய் புட்ச்சிகினு வந்தன்னு சொல்லி ஒரு பொம்பளய கூட்டினு வந்தா..?"

இதை எதிர்பாராததால், அப்டியே பாத்திரங்களைப் போட்டு விட்டு கன்னத்தில் கை வைத்து குந்தினாள். பாச்சாவைப் பார்த்தாள். அவள் பார்வையில் 'இவனை இனிமேல் அந்தாளு கிட்டக்கவே சேத்துக்க கூடாது' என்ற முடிவு உருவாகி இருந்ததை உணர்ந்து பாச்சா வேகமாய் மறுபடியும் சீட்டாட்ட க்ளப்புக்குத் திரும்பினான்.

"பாச்சா..! ஒண்ணு பண்ணு! நான் சொன்னேன்னு நம்ம காதரு வீடியோ சாப்புல போய் வீடியோ கேமிரா எடுத்துக்கோ! மறுக்கா எப்பயாவது அந்த பொம்பளய பாத்தியினா படம் புட்ச்சுக்கோ! ஒரு அதிசயத்த உண்மனு ஒத்துக்கணும்னா கொறஞ்சுது ரெண்டு பேராவது பாத்துருக்கணும். இல்லாடி அது பொய்யா இருக்க நெறய வாய்ப்பு இருக்குனு யாரும் நம்ப மாட்டாங்க! இன்னா புரிஞ்சுதா? செரி, மறுபடியும் அவள பாப்பன்னு நம்பிக்க இருக்கா உனிக்கு..?"

"இருக்கு! இன்னிக்கு ராத்திரி! நாலாவது மைல்ல! லைட் ஹவுஸ்ல இருந்து முப்பத்தஞ்சு டிகிரி...!" எழுந்து கொண்டான் பாச்சா.

அவனை ஆச்சரியமாக சில செகண்டுகள் பார்த்து விட்டு, "டேய் ஜாக் உன்கிட்ட இருக்கு தான? நான் பாத்துட்டன்..!"

முழுப் பெளர்ணமி எரிந்து கொண்டிருந்தது. இன்று கொந்தளிப்புகள் அதிகமாக இருந்தன. தனியாக போட்டை ஓட்டிக் கொண்டு வந்திருந்தான் பாச்சா. வீடியோ காமிராவை எடுத்து வைத்துக் கொண்டு, பட்டன்களைத் தட்டிப் பார்த்தான். காதர் பல முறைகள் சொல்லியும், அவனது மூளையில் எதுவும் பதிவாகி இருக்கவில்லை. எல்லா நியூரான்கள் வழியாகவும், அவளே பாஸாகிக் கொண்டிருந்தாள்.

நடுநிசியைத் தாண்டி, நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.

"அன்பரே..!"

அவளது குரல் தான்.

எட்டிப் பார்த்தான்.

வெண்மையான அலைகள் அசைந்தாடிக் கொண்டிருக்க, ஒரு ஆரஞ்சுத் தாமரை போல் மிதந்து கொண்டிருந்தாள்.

அவன் கொஞ்சம் நிலை மறந்து, மீண்டும் நினைவுக்குத் திரும்பி, காமிரவைத் திருப்ப,

"என்னை படம் பிடிக்கப் போகிறீர்களா..? இந்த மேனி அழகை, சுந்தர திருமுகத்தை, கந்தர்வ காதலியை ஊருக்கெல்லாம் ஒளிபரப்பிக் காட்டப் போகிறீர்களா..? நான் உங்களுக்கே, உங்களுக்கு மட்டுமே முழுச் சொந்தம் அல்லவா..?"

சில துளிகள் அவள் கண்களில் இருந்து உருண்டு கடலில் கலந்து ஒரு துளி உப்பை அதிகமாக்கியது.

பதறிப் போனான் பாச்சா..! காமிராவைக் கீழே எறிந்தான். அது மரத் தளத்தில் விழுந்து அங்குமிங்கும் சரிந்தது. பாய்ந்து அவள் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று ஆவல் கிளர்ந்தது.

"அன்பரே! வாருங்கள். இது நாம் வசந்தம் கொண்டாடும் நேரம். இப்போது கண்ணீர் எதற்கு..? நமது மாளிகை திறந்தே இருக்கிறது. வாருங்கள்...!"

பாச்சா வசியம் செய்யப்பட்டவன் போல் கைகளை நீட்ட, அவள் துள்ளி அவன் கைகளைப் பிடித்து கடலுக்குள் இழுக்கும் போது தான் கவனித்தான். அவள் இடையின் கீழ் வெண்ணிறச் செதில்களால் மீன் உடல்.

போட் தள்ளாடியது.

மோட்டாரின் ரீங்காரம் மட்டுமே வெகு நேரத்திற்கு கேட்டுக் கொண்டிருந்தது.

"முரளி...! முரளி...!"

"ம்...ம்..."

"போதும்..! மூக்க மூக்க தேச்சுட்டது போதும். கொஞ்சம் நான் சொல்றத கேக்கறீங்களா..?"

"ம்.. சொல்லு..! என்ன..?"

"அப்பா கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டார்...!"

"அப்படியா..? அம்பத்தஞ்சு வயசுல அவருக்கு என்ன கல்யாண ஆசை? லட்டு மாதிரி ஒரு பொண்ணை பெத்திட்டு மறுபடியும் அவருக்கு கல்யாணம் வேணுமாமா..?"

"என்ன ஜோக்கா? என் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சுட்டார்! வரிசையா பசங்க ஃபோட்டோஸா கொண்டு வந்து காட்டறார். எனக்கு பயமா இருக்கு..!"

"இந்த தமிழ் சினிமால எல்லாம் வருமே, 'இப்ப என் கல்யாணத்துக்கு என்னப்பா அவசரம்'னுட்டு கட்ட வெரலால தரையைப் பேத்திடுவாங்களே! அந்த டயலாக் எல்லாம் நீ சொல்ல மாட்டியா?"

"எல்லாம் சொல்லிப் பார்த்தாச்சு! 'எனக்குத் தெரியும்! உனக்கு எப்ப கல்யாணம் பண்ணி வெக்கணும்னு எனக்குத் தெரியும். நீ போட்டோஸ பார்த்து எந்தப் பையனைப் பிடிச்சிருக்குன்னு மட்டும் சொல்லு.' அப்படிங்கறார்..! எனக்கென்னவோ நம்ம காதலை பத்தி அப்பாக்கு தெரிஞ்சு போச்சோனு பயமா இருக்கு!"

"ரொம்ப நல்லதாப் போச்சு!"

"பி ஸீரியஸ் முரளி..!"

"சரி, நான் அங்க இருந்து கையை எடுத்திடறேன்..!"

"ப்ச்..! புரிஞ்சுக்கோங்க. இது விளையாடற நேரம் இல்ல. சீக்கிரம் உங்க ப்ரொமோஷனுக்கு ஏற்பாடு பண்ணிட்டு முறையா வந்து எங்க வீட்ல பொண்ணு கேளுங்க. உங்க பேரண்ட்ஸோட வாங்க..! என்னிக்கு வர்றீங்க..?"

"இரு..! இரு காவ்யா..! ஏன் இவ்ளோ அவசரப்படற..? இன்னிக்கு என்ன... தர்ஸ்டே! சனிக்கிழமை ஓ.கே.வா? நானும் அதுக்குள்ள என் பேரண்ட்ஸை கன்வின்ஸ் பண்ணி அவங்க சம்மதத்தை வாங்கிடறேன்..!"

"ஓ.கே...! போதும். கிளம்பலாம். அங்க தொடாதீங்க. அந்த இளநி கடக்காரன் அப்ப இருந்து நம்மளயே மொறச்சு மொறச்சு பாத்துக்கிட்டு இருக்கான்..!"

"விடு.. இந்த மாதிரி எத்தன லவ்வர்ஸ பாத்திருப்பான்..!"

"ஆமா! ஆனா இந்த மாதிரி மொட்ட வெயில்ல, காலேஜுக்குப் போறேன்னு சொல்லிட்டு பெசண்ட் நகர் பீச்சுல கொதிக்கற மணல்ல, ஸ்டொமக் பெயின்னு ஆஃபீஸுக்கு ஆஃப் டே லீவ் போட்டுட்டு வந்திருக்கற முரளிங்கற ஒரு ராஸ்கலோட சில்மிஷத்தை சமாளிச்சுக்கிட்டே இருக்கற காவ்யாங்கற அழகியை இப்ப தான் பாத்திருப்பான்...!"

கொஞ்ச நேரம் அமைதி.

கண்களைத் திறந்து, வெம்மையை அள்ளி அள்ளி கரையில் நனைத்த அலைகளைப் பார்த்த போது...

"முரளி..! அங்க பாருங்களேன்...!"

ஆச்சர்யமாக கூவினாள் காவ்யா.

முரளியும் அவளை விடுவித்து கடலைப் பார்க்க,

அலைகளில் இருந்து ஈரத்தோடு எழுந்து ஒருவன் நடந்து வந்தான்.

சுருண்ட முடியும், கறுப்பு நிறமும், கூரான் மூக்கும், முண்டா பனியனும் (அதில் டோரண்டோ), அரைக்கால் ட்ரெளசரும் அணிந்திருந்த அவன் கண்களில் களைப்பு தெரிந்தாலும் முகத்தில் கொஞ்சமே கொஞ்சம் வெட்கம் மிச்சம் இருந்தது.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

Wednesday, July 23, 2008

கனகனகனகனகனகனகனகனகனவுவுவுவுவுவுவுவுவு!

21G காந்தி மண்டபம் தாண்டி வேகம் எடுத்திருந்தது. ராஜ் பவனில் சிக்னல் இல்லாத, சிக்கல் இல்லாத ஒற்றை வழி ஆனதில் இனி அடுத்தது ஹால்டா தான். 'கவனம். இங்கு மான்கள் சாலையைக் கடக்கும் இடம்'. போர்டின் கீழே நேராக இருந்த ஒரு மென் ப்ரேக்கரின் அருகே அருள் காத்திருந்து, கொஞ்சம் மெதுவாகையில் தொற்றினான்.

பார்வையை விசிறி அடித்தான். ஓர் இடது சீட்டின் இடத்தில் சஞ்சு அமர்ந்திருந்தாள். கூட்டத்தை நெருக்கிக் கொண்டு, நகர்த்திக் கொண்டு... 'யோவ்! ஏன்யா கால மிதிக்கற', 'சாரி சார்.'.. உள்ளே வந்து விட்டான்.

அருகில் நின்றான். சற்று தணிந்த குரலில்,

"சஞ்சு..! ப்ளீஸ்! ஏன் என்னை ஏத்துக்க மாட்டேங்கற..? என்கிட்ட என்ன குறைச்சல்? ஏன் என்னை எலிமினேட் பண்ற..? ஆறு மாசமா உன் பின்னாடியே சுத்தறேனே...?"

அவள் மெளனி.

"சஞ்சு..! ஜஸ்ட் ரீஸன் மட்டும் சொல்லு.! என்ன பண்ணணும் நான்? என்ன கேரக்டர் சேஞ்ச் பண்ணிக்கணும்..?"

முருகன் மண்டபத்தில் இறங்கிக் கொண்டாள். பின்னால் இவனும்!

"லுக் அருள்! இப்படி பின்னாலேயே வர்றதுனால எந்தப் பொண்ணும் உங்கள லைக் பண்ண ஆரம்பிச்சுட மாட்டா! எனக்கு உங்களைப் பிடிக்கல. ஏன்னா பழைய காரணம் இன்னும் போகலையே!"

"அது போயிடுச்சு..!"

"ஷ்..! மெதுவாகவே கத்துங்க..! இதோட விட்டுருங்க. ப்ளீஸ். இந்த தெருவில என் பேரைக் கெடுத்திடாதீங்க...!"

"அப்ப என் மேல உனக்கு அன்பு வர்றதுக்கு வாய்ப்பே இல்லையா..?"

"ஒண்ணு பண்ணுங்க..! எப்ப உங்க கனவுல ஸ்வரூபா போய் நான் வந்து உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொல்றேனே, அப்ப வந்து சொல்லுங்க...! கன்ஸிடர் பண்றேன்..!"

"இப்ப எல்லாம் நீ மட்டும் தான் வர்ற..! ஸ்வரூபா எல்லாம் இல்லை. நான் என் பழைய கதையைச் சொன்னது தப்பா போச்சு..! பார், நீ அதை குத்திக் காட்டுற..?"

"இல்ல! நான் என் வாழ்க்கைக்கு ஸேஃபா பேஸ்மெண்ட் போட்டுக்கறது தப்பில்ல..! இப்ப நீங்க சொல்லலாம். பட் உங்க சப் கான்ஷியஸ்ல அவங்க நினைப்பு இருக்கலாம். சோ, எப்ப உங்க கனவில் நான் வந்து உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொல்றேனோ, அப்ப தான் உங்க மனசுல முழுக்க நான் இருக்கேன்னு அர்த்தம்..! அப்படி நான் வந்து சொன்னேன்னா, வந்து சொல்லுங்க. பட், பொய் சொல்ல நினைச்சீங்கன்னா, அது என்கிட்ட நடக்காது. உங்க கண்ணே காட்டிக் கொடுத்திடும்..! பை..!"

படபடத்துச் சொல்லி விட்டு அகன்றாள். அருள் தொங்கிய முகத்தோடு வீட்டுக்குத் திரும்பினான்.

பேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா?' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.

பேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா?' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.

பேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா?' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.

பேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா?' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.

பேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா?' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.

பேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா?' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.

பேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா?' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.

பேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா?' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.

பேருக்குச் சாப்பிட்டு விட்டு ('பருப்பு தால் இன்னும் கொஞ்சம் போட்டுக்கயேண்டா?' ' பசிக்கலம்மா..'), போய் படுத்துக் கொண்டான். கவலையில், களைப்பில் தூங்கிப் போனான்.

கனவில் சஞ்சு வந்தாள். "ஐ லவ் யூ அருள்..!" என்றாள். கனவு கலைந்து விழித்தான் அருள்.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

Tuesday, July 22, 2008

குருவும் ஐன்ஸ்டீனும்!

மிழ் படங்கள் அறிவியலை வளர்க்கவில்லை என்று யாராவது சொன்னால் நான் கோபப்படுவேன்.

இந்தப் பாடலின் வரிகளை மட்டும் கவனியுங்கள்.



ம்ஹூம்.. சொன்னால் கேட்டால் தானே!! சரி, சரி.. ஸ்ரீதேவியோடு, இரண்டாவது சரணத்தைக் கவனியுங்கள்.

'வானம் விழுந்தது. வளைந்தது.'

ஐன்ஸ்டீன் சொன்னதை எப்படி எளிமையாக நம் மனதில் ஆழப் பதியுமாறு சொல்லி இருக்கிறார்கள், பார்த்தீர்களா..?

இதை எல்லாம் அறிவியல் வகுப்பிலோ, 'காண்போம் கற்போமிலோ' காட்டினால் தானே அறிவு வளரும். நம்ம எஜுகேஷனல் சிஸ்டத்தையே டோட்டலா மாத்தணும் சார்..!

ஹைக்கூவின் ஒன்று விட்ட சகோதரனான ஸைஃபைக்கூ (Scifaiku) பற்றி இன்று கொஞ்சம் படிக்க முடிந்தது. இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கும் தளத்திற்கு ஏற்றார் போல் இருந்ததால், சில முயற்சிகள்.

1. டாமி குரைத்தது.
எட்டி, "யாரது?".
"பூமியிலிருந்து மனிதன்!".
(Inspiration : இக்கதை!)

2.ஆப்பிள் மரம்.
குழப்பத்தில் கனிந்த பழம்.
சாத்தான் வலையிலா, நியூட்டன் தலையிலா?

3.இரும்பைத் தங்கமாக்க
இச்சையா?
அணு எண் மாற்று!

4.நிலவில் சாம்பல்.
இறங்கிய இந்தியன்,
பூசிக் கொண்டான், "சிவ...சிவ...".

5.முதல் இரட்டை வேடம்.
எந்த நாயகன்?
ஒளி.

6.Schrodingeரிடம் சிக்கிய பூனை.
இருக்குமா, இறக்குமா?
ஃபிஃப்டி ஃபிஃப்டி!

Sunday, July 20, 2008

உன் பாதம்.

சொற்கள் சொல்ல இயலாமல் பரிதவிக்கின்ற எண்ணங்கள் காற்றில் அலைப்புறுகின்றன. இலைகளின் இடை புகுந்து சற்றே இளைப்பாறுகின்றன. காம்புகளின் வழியாக நழுவி, மரத்தின் பெரு உடலோடு இறுகுகின்றன.

பெய்கின்ற மழையோடு பின் நனைந்து, முன் நகர்ந்து செம்புல நீராய் மாறுகின்றன. போன போக்கில் போய், நதியோடு கலந்து, கடலோடு நிறைந்து, காற்றில் ஆவியாகி கடுகிப் போகின்றன.

பின் எந்த சொல்லை நம்பி, மீண்டும் எண்ணங்கள் பிறவியெடுக்கும்?

உளத்தின் உள் வெற்று வெளியை நிரப்ப ஓர் எண்ணம் கொள்ளும் வடிவம், சொற்களின் மேல் கொண்ட அதன் காதலால் தானோ...?

***

உன் பாதம்.

எப்பொழுது என்னால் உன் கண்களைக்
காண முடிவதில்லையோ,
உன் பாதங்களைப் பார்க்கிறேன்.
வளை எலும்புகளாலான பாதம்.
சிறிய, கடின பாதம்.
உன்னை அவை தாங்குகின்றன என்பதை
அறிகிறேன்.
மற்றும் உன் இனிய எடை
அவற்றின் மீதே
எழும்பி அமைகின்றது.
உன் இடை, உன் மார்புகள்,
பர்ப்பிள் நிற
இரட்டை மார் நுனிகள்,
பறந்து சென்ற கண்களின் இமைகள்,
உனது அகன்ற இனிய வாய்,
உனது சிவந்த நிறம்,
என் சிறிய அழகு.
ஆனால் நான் உன் பாதங்களை
விரும்புகிறேன்.
ஏனெனில்
அவை மட்டுமே
பூமியின் மீதும்,
காற்றின் மீதும்,
நீரின் மீதும்
நடந்தன,
என்னைக் கண்டடையும் வரை.

Pablo Neruda- வின் Your feet.