Thursday, January 26, 2017

நீலாம்பல் நெடுமலர்.13.



நீ என் முடிவுறாத மெளனம்
நான் உன் முடிவிலாத நாணம்

கனவுகளில் ஓராயிரம் கணங்கள்
காண்கையில் மோதிடும் எண்ணங்கள்

பாதைகளில் பதியன் போடும் பூக்கள்
பதிகையில் குருதி வழியும் முட்கள்

வர்ணமழிந்த ஓவியத்தின் நகல்
வாசமிழந்த மலரின் நிழல்

இரவுகளில் நிழல்களின் பயணம்
இருக்கையில் தனிமையின் சலனம்

இதயமே வலியின் இருப்பிடம்
இருக்கும்வரை துயரத்தின் வசிப்பிடம்

போரிடும் களத்தின் விதிகள்
பொம்மைக் கரங்களில் வாட்கள்

வேனில் மரத்தினடி விழுகனி
கானல் நதியினுள் களிமனம்.....