இணையதளத்தில்
துளித்துளியாய்
ஆடை விலக்கி
பரிநிர்வாணம் அடைபவள்,
அன்று
உடைந்த மூக்குடன்
தோன்றினாள்.
‘ஜென்னி, என்ன ஆயிற்று
உன் மூக்கிற்கு?’
என்று
வந்த 7713 பேரும் கேட்டார்கள்.
‘உடற்பயிற்சிக்கூடத்தில் தவறி
விழுந்து விட்டேன்’
என்று
அனைவருக்கும் சொன்னாள்.
‘மூக்கைத் துணியால் மறைத்துக் கொள்.
என் கற்பனைக்கு
அது இடைஞ்சல்
செய்கிறது’ என்றான் ஒருவன்.
‘மூக்கு சரியாகும் வரை
பின்புற போஸ் மட்டும்
காட்டு’ என்றான் மற்றொருவன்.
‘கேமிராவைக்
உதட்டுக்கு மேல்
கொண்டு போய் விடாதே’ என்றான் இன்னொருவன்.
பார்வையாளர்கள் எண்ணிக்கை
சட்டென 5320 ஆனது.
‘ஜென்னி,
இப்போது தான்
நீ இன்னும் அழகாய் இருக்கிறாய்.
மேகங்களில் மிதந்து கொண்டிருந்த
பொன்புறா,
மரக்கிளைமேல் வந்தமர்ந்தது போல்.
கைக்கெட்டும் அளவான அழகில்.’
என்றான் 4517-ல் மிஞ்சிய ஒரு கவிஞன்.
அவனுக்கு மட்டும்
இரு முத்த எமோஜிகளும்
ஒற்றைத் துளி கண்ணீர் எமோஜியும்
அனுப்பினாள்.
யாரும்
‘டேக் கேர்’
சொல்லவில்லை.
Showing posts with label அலையும் கரையும்.. Show all posts
Showing posts with label அலையும் கரையும்.. Show all posts
Tuesday, August 21, 2018
ஒரு கோப்பை தேநீர்.
‘வா...
ஒரு கோப்பை தேநீர்
அருந்திக் கொண்டே
நாம் பேசலாம்..’
என்று அழைக்கிறாய்.
ஒரு கோப்பை தேநீர்
தீர்வதற்குள்
அதன் நுரை அடங்குவதற்குள்
அதன் வெம்மை அணைவதற்குள்
அதன் ஒவ்வொரு துளியையும் விழுங்குவதற்குள்
அதன் அடியாழத்துக் கசடைத் தவிர்ப்பதற்குள்
பேசி முடிப்பவை தானா
நம் சிக்கல்களும்
நம் கருத்து வேறுபாடுகளும்
நம் கோபங்களும்
நம் வெறுப்புகளும்?
எனினும்
என்னை அலங்கரித்துக் கொண்டு
என் கைப்பையை நிரப்பி விட்டு
சென்ற பனியுருண்டை விழாவில்,
என் உடனிருப்புக்கு
நீ
பரிசளித்த
பழுப்பு நிற தணப்பு ஷூ அணிந்து கொண்டு
உன்னுடன்
கைகளைக் கோர்த்துக் கொண்டு
புன்னகை சூடிக் கொண்டு
எதிர்ப்படுவோரின் ‘நல்ல மாலை’க்கு
மெல்லத் தலையசைத்து
நடந்து வருகிறேன்.
தேநீர் கடை
இன்னும்
எவ்வளவு தூரம்?
ஒரு கோப்பை தேநீர்
அருந்திக் கொண்டே
நாம் பேசலாம்..’
என்று அழைக்கிறாய்.
ஒரு கோப்பை தேநீர்
தீர்வதற்குள்
அதன் நுரை அடங்குவதற்குள்
அதன் வெம்மை அணைவதற்குள்
அதன் ஒவ்வொரு துளியையும் விழுங்குவதற்குள்
அதன் அடியாழத்துக் கசடைத் தவிர்ப்பதற்குள்
பேசி முடிப்பவை தானா
நம் சிக்கல்களும்
நம் கருத்து வேறுபாடுகளும்
நம் கோபங்களும்
நம் வெறுப்புகளும்?
எனினும்
என்னை அலங்கரித்துக் கொண்டு
என் கைப்பையை நிரப்பி விட்டு
சென்ற பனியுருண்டை விழாவில்,
என் உடனிருப்புக்கு
நீ
பரிசளித்த
பழுப்பு நிற தணப்பு ஷூ அணிந்து கொண்டு
உன்னுடன்
கைகளைக் கோர்த்துக் கொண்டு
புன்னகை சூடிக் கொண்டு
எதிர்ப்படுவோரின் ‘நல்ல மாலை’க்கு
மெல்லத் தலையசைத்து
நடந்து வருகிறேன்.
தேநீர் கடை
இன்னும்
எவ்வளவு தூரம்?
Saturday, July 07, 2018
A Stray Dog.
Once upon a time in the park
When the sky turned into dark
I tried my bicycle to park,
Alas, I could not hear a single bark.
"Oh stray dogs, where did all you go?
My poor soul wants that to know.
Had you all been caught?
Say atleast one of you, "No, not!"
Did you go behind a beauty?
Did you do all the naughty?
Did you have set of babies?
Did you start spreading rabbies?"
"When the cloud opens,
We dont have shelter to hide
When the sun shines,
We dont get water to tide.
We are orphans roaming in the road
We are creatures have none to feed
We draw our borders in the street
Whoever comes, we look their feet
We speak eachother, we fight eachother
We cuddle eachother, we kill eachother
Oh Man! whenever you hear when we speak,
You term it in a single word as bark
After the last dog dies because of starvation
You will feel the painful silence as salvation
With the help of a stray dog's instinct
I say, one day we all will go into extinct
Until then, why don't you feed me
Until then, why don't you care me
Until then, why don't you share a kiss
Until the mighty dark fall upon all of us"
"Oh stray dog! you opened my eyes
Further I will treat you as much as nice
Now, like the sun rays kill the chill fog
Clear the silence and bark like a true stray dog"
Lol..Lol...Lol...
When the sky turned into dark
I tried my bicycle to park,
Alas, I could not hear a single bark.
"Oh stray dogs, where did all you go?
My poor soul wants that to know.
Had you all been caught?
Say atleast one of you, "No, not!"
Did you go behind a beauty?
Did you do all the naughty?
Did you have set of babies?
Did you start spreading rabbies?"
"When the cloud opens,
We dont have shelter to hide
When the sun shines,
We dont get water to tide.
We are orphans roaming in the road
We are creatures have none to feed
We draw our borders in the street
Whoever comes, we look their feet
We speak eachother, we fight eachother
We cuddle eachother, we kill eachother
Oh Man! whenever you hear when we speak,
You term it in a single word as bark
After the last dog dies because of starvation
You will feel the painful silence as salvation
With the help of a stray dog's instinct
I say, one day we all will go into extinct
Until then, why don't you feed me
Until then, why don't you care me
Until then, why don't you share a kiss
Until the mighty dark fall upon all of us"
"Oh stray dog! you opened my eyes
Further I will treat you as much as nice
Now, like the sun rays kill the chill fog
Clear the silence and bark like a true stray dog"
Lol..Lol...Lol...
Sunday, February 18, 2018
கீச்சு கீச்சென்னும் ஒலி.
ட்விட்டரில் சில காலம் கிறுக்கிக் கொண்டிருந்தேன். அது இருக்கும், எட்டு ஆண்டுகள் முன்பு. சில ட்வீட்டுகள் சுருக்கங்கள் நீக்கி கீழே.
இலக்கணப் பிழைகளுக்கு மன்னிச்சூ.
Love is a sweet sword. While it is tearing the skin, we wont feel the pain which is waiting to happen later.
Once you touched me. I felt, completely opposed to the scientific belief, global cooling.
'It is raining near Salem...' the opposite bus spreads this news through out it's way by showing wet drops on the glass windows.
My nephew asked "do cockroaches survive even in atom bomb attack?". I yessed. He caught one and killed by stone. Then he looked me.
A real number cant write poems... It doesnt have imaginary value.
'there is a beauty in everything' - I chant this ten times whenever i come across a full mirror.
Once I was an innocent and donno acting... now i am acting as an innocent.
When am driving my car in the max speed of 120 kmph, a big container came as 4m a turn. To avoid a horrible accident, I pressed 'game restart'.
My dad once said: what a villain trying to do on the heroin from which the hero saves, could be done by the hero later.
Thank god, they kick ball with cloths on. Else how can we differ the players while Japan and Korea clash. #fifa
#scifi "Is this the ice cube the so called coolest thing? But why it is so hot?" surprised the visitor from Neptune.
#science #scifi When Einstein made the statement "God doesnt play dice", did he anyway mention Mahabharat?
#science Are Idlies and Laddus examples for #fractals? Fine, we take a fractal in the mrng and break it and dip that into chutney for tiffin.
#scifi "Can you teach me how to write romantic poems?" the robot designed to help my wife asked. "Sure" I said and pulled off it's power supply.
#future A robot designed to tell stories started,"once there was water falling from sky named rain". Student "mythical story?"
When I pour chutney on the sambhar in the plate, it's edges spread as #KochCurve. Does it know #fractals ?
S4aS: If all scientific symbols were derived from ancient Greek letters, then Odessey must have some Mathematical Theorems.
S4aS: There must be definitely smart gals live. Fortunately I didnt find a single one.
S4aS: Issueless life is like tissueless toilet. Have to wipe out whatever coming in life them have to move on.
Oru naal siriththen. Maru naal veruthen. #nithyananda
Until 2 days back he explained 'who is god'. Now we understood that. #nithyananda
#Nithyananda Educate by day. Ejaculate by night.
Prasangam in day, Bra sangam in night.. #Nithyananda
Twitter forces me to tell within 140 chars. So, while typing i count the chars like counting the loops while rounding navagrahas in temples.
Wanna know why Guitar is used prominently in Romantic songs? Check its structure. Damn, it's Perfectly Woman. Tune it nTouch strings. DANN!!!
Once there was a snail, It had a large tail, Using its sharp nail, Wrote an exam but got fail. - Who said writing poem is hard?
The green comments in my programs make me to remember this world, where greenary trees are getting treated as simply comments.
I want to believe the screensaver fishes to live behind all my opened windows.
"We never touched condoms, until AIDS was identified. Now see, how they use. Those were the golden days...!" a retired pornstar sighed.
I had a friend in my U.K.G. He could clean his nose with his tongue. Lengthy one. Now he is doing his Masters in Dental. Any link?
Que:What are the similarities between sand n soil. Ans: They have s and oil.
Erotic stories teach me how a writer can design infinite possible situations which lead to a same conclusion.
If one reads history, he could find there will be nothing except events and decisions. One constructs other.
WIWS:When I was praying for my friend's health,god appeared and asked "you have to give something for your friend. what u will?" i said "entire"
WIWS:When I was acting in a drama, I did perfect since before starting, director instructed clearly who I'm and what I not to do. God didnt that before I born.
WIWS:When I was sitting 4 a haircut, d person sittin opposite in d mirror luks like me. Is thr anyother world apart 4m our mirror world?
S4aS: I want to write a novel about a writer who writes a novel about novel writing on a novel writing writer. - From a novel writer's notes.
Sentence 4 a Stance : Being a gud tweet isnt controlled writing within 140 chars, but with enough spaces in between.
WIWS:When i was reading d last b4 page of a buk on indian freedom struggle, d pwr in my home gone off. I want 2 no vat hppnd 2 India after.
WIWS:When i was shouting on my dog, it stared me in a way it would think 'why he is barking like this?'
WIWS:When i was speaking in a meeting with a crowd of thousands, someone shouted "hey! Stop making noise!" from the dias.
WIWS:When i was praying, god appeared n askd me,"u luk tired.4 soothin wanna gud gal r bad bed?". I ansd "gud gal but bad in whatever bed".
WIWS:When i was looking for a rain to feed my corps, the mango tree in my garden spread its roots in all directions for water.
WIWS:When i was writin my first poem,the moon murmured to our watching cat,"is he writing abt me?".it replied,"no.us."
WIWS:When i was buying a book in HB in a railway station, the station came to life first. The train came ten minutes later.
WIWS:When i was planting a mango seed in my garden, two sparrows had sex. One day their grand kids may stay in my tree.
WIWS:When i was waiting in a bus stop, a bus arrived. It didn't have doors by carrying a name board 'ladies only'.
WIWS:When i was hunting for a bug, it lived happily inside a for loop by eating a buffer and corrupted an array by shitting in it.
WIWS:When i was sleeping, a rat bit my rigit earlobe. 'excuse me. You bit me. It was in my dream, right?' i asked. it replied 'no. in mine.'
TL4G.9. What you see are 'bra sets'. Can you jumble it? Yes...!
TL4G.8. Is this the first time you see?
TL4G.7. I am a bad girl. Care... not pad, its bad.
TL4G.6. Which comes first? Oops... I forgot the second half of the question.
TL4G.5. I love binary.
TL4G.4.(d shirt has 3 buttons.in d right half)Un, able is, paining(in d left half)touch, heart, and a(after 3 buts, @ d common bottom)crime.
TL4G.3. My eyes are more sharper.
TL4G.2. Yes, you are right. I missed my bra.
Tshirt Lines 4 Girls.1. Warning Friedman, My worlds are not Flat.
When the clouds are few, The Sky looks blue. Even my tasks are in queue, i try to write new.
Luv4. Lovers r complex numbers. Marriage is mod function. After that function applied, imaginary things gone 'n real things come in square.
£üv8. 'Am i look like an angel?' she asked with a smile. I was in mute. Getting angry, she tore all her dress and stood like a goddess.
'When u r in Kerala, always carry an umbrella!'. I wrote this after getting washed completely by a sudden heavy rain here in TVW.
'if you have a better hand, you dont need a partner' - a coach turned batsman on batting.
I am standing atop of the world's tallest building. Above my head there flies a sparrow.
Once there was raining heavily in a jungle. The next morning, infinitesmall ponds appeared on each leaf.
An aged leaf was falling from its tree. It was carrying a last sun drop it had drunk.
I love being with elders. They make me feel younger.
Always i use umbrellas while raining outside. Because i never wash them.
Reading a love letter is injurious to health. Our body cant digest so many lies at a time.
A rockstar kissed a gal. She died. Star wasnt arrested. Coz, there were 60 years btwn the first two statements.
A real number cant write poems... It doesnt have imaginary value...
Dont close tasmac at jan 26... Thats the DAY to REturn to PUB for LIQuor...
Hv cn five ducks wlkng 1/1 in a canal on the way... that reminds me agarkar once @ aus... Vat he doin now?
North gals take wheat items, yet they r fair, while south galz take white rice foods, yet they r wheatish... Bug in design?
Destroying must b diffic than creating.. c, der r 103 to make,while only 2 keys to delete...
இலக்கணப் பிழைகளுக்கு மன்னிச்சூ.
Love is a sweet sword. While it is tearing the skin, we wont feel the pain which is waiting to happen later.
Once you touched me. I felt, completely opposed to the scientific belief, global cooling.
'It is raining near Salem...' the opposite bus spreads this news through out it's way by showing wet drops on the glass windows.
My nephew asked "do cockroaches survive even in atom bomb attack?". I yessed. He caught one and killed by stone. Then he looked me.
A real number cant write poems... It doesnt have imaginary value.
'there is a beauty in everything' - I chant this ten times whenever i come across a full mirror.
Once I was an innocent and donno acting... now i am acting as an innocent.
When am driving my car in the max speed of 120 kmph, a big container came as 4m a turn. To avoid a horrible accident, I pressed 'game restart'.
My dad once said: what a villain trying to do on the heroin from which the hero saves, could be done by the hero later.
Thank god, they kick ball with cloths on. Else how can we differ the players while Japan and Korea clash. #fifa
#scifi "Is this the ice cube the so called coolest thing? But why it is so hot?" surprised the visitor from Neptune.
#science #scifi When Einstein made the statement "God doesnt play dice", did he anyway mention Mahabharat?
#science Are Idlies and Laddus examples for #fractals? Fine, we take a fractal in the mrng and break it and dip that into chutney for tiffin.
#scifi "Can you teach me how to write romantic poems?" the robot designed to help my wife asked. "Sure" I said and pulled off it's power supply.
#future A robot designed to tell stories started,"once there was water falling from sky named rain". Student "mythical story?"
When I pour chutney on the sambhar in the plate, it's edges spread as #KochCurve. Does it know #fractals ?
S4aS: If all scientific symbols were derived from ancient Greek letters, then Odessey must have some Mathematical Theorems.
S4aS: There must be definitely smart gals live. Fortunately I didnt find a single one.
S4aS: Issueless life is like tissueless toilet. Have to wipe out whatever coming in life them have to move on.
Oru naal siriththen. Maru naal veruthen. #nithyananda
Until 2 days back he explained 'who is god'. Now we understood that. #nithyananda
#Nithyananda Educate by day. Ejaculate by night.
Prasangam in day, Bra sangam in night.. #Nithyananda
Twitter forces me to tell within 140 chars. So, while typing i count the chars like counting the loops while rounding navagrahas in temples.
Wanna know why Guitar is used prominently in Romantic songs? Check its structure. Damn, it's Perfectly Woman. Tune it nTouch strings. DANN!!!
Once there was a snail, It had a large tail, Using its sharp nail, Wrote an exam but got fail. - Who said writing poem is hard?
The green comments in my programs make me to remember this world, where greenary trees are getting treated as simply comments.
I want to believe the screensaver fishes to live behind all my opened windows.
"We never touched condoms, until AIDS was identified. Now see, how they use. Those were the golden days...!" a retired pornstar sighed.
I had a friend in my U.K.G. He could clean his nose with his tongue. Lengthy one. Now he is doing his Masters in Dental. Any link?
Que:What are the similarities between sand n soil. Ans: They have s and oil.
Erotic stories teach me how a writer can design infinite possible situations which lead to a same conclusion.
If one reads history, he could find there will be nothing except events and decisions. One constructs other.
WIWS:When I was praying for my friend's health,god appeared and asked "you have to give something for your friend. what u will?" i said "entire"
WIWS:When I was acting in a drama, I did perfect since before starting, director instructed clearly who I'm and what I not to do. God didnt that before I born.
WIWS:When I was sitting 4 a haircut, d person sittin opposite in d mirror luks like me. Is thr anyother world apart 4m our mirror world?
S4aS: I want to write a novel about a writer who writes a novel about novel writing on a novel writing writer. - From a novel writer's notes.
Sentence 4 a Stance : Being a gud tweet isnt controlled writing within 140 chars, but with enough spaces in between.
WIWS:When i was reading d last b4 page of a buk on indian freedom struggle, d pwr in my home gone off. I want 2 no vat hppnd 2 India after.
WIWS:When i was shouting on my dog, it stared me in a way it would think 'why he is barking like this?'
WIWS:When i was speaking in a meeting with a crowd of thousands, someone shouted "hey! Stop making noise!" from the dias.
WIWS:When i was praying, god appeared n askd me,"u luk tired.4 soothin wanna gud gal r bad bed?". I ansd "gud gal but bad in whatever bed".
WIWS:When i was looking for a rain to feed my corps, the mango tree in my garden spread its roots in all directions for water.
WIWS:When i was writin my first poem,the moon murmured to our watching cat,"is he writing abt me?".it replied,"no.us."
WIWS:When i was buying a book in HB in a railway station, the station came to life first. The train came ten minutes later.
WIWS:When i was planting a mango seed in my garden, two sparrows had sex. One day their grand kids may stay in my tree.
WIWS:When i was waiting in a bus stop, a bus arrived. It didn't have doors by carrying a name board 'ladies only'.
WIWS:When i was hunting for a bug, it lived happily inside a for loop by eating a buffer and corrupted an array by shitting in it.
WIWS:When i was sleeping, a rat bit my rigit earlobe. 'excuse me. You bit me. It was in my dream, right?' i asked. it replied 'no. in mine.'
TL4G.9. What you see are 'bra sets'. Can you jumble it? Yes...!
TL4G.8. Is this the first time you see?
TL4G.7. I am a bad girl. Care... not pad, its bad.
TL4G.6. Which comes first? Oops... I forgot the second half of the question.
TL4G.5. I love binary.
TL4G.4.(d shirt has 3 buttons.in d right half)Un, able is, paining(in d left half)touch, heart, and a(after 3 buts, @ d common bottom)crime.
TL4G.3. My eyes are more sharper.
TL4G.2. Yes, you are right. I missed my bra.
Tshirt Lines 4 Girls.1. Warning Friedman, My worlds are not Flat.
When the clouds are few, The Sky looks blue. Even my tasks are in queue, i try to write new.
Luv4. Lovers r complex numbers. Marriage is mod function. After that function applied, imaginary things gone 'n real things come in square.
£üv8. 'Am i look like an angel?' she asked with a smile. I was in mute. Getting angry, she tore all her dress and stood like a goddess.
'When u r in Kerala, always carry an umbrella!'. I wrote this after getting washed completely by a sudden heavy rain here in TVW.
'if you have a better hand, you dont need a partner' - a coach turned batsman on batting.
I am standing atop of the world's tallest building. Above my head there flies a sparrow.
Once there was raining heavily in a jungle. The next morning, infinitesmall ponds appeared on each leaf.
An aged leaf was falling from its tree. It was carrying a last sun drop it had drunk.
I love being with elders. They make me feel younger.
Always i use umbrellas while raining outside. Because i never wash them.
Reading a love letter is injurious to health. Our body cant digest so many lies at a time.
A rockstar kissed a gal. She died. Star wasnt arrested. Coz, there were 60 years btwn the first two statements.
A real number cant write poems... It doesnt have imaginary value...
Dont close tasmac at jan 26... Thats the DAY to REturn to PUB for LIQuor...
Hv cn five ducks wlkng 1/1 in a canal on the way... that reminds me agarkar once @ aus... Vat he doin now?
North gals take wheat items, yet they r fair, while south galz take white rice foods, yet they r wheatish... Bug in design?
Destroying must b diffic than creating.. c, der r 103 to make,while only 2 keys to delete...
Labels:
அலையும் கரையும்.,
அழகாய் எழுதுவோம்.,
வார்த்தை உடை.
Sunday, September 10, 2017
லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்.
லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்.
அமெரிக்கக் கருப்பினக் கவிஞர். உலக வரலாற்றின் கொந்தளிப்பான காலகட்டத்தில் வாழ்ந்த கவிஞர். அவருடைய இருவழி தாத்தாக்களும் வெள்ளையர்களாகவும் இருவழி பாட்டிகளும்
கறுப்பினத்தவர்களாகவும் இருந்தபடியால் அடையாளக் குழப்பத்தில் வாழ்ந்தவர்.
ஆனாலும் தம்மை கறுப்பினத்தவராகவே சொல்பவர். கவிமனம் கொண்டவர் என்பதால் எவரையும் வெறுக்க இயலாதவர்.
நம்பிக்கையுடன் கறுப்பரின் நல்வாழ்வுக்கு கனவு கண்டவர்.
அவருடைய கவிதைகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிவன இவையே.
சில மொழிபெயர்ப்புகள்.
1. சந்திப்பு முனை.
என் வயதான மனிதன்
ஒரு வெள்ளையின வயதானவன்.
மற்றும் என் வயதான அம்மா
கறுப்பினத்தவள்.
ஒருவேளை என்றாவது
நான் என் வயதான
வெள்ளை மனிதனை
சபித்திருந்தால்,
அவற்றை
நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.
ஒருவேளை என்றாவது
என் வயதான கறுப்பு அம்மாவை
சபித்திருந்தால்,
அவள்
நரகத்தில் இருக்க
விரும்பியிருந்தால்,
அத்தீய விருப்பத்திற்காக
வருந்துகிறேன்.
மற்றும் அவள் நலத்தை
விழைகிறேன்.
என் வயதான மனிதன்
இறந்தது
ஒரு நல்ல பெரிய வீட்டில்.
என் அம்மா
இறந்தது
ஒரு குடிசையில்.
நான் எங்கே இறக்கப் போகிறேன்
என்று வியக்கிறேன்,
கறுப்பனாகவோ வெள்ளையனாகவோ
நான் இல்லாதிருப்பதால்.
2. குடியரசு.
இன்று, இவ்வருடம்
குடியரசு வரப்போவதில்லை.
சமரசத்தாலோ, பயத்தாலோ
என்றுமே.
மற்றொருவன்
கொண்டிருப்பதைப் போல
நானும் உரிமை கொண்டுள்ளேன்.
இரண்டு பாதங்களால்
நிற்பதற்கு.
மற்றும்
நிலத்தை உரிமை கொள்வதற்கு.
ஒவ்வொன்றும் அதற்கான
காலத்தை
எடுத்துக் கொள்ளட்டும்
என்று சொல்லும்
மக்களால்
நான் சலிப்புற்றுள்ளேன்.
நாளை என்பது மற்றுமொரு நாளே.
நான் இறந்தபின் கிடைக்கும்
என் விடுதலையை
நான் விரும்பவில்லை.
நாளைய உணவின்
மீது
நான் இன்று வாழவியலாது.
சுதந்திரம் என்ற
ஒரு
வலுவான விதை
ஒரு
உன்னதத் தேவையின்
மீது
விதைக்கப்படுகின்றது.
நானும்
இங்குதான் வாழ்கிறேன்.
நானும்
சுதந்திரத்தை விழைகிறேன்,
உங்களைப் போல.
3. கனவுகள்
கனவுகளை
வேகமாகப்
பிடித்துக் கொள்ளுங்கள்
ஒருவேளை
கனவுகள் மரித்தால்,
வாழ்வு,
முறிந்த சிறகுகளையுடைய
பறவையாகி விடும்
பறக்கவியலாத ஒன்றாய்.
கனவுகளை
வேகமாகப்
பிடித்துக் கொள்ளுங்கள்.
கனவுகள்
போய் விட்டதெனில்,
வாழ்வு,
பனிமூடி உறைந்த
தரிசு நிலமாகி விடுகின்றது.
4. சலிப்பு
எப்போதும்
ஏழையாகவே
இருந்து கொண்டிருப்பது
சலிப்பாய் இருக்கின்றது.
5. இறுதி வளைவு
வளைவில் திரும்புகையில்
உங்கள் மீதே
நீங்கள்
மோதிக் கொண்டால்,
நீங்கள் அறிவீர்கள்
விடுபட்டிருந்த
அத்தனை வளைவுகளிலும்
நீங்கள்
திரும்பி விட்டிருந்தீர்கள்
என்று.
6. செல்மாவுக்காக..
செல்மா, அலபமா
போன்ற இடங்களில்
பிள்ளைகள் சொல்கிறார்கள்,
”சிகாகோ, ந்யூயார்க்
போன்ற இடங்களில்...” என்று.
சிகாகோ, ந்யூயார்க்
போன்ற இடங்களில்
பிள்ளைகள் சொல்கிறார்கள்,
”லண்டன், பாரீஸ்
போன்ற இடங்களில்...” என்று.
லண்டன், பாரீஸ்
போன்ற இடங்களில்
பிள்ளைகள் சொல்கிறார்கள்,
”சிகாகோ, ந்யூயார்க்
போன்ற இடங்களில்...” என்று.
7. நான் கனவு காண்பதைத் தொடர்வேன்
என் கனவுகளை எடுத்து
அவற்றை
ஒரு வெண்கலக் குடுவையாக்குவேன்
மையத்தில் அழகான ஒரு சிலையுடன்
வட்டமான நீரூற்றுடன்.
மற்றும் ஓர் உடைந்த மனதுடன்
ஒரு பாடல்.
உன்னைக் கேட்பேன்:
”என் கனவுகளைப்
புரிந்து கொண்டாயா..?”
சில சமயங்களில்
நீ சொல்கிறாய் ஆம் என,
மற்றும்
சில சமயங்களில்
நீ சொல்கிறாய் இல்லை என,
எப்படியாகிலும்
அது நான் பொருட்படுத்தத் தக்கதல்ல.
நான்
கனவு காண்பதைத் தொடர்வேன்.
8. என் மக்கள்.
இரவு அழகானது,
என் மக்களின் முகங்களைப் போல.
நட்சத்திரங்கள் அழகானவை,
என் மக்களின் கண்களைப் போல.
சூரியனும் கூட அழகானது,
என் மக்களின் ஆன்மாக்களும் அழகானவை.
அமெரிக்கக் கருப்பினக் கவிஞர். உலக வரலாற்றின் கொந்தளிப்பான காலகட்டத்தில் வாழ்ந்த கவிஞர். அவருடைய இருவழி தாத்தாக்களும் வெள்ளையர்களாகவும் இருவழி பாட்டிகளும்
கறுப்பினத்தவர்களாகவும் இருந்தபடியால் அடையாளக் குழப்பத்தில் வாழ்ந்தவர்.
ஆனாலும் தம்மை கறுப்பினத்தவராகவே சொல்பவர். கவிமனம் கொண்டவர் என்பதால் எவரையும் வெறுக்க இயலாதவர்.
நம்பிக்கையுடன் கறுப்பரின் நல்வாழ்வுக்கு கனவு கண்டவர்.
அவருடைய கவிதைகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிவன இவையே.
சில மொழிபெயர்ப்புகள்.
1. சந்திப்பு முனை.
என் வயதான மனிதன்
ஒரு வெள்ளையின வயதானவன்.
மற்றும் என் வயதான அம்மா
கறுப்பினத்தவள்.
ஒருவேளை என்றாவது
நான் என் வயதான
வெள்ளை மனிதனை
சபித்திருந்தால்,
அவற்றை
நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.
ஒருவேளை என்றாவது
என் வயதான கறுப்பு அம்மாவை
சபித்திருந்தால்,
அவள்
நரகத்தில் இருக்க
விரும்பியிருந்தால்,
அத்தீய விருப்பத்திற்காக
வருந்துகிறேன்.
மற்றும் அவள் நலத்தை
விழைகிறேன்.
என் வயதான மனிதன்
இறந்தது
ஒரு நல்ல பெரிய வீட்டில்.
என் அம்மா
இறந்தது
ஒரு குடிசையில்.
நான் எங்கே இறக்கப் போகிறேன்
என்று வியக்கிறேன்,
கறுப்பனாகவோ வெள்ளையனாகவோ
நான் இல்லாதிருப்பதால்.
2. குடியரசு.
இன்று, இவ்வருடம்
குடியரசு வரப்போவதில்லை.
சமரசத்தாலோ, பயத்தாலோ
என்றுமே.
மற்றொருவன்
கொண்டிருப்பதைப் போல
நானும் உரிமை கொண்டுள்ளேன்.
இரண்டு பாதங்களால்
நிற்பதற்கு.
மற்றும்
நிலத்தை உரிமை கொள்வதற்கு.
ஒவ்வொன்றும் அதற்கான
காலத்தை
எடுத்துக் கொள்ளட்டும்
என்று சொல்லும்
மக்களால்
நான் சலிப்புற்றுள்ளேன்.
நாளை என்பது மற்றுமொரு நாளே.
நான் இறந்தபின் கிடைக்கும்
என் விடுதலையை
நான் விரும்பவில்லை.
நாளைய உணவின்
மீது
நான் இன்று வாழவியலாது.
சுதந்திரம் என்ற
ஒரு
வலுவான விதை
ஒரு
உன்னதத் தேவையின்
மீது
விதைக்கப்படுகின்றது.
நானும்
இங்குதான் வாழ்கிறேன்.
நானும்
சுதந்திரத்தை விழைகிறேன்,
உங்களைப் போல.
3. கனவுகள்
கனவுகளை
வேகமாகப்
பிடித்துக் கொள்ளுங்கள்
ஒருவேளை
கனவுகள் மரித்தால்,
வாழ்வு,
முறிந்த சிறகுகளையுடைய
பறவையாகி விடும்
பறக்கவியலாத ஒன்றாய்.
கனவுகளை
வேகமாகப்
பிடித்துக் கொள்ளுங்கள்.
கனவுகள்
போய் விட்டதெனில்,
வாழ்வு,
பனிமூடி உறைந்த
தரிசு நிலமாகி விடுகின்றது.
4. சலிப்பு
எப்போதும்
ஏழையாகவே
இருந்து கொண்டிருப்பது
சலிப்பாய் இருக்கின்றது.
5. இறுதி வளைவு
வளைவில் திரும்புகையில்
உங்கள் மீதே
நீங்கள்
மோதிக் கொண்டால்,
நீங்கள் அறிவீர்கள்
விடுபட்டிருந்த
அத்தனை வளைவுகளிலும்
நீங்கள்
திரும்பி விட்டிருந்தீர்கள்
என்று.
6. செல்மாவுக்காக..
செல்மா, அலபமா
போன்ற இடங்களில்
பிள்ளைகள் சொல்கிறார்கள்,
”சிகாகோ, ந்யூயார்க்
போன்ற இடங்களில்...” என்று.
சிகாகோ, ந்யூயார்க்
போன்ற இடங்களில்
பிள்ளைகள் சொல்கிறார்கள்,
”லண்டன், பாரீஸ்
போன்ற இடங்களில்...” என்று.
லண்டன், பாரீஸ்
போன்ற இடங்களில்
பிள்ளைகள் சொல்கிறார்கள்,
”சிகாகோ, ந்யூயார்க்
போன்ற இடங்களில்...” என்று.
7. நான் கனவு காண்பதைத் தொடர்வேன்
என் கனவுகளை எடுத்து
அவற்றை
ஒரு வெண்கலக் குடுவையாக்குவேன்
மையத்தில் அழகான ஒரு சிலையுடன்
வட்டமான நீரூற்றுடன்.
மற்றும் ஓர் உடைந்த மனதுடன்
ஒரு பாடல்.
உன்னைக் கேட்பேன்:
”என் கனவுகளைப்
புரிந்து கொண்டாயா..?”
சில சமயங்களில்
நீ சொல்கிறாய் ஆம் என,
மற்றும்
சில சமயங்களில்
நீ சொல்கிறாய் இல்லை என,
எப்படியாகிலும்
அது நான் பொருட்படுத்தத் தக்கதல்ல.
நான்
கனவு காண்பதைத் தொடர்வேன்.
8. என் மக்கள்.
இரவு அழகானது,
என் மக்களின் முகங்களைப் போல.
நட்சத்திரங்கள் அழகானவை,
என் மக்களின் கண்களைப் போல.
சூரியனும் கூட அழகானது,
என் மக்களின் ஆன்மாக்களும் அழகானவை.
Thursday, August 17, 2017
சோகமயமான கவிதை.
இவ்விரவில் சோகமயமான கவிதையை
நான் எழுத முடியும்.
எழுத, உதாரணமாக:
இரவு நட்சத்திரங்களால் நிறைந்துள்ளது.
மற்றும் நட்சத்திரங்கள் நீலமாய்த் தொலைவில் நடுங்குகின்றன.
இரவில் காற்று ஆகாயத்தில்
பாடிக்கொண்டே சுழல்கின்றது.
(இத்தகைய) இவ்விரவில் சோகமயமான கவிதையை
நான் எழுத முடியும்.
நான் அவளை விரும்பினேன்,
சிலசமயங்களில் அவளும் என்னை விரும்பினாள்.
இது போன்ற இரவுகளில்
நான் அவளை என் கைகளுக்குள் பொத்திக் கொண்டேன்.
முடிவேயில்லாத வானின் கீழே
நான் அவளைப் பலமுறை முத்தமிட்டுள்ளேன்.
அவள் என்னை விரும்பினாள்,
சிலசமயங்களில் நானும் அவளை விரும்பினேன்.
எப்படி அவளுடைய நீளமான நிலைத்த
விழிகளை
நான் விரும்பாமல் இருந்திருக்க முடியும்?
இவ்விரவில் சோகமயமான கவிதையை
நான் எழுத முடியும்.
நான் அவளை (என்னுடன்) வைத்துக் கொண்டிருக்காமல்
இருப்பதை நினைப்பதற்கு.
நான் அவளை இழந்து விட்டதை
உணர்வதற்கு.
மகத்தான இரவைக் கேட்பதற்கு, அவளில்லாமல்
மேலும் மகத்தானதாக ஆன இரவு.
மற்றும் கவிதை ஆத்மாவில் விழுகின்றது,
பனித்துளி புல் மேல் விழுவதைப் போல்.
அவளை என்னுடன் நிறுத்திக் கொள்ளாத என் காதலை
விட, வேறெது பொருட்படுத்தத் தக்கது?
இரவு நட்சத்திரங்களால் நிறைந்துள்ளது,
அவள் என்னுடன் இல்லை.
அவ்வளவு தான்.
தொலைவில் யாரோ பாடுகிறார்கள். வெகு தொலைவில்.
அவளில்லாமல் என் ஆத்மா தொலைந்து விட்டது.
அவளை என்னருகே கொண்டு வந்து விடுவதைப் போல,
என் கண்கள் அவளைத் தேடுகின்றன.
என் இதயம் அவளைத் தேடுகின்றது,
மற்றும்
அவள் என்னுடன் இல்லை.
அதே மரங்களை வெளிச்சப்படுத்துகின்ற
அதே இரவு.
நாங்கள்
யாராக இருந்தோமோ,
அவர்களாக இல்லாமல் போனோம்.
உண்மை,
நான் அவளை இப்போது விரும்பவில்லை தான்..
ஆனால், அவளை நான் எவ்வளவு விரும்பினேன்...!
என் குரல்
அவள் செவிகளைத் தொடுவதற்காகக்
காற்றைத் தேடியது.
வேறு ஒருவருடையவள்.
அவள் வேறு ஒருவருடையவள் ஆவாள்.
ஒருசமயம் என் முத்தங்களுக்கு
உடையவளாய் இருந்தவள் போல்.
அவள் குரல்,
அவள் மெல்லுடல்,
அவளுடைய கரைகாணவியலாக் கண்கள்.
உண்மை,
நான் அவளை இப்போது விரும்பவில்லை தான்..
ஒருவேளை நான் அவளை விரும்புகிறேன்.
காதல் கொண்டது குறைவு மற்றும்
மறதியோ வெகு காலம்.
ஏனென்றால்,
இது போன்ற இரவுகளில்
நான் அவளை என் கைகளில்
கொண்டிருந்தேன்..
அவளில்லாமல் என் ஆத்மா தொலைந்து விட்டது.
இருப்பினும்,
இதுவே அவள் எனக்குத் தரும்
இறுதி வலியாக இருக்கலாம்.
மேலும்,
இதுவே நான் அவளுக்காக எழுதும்
கடைசிக் கவிதையாக இருக்கலாம்.
- பாப்லோ நெருதா.
பாப்லோ நெருதாவின் The Saddest Poem கவிதையை மொழிபெயர்த்தது.
https://www.poemhunter.com/poem/the-saddest-poem/
Save to PDF
Monday, January 19, 2015
கோட்டையின் கூரை மேல்.
(சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின் கண் திறக்கப்பட்ட ஒரு கடிதம்.)
அன்புள்ள அலெக்ஸ்,
தற்கொலை செய்வதைப் போன்ற ஓர் இனிய நினைவு வேறில்லை. அது உடனடியாக மனதில் ஓர் இலகுவை ஏற்படுத்தி விடுகின்றது. வாழ்வின் உவப்பான நேரமாக அது எப்படியோ மாறி விடுகின்றது. பின் இனி நிகழும் எதுவும் இழப்பில்லை என்று தோன்றி விடுகின்றது. இனி எதுவும் துயராக நிகழப் போவதில்லை என்று மகிழ்வு ஏற்படுகின்றது.
இன்று இரவு மற்றுமொரு முறை அதை நினைத்துக் கொண்டேன். உருகி நிறைந்து படிந்த பனி மலைகளைப் போல மெழுகுகள் எரிந்து கொண்டிருந்தன. சின்னச் சுடர் ஒன்று இன்னும் சில மணிகளில் தற்கொலை செய்து கொள்வதை அறியாது ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதன் மென்மையான மஞ்சள் மடியில் நீல தகிப்பு. பாதம் பற்றி எழுந்த பரு உடல் நுனியில் கூர்மை கொண்டு, ஜன்னல் வழியே கசிந்து வந்த குளிர்க்காற்றுக்குத் துடித்து கொண்டிருந்தது.
என் ஜன்னல்களுக்கு வெளியே இந்த டிசம்பர் மாதம் இத்தனை பனிக்கு உள்ளே இந்த நகரம் எப்படித் தான் இயங்குகின்றது என்று ஒவ்வொரு நாளும் வியந்து கொண்டிருப்பேன். பொருக்கு பொருக்கான துகள்களை உதறிக் கொண்டு இளம்பெண்கள் நடந்து செல்வார்கள். மன்னரின் இலச்சினையைப் பதிந்து கொண்ட தோல் தொப்பியை அவ்வப்போது தலைகீழாக்கி அந்த பற்கள் எடுப்பான ட்ரம்பெட் இசைக் கலைஞன் மூன்று மாதங்களுக்குப் பின்னான வசந்தத்தை இப்போதே இசையால் உருக்கிக் கொண்டு அழைத்து வருகின்றான். நீல மணிகளாலான மாலைகள் சிலவற்றை அணிந்து கொண்டு இள நங்கையர் பனியால் மங்கலான தெரு விளக்குகளின் கீழே நின்று, அன்றைய வயிற்றுக்காக மேல் சட்டையின் இரு பொத்தான்களைத் திறந்து வைத்து, ஈரம் படியும் மென்மார்புகளைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாரட் ஒன்று வருகின்றது. இறுக்கப் போர்த்திய கண்ணாடிக் கூண்டுக்குள் கோழிக்குஞ்சுகளைப் போல் ஒரு சிறுவனும் சிறுமியும் கண்ணாடிகளில் முகங்கள் பதிய சாலையை வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்கள் தெற்குப் பிரதேசத்திலிருந்து வந்திருக்க வேண்டும். பழுக்கத் துவங்கியிருந்த சுருண்ட மயிர்கள் அவர்களுடைய களங்கமற்ற முகத்தில் இன்னும் களங்கமற்ற சிரிப்புடன் நிறைந்திருந்தன.
மதுச்சாலையில் மூன்று பேர் இன்னும் தங்களை மூழ்கடிக்காத திரவத்தின் முன் இறைஞ்சி கொண்டிருந்தார்கள். இழுத்துக் கட்டிய பூட்சு கால்களைக் கவ்வி பிடித்திழுக்கத் தங்களை இன்னும் பூமியிலேயே தக்க வைக்க வேண்டி, ஒருவரையொருவர் கைகோர்த்துக் கொண்டு போலன்ஸ்கியின் பாடலை உரக்கப் பாடினார்கள்.
போலன்ஸ்கியை நீ அறிவாய் தானே? நம் பள்ளிக் காலத்தில் கட்டாய ராணுவப் பயிற்சியில் இரவுகளில் எரியும் தீ முன் வட்டமாய் அமர்ந்து சேர்ந்து பாடுவோம் அவன் பாடல்களை. அவனுடைய தேசப் பாடல்களை.
"கூறுவோம் நம் தேசமே..
யாவிலும் பெரிதென்றே.."
என்று தொடங்கும் அவனுடைய பிரபலமான பாடல் பயிற்சியின் ஒவ்வொரு இரவிலும் இறுதிப் பாடலாக ஒலிக்கும்.
அவனுடைய பிரபலமான பாடல், "ஆதலினால் நாமெல்லாம் வாழ்த்துவோம் மன்னரையே..!" என்று முடியும்.
நம் கண்காணிப்பாளர், ரகசியமாகக் கிடைத்த வோட்காவைப் போன்ற பானத்தை அருந்தி விட்டு களிவெறியில் மிதக்கத் துவங்குகையில், நாம் போலன்ஸ்கியின் காதல் பாடல்களைப் பாடுவோம். உண்மையில் அவை காதல் பாடல்கள் தானா? தன் சிறுவயதில் முகத்தில் பிசிறடித்த பருக்கள் பதிந்த காலங்களில் அவன் கண்டு உடனே தொலைத்த ஒரு பெண்ணைப் பற்றி அல்லவா அவன் வாழ்நாளெல்லாம் பாடி அலைந்தான். அவளுக்கு இவனைப் பார்த்த ஞாபகமே இருந்திருக்காது. செயிண்ட் பால் தேவாலயத்தில் ஒரு சீமாட்டி போல் மனமகிழ்வோடு வந்திறங்கிய ஒரு பெண் அவள். இவன் கண்ட நொடிநுனியிலேயே விழுந்தான். அவன் இதயத்திலே முதல் முதலாக ஒரு தனி உணர்வு எழுந்து படர்ந்தது.
"பைன் மரங்களின் வரிசைகள் தொலைவினிலே..
பனி நிறை முகடுகள் தொலைவினிலே...
மழை சுமக்கும் முகில்களின் சூல்போலே
எல்லோராலும் விரும்பப்படுபவள் வந்தாளே..
சைபீரிய மான்களின் தோல்போலே
முழுதுமணிந்த உடைகளாலே...
எல்லாம் மறைந்து கிடந்தனவே...
புன்னகை மறைக்க மறந்தனவே..
அவள் கண்கள் நதியில் சுழல்போலே
தொட எண்ணி நினைத்தும் பயந்தனரே..
அவள் கரம் இரவில் துயர்போலே
அனைவரும் அறிவரே, பகிர முடியாதே...!"
எத்தனை பாடல்கள்..! எத்தனை தருணங்கள்..! அத்தனையிலும் அவன் அவளைத்தானே நினைத்துக் கொண்டான்!
நீல வானம் வெகு தொலைவில் எங்கோ நின்று கொண்டிருக்கும். ஆங்காங்கே வைரத்தை தொட்டு வைத்தது போல் சுடர்ந்து சுடர்ந்து அடங்கும் நட்சத்திரங்கள். கருநீலமோ கருப்பே தானோ பேதம் தெரியாத மலைச் சிகரங்களும் மலைத்தொடர் மடிப்புகளும் திசைகளெங்கும் நம்மைச் சூழ்ந்திருக்கும். கனத்த போர்வைகளுக்குள் நம்மை அமிழ்த்திக் கொள்ளும் முன் நாம் எல்லோரும் போலன்ஸ்கியின் அதே துயரத்தை நம் நெஞ்சில் தாங்கிக் கொண்டு, கண்ணீர் விட்டு அழுதவாறே கலைவோம்.
போலன்ஸ்கியும் தற்கொலை தானே செய்து கொண்டான். குதிரைகளைப் பயிற்றுவிக்கும் பயிற்சிக் கூடத்தில் கருஞ் சோளக்கதிர்கள் போன்ற சிகைகள் பறக்க விரைந்து ஓடிய கறுப்புக் குதிரை ஒன்றைத் தழுவ முயன்று, அது பிடிப்பின்றி அவன் மேலேயே சரிந்து, உயிரை விட்டான். அவனுடைய காதலும் அப்படித்தானே அவன் மேல் அவன் வாழ்வெல்லாம் சரிந்து கிடந்தது. குதிரைக்கு இணையாக ஓடும் முன் அவன் உரக்கக் கூவினான். "அவள் வந்து விட்டாள்... வந்து விட்டாள்..."
மதுச்சாலையின் அந்த மூன்று மனிதர்களும் கைகோர்த்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வரும் போது தங்களை போலன்ஸ்கியாக நினைத்துக் கொள்வதைக் காண்கிறேன். அவர்களில் ஒருவன் பாடி அழுது கொண்டிருந்தான். ஒருவன் பாடி சிரித்து கொண்டிருந்தான். இறுதியானவன் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்து கொண்டே பாடிக் கொண்டிருந்தான். "வானிலே தேவனும் அவன் மடியில் பிள்ளைகளும்" என்ற போலன்ஸ்கியின் பாடலை அவர்கள் பாடியதைக் கேட்க முடிந்தது.
இன்று இரவு நானும் அவனைப் போல தற்கொலை செய்து கொண்டு, கிளம்பி விடுவது என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். முடிவெடுத்தவுடனே வாழ்க்கை இனிப்பாகி விட்டது போல் தோன்றுகின்றது. இனி ஒவ்வொரு நொடியும் விதிகள் எதுவும் எனக்கில்லை. மலையடிவார இடுக்கில் தன்னைக் கொண்டே துளைத்துத் துளைத்துத் தனக்கான பாதையை உருவாக்கிக் கொள்ளும் புழுக்களைப் போலே, தம் விதிகளை உருவாக்கிக் கொண்டு அவற்றின் மூலமே தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் மானுட வாழ்வு, இனி எனக்கு இந்த இரவில் மட்டுமே என்று எண்ணுகையில் பெருமகிழ்வு மனதில் பிறக்கின்றது.
இனி இடுங்கிக் கொண்டு செல்லும் வாழ்வு எனக்கில்லை; சொதசொதவென ஈரம் முயங்கும் துக்கங்களும் எனக்கில்லை; சங்கிலிக் கணுக்களின் கூர்நுனிகள் செருகி திசைகளெங்கும் இழுபட்டு குருதி கசிந்தொழுகும் கண்ணீரும் எனக்கில்லை. அனைத்திலிருந்தும் விடுதலை; அனைவரிடமிருந்தும் விடுதலை;
தற்கொலை செய்வதைப் போன்ற ஓர் இனிய நினைவு வேறில்லை. அது உடனடியாக மனதில் ஓர் இலகுவை ஏற்படுத்தி விடுகின்றது. வாழ்வின் உவப்பான நேரமாக அது எப்படியோ மாறி விடுகின்றது. பின் இனி நிகழும் எதுவும் இழப்பில்லை என்று தோன்றி விடுகின்றது. இனி எதுவும் துயராக நிகழப் போவதில்லை என்று மகிழ்வு ஏற்படுகின்றது.
இன்று இரவு மற்றுமொரு முறை அதை நினைத்துக் கொண்டேன். உருகி நிறைந்து படிந்த பனி மலைகளைப் போல மெழுகுகள் எரிந்து கொண்டிருந்தன. சின்னச் சுடர் ஒன்று இன்னும் சில மணிகளில் தற்கொலை செய்து கொள்வதை அறியாது ஒளிர்ந்து கொண்டிருந்தது. அதன் மென்மையான மஞ்சள் மடியில் நீல தகிப்பு. பாதம் பற்றி எழுந்த பரு உடல் நுனியில் கூர்மை கொண்டு, ஜன்னல் வழியே கசிந்து வந்த குளிர்க்காற்றுக்குத் துடித்து கொண்டிருந்தது.
என் ஜன்னல்களுக்கு வெளியே இந்த டிசம்பர் மாதம் இத்தனை பனிக்கு உள்ளே இந்த நகரம் எப்படித் தான் இயங்குகின்றது என்று ஒவ்வொரு நாளும் வியந்து கொண்டிருப்பேன். பொருக்கு பொருக்கான துகள்களை உதறிக் கொண்டு இளம்பெண்கள் நடந்து செல்வார்கள். மன்னரின் இலச்சினையைப் பதிந்து கொண்ட தோல் தொப்பியை அவ்வப்போது தலைகீழாக்கி அந்த பற்கள் எடுப்பான ட்ரம்பெட் இசைக் கலைஞன் மூன்று மாதங்களுக்குப் பின்னான வசந்தத்தை இப்போதே இசையால் உருக்கிக் கொண்டு அழைத்து வருகின்றான். நீல மணிகளாலான மாலைகள் சிலவற்றை அணிந்து கொண்டு இள நங்கையர் பனியால் மங்கலான தெரு விளக்குகளின் கீழே நின்று, அன்றைய வயிற்றுக்காக மேல் சட்டையின் இரு பொத்தான்களைத் திறந்து வைத்து, ஈரம் படியும் மென்மார்புகளைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாரட் ஒன்று வருகின்றது. இறுக்கப் போர்த்திய கண்ணாடிக் கூண்டுக்குள் கோழிக்குஞ்சுகளைப் போல் ஒரு சிறுவனும் சிறுமியும் கண்ணாடிகளில் முகங்கள் பதிய சாலையை வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்கள் தெற்குப் பிரதேசத்திலிருந்து வந்திருக்க வேண்டும். பழுக்கத் துவங்கியிருந்த சுருண்ட மயிர்கள் அவர்களுடைய களங்கமற்ற முகத்தில் இன்னும் களங்கமற்ற சிரிப்புடன் நிறைந்திருந்தன.
மதுச்சாலையில் மூன்று பேர் இன்னும் தங்களை மூழ்கடிக்காத திரவத்தின் முன் இறைஞ்சி கொண்டிருந்தார்கள். இழுத்துக் கட்டிய பூட்சு கால்களைக் கவ்வி பிடித்திழுக்கத் தங்களை இன்னும் பூமியிலேயே தக்க வைக்க வேண்டி, ஒருவரையொருவர் கைகோர்த்துக் கொண்டு போலன்ஸ்கியின் பாடலை உரக்கப் பாடினார்கள்.
போலன்ஸ்கியை நீ அறிவாய் தானே? நம் பள்ளிக் காலத்தில் கட்டாய ராணுவப் பயிற்சியில் இரவுகளில் எரியும் தீ முன் வட்டமாய் அமர்ந்து சேர்ந்து பாடுவோம் அவன் பாடல்களை. அவனுடைய தேசப் பாடல்களை.
"கூறுவோம் நம் தேசமே..
யாவிலும் பெரிதென்றே.."
என்று தொடங்கும் அவனுடைய பிரபலமான பாடல் பயிற்சியின் ஒவ்வொரு இரவிலும் இறுதிப் பாடலாக ஒலிக்கும்.
அவனுடைய பிரபலமான பாடல், "ஆதலினால் நாமெல்லாம் வாழ்த்துவோம் மன்னரையே..!" என்று முடியும்.
நம் கண்காணிப்பாளர், ரகசியமாகக் கிடைத்த வோட்காவைப் போன்ற பானத்தை அருந்தி விட்டு களிவெறியில் மிதக்கத் துவங்குகையில், நாம் போலன்ஸ்கியின் காதல் பாடல்களைப் பாடுவோம். உண்மையில் அவை காதல் பாடல்கள் தானா? தன் சிறுவயதில் முகத்தில் பிசிறடித்த பருக்கள் பதிந்த காலங்களில் அவன் கண்டு உடனே தொலைத்த ஒரு பெண்ணைப் பற்றி அல்லவா அவன் வாழ்நாளெல்லாம் பாடி அலைந்தான். அவளுக்கு இவனைப் பார்த்த ஞாபகமே இருந்திருக்காது. செயிண்ட் பால் தேவாலயத்தில் ஒரு சீமாட்டி போல் மனமகிழ்வோடு வந்திறங்கிய ஒரு பெண் அவள். இவன் கண்ட நொடிநுனியிலேயே விழுந்தான். அவன் இதயத்திலே முதல் முதலாக ஒரு தனி உணர்வு எழுந்து படர்ந்தது.
"பைன் மரங்களின் வரிசைகள் தொலைவினிலே..
பனி நிறை முகடுகள் தொலைவினிலே...
மழை சுமக்கும் முகில்களின் சூல்போலே
எல்லோராலும் விரும்பப்படுபவள் வந்தாளே..
சைபீரிய மான்களின் தோல்போலே
முழுதுமணிந்த உடைகளாலே...
எல்லாம் மறைந்து கிடந்தனவே...
புன்னகை மறைக்க மறந்தனவே..
அவள் கண்கள் நதியில் சுழல்போலே
தொட எண்ணி நினைத்தும் பயந்தனரே..
அவள் கரம் இரவில் துயர்போலே
அனைவரும் அறிவரே, பகிர முடியாதே...!"
எத்தனை பாடல்கள்..! எத்தனை தருணங்கள்..! அத்தனையிலும் அவன் அவளைத்தானே நினைத்துக் கொண்டான்!
நீல வானம் வெகு தொலைவில் எங்கோ நின்று கொண்டிருக்கும். ஆங்காங்கே வைரத்தை தொட்டு வைத்தது போல் சுடர்ந்து சுடர்ந்து அடங்கும் நட்சத்திரங்கள். கருநீலமோ கருப்பே தானோ பேதம் தெரியாத மலைச் சிகரங்களும் மலைத்தொடர் மடிப்புகளும் திசைகளெங்கும் நம்மைச் சூழ்ந்திருக்கும். கனத்த போர்வைகளுக்குள் நம்மை அமிழ்த்திக் கொள்ளும் முன் நாம் எல்லோரும் போலன்ஸ்கியின் அதே துயரத்தை நம் நெஞ்சில் தாங்கிக் கொண்டு, கண்ணீர் விட்டு அழுதவாறே கலைவோம்.
போலன்ஸ்கியும் தற்கொலை தானே செய்து கொண்டான். குதிரைகளைப் பயிற்றுவிக்கும் பயிற்சிக் கூடத்தில் கருஞ் சோளக்கதிர்கள் போன்ற சிகைகள் பறக்க விரைந்து ஓடிய கறுப்புக் குதிரை ஒன்றைத் தழுவ முயன்று, அது பிடிப்பின்றி அவன் மேலேயே சரிந்து, உயிரை விட்டான். அவனுடைய காதலும் அப்படித்தானே அவன் மேல் அவன் வாழ்வெல்லாம் சரிந்து கிடந்தது. குதிரைக்கு இணையாக ஓடும் முன் அவன் உரக்கக் கூவினான். "அவள் வந்து விட்டாள்... வந்து விட்டாள்..."
மதுச்சாலையின் அந்த மூன்று மனிதர்களும் கைகோர்த்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வரும் போது தங்களை போலன்ஸ்கியாக நினைத்துக் கொள்வதைக் காண்கிறேன். அவர்களில் ஒருவன் பாடி அழுது கொண்டிருந்தான். ஒருவன் பாடி சிரித்து கொண்டிருந்தான். இறுதியானவன் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்து கொண்டே பாடிக் கொண்டிருந்தான். "வானிலே தேவனும் அவன் மடியில் பிள்ளைகளும்" என்ற போலன்ஸ்கியின் பாடலை அவர்கள் பாடியதைக் கேட்க முடிந்தது.
இன்று இரவு நானும் அவனைப் போல தற்கொலை செய்து கொண்டு, கிளம்பி விடுவது என்று முடிவு செய்து வைத்திருக்கிறேன். முடிவெடுத்தவுடனே வாழ்க்கை இனிப்பாகி விட்டது போல் தோன்றுகின்றது. இனி ஒவ்வொரு நொடியும் விதிகள் எதுவும் எனக்கில்லை. மலையடிவார இடுக்கில் தன்னைக் கொண்டே துளைத்துத் துளைத்துத் தனக்கான பாதையை உருவாக்கிக் கொள்ளும் புழுக்களைப் போலே, தம் விதிகளை உருவாக்கிக் கொண்டு அவற்றின் மூலமே தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் மானுட வாழ்வு, இனி எனக்கு இந்த இரவில் மட்டுமே என்று எண்ணுகையில் பெருமகிழ்வு மனதில் பிறக்கின்றது.
இனி இடுங்கிக் கொண்டு செல்லும் வாழ்வு எனக்கில்லை; சொதசொதவென ஈரம் முயங்கும் துக்கங்களும் எனக்கில்லை; சங்கிலிக் கணுக்களின் கூர்நுனிகள் செருகி திசைகளெங்கும் இழுபட்டு குருதி கசிந்தொழுகும் கண்ணீரும் எனக்கில்லை. அனைத்திலிருந்தும் விடுதலை; அனைவரிடமிருந்தும் விடுதலை;
Friday, December 28, 2012
...மற்றும் சில லிமெரிக்குகள்.
பறந்த பறவையை விலகி ஒரு சிறகு
மிதந்த காற்றுடன் அதற்கோர் உறவு
நீரில் நிழல் போல நீந்தி
வெளியின் நுண் கரங்கள் ஏந்தி
நிலம் தொட்ட சில நாளில் ஆனது ஒரு சருகு.
***
நிழல் கரும் இருளின் தூதன்
நீங்காமல் வரும் உடலின் மீதன்
ஒளி தடவினால் தெரியும்
எதிர்த் திசையிலே சரியும்
அருகாமை விளக்கடியில் பூதன்.
***
மேகம் தொட்டு ஒளிர்ந்தது ஒரு மின்னல்
முட்டி மோதிச் சுழன்றது மின் பின்னல்
தெருவெல்லாம் நீராகும்
செம்பழுப்புச் சேறாகும்
முன்னம் அடைந்தன சில ஜன்னல்.
***
போகாத பாதை காணாத காட்சி
பார்த்தபின் எதற்கு மனை மாட்சி
கேள்விகள் பிறந்தன
கதவுகள் திறந்தன
புத்தனாய் ஆனபின் சொன்னது மீட்சி.
***
சமுத்திரப் பேரொலி சிறு சங்கில் கேட்கும்
சாம்ராஜ்ய சந்தோஷம் வங்கில் கேட்கும்
ஈராயிரப் பண்பாடு
ஈந்த ஈந்த நற்பாடு
குறளெனும் இருவரிச் சொல்லில் கேட்கும்.
வங்கு :: பெருச்சாளி பூமியில் பறித்து வசிக்குமிடம்.
ஒரு sevenling:
ஆகாயத்தில் மிதக்கின்றன
நிலா, வலசைப் பறவைகள்
ஒரு உள்நாட்டு விமானம்.
கைகளில் கவிதைக் காகிதம்,
வரவேற்புப் பூங்கொத்து,
கடன் விவரங்கள்.
எது முதலில் விழுமோ?
Tuesday, September 22, 2009
செவன்லிங், சிட்ஜோ.
மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னலோரம் நிற்கிறேன்.
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறுமேகம் போலே மிதக்கிறேன்.
ஓடும் காலங்கள்.
அன்னா அக்மாதொவா என்ற இரஷ்ய கவிஞர் உருவாக்கிய கவிதை வடிவம் செவன்லிங்.
இதில் மொத்தம் ஏழு வரிகள் இருக்கும். சில விதிகள் இருக்கின்றன. இரண்டு பகுதிகளாக எழுதப்பட வேண்டும். கடைசியாக ஒரு வரி வர வேண்டும். முதல் மற்றும் இரண்டாம் பாராக்கள் மூன்று வரிகளில் மட்டுமே இருக்க வேண்டும். சிறப்பம்சம் என்னவென்றால், முதல் பாராவில் மூன்று பொருட்கள்/ மூன்று உணர்வுகள்.. ஏதேனும் மூன்று தொடர்பான விஷயங்கள் வர வேண்டும். இரண்டாம் பாராவிலும் ஏதேனும் தொடர்பான மூன்று வர வேண்டும். ஆனால் முதல் பாராவில் வரும் மூன்று விஷயங்களும், இரண்டாம் பாராவில் வரும் மூன்று விஷயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருப்பது சிறப்பு. கடைசி வரி இரண்டு பாராக்களுக்கும் சம்பந்தமேயில்லாமல் இருப்பது நலம். முக்கிய நிபந்தனை, எழாவது வரியோடு கவிதை முற்றுப் பெற்று விடக்கூடாது. இன்னும் கதை இருக்கின்றது என்பதைப் படிப்பவர் மனதில் ஏற்படுத்துமாறு எழுத வேண்டும். இதில் ஆங்காங்கே எதுகை, மோனைகள் வந்தால் எழில் கூடும்.
ஏழு வரிகள் வருவதால் இது செவன்லிங் எனப்படுகிறது. நாம் தமிழில் என்ன சொல்லலாம்? நான் 'ஏழ்வரி' முன் வைக்கிறேன். வேறு அழகான வார்த்தை கிடைத்தால் சொல்லுங்கள்.
ஓர் அழகான ஏழ்வரி :
அவன் மூன்றை மட்டும் விரும்பினான்:
வெண் மயில்கள், ஈவென்சாங்,
அமெரிக்காவின் பழைய வரைபடங்கள்.
குழந்தைகள் அழுவதையும்,
செர்ரி ஜாமுடன் தேயிலை குடிப்பதையும்,
பெண்ணின் கத்தலையும் வெறுத்தான்.
...மற்றும் அவன் என்னை மணந்து கொண்டான்.
மேற்கண்ட கவிதை மேற்கண்ட அம்மணியின் கவிதை.
அவன் பையில் இருந்தது, இங்க் பேனா,
ஐநூறு ரூபாய் நோட்டு,
டி.பி. மருந்துச் சீட்டு.
என் கையில் பேனாக் கத்தி,
ஆக்ஸா ப்ளேடு,
ஆசிட் முட்டை.
தியேட்டரில் கரண்ட் போனது.
http://en.wikipedia.org/wiki/Sevenling
http://en.wikipedia.org/wiki/Anna_Akhmatova
சிட்ஜோ என்பது கொரியக் கவிதை வடிவம்.
மூன்றே வரிகள். ஒவ்வொரு வரிக்கும் 14 - 16 அசைகள் வரலாம். முதல் வரியில் ஒர் காட்சியை அறிமுகப்படுத்துவது; இரண்டாம் வரியில் அதனை விரிவுபடுத்துவது; மூன்றாம் வரியின் முதல் பாதியில் ஒரு திருப்பம் வைத்து, மறு பாதியில் கவிதையை முடித்து விடுவது. ஒரு திரைக்கதையினை எழுத வேண்டிய முறை இது. ஒவ்வொரு வரிக்கும் அசை எண்ணிகையையும் தெளிவாக குறித்து வைத்து விட்டார்கள்.
முதல் வரி : 3, 4, 4,4
இரண்டாம் வரி : 3, 4, 4, 4
மூன்றாம் வரியின் முதல் பகுதி: 3, 5
மூன்றாம் வரியின் இரண்டாம் பகுதி: 4, 3
U Tak (1262–1342) எழுதிய ஓர் அற்புதமான சிட்ஜோ :
பின்பனிக்காலக் காற்று மலைகளின் பனியை உருக்கி உடனே மறைய வைத்து விடுகிறது.
கொஞ்சம் அதை வாங்கி என் தலைமுடி மேல் வீசச் செய்ய விரும்புகிறேன்.
என் காதுகளின் மேல் தேங்கியிருக்கும் முதுமையின் பனியை உருகச் செய்வதற்காக!
மொழிபெயர்ப்பில் நிறைய அசைகள் ஆகி விட்டன. கொரிய எழுத்தில் சரியாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
http://en.wikipedia.org/wiki/Sijo
The Bamboo Grove
***
கூகுள் செல்லுங்கள். how என்று டைப் அடித்து விட்டு, கூகுள் சஜஷன்ஸ் முதலில் என்ன தருகின்றதென்றால்,

முதல் கேள்விக்கு கூகுளில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டுமா?
மழை தூறும் காலம்
என் ஜன்னலோரம் நிற்கிறேன்.
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறுமேகம் போலே மிதக்கிறேன்.
ஓடும் காலங்கள்.
அன்னா அக்மாதொவா என்ற இரஷ்ய கவிஞர் உருவாக்கிய கவிதை வடிவம் செவன்லிங்.
இதில் மொத்தம் ஏழு வரிகள் இருக்கும். சில விதிகள் இருக்கின்றன. இரண்டு பகுதிகளாக எழுதப்பட வேண்டும். கடைசியாக ஒரு வரி வர வேண்டும். முதல் மற்றும் இரண்டாம் பாராக்கள் மூன்று வரிகளில் மட்டுமே இருக்க வேண்டும். சிறப்பம்சம் என்னவென்றால், முதல் பாராவில் மூன்று பொருட்கள்/ மூன்று உணர்வுகள்.. ஏதேனும் மூன்று தொடர்பான விஷயங்கள் வர வேண்டும். இரண்டாம் பாராவிலும் ஏதேனும் தொடர்பான மூன்று வர வேண்டும். ஆனால் முதல் பாராவில் வரும் மூன்று விஷயங்களும், இரண்டாம் பாராவில் வரும் மூன்று விஷயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருப்பது சிறப்பு. கடைசி வரி இரண்டு பாராக்களுக்கும் சம்பந்தமேயில்லாமல் இருப்பது நலம். முக்கிய நிபந்தனை, எழாவது வரியோடு கவிதை முற்றுப் பெற்று விடக்கூடாது. இன்னும் கதை இருக்கின்றது என்பதைப் படிப்பவர் மனதில் ஏற்படுத்துமாறு எழுத வேண்டும். இதில் ஆங்காங்கே எதுகை, மோனைகள் வந்தால் எழில் கூடும்.
ஏழு வரிகள் வருவதால் இது செவன்லிங் எனப்படுகிறது. நாம் தமிழில் என்ன சொல்லலாம்? நான் 'ஏழ்வரி' முன் வைக்கிறேன். வேறு அழகான வார்த்தை கிடைத்தால் சொல்லுங்கள்.
ஓர் அழகான ஏழ்வரி :
அவன் மூன்றை மட்டும் விரும்பினான்:
வெண் மயில்கள், ஈவென்சாங்,
அமெரிக்காவின் பழைய வரைபடங்கள்.
குழந்தைகள் அழுவதையும்,
செர்ரி ஜாமுடன் தேயிலை குடிப்பதையும்,
பெண்ணின் கத்தலையும் வெறுத்தான்.
...மற்றும் அவன் என்னை மணந்து கொண்டான்.
மேற்கண்ட கவிதை மேற்கண்ட அம்மணியின் கவிதை.
அவன் பையில் இருந்தது, இங்க் பேனா,
ஐநூறு ரூபாய் நோட்டு,
டி.பி. மருந்துச் சீட்டு.
என் கையில் பேனாக் கத்தி,
ஆக்ஸா ப்ளேடு,
ஆசிட் முட்டை.
தியேட்டரில் கரண்ட் போனது.
http://en.wikipedia.org/wiki/Sevenling
http://en.wikipedia.org/wiki/Anna_Akhmatova
சிட்ஜோ என்பது கொரியக் கவிதை வடிவம்.
மூன்றே வரிகள். ஒவ்வொரு வரிக்கும் 14 - 16 அசைகள் வரலாம். முதல் வரியில் ஒர் காட்சியை அறிமுகப்படுத்துவது; இரண்டாம் வரியில் அதனை விரிவுபடுத்துவது; மூன்றாம் வரியின் முதல் பாதியில் ஒரு திருப்பம் வைத்து, மறு பாதியில் கவிதையை முடித்து விடுவது. ஒரு திரைக்கதையினை எழுத வேண்டிய முறை இது. ஒவ்வொரு வரிக்கும் அசை எண்ணிகையையும் தெளிவாக குறித்து வைத்து விட்டார்கள்.
முதல் வரி : 3, 4, 4,4
இரண்டாம் வரி : 3, 4, 4, 4
மூன்றாம் வரியின் முதல் பகுதி: 3, 5
மூன்றாம் வரியின் இரண்டாம் பகுதி: 4, 3
U Tak (1262–1342) எழுதிய ஓர் அற்புதமான சிட்ஜோ :
பின்பனிக்காலக் காற்று மலைகளின் பனியை உருக்கி உடனே மறைய வைத்து விடுகிறது.
கொஞ்சம் அதை வாங்கி என் தலைமுடி மேல் வீசச் செய்ய விரும்புகிறேன்.
என் காதுகளின் மேல் தேங்கியிருக்கும் முதுமையின் பனியை உருகச் செய்வதற்காக!
மொழிபெயர்ப்பில் நிறைய அசைகள் ஆகி விட்டன. கொரிய எழுத்தில் சரியாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
http://en.wikipedia.org/wiki/Sijo
The Bamboo Grove
***
கூகுள் செல்லுங்கள். how என்று டைப் அடித்து விட்டு, கூகுள் சஜஷன்ஸ் முதலில் என்ன தருகின்றதென்றால்,
முதல் கேள்விக்கு கூகுளில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டுமா?
Tuesday, May 12, 2009
கவிதை செய்யலாம் - தங்க வரி.
சென்ற பகுதியில் லிமெரிக் பற்றி எழுதும் போது, ஒன்று சொல்ல மறந்து விட்டேன். இன்று இரவு தமிழ்ப்பறவையிடம் பேசும் போது தான் நினைவுக்கு வந்தது.
மயிலை அண்ணன் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ அவர்களின் 'காதுல பூ' நாடகத்தில் ஒரு வசனம். மேலோகத்திற்கு சினிமாப் பாடலாசிரியரை இழுத்துச் சென்று விடுவார்கள். அங்கே அவர் எமனிடம் ஒரு பாடல் பாடுவார். பாருங்களேன்.
ரத்தத்தின் நிறமோ சிகப்பு.
பாலின் நிறமோ வெளுப்பு.
கடல் நீர் என்றும் கரிக்கும்.
சர்க்கரையோ என்றென்றும் இனிக்கும்.
இதுதான் ஆண்டவனின் படைப்பு.
கொஞ்சமாய்ச் சாயம் போன லிமெரிக் சாயல் தெரியவில்லை..?
தங்க வரி (Golden Line)
இன்று லத்தீன் இலக்கியத்தின் ஒரு வகையான 'தங்க வரி' முறையைக் காண்போம். இதற்கு அடிப்பொடிகளாக வெள்ளி வரி, வெண்கல வரி என்றெல்லாம் வைத்திருக்கிறார்கள். நாம் மாதிரிக்கு இந்த குடும்பத்தில் தங்க வரியை மட்டும் பார்த்து விட்டு ஜூட் சொல்லிடுவோம்.
ஒரு வரி. மொத்தம் ஐந்து வார்த்தைகள். 1, 2 வார்த்தைகள் பண்புகளாகவும் (adjectives), 4,5 பண்புகளுக்கு உரிய பொருட்களாகவும் (nouns), 3 வினைசொல்லாகவும் (verb) வர வேண்டும். 1வது வார்த்தைப் பண்பு 4வது பொருளுக்கு உரியதாகவும், 2வது வார்த்தைப் பண்பு 5வது பொருளுக்குரியதாகவும் வர வேண்டும். முக்கியமான கொக்கி ஒன்று இருக்கிறது. 1,3 வார்த்தைகள் ஒரு ரிதத்திலும், 2, 5 வார்த்தைகள் ஒரு ரிதத்திலும் இருக்க வேண்டுமாம்.
அவ்வளவு தான் சார்.
இந்த வரையறை 1652-ல் லத்தீன் இலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது ரொம்ப பழைய ஒன்று. ஆங்கிலக் குழந்தைகள் லத்தீன் படிக்கும் போது, அவர்களுக்கு பள்ளியில் எப்படி சொல்லித் தரப்படுகிறதோ அப்படியே எழுதுகிறார்கள் என்கிறார்கள். காரணம் ஒரு தெளிவான வரையறை இல்லாமல், பண்புகள் மட்டும் அல்ல, வேறு சில இலக்கணத்தனங்களையும் உபயோகப்படுத்திச் செய்கிறார்கள்.
Lurida terribiles miscent aconita novercae. (Ovid, Metamorphoses 1.147)
Pendula flaventem pingebat bractea crinem.
இதில்,
Pendula bractea
flaventem crinem
என்று ஓர் ஒத்திசைவாய் ஒலிப்பதைக் கேளுங்கள்.
aurea purpuream subnectit fibula vestem,
இதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால், 'golden purple bound clasp cloak' என்று வருகிறது. புரிகின்ற மொழிபெயர்ப்பு, 'a golden clasp bound her purple cloak'.
சரி, அப்படியே 1652 இத்தாலியில் இருந்து ஒரு மெகா ஜம்ப் அடித்து, 15வது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கின்ற நாட்டிற்குள் குதிப்போம்.
இந்த வரையறையை வைத்துக் கொண்டு தமிழில் முயற்சித்தால்...?
சிக்கல் என்ன?
நம் வாக்கிய அமைப்பில் பெரும்பாலும் வினைச்சொல் வாக்கியத்தின் நடுவில் வராது. ஆனால் நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்வோம். புதுக்கவிதைகள் மாதிரி.
ஓர் உதாரணம் பார்ப்போம்.
ஏழுநிறங்களின் நீலநிறத்தில் விழுந்தன வானவில்லின் துளிகள்!
இதற்குத் தலைப்பு என்ன வைக்கலாம்..? வேறு என்ன..? கவிஞர்களின் நிரந்தர இரண்டாம் காதலியான மழை தான். (முதல் நிலா!)
ஏழுநிறங்களின் வானவில்லின் - முடிவில் ஒத்திசைவு
நீலநிறத்தில் துளிகள் - முடிவில் ஒத்திசைவு
நமக்கு தான் எதுகை மோனை என்றெல்லாம் வசதிகள் இருக்கின்றனவே! அவற்றையும் உபயோகப்படுத்தி ரிதமிக்கை இன்னும் எளிமையாக அழகாக கொண்டு வர முடியும் என்று படுகின்றது. தமிழுக்கு ஏற்றவாறு கொண்டு வரும் போது கொஞ்சம் வேட்டியை லூஸ் செய்து கொள்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
மற்றொன்று,
பழுப்பான கசப்பாக ஊற்றினேன் மதுபானத்தின் ரசம்.
பழுப்பான மதுபான - முடிவில் ஒத்திசைவு
கசப்பாக ரசம் - எதுகை
இன்னும் கொஞ்சம் யோசித்து எழுதினால் ஏறக்குறைய குறள் வெண்பாவுக்கு பக்கத்தில் கொண்டு போய் விடலாம்.
நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.
நன்றி :
http://en.wikipedia.org/wiki/Golden_line
***
இத்தாலி என்றதும் காலத்தால் கரையாத ஒரு படத்தின் நினைவு வந்தது. அதன் தீம் இசை.
மயிலை அண்ணன் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ அவர்களின் 'காதுல பூ' நாடகத்தில் ஒரு வசனம். மேலோகத்திற்கு சினிமாப் பாடலாசிரியரை இழுத்துச் சென்று விடுவார்கள். அங்கே அவர் எமனிடம் ஒரு பாடல் பாடுவார். பாருங்களேன்.
ரத்தத்தின் நிறமோ சிகப்பு.
பாலின் நிறமோ வெளுப்பு.
கடல் நீர் என்றும் கரிக்கும்.
சர்க்கரையோ என்றென்றும் இனிக்கும்.
இதுதான் ஆண்டவனின் படைப்பு.
கொஞ்சமாய்ச் சாயம் போன லிமெரிக் சாயல் தெரியவில்லை..?
தங்க வரி (Golden Line)
இன்று லத்தீன் இலக்கியத்தின் ஒரு வகையான 'தங்க வரி' முறையைக் காண்போம். இதற்கு அடிப்பொடிகளாக வெள்ளி வரி, வெண்கல வரி என்றெல்லாம் வைத்திருக்கிறார்கள். நாம் மாதிரிக்கு இந்த குடும்பத்தில் தங்க வரியை மட்டும் பார்த்து விட்டு ஜூட் சொல்லிடுவோம்.
ஒரு வரி. மொத்தம் ஐந்து வார்த்தைகள். 1, 2 வார்த்தைகள் பண்புகளாகவும் (adjectives), 4,5 பண்புகளுக்கு உரிய பொருட்களாகவும் (nouns), 3 வினைசொல்லாகவும் (verb) வர வேண்டும். 1வது வார்த்தைப் பண்பு 4வது பொருளுக்கு உரியதாகவும், 2வது வார்த்தைப் பண்பு 5வது பொருளுக்குரியதாகவும் வர வேண்டும். முக்கியமான கொக்கி ஒன்று இருக்கிறது. 1,3 வார்த்தைகள் ஒரு ரிதத்திலும், 2, 5 வார்த்தைகள் ஒரு ரிதத்திலும் இருக்க வேண்டுமாம்.
அவ்வளவு தான் சார்.
இந்த வரையறை 1652-ல் லத்தீன் இலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது ரொம்ப பழைய ஒன்று. ஆங்கிலக் குழந்தைகள் லத்தீன் படிக்கும் போது, அவர்களுக்கு பள்ளியில் எப்படி சொல்லித் தரப்படுகிறதோ அப்படியே எழுதுகிறார்கள் என்கிறார்கள். காரணம் ஒரு தெளிவான வரையறை இல்லாமல், பண்புகள் மட்டும் அல்ல, வேறு சில இலக்கணத்தனங்களையும் உபயோகப்படுத்திச் செய்கிறார்கள்.
Lurida terribiles miscent aconita novercae. (Ovid, Metamorphoses 1.147)
Pendula flaventem pingebat bractea crinem.
இதில்,
Pendula bractea
flaventem crinem
என்று ஓர் ஒத்திசைவாய் ஒலிப்பதைக் கேளுங்கள்.
aurea purpuream subnectit fibula vestem,
இதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால், 'golden purple bound clasp cloak' என்று வருகிறது. புரிகின்ற மொழிபெயர்ப்பு, 'a golden clasp bound her purple cloak'.
சரி, அப்படியே 1652 இத்தாலியில் இருந்து ஒரு மெகா ஜம்ப் அடித்து, 15வது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கின்ற நாட்டிற்குள் குதிப்போம்.
இந்த வரையறையை வைத்துக் கொண்டு தமிழில் முயற்சித்தால்...?
சிக்கல் என்ன?
நம் வாக்கிய அமைப்பில் பெரும்பாலும் வினைச்சொல் வாக்கியத்தின் நடுவில் வராது. ஆனால் நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்வோம். புதுக்கவிதைகள் மாதிரி.
ஓர் உதாரணம் பார்ப்போம்.
ஏழுநிறங்களின் நீலநிறத்தில் விழுந்தன வானவில்லின் துளிகள்!
இதற்குத் தலைப்பு என்ன வைக்கலாம்..? வேறு என்ன..? கவிஞர்களின் நிரந்தர இரண்டாம் காதலியான மழை தான். (முதல் நிலா!)
ஏழுநிறங்களின் வானவில்லின் - முடிவில் ஒத்திசைவு
நீலநிறத்தில் துளிகள் - முடிவில் ஒத்திசைவு
நமக்கு தான் எதுகை மோனை என்றெல்லாம் வசதிகள் இருக்கின்றனவே! அவற்றையும் உபயோகப்படுத்தி ரிதமிக்கை இன்னும் எளிமையாக அழகாக கொண்டு வர முடியும் என்று படுகின்றது. தமிழுக்கு ஏற்றவாறு கொண்டு வரும் போது கொஞ்சம் வேட்டியை லூஸ் செய்து கொள்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
மற்றொன்று,
பழுப்பான கசப்பாக ஊற்றினேன் மதுபானத்தின் ரசம்.
பழுப்பான மதுபான - முடிவில் ஒத்திசைவு
கசப்பாக ரசம் - எதுகை
இன்னும் கொஞ்சம் யோசித்து எழுதினால் ஏறக்குறைய குறள் வெண்பாவுக்கு பக்கத்தில் கொண்டு போய் விடலாம்.
நீங்களும் முயற்சி செய்யுங்களேன்.
நன்றி :
http://en.wikipedia.org/wiki/Golden_line
***
இத்தாலி என்றதும் காலத்தால் கரையாத ஒரு படத்தின் நினைவு வந்தது. அதன் தீம் இசை.
Monday, May 11, 2009
கவிதை செய்யலாம்.
எழுத்துத் துறையிலே பல வகையில் எழுதி வெளிப்படுத்தலாம். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, கவிதை சில. அத்தனையிலும் கவிதைக்கு ஒரு தனி அழகு இருக்கின்றது. கவிதை படைப்பவரது அந்தரங்க நிழலைக் காட்டுகின்றது. அதைப் படிப்பரும் அவரவர் தளத்தில் புரிந்து கொள்ள முடிகின்றது.
சில விதம் விதமான கவிதை எழுதும் முறைகளைப் பற்றிப் படித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்கிறேன். புதுக்கவிதை, சங்க இலக்கிய முறைகள், கட்டளைக் கலித்துறை, விருத்தம், ஆசிரியப்பா, இயற்சீர் வெண்டளை என்பன போன்ற நந்தமிழ் முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், எழுதிப்பழகவும் பல தளங்கள் உள்ளன.
வெளி மொழிகளில் புழங்கும் புதுமையான கவி வடிவங்களை நானும் கற்று, உங்களுக்கும் சொல்லலாமே என்று விரும்புவதால் இன்று இரண்டு நுட்பங்களைப் பார்ப்போம்.
லிமெரிக் (Limerick)
லிமெரிக் வகை கவி முறை எங்கு எப்போது உருவாக்கப்பட்டது என்பதில் இன்னும் குழப்பங்கள் இருக்கின்றன. லிமெரிக் என்ற பெயரிலேயே அயர்லாந்தில் ஒரு நகரம் இருக்கின்றது. 1700களில் ப்ரான்சில் இருந்து அங்கு திரும்பிய படைவீரர்கள் உற்சாகமிகுதியில் பாடிய வரிகள் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் பதினான்காம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் குழந்தைகளுக்கான பாடல்களாகப் பாடப்பட்டிருக்கிறது என்று நோட்டை நீட்டுகிறார்கள். எழுதுவதற்கு சுலபமானதாகவும், மஜா வரிகள் போட்டும் எழுதக் கூடியதாகவும் இருப்பதால் இங்கிலாந்து பிச்சைக்காரர்களாலும், பார்களில் வேலை செய்பவர்களாலும் பாடப்பட்டிருக்கக் கூடும் என்று சிலர் அனுமானிக்கிறார்கள். பெரும்பாலும் குடிகாரர்கள்! 1898-ல் இங்கிலாந்திலும், 1902-ல் அமெரிக்காவிலும் முதலில் பதிவு செய்யப்பட்டது.
இதன் எழுதும் வடிவம் மிகச் சுலபமானது.
ஆங்கிலத்தில் ஐந்து வரிகள் கொண்டது. 1,2,5 வரிகள் ஏழு முதல் பத்து சிலபல்கள் (Syllable) கொண்டதாகவும் ஒரே வித ரைமிங்கில் முடிவதாகவும் இருக்க வேண்டும். சிலர் 8 அல்லது 9 சிலபல்கள் இருக்க வேண்டும் என்கிறார்கள். 4, 5 வரிகள் ஐந்து முதல் ஏழு சிலபல்கள் இருப்பதாகவும், ஒரே வித ரைமிங்கில் இருக்கவும் வேண்டும். இத்தனை கட்டுப்பாடுகளிலும் நகைச்சுவை வாசம் தெளித்திருக்க வேண்டும் என்பது ஒரு அடிநாதமாக இருக்கின்றது.
எளிது அல்லவா..? சவாலே வரிகளுக்கு இடையேயான தொடர்புச் சங்கிலியை அமைப்பதில் தான் இருக்கின்றது.
1,2 வரிகள் ஒன்றைப் பற்றிச் சொல்ல வேண்டும். 3,4 வரிகள் மற்றொன்றைப் பற்றி! கடைசி வரி இரண்டையும் இணைத்து பஞ்ச் லைனாகவோ, ஆகவோ இருக்க வேண்டும். அப்படி தொடர்பில்லாமல் இருக்க வேண்டியது அவசியமில்லை என்றும் சொல்கிறார்கள்.
நேராக சில உதாரணங்களைப் பார்த்தாலே, 'பளிச்' ஆகி விடும் என்று நினைக்கிறேன்.
Edward Lear என்பவர் இதில் ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறார். அவரது Book of Nonsense 1845-ல் வந்திருக்கிறது. மற்றொரு புத்தகம் 1872-ல் வெளியிட்டிருக்கிறார்.
There was an Old Man with a nose,
Who said, 'If you choose to suppose,
That my nose is too long,
You are certainly wrong!'
That remarkable Man with a nose.
There was an Old Man in a tree,
Who was horribly bored by a Bee;
When they said, 'Does it buzz?'
He replied, 'Yes, it does!'
'It's a regular brute of a Bee!'
There was an Old Man with a beard,
Who said, 'It is just as I feared!
Two Owls and a Hen,
Four Larks and a Wren,
Have all built their nests in my beard!'
அந்த வட்டாரங்களில் கொஞ்சம் பிரபலமான லிமெரிக்,
There was an old man from Peru,
who dreamed he was eating his shoe.
He awoke in the night
with a terrible fright,
and found out that it was quite true.
There once was a fellow named Tim
whose dad never taught him to swim.
He fell off a dock
and sunk like a rock.
And that was the end of him.
அவரது லிமெரிக்குகள் பெரும்பாலும் 'There was a old man', 'There was a Young lady' போன்று அமைந்திருந்தாலும் அதையே நாம் இலக்கணமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. சிலர் இந்த முறையை மறுத்தும் எழுதியிருக்கிறார்கள்.
A flea and a fly in a flue
Were caught, so what could they do?
Said the fly, "Let us flee."
"Let us fly," said the flea.
So they flew through a flaw in the flue.
இந்த லிமெரிக்குகளைப் பார்த்தால் ஓர் ஒழுங்கு தெரிகின்றது. வரிகளின் கட்டமைப்பிலும், சொல் பிரயோகத்திலும் ஒரு ரிதம், ரைமிங் இருக்கின்றது.
சொல்கிறார்கள், 1,2,5 வரிகளில் da DUM da da DUM da da DUM எனவும் 3, 4 வரிகளில் da DUM da da DUM எனவும் ஒலிக் கட்டப்பட்டிருகின்றது. da வரும் வார்த்தைகள் அழுத்தம் குறைந்ததாகவும், DUM இடங்கள் அழுத்தம் கொடுப்பதாகவும் இருப்பதைச் சொல்லிப் பாருங்கள்!
தமிழில் இவற்றுக்கு ஈடாக எழுத முடியுமா?
முடியும். இந்த சிலபல Syllable விளையாட்டுகளுக்கு இணையாகத் தமிழில் அசைகள் இருக்கின்றன. சிலபல்களின் கண்டிப்புகளுக்கு நாம் நம் அசைகளைக் கொண்டு கட்டமைத்து லிமெரிக்குகள் எழுத முயலலாம்.
முதலில் அசை பற்றி ஒரு குட்டி விளக்கம் கொடுத்து விட்டால், தாவிப் போய் விடலாம்.
இரண்டு அசைகள் இருக்கின்றன. நேர் அசை, நிரை அசை. யாப்பு இலக்கணத்தில் வெண்பா எழுதும் போது அடிப்படைகள் ஆறு தெரிந்திருக்க வேண்டும். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை. லிமெரிக்குகளுக்கு நாம் அசை மட்டும் தெரிந்து கொள்வோம்.
அ, இ, உ, எ, ஒ - குறில்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள - நெடில்.
இப்படி எடுத்துக் கொண்டாலும் ஐ ஒரு தனிப் பிறவி! வார்த்தையின் முதலில் வரும் போது நெடிலாகவும் (கைது!) இடையிலோ, கடைசியிலோ வரும் போது குறிலாகவும் கொள்ளப்படும் (திரைகடல், மதுரை). காரணம், சிம்பிள். நாம் சொல்லும் போது இடையில்/கடைசியில் சிக்கிக் கொண்ட 'ஐ', 'அ'வாகத் திரிந்து விடும்.
நேர் அசை = தனிக் குறில், தனிக் குறில் ஒற்று, தனி நெடில், தனி நெடில் ஒற்று.
தனிக் குறில் - குறில் எழுத்துக்கள். உதாரணம் : க, சு, பு.
தனிக்குறில் ஒற்று - குறில் எழுத்துக்கள் + மெய்யெழுத்து(க்கள்). உதா : கல், புல், என்.
தனி நெடில் - நெடில் எழுத்துக்கள். உதா : தா, நா, ழூ.
தனி நெடில் ஒற்று - நெடில் எழுத்துக்கள் + மெய்யெழுத்து(க்கள்). உதா : கால், போர், நூல்.
நிரை அசை = குறில் இணை, குறில் இணை ஒற்று, குறில் நெடில், குறில் நெடில் ஒற்று.
குறில் இணை - இரண்டு குறில்கள். உதா : பசு, வறு, பனி.
குறில் இணை ஒற்று - இரண்டு குறில்கள் + மெய்யெழுத்து(க்கள்). உதா : கடல், பகல், நிழல்.
குறில் நெடில் - முதலில் குறில் எழுத்தும், பின் நெடில் எழுத்தும். உதா : உலா, பலே, நிலா.
குறில் நெடில் ஒற்று - முதலில் குறில் எழுத்தும், பின் நெடில் எழுத்தும் + மெய்யெழுத்து (க்கள்). உதா: தபால், கலாம், திடீர்.
நீங்களே இன்னும் சில வார்த்தைகளைப் போட்டுப் அசை பிரித்துப் பாருங்களேன்.
சரி, இப்போது மீண்டும் அயர்லாந்துக்கு வருவோம்.
ஈழத்துக் கவிஞர் மஹாகவி எழுதியுள்ள ஒரு தமிழ் லிமெரிக்கைப் பார்ப்போம். இதை குறும்பாக்கள் என்கிறார்கள். என்றால், ஹைக்கூவை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. திருக்குறள் இதை விட சிறியதாயிற்றே! அதற்கென்ன பெயரோ? நான் லிமெரிக் என்றே பயன்படுத்துகிறேன்.
வல்லரசின் செய்கையினைக் கண்டு
வல்லரசு வீசியது குண்டு
நல்லபடி நம் மனிதர்
நச்சரிப்புத் தீர்ந்து விடத்
தொல்லுலகை ஆள்கிறது நண்டு.
சில இடங்களில் இந்தப் புது வடிவத்திற்கு, மரபுக் கவிதையைப் போலவே இயைபுத் தொடை வைத்து, காய்ச்சீர்கள் சேர்க்கிறார்கள். ஐரிஷ் கவிதையை முற்றிலும் தமிழ்ச் சேலைக்குள் அடைக்க முயலும் போது அந்த வெளிநாட்டு அழகு மறைந்து விடுமோ என்று கவலை வருகிறது. மேலும் லிமெரிக் வேண்டுகின்ற சிலபல்களைத் தமிழில் எத்தனை சீர்களுக்கு மாற்றுவது என்பது பற்றி மஹாகவி எழுதி இருக்கிறார் என்கிறார்கள். அந்த கட்டுரை எனக்கு கிடைக்கவில்லை. அவர் எழுதிய மேற்கண்ட கவிதையைப் பார்க்கும் போது, அவர் நேரடியாக சிலபல் = அசை என்று ஏற்றுக் கொண்டதாகத் தெரிகின்றது. இப்போதைக்கு நாமும் அந்த எளிமையான வடிவில் துவங்குவோம். கைவரப் பெற்ற பின், தமிழ் க்ளுகோஸ்களை ஏற்றிக் கொள்ளலாம்.
எதைப் பற்றி எழுதலாம்? எதைப் பற்றியும். கோயில் மயில், கோலம் போட்ட பெண், பேப்பர் செய்தி, விலைவாசி, செருப்படிகள், கலவரங்கள், காதல்கள், முத்தங்கள்..! எதையும் எழுதலாம், with கொஞ்சம் மேலே சொன்ன Conditions Apply!
எழுதிய சில லிமெரிக்குகள் :
இந்திரன் ஊரில் ஆளு படா ஷோக்கு.
சந்துக்குள் ஒருநாள் போய்ப் பார்த்தான் பராக்கு
பைசா இருந்தது பாக்கெட்டில்
கைவைத்தான் ஒரு ஜாக்கெட்டில்
பட்டென்று தெறித்தது முதல் ஹூக்கு.
வீட்டிற்குள் சும்மா படுத்திருந்த போது
உள்ளே வந்தாள் அழகிய ஒரு மாது.
வெண்ணிற ஆடை மினுமினுக்க,
பொன்னிறக் கூந்தல் பறபறக்க,
மிதந்தாள். அவளுக்கு கால்கள் லேது.
எல்லா சனியும் மூணு டு அஞ்சு கிடார்
எலிஸபெத் போகிறாளென விமலும் தயார்.
பெட்டிக் கடையில் தம்மடித்தான்.
தட்டிப் போட்டு பான் அடித்தான்.
'இளைய நிலா...', பாட மயங்கி விழுந்தான், தடார்.
ஹார்பர்ல வந்திருக்கு இரும்பு லோடு
பார்பரா வூட்டுல இருக்கான் அந்த பாடு
சைரன் தந்தாச்சு
லாரிங்களும் வந்தாச்சு
அவ மடியில கெடக்கான், கூட்டிவா ஓடு!
ராயப்பேட்ட மூணாம் தெரு தாத்தா,
ராங்கா பேசுவார் யாரையாச்சும் பாத்தா!
மீன்புடிக்க மோட்டார் போட்டு
வாங்க கொஞ்சம் கடன் கேட்டு
போனான் கபாலி. சொன்னார் "போடாங் ....!"
மேலே எழுதியவற்றை நான் லிமெரிக்குகள் என்றே நம்ப விரும்புகிறேன்.
இப்போது நீங்களும் எழுத முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
நன்றி ::
http://en.wikipedia.org/wiki/Limerick_(poetry)
http://volweb.utk.edu/school/bedford/harrisms/limerick.htm
http://www.poetry-online.org/limericks.htm
http://www.gigglepoetry.com/poetryclass/limerickcontesthelp.html
http://www.teachingideas.co.uk/english/limerick.htm
http://www.karuthu.com/forum/forum_posts.asp?TID=3544
http://forumhub.com/tlit/901.16446.14.14.07.html
http://viruba.blogspot.com/
க்ளெரிஹ்யு (Clerihew)
லிமெரிக்குகள் போல் அத்தனை விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இல்லை. மிக எளிது.
நான்கே வரிகள். எந்த வித சிலபல் எல்லைகளும் இல்லை. விருப்பப்படி எழுதலாம். 1, 2 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும், 3,4 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும் முடிய வேண்டும்.நம்ம விஜய டி.ஆர். பேசுவது போன்றா என்று கேட்டால்... இல்லை!
காரணம் இந்த க்ளெரிஹ்யூவில் இருக்கும் சவாலான சமாச்சாரமே இது ஒரு வித பயோக்ராபிகல் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே! உங்கள் பள்ளி ஆசிரியரைப் பற்றி, அரசியல்வாதியைப் பற்றி, பஸ் ட்ரைவர், நண்பர்கள், எதிரிகள், ஒபாமா, ஒசாமா, செங்கல்பட்டு, வெஸ்ட் மாம்பலம், வடசேரி, தாராவி... யாரைப் பற்றியும், எதைப் பற்றியும், ஆனால் அவர்களின் ஒரு குணம் சொல்லப்பட வேண்டும். அதிலும் செம ஹ்யூமராக சொல்லப்படல் வேண்டும். ஆட்டோ வராத வகையில் கலாய்க்கவும் செய்திருக்கலாம். 1-ம் வரி பெரும்பாலும் எழுதப்படும் ஆசாமியின் பெயராக இருப்பது உத்தமம்.
சந்தோஷமான சவால்கள்!
Edmund Clerihew Bentley என்ற பின்னாள் எழுத்தாளர், 16 வயதில் லண்டன் செய்ண்ட் பால் பள்ளியில் ஓர் அறிவியல் வகுப்பை அட்டெண்ட் செய்திருக்கும் போது, பிரபஞ்சத்தின் முதல் க்ளெரிஹ்யூவை எழுதினார். வகுப்பு அத்தனை சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருக்கவில்லை போல் தெரிகின்றது. தூங்கித் தொலையாமல் இருக்கவோ, என்னவோ ஒரு க்ளெரிஹ்யூவை எழுதி நண்பர்களிடம் பாஸ் செய்ய அது மெகா ஹிட் ஆகி இருக்கின்றது. பிரபலமாகி, மூன்று வால்யூம்கள் நிறைய நிறைய எல்லோரையும் எழுதி விற்றுத் தீர்த்திருக்கிறார் இந்த மகானுபவர். அறிவியல் வகுப்பெடுத்தவருக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது.
அந்த பிரசித்தமான முதல் க்ளெரிஹ்யூ :
Sir Humphry Davy
Was not fond of gravy.
He lived in the odium
Of having discovered sodium.
இன்னும் சில க்ளெரிஹ்யூக்கள் :
Our art teacher, Mr. Shaw,
Really knows how to draw.
But his awful paintings
Have caused many faintings.
James Joyce
Had an unusually loud voice;
Knightly knock eternally wood he make
Finnegans Wake.
One of my fourth grade teachers, Miss Dunn,
Loved to teach, run, and simply have fun.
She taught us to live by the Golden Rule,
So no one at school was ever a fool.
மேலும் க்ளெரிஹ்யூவின் Biography for Beginners புத்தகத்திலிருந்து சில உதாரணங்கள் :
Sir Christopher Wren
Said, 'I am going to dine with some men.
If anyone calls
Say I am designing St. Paul's.'
The art of Biography
Is different from Geography.
Geography is about maps,
But Biography is about chaps.
John Stuart Mill,
By a mighty effort of will,
Overcame his natural bonhomie
And wrote 'Principles of Economy.'
தமிழில் சில முயற்சிகள் செய்து பார்த்தேன்.
சூப்பர் ஸ்டார் ரஜினி.
குருக்களைத் தேடி ஓடுவதில் கஜினி
அடிக்கடி போவார் இமயமலை நாடி,
ஆனாலும் சம்பளம் இருபது கோடி!
நீங்களும் இனி கலக்கி எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி ::
http://en.wikipedia.org/wiki/Clerihew
http://www.gigglepoetry.com/poetryclass/clerihew.htm
http://thinks.com/words/clerihew.htm
http://www.poetry4kids.com/modules.php?name=Content&pa=showpage&pid=8
http://www.readinga-z.com/poetry/lesson_plans/clerihew/clerihew_print.html
http://theotherpages.org/poems/bentley1.html
சில விதம் விதமான கவிதை எழுதும் முறைகளைப் பற்றிப் படித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்கிறேன். புதுக்கவிதை, சங்க இலக்கிய முறைகள், கட்டளைக் கலித்துறை, விருத்தம், ஆசிரியப்பா, இயற்சீர் வெண்டளை என்பன போன்ற நந்தமிழ் முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், எழுதிப்பழகவும் பல தளங்கள் உள்ளன.
வெளி மொழிகளில் புழங்கும் புதுமையான கவி வடிவங்களை நானும் கற்று, உங்களுக்கும் சொல்லலாமே என்று விரும்புவதால் இன்று இரண்டு நுட்பங்களைப் பார்ப்போம்.
லிமெரிக் (Limerick)
லிமெரிக் வகை கவி முறை எங்கு எப்போது உருவாக்கப்பட்டது என்பதில் இன்னும் குழப்பங்கள் இருக்கின்றன. லிமெரிக் என்ற பெயரிலேயே அயர்லாந்தில் ஒரு நகரம் இருக்கின்றது. 1700களில் ப்ரான்சில் இருந்து அங்கு திரும்பிய படைவீரர்கள் உற்சாகமிகுதியில் பாடிய வரிகள் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் பதினான்காம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் குழந்தைகளுக்கான பாடல்களாகப் பாடப்பட்டிருக்கிறது என்று நோட்டை நீட்டுகிறார்கள். எழுதுவதற்கு சுலபமானதாகவும், மஜா வரிகள் போட்டும் எழுதக் கூடியதாகவும் இருப்பதால் இங்கிலாந்து பிச்சைக்காரர்களாலும், பார்களில் வேலை செய்பவர்களாலும் பாடப்பட்டிருக்கக் கூடும் என்று சிலர் அனுமானிக்கிறார்கள். பெரும்பாலும் குடிகாரர்கள்! 1898-ல் இங்கிலாந்திலும், 1902-ல் அமெரிக்காவிலும் முதலில் பதிவு செய்யப்பட்டது.
இதன் எழுதும் வடிவம் மிகச் சுலபமானது.
ஆங்கிலத்தில் ஐந்து வரிகள் கொண்டது. 1,2,5 வரிகள் ஏழு முதல் பத்து சிலபல்கள் (Syllable) கொண்டதாகவும் ஒரே வித ரைமிங்கில் முடிவதாகவும் இருக்க வேண்டும். சிலர் 8 அல்லது 9 சிலபல்கள் இருக்க வேண்டும் என்கிறார்கள். 4, 5 வரிகள் ஐந்து முதல் ஏழு சிலபல்கள் இருப்பதாகவும், ஒரே வித ரைமிங்கில் இருக்கவும் வேண்டும். இத்தனை கட்டுப்பாடுகளிலும் நகைச்சுவை வாசம் தெளித்திருக்க வேண்டும் என்பது ஒரு அடிநாதமாக இருக்கின்றது.
எளிது அல்லவா..? சவாலே வரிகளுக்கு இடையேயான தொடர்புச் சங்கிலியை அமைப்பதில் தான் இருக்கின்றது.
1,2 வரிகள் ஒன்றைப் பற்றிச் சொல்ல வேண்டும். 3,4 வரிகள் மற்றொன்றைப் பற்றி! கடைசி வரி இரண்டையும் இணைத்து பஞ்ச் லைனாகவோ, ஆகவோ இருக்க வேண்டும். அப்படி தொடர்பில்லாமல் இருக்க வேண்டியது அவசியமில்லை என்றும் சொல்கிறார்கள்.
நேராக சில உதாரணங்களைப் பார்த்தாலே, 'பளிச்' ஆகி விடும் என்று நினைக்கிறேன்.
Edward Lear என்பவர் இதில் ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறார். அவரது Book of Nonsense 1845-ல் வந்திருக்கிறது. மற்றொரு புத்தகம் 1872-ல் வெளியிட்டிருக்கிறார்.
There was an Old Man with a nose,
Who said, 'If you choose to suppose,
That my nose is too long,
You are certainly wrong!'
That remarkable Man with a nose.
There was an Old Man in a tree,
Who was horribly bored by a Bee;
When they said, 'Does it buzz?'
He replied, 'Yes, it does!'
'It's a regular brute of a Bee!'
There was an Old Man with a beard,
Who said, 'It is just as I feared!
Two Owls and a Hen,
Four Larks and a Wren,
Have all built their nests in my beard!'
அந்த வட்டாரங்களில் கொஞ்சம் பிரபலமான லிமெரிக்,
There was an old man from Peru,
who dreamed he was eating his shoe.
He awoke in the night
with a terrible fright,
and found out that it was quite true.
There once was a fellow named Tim
whose dad never taught him to swim.
He fell off a dock
and sunk like a rock.
And that was the end of him.
அவரது லிமெரிக்குகள் பெரும்பாலும் 'There was a old man', 'There was a Young lady' போன்று அமைந்திருந்தாலும் அதையே நாம் இலக்கணமாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. சிலர் இந்த முறையை மறுத்தும் எழுதியிருக்கிறார்கள்.
A flea and a fly in a flue
Were caught, so what could they do?
Said the fly, "Let us flee."
"Let us fly," said the flea.
So they flew through a flaw in the flue.
இந்த லிமெரிக்குகளைப் பார்த்தால் ஓர் ஒழுங்கு தெரிகின்றது. வரிகளின் கட்டமைப்பிலும், சொல் பிரயோகத்திலும் ஒரு ரிதம், ரைமிங் இருக்கின்றது.
சொல்கிறார்கள், 1,2,5 வரிகளில் da DUM da da DUM da da DUM எனவும் 3, 4 வரிகளில் da DUM da da DUM எனவும் ஒலிக் கட்டப்பட்டிருகின்றது. da வரும் வார்த்தைகள் அழுத்தம் குறைந்ததாகவும், DUM இடங்கள் அழுத்தம் கொடுப்பதாகவும் இருப்பதைச் சொல்லிப் பாருங்கள்!
தமிழில் இவற்றுக்கு ஈடாக எழுத முடியுமா?
முடியும். இந்த சிலபல Syllable விளையாட்டுகளுக்கு இணையாகத் தமிழில் அசைகள் இருக்கின்றன. சிலபல்களின் கண்டிப்புகளுக்கு நாம் நம் அசைகளைக் கொண்டு கட்டமைத்து லிமெரிக்குகள் எழுத முயலலாம்.
முதலில் அசை பற்றி ஒரு குட்டி விளக்கம் கொடுத்து விட்டால், தாவிப் போய் விடலாம்.
இரண்டு அசைகள் இருக்கின்றன. நேர் அசை, நிரை அசை. யாப்பு இலக்கணத்தில் வெண்பா எழுதும் போது அடிப்படைகள் ஆறு தெரிந்திருக்க வேண்டும். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை. லிமெரிக்குகளுக்கு நாம் அசை மட்டும் தெரிந்து கொள்வோம்.
அ, இ, உ, எ, ஒ - குறில்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள - நெடில்.
இப்படி எடுத்துக் கொண்டாலும் ஐ ஒரு தனிப் பிறவி! வார்த்தையின் முதலில் வரும் போது நெடிலாகவும் (கைது!) இடையிலோ, கடைசியிலோ வரும் போது குறிலாகவும் கொள்ளப்படும் (திரைகடல், மதுரை). காரணம், சிம்பிள். நாம் சொல்லும் போது இடையில்/கடைசியில் சிக்கிக் கொண்ட 'ஐ', 'அ'வாகத் திரிந்து விடும்.
நேர் அசை = தனிக் குறில், தனிக் குறில் ஒற்று, தனி நெடில், தனி நெடில் ஒற்று.
தனிக் குறில் - குறில் எழுத்துக்கள். உதாரணம் : க, சு, பு.
தனிக்குறில் ஒற்று - குறில் எழுத்துக்கள் + மெய்யெழுத்து(க்கள்). உதா : கல், புல், என்.
தனி நெடில் - நெடில் எழுத்துக்கள். உதா : தா, நா, ழூ.
தனி நெடில் ஒற்று - நெடில் எழுத்துக்கள் + மெய்யெழுத்து(க்கள்). உதா : கால், போர், நூல்.
நிரை அசை = குறில் இணை, குறில் இணை ஒற்று, குறில் நெடில், குறில் நெடில் ஒற்று.
குறில் இணை - இரண்டு குறில்கள். உதா : பசு, வறு, பனி.
குறில் இணை ஒற்று - இரண்டு குறில்கள் + மெய்யெழுத்து(க்கள்). உதா : கடல், பகல், நிழல்.
குறில் நெடில் - முதலில் குறில் எழுத்தும், பின் நெடில் எழுத்தும். உதா : உலா, பலே, நிலா.
குறில் நெடில் ஒற்று - முதலில் குறில் எழுத்தும், பின் நெடில் எழுத்தும் + மெய்யெழுத்து (க்கள்). உதா: தபால், கலாம், திடீர்.
நீங்களே இன்னும் சில வார்த்தைகளைப் போட்டுப் அசை பிரித்துப் பாருங்களேன்.
சரி, இப்போது மீண்டும் அயர்லாந்துக்கு வருவோம்.
ஈழத்துக் கவிஞர் மஹாகவி எழுதியுள்ள ஒரு தமிழ் லிமெரிக்கைப் பார்ப்போம். இதை குறும்பாக்கள் என்கிறார்கள். என்றால், ஹைக்கூவை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை. திருக்குறள் இதை விட சிறியதாயிற்றே! அதற்கென்ன பெயரோ? நான் லிமெரிக் என்றே பயன்படுத்துகிறேன்.
வல்லரசின் செய்கையினைக் கண்டு
வல்லரசு வீசியது குண்டு
நல்லபடி நம் மனிதர்
நச்சரிப்புத் தீர்ந்து விடத்
தொல்லுலகை ஆள்கிறது நண்டு.
சில இடங்களில் இந்தப் புது வடிவத்திற்கு, மரபுக் கவிதையைப் போலவே இயைபுத் தொடை வைத்து, காய்ச்சீர்கள் சேர்க்கிறார்கள். ஐரிஷ் கவிதையை முற்றிலும் தமிழ்ச் சேலைக்குள் அடைக்க முயலும் போது அந்த வெளிநாட்டு அழகு மறைந்து விடுமோ என்று கவலை வருகிறது. மேலும் லிமெரிக் வேண்டுகின்ற சிலபல்களைத் தமிழில் எத்தனை சீர்களுக்கு மாற்றுவது என்பது பற்றி மஹாகவி எழுதி இருக்கிறார் என்கிறார்கள். அந்த கட்டுரை எனக்கு கிடைக்கவில்லை. அவர் எழுதிய மேற்கண்ட கவிதையைப் பார்க்கும் போது, அவர் நேரடியாக சிலபல் = அசை என்று ஏற்றுக் கொண்டதாகத் தெரிகின்றது. இப்போதைக்கு நாமும் அந்த எளிமையான வடிவில் துவங்குவோம். கைவரப் பெற்ற பின், தமிழ் க்ளுகோஸ்களை ஏற்றிக் கொள்ளலாம்.
எதைப் பற்றி எழுதலாம்? எதைப் பற்றியும். கோயில் மயில், கோலம் போட்ட பெண், பேப்பர் செய்தி, விலைவாசி, செருப்படிகள், கலவரங்கள், காதல்கள், முத்தங்கள்..! எதையும் எழுதலாம், with கொஞ்சம் மேலே சொன்ன Conditions Apply!
எழுதிய சில லிமெரிக்குகள் :
இந்திரன் ஊரில் ஆளு படா ஷோக்கு.
சந்துக்குள் ஒருநாள் போய்ப் பார்த்தான் பராக்கு
பைசா இருந்தது பாக்கெட்டில்
கைவைத்தான் ஒரு ஜாக்கெட்டில்
பட்டென்று தெறித்தது முதல் ஹூக்கு.
வீட்டிற்குள் சும்மா படுத்திருந்த போது
உள்ளே வந்தாள் அழகிய ஒரு மாது.
வெண்ணிற ஆடை மினுமினுக்க,
பொன்னிறக் கூந்தல் பறபறக்க,
மிதந்தாள். அவளுக்கு கால்கள் லேது.
எல்லா சனியும் மூணு டு அஞ்சு கிடார்
எலிஸபெத் போகிறாளென விமலும் தயார்.
பெட்டிக் கடையில் தம்மடித்தான்.
தட்டிப் போட்டு பான் அடித்தான்.
'இளைய நிலா...', பாட மயங்கி விழுந்தான், தடார்.
ஹார்பர்ல வந்திருக்கு இரும்பு லோடு
பார்பரா வூட்டுல இருக்கான் அந்த பாடு
சைரன் தந்தாச்சு
லாரிங்களும் வந்தாச்சு
அவ மடியில கெடக்கான், கூட்டிவா ஓடு!
ராயப்பேட்ட மூணாம் தெரு தாத்தா,
ராங்கா பேசுவார் யாரையாச்சும் பாத்தா!
மீன்புடிக்க மோட்டார் போட்டு
வாங்க கொஞ்சம் கடன் கேட்டு
போனான் கபாலி. சொன்னார் "போடாங் ....!"
மேலே எழுதியவற்றை நான் லிமெரிக்குகள் என்றே நம்ப விரும்புகிறேன்.
இப்போது நீங்களும் எழுத முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
நன்றி ::
http://en.wikipedia.org/wiki/Limerick_(poetry)
http://volweb.utk.edu/school/bedford/harrisms/limerick.htm
http://www.poetry-online.org/limericks.htm
http://www.gigglepoetry.com/poetryclass/limerickcontesthelp.html
http://www.teachingideas.co.uk/english/limerick.htm
http://www.karuthu.com/forum/forum_posts.asp?TID=3544
http://forumhub.com/tlit/901.16446.14.14.07.html
http://viruba.blogspot.com/
க்ளெரிஹ்யு (Clerihew)
லிமெரிக்குகள் போல் அத்தனை விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இல்லை. மிக எளிது.
நான்கே வரிகள். எந்த வித சிலபல் எல்லைகளும் இல்லை. விருப்பப்படி எழுதலாம். 1, 2 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும், 3,4 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும் முடிய வேண்டும்.நம்ம விஜய டி.ஆர். பேசுவது போன்றா என்று கேட்டால்... இல்லை!
காரணம் இந்த க்ளெரிஹ்யூவில் இருக்கும் சவாலான சமாச்சாரமே இது ஒரு வித பயோக்ராபிகல் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே! உங்கள் பள்ளி ஆசிரியரைப் பற்றி, அரசியல்வாதியைப் பற்றி, பஸ் ட்ரைவர், நண்பர்கள், எதிரிகள், ஒபாமா, ஒசாமா, செங்கல்பட்டு, வெஸ்ட் மாம்பலம், வடசேரி, தாராவி... யாரைப் பற்றியும், எதைப் பற்றியும், ஆனால் அவர்களின் ஒரு குணம் சொல்லப்பட வேண்டும். அதிலும் செம ஹ்யூமராக சொல்லப்படல் வேண்டும். ஆட்டோ வராத வகையில் கலாய்க்கவும் செய்திருக்கலாம். 1-ம் வரி பெரும்பாலும் எழுதப்படும் ஆசாமியின் பெயராக இருப்பது உத்தமம்.
சந்தோஷமான சவால்கள்!
Edmund Clerihew Bentley என்ற பின்னாள் எழுத்தாளர், 16 வயதில் லண்டன் செய்ண்ட் பால் பள்ளியில் ஓர் அறிவியல் வகுப்பை அட்டெண்ட் செய்திருக்கும் போது, பிரபஞ்சத்தின் முதல் க்ளெரிஹ்யூவை எழுதினார். வகுப்பு அத்தனை சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருக்கவில்லை போல் தெரிகின்றது. தூங்கித் தொலையாமல் இருக்கவோ, என்னவோ ஒரு க்ளெரிஹ்யூவை எழுதி நண்பர்களிடம் பாஸ் செய்ய அது மெகா ஹிட் ஆகி இருக்கின்றது. பிரபலமாகி, மூன்று வால்யூம்கள் நிறைய நிறைய எல்லோரையும் எழுதி விற்றுத் தீர்த்திருக்கிறார் இந்த மகானுபவர். அறிவியல் வகுப்பெடுத்தவருக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது.
அந்த பிரசித்தமான முதல் க்ளெரிஹ்யூ :
Sir Humphry Davy
Was not fond of gravy.
He lived in the odium
Of having discovered sodium.
இன்னும் சில க்ளெரிஹ்யூக்கள் :
Our art teacher, Mr. Shaw,
Really knows how to draw.
But his awful paintings
Have caused many faintings.
James Joyce
Had an unusually loud voice;
Knightly knock eternally wood he make
Finnegans Wake.
One of my fourth grade teachers, Miss Dunn,
Loved to teach, run, and simply have fun.
She taught us to live by the Golden Rule,
So no one at school was ever a fool.
மேலும் க்ளெரிஹ்யூவின் Biography for Beginners புத்தகத்திலிருந்து சில உதாரணங்கள் :
Sir Christopher Wren
Said, 'I am going to dine with some men.
If anyone calls
Say I am designing St. Paul's.'
The art of Biography
Is different from Geography.
Geography is about maps,
But Biography is about chaps.
John Stuart Mill,
By a mighty effort of will,
Overcame his natural bonhomie
And wrote 'Principles of Economy.'
தமிழில் சில முயற்சிகள் செய்து பார்த்தேன்.
சூப்பர் ஸ்டார் ரஜினி.
குருக்களைத் தேடி ஓடுவதில் கஜினி
அடிக்கடி போவார் இமயமலை நாடி,
ஆனாலும் சம்பளம் இருபது கோடி!
நீங்களும் இனி கலக்கி எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி ::
http://en.wikipedia.org/wiki/Clerihew
http://www.gigglepoetry.com/poetryclass/clerihew.htm
http://thinks.com/words/clerihew.htm
http://www.poetry4kids.com/modules.php?name=Content&pa=showpage&pid=8
http://www.readinga-z.com/poetry/lesson_plans/clerihew/clerihew_print.html
http://theotherpages.org/poems/bentley1.html
Wednesday, September 24, 2008
Tele................Vision.
இந்த கவிதையை தமிழ்ப்படுத்தி கொடுமைப்படுத்துவதை விட, அப்படியே படிப்பது எளிதாக இருக்கும். கவிதைகளுக்கு இருக்க வேண்டிய சர்வதேசத் தன்மை இதில் பளிச்சிடுகிறது. ப்ரிட்டனிலும் படிக்கலாம்; ஜப்பானிலும் தையல் கோர்த்துக் கொண்டே படிக்கலாம்.
பேரண்ட்ஸ் களப் மெம்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டியது. Roald Dahl எழுதிய இக்கவி பெற்றோரின் கவலைகளின் முதல் பிரச்னையைப் பேசுகிறது.
ச்சின்னப் பையனின் ப்ரச்னையுடன் ஒத்துப் போகிறது!
Television
The most important thing we've learned,
So far as children are concerned,
Is never, NEVER, NEVER let
Them near your television set --
Or better still, just don't install
The idiotic thing at all.
In almost every house we've been,
We've watched them gaping at the screen.
They loll and slop and lounge about,
And stare until their eyes pop out.
(Last week in someone's place we saw
A dozen eyeballs on the floor.)
They sit and stare and stare and sit
Until they're hypnotised by it,
Until they're absolutely drunk
With all that shocking ghastly junk.
Oh yes, we know it keeps them still,
They don't climb out the window sill,
They never fight or kick or punch,
They leave you free to cook the lunch
And wash the dishes in the sink --
But did you ever stop to think,
To wonder just exactly what
This does to your beloved tot?
IT ROTS THE SENSE IN THE HEAD!
IT KILLS IMAGINATION DEAD!
IT CLOGS AND CLUTTERS UP THE MIND!
IT MAKES A CHILD SO DULL AND BLIND
HE CAN NO LONGER UNDERSTAND
A FANTASY, A FAIRYLAND!
HIS BRAIN BECOMES AS SOFT AS CHEESE!
HIS POWERS OF THINKING RUST AND FREEZE!
HE CANNOT THINK -- HE ONLY SEES!
'All right!' you'll cry. 'All right!' you'll say,
'But if we take the set away,
What shall we do to entertain
Our darling children? Please explain!'
We'll answer this by asking you,
'What used the darling ones to do?
'How used they keep themselves contented
Before this monster was invented?'
Have you forgotten? Don't you know?
We'll say it very loud and slow:
THEY ... USED ... TO ... READ! They'd READ and READ,
AND READ and READ, and then proceed
To READ some more. Great Scott! Gadzooks!
One half their lives was reading books!
The nursery shelves held books galore!
Books cluttered up the nursery floor!
And in the bedroom, by the bed,
More books were waiting to be read!
Such wondrous, fine, fantastic tales
Of dragons, gypsies, queens, and whales
And treasure isles, and distant shores
Where smugglers rowed with muffled oars,
And pirates wearing purple pants,
And sailing ships and elephants,
And cannibals crouching 'round the pot,
Stirring away at something hot.
(It smells so good, what can it be?
Good gracious, it's Penelope.)
The younger ones had Beatrix Potter
With Mr. Tod, the dirty rotter,
And Squirrel Nutkin, Pigling Bland,
And Mrs. Tiggy-Winkle and-
Just How The Camel Got His Hump,
And How the Monkey Lost His Rump,
And Mr. Toad, and bless my soul,
There's Mr. Rate and Mr. Mole-
Oh, books, what books they used to know,
Those children living long ago!
So please, oh please, we beg, we pray,
Go throw your TV set away,
And in its place you can install
A lovely bookshelf on the wall.
Then fill the shelves with lots of books,
Ignoring all the dirty looks,
The screams and yells, the bites and kicks,
And children hitting you with sticks-
Fear not, because we promise you
That, in about a week or two
Of having nothing else to do,
They'll now begin to feel the need
Of having something to read.
And once they start -- oh boy, oh boy!
You watch the slowly growing joy
That fills their hearts. They'll grow so keen
They'll wonder what they'd ever seen
In that ridiculous machine,
That nauseating, foul, unclean,
Repulsive television screen!
And later, each and every kid
Will love you more for what you did.
Roald Dahl.
நான் பத்தாம் வகுப்பு வரும் வரை தொலைக்காட்சியை எங்கள் வீட்டில் புக வைக்க விடாத வறுமைக்கு நன்றி!
***
அவருடைய மற்றும் ஒரு குட்டிப்பா!
சூடும் குளிரும்.
என் அம்மாவிற்குத் தெரிந்த பெண் அவள்.
உள்ளே வந்தாள்.
அவளது அத்தனை ஆடைகளயும்
அவிழ்த்தாள்.
வயதானவன் இல்லை நான்.
சொன்னேன்.
'கடவுளே! உங்களுக்கு
கண்டிப்பாக
குளிராக இருக்கும்!'
'இல்லை, இல்லை!'
அவள் சிணுங்கினாள்.
'சத்தியமாக இல்லை.
உண்மையில் நான்
பேய்த்தனமாக
சூடாக உணர்கிறேன்!'
பேரண்ட்ஸ் களப் மெம்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டியது. Roald Dahl எழுதிய இக்கவி பெற்றோரின் கவலைகளின் முதல் பிரச்னையைப் பேசுகிறது.
ச்சின்னப் பையனின் ப்ரச்னையுடன் ஒத்துப் போகிறது!
Television
The most important thing we've learned,
So far as children are concerned,
Is never, NEVER, NEVER let
Them near your television set --
Or better still, just don't install
The idiotic thing at all.
In almost every house we've been,
We've watched them gaping at the screen.
They loll and slop and lounge about,
And stare until their eyes pop out.
(Last week in someone's place we saw
A dozen eyeballs on the floor.)
They sit and stare and stare and sit
Until they're hypnotised by it,
Until they're absolutely drunk
With all that shocking ghastly junk.
Oh yes, we know it keeps them still,
They don't climb out the window sill,
They never fight or kick or punch,
They leave you free to cook the lunch
And wash the dishes in the sink --
But did you ever stop to think,
To wonder just exactly what
This does to your beloved tot?
IT ROTS THE SENSE IN THE HEAD!
IT KILLS IMAGINATION DEAD!
IT CLOGS AND CLUTTERS UP THE MIND!
IT MAKES A CHILD SO DULL AND BLIND
HE CAN NO LONGER UNDERSTAND
A FANTASY, A FAIRYLAND!
HIS BRAIN BECOMES AS SOFT AS CHEESE!
HIS POWERS OF THINKING RUST AND FREEZE!
HE CANNOT THINK -- HE ONLY SEES!
'All right!' you'll cry. 'All right!' you'll say,
'But if we take the set away,
What shall we do to entertain
Our darling children? Please explain!'
We'll answer this by asking you,
'What used the darling ones to do?
'How used they keep themselves contented
Before this monster was invented?'
Have you forgotten? Don't you know?
We'll say it very loud and slow:
THEY ... USED ... TO ... READ! They'd READ and READ,
AND READ and READ, and then proceed
To READ some more. Great Scott! Gadzooks!
One half their lives was reading books!
The nursery shelves held books galore!
Books cluttered up the nursery floor!
And in the bedroom, by the bed,
More books were waiting to be read!
Such wondrous, fine, fantastic tales
Of dragons, gypsies, queens, and whales
And treasure isles, and distant shores
Where smugglers rowed with muffled oars,
And pirates wearing purple pants,
And sailing ships and elephants,
And cannibals crouching 'round the pot,
Stirring away at something hot.
(It smells so good, what can it be?
Good gracious, it's Penelope.)
The younger ones had Beatrix Potter
With Mr. Tod, the dirty rotter,
And Squirrel Nutkin, Pigling Bland,
And Mrs. Tiggy-Winkle and-
Just How The Camel Got His Hump,
And How the Monkey Lost His Rump,
And Mr. Toad, and bless my soul,
There's Mr. Rate and Mr. Mole-
Oh, books, what books they used to know,
Those children living long ago!
So please, oh please, we beg, we pray,
Go throw your TV set away,
And in its place you can install
A lovely bookshelf on the wall.
Then fill the shelves with lots of books,
Ignoring all the dirty looks,
The screams and yells, the bites and kicks,
And children hitting you with sticks-
Fear not, because we promise you
That, in about a week or two
Of having nothing else to do,
They'll now begin to feel the need
Of having something to read.
And once they start -- oh boy, oh boy!
You watch the slowly growing joy
That fills their hearts. They'll grow so keen
They'll wonder what they'd ever seen
In that ridiculous machine,
That nauseating, foul, unclean,
Repulsive television screen!
And later, each and every kid
Will love you more for what you did.
Roald Dahl.
நான் பத்தாம் வகுப்பு வரும் வரை தொலைக்காட்சியை எங்கள் வீட்டில் புக வைக்க விடாத வறுமைக்கு நன்றி!
***
அவருடைய மற்றும் ஒரு குட்டிப்பா!
சூடும் குளிரும்.
என் அம்மாவிற்குத் தெரிந்த பெண் அவள்.
உள்ளே வந்தாள்.
அவளது அத்தனை ஆடைகளயும்
அவிழ்த்தாள்.
வயதானவன் இல்லை நான்.
சொன்னேன்.
'கடவுளே! உங்களுக்கு
கண்டிப்பாக
குளிராக இருக்கும்!'
'இல்லை, இல்லை!'
அவள் சிணுங்கினாள்.
'சத்தியமாக இல்லை.
உண்மையில் நான்
பேய்த்தனமாக
சூடாக உணர்கிறேன்!'
Sunday, July 20, 2008
உன் பாதம்.
சொற்கள் சொல்ல இயலாமல் பரிதவிக்கின்ற எண்ணங்கள் காற்றில் அலைப்புறுகின்றன. இலைகளின் இடை புகுந்து சற்றே இளைப்பாறுகின்றன. காம்புகளின் வழியாக நழுவி, மரத்தின் பெரு உடலோடு இறுகுகின்றன.
பெய்கின்ற மழையோடு பின் நனைந்து, முன் நகர்ந்து செம்புல நீராய் மாறுகின்றன. போன போக்கில் போய், நதியோடு கலந்து, கடலோடு நிறைந்து, காற்றில் ஆவியாகி கடுகிப் போகின்றன.
பின் எந்த சொல்லை நம்பி, மீண்டும் எண்ணங்கள் பிறவியெடுக்கும்?
உளத்தின் உள் வெற்று வெளியை நிரப்ப ஓர் எண்ணம் கொள்ளும் வடிவம், சொற்களின் மேல் கொண்ட அதன் காதலால் தானோ...?
***
உன் பாதம்.
எப்பொழுது என்னால் உன் கண்களைக்
காண முடிவதில்லையோ,
உன் பாதங்களைப் பார்க்கிறேன்.
வளை எலும்புகளாலான பாதம்.
சிறிய, கடின பாதம்.
உன்னை அவை தாங்குகின்றன என்பதை
அறிகிறேன்.
மற்றும் உன் இனிய எடை
அவற்றின் மீதே
எழும்பி அமைகின்றது.
உன் இடை, உன் மார்புகள்,
பர்ப்பிள் நிற
இரட்டை மார் நுனிகள்,
பறந்து சென்ற கண்களின் இமைகள்,
உனது அகன்ற இனிய வாய்,
உனது சிவந்த நிறம்,
என் சிறிய அழகு.
ஆனால் நான் உன் பாதங்களை
விரும்புகிறேன்.
ஏனெனில்
அவை மட்டுமே
பூமியின் மீதும்,
காற்றின் மீதும்,
நீரின் மீதும்
நடந்தன,
என்னைக் கண்டடையும் வரை.
Pablo Neruda- வின் Your feet.
பெய்கின்ற மழையோடு பின் நனைந்து, முன் நகர்ந்து செம்புல நீராய் மாறுகின்றன. போன போக்கில் போய், நதியோடு கலந்து, கடலோடு நிறைந்து, காற்றில் ஆவியாகி கடுகிப் போகின்றன.
பின் எந்த சொல்லை நம்பி, மீண்டும் எண்ணங்கள் பிறவியெடுக்கும்?
உளத்தின் உள் வெற்று வெளியை நிரப்ப ஓர் எண்ணம் கொள்ளும் வடிவம், சொற்களின் மேல் கொண்ட அதன் காதலால் தானோ...?
***
உன் பாதம்.
எப்பொழுது என்னால் உன் கண்களைக்
காண முடிவதில்லையோ,
உன் பாதங்களைப் பார்க்கிறேன்.
வளை எலும்புகளாலான பாதம்.
சிறிய, கடின பாதம்.
உன்னை அவை தாங்குகின்றன என்பதை
அறிகிறேன்.
மற்றும் உன் இனிய எடை
அவற்றின் மீதே
எழும்பி அமைகின்றது.
உன் இடை, உன் மார்புகள்,
பர்ப்பிள் நிற
இரட்டை மார் நுனிகள்,
பறந்து சென்ற கண்களின் இமைகள்,
உனது அகன்ற இனிய வாய்,
உனது சிவந்த நிறம்,
என் சிறிய அழகு.
ஆனால் நான் உன் பாதங்களை
விரும்புகிறேன்.
ஏனெனில்
அவை மட்டுமே
பூமியின் மீதும்,
காற்றின் மீதும்,
நீரின் மீதும்
நடந்தன,
என்னைக் கண்டடையும் வரை.
Pablo Neruda- வின் Your feet.
Wednesday, July 16, 2008
ஒரு நாய் இறந்து போனது.
செல்லும் வழியில் கிடைக்கின்ற சில கூழாங்கற்கள் கால்களை குத்தினாலும் வலிக்காது. அவற்றை எடுத்து பைக்குள் வைத்துக் கொள்ள மனம் வரும். அடிக்காலின் மென் பாகத்தில் மட்டும் ஓர் அழுத்தம் மிஞ்சி இருக்கும்.
காற்றின் தடங்களில் தவழ்ந்து வரும் பூவாசம் நிறைந்திருக்கும் ஒரு மாலை நேரத்தில் மெளனம் மட்டுமே நிறைந்திருக்கும் உடல் முழுதும்!
இரவில் பேருந்துப் பயணம் செய்கையில் கூடவே வரும் ஒற்றைத் துணையாய் நிலா. நடுக்காட்டில் நள்ளிரவில் முழுச் சத்தத்தில் அதிர்கின்ற கானா பாடல்களைச் சுமந்து நிற்கையில் , தன் ஒளி வட்டத்தில் பிரபஞ்சத்தின் மோனவெளியை நிறைக்கும்.
கட்டற்ற கணக்கற்ற பின்னல் வலையில் எங்கெங்கோ சென்று எவையெவையோ பார்த்து, அவ்வப்போது கிடைக்கின்ற கண்ணுக்குத் தட்டுப்படுகின்ற சில முத்துக்களை இந்த அலை கரையில் தள்ளுகின்றது.
இந்த அலையும் ஒரு நாள் கரையும்.
இந்த கரையும் சில நாள் அலையும்.
அலையும் கரையும் இன்றி தள்ளி விடவும், அள்ளிக் கொள்ளவும் வேறு ஆளேது?
***
ஒரு நாய் இறந்து போனது.
எனது நாய் இறந்து விட்டது.
தோட்டத்தில்
ஒரு துருப்பிடித்த பழைய
இயந்திரத்தின் அருகே
அவனைப் புதைத்தேன்.
ஒருநாள் நானும் அவனுடன் அங்கே
சேருவேன்.
ஆனால் இப்போது அவன் தன்னுடைய
மெத்தென்ற கோட்,
கெட்ட பழக்கங்கள்,
மற்றும் ஒழுகும் நாசியோடு சென்று விட்டான்.
வானில் எந்த மனிதனுக்கும்
உறுதிப்படுத்தப்பட்ட சொர்க்கம் இருக்கும்
என்று என்றுமே நம்பாத உலகாயதனான
நான்,
நான் என்றுமே நுழையாத
சொர்க்கத்தை நம்புகிறேன்.
ஆம், நட்பாக
விசிறி போன்ற தனது வாலை அசைத்து
எனது வரவிற்காக எனது நாய்
காத்திருக்கும்
நாய்களுக்கான சொர்க்கத்தை
நம்புகிறேன்.
இல்லை, புவியில் தன்னை முழுதும் ஒப்படைத்த
ஒரு துணையை இழந்த சோகத்தை
நான் பேசப் போவதில்லை.
எனக்கு அவனது நட்பானது,
ஒரு போர்குபின், விண்மீனோடு தான் கொண்ட
உரிமையை விடாதது போன்றது.
மிகையே இன்றி அதன் நெருக்கம்
பற்றி சொல்ல:
அவன் என்றுமே என் ஆடைகள்
மேல் தாவியதில்லை.
அவனது முடிகளாலோ,
என்னை நிரப்பியதில்லை.
உறவில் மயக்கம் கொண்ட பிற நாய்களைப் போல்
எனது முட்டிகளை உரசியதில்லை.
இல்லை,
என்னைப் போன்ற வலிமிக்க
மனிதன்,
அவன் நாயாய் இருந்து
காலத்தை வீண் செய்கின்றான்
எனப் புரிந்து கொள்ளும் வகையில்
தேவையான ஒரு பார்வை பார்ப்பான்.
தனியாக எனக்காகவென்றே ஒதுக்கப்பட்ட
பார்வையால் என்னைப் பார்த்துக் கொண்டே
இருப்பான்.
அவனது இனிய வாழ்க்கை முழுவதும்
எப்போதும் என் அருகிலேயே, என்னைத் தொல்லை
பண்ணாமலும், எதையும் வேண்டாமலும்!
குளிர்ப் பறவைகள் வானத்தை நிரப்பும்
ஐஸ்லா நெக்ராவின் தனிமையான குளிர்காலத்தில்
கடற்கரையோரமாக நாங்கள் நடக்கையில்
எத்தனை முறை அவனது வாலுக்காக
நான் பொறாமைப்பட்டிருக்கிறேன்
மற்றும் எனது முடி அடர்ந்த நாய்
கடலின் முழு அசைவிற்கும் ஆற்றலோடு குதிக்கும்:
தனது தங்கநிற வாலை உயர்த்திக் கொண்டு
கடலின் நுரைகளுக்கேற்ப துள்ளிச் செல்லும்
எனது அலைகின்ற நாய்.
மகிழ்வாய், மகிழ்வாய், மகிழ்வாய்,
கூச்சமே இல்லாத அமைப்பைக் கொண்டு
நாய்கள் மட்டுமே அறியக் கூடியவகையில்.
இறந்து விட்ட என் நாய்க்கு எந்த வழியனுபுதல்களும் இல்லை
மற்றும்
நாங்கள் இப்போதும், எப்போதும்
எங்களுக்குள் பொய் சொல்லிக் கொண்டதில்லை.
எனவே இப்போது அவன் சென்று விட்டான்
மற்றும் நான் அவனை புதைத்து விட்டேன்,
அவ்வளவு தான்.
பாப்லோ நெரூடாவின் A Dog has died என்ற கவிதையை நான் புரிந்து கொண்டபடி எழுதியுள்ளேன்.
நன்றி :: Poem Hunter
காற்றின் தடங்களில் தவழ்ந்து வரும் பூவாசம் நிறைந்திருக்கும் ஒரு மாலை நேரத்தில் மெளனம் மட்டுமே நிறைந்திருக்கும் உடல் முழுதும்!
இரவில் பேருந்துப் பயணம் செய்கையில் கூடவே வரும் ஒற்றைத் துணையாய் நிலா. நடுக்காட்டில் நள்ளிரவில் முழுச் சத்தத்தில் அதிர்கின்ற கானா பாடல்களைச் சுமந்து நிற்கையில் , தன் ஒளி வட்டத்தில் பிரபஞ்சத்தின் மோனவெளியை நிறைக்கும்.
கட்டற்ற கணக்கற்ற பின்னல் வலையில் எங்கெங்கோ சென்று எவையெவையோ பார்த்து, அவ்வப்போது கிடைக்கின்ற கண்ணுக்குத் தட்டுப்படுகின்ற சில முத்துக்களை இந்த அலை கரையில் தள்ளுகின்றது.
இந்த அலையும் ஒரு நாள் கரையும்.
இந்த கரையும் சில நாள் அலையும்.
அலையும் கரையும் இன்றி தள்ளி விடவும், அள்ளிக் கொள்ளவும் வேறு ஆளேது?
***
ஒரு நாய் இறந்து போனது.
எனது நாய் இறந்து விட்டது.
தோட்டத்தில்
ஒரு துருப்பிடித்த பழைய
இயந்திரத்தின் அருகே
அவனைப் புதைத்தேன்.
ஒருநாள் நானும் அவனுடன் அங்கே
சேருவேன்.
ஆனால் இப்போது அவன் தன்னுடைய
மெத்தென்ற கோட்,
கெட்ட பழக்கங்கள்,
மற்றும் ஒழுகும் நாசியோடு சென்று விட்டான்.
வானில் எந்த மனிதனுக்கும்
உறுதிப்படுத்தப்பட்ட சொர்க்கம் இருக்கும்
என்று என்றுமே நம்பாத உலகாயதனான
நான்,
நான் என்றுமே நுழையாத
சொர்க்கத்தை நம்புகிறேன்.
ஆம், நட்பாக
விசிறி போன்ற தனது வாலை அசைத்து
எனது வரவிற்காக எனது நாய்
காத்திருக்கும்
நாய்களுக்கான சொர்க்கத்தை
நம்புகிறேன்.
இல்லை, புவியில் தன்னை முழுதும் ஒப்படைத்த
ஒரு துணையை இழந்த சோகத்தை
நான் பேசப் போவதில்லை.
எனக்கு அவனது நட்பானது,
ஒரு போர்குபின், விண்மீனோடு தான் கொண்ட
உரிமையை விடாதது போன்றது.
மிகையே இன்றி அதன் நெருக்கம்
பற்றி சொல்ல:
அவன் என்றுமே என் ஆடைகள்
மேல் தாவியதில்லை.
அவனது முடிகளாலோ,
என்னை நிரப்பியதில்லை.
உறவில் மயக்கம் கொண்ட பிற நாய்களைப் போல்
எனது முட்டிகளை உரசியதில்லை.
இல்லை,
என்னைப் போன்ற வலிமிக்க
மனிதன்,
அவன் நாயாய் இருந்து
காலத்தை வீண் செய்கின்றான்
எனப் புரிந்து கொள்ளும் வகையில்
தேவையான ஒரு பார்வை பார்ப்பான்.
தனியாக எனக்காகவென்றே ஒதுக்கப்பட்ட
பார்வையால் என்னைப் பார்த்துக் கொண்டே
இருப்பான்.
அவனது இனிய வாழ்க்கை முழுவதும்
எப்போதும் என் அருகிலேயே, என்னைத் தொல்லை
பண்ணாமலும், எதையும் வேண்டாமலும்!
குளிர்ப் பறவைகள் வானத்தை நிரப்பும்
ஐஸ்லா நெக்ராவின் தனிமையான குளிர்காலத்தில்
கடற்கரையோரமாக நாங்கள் நடக்கையில்
எத்தனை முறை அவனது வாலுக்காக
நான் பொறாமைப்பட்டிருக்கிறேன்
மற்றும் எனது முடி அடர்ந்த நாய்
கடலின் முழு அசைவிற்கும் ஆற்றலோடு குதிக்கும்:
தனது தங்கநிற வாலை உயர்த்திக் கொண்டு
கடலின் நுரைகளுக்கேற்ப துள்ளிச் செல்லும்
எனது அலைகின்ற நாய்.
மகிழ்வாய், மகிழ்வாய், மகிழ்வாய்,
கூச்சமே இல்லாத அமைப்பைக் கொண்டு
நாய்கள் மட்டுமே அறியக் கூடியவகையில்.
இறந்து விட்ட என் நாய்க்கு எந்த வழியனுபுதல்களும் இல்லை
மற்றும்
நாங்கள் இப்போதும், எப்போதும்
எங்களுக்குள் பொய் சொல்லிக் கொண்டதில்லை.
எனவே இப்போது அவன் சென்று விட்டான்
மற்றும் நான் அவனை புதைத்து விட்டேன்,
அவ்வளவு தான்.
பாப்லோ நெரூடாவின் A Dog has died என்ற கவிதையை நான் புரிந்து கொண்டபடி எழுதியுள்ளேன்.
நன்றி :: Poem Hunter
Subscribe to:
Posts (Atom)