Showing posts with label களிப்பேருவகை (A).. Show all posts
Showing posts with label களிப்பேருவகை (A).. Show all posts

Thursday, May 23, 2019

இன்னும் எவ்வளவு தொலைவு? (A)



நிலவின் நுரை நிரம்பி வழியும் முன்னிரவு.  பசிய இலைகள் எல்லாம் இருளின் கரும் போதைக்குள் ஆழ்ந்து மெல்ல அசைந்து கொண்டிருந்த குளிரின் நேரம்.  பறவைக்கூடுகளில் நிறைந்த அமைதியின் கனம். வீதிகளில் சிதறியிருந்த தெருநாய்களின் சிறு முனகல்கள், பனியின் அழுத்தத்திற்குள் இறுகியிருந்தன. ஜன்னல்கள் அடைத்திருந்த வீடுகளின் வரிசைகளில் உறக்கங்களை உடுத்தி அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த வீட்டில் மஞ்சள் விளக்கொளியின் கீழே தனித்த அறைக்குள், நாமிருவர் செய்யப் போவது, செய்யக் கூடியது தான் என்ன?

கூர் நகங்களால் சுவற்றைக் கவ்வி மெல்ல நகரும் இந்த மரப்பல்லியின் சொரசொரப்பான முதுகின் மேல் தடவிக் கொடுத்தால் தான் என்ன? யாரும் தீண்டியிராத மின்விசிறியின் கரங்களை அழுத்திக் கொடுத்து, அதன் சுழலில் இறங்கினால் ஆகாதா என்ன? யாரிடமும் சொல்லி விடுமோ என மெல்லக் கீச்சிடும் முழுதாக மூட இயலாத கதவை, நிறுத்தக் கொடுத்திருக்கும் சிறு கல்லை மெல்ல நகர்த்தி, வெளியே பாயும் காற்றைக் கொஞ்சம், அனல் அடிக்கும் இச்சிறு அறைக்குள் வரவிட்டால் தான் என்ன? நிலவின் அமுதக் கிரணங்களை ஏந்தி, குறுகிய இடைவெளி வழியே சொட்டு சொட்டாய் இறக்கும் தென்னங் கீற்றுகளைச் சுழற்றி ஓடும் வாடைக் காற்றின் வாசனையை இங்கேயும் உள்ளே அனுமதிக்கலாமா?

கசங்காப் படுக்கையின் மேல் நவீன ஓவியம் போல் புரியா வரிகளை எழுதப் போகும் நம் அசைவுகள் தான் எத்தனை? திசைகளை சென்று அடையப் போகும் நம் ஆடைகளின் சுருண்ட மடிப்புகள், இப்போது அடைகாக்கும் அந்தரங்கங்களை இருளுக்கு காட்டப் போகும் நொடி தான் எது? ஒருவரும் தோண்டியிராத கிணற்றுக்குள் இருந்து, சூழ வளர்ந்திருக்கும் கருஞ்சருகுகளை விலக்கி, ஆழத்து நீரை இறைத்து இறைத்து தரையை நனைக்கப் போகும் காலம் தான் எத்தனை குறுகியது? பூமியெங்கும் ஊறியிருக்கும் ஈரத்தை ஈர்த்து வந்து, இழுத்து வந்து நுனிப்புள்ளியில் விண்ணைப் பார்த்து எழுப்பும் ஊற்றுப் புள்ளியை, எத்தனை நிமிடங்கள் தான் காத்து வைப்பது?

நீல மேகங்கள் குழுமிக் கொண்டிருக்கின்றன. அதற்குள் புதைந்து கொள்வதற்குள், அதன் மென்மைக்குள் தலை அமிழ்த்துக் கொள்ள, அதன் தீரா சுரப்புகளைச் சுவைத்துப் பெருமழை பெய்ய வைக்கும், வெம்மையின் நரம்போடும் இக்கைகளை, இச்சமயத்தில் எங்கு தான் வைத்துக் கொள்வது? அதன் விரல்கள், உள்ளங்கைகளுக்குள் வேர்த்து சொட்டும் வியர்வகளை நழுவ விடுகின்றன.

இந்த விழிகளை, இந்த நுனி நாசியை, இந்த செவ்விதழ்களை, இந்த பூமயிர் உலையும் பொன் கழுத்தை, இந்த அமுது நிறைத்து தளும்பும் நிறை மார்புக் குலைகளை, சரிவில் இறங்கும் கொப்பூழ்ப் பள்ளத்தை, உயிர் ஊறிச் சிலும்பும் பூமேடையை, செழும்தெழுந்துத் திமிறி நிற்கும் வலுத்தொடைகளை, தாங்கிப் பதிந்திருக்கும் பூம்பாதங்களை, மழைக்காலத்தில் பசுந்தோட்டங்களை வந்து வந்து மூடிக் குளிரில் நனைத்து, சிறுமழை பெய்து ஈரத்திலேயே வைத்திருக்கும் கருமுகில்களைப் போல், ஏன் இந்த வர்ண ஆடைகளுக்கும், மின்னும் நகைகளுக்குள்ளும் புதைத்து வௌத்திருக்கிறாய்?

ஒவ்வொரு திரையாக விலக்கி விலக்கி, ஸ்வர்ண சொரூபம் காணும் அந்த முதல் நொடிக்கு, இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும், நான்?

Saturday, October 06, 2018

நிழல்வேகப் பயணி.

ன்று இந்த இரவுடன் கழியட்டும் இந்தக் குளிர், நாளை வருவது மற்றொரு குளிர். தலைக்கு மேல் விரிந்திருக்கும் கருங்கூந்தலில் எண்ணி முடிக்கவியலா தொட்டறியா முடியா இந்த மின்னும் மல்லிகை மொட்டுகளை, நாளை இரவில் வேறொரு இடத்தில் காண்போம். இந்த நறுமணம் மிதக்கும் தென்றல் இத்தோடு கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளட்டும், நாளை வீசட்டும் மற்றொரு ஈரக்காற்று.

இந்தத் தொடுகை இந்த இரவுடன் அடங்கட்டும், நாளை தொடங்குவது வேறொரு தீண்டல். இந்தக் கோதல், இந்த மென்சூட்டு முத்தம், இந்த தடவல், இந்த கலைந்த விரிப்புகள் இந்த ஒற்றை நிலவின் அடியில், சில்லிடும் மரநிழல்களுக்கிடையில், சரசரக்கும் பாம்புகள் போல் பின்னிக் கிடக்கும் இந்தப் பிணைப்புடன் முடியட்டும், நாளை இரவில் துவங்கட்டும் மற்றொரு பிணையல்.

இந்தக் கிசுகிசுப்பு, இம்முணுமுணுப்பு, இம்முனகல், இவ்வியர்வை, இவ்வெம்மை, இந்த நடுக்கம் இன்று இந்த பின்னிரவின் கடிகாரச் சத்தத்துடன், இந்த சுவர்ப்பல்லியின் ரீங்காரத்துடன், இந்த சில்வண்டுகளின் ஊதலுடன், இந்த நீர்த்தவளைகளின் உரையாடலுடன், வந்து குழுமியிருக்கும் கருமுகில் கூட்டங்களின் இடியோசையுடன் இணைந்து கொள்ளட்டும்.

துளிக்குருதி பூக்கும் இந்த நகக்கீறல்கள், இந்த சுவைக்கும் பற்பதியன்கள், இந்த திசையறியாப் புரளல்கள், இந்த சில்லறை முடித்தூறல்கள் இந்த மெளனத்துடன் சேர்ந்து கொள்ளட்டும். நாளை மிஞ்சட்டும் சில சொற்களும் சில பார்வைகளும் சில உதட்டுச்சுளிப்புகளும் சில கண்காட்டல்களும் அவை மீட்டுக் கொண்டு வருகின்ற மற்றுமொரு நாடகத்தையும் அதன் உணர்வேகங்களையும்.

Thursday, September 20, 2018

அகமெழு சந்தம்.



தேவி,

சொற்சுழலில் மிதக்கும் ஒற்றை இலை, நீர் தாங்காது மிதக்கும் வெளி இது. மின்னல் ஒளியின் கணத்தில் ஓர் அறிதல், இம்முத்தம். பேரருவிக் கீழ் எப்போதும் ஒரு குளிர்ச்சி. பெருகும் ஆற்றங்கரையில் நகரும் நண்டின் கீறல் இவ்விரவு. போதும்...மோதும் என முட்டிக் கொள்ளும்  கொழுத்த முகில்களின் மின் அதிர்வு இக்கூடல்.

சிறு சிறகுகளால் உரசிக் கொள்ளும் சிட்டுக்குருவிகள் அலகு கோதும் அனல் இம்மாலை. தேடிச் சேர்த்த செல்வம் மேலேயே உறங்கும் கஞ்சன் கைநழுவ விடும் காசு இச்சொற்கள். வானவில் எழும்பும் எதிர்வானம் இவ்வூடல். முதல் குரலின் முதிர்மை இவ்விலகல். மழைக்காட்டின் மண் கவ்வும் அடிமர வேர் இத்தழுவல். கிளை வளர்ந்த மரம் மேல் படரும் கொடி இவ்விறுக்கம். கூழாங்கற்கள் பதிந்து கிடக்கும் பாதை இவ்விழி அழுத்தம்.

தேங்கிய வனத்தின் தேன் சுரங்கம் போன்றது இளமை முளைத்த முதல் சேர்த்த இவ்விருப்பம். மலை மூதூரும் மின்மினி கண்ட அளவில் இம்மேனி அறிதல். அடியாழப் பாறை மிதக்கும் சூடான மலைக்குழம்பின் அடர்த்தி இப்பார்வை. நீர் சுமக்கும் கலயம் போல் ஒரு தளும்பல். பின்னிரவுக் குளுமை போல் ஒரு தீண்டல். முன்மாலை மல்லிப் பாத்தியில் நடத்தல் போல் ஒரு தூண்டல். நீள் நகங்கள் எழுதும் முடியாக் காவியமொன்றின் அறியா அசைவுகள், குன்றா இவ்விசைவு.

திரும்பல் இல்லாக் காலநதி சுழித்துப் பெருகியோடும் இவ்வெளியில் ஒரு படகென உனை நினைத்து தினம் எழும் அடங்கும் இம்மனம் நிறைய, குழலென குழலிசையென நீள்சுருள் குழல் வந்துத் தீண்டித் தீண்டி மணங்காட்டும் ஒரு கனவுக்குள் விழிக்கிறேன்.

திசைகள் எல்லாம் மலர்களென மலர்ந்திட, வானும் நிலமும் வசந்தங்களால் நிறைந்திருக்க, உன்னிரு பாதத்தூளிகளைக் கண்டு சிரம் கொண்டு அதில் முட்டி, செங்குருதியால் நகங்களைக் கழுவ சித்தம் கொண்டு தேடியலைகிறேன்.

சிலையென நின் தேகம் செதுக்கிச் செதுக்கி பாறையிலிருந்து எடுத்த வெண்ணைக்குழைவென நிற்கும் வளைவெழிலில், தேவி, என் மனக்கன்று சுற்றிச் சுற்றி வருகிறது. பாதமுதல் சிரம்வரை ஒவ்வொரு கணுவிலும் அழகு பூத்த பசும்பொழில் அரசி நீ.

பாதமென எழுந்த இரு பூங்கொத்துக்கள் இம்மண்ணில் வைக்கின்ற நொடிகளில், என் மனதில் எழும் முதற்சொற்களால் அவற்றை அர்ச்சித்து நிரப்புகிறேன். பத்து மொட்டுகள். பத்து மகுடங்கள். ஐந்தைந்தாய்க் குழு அமைத்த புறாக்குஞ்சுகள். வைக்கின்ற ஓவ்வோர் அடியிலும் அலைகளை அமைதிப்படுத்தி, அருள்கின்ற அமுதக்கட்டிகள். கனிந்த கரைந்த செழுந்தொடைகள். தேவி, நீ பிறப்பிக்கும் இப்பிரபஞ்சத்தின் மூலம் உனதேயல்லவா. நீள்சுடர். அணைப்பின் வெம்மையின் ஊற்று. தீரா சுழல். கனிந்துருகும் கனல். அள்ளி எரிக்கும் அனல். முத்தியெடுக்க ஈரம் பதிகின்ற முத்துத்துளி. திகட்டா மணம். 

Friday, June 29, 2018

வா..வா..காமா..




சென்றெதிர் கொள் இப்பனி இரவு முழுதையும்!
குளிர் நீர் துளைக்கும் எலும்புகள் நடுங்க, மூழ்கி அடி காண்!
மென்மல்லி மணம் முகர்ந்தறி!
பிறை வளைவு தடவி பிறவிப் பலன் அடை!
முள் காட்டில் முன் சென்று குருதித்துளி பூத்திடு!
கூம்பிய தாமரை மொட்டு மலர்த்தி மகரந்தம் சுவை!
பின்னலிட்ட கிளைகளைப் பிரித்து சிற்றிலைக் கீழ் உருண்ட சிறு செங்கனி கடி!
வான் நிறை மீன்களை எண்ணி முடி!
வாடைக்காற்று தூண்டும் சூட்டைத் தணி!
நடுங்கிக் கொண்டே நில்லாது நகர்!
கணுக்கால் ஊன்றி மாடத்து விளக்கை அணை!
மழையென்றொன்றைப் பெய்து உலர் தரை நனை!
திரண்ட முகில்கொத்துகளை ஈரம் சுரக்கச் செய்!
பேரரவு ஊரும் தடம் பதி!
வெயில் அருவிக் கீழ் வேர்த்த சுனை ஆகு!
திரை விலக்கி நாடகம் உணர்!
திசைகள் தெரியா தீ எழுந்தெரிக்கப் புணர்!


Saturday, March 31, 2018

அணை தீண்டும் மதில்.


பேரறியா வனங்களின் மேல் எங்கெங்கெங்கிருந்தோ வந்து குழுமியிருந்த கருமுகில் கூட்டங்கள் நாளென்றும் இரவென்றும் பெய்து குளிர்ந்த மண்ணில் ஊறிய நீர்த்துளிகள் ஒன்றிணைந்தன. தாமே உருவாக்கிய பாதைகளில் ஒன்றோடொன்று இணைந்திணைந்து துளிகள் கோடுகளாயின; கோடுகள் ஓடைகளாயின; சிற்றோடைகள் சிற்றாறுகளாயின; சிற்றாறுகள் அருவிகளாயின; பேரருவிகள் நதிகளாயின; நதிகள் சேர்ந்து சேர்ந்து பேராறாகின; பேராற்றைத் தேக்கி வைத்த மதில்களாலான அணையை கணந்தோறும் முட்டி மோதித் தத்தளிக்கின்றது பெரு நீர் வெள்ளம்.

கரைகளை மீறத்துடிக்கும் பேரார்வம். ஈர மண்ணைக் குழைத்த ஓரங்களில் நாணல் செடிகள் பூத்து நிறைத்த வெண் படலம். அலைந்தும் குழிந்தும் தழைந்தும் குவிந்தும் தடுமாறும் மேல் தளத்திற்குக் கீழே நீலம் கரைந்த அடியாழம். பெரு முதலைகளும், ஐந்தடக்கல் போலும் ஆமைகளும், முள்ளென்றேயான மீன்களும் நீந்தும் ஆளறியா உலகு. தங்கமீன்களும் தவளைகளும் நஞ்சில்லா சிறு பாம்புகளும் விளையாடுதல் கண்டு நீந்த நனைதலுக்கு இறங்குவோர் கவ்வப்படுவர்.

அசட்டு தைரியத்தாலும் ஆர்வத்தாலும் தரை தொடாக் கால் கொண்டு உள் நுழைவோர் மேல் முதலில் சிறு பல் படும்; ஏதோ ஒரு செடி என்ற நினைவில் தள்ளி விடுவர். சற்றே கூரான நகங்கள் தோலெல்லாம் கீறிச் செல்லும். புதுக்குருதித் துளிகள் துளிர்த்து உடனே கரையும். எரிச்சலில் ஈரம் மேவும்.

மஞ்சு பொழியும் முன் மயில் நவிலும்; நதி நுரைக்கும் முன் கரை நாணல் நாணும்; வான் நிறையும் முன் புள் அறியும்; கண் காணும் முன் மனம் உணரும். தேன் தடவிய அம்பின் நுனி கூராய்க் கொல்லும் திசைகள் ஆயிரம்.

மேலே விரி ஆகாயநீலம்.. கீழே நீரீரம். இருள் நதி நிறைக்கும் ஒளிப்பூச்சிகள் மிதக்கும் வழியில் விழிகள்.

Pic :: https://fineartamerica.com/featured/black-and-white-erotic-stefan-kuhn.html

Tuesday, November 07, 2017

நீலாம்பல் நெடுமலர்.25.


பொற்றனல். பைங்கிளிக்கூட்டம். வெண்முகில் சாரம். பூந்துகில் மடிப்பு. பண்மொழிப் பாவை.

தீச்சரம் தீய்க்கும் படுக்கைப் போர்வையின் பேச்சரவம் கேட்டிலையோ, நீ? மென்விரல் பிடித்திழுத்தணைத்திதழீரம் பரிமாறிக் கொள்ளும் இரவுப் போது இப்போது போதுமா? தேங்கும் நதி அணைக்கட்டில், ஏங்கும் உயிர் காக்கும் வந்தணைக்கட்டில்.

மெளனம் ஒரு விழி. மதுரம் மறு விழி. செந்தாமரைச் சேற்றிலூறி எழும் பொன் மாலையில், வெண்ணிலா வானிலேகும் முன்னிரவில், தென்றல் வழிகளில் குளிர்ப்பதியன் இடும் நேரங்களில், ராகமெழுப்பிக்குழலீனும் மோகக்கடலில் நீந்தும் சிறுமீன் நான்.

சிற்றவை நுழைந்த சிற்றெறும்பைப் போல் திகைத்து நின்றேன் உன் முகம் தெரியாமல் தென்படுகையில். செழுந்தீ எழுப்பி ஆகுதியாகும் குருதிக் குடுவையாய்க் குலுங்கல் இவ்வுடல் கொளும் அதிர்வு.

நேற்றைய நாள் ஒரு சொல்லில் முடிந்தது. நேற்றைய இரவு இன்னும் குளிர்மையாய் நீண்டு கொண்டே இருக்கின்றது.

பூப்பறிக்கும் குளிர் விரல்கள் கோதுதல் போல் இலை பரப்பி இதழ் பிரித்து மகரந்த மொட்டுகளை மெல்ல மலரள்ளும் பின் மணம் நிறைக்கும்.

இரு தாளொற்றி இரு கைப்பற்றி மற்றுமிரு விழிகள் கண்டு மாற்றுரு கொண்டு வாழ்நாளெல்லாம் வனைந்திருக்க.

Tuesday, March 07, 2017

நன் இனிப் பால்.

குனிந்த முகத்தின் கனிந்த இதழைத்
துணிந்து மலர்த்திப் புரள்.

கனியே உனையே இனியே நினையேன்,
தனியே படுப்பின் துயர்.

உம்மைக் கருதினேன் வெம்மை பெருகினேன்.
நம்மை எரிப்பது தீ.

விரல்தொடு வில்லாய் விழிதொடு விண்நீர்க்
குரலெடு, குன்றுது நாள்.

தளிரிலை அங்கே கனியிணை இங்கே
களித்திடு என்றது யார்?

குவிமலை மையம் குவிந்தது எண்ணம்
கவிழ்ந்தது வாயென்ற நா.

Thursday, January 05, 2017

நீலாம்பல் நெடுமலர்.11.


கல் விளக்கின் சுடர் நிலையாக நின்றிருக்கின்றது. பொன் கல்லால் செதுக்கி வைத்த ஒற்றை விரல் போல் குவிந்து கீழகன்று மேல் குறுகிக் கூர் நுனி கொண்டு வானோக்கி ஒரு சிகரம் போல். செழும் செவ்வண்ணம் அடிவானின் சிவப்பு போல் அடியில் தேங்கி குவிகின்றது. புதுக்காலை கீழ் ஆகாயம் போல் இளமஞ்சள் நிறம் பரவிய மேல் பகுதியைத் தாங்கி நிற்கும் சுடர் ஓர் அற்புதம்.

சுடரைத் தீண்டும் எண்ணம் கிளரச் செய்யும் இளமனதை. சுடர் எப்போதும் எரிந்து கொண்டிருப்பதில்லை. விளக்கின் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கையில் தூண்டும் எரி அகம் கிளறிப் புறம் ஏகப் பற்றி எரியும் செந்தீ. சிறியதாய்த் தெரியும் திரியை வெம்மை தின்று கொண்டிருக்கும்.

அணையாச் சுடர் ஆளும் புடவியை பலகோடி சிறு சுடர்கள் காக்கின்றன. அவ்வெம்மை தீராதிருக்கும் வரை ஜீவ செழுமை நிறைத்துக் கொண்டிருக்கும் இவ்வெளியை.

Wednesday, November 30, 2016

நீலாம்பல் நெடுமலர்.5.


செம்மண்ணைச் சேறாக்கி வண்டல்மண் சீராக்கி
தம்முடலில் தார்ப்பாய்ச்சித் தானுழைக்கும் - பெம்மானே,

உம்முடனே கூடவரும் உம்முயிரே போலான
வெம்புனலை ஊற்றெடுக்கும் வெள்ளெருது - அம்மானே,

ஏரோட்டி எத்தனையோ ஏற்றத்தில் நீராட்டி
வேரோட்ட வேர்வையில் வெந்தவும் - போராட்ட

வாழ்விதிலே கண்டதென்ன கொண்டதென்ன உண்டதென்ன
தாழ்நிலையில் நின்றதென்ன வென்றதென்ன சென்றதென்ன

குப்பைகள் கோனாகும் உப்புத்தாள் ஊராளும்
இப்பொழுதில் இட்டதெல்லாம் தொட்டதெல்லாம் காய

நிழலுண்டா நீரமரத் துன்பம்போய் இன்ப
விழவுண்டா வீணம்போய் வீரர்போல் உள்ளத்
தழலுண்டா தன்னையே தானறியா வாழும்
விழலான நெஞ்சுள் விழலாகா தாசொல்
உழவின்றி உய்யா துலகு.


ற்றிலே நீரிலை வானிலே காரிலை
சேற்றிலே பூவிலை ஈரமிலை - காற்றில்
கழலிணை வைத்து மழைதேவி வாராய்
உழவின்றி உய்யா துலகு.


ழமுறை நீக்கு; புதுமுறை நோக்கு;
கழனியைக் காத்துக் கதிரை முழுதெடு;
புண்ணாக்கு சேர்த்துப் புதுப்பால் மணநுகர்;
மண்ணாக்கும் பொன்னின் மதிப்பை உயர்த்து;

வெளிவாங்கல் குன்றிட உள்விளைச்சல் ஏற்று;
கழிச்சலை மீள்பயன்செய்;
வீணை சலிசெய்;
விழவன்று கூறு கதிரவனே நன்றி;
உழவின்றி உய்யா துலகு.


காஞ்சுபோச்சு எச்சயெல்லாம் தீஞ்சுபோச்சு பச்சயெல்லாம்
ஓஞ்சுபோயி மிச்சமுள்ள ஒத்தசொட்டும் - மூஞ்சுபோயி

வாடுதையா வந்தசெடி நோகுதையா வெச்சமனம்
மூடுபனி முந்துதையா - தேடும்
மழராசா வாரோணும் மத்தவனும் சொல்ற
உழவின்றி உய்யா துலகு.

பிழையாகச் செய்க; பிசிறின்றி நெய்க;
மழையாகப் பெய்க; மயங்கித் - தழைந்து
முழவொலி முற்ற முயங்கிப் புணரும்
உழவின்றி உய்யா துலகு.

Monday, November 28, 2016

நீலாம்பல் நெடுமலர்.4.

போதுமே என்கிறாய் போதுமா என்கிறேன்
வேண்டாமே என்கிறாய் வேண்டிய மட்டும்
பொறுமையாய் என்கிறாய் போதையே என்கிறேன்
போகட்டும் என்கிறாய் போகாதே என்றால்
இருக்கிறேன் என்கிறாய் போல்.

வருகிறாய் வந்தபின் வேனிலில் நீர்போல்
தருகிறாய் தண்மைக் கருணை - கருக்கலில்
பொற்கதிர் போலநீ தோன்றிடும் வேளையில்
சொற்களைத் தேடுவேன் நான்.

அழகே அமுதே அணியே அருளே
தழலே தனியே வருக - சுழலே
சுகமே தருமே முழுமை முகமே
அகமே அணைப்பின் இதம்.

வானமே கானமே நாணமேன் நேரிலே
பானமே பௌர்ணமி மேகமே - தானமே
தந்திடும் முத்தமே தங்கமே தாமரை
முந்திட முன்வரும் நாம்.

கடல்சூழ் கியூபா கடமைசூழ் கோவாய்
திடம்சூழ் திறத்தில் வலியை - இடத்தின்
இடம்நிறுத்தி எல்லார்க்கும் எல்லாமும் என்றார்
தடம்சூழ் நடப்பார் தவறாது வாழ்த்தும்
பிடல்காஸ் டிரோவைப் புகழ்.

மொட்டாகிப் பூவாகிப் பிஞ்சாகிக் காயாகி
எட்டாத செங்கனியாய் காயாகும் - கிட்டாத
தென்றான தேதுமில்லை நில்லாமல் எய்தாலே
வென்றாக வேண்டுங்கூர் வில்.

Thursday, November 24, 2016

நீலாம்பல் நெடுமலர்.3.


ன்னிசைச் சிந்தியல் வெண்பா::

மாதொரு பாகனும் மால்திரு மார்பனும்
தூதொரு கண்ணனைக் கேட்டது “எப்படி?”
“வேய்ங்குழல் வித்தை!” சிரிப்பு.

நேற்று முகில்கொண்டோம் இன்று மழைகொண்டோம்
ஊற்றுடல் தின்றோம் உதிரருசி ஓநாயைக்
கொண்ட விரல்கள் நமது.

மொட்டாய் மலராகி மெட்டாய் இசையாகி
தொட்டாய் விழைவாகிச் சிட்டாய் விரைதலில்
நட்டாய், அடைந்தேன் நலன்.

வாசமலர் வீசிடு வர்ணமஞ்சள் பூசிடு
நேசமொழி பேசிடு நெஞ்சில் முகிழ்த்த
நினைவெலாம் நின்றெழெட் டும்.

எடுக்கையில் கொண்டது எண்ணிய ஒன்றே
தொடுக்கையில் சென்றது ஒன்றே பலவாய்
விடுக்கையில் பல்லா யிரம்.


நேரிசைச் சிந்தியல் வெண்பா::

வாட்டுதல் உன்னிருப்பு வன்கனலோ உன்னின்மை
மூட்டுதல் உன்விழிகள் முட்சரம் பூட்டுவதோ
வேட்டுவனை வெல்லும் விலங்கு.

ஆழ்ந்த ஒருபார்வை வீசினாய் ஆண்டுபல
வாழ்ந்தது போன்ற நினைவினில் - போழ்ந்தாய்
மனதை உனதாக் கியே.

உலாவும் இடமெலாம் உன்முகம் எண்ணம்
துழாவும் பொழுதெலாம் உன்சொல் - விழாதே,
விழுந்தாய் மனமே விழி.

தொட்டணை தூறும் உடற்கேணி மேனியைப்
பட்டணை பெண்ணினை அஞ்சுதல் - விட்டணை
வில்லவன் தேரில் விரைந்து.

தந்தது புன்னகை கொண்டது காதலை
உந்தியது சொல்லென உன்னிடம்  - முந்தியது
”பஸ்பாஸ் புதுப்பிச்சாச் சா?”


Wednesday, June 29, 2016

மனசின் நடையில் விரியா நீயும்... (A)

டிக்கட்டுகளில் மெளனமாக இறங்குகின்றது இரவு. வழியும் தென்றலில் உலவுகின்றது காதல். முகில் திரளில் கோடுகளாய் மின்னல். தொலைவுக் காற்றில் ஈரம்.

தோட்டத்தில் உறங்கும் குறும்பாடு. மதில் மேல் மதுக்குடுவை. இலைகளில் நழுவும் வெண்ணொளி. பனிச்சரங்கள் விளிம்பில் அரவம். வேர்களில் ஊடுறுவும் இளநீர். உறக்கத்தில் ஊர். வழி தவறும் மொழி. புலர்பொழுது யுகம். தடுக்கும் கிளை. கூர் கரை உடைப்பு.

ராக்கனவு. ரத்தம் சுவைக்கும் நடுக்கம். முதலை உண்ணும் இளம் கன்று. சிறை புகும் சிறுகுழல். பறை முழக்கம். பதியன் போடும் குருத்து.

விண் நிறை உயிர். சுருள் சுருள் அவிழ் தென்னை. இறைக்க ஊறும் கேணி. மறைந்தே கரையும் குயில். தூவும் மழைப்பன்னீர். குழையும் மண். குளிரும் இமை. மலை கிளரும் நிழல். பிணை கேட்கும் இணை.

புதிதாய் பூக்கும் புழு.

அசை. இசை. அசைக்கும் இசை. இசைக்கும் அசை. இசைக்கும் அசைக்கும் விழைவு.

பழைய விளக்கு. புதிய தீ. எரி குரல்.

புதரில் ஒளியும் மான்.  சிறகடிக்கும் கிளி. நடுங்கும் தொழுவம்.  தலைகீழ் பேரருவி. கடும்பாறை நனையும் கருமழை.  முழுநிலா நிழல்.

பொன் ஊறும் பழங்கள். தேன் விரவும் ரசம். காணா பயம். விழி ஒதுக்கும் நாணம். நாண் அதிரும் ஒலி. வினை நுட்பம். விருந்தில் பொங்கு தணல். மேல்மாட அன்னம். நுனி படர்க் கொடி.

மிகை நடத்தையில் மிளிரும் கர்வம். புனல் வழியில் நகரும் ஓடம். மிருதுவான முகத்தில் பதியும் முத்தம். மென்சூட்டில் பூக்கும் நாணம். நெற்றிக் கோட்டில் சொட்டும் வியர்வை. செவிமடல் சூட்டில் புருபுருக்கும்மென்மயிர். அனல் தீட்டும் ஓவியம்.

திரி கருக்கும் அகல் சுடர். சுடர் உமிழ் செம்மலர். மலர் நிறை ததும்பும் நுரை. நுரைத்துப் பொங்கும் வெண்பனி. பனி கரந்த நீள்விரல். விரல் தடவும் நாசி. நாசி நகரும் இருள். இருள் கொள்ளும் ஈருடல்.

பெருமூச்சு.

Thursday, March 31, 2016

கண்ணாடிச் சிறுமணிகள்.

கொஞ்சம் கவிழ்க்கப்பட்ட சதுரங்களாய் வெட்டப்பட்டுக் கோர்த்த சிறு கண்ணாடிச் சரங்களின் கீழே நிர்வாணமாய்க் காத்திருக்கிறாள் அவள். சிறு நெருப்புத் துண்டங்களாய் ஜ்வலிக்கும் அவற்றைத் தடவிக் கொண்டு செல்கின்றன வானப் பேரரசனின் ஒளிநகங்கள். அவளுடைய திரண்ட வனப்புகளின் மேல் பற்றியெரிகின்றன பார்வைகள். அவளை அணுகுகையில் தம் வேட்கையை, வெப்பத்தை, வியர்வையை தாமே காணும் யாரும் வியந்து பயந்து உடன் விலகுகின்றனர்.

அவள் நகங்களின் மேல் அரைத்துப் பூசியிருந்த கண்ணாடித் துகள்களைத் தம் கழுத்தின் அடிப்பாகத்தில் செருகிக் கொண்டு செந்நீரை வடிக்கத் துணிபவன் ஒருவனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள் அவள். வளைந்திளகும் செழித்திடையைச் சுழற்றிக் கோர்த்திருந்த கூர்நுனி மாவிலைத் தோரணங்களில் தம் சிலிர்த்துச் சீறும் நாகத்தை சிவப்பித்துக் கொள்ளும் முடிவினனைக் காணக் காத்திருக்கிறாள் அவள். இமை நுனிகளில் செருகி வைத்த துளிக் கூர்மைகளை மூச்சுக் காற்றில் உருக்கி வீழ்த்தி வீழ்பவனை, அனலாடிய ஓர் இரவின் மையத்தில் கண்ட கனவின் நினைவில் காத்திருக்கிறாள் அவள். தன்னை இறுக்கிச் சுழன்றிருக்கும் கண்ணாடி மணிகளைக் கவ்விக் கவ்விக் களைந்து, தன் மின்மேனி மேல் நில்லா நெடும்பயணம் செல்லும் பெரும்பயணியைத் தொலை வானின் பின்புறம் இருந்து வரும் நிறைந்த கருமுகில் கொண்டு வந்து சேர்க்கும் என்று காத்திருக்கிறாள் அவள்.

Thursday, September 20, 2012

மேற்கில் பொழிந்த நதி! (A)


மூடுமேகங்கள் விரைந்து செல்கின்றன. வனத்தின் பச்சைப் பந்தல்களில் முன்மாலைப் பனித்துகள்கள் போர்வையிடுகின்றன. நிலா முற்றத்தில் வெட்கிச் சரியும் தாவணிப் பெண்கள் போல் எட்டிப் பார்த்து மறைகின்றது. தொலைதூர நட்சத்திரங்கள் தங்கள் கள்வெறி குடித்து மாந்திய கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி வர்ணஜாலம் காட்டுகின்றன. கூடடைந்த சின்னஞ்சிறு பறவைகள் தத்தம் சிறகுகளின் கதகதப்பில் காய்ந்த புற்கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு அணைக்கின்றன.

முன் நெற்றியில் வந்து விழுந்த ஒற்றைப் புல் கேசம் விழிகளை மறைக்க முயன்று காந்தள் மலர் விரல்களால் வெகுவாகத் தோற்கடிக்கப்பட்டன.

புகைப்படலம் எழும்பிப் பரவும் வீடு கொண்ட நங்கை, பாறை மீது மோதி மோதி விலகி விலகிச் செல்லும் நதியின் நுரை போல் தெறித்து அணைந்த வேளையில் சருகுகளின் மேல் தென்றலும் மெல்ல நடை போடுகின்றது.

Monday, March 01, 2010

Erotic ஆசிரியப்பாக்கள்.



மென்மையும் பெண்மையும் மிளிரும் தமிழ் வரிகளில் எழுதிச் செல்லும் ஆசிரியப்பாக்களில் இளமை பறக்கின்றது. வெண்பாத் தளத்தில் எழுதிய சில ::

ரோமாபேர். பதின்வயது. செவ்விளமை. கிடார்மேனி.
ரோமம் பஞ்சு.
ஆமாமாம் எனதுபதில் அழகியாவள்? எனக்கேட்டால்.
அணைத்துப் பார்க்கத்
தாம்மாவென் றாற்றளிர்ப்பூ வுடைநீக்கிப் பஞ்சணையில்
தள்ளிச் சாய்த்துத்
தேமாயென் பதாய்முடிக்கச் சொன்னாளோர் முத்தம்பின்
தேனாய் "மாமா".

மற்றோர் இலக்கணத்தின் படி ::

பார்த்துத் தடவு; பளிங்கு மேனிப்
பாவை நெருப்புக்கள்;
சேர்த்துக் கொல்; செதில் உரித்த
செம்மீன் நிலத்தில்காண்;
வேர்த்த கைகள் சொட்டும் விரலால்
வெயிலைக் குளிராக்கு;
போர்த்தும் போர்வை நழுவ வெட்கப்
பொழிலில் திளைத்துப்பார்.

கூந்தல் கலைத்துக் கண்கள் நோக்கு;
குத்தும் மார்நுனிகள்;
காந்தள் பூவை வண்டாய்க் கவ்வு;
கருமைப் புருவமிடைச்
சாந்துப் பொட்டைக் கவர்ந்துக் கம்பிச்
சன்னல் மேலொட்டி,
ஏந்தும் தளிரில் ஏஞ்சல் மலர்மேல்
எங்கும் முத்தம்தா!

இறுக்கம் தளர்த்து; இடையில் கைவை;
இதழ்மேல் வரிகளைக்கல்;
நெருக்கம் வளர்த்து ஈர முதுகில்
நகக்கோ டிழைத்துக்கொள்;
சுருக்கம் மலர்த்து; சூடாய்க் குளித்துச்
சுழலில் இறங்கிப்பெய்;
தருக்கம் தவிர்த்துக் கிறுக்காய் நடந்து
தவறைச் சரியாய்ச்செய்;

மற்றும் வேறு வகை ::

இருள்பொறிந்த தனியறைக்குள் இமைகரைத்தப் பொழுதொன்றில்
இயங்கா நின்றுள்
திருநிறைந்த வானவில்லைத் திசைகாட்டும் முள்ளொன்றின்
திணையில் பாடல்
பொருள்வயிந்த வார்த்தைகளுள் புலப்படாத மர்மத்துப்
பொருண்மை ரூபம்
உருவமைந்து வந்தாற்போல் உள்முகிழ்த்து எழுதாநின்
றுரைத்த திப்பா.

பொடக்காலி மூலயில செவப்புநிறத் தூணிருக்கு.
பாட்டி போயி
மடக்கிவெச்ச நாக்காலில மம்முதரு கணக்கா
மரிச்ச தாத்தா
கடன்வாங்கப் போனவரு காத்தாயி வர்றாருனு
கத்திச் செத்தா.
கெடந்துகனா நெனப்புலயும் நெழல்போலத் தளும்புதுசெங்
கெளவித் தூண்.

Wednesday, December 30, 2009

முரண் உணர்.(A)

ஸ்ட்ராபெர்ரி நிறம் விரும்புவாள்.
சீதாப்பழத்தைத் தோல் வரை தின்பான்.
பாயும் ரயிலுக்குள் பின்னே நடப்பாள்.
கடப்பாறை நீச்சல் தெரிவான்.
தோல் என்பதால் ஷூ வெறுப்பாள்.
தனியாய் மலையேற்றம் போவான்.
தோழியிடம் பிணக்கென்றால் நிலவுடன் சண்டையிடுவாள்.
ஹாங்காங் படப் பேய்களின் ரசிகன்.
பப்பி1, பப்பி2 என்று பூனைகள் வளர்க்கிறாள்.
கண்களைக் கட்டி ரேடியோ அஸெம்ப்ளிங் செய்வான்.
நகங்களை ரத்தம் வரை கடிப்பாள்.
வாட்ச் கட்ட மாட்டான்.
கணக்கில் எப்போதும் அவள் நூறு.
டாய்லெட்டில் புத்தகம் படிப்பான்.
ஊட்டியில் பாட்டி வீட்டுக்குப் பக்கத்தில் முதல் தற்கொலை பார்த்தாள்.
லாரிக்கடியில் பிராய்ந்ததில் வலதுகாலில் அவனுக்கு ஒரு தழும்பு.
வானம் பார்த்து மேகம் எண்ணுவாள்.
பஜ்ஜி படர்ந்த தந்தியை உதறிப் படிப்பான்.
45க்குள் ஒருமுறை அண்டார்ட்டிகா அவள் ஆசை.
டாம் சாயருக்கு ஒரு ஃபேன் ஃபிக்ஷன் அவன் கனவு.
மழையென்றால் அவளுக்கு ஆஹா.
மழையென்றால் அவனுக்கு ஆகா.
கார்த்திகை கடைசி முகூர்த்த முன்னிரவில்,
மண்டபத்தில் டெக்கெடுத்து
'சிங்கார வேலன்' ஓடுகையில்,
சாத்திய அறைக்குள்
பூக்கட்டில் நடுங்க,
அவர்கள்
வேகமாய்ப் புணர்ந்தனர்.

***

(உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதியது.)

Friday, October 23, 2009

எரிதழல் தின்று வருக..! (A)

னல் கொண்ட மின்னல் ஒன்று கழன்று விழுகின்றது. விரிந்த விண்ணில் ஒரு வெற்றிடம் உருவானது. கருந்துளை போல் கிடைத்ததை எல்லாம் தின்று விழுங்கும் ஆவேசத்துடன் இளமைப் புகை நிமிர்கிறது. பூஞ்சைப் பற்கள் கொண்டு தடுக்கப் பார்க்கும் சுருங்கிய, வலுவிழந்த விரல்களை நசுக்கிப் போட்டு எட்டி உதைத்திட, நகங்களின் நிழல் கரைகிறது.

நரை ததும்பும் பூமியின் கரைகளை உடைத்துத் தகர்த்துப் பொடி செய்து, ஊதி எறிகையில் பிரபஞ்சத்தின் பின்புறத்தில் சென்று கரைகிறது. நடுங்கிடும் நட்சத்திரங்கள் கண்ணீர் சிந்திப் பெருகும் போது, வெள்ளைக் குள்ளர்கள் நடு விரல் காட்டி நகைக்கிறார்கள். பால்வெளியில் கீறல்களைத் தீட்டிய வெப்ப நேரங்களில் மென் கதிர்கள் வெளியேறுகின்றன.

மேகங்கள் சொகுசாய்ப் பூத்து கொண்ட அந்தர மேடையில் விளையாட்டு காட்டுகின்றன வானவில்கள். தீ தின்னும் பெருந்தீ கருக்கும் மலையின் உள்புறத்தில் கொதிக்கின்றது வெடித்துச் சிதற நெருப்புக் குழம்பு.

தார்ச் சாலையின் புறமேடுகளில் வேகப் பயணம், நிதானம் பெற்று, முன் சக்கரம் நின்று ஏறி, விரைவு பிடிக்க பின் சக்கரங்கள் புழுதி கிளப்பிப் புறப்படுகின்றன. பொன் சங்கிலிகளின் கண்ணிகளில் ஒவ்வொரு இறுக்கத்திற்கும் மின்சாரத் துளிகள் உறைந்து நிற்கும் போது, மேலந்தி வனத்தில் பருத்திப் பிசிறுகள் திசைகெட்டாய்ப் பறக்கின்றன.

ஓரமாய்ப் பழுப்பு படிந்த இரவின் குளிர் நாக்கு தடவும் ஒவ்வொரு நொடிக் கற்றையும், சடுதியில் காட்சிகள் மாறி, நீட்சிகள் மாறி, பாதாளத்திலிருந்து தலைகீழாய் எழுந்து வருகின்றன, ஒவ்வொரு விரலிலும் எண்பதாயிரம் ரெளத்திரங்கள் தின்ற எரிதழல் மிச்சங்கள்...!!!!

Friday, July 31, 2009

முயல் மருதாணி.(A)



பூஞ்சிவப்புக் கழுத்தைத் தடவும் காற்றின் கரங்கள். மேகம் கறுக்கும் நிறம் கழுவும் விழிப் புருவங்கள். நிழல் சுரக்கும் பெருமரத்தின் அடியில் ஊரும் துளி எறும்பு நுணுக்க திறங்கள். கைகள் துழாவும் போதும் நிரம்பாத பொன் பாத்திரங்கள். ஜ்வலிக்கும் சிறு தூறல் சிதறடிக்கும் மின்னல் பாய்ச்சல்கள். ரகம் ரகமாய்ப் பிரியும் மெளனம் தீராத பதறல்கள். மரகத மொட்டுக்கள் மறைந்து மறைந்து தலையாட்டும் மர்ம விலகல்கள். சிக்காத சிறு நடுக்கம் பற்றிக் கொள்ளாத போதும் ஏற்றுக் கொண்டதாய் ஓர் ஒப்புதல்.

நெருப்பாய் ஓடும் நீராவிக் கதிர்கள் நுரை பொங்கிப் பொங்கிப் பாய்ந்து கரைகளில் மோதி மோதிச் சிதறும். அலையாடும் நனைந்த கற்றைகள் புரளும் போது, விசிறியடிக்கும் அணுக்களில் அகலாத குளிர். பளிங்குப் பொழுதுகளில் பரவசம் நிரந்தரமாய்க் காலக் குடுவையில் நிரம்புகையில் தீப்பந்தம் மேலே துடித்து எரியும். சந்தம் கொண்ட பேரிரைச்சல் அத்தனை திசைகளிலும் திமிறிக் கொண்டு வீச, முட்களில் முத்து முத்தாய் வெப்பக் கரைசல் வெளுப்பாய் முனகும்.

மணல் துளிகளைப் பிசையும் நக நுனிகளில், விரல் கணுக்களில் கதகதப்பான எரிச்சலில் தன்னிடத்தைக் கண்டு கொண்டு ஆர்ப்பரிக்கும் சிறு கற்கள். புரண்டெழும் ஒரு போர்வை சொட்டுச் சொட்டாய் வீழும் முத்த மதில்களைக் கடந்து, திறக்காத ஒரு கோட்டை கோபுரங்களைத் தகர்க்கும் நேரம் வானம் மருதாணி பூசிக் கொள்ளும். வெப்பம் மிரளும் பார்வைகளில் வேண்டுமட்டும் சாயம் பூசிக் கொண்ட காதல், மூடியைக் கழட்டி தன் ஆர்வமுகம் காட்டும் போது இதழோரங்களில் நேர்க்கோடுகளாய் ஓடும் பருவம். மளுக்கென்று முறியும் மூங்கில் காடுகளுக்குள் சரக்கொன்றை மலர்கள் சரிந்து ஒரு வெம்மை நனைந்த மகரந்த உச்சங்களை உதறும்.

கீற்று இடைவெளிகளில் கொட்டிக் கிடக்கும் நிலவொளி. பனி நனைக்கும் ஒரு பல்லாக்கில் பவனி வரும் மோகன இசை, மூங்கில் முந்தானையைத் தழுவும். மதுக்குப்பிகளின் முனைகளில் ரசம் நிரம்பி நிரம்பித் தளும்பித் தளும்பிச் சுழன்று கனிந்து சரியும் போது காரமான ஒரு வாசம் காற்றில் பரவும். கிறங்கும் கீழிதழ் ரத்தப் பாய்ச்சலில் சிவந்து, கிளைத்த பரு மெட்டுக்களில் புதிதாய் ஒரு வெப்பத்தை ஏற்றும்.

பேயாட்டம் போட்ட மூங்கில் புதர்கள் பெய்யும் வெப்பம் சுருக்கும் தீயிலைகள் நிழல் போலும், நிழலின் நிஜம் போலும் பூவர்ணத்தில் பொறிகின்ற மின்சார ஆச்சரியங்கள். பிரமிப்பான போதையில் நகங்கள் நடும் கூற்றுக்கள் நடுக்கத்தில் கோணலாய்க் குளம் வெட்டுகையில் செந்துளிகள் காதுகள் விடைத்த முயல்களாய் எட்டிப் பார்க்கும்.

Friday, September 26, 2008

பிறழ் இல்லாப் புலர்தல்! (A)



ச்சைப் பூவுடல்! முத்து முத்தாய்ப் படர்ந்திருக்கும் மொட்டுத் துளிகளாய் ஈரக் கணுக்கள்! பனிப் பூக்களாய் கடுங் காட்டுக்குள் முகிழ்த்திருக்கலாம். வியர்வைப் பருக்களாய் விழித்திருக்கலாம். மஞ்சள் போர்வையாய் உள் துடிக்கும் உயிரைப் போர்த்தியிருக்கும் மென் சூட்டுத் தேகம். நகக் கூர்மைகள் காற்றில் விசிறுகையில் கிழிபடும் இருள் அணுக்கள்.

புற்களின் விரிப்பில் மண் துகள்கள். முன்னிரவு மழையின் முத்தப் பதியல்கள். எங்கிருந்தோ பெருகி வரும் பழுப்புக் காட்டாறு பொங்கிக் களித்துப் பெருகி, ஆரவாரமாய் அகோரமாய் மேட்டிலிருந்து பள்ளம் தேடிப் பாயும் பேரொலி கேட்கிறது. கூர் முகடுகளில் இருந்து கலைந்து, கரைந்து சிறு சிறு துகள்களாய்த் துவங்கி, ஒன்றோடு ஒன்று சேர்ந்து, இணைந்து பல்கிப் பெருகி உச்சத்திலிருந்து அச்சம் விட்டு, பிரவாகித்து வருகிறது பனிமழை.

அடிமரத் தடம் போன்ற இறுக்கம் உருகுகிறது. குழைவாய், குளிர்வாய், தீச் சூட்டின் தீண்டலின் உரசலில் நெகிழ்ந்து பிரியும் வெண்ணெய் வெள்ளம் போல்!

குளிர் நிலவின் கிரணங்கள் தடவுகின்றன. கழுத்தணியும் தங்கச் சங்கிலி கோணங்கள் மாற்றி குழறுகின்றது. ஒவ்வொரு திரும்பலும் அதன் முகத்தின் முனையை முற்றிலும் மாற்றிப் போடுகின்றது. கூந்தலின் சிறு சிறு குச்சிப் பாம்புகள் சிக்கிக் கொள்கின்றன சங்கிலியின் கூர் நுனிகளில்! செவிக்குள் பாயும் இரு இதயத் துடிப்புகள். கிடுகிடுக்கும் காடே நடுநடுங்கும் பேரிடி வானில் தடம் பதிக்கும் போதும், படபட துடிப்புகள் இதயம் வழி ஆழ கேட்கும்.

மடல்கள் முழுதும் ஈரம் சரம் சரமாய்க் கோர்த்திருக்கும். பூனை முடிகள் சிலிர்த்து நின்றிருக்க, மழைத் துளிகள் இணைக்கும் இலைகள் உரசும் சிலீர் சத்தமும் கூசச் செய்கின்றது. பூவிதழ் அழுத்தம் தாங்கா மகரந்தப் புறாக்கள் மடங்கி விழுதல் போல், புருவக் கோடு கலைகின்றது. ஒற்றை வியர்வைத் துள்ளி உச்சிப் புள்ளியிலிருந்து நாசியின் நடுக்கோட்டில் நடை போடுகிறது. இறுதிக்கு வந்து சொட்டுகிறது, சிவந்த உதடுகள் மேல்!

விழிகளின் கோட்டைக் கதவுகள் இறுக மூடியிருக்கும். காவல் வீரர்களாய்த் தனித்தனியாக காவல் காத்திருக்கும் இமை முடிகளின் வழியே கசிவது கண்ணீரா, மழைத்துளியா, வியர்வையா?

கல்வெட்டுப் பாறைகளின் மேலான அர்த்தம் கொள்ள இயலா ஆதி எழுத்துக்கள் போன்று வரிகள் வளைந்திருக்கும் உதடுகளின் மேல் வெப்பம் அனலடிக்கிறது. பொருள் அறிந்து உச்சரிக்க நெருங்க, ஒவ்வொரு வரியின் மேலும் ஏதோ சில காந்தத் பிசிறுகள். ஒட்டிக் கொண்ட துருவங்கள் பிரியும் முயற்சிகள் அனர்த்தமாகின்றன.

வெட்க நூலாடை மெல்ல மெல்ல விலகிப் பறந்தோட, படர்கிறது ஒரு போர்வையாய் பதற்றம். கரையைத் தாண்டி கரையத் துடிக்கும் பளிங்கு கரங்கள் மர்ம தேசங்களில் வெற்றி உலா போகின்றன. தடுப்பார் இல்லை. தடுப்பினும் விடுப்பார் இல்லை. விளிம்புகளின் நிறங்கள் மாறும் போது, பருந்துக் கொத்தலில் பரிதவிக்கிறது பகல் தெரியாப் பழுதிலா எழில்.

கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் பூத்திருக்கும் வானப் பெருவெளி போல் உடலெங்கும் சிலிர்ப்புப் பருக்கள். கரு மேகங்களாய் மறைத்திருக்கும் கடுங்கூந்தல். சுடுங்கூந்தல். மலரென மணமா, விழுந்த மண்ணின் மணமா, தகிக்கும் நெருப்பின் பூசல் நிறமா..?

நிறம் கழிந்த சங்கிலிகள் உரசும் தடாகம். குளக்கரையில் உரசும் அலைகள். தாமரை மொட்டுகள் காற்றின் கரங்களின் தீண்டல்களுக்கெல்லாம் தலையாட்டும். இலைகள் மறைக்கும் மலரின் கால்கள் ஒற்றையாய் நிற்கும். மீன்கள் துள்ளும். தேன் சுரக்கும் இதழ்கள் மெல்லத் திறக்கும் போது வண்டுகள் வாசம் செய்யும் பின்னிரவு நேரத்தில்...

பெரும் அமைதியில் அமிழ்கிறது சூழல்!!!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம் நன்றி :: iaolvz

***

குட்டிக் கதைகள் எழுதி தமிழ்ப் பரப்பை சுத்தப்படுத்தும் ஜென் குருஜிக்கு சமர்ப்பணம்.

Wednesday, May 28, 2008

பாயப் போகும் வேங்கையைச் சாயச் செய்யும் மான் இது.! (A)



மெள்ள, மெள்ள.. நம்மை மெல்ல, மெல்ல இரவு பெரும் பசியோடு வருகின்றது. வெப்பம் ஏறிய மாலையின் மேற்றிசைக் கரங்கள் கொதிக்கின்ற சிவப்பின் குருதியின் அடையாளங்களைப் பதித்துச் செல்கின்றன, வானின் பெரும் பரப்பெங்கும்..!

புதுத் துளிகளைத் தெளித்துச் செல்லும் குளிர் நிரம்பிய காற்றின் பயணம், தினம் தினம் ஒரே தடத்தில் பதித்துச் செல்கையிலும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் புதிதாய்க் குளிர்கிறது.

இரகசிய ஓசையில் ஒரு குரல் நகர்த்திச் செல்லும் இடங்கள், புது இருளில் குளிக்கின்ற பறவையின் சிறகை சிலிர்க்கச் செய்து அனுப்புகின்றது. வியர்க்கின்ற வெப்பம் பரவுகின்ற யுகம் போல் பரவி நிற்கின்ற தொடல், ஒரு நிலையில் உறையச் செய்யும் இதயத் துடிப்பை!

உஷ்...! என்று ஒரு மெளனத்தைப் பரப்பச் சொல்கின்ற மதம், இரவுகளில் மட்டும் இயக்கம் பெறும் அதிசயம் என்ன என்று, யாரிடம் கேட்பது? புள்ளிகளைப் பதித்து, பொழிகின்ற பனியின் கரங்களில் நனைகையில், இருளின் வேகம் கண்களின் வெம்மையில் பதுங்கிப் பின்பாய்வதென்ன?

சின்னச் சின்ன மொட்டுகளைத் தாண்டி, பெருங் கள்ளைப் பெறுங் காலம் கண நேரமாயினும், வெறுங் கனவாய்ப் பின் மறக்காமல், பரு பூக்கச் செய்தும் ஊருக்குக் காட்டுகின்றது, ஒரு நாடகத்தின் திரை விழுந்ததை அல்லது திரை விலக்கப்பட்டதை...!




Get Your Own Hindi Songs Player at Music Plugin