Saturday, March 11, 2017

தேவி நின் புகழ்

தேவி

செஞ்சுடரோ செம்மலரோ செவ்விதழோ செய்தவம்
பஞ்சிணையோ பால்கலமோ பற்றெரியோ உய்நலம்
வஞ்சினமோ வாய்நலமோ வன்வழியோ பெய்புலம்
அஞ்சுவனை ஆதரிக்கும் தாள்.

கோடானு கோடிகோள் ஓயா வெளியிடை
ஓடாநின்ற ஒற்றைப் புவிதனில் - பாடாத
பாடுபடும் பிள்ளையைப் பாராட்டத் தாலாட்டப்
பீடுடன் தோன்றியதுன் தாள்.

நெய்யகல் பூமுகம் பொய்யகல் தீநிறம்
கையகல் பொன்னொளி மையகல் கூர்விழி
தையலுக்குத் தேந்தனம் வையலுக்குத் தீங்குரல்
மையலுக்கு நீர்மணம், நீ.

அனல்பூ முகமே தணல்தேன் விழியே
புனலாழ் மனமே புதுஆ - மணற்றுளி
முத்தே மரகதச் சொத்தே மதுரசப்
பித்தாக்கும் பின்னும் நடை.

Tuesday, March 07, 2017

புதுப் பிள்ளையார்.

பல்லவி:

மூத்தபிள்ளை சுந்தரா...
முழுமதிநிறை மந்திரா...

கனிகொண்ட கள்வனே - மாங்
கனிகொண்ட கள்வனே - என்மேல்
கனிவாய்நீ கணபதியே...


அனுபல்லவி:

தந்தைக்குத் துணைவன்நீ
தம்பிக்கு நண்பன்நீ
அன்னைக்கு அன்பன்நீ
அன்பர்க்கோ யாவும்நீ... (மூத்தபிள்ளை)



சரணம் 1:

அவ்வைக்குத் தமிழைத் தந்து,
அவள்தமிழில் குளுமை கொண்டு,
அழகனுக்குக் கன்னி தந்து,
அரசடியிலே அமர்ந்த.. (மூத்தபிள்ளை)



சரணம் 2:

எல்லோர்க்கும் செல்லப்பிள்ளை
எவரிடத்தும் மறுப்புமில்லை
பொல்லார்க்கும் பொறுமைகாட்டி
நல்லார்க்கு நலமூட்டும்... (மூத்தபிள்ளை)


புது ஊர்வசி.


ஊர்வசி, ஊர்வசி, you just do it ஊர்வசி,
ஊக்கமின்றி ஓய்ந்திருந்தும், you just do it ஊர்வசி,

வாய்ப்புகள் கொட்டவே, you just do it ஊர்வசி,
வாசலைத் தட்டவே, you just do it ஊர்வசி,

கேளடி ஒளியே, ஒயிலே உலகில் வாய்ப்புகள் நூறு லட்சம்
நீயடி உளியே, சிலையே கொண்டு செல்லடி உனது பக்கம்

வாழ்க்கையில் வெல்லவே, you just do it ஊர்வசி,
வானவில் வாழ்க்கையில் வெற்றி என்பதே கான்ஸ்டன்ஸி

(ஊர்வசி)

நாலு பேரு மறுத்து சொன்னா, you just do it ஊர்வசி,
நூறு பேரு எதிர்த்து நின்னா, you just do it ஊர்வசி,
வெட்டி வேலைன்னு யாரும் சொன்னா, you just do it ஊர்வசி,
பொறுப்பே இல்லன்னு ஊரும் சொன்னா, you just do it ஊர்வசி,

கேளடி இன்றே, இங்கே உழைக்கும் கைகள் ஊரை வெல்லும்
நீயடி நின்றால், வென்றால், இமய மலையும் குனிந்து செல்லும

வாழ்க்கையில் வெல்லவே, you just do it ஊர்வசி,
வானவில் வாழ்க்கையில் வெற்றி என்பதே கான்ஸ்டன்ஸி

(ஊர்வசி)

தொட்டதும் வீணை மீட்டாது
தொல்லைகள் இருக்கும் போகாது
பூக்களால் பாதை அமையாது
புதையலோ எளிதில் கிட்டாது

வேர்களில் நீரே தங்காது
வேர்வையில் வீணே கிடையாது
இடையிலே நில்லா துழைத்தாலே
இறுதியில் தோல்வி கிடையாது.

இலக்கு ஒன்றை இருத்திக் கொண்டு, you just do it ஊர்வசி,
அதற்கும் மேலே ஆசைப் பட்டு, you just try it ஊர்வசி,
முட்டி நிற்கும் குட்டி சுவரை, you just break it ஊர்வசி,
முயற்சி செய்து முழுமை கொள்ள, you just live it ஊர்வசி,

(ஊர்வசி)

இளமையில் உழைப்பே இல்லாமல்
இருந்திட வாழ்ந்தும் என்ன பயன்?
இதயத்தில் துடிப்பே இல்லாமல்
இருப்பவர்க் குலகில் என்ன பெயர்?
விளக்குகள் சுடரே ஏந்தாமல்
விலகுமா அறையைச் சூழ்ந்த இருள்?
விடியலை நோக்கிப் போகாமல்
விழுந்துமே கிடந்தால் என்ன பொருள்?


நன் இனிப் பால்.

குனிந்த முகத்தின் கனிந்த இதழைத்
துணிந்து மலர்த்திப் புரள்.

கனியே உனையே இனியே நினையேன்,
தனியே படுப்பின் துயர்.

உம்மைக் கருதினேன் வெம்மை பெருகினேன்.
நம்மை எரிப்பது தீ.

விரல்தொடு வில்லாய் விழிதொடு விண்நீர்க்
குரலெடு, குன்றுது நாள்.

தளிரிலை அங்கே கனியிணை இங்கே
களித்திடு என்றது யார்?

குவிமலை மையம் குவிந்தது எண்ணம்
கவிழ்ந்தது வாயென்ற நா.