பள்ளியில் படிக்கும் போது கிடைத்த ஓர் கருத்தை இப்போது மீண்டும் சிந்தித்துப் பார்க்கையில், சர்வாதிகாரம் அல்லது தனி மனித ஆட்சி என்பது இடையில் நிற்காமல் விளைவுகளின் விளிம்புகளில் கொண்டு சேர்க்கும் என்பதை உணர முடிந்தது.
தற்போது இருப்பதைப் போன்று ஊர்களை விட்டு விலகிய நீண்ட தார் நெடுஞ்சாலைகள் அப்போது அமைந்திருக்கவில்லை. மக்கள் புழங்கும் இடங்களுக்கு இடையே தான் தொலைதூரப் பேருந்துகளும் சென்று வர வேண்டும் என்பதால், அவை குறைந்த வேகத்திலேயே ஓட்டப்படும். எனவே, செய்தித்தாள்களில் வரும் விபத்துகளில் மிகப் பெரும்பாலும் லாரிகளே விபத்து உற்பத்திக்காரர்களாக இருப்பார்கள்.
‘லாரி - பஸ் நேருக்கு நேர் மோதல்’, ‘ட்ராக்டர் மீது லாரி ஏறியது’.
டீக்கடை பெஞ்சில் அமர்ந்து பள்ளிப் பேருந்துக்குக் காத்திருக்கும் நேரத்தில், கையில் கிடைக்கும் தினத்தந்தியின் மூன்றாம் நான்காம் பக்கங்கள் இப்படிப்பட்ட செய்திகளாலேயே நிறைந்திருக்கும். முதல் பக்கங்கள் அரசியல் பேசும். எனவே அவை அரசியல் பேசுபவர்கள் கைகளில் தான் எப்போதும் இருக்கும். நிறைய விபத்துச் செய்திகளைப் படித்துப் படித்து, உறுதிப்பட்ட ஒரு கருத்துக்கு வந்து சேர்ந்தேன் - ‘லாரிகள் தான் எல்லா விபத்துக்கும் காரணம். எனவே எல்லா லாரிகளையும் ஒழித்துக் கட்டினால் விபத்துகளே நேராது.’
பத்தாம் வகுப்புக் காலம். ஒரு நாள் காலை தினத்தந்தி ‘நாளை முதல் கால வரையற்ற லாரி ஸ்ட்ரைக்’ என்று முதல் பக்கத்தில் பருத்த எழுத்துகளில் அலறியது. பக்கத்திலேயே கசங்கிய கறுப்பு நிறத்தில் வரிசையாக லாரிகள் நின்றிருக்கும் ஒரு படம். அன்று சாயங்கால ட்யூஷனின் ரிலாக்ஸான நேரத்தில், இதைப் பற்றிப் பேசும் போது ‘இன்னும் கொஞ்ச நாளைக்கு ஏக்ஸிடெண்ட் எதுவும் இருக்காது. எப்பவுமே லாரி எதுவும் ஓடலைன்னா நல்லா இருக்கும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
கேட்ட ஸார் ‘அப்படி கிடையாது. ரெண்டு நால் லாரி எதுவும் ஓடலைன்னா நீ காலையில டீ குடிக்க முடியாது. ஒரு வாரத்தில அரிசி கிடைக்காது. மொத்த சரக்குப் போக்குவரத்தும் லாரில தான் இருக்கு...’ என்று நிறைய சொன்னார். அப்போது தான் motel-க்கும் hotel-க்கும் வித்தியாசமும் தெரிந்தது.
அவர் சொல்லி முடிக்கையில் தான் லாரிகளின் இயக்கம் சமூகத்தின் தேவைகளுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பது புரிந்தது.
இப்போது இப்படி எடுத்துக் கொள்வோம்.
ஒருவர் கையில் ஒரு சமூகத்தின் , ஒரு நாட்டின் மொத்த வாழ்வையும் தீர்மானிக்கும் அதிகாரம் இருக்கின்றது. உச்ச அதிகாரம். அவருக்கு மேலே யாரும் இல்லை.
இப்போது அவரிடம் ஒரு கருத்து இருக்கின்றது. ‘லாரிகள் தான் அனைத்து விபத்துகளுக்கும் காரணம். எனவே லாரிகளைப் போக்குவரத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டால், விபத்தே நடக்காது.’ உடனே ‘ஓடிக் கொண்டிருக்கும் எல்லா லாரிகளையும் அப்படியே அங்கேயே ஓரம் கட்டுங்கள்’ என்று ஓர் ஆணை பிறப்பிக்கிறார். இப்படி ஓர் முடிவை அவர் சுயநலமாக எடுக்கவில்லை. மாறாக அவரைக் கேட்டால், ‘மக்கள் விபத்துகளிலிருந்து தப்பிக்கவே இப்படி ஓர் உத்தரவு’ என்பார். அவருக்கு அது ஒரு பொது நலம் சார்ந்த முடிவாகவே தென்படும்.
ஆனால் அம்முடிவால் ஏற்படும் விளைவுகள் எதிர்பாராத இடங்களில் எல்லாம், எதிர்பாராத கோணங்களில் இருந்தெல்லாம் வரும்.
இங்கே தவறு எங்கே நிகழ்கிறது? அவரிடம் இருக்கும் புரிதல் போதாமை.
அவரே உச்ச அதிகாரி. அவருக்கு அறிவுரை சொல்ல எவரும் இல்லை; சொன்னாலும் இவர் கேட்கக் கூடியவர் இல்லை, சொல்பவரை காலி செய்து விடுவார் என்றால் என்ன ஆகும்?
ஸ்டாலினின் சீர்திருத்தங்களையும், மாவோவின் கலாச்சாரப் புரட்சியையும், போல்பாட்டின் ‘விவசாயத்திற்குத் திரும்புவோம்’ படிக்கும் போதெல்லாம், லாரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.
Showing posts with label ஞாபகம் வருதே.. Show all posts
Showing posts with label ஞாபகம் வருதே.. Show all posts
Wednesday, November 27, 2013
Friday, April 23, 2010
எழுதுவது எதற்காக?

நேற்று ஜிமெய்ல் உரையாடியில் ஒரு தோழியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவர் சொன்ன ஒரு வரி, இரவுத் தூக்கத்தைக் கொஞ்சம் இழக்கச் செய்து சிந்திக்க வைத்து, இந்தத் தலைப்பையும் கொண்டு வந்தது.
கொஞ்சம் சுயபுராணம்.
ஆப்பிளையும், பந்தையும், பூனையையும், பொம்மையையும் எழுதினாலும் எழுதும் பொருட்களில் வித்தியாசம் ஆரம்பத்திலேயே இருந்தது. எல்லோரும் ஸ்லேட்டில் எழுதிய போது, பேப்பரில் கேம்லின் பேனா கொண்டு எழுதினேன். காரணம், உணவுப்பழக்கம்.
மெட்ரிக் பள்ளியில் புதுக் கட்டிடத்திற்காக ஜல்லிகள், செங்கற்கள், ஈரமணல், கம்பிச் சல்லடைகள், ரப்பர் வாளிகள் வந்திருக்கும். மதிய இடைவேளையில் லஞ்ச் முடித்து விட்டு அங்கே கொட்டி வைக்கப்பட்டிருக்கும் களிமண் உருண்டைகளை வாயில் போட்டுக் கொள்வேன். இன்று வரை அவற்றைப் போன்ற மென் உணவுகள் மிகக் கொஞ்சமே கண்டிருக்கிறேன். அப்படியே கரைந்து போய்க் கடைசியில் சிறு கற்களைத் துப்பி விடுவேன். தின்ற களிமண் தலைக்குள் சென்று சேகரமானதா என்று இன்னும் தெரியவில்லை.
அப்படியே விரிந்து, ஸ்லேட்டுக் குச்சிகளையும் தின்று, தினம் வீட்டுக்கு காலி பாக்ஸோடு போன போது, உஷாராகி விட்டார்கள். இங்க் ஊற்றி பேனாவில் பேப்பரில் எழுத அனுமதி வாங்கி எழுதிக் கொண்டிருந்தேன். மாலையில் விரலெல்லாம் நீலம்.
மெட்ரிக் காலங்களில் படிப்பைத் தவிர ஸ்போர்ட்ஸ்களில் எதிலும் கலந்து கொண்டதில்லை. ஓட்டப்பந்தயம், ரிலே, கோ-கோ, கபடி, கால்பந்து.... ம்ஹூம், எதிலும் இல்லை. ஒரே முறை, ஸிண்ட்ரெல்லா நாடகத்தில் கடைசிக் காட்சியில், அவள் ஒற்றைச் செருப்பைத் தூக்கிப் போகும் ராணுவத் தளபதியின் படையில் வலது மூலையில் ஒரு சிப்பாயாக வந்து லெஃப்ட்-ரைட் போட்டது மட்டுமே, சாதனை.
கட்டுரைப் போட்டிகளில் சேர்ந்ததில்லை. காரணம், மிக மிக மோசமான கையெழுத்து. முட்டி முட்டியாக அடிப்பார்கள். திருந்தவேயில்லை. காசியில் துவங்கி நாக்பூரில் இறங்கி பூடானுக்குப் போகும். அழகோ, விஸ்கி அடித்த கோழியின் காலில் பென்சிலைக் கட்டி, விரட்டியது போல் தமிழை எழுதினால், கொரியன் போல் காட்சி தரும்.
ஒருமுறை கண்ணாடி ஸ்கேலை உடைத்தே கொடுத்தார்கள். வீட்டுக்கு வந்து அப்பாவிடம், "ஸ்கேல் உடையற அளவுக்கு அடிக்கறாங்கப்பா..!" என்று அழ, அப்பா, "கவலைப்படாதே..! இதை வெச்சுக்கோ! உடையவே உடையாது..!" என்று மர ஸ்கேல் கொடுத்தார்.
பிறகு கையெழுத்து கொஞ்சம் அழகானது (அதாவது புரியும்படியானது), வேறு தனிக் கதை.
பேச்சுப் போட்டியே என் களம். அங்கே இங்கே கொஞ்சம் பேசி, இருக்கவே இருக்கிறார்கள், பாரதியும், கம்பனும், இளங்கோவும், வள்ளுவரும். ஒவ்வொரு வருடமும் ஏதாவது பரிசு அதில் கிடைத்து விடும். எழுத்து..? இல்லவே இல்லை.
முதன் முதலில் கற்பனை கலந்து எழுதியவை, மூன்று நாவல்கள்.(என்று நானாக நினைத்துக் கொண்டேன்.)
அப்போது ராஜேஷ்குமார் பைத்தியம் பிடிக்க ஆரம்பித்துப் பித்து முத்திப் போய்க் கொண்டிருந்தது. வீட்டிலும் அனுமதி இருந்தது. செக்ஸ் இன்றி, வன்முறை இன்றி இருந்த ஒரே கிடைத்த புத்தகங்கள் அவருடையது. சுபா, பி.கே.பி., கொஞ்சம் அவற்றைத் தொட்டுத் தான் எழுதுவார்கள். வாத்தியார் என்று ஒருவர் இருந்ததை யாரும் சொல்லவேயில்லை.
ராஜேஷ்குமார் பாதிப்பில் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் ரத்தம் சிந்த எழுதினேன். மூன்றும் மூன்று வெரைட்டி. முதல் கதை சபையர் லாட்ஜில் நடக்கும் ஒரு கொலை என்றால், இரண்டாவது பக்க கிராமத்து ப்ளாட். அதில் முதல் சேப்டரில் வாய்க்காலில் ரத்தம் கலந்து ஓடும். மூன்றாவது நினைவில்லை. அந்த டைரி தொலைந்து விட்டது. வைத்திருப்பவர்களுக்கு யாருடைய பாதி ராஜ்யமாவது கிடைக்கட்டும். :)
ஏழாம் வகுப்பில் வெண்பா எழுதுகிறேன் பேர்வழி என்று சொல்லி, ஒன்றை எழுதிக் காட்ட, அவர் யாப்பை விளக்க, விட்டால் போதும் என்று விலகினேன். பேச்சுப் போட்டிகளில் போட்டி அதிகமாகிய போது கையெழுத்து கொஞ்சம் பார்க்கும்படி தோன்ற ஆரம்பிக்க, ட்ரான்ஸிஷன் போல் கட்டுரைப் போட்டிகளுக்கு நகர்ந்தேன்.
ஒன்பதாம் வகுப்பில், லீலாவதி டீச்சர் வரவில்லை. லஞ்ச் முடித்த மோனத் தவ நேரம். நானும் சதீஷும் சும்மா வெளியே வரக் கிளம்பினோம். பதினொன்றாம் வகுப்பறையில் ஏதோ ஒரு கட்டுரைப் போட்டி என்றார்கள். 'சரி..! சும்மா தானே இருக்கிறோம்' என்று இருவரும் போனோம். தலைப்பு, 'அறிவொளி இயக்கப் பணிகள்'. எனக்கு கிக் ஏறியது. காரணம் அந்த வாரக் கடைசியில் தான் பவானி கிளை நூலகத்தில் அறிவொளி இயக்கத் தளத்தில் ஒரு குறுங்கதை படித்திருந்தேன். ஒரு கிராமத்திற்கு ஆசிரியரும், சில மாணவர்களும் இயக்கம் சார்பாகப் போய், முதலில் கொஞ்சம் அடி வாங்கிப் பின் தியாகம் செய்து கிராம மக்களைத் திருத்திக் கல்வி புகட்டி....they live happily thereafter.
போர்க்களம் நுழைந்த வேழம் போல் புகுந்து் போட்டிக்குப் பெயர் கொடுத்து எழுத ஆரம்பிக்க, கற்பனை வெள்ளம் ஐஸ்லாந்து எரிமலைப் புகை போல் எட்டுத் திசைகளிலும் பாய்ந்து பரவும் வகையில் எழுதப் போய்..
"ஸார்..! எக்ஸ்ட்ரா ஷீட் சார்..!"
"திரும்பத் திரும்பக் கேக்கற நீ..!" என்றார். முதல் பரிசு கிடைத்தது.
சோகமித்திரக் கவிஞர்கள் சொல்வது போல், 'நிராசையின் வலியும், புறக்கணிப்பின் கசப்புகளும்' கிடைத்த போதெல்லாம் கவிதைகள் எங்கிருந்தோ பாய்ந்து வந்து என் நோட்டுப் புத்தகங்களில் விழுந்தன.
பிடித்த ஒரு சிறு கவிதை :
"என்னைத்
தவிர்க்கப் பார்ப்பதிலும்
தள்ளி
வைப்பதிலும்
நீ
சொல்லும்
பொய்களின்
சாயம்
வெளுக்கும் போதெல்லாம்
கூசிப் போவது
நீயில்லை..!"
கவிதைகளில் திளைத்துப் பின் மிக லேசான சலிப்பு அதில் ஏற்பட்ட போது, தபு சங்கரின் அரை உரை வடிவக் காதல்களின் வடிவில் பிரியம் ஏற்பட்டு அந்த பாட்டிலுக்குள், சரக்கை ஊற்றிக் கொண்டிருந்து விட்டு, 2006-ல் பதிவுகளுக்கு வந்தேன்.
எத்தனை பதிவுகள்..!! அவற்றுள் எத்தனை உருப்படியான எழுத்துக்கள்..!
தேன்கூடு போட்டிகளில் இறங்கும் போது தான், சிறுகதை வடிவத்தில் எழுத ஆரம்பித்தேன். அந்த வகையில் முதல் கதை :: "ங்கா...ங்கா..". அப்போது வெறும் உரையாடல் மட்டும் கொண்டு எழுதுவது சொகுசாய் இருந்தது. மற்றொன்று :: இன்னா சார்?
பிறகு பல சிறுகதைகள். வெவ்வேறு தளங்கள். அறிவியல் கதை, வரலாறு, சில குறுநாவல் முயற்சிகள், ஆங்கில நாவல் முயற்சி....! பல தோல்விகள்; சில வெற்றிகள்.
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் வரும் கதைகள் எனக்கே பிடித்தவை, எழுதிய போதும், மீண்டும் வாசகனாகப் படித்த போதும்..! அதுவரை எனக்குத் திருப்தி.
அந்தத் தோழி சொன்னது :
*: EXactly... wonderfulll
me: is this a sarcastic tone..? :)
*: My god... not at all
8:43 PM see... i am so happy.... bcoz i dnt read tamil.... its after ur blog i read a few
me: aah...thanks ***...its a real big compliment to me...
இரவுக் காட்டுக்குள் தனி வேடன் எய்தக் கூர் அம்பினைப் போல் எழுதியது எதையும் மொழி வீணாக விட்டு விடுவதில்லை. வீணான எதையும் எழுதி விடக் கூடாது என்ற பயம் தான் அதிகம் ஆகியிருக்கின்றது.
Thursday, December 31, 2009
வாழ்த்திய வாழ்த்தொலி போய்...

புத்தம் புதிய ஆயிரம் ஆண்டுகளின் முதல் பத்தின் கடைசிப் பெளர்ணமியில் என்னைச் சுற்றி இலேசான குளிர் பறக்கிறது. பின்புறத் தோட்டத்தில் விரிந்த வாழை இலைகளில் நிலவொளி வெள்ளம் பாய்ந்துச் சேகரமாகி, நடுப் பட்டையில் ஓடி நுனியில் சொட்டுகின்றன. செதுக்கிய இலைகளில் ஒளிக் குளங்கள் தேங்கிக் காற்றுக்குத் தத்தளிக்கின்றன. தென்னங் கீற்றுக்கள் சரிந்த வாட்களாகிக் கூர்மைகளில் வெள்ளி பூசியிருக்கின்றன. கொஞ்சம் சாய்ந்த ஒற்றைப் பலா மரத்தின் ஒரு 'சிறு காம்பில் தொங்கும் பலாக்கனியை' எறும்புகள் கீறியிருக்க, வெடித்ததில் மெல்லிய இனிப்பு மணம் காற்றில் சுகமாய்ப் பரவுகின்றது. வாசலொட்டிய சிற்றோடையில் குளிர்ந்த நீர் சலசலத்து ஓடுகையில், அசைந்தாடும் காதல் வடிவ இலைகளில் நீர்ச் சுட்டிகள் உள்ளங்கையில் பாதரசத் துளிகள் போல் மின்னுகின்றன. மதில் பக்கத்தில் பூத்திருக்கும் செம்பருத்திப் பூக்களுக்கும், பெயர் தெரியாத அந்த மஞ்சள் மலர்களுக்கும், இரவின் கரும் இடுக்குகளுக்குள் ஒளிந்து கொண்டு 'ட்ரூச்சு..ட்ரூச்சு..' எனச் சத்தமிடும் பூச்சிகளுக்கும், மழை வாசம் உணர்ந்தாலே 'கொர்ரக்...கொர்ரக்...'காய் உற்சாகக் கூச்சலிடும் சின்னத் தவளைகளுக்கும், கம்பி வேலி மேல் நின்று கொண்டு சின்னத் தலையை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் துளிக் கண்களை இமைத்து, தன் துயர் நனைந்த இராக்காலக் கனவுகளைக் கூவும் வயலட் நிற வெல்வெட் சிறகு மைனாவுக்கும் நாளை புத்தாண்டு என்பது தெரியுமா?
ஆனால், நமக்குத் தெரியும்.
தன் கடைசி மணிகளில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த கி.பி.2009 எனக்கு என்ன அர்த்தம் ஆகின்றது என்பதைக் கொஞ்சம் - கழுத்து வலித்தாலும் பரவாயில்லை என்று - திரும்பிப் பார்க்க விரும்புகிறேன்.
எழுதுவதைப் பொறுத்த வரை கொஞ்சம் வருத்தமும் நிறைய சந்தோஷங்களும் கலந்திருந்தன.
சென்ற வருடத்தை விட இந்த ஆண்டு பத்திக்குப் பாதி பதிவுகள் குறைந்து விட்டது என்பதில் வருத்தம் இருக்கின்றது. காரணமும் புரிகின்றது. கடந்த வருடத்தின் சந்தோஷ மனநிலை இந்த ஆண்டு முழுதுமே இல்லை. மென்பொருளாளனுகே ஆன பொருளாதாரப் பயங்கள், தனிக் கவலைகள் போன்றவை இருந்தன. எழுதுவதை முதன்மைப்படுத்தி, கவலைகளை நியூரான் குழப்பத்தின் இருளான பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தேன்.
மகிழ்ச்சி பல காரணங்களால்!
செறிவான சில சிறுகதைகள் எழுத முடிந்தது.
மனையியல்.
கோடானு கோடி!
கிளி முற்றம்.
பொன்னி.
ஓர் உரையாடல்.
Blackhole..!
பயணக் கட்டுரைகள் எனக்கே பிடித்த மாதிரி நன்றாக வந்தன.
காவிரிக் கரையோரத்திலேயே...
சுதந்திர நாளில்...மதுரையில்..!
ஏப்ரலில் இருந்து மேக்கு ஒரு பயணம்!
பண்ணாரிக்குப் போனேன்.
உரையாடல் அமைப்பினர் நடத்திய சிறுகதைப் போட்டியில் இருபதில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரு கதையை எழுதியதில் மற்றொரு மகிழ்ச்சி. பாஸ்டன் பாலா அதை முதல் மூன்றுக்குள் வைத்தது எதிர்பாராத இனிப்பு.
புதுக்கவிதை இயக்கம் தோன்றி ஐம்பது ஆண்டுகள் ஆகியதைக் கொண்டாடிய 'நவீன விருட்சத்தின்' செப்டம்பர் மாதக் காலாண்டு இதழில், யோசிப்பவர் மற்றும் அனுஜன்யாவின் சிறுகதைகளுக்கு இடையே நெருக்கிக் கொண்டு 'மாமா எங்க' கதையும் அச்சில் வந்தது. யோசிப்பவரின் ஆலோசனையின் படி அனுப்பி வைத்ததால், 'யுகமாயினி'யில் 'முதல் அறிவியல் புனைகதை' வெளியானது.
மும்பையில் இருந்து 'எதைப் பற்றியும் பற்றாமலும்' நவீனக் கவிதை எழுதும் 'யூத்' அனுஜன்யா, 'சுவாரஸ்யப் பதிவர்களில்' ஒருவனாக என்னையும் டிக் செய்தது ஆச்சர்யக் களிப்பை அளித்தது.
வலைச்சரத்தில் அ.மு.செய்யது என்ற பதிவர் 'காலத்தை வென்றவர்கள்' என்று இந்தக் கதைகளை வைத்துச் சொல்லியிருந்தது கூச்சம் கொடுத்தது. இவர் படிக்கிறார் என்பதே இவர் சொல்லித் தான் தெரிந்தது. இது போன்று எத்தனை பேர் சைலண்டாகப் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
பிறந்த நாளுக்கு முன்னாள், நீல.பத்மநாபன் அவர்களைச் சந்தித்து ஆசி பெற்று வந்ததையும், அடுத்த நாள் நாகர்கோயிலில் மீனாட்சிபுரத்திற்குப் போய் ஜெயமோகன் அவர்களைப் பார்த்து, ஒரு கிட்கேட் மட்டும் கொடுத்து, மதிய உணவுடன் ஆலோசனைகளையும் பெற்று வந்ததையும் மறக்க முடியாது.
தொழில்நுட்பக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று மிக நாட்களாக விருப்பம் இருந்தது. இயற்பியல் கட்டுரைகள் எழுதி வந்தாலும், அவை அறிவியல் என்ற வகையின் கீழ் வரும். ஏற்றாற்போல் சிங்கைப் பதிவர்கள் அமைப்பு 'மணற்கேணி - 2009'ல் கட்டுரைகள் கேட்க, பணியாற்றும் துறையின் அடிப்படைகளை முடிந்த அளவுக்குத் தமிழ்ப் படுத்தி அனுப்பி வைத்தேன். முடிவுக்காகக் காத்திருக்கிறேன். தொடர்ந்து எழுத வேண்டும்.
இந்த ஆண்டின் மிகப் பெரிய சாதனையாக கருதுவது, நேனோரிமோ. முதன் முதலாக ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதும் சவாலை எனக்குள்ளேயே ஏற்படுத்திக் கொண்டு, எழுத உட்கார்ந்தேன். செப்டம்பர் மத்தியில் இருந்து ஆரம்பித்து, அக்டோபர் மாதம் முழுக்கவே ஒன்றும் க்ரியேட்டிவாகத் தோன்றவேயில்லை. ஜெயமோகன் அவர்களிடம் கேட்ட போது, 'அவ்வளவு தான். சரக்கு காலி' என்றார். 'சரிதான்' என்று கொஞ்சம் துக்கத்தோடு இருந்தேன். 'அது ஒரு பனித்திரை' என்று காட்டி மீண்டும் அடைத்திருந்த பாட்டில்களை நுரைகள் பீய்ச்சியடிக்கத் திறந்து விட்டது, நேனோ. என்.சி.சி. கேம்ப் அனுபவங்களைக் களமாக்கிக் கொண்டு எழுதத் துவங்க காதல்களும், மோதல்களும், கிண்டல்களும், சாகசங்களுமாக அந்த நாவல் அருமையாக வந்து கொண்டிருக்கின்றது.
Na-No-Wri-Mo.
NaNoWriMo.Update.1
NaNoWriMo.Update.2
NaNoWriMo.Update.3
NaNoWriMo.Update.4
NaNoWriMo.Update.5
NaNoWriMo.Update.6.Final
சில முயற்சிகள் குறைப்பட்டும் போயின. 'ஆகாயக் கொன்றை' என ஒரு குறுநாவல் எழுதத் துவங்கி மூன்று சேப்டர்களில் நிற்கின்றது. முடிக்க வேண்டும்.
என்னமோ நிறைய எழுதிக் கிழித்தவன் போல் சிறுகதை எழுதுவது பற்றிச் சில பதிவுகள் எழுதினேன். பாறைகளில் பதுங்கிய விதை போல் சில மனங்களில் ஒளிந்திருக்கலாம். மழை நுனி தொட்டதும் முளைக்கலாம். முதல் துளி விழும் நொடி தான் ரகசியம்.
சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!
சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!.2.
புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்.
நானும் எழுதுகிறேன் 10!
வருடக் கடைசியில் ஈரோடு பதிவர்கள் சங்கமம் மற்றுமொரு திருப்புமுனை. மேடையில் நூற்றுக்கும் மேலான இரட்டைக் கண்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் உள்ளங்கை வேர்க்காமல் பேச முடிகின்றது என்பதை அறிந்து கொண்டேன். அதற்கு முழுக் காரணமும், பேசுவதை முன்பே எழுதிக் கொண்டு சென்றது தான். எனவே பேட்டை மாறாமல் ஓட முடிந்தது. பேசிய உரையைப் படித்துப் பார்த்தால் ஒன்று தெரியும். அப்பட்டமான வாத்தியார் ஸ்டைல். அதற்காகவும் வாத்தியாருக்கு மேலும் சில நன்றிகள்.
இந்த ஆண்டு முழுதும் படித்தது என்று பார்த்தால் மிகக் குறைவு தான். வலைப்பக்கங்களைப் படிப்பதைத் தவிர, புத்தகங்கள் நிறைய படிக்கவில்லை. நம் நாட்டு விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படைப்பு எழுதும் ஐடியா இருக்கின்றது. இது நம் எழுத்தாளர்கள் அனைவருக்குமே இருக்கும் என்று நினைக்கிறேன். பிரிவினை அத்தனை சம்பவங்கள் நிறைந்த உணர்ச்சிபூர்வமான வரலாறு. பதினெட்டாம் நுற்றாண்டின் மத்திய ஆண்டுகளில் பம்பாயின் எல்லைக் குடிசைகளில் வாழ்ந்த தமிழ்க் குடும்பத்தில் பிறக்கும் பையனின் வாழ்க்கையை, கூடவே பிறந்த இந்திய ரெயில்வேயுடன் பின்னிப் பிணைந்து 1947-ல் உச்சக் காட்சியுடன் நிறைவு செய்ய ஆசை.அதற்காக வாங்கிய புத்தகங்களை மட்டுமே படித்தேன். தோதாக, ஜெயமோகன் அவர்களும் காந்தியைப் பல கோணங்களில் எழுத, சேர்த்து வைத்து விட்டேன்.
வலை மற்றும் அலுவலகம் தாண்டிய ஒரு குடும்ப வாழ்க்கை என்ற ஒன்றுமிருக்கின்றது. அதில் இவ்வாண்டின் பெருமகிழ்வாக ஒரு சொந்த வீடு வாங்க முடிந்தது. ஆறு வருடங்களுக்கு முன்பு ஐ.சி.எஃப். செல்லும் 47-டியில் இரண்டு நாட்கள் சாப்பிடாததால் மயங்கி விழுந்தவனுக்கு இன்று ஒரு அடர்ப் பச்சைப் பெய்ண்ட் அடித்த வீடு சொந்தம் என்பதற்கு ஆச்சரியப்படுவது இயல்பே என்றான் சீனி. எஸ்.பி.ஐ. கட்டிய ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறோம் என்பதாகவே நான் உணர்கிறேன். என்ன, மாத வாடகை தான் கொஞ்சம் அதிகம்!
தமிழ்ப்பறவையுடன் ஏறத்தாழ வருடம் முழுக்க தினம் பேசினேன். யோசிப்பவர் அவர் முயற்சிகளில் என்னையும் இழுத்துக் கொள்கிறார். அதற்கு என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை.
அனலில் எரிந்த முத்துத் தமிழன் மறக்க முடியாமல் செய்து விட்டான். ஆஸ்கார்த் தமிழன் அன்பையும், அடக்கத்தையும் பறைசாற்றினான்.
மொத்தத்தில் 2009 கொஞ்சம் நடுக்கத்திலேயே வைத்திருந்தாகவும் எழுதுவதில் கொஞ்சம் தனித்த நடை வந்திருப்பதாக உணர்வதாகவும் கடந்து கொண்டிருக்கின்றது. வரும் ஆண்டிற்கென சில கனவுகள் வைத்திருக்கிறேன்.
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Cheeeeeerzzzzz and Rock U Buddiezzzzz.....!!!!!!
Monday, December 07, 2009
மொக்ஸ் - 17.Feb.1999 (?)
போன வாரம் வீடு மாற்றினோம் அல்லவா..? அதில் கிட்டத்தட்ட எடைக்குப் போய்விட்ட மூட்டைக்குள் இருந்து ஒரு நோட்டைக் கைப்பற்றினேன். சொல்லப் போனால் மீட்டேன் எனலாம். அந்த நோட்டிற்கு வயது இப்போது பத்து.
கொஞ்சம் மஞ்சள் பூசிக் கொண்டிருந்த அதன் தாள்களைப் புரட்டும் போது, அப்போதைய துளி நான் தெரிகின்றேன்; என் ஆர்வங்கள் தெரிகின்றன.
முதல் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன்.
ஆவர்த்தனப் பண்புகள் என்று சில வேதியியல் குறிப்புகள். பின் சடாரென டாபிக் மாறி, வெக்டர் அல்ஜீப்ராவின் சில ஃபார்முலாக்கள். பிறகு வரிசையாக ட்ரிக்ணோமெட்ரிக் சம்ன்பாடுகள். சில பக்கங்களில் எரிபொருள் இல்லாமல் காற்றின் வீசு விசையாலேயே வண்டி ஓடச் செய்யும் மெக்கானிக் இன்னொவேட்டிவ் மெதடின் பென்சில் டயாக்ராம். எப்படி அவ்வாறு சிந்தித்தேன் என்று இன்று புரியவில்லை. I born intelligent; education ruined me. :)
பரீட்சை சமயங்களுக்கான சில டைம் டேபிள்கள். திடீரென ஒரு C நிரல். அதில் ஒரு வாக்கியத்தில் எத்தனை vowels, எத்தனை consonants என்று அறிவதற்கான எளிய முறை. ஒரு பக்கம் முழுக்க ஸ்ரீ ராமஜெயம். அவ்வளவு தான். முன் அட்டையிலிருந்து படித்துக் கொண்டே போனால் முடிந்து விடுகின்றது.
இப்போது நோட்டின் பின் அட்டையிலிருந்து தலைகீழாகப் படித்துக் கொண்டே வந்தால், முதலில் நீர்த்த கரைசல்கள் என்று துவங்கும் ஒரு வேதி வாக்கியம். தொடர்ந்து முழுதும் எனது புதுமையான 'சமன்பாடு உருவாக்கங்கள்'. இயற்பியல், கணிதம் என்று வேறு வேறு துறைகளில் சில முயற்சிகள்.
இன்பினிட்டி மேல் அத்தனை பிரியம் இருந்திருக்கின்றது. 0 மற்றும் இன்பினிட்டிகளை வைத்துக் கொண்டு என்னென்னவோ செய்திருக்கிறேன். 0/0 = 1, 0*இன்பினிட்டி = 0 அல்லது +- 1, sin(0/0), மதிப்பு கண்டுபிடித்தல், 0-இன்பினிட்டி = இன்பினிட்டி என்ற கணிதக் கிறுக்குகளுக்கு இடையே அவ்வப்போது, pkw = pka+pkb+2log(alpha) என்ற வேதிச் சமன்பாடு எழுதி, பின்னாடியே m/myu = 0.7362* 10 to the power of -50 - (1) மற்றும் lemda*m = 2.2086*10 to the power of -42 -(2) 'எனவே, பொருள் அல்லது ஒளிமூலத்தின் நிறையை அழ்திகரித்தால், அது வெளியிடும் ஒளியின், 1) அலைநீளம் குறையும், 2)அதிர்வெண் அதிகரிக்கும்' என்ற ஓர் இயற்பியல் முடிவு எழுதியிருக்க, இறுதியாக 1=2 என்ற விசித்திர முடிவு வேதியியல் சமன்பாட்டில் முயல்கையில் எட்டிப் பார்க்கின்றது.
சில பக்கங்களில் மதன் கார்ட்டூன்களைப் பிரதியெடுக்க முயன்றிருக்கிறேன். ஒரு ஆங்கிலக் கவிதை கண்ணில் படுகின்றது.
Only You..!
Now what I say to you!
Your eyes when touch my heart!
Now what I do to you!
Except, share my world with you!
You are not in here, but
My thoughts all in your near!
The time makes me to leave you,
When we see, say you!
I search you in the garden
In the sky, In the tars, In the rain..!
You're not in these things,
They lost their wings..!
When you search in the air, you hear
My long live sad in my tears!
When we meet in any time!
There is no words to talk with us.!
In many distance to the moon
The distance comes to our home!
How many distance with us,
My love will haven by you!
When my legs go to the heaven,
My thoughts want to touch you!
When the fire burns in my body,
The eyes want to see you, only you..!
-r.vasantha kumar.
17/02/99: 10:15
யாருக்காக இப்படி உருகி உருகி எழுதியிருக்கிறேன் என்றே தெரியவில்லை. ஒரு உயிர்க் கசியும் காதலுக்கு அதைக் கொள்ள ஒரு பெண் கூட தேவையில்லை என்பதே புரிகின்றது.
ஆங்கிலப் பிரயோகம் 99லிருந்து இந்தப் பத்து வருடங்களுக்குள் ஓர் இஞ்ச் கூட முன்னேறவேயில்லை என்பதைத் தான் முந்தின சிறுகதையும், இந்த கவிதையும் சொல்லி விடுகின்றன.
"வாழ்வோ தாழ்வோ நிரந்தரம் இல்லை. இது பயணம். போகிற வழியில் ஒரு பூ கிடைக்கும். ஒரு முள் குத்தும். ஒரு கல் தடுக்கும். ஒரு நிழல் ஆசுவாசப்படுத்தும். வெயில் கொளுத்தும். சந்தோஷமா மழை கொட்டும். பசிக்கு ஒரு கனி கிடைக்கலாம். கொண்டாடவோ, திண்டாடவோ எதுவும் இல்லை.
இது பயணம்...!"
-டி.என். சேஷகோபாலன்
(04.01.98 - ஆனந்த விகடன் - 133)
பக்கங்களுக்கிடையில் கிடைத்த எழுதி வைத்த பத்தி, இந்த நோட்டெங்கும் விரவியிருக்கும் அப்பாவின் வாசத்தை நினைவுபடுத்துகின்றது. இதற்காகத் தான் இந்தப் பத்தியை அப்போது எழுதி வைத்தேனோ, என்னவோ..!!!
கொஞ்சம் மஞ்சள் பூசிக் கொண்டிருந்த அதன் தாள்களைப் புரட்டும் போது, அப்போதைய துளி நான் தெரிகின்றேன்; என் ஆர்வங்கள் தெரிகின்றன.
முதல் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன்.
ஆவர்த்தனப் பண்புகள் என்று சில வேதியியல் குறிப்புகள். பின் சடாரென டாபிக் மாறி, வெக்டர் அல்ஜீப்ராவின் சில ஃபார்முலாக்கள். பிறகு வரிசையாக ட்ரிக்ணோமெட்ரிக் சம்ன்பாடுகள். சில பக்கங்களில் எரிபொருள் இல்லாமல் காற்றின் வீசு விசையாலேயே வண்டி ஓடச் செய்யும் மெக்கானிக் இன்னொவேட்டிவ் மெதடின் பென்சில் டயாக்ராம். எப்படி அவ்வாறு சிந்தித்தேன் என்று இன்று புரியவில்லை. I born intelligent; education ruined me. :)
பரீட்சை சமயங்களுக்கான சில டைம் டேபிள்கள். திடீரென ஒரு C நிரல். அதில் ஒரு வாக்கியத்தில் எத்தனை vowels, எத்தனை consonants என்று அறிவதற்கான எளிய முறை. ஒரு பக்கம் முழுக்க ஸ்ரீ ராமஜெயம். அவ்வளவு தான். முன் அட்டையிலிருந்து படித்துக் கொண்டே போனால் முடிந்து விடுகின்றது.
இப்போது நோட்டின் பின் அட்டையிலிருந்து தலைகீழாகப் படித்துக் கொண்டே வந்தால், முதலில் நீர்த்த கரைசல்கள் என்று துவங்கும் ஒரு வேதி வாக்கியம். தொடர்ந்து முழுதும் எனது புதுமையான 'சமன்பாடு உருவாக்கங்கள்'. இயற்பியல், கணிதம் என்று வேறு வேறு துறைகளில் சில முயற்சிகள்.
இன்பினிட்டி மேல் அத்தனை பிரியம் இருந்திருக்கின்றது. 0 மற்றும் இன்பினிட்டிகளை வைத்துக் கொண்டு என்னென்னவோ செய்திருக்கிறேன். 0/0 = 1, 0*இன்பினிட்டி = 0 அல்லது +- 1, sin(0/0), மதிப்பு கண்டுபிடித்தல், 0-இன்பினிட்டி = இன்பினிட்டி என்ற கணிதக் கிறுக்குகளுக்கு இடையே அவ்வப்போது, pkw = pka+pkb+2log(alpha) என்ற வேதிச் சமன்பாடு எழுதி, பின்னாடியே m/myu = 0.7362* 10 to the power of -50 - (1) மற்றும் lemda*m = 2.2086*10 to the power of -42 -(2) 'எனவே, பொருள் அல்லது ஒளிமூலத்தின் நிறையை அழ்திகரித்தால், அது வெளியிடும் ஒளியின், 1) அலைநீளம் குறையும், 2)அதிர்வெண் அதிகரிக்கும்' என்ற ஓர் இயற்பியல் முடிவு எழுதியிருக்க, இறுதியாக 1=2 என்ற விசித்திர முடிவு வேதியியல் சமன்பாட்டில் முயல்கையில் எட்டிப் பார்க்கின்றது.
சில பக்கங்களில் மதன் கார்ட்டூன்களைப் பிரதியெடுக்க முயன்றிருக்கிறேன். ஒரு ஆங்கிலக் கவிதை கண்ணில் படுகின்றது.
Only You..!
Now what I say to you!
Your eyes when touch my heart!
Now what I do to you!
Except, share my world with you!
You are not in here, but
My thoughts all in your near!
The time makes me to leave you,
When we see, say you!
I search you in the garden
In the sky, In the tars, In the rain..!
You're not in these things,
They lost their wings..!
When you search in the air, you hear
My long live sad in my tears!
When we meet in any time!
There is no words to talk with us.!
In many distance to the moon
The distance comes to our home!
How many distance with us,
My love will haven by you!
When my legs go to the heaven,
My thoughts want to touch you!
When the fire burns in my body,
The eyes want to see you, only you..!
-r.vasantha kumar.
17/02/99: 10:15
யாருக்காக இப்படி உருகி உருகி எழுதியிருக்கிறேன் என்றே தெரியவில்லை. ஒரு உயிர்க் கசியும் காதலுக்கு அதைக் கொள்ள ஒரு பெண் கூட தேவையில்லை என்பதே புரிகின்றது.
ஆங்கிலப் பிரயோகம் 99லிருந்து இந்தப் பத்து வருடங்களுக்குள் ஓர் இஞ்ச் கூட முன்னேறவேயில்லை என்பதைத் தான் முந்தின சிறுகதையும், இந்த கவிதையும் சொல்லி விடுகின்றன.
"வாழ்வோ தாழ்வோ நிரந்தரம் இல்லை. இது பயணம். போகிற வழியில் ஒரு பூ கிடைக்கும். ஒரு முள் குத்தும். ஒரு கல் தடுக்கும். ஒரு நிழல் ஆசுவாசப்படுத்தும். வெயில் கொளுத்தும். சந்தோஷமா மழை கொட்டும். பசிக்கு ஒரு கனி கிடைக்கலாம். கொண்டாடவோ, திண்டாடவோ எதுவும் இல்லை.
இது பயணம்...!"
-டி.என். சேஷகோபாலன்
(04.01.98 - ஆனந்த விகடன் - 133)
பக்கங்களுக்கிடையில் கிடைத்த எழுதி வைத்த பத்தி, இந்த நோட்டெங்கும் விரவியிருக்கும் அப்பாவின் வாசத்தை நினைவுபடுத்துகின்றது. இதற்காகத் தான் இந்தப் பத்தியை அப்போது எழுதி வைத்தேனோ, என்னவோ..!!!
Friday, June 26, 2009
The Emperor Died. ;(

நேற்று ஜாக்ஸன் இறந்து விட்டதாகச் சொல்லிக் கொண்டார்கள். எப்படி அவரெல்லாம் இறக்க முடியும்?
உங்களைப் பற்றிய அத்தனை செய்திகளையும் காலம் அரித்துத் தின்று விடும். காற்றின் அணுக்களில் எல்லாம் உங்கள் கான ஒலி கேட்டுக் கொண்டேயிருக்கும்.
You deserve a best place more than any popper, jack. I am so sad by hearing this. Thats y i cant speak in my lang.
Good Bye Jack. I kiss you for whatever u did for us in our teeny days and nights.
;(
http://www.arrahman.com/v2/news/news-165.html
http://www.michaeljackson.com/
http://kaalapayani.blogspot.com/2007/04/blog-post_11.html
v
நன்றி : http://www.topnews.in/light/files/michael-jackson.jpg
Wednesday, August 06, 2008
சாரு Sir-u...!
இன்று சாரு ஸ்பெஷல்.
1. சாரு Sir-uவின் சுனாமி பற்றிய ஒரு பதிவைப் பார்த்ததும் எனக்கும் சுனாமி பற்றிய ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது.
ராமாவரத்தில், எம்.ஜி.ஆர். அவர்களின் வீட்டுக்கு எதிர்ப்புறத்தில் உள்ள ஓர் அபார்ட்மெண்ட்டில் தங்கி இருந்தோம். நான், சண்முகம், சிவராஜ், பாலாஜி, ஆண்டனி, கீர்த்தி. சனிக்கிழமை இரவு வழக்கம் போல் நெடு நேரம் பேசி விட்டு தூங்க ஆயத்தப்படும் போது பார்த்தால், நள்ளிரவைத் தாண்டி முட்கள் ஓடிக் கொண்டிருந்தன.
மென் குளிர், நிலா, நட்சத்திரங்கள் எல்லாம் பார்த்ததும் ஒரு கவிதை போல் லேசாக சில வார்த்தைகள் கிளர்ந்தெழ வைத்திருந்த 80 பக்க லார்ஜ் சைஸ் நோட்டில் கிறுக்கிக் கொண்டேன். அது கடைசியில்!
ஞாயிறு காலையில் எட்டு மணிக்கு மேலாக எழ முயற்சி செய்கையில், ஆண்டனி தான் சொன்னான்.
"டேய், பூமி அதிர்ச்சிடா..! நீ ஃபீல் பண்ணினியா..?"
எனக்கு ஒன்றும் அது போல் தோன்றவில்லை. ஏதேனும் தூக்கத்தில் புரண்டிருப்பேன் என்று சொல்லி விட்டேன். பெத்த பாடி.
பிறகு தான் சுனாமி, கடல் ஊருக்குள் புகுந்து விட்டது என்றெல்லாம் மக்கள் சொன்னார்கள்.
சுனாமி? புதிதாக இருந்தது.
அவசரமாக கீழே போய், ஆபீஸ் சீனியர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்க்க, சன் டி.வி. நியூஸில், கோட் சூட் அணிந்த வாசிப்பாளர், "இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இராணுவ ... (காமிரா ஆடுகின்றது) சார்... செட் ஆடுது பாருங்க.. (காட்சி அதிர்கிறது)..கேமிரா ஆடுது சார்...(கோட், சூட், டை எல்லாம் எல்.ஜி. திரைக்கு 45 டிகிரி வாக்கில்..) என்னங்க நடக்குது... எர்த் க்வேக்கா...?"
"நீங்கள் பார்த்த இக்காட்சி நமது சன் டி.வி.யின் காலை 8 மணி செய்திகளுக்காக வீடியோ எடுக்கப்படும் போது அலுவலகத்தில் ஏற்பட்டது. இந்தோனேஷியாவில்..." அப்போதும் பட்டுப் புடவை, செயின், மல்லிகைப்பூ என்ற முதலிரவு அலங்காரத்தில் ஒரு பெண் செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்.
நாங்கள் பெண்களாய் இல்லாத காரணத்தால், அவரது அலங்காரங்களில் கவனம் செலுத்தாமல், காத்திருக்கும் ஆண்களாய் இல்லாத காரணத்தால், அவரில் கவனம் செலுத்தாமல், ஆர்வமான இளைஞர்களாய் இருந்தமையால், திரையில் கீழே காபிக் கொட்டை சைஸில் ஓடிக் கொண்டிருந்த ஃப்ளாஷ் நியூஸில் கண்களைப் பதித்திருந்தோம்.
வீடியோக்கள் காட்டப்பட்டன. கடல் பொங்கி ரிசார்ர்ட்டுகளில் புகுந்திருந்தது. மெரினாவில் மாருதி கார் முக்கால் செங்குத்தாக நின்று கொண்டிருந்தது. பீச் ரோடு வரை வாய்க்கால் போல் தேங்கி இருந்தது. திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி அசிங்கமாய் பச்சைப் பாறைகள் படிந்து தெரிந்தன. நாகையில் படகுகள் தெறித்திருந்தன. குமரியில் விவேகானந்தர் மண்டபம் முழுக்க நனைந்திருந்தது. இலங்கையில் தென்னைகள் மிதந்தன.
ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தோமே ஒழிய, இதன் கடும் பயங்கரம் புரியவில்லை.
சுனாமி என்பதன் அர்த்தம் தெரியாததால், வதந்திகள் றெக்கை அல்ல, ராக்கெட் கட்டி பறந்தன.
"பீச் ரோட்ல ட்ராஃபிக் ஃபுல்லா ப்ளாக் பண்ணிட்டாங்களாம். நேப்பியர் ப்ரிட்ஜ்ல இருந்து லைட் ஹவுஸ் வரைக்கும் ப்ளாக். அப்படியே தூர்தர்ஷன் ரோட்ல திருப்பி விட்டுருக்காங்க.."
"பெசண்ட் நகர்ல கடல் ஒரு கி.மீ.க்கு உள்ள போயிருக்கு. எல்லாரும் ஜாலியா உள்ள போய்ட்டு வர்றாங்களாம். என்ன, கொஞ்சம் வழுக்கறதால பாத்து பாத்து போறாங்களாம்.."
"பொன்னியின் செல்வன்ல வர்ற மாதிரி நாகப்பட்டினத்துல தான் செம அட்டாக். பாதி ஊரை காலி பண்ணிடுச்சு..."
"திருச்செந்தூர்ல கடல் கோயிலை மட்டும் விட்டுட்டு, சுத்திட்டு போய் பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் வந்திருக்கு. ஒரு காலத்துல வருண பகவான் முருகன்கிட்ட சத்தியம் பண்ணி இருக்காராம், உங்க கோயிலை தொட மாட்டேன்னு.! அதான்...!"
"ஸ்ரீலங்கா மட்டும் இல்லைனா, அவ்வளவு தான் கன்யாகுமரி உட்பட சவுத் ஃபுல்லா க்ளோஸ் ஆகி இருக்கும்..."
"அந்தமான்ல தான் பயங்கரமான சேதமாம்..."
அரட்டை அரங்கம், டாப் டென்களின் கீழே நகர்ந்தபடி இருந்த நியூஸிலேயே எங்கள் கவனம் நிறைந்திருக்க, அவ்வப்போது அதை கலைத்தபடி ஃபோன் கால்கள் வீட்டிலிருந்து...!
"வீட்டிலேயே இருடா...! எங்கயும் போயிடாத..! எர்த் க்வேக் வரலாம்னு சொல்றாங்க..!"
"ம்மா..! நாங்க இருக்கறது ராமாபுரத்துல..! கடல் இங்க இருந்து மூணு கிலே மீட்டர் தள்ளி. சுனாமி எல்லாம் வராதுமா..!"
"எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க...!"
திடீரென்று ஒரு ஞானோதயம்.
ஊரில் இருக்கின்றவர்கள் தான் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், நாமும் ஏன் அதையே செய்ய வேண்டும்? நடந்தது நமக்கு அருகில் தானே! நேரில் சென்று பார்த்தால் என்ன..?
அவசர அவசரமாக குளித்து விட்டு (மதியம் 12:30) நானும் கீர்த்தியும் கிளம்பினோம்.
M54 பிடித்து ஒரு ஸ்டாப்பிங்கில் (சைதைக்கு முன் ஸ்டாப். எட்டு மாதத்திற்குள் பேர் மறந்து விட்டதே!) இறங்கி, ரோட்டை க்ராஸ் செய்து, ரோட்டை க்ராஸ் செய்து, ரோட்டை க்ராஸ் செய்து, 23C பிடித்து பெசண்ட் நகர் சென்றோம்.
கல்லூரிக் காலத்தின் அந்திம செமஸ்டர்களில் கிண்டி கேம்பஸில் இருந்து நடந்தே பெசண்ட் நகர் பீச் போய் அரட்டை அடித்து விட்டு, ஆங்காங்கே கிடைத்ததை உண்டு விட்டு, மீண்டும் நடைபயணம் மேற்கொண்ட 'அந்த ஒரு கனாக் காலத்தில்' அலைகள் வந்து தீண்டும் இடத்தில் ஒரு மேடு போல் உருவாகி இருந்தது. அதில் அமரலாம்.
இப்போது அந்த மேட்டையே சுத்தமாக காணோம்.வழித்து எடுக்கப்பட்டு இருந்தது. ரோட்டில் இருந்து கடல் வரை சீரான மணல் தளமாக இருந்தது.
அது மட்டுமல்ல. கடல் பச்சையாக உள் வாங்கி இருந்தது.
மேட்டுப் பாறைகள் பாசி பூண்டிருந்தன. அழுக்காய், கறுப்பாய் சாக்கடையாய் இருந்தது. நகரத்தின் முழுக் கழிவுகளும் கலக்கும் கடலின் ஆரம்பமே இப்படி என்றால், கடல் முழுதும் எவ்வளவு மாசுபட்டிருக்கும் என்று தோன்றியது.
காய்ந்த இளநி, செருப்புகள், வாழைத் தோல், உடைந்த பலூன், அபூர்வமாய் சில்லறைகள், பூச் சரங்கள், நண்டு என்று எக்கச்சக்கமாய் தெரிந்தன.
சிக்னல் எடுக்கிறதா என்று செக் செய்து பார்த்தேன். எடுத்தது. வானம் கொஞ்சம் மேக மூட்டமாய் இருந்தது. எப்போதும் மழை வரலாம். எனினும் சென்னையின் வெயில் சூழ் காற்று இருந்தது.
நானும், கீர்த்தியும் கைகளைப் பிடித்துக் கொண்டு கொஞ்ச தூரம் உள்ளே சென்றோம். வழுக்கியதும், இறுக்கம்.
கொஞ்ச நேரத்தில் எங்களையும் தாண்டி உள்ளே சென்றிருந்த எல்லோரும், 'தடார் புடார்' என்று வெளியே ஓடி வர, நாங்களும் கூடவே ஓடி... திரும்பிப் பார்த்தால், கடல் எங்களைத் துரத்திக் கொண்டு வருகின்றது.
தன் எல்லையில் வந்து விட்ட அயலானைத் துரத்தும் வெறித் தெரு நாயின் வேகத்துடன், மீண்டும் தன் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றும் போர் வீரனின் தாவலுடன் அலைகள் எங்களை ஆக்ரமிப்பு செய்ய ஓடி வந்தன.
நான் ஒரு முட்டாள்தனமான யோசனை கூறினேன்.
கடலின் எல்லையை ஒட்டி, மீனவக் குடிசைகளைத் தாண்டி, அஷ்டலக்ஷ்மி கோயிலின் கிழக்குப் பார்த்த படிக்கட்டுகளில் ஏறிக் கொள்வோம் என்று.
கீர்த்தி, 'அதெல்லாம் வேண்டாம்! என்று மெயின் ரோட்டுக்கே ஓடுவோம்' என்று சொல்லி.. அங்கேயே ஓடினோம்.
பிறகு பெருமூச்சு விட்டு, கோயிலுக்கு செல்லலாம் என்று நடந்து போய் சர்ச்சை கடந்தால், அது வரை ஈரம். கடலின் உப்பு ஈரம். காலையில் வந்த அலை ஈரம்.
லேசாக பூத்த பயத்துடன் அவற்றை, அவர்களை கடந்து சென்று கோயிலுக்கு அருகில் பார்த்தால்...
படிக்கட்டுகள் வரை கடல் வந்திருந்தது. இப்போது கிளம்பிய கடல்..!
அப்போது தான் 'தப்பித்தோம்!' என்று நினைத்துக் கொண்டேன்.
அந்த கவிதை ::
ஐந்து புள்ளிக் கோலங்களாய்.
உன் வார்த்தைகளின் வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்ட மனம், உன் மெளனத்தின் எடை தாங்க முடியாமல் தவிக்கிறது. அந்த கனத்தையெல்லாம் கரைத்து ஊற்றிய மையில் எழுதிய கவிதைகளின் எழுத்துக்கள், நான் இறக்கி வைத்த எடை தாளாமல் வளைந்தும், நெளிந்தும் கிடக்கின்றன.
சொல்லாமல் நீ நகர்ந்து சென்று விட்ட பின்பு, உனது ' நாளை பார்க்கலாம் ' என்ற சொல்லுக்காக, என் மனதில் நான் ஒதுக்கி வைத்த உள்ளம், காலியான வெறும் பள்ளமாக உள்ளது.
ஆயிரமாயிரம் கரங்களால் கரை தழுவும் நுரைகளால் ஆர்ப்பரிக்கும் கடலும் அந்த மெளனத்தை நிரப்ப முடியாமல் பின்வாங்கிச் செல்கிறது.
வழக்கமாய் நீ பிரிந்து செல்கையில், உடையிலிருந்து உதிரும் மணற்துளிகளை தாங்கி முத்தமிடுவதை, திரும்பிப் பார்த்துச் சிரித்துச் செல்வாய். இன்று நீ உதறாத மணற்துகள்களுக்காக, என் உதடுகள் உலர்ந்து கிடப்பதை, திரும்பிப் பார்க்காமலேயே அறிவாயா?
நீ சென்று விட்டபின்பு, கடற்கரை மணலில் நீ பதித்த பாதச் சுவடுகள், ஐந்து புள்ளிக் கோலங்களாய் மின்னுகின்றன.
அவற்றின் ஓரமாகவே என் மனமும் சென்று கொண்டிருக்கிறது.....
2. சைனாவில் இருந்து அனீஸ் என்ற எனது நண்பரின் கடிதத்தையும் அதற்கு சில கேள்விகளை பதிலாகவும் சாரு இன்று தன் பதிவில் இணைத்துள்ளார்.
மகிழ்ச்சியாக இருந்தது.
அவரின் அனுமதி இல்லாமல் இங்கே அதை கொடுப்பது சரியல்ல (தவறா என்பது மற்றொரு கேள்வி!) என்பதால் க்ளிக்குங்க!
பிப்ரவரி 27, 2008 இரவில் எங்கள் இருவருக்கும் இடையே நடந்த Chat-ஐ படிக்க விரும்பின் இங்கே க்ளிக்குங்க!
1. சாரு Sir-uவின் சுனாமி பற்றிய ஒரு பதிவைப் பார்த்ததும் எனக்கும் சுனாமி பற்றிய ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது.
ராமாவரத்தில், எம்.ஜி.ஆர். அவர்களின் வீட்டுக்கு எதிர்ப்புறத்தில் உள்ள ஓர் அபார்ட்மெண்ட்டில் தங்கி இருந்தோம். நான், சண்முகம், சிவராஜ், பாலாஜி, ஆண்டனி, கீர்த்தி. சனிக்கிழமை இரவு வழக்கம் போல் நெடு நேரம் பேசி விட்டு தூங்க ஆயத்தப்படும் போது பார்த்தால், நள்ளிரவைத் தாண்டி முட்கள் ஓடிக் கொண்டிருந்தன.
மென் குளிர், நிலா, நட்சத்திரங்கள் எல்லாம் பார்த்ததும் ஒரு கவிதை போல் லேசாக சில வார்த்தைகள் கிளர்ந்தெழ வைத்திருந்த 80 பக்க லார்ஜ் சைஸ் நோட்டில் கிறுக்கிக் கொண்டேன். அது கடைசியில்!
ஞாயிறு காலையில் எட்டு மணிக்கு மேலாக எழ முயற்சி செய்கையில், ஆண்டனி தான் சொன்னான்.
"டேய், பூமி அதிர்ச்சிடா..! நீ ஃபீல் பண்ணினியா..?"
எனக்கு ஒன்றும் அது போல் தோன்றவில்லை. ஏதேனும் தூக்கத்தில் புரண்டிருப்பேன் என்று சொல்லி விட்டேன். பெத்த பாடி.
பிறகு தான் சுனாமி, கடல் ஊருக்குள் புகுந்து விட்டது என்றெல்லாம் மக்கள் சொன்னார்கள்.
சுனாமி? புதிதாக இருந்தது.
அவசரமாக கீழே போய், ஆபீஸ் சீனியர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்க்க, சன் டி.வி. நியூஸில், கோட் சூட் அணிந்த வாசிப்பாளர், "இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இராணுவ ... (காமிரா ஆடுகின்றது) சார்... செட் ஆடுது பாருங்க.. (காட்சி அதிர்கிறது)..கேமிரா ஆடுது சார்...(கோட், சூட், டை எல்லாம் எல்.ஜி. திரைக்கு 45 டிகிரி வாக்கில்..) என்னங்க நடக்குது... எர்த் க்வேக்கா...?"
"நீங்கள் பார்த்த இக்காட்சி நமது சன் டி.வி.யின் காலை 8 மணி செய்திகளுக்காக வீடியோ எடுக்கப்படும் போது அலுவலகத்தில் ஏற்பட்டது. இந்தோனேஷியாவில்..." அப்போதும் பட்டுப் புடவை, செயின், மல்லிகைப்பூ என்ற முதலிரவு அலங்காரத்தில் ஒரு பெண் செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்.
நாங்கள் பெண்களாய் இல்லாத காரணத்தால், அவரது அலங்காரங்களில் கவனம் செலுத்தாமல், காத்திருக்கும் ஆண்களாய் இல்லாத காரணத்தால், அவரில் கவனம் செலுத்தாமல், ஆர்வமான இளைஞர்களாய் இருந்தமையால், திரையில் கீழே காபிக் கொட்டை சைஸில் ஓடிக் கொண்டிருந்த ஃப்ளாஷ் நியூஸில் கண்களைப் பதித்திருந்தோம்.
வீடியோக்கள் காட்டப்பட்டன. கடல் பொங்கி ரிசார்ர்ட்டுகளில் புகுந்திருந்தது. மெரினாவில் மாருதி கார் முக்கால் செங்குத்தாக நின்று கொண்டிருந்தது. பீச் ரோடு வரை வாய்க்கால் போல் தேங்கி இருந்தது. திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி அசிங்கமாய் பச்சைப் பாறைகள் படிந்து தெரிந்தன. நாகையில் படகுகள் தெறித்திருந்தன. குமரியில் விவேகானந்தர் மண்டபம் முழுக்க நனைந்திருந்தது. இலங்கையில் தென்னைகள் மிதந்தன.
ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தோமே ஒழிய, இதன் கடும் பயங்கரம் புரியவில்லை.
சுனாமி என்பதன் அர்த்தம் தெரியாததால், வதந்திகள் றெக்கை அல்ல, ராக்கெட் கட்டி பறந்தன.
"பீச் ரோட்ல ட்ராஃபிக் ஃபுல்லா ப்ளாக் பண்ணிட்டாங்களாம். நேப்பியர் ப்ரிட்ஜ்ல இருந்து லைட் ஹவுஸ் வரைக்கும் ப்ளாக். அப்படியே தூர்தர்ஷன் ரோட்ல திருப்பி விட்டுருக்காங்க.."
"பெசண்ட் நகர்ல கடல் ஒரு கி.மீ.க்கு உள்ள போயிருக்கு. எல்லாரும் ஜாலியா உள்ள போய்ட்டு வர்றாங்களாம். என்ன, கொஞ்சம் வழுக்கறதால பாத்து பாத்து போறாங்களாம்.."
"பொன்னியின் செல்வன்ல வர்ற மாதிரி நாகப்பட்டினத்துல தான் செம அட்டாக். பாதி ஊரை காலி பண்ணிடுச்சு..."
"திருச்செந்தூர்ல கடல் கோயிலை மட்டும் விட்டுட்டு, சுத்திட்டு போய் பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் வந்திருக்கு. ஒரு காலத்துல வருண பகவான் முருகன்கிட்ட சத்தியம் பண்ணி இருக்காராம், உங்க கோயிலை தொட மாட்டேன்னு.! அதான்...!"
"ஸ்ரீலங்கா மட்டும் இல்லைனா, அவ்வளவு தான் கன்யாகுமரி உட்பட சவுத் ஃபுல்லா க்ளோஸ் ஆகி இருக்கும்..."
"அந்தமான்ல தான் பயங்கரமான சேதமாம்..."
அரட்டை அரங்கம், டாப் டென்களின் கீழே நகர்ந்தபடி இருந்த நியூஸிலேயே எங்கள் கவனம் நிறைந்திருக்க, அவ்வப்போது அதை கலைத்தபடி ஃபோன் கால்கள் வீட்டிலிருந்து...!
"வீட்டிலேயே இருடா...! எங்கயும் போயிடாத..! எர்த் க்வேக் வரலாம்னு சொல்றாங்க..!"
"ம்மா..! நாங்க இருக்கறது ராமாபுரத்துல..! கடல் இங்க இருந்து மூணு கிலே மீட்டர் தள்ளி. சுனாமி எல்லாம் வராதுமா..!"
"எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க...!"
திடீரென்று ஒரு ஞானோதயம்.
ஊரில் இருக்கின்றவர்கள் தான் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், நாமும் ஏன் அதையே செய்ய வேண்டும்? நடந்தது நமக்கு அருகில் தானே! நேரில் சென்று பார்த்தால் என்ன..?
அவசர அவசரமாக குளித்து விட்டு (மதியம் 12:30) நானும் கீர்த்தியும் கிளம்பினோம்.
M54 பிடித்து ஒரு ஸ்டாப்பிங்கில் (சைதைக்கு முன் ஸ்டாப். எட்டு மாதத்திற்குள் பேர் மறந்து விட்டதே!) இறங்கி, ரோட்டை க்ராஸ் செய்து, ரோட்டை க்ராஸ் செய்து, ரோட்டை க்ராஸ் செய்து, 23C பிடித்து பெசண்ட் நகர் சென்றோம்.
கல்லூரிக் காலத்தின் அந்திம செமஸ்டர்களில் கிண்டி கேம்பஸில் இருந்து நடந்தே பெசண்ட் நகர் பீச் போய் அரட்டை அடித்து விட்டு, ஆங்காங்கே கிடைத்ததை உண்டு விட்டு, மீண்டும் நடைபயணம் மேற்கொண்ட 'அந்த ஒரு கனாக் காலத்தில்' அலைகள் வந்து தீண்டும் இடத்தில் ஒரு மேடு போல் உருவாகி இருந்தது. அதில் அமரலாம்.
இப்போது அந்த மேட்டையே சுத்தமாக காணோம்.வழித்து எடுக்கப்பட்டு இருந்தது. ரோட்டில் இருந்து கடல் வரை சீரான மணல் தளமாக இருந்தது.
அது மட்டுமல்ல. கடல் பச்சையாக உள் வாங்கி இருந்தது.
மேட்டுப் பாறைகள் பாசி பூண்டிருந்தன. அழுக்காய், கறுப்பாய் சாக்கடையாய் இருந்தது. நகரத்தின் முழுக் கழிவுகளும் கலக்கும் கடலின் ஆரம்பமே இப்படி என்றால், கடல் முழுதும் எவ்வளவு மாசுபட்டிருக்கும் என்று தோன்றியது.
காய்ந்த இளநி, செருப்புகள், வாழைத் தோல், உடைந்த பலூன், அபூர்வமாய் சில்லறைகள், பூச் சரங்கள், நண்டு என்று எக்கச்சக்கமாய் தெரிந்தன.
சிக்னல் எடுக்கிறதா என்று செக் செய்து பார்த்தேன். எடுத்தது. வானம் கொஞ்சம் மேக மூட்டமாய் இருந்தது. எப்போதும் மழை வரலாம். எனினும் சென்னையின் வெயில் சூழ் காற்று இருந்தது.
நானும், கீர்த்தியும் கைகளைப் பிடித்துக் கொண்டு கொஞ்ச தூரம் உள்ளே சென்றோம். வழுக்கியதும், இறுக்கம்.
கொஞ்ச நேரத்தில் எங்களையும் தாண்டி உள்ளே சென்றிருந்த எல்லோரும், 'தடார் புடார்' என்று வெளியே ஓடி வர, நாங்களும் கூடவே ஓடி... திரும்பிப் பார்த்தால், கடல் எங்களைத் துரத்திக் கொண்டு வருகின்றது.
தன் எல்லையில் வந்து விட்ட அயலானைத் துரத்தும் வெறித் தெரு நாயின் வேகத்துடன், மீண்டும் தன் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றும் போர் வீரனின் தாவலுடன் அலைகள் எங்களை ஆக்ரமிப்பு செய்ய ஓடி வந்தன.
நான் ஒரு முட்டாள்தனமான யோசனை கூறினேன்.
கடலின் எல்லையை ஒட்டி, மீனவக் குடிசைகளைத் தாண்டி, அஷ்டலக்ஷ்மி கோயிலின் கிழக்குப் பார்த்த படிக்கட்டுகளில் ஏறிக் கொள்வோம் என்று.
கீர்த்தி, 'அதெல்லாம் வேண்டாம்! என்று மெயின் ரோட்டுக்கே ஓடுவோம்' என்று சொல்லி.. அங்கேயே ஓடினோம்.
பிறகு பெருமூச்சு விட்டு, கோயிலுக்கு செல்லலாம் என்று நடந்து போய் சர்ச்சை கடந்தால், அது வரை ஈரம். கடலின் உப்பு ஈரம். காலையில் வந்த அலை ஈரம்.
லேசாக பூத்த பயத்துடன் அவற்றை, அவர்களை கடந்து சென்று கோயிலுக்கு அருகில் பார்த்தால்...
படிக்கட்டுகள் வரை கடல் வந்திருந்தது. இப்போது கிளம்பிய கடல்..!
அப்போது தான் 'தப்பித்தோம்!' என்று நினைத்துக் கொண்டேன்.
அந்த கவிதை ::
ஐந்து புள்ளிக் கோலங்களாய்.
உன் வார்த்தைகளின் வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்ட மனம், உன் மெளனத்தின் எடை தாங்க முடியாமல் தவிக்கிறது. அந்த கனத்தையெல்லாம் கரைத்து ஊற்றிய மையில் எழுதிய கவிதைகளின் எழுத்துக்கள், நான் இறக்கி வைத்த எடை தாளாமல் வளைந்தும், நெளிந்தும் கிடக்கின்றன.
சொல்லாமல் நீ நகர்ந்து சென்று விட்ட பின்பு, உனது ' நாளை பார்க்கலாம் ' என்ற சொல்லுக்காக, என் மனதில் நான் ஒதுக்கி வைத்த உள்ளம், காலியான வெறும் பள்ளமாக உள்ளது.
ஆயிரமாயிரம் கரங்களால் கரை தழுவும் நுரைகளால் ஆர்ப்பரிக்கும் கடலும் அந்த மெளனத்தை நிரப்ப முடியாமல் பின்வாங்கிச் செல்கிறது.
வழக்கமாய் நீ பிரிந்து செல்கையில், உடையிலிருந்து உதிரும் மணற்துளிகளை தாங்கி முத்தமிடுவதை, திரும்பிப் பார்த்துச் சிரித்துச் செல்வாய். இன்று நீ உதறாத மணற்துகள்களுக்காக, என் உதடுகள் உலர்ந்து கிடப்பதை, திரும்பிப் பார்க்காமலேயே அறிவாயா?
நீ சென்று விட்டபின்பு, கடற்கரை மணலில் நீ பதித்த பாதச் சுவடுகள், ஐந்து புள்ளிக் கோலங்களாய் மின்னுகின்றன.
அவற்றின் ஓரமாகவே என் மனமும் சென்று கொண்டிருக்கிறது.....
2. சைனாவில் இருந்து அனீஸ் என்ற எனது நண்பரின் கடிதத்தையும் அதற்கு சில கேள்விகளை பதிலாகவும் சாரு இன்று தன் பதிவில் இணைத்துள்ளார்.
மகிழ்ச்சியாக இருந்தது.
அவரின் அனுமதி இல்லாமல் இங்கே அதை கொடுப்பது சரியல்ல (தவறா என்பது மற்றொரு கேள்வி!) என்பதால் க்ளிக்குங்க!
பிப்ரவரி 27, 2008 இரவில் எங்கள் இருவருக்கும் இடையே நடந்த Chat-ஐ படிக்க விரும்பின் இங்கே க்ளிக்குங்க!
Wednesday, July 09, 2008
ஏதோ தெரிஞ்சிருக்கா..?
இந்த வருடத்தில் பிப்ரவரி மாதம் ஒரு நாள் 'வாழ்வே மயம்' என்று மகாகவி சித்தன் என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தேன். அது முடிந்ததும், சீனாவில் இருக்கும் நண்பர் அனீஸுடன் ஒரு நெடும் சாட் செய்தேன். அது கீழே ::
6:51 PM aneez: enna machi wait and c
6:54 PM me: nee mattum smiles of sharksnu vechirukke
aneez: naanga suraa'daaa
me: ethu.. intha puttu seyya use pannuvaangale.. athu thaane.. (prop:ch-28)
6:55 PM aneez: deiii
sonthamaa dialogue elutungaada
me: oooooooooo
6:56 PM ivaru ellame sonthama thaan pannuvaaru...
6:57 PM aneez: aamaa machi
atleast leassuu eduthavathu pannuvom
me: correctda...
then...
tamil blog...?
6:58 PM aneez: kattyam eluthanumdaaa
but officela konjam velai kodukuraanungaa
me: aana time thaan illaa..
corect?
aneez: within march end i will have finished some of my pathivugal
me: china time?
6:59 PM aneez: 9.30
me: DEI.....
naan kaettathu march end china timelaya...?
;'_
;-)
7:00 PM aneez: deii jokeaa athuuuu
kilinjathu pooop
me: ok.. ok.. thanda thanda cool cool
appura epdi irukku chinese kulir...?
7:01 PM aneez: romba jaasthi machi
me: suudu ethikka vendiyathu thaane..
tea, coffe kudichu
7:02 PM aneez: machi ippo thaan black daniel 2 round adichu mudichen
me: GREATDA
aneez: idhukku mela tea kudichaa vaandhi vanthurunm
7:03 PM me: chinese pixes ellam update pannalaamla
chinese padikka nalla website ethavathu sollu machi...
7:04 PM aneez: website ellam illai machi
here chinese is full of confusion
me: then
aneez: each dialect is like a different language
me: nee epdi pozakkira..
7:05 PM aneez: naan enga padikuren
padikanum machi
me: dei.. nee eppadi makkalkitta pesi pizaikkiranu kaetten..
7:06 PM aneez: enga pesuren
full sign language thaan
me: appuram ellame saikai thaanaa..
bath room enganu epdi keppa...? as usual school paiyan maathiriya enna?
7:07 PM aneez: amamdaa
ithu enna americavaa
roadlaa onnukku adikka vendiyathu thaan
me: appa namma uur maathiri thaan. prechnaiye illa..
aneez: aamaa machiii
me: sappadu ellam..
7:08 PM paambuk kari. thavalai leg soup (4 kaal vera)..
aneez: we go to some english restaurantss
epadiooo polappu poguthudaa
ellam saapudaa vendiyathu thaan
me: EDS thaana
7:09 PM aana athaiyum saappidap pazaku... life means learning....
aneez: aaama machi
here i am learning lot abt life da
7:10 PM me: Great... thats the experiences shape our journey...
7:11 PM u have to update ur travels and experiences in blogs... that will be another Yuan-swang's notes for the future generations...
aneez: kattayam machi
i am not travelling
i will start that very soon
7:12 PM innum inga salary and reimbursements varalai
once i get that i will do thingss
me: here Travelling means im not telling about spatial travel.. ur travel in time domain.. from yesterday to today and towards tomorrow... Life Travel...
7:13 PM aneez: apadinguraa
potruvommm
me: in this type of travel u have lot of experiences, which i am not having...and not me, every1 has their own experiences in this travel towards god...
those must be recorded. for the future...
7:14 PM future children...
aneez: machi spirtualityaa pesuraa
7:15 PM me: konjuundu thyaanam pannip paarththeen.. theriyaatha, puriyaatha sila vishayangal konjak konjamaa theriya varuthu.. thats our country's treasure illaiya...?
not religious, not regarding gods..
aneez: not only ourss
me: its about our body...
7:16 PM aneez: in every oriental country
meditation is there
me: correct...
thirumuularnu oru sithar enna solli irukkarna, "uunudampu aalayam. puusai koLLa vaaraay paraaparamee'ngkaraar..
7:17 PM aneez: thirumoolar have told lot ofthingsss
me: that means our body is temple. god is inside... ww have to worship him..
aneez: vaasi and moochu pathi niraya pesi erukkaar
me: but antha song namakku oru memory song-aave tamil lessonla( state board) came...
nee athaiyellam paani irukkiyaa.
7:18 PM i now only joine vethathiri maharishi's yoga practices...
aneez: try panrenn
me: seriously etho irukku machi...
aneez: nalla vishayamda athu
i have respect over vethathri maharishi
me: kannai muudi yosichaa neraiya puriyuthu,..
aneez: pollachi pakathula aaliyarula erukku avaroda asiramam
hahaa
me: s...
aneez: romba thelivu venum machi vaalkailaa
7:19 PM me: what is this life, for whom i came to this world, is this someone's wish/ dream.. if once he got up, will we vanish...
questions.. questions...
aneez: hahaa
7:20 PM life is not easy'da once this questions start to comess
me: is completing this project and sucking the customer's legs and a** is the reason for my life..
aneez: but without getting confused and diverted u have to find answerss
me: sometimes i confused regarding this...
aneez: haha machi
naan thaniya inga vanthathukku idhuvum oru kaaranam
me: romba pesaren nu ninaikkiren...
aneez: want to feel me with me
7:21 PM illaidaaa
me: muthu padam paathrirukkiya...?
aneez: thoppilaey erunthaalum ovovuru maramum thani maramnu oru siththar paadal erukku
paarthen
me: correctda...
7:22 PM athula thalaivar vayasanavara jameenkku varuvaaru.. appo 'antha veettu amma enga poi irukkaanga'nu ketpaaru
vadivel koyilikkunu solluvaaru
aneez: hmm
me: ethukkunu ketpaaru
vadivel sirichukitte koiyilukku ethukku povaanga, saami kumbidanu solluvaaru
aneez: hmm
7:23 PM me: thalaivar appo, veettukkulla irukkira vinayakar silaiyaik kaatti appo ithu yaarunu keettuttu, 'SAAMIYAI ULLAYE VECHUKITTU VELIYA THEDARAANGA'nu solli vizunthu vizunthu sirippaaru..
enna oru thaththuvamm...
really god is here, inside us...
aneez: aamadaa
7:24 PM kammunatty engeyoo ullai olinju erukaarr
thedurathukkuleyae thaavu theernthurum
kidaikkum poluthu romba thevai pada maattaar
7:25 PM me: in school days after i think 8th, appo biology padichathukku appuram, nethiyaith thattip paarthu'ithellam verum proteinsum, amino acidsum thaana..'nu ninaichup paarthathu ellam ninaivukku varuthu...;-)
god thevaip padaatha stage vera irukka enna..
7:26 PM aneez: haha
kadavullum neeyum onna aanathukku aporam avar yen thevai pada poraarr
me: think panna vechitta.
7:27 PM nee intha maari think panni irukkiya
aneez: nirayaaa
7:28 PM pala neram it was like that i am inserted into a bag called body
me: Greatda..
naanum athu pola thought
aneez: great ellam illaai
7:29 PM there are millions who think like us
the matter is who gets the truth
me: ethuvum unmai illa.. ethuvum poi illa..
7:30 PM aneez: aamaa machi
apadi illai
ellam unmai
ellam poi
bharathi sonna maadhri
Maayakannan avan
7:31 PM me: once i walked under thro chennai's anal hotty sun, i was sweated...
suddenly one thought arised.
7:32 PM aneez: ennadhu
me: this hot is from sun.. when? the earth is facing the sun, so veyil.. but apart from this very very small sun, the universe id filled with darkness..
so y i have to worry abt this thakkanoondu dun
7:33 PM thuliyoondu sun..
pirapanjsaththai nirappiyulla iruL
aneez: haha...actually spirituality is not feeling greatness by insulting the nature and co-humans
it's co-existence
7:34 PM me: illa. inot insulted sun.. i feel why i worry abt this sun..
aneez: spirituality worry'um illai
me: sun does his duty, i told y we should thitting sun for the veyil..
aneez: ethuvum illaida athuu
aanaal ellam unndu
7:35 PM who said that sun's duty is to heat???
unkitta sun vandhu soluchaa?
me: illa
aneez: ennada kathai vidureengaa
if u dont understand or know a thing then how can u say about that thing and it's duties
7:36 PM me: naan solla varathu "intha suuriyan ippadi koluthuthe"nu erichal pattukittu irukkama, namma velaiyai AMAITHIyaa paakka mudinjathu athukkappuram
7:37 PM aneez: haha yethukku nee enakku ivloo kasttapattu explain panraa???
so u r having the feeelin and fear of being mis understood?
me: s
aneez: idhuvum illai spirituality
7:38 PM being none and being one
me: then whats as ur scale
aneez: i dont have any scale
me: being none and being one
aneez: does god has any scale?
me: great point
7:39 PM no
aneez: how do u know ????
may be god has a scale or maybe he doesn't
me: ninaichen ipdi keppanu
aneez: the point is to understand that there exists no need to understand
just to feel
7:40 PM no fucking explanation
me: entha feelingai appo nee godnu solluva
7:41 PM aneez: ethukku pirikuraa ellatheyum
kolanthaiyayum kadavul thaan padaikuraar
kolanthaiyaa kolra kolaikaranaeyum avar thaan padaikuraar
7:42 PM me: ithukku enna solrathunu theriyala
antha kozantha thaan kolaikaaranaa aaaguthu illaya..
7:43 PM aneez: aamaa appo yaaru kettavan yaaru nallavan
appo kadavul'nu oruthar illaiyaa?
7:44 PM me: irukkar..
aana kadavulai epdi neenga nallathu mattum mpanravarnu eduthukkireenga
7:45 PM aneez: apadiyaa..daily africa'la oru paavamum seyyadhaa 5000 children are dying
why he is playing games with them
appo kadavuley kettadhu panraaruna naangaa panna koodathaa?
7:46 PM apadi nallathu kettadhu rendumey pannina..apppo avaroda character enna manusa characteraa???
ennada kathai vudureengaa
7:47 PM me: intha discussion kadavul irukkaraa illayaanu poittu irukku...
aneez: illaiyaee
yaaru sonna it is goind towards some characters about god
existence is one of them
me: avar enga exist?
aneez: do u ever felt ur existence without any other human beings or bodies ???
7:48 PM me: angayavathu heaven-laya.. illa un manasaula...
aneez: u always need some other thing to prove your existence
7:49 PM me: sometimes i feel other persons as a sand pot which has 9 holes on it..
me too..
athanaala yaar meelayum kobam vara maattenguthu..
aneez: hahaa....
me: sari poo nu vidath thonrathu...
7:50 PM aneez: thani perungobam venumda intha vayathil
kobam illadha vaalvu veeen machi
me: enakku kobam en meela thaan...
aneez: bharathiyae Sinam palaga solli erukkaan
7:51 PM dei nalla thelivaana manadhu thevai spirituality'kku
me: theruvila pora naayai anbaa paakkath thoonuthu..
aneez: it's not a easy one
me: athuvum oru uir thananu thoonuthu
aneez: anbum + kobam + panivu + thairiyam ipadi ellam erukanummm
naaya naaya paarkanum....
manusana manusanaaa paarkanam
7:52 PM spirituality needs lot of intelligence
self indulgence
self questioning
relentless search
me: unakkum athukkum ore uyirnu therinjappuram epdi athai kal eduthu adikka thonum?
aneez: naan kal eduthu adikalai machi
inga nalla fry panni tharuvaangaa
me: ;-)
7:53 PM aneez: athai vaangi sapida thonudhu
deiii romba thannirakkam koodathu
spirituality'laa
u need a master machi
me: naanum inga chicken fish sappittukittu thaan irukken..
aneez: yogic practices,books,self questioning and search wont suffice
me: but i think im in transition stage...
aneez: guru illaaa viththaai aadathu
nalla guruva mothala thedikkkooo
7:54 PM me: yaar gurunu theriyala
aneez: first test his qualities
athu therinjaa 50% over machi
once u got a guru surrender urself to him
he will take care of u
it takes lot of years to get the guru
7:55 PM be patient and pray,meditate relentless to the GOD for a guru
me: innum 14k days thaan life.. athukkulla naan enna ellam pannanum..?
aneez: the divine path will send u the one
unakku evan sonna apadiii
7:56 PM me: unakku onnu theriyuma..?
aneez: do u think after we lose this body everything over?
yes
me: athu theriyalaye,...
theriyaama thaane ella kozappamum...
aneez: haaha aporam ennada 14k dayss
poda poii polappa paaruu
me: kanakku pottu paaru.. 60 yearskku innum evlo naalnu...
7:57 PM aneez: mothala kadamaiyaa mudingooo kannaasss
me: athai thaanda firste sonnen..
aneez: unnnai nambi erukura un kudumbathukku seyya vendiyathu ellam senjutiyaa
me: ethu en kadamai... customer satifacion..?
illa nu ninaikkiren...
aneez: athu un vayithu polappu
niraya kadamai erukkudaa
7:58 PM me: niraiya kelvikal vara vara.. athu ellam mounathila mudiyuthu..
aneez: ellatheyum thavarama senjittey thaan sidela self realisationum nadakanum
me: ethaiyum pesama mounamaa irukka thonuthu...
aneez: goodd
unnakku aairam peru aairam padhil koduthaalum
un manam kodukura mounam thaan perusu
7:59 PM me: as a black hole questions immerse into silence..coz they arose from silence illaiyaa..
aneez: deiii manam oru maayaiii
me: last year book fair chennai i bougth The Holy QuirOn also...
and tried to read..
just 4 pages i fell..
athukku mela poga mudiyala..
8:00 PM ramakrishnar, vivekanandharnu padichup paarthutten..
bivle school daysla padichu paarthen..
8:01 PM i believe u understand im not bandhafying by telling all these secrets to you...
aneez: idhu ellam secret illaida
8:02 PM who ever searches the divine all those millions are doing this same
me: llai ithu varaikkum yaarttayum sonnathilllla..
bharathiyoda ellap paattum pidikkum athai vida antha paattu..
"nirpathuve"..
8:03 PM bharathiyum oru sithar thaannu sonnap paattu illa athu..
"yaanum oru sithanaaga vantheen"nu paadinaar illaiyaa.
aneez: amanda
avar konjam over dose
dervish'nu englishlaa solluvaangaa
antha maadhri paarty adhu
me: avar vantha neeram sari illaa..
aneez: evan sonnaa?
8:04 PM me: athanaala country pathi pada vendiyathaa poyiduthu...
aneez: dei bharathi vandha velaiyaa correctaaa pannittaan
dei siththarnnaa epppovum kadaval pathi thaan paadanumaaa
me: illaatti oru yogiyaa aaga vendiyavaru...
aneez: ennangadaa idhuuu
me: kaanbathellam verum kanavaa..?
aneez: epovumey oru dappakkuliyaa adaikuringalaey
me: enga appa iranthappo veettukku ponapp en ninaivukku vantha lines ithu...
8:05 PM naanum verum kanavaa- intha njaalamum poi thaanaa..?
aneez: machi naan sooru thinna poren...
eennna thaan aanmeegam pesinalum
me: ellam poinu ponappuram appraisal illai, increment pathalainu sandai podarathula enna arththam irukku...
8:06 PM aneez: vayitrikkum siridhu eethuruvom
me: naan intha vayasukku thakuntha aal illa..
evlo neram aagum.. have i wait..?
aneez: deiii ellam nalla thaan erukkuuu
inga time 10.30
8:07 PM me: ok.. appo eatiituu thuungu..
naallaikku paarkkalaam.
aneez: deii whatever happening to u is good and rightt
me: s...
im also beleiving that...
romba mokkai pottutoom nu ninaikkiren..
aneez: just feel it and try to do thingss
have nice time
bye d
a
me: thanks da for a very good conversation...
8:08 PM byeda...
God bless u...
இந்த சேட் நடந்த நாள் :: பிப்ரவரி 27 நைட்.
காலையில் பார்த்தால் ஹிந்துவில் 'சுஜாதா மரணம்'.
புரியல எனக்கு!
6:51 PM aneez: enna machi wait and c
6:54 PM me: nee mattum smiles of sharksnu vechirukke
aneez: naanga suraa'daaa
me: ethu.. intha puttu seyya use pannuvaangale.. athu thaane.. (prop:ch-28)
6:55 PM aneez: deiii
sonthamaa dialogue elutungaada
me: oooooooooo
6:56 PM ivaru ellame sonthama thaan pannuvaaru...
6:57 PM aneez: aamaa machi
atleast leassuu eduthavathu pannuvom
me: correctda...
then...
tamil blog...?
6:58 PM aneez: kattyam eluthanumdaaa
but officela konjam velai kodukuraanungaa
me: aana time thaan illaa..
corect?
aneez: within march end i will have finished some of my pathivugal
me: china time?
6:59 PM aneez: 9.30
me: DEI.....
naan kaettathu march end china timelaya...?
;'_
;-)
7:00 PM aneez: deii jokeaa athuuuu
kilinjathu pooop
me: ok.. ok.. thanda thanda cool cool
appura epdi irukku chinese kulir...?
7:01 PM aneez: romba jaasthi machi
me: suudu ethikka vendiyathu thaane..
tea, coffe kudichu
7:02 PM aneez: machi ippo thaan black daniel 2 round adichu mudichen
me: GREATDA
aneez: idhukku mela tea kudichaa vaandhi vanthurunm
7:03 PM me: chinese pixes ellam update pannalaamla
chinese padikka nalla website ethavathu sollu machi...
7:04 PM aneez: website ellam illai machi
here chinese is full of confusion
me: then
aneez: each dialect is like a different language
me: nee epdi pozakkira..
7:05 PM aneez: naan enga padikuren
padikanum machi
me: dei.. nee eppadi makkalkitta pesi pizaikkiranu kaetten..
7:06 PM aneez: enga pesuren
full sign language thaan
me: appuram ellame saikai thaanaa..
bath room enganu epdi keppa...? as usual school paiyan maathiriya enna?
7:07 PM aneez: amamdaa
ithu enna americavaa
roadlaa onnukku adikka vendiyathu thaan
me: appa namma uur maathiri thaan. prechnaiye illa..
aneez: aamaa machiii
me: sappadu ellam..
7:08 PM paambuk kari. thavalai leg soup (4 kaal vera)..
aneez: we go to some english restaurantss
epadiooo polappu poguthudaa
ellam saapudaa vendiyathu thaan
me: EDS thaana
7:09 PM aana athaiyum saappidap pazaku... life means learning....
aneez: aaama machi
here i am learning lot abt life da
7:10 PM me: Great... thats the experiences shape our journey...
7:11 PM u have to update ur travels and experiences in blogs... that will be another Yuan-swang's notes for the future generations...
aneez: kattayam machi
i am not travelling
i will start that very soon
7:12 PM innum inga salary and reimbursements varalai
once i get that i will do thingss
me: here Travelling means im not telling about spatial travel.. ur travel in time domain.. from yesterday to today and towards tomorrow... Life Travel...
7:13 PM aneez: apadinguraa
potruvommm
me: in this type of travel u have lot of experiences, which i am not having...and not me, every1 has their own experiences in this travel towards god...
those must be recorded. for the future...
7:14 PM future children...
aneez: machi spirtualityaa pesuraa
7:15 PM me: konjuundu thyaanam pannip paarththeen.. theriyaatha, puriyaatha sila vishayangal konjak konjamaa theriya varuthu.. thats our country's treasure illaiya...?
not religious, not regarding gods..
aneez: not only ourss
me: its about our body...
7:16 PM aneez: in every oriental country
meditation is there
me: correct...
thirumuularnu oru sithar enna solli irukkarna, "uunudampu aalayam. puusai koLLa vaaraay paraaparamee'ngkaraar..
7:17 PM aneez: thirumoolar have told lot ofthingsss
me: that means our body is temple. god is inside... ww have to worship him..
aneez: vaasi and moochu pathi niraya pesi erukkaar
me: but antha song namakku oru memory song-aave tamil lessonla( state board) came...
nee athaiyellam paani irukkiyaa.
7:18 PM i now only joine vethathiri maharishi's yoga practices...
aneez: try panrenn
me: seriously etho irukku machi...
aneez: nalla vishayamda athu
i have respect over vethathri maharishi
me: kannai muudi yosichaa neraiya puriyuthu,..
aneez: pollachi pakathula aaliyarula erukku avaroda asiramam
hahaa
me: s...
aneez: romba thelivu venum machi vaalkailaa
7:19 PM me: what is this life, for whom i came to this world, is this someone's wish/ dream.. if once he got up, will we vanish...
questions.. questions...
aneez: hahaa
7:20 PM life is not easy'da once this questions start to comess
me: is completing this project and sucking the customer's legs and a** is the reason for my life..
aneez: but without getting confused and diverted u have to find answerss
me: sometimes i confused regarding this...
aneez: haha machi
naan thaniya inga vanthathukku idhuvum oru kaaranam
me: romba pesaren nu ninaikkiren...
aneez: want to feel me with me
7:21 PM illaidaaa
me: muthu padam paathrirukkiya...?
aneez: thoppilaey erunthaalum ovovuru maramum thani maramnu oru siththar paadal erukku
paarthen
me: correctda...
7:22 PM athula thalaivar vayasanavara jameenkku varuvaaru.. appo 'antha veettu amma enga poi irukkaanga'nu ketpaaru
vadivel koyilikkunu solluvaaru
aneez: hmm
me: ethukkunu ketpaaru
vadivel sirichukitte koiyilukku ethukku povaanga, saami kumbidanu solluvaaru
aneez: hmm
7:23 PM me: thalaivar appo, veettukkulla irukkira vinayakar silaiyaik kaatti appo ithu yaarunu keettuttu, 'SAAMIYAI ULLAYE VECHUKITTU VELIYA THEDARAANGA'nu solli vizunthu vizunthu sirippaaru..
enna oru thaththuvamm...
really god is here, inside us...
aneez: aamadaa
7:24 PM kammunatty engeyoo ullai olinju erukaarr
thedurathukkuleyae thaavu theernthurum
kidaikkum poluthu romba thevai pada maattaar
7:25 PM me: in school days after i think 8th, appo biology padichathukku appuram, nethiyaith thattip paarthu'ithellam verum proteinsum, amino acidsum thaana..'nu ninaichup paarthathu ellam ninaivukku varuthu...;-)
god thevaip padaatha stage vera irukka enna..
7:26 PM aneez: haha
kadavullum neeyum onna aanathukku aporam avar yen thevai pada poraarr
me: think panna vechitta.
7:27 PM nee intha maari think panni irukkiya
aneez: nirayaaa
7:28 PM pala neram it was like that i am inserted into a bag called body
me: Greatda..
naanum athu pola thought
aneez: great ellam illaai
7:29 PM there are millions who think like us
the matter is who gets the truth
me: ethuvum unmai illa.. ethuvum poi illa..
7:30 PM aneez: aamaa machi
apadi illai
ellam unmai
ellam poi
bharathi sonna maadhri
Maayakannan avan
7:31 PM me: once i walked under thro chennai's anal hotty sun, i was sweated...
suddenly one thought arised.
7:32 PM aneez: ennadhu
me: this hot is from sun.. when? the earth is facing the sun, so veyil.. but apart from this very very small sun, the universe id filled with darkness..
so y i have to worry abt this thakkanoondu dun
7:33 PM thuliyoondu sun..
pirapanjsaththai nirappiyulla iruL
aneez: haha...actually spirituality is not feeling greatness by insulting the nature and co-humans
it's co-existence
7:34 PM me: illa. inot insulted sun.. i feel why i worry abt this sun..
aneez: spirituality worry'um illai
me: sun does his duty, i told y we should thitting sun for the veyil..
aneez: ethuvum illaida athuu
aanaal ellam unndu
7:35 PM who said that sun's duty is to heat???
unkitta sun vandhu soluchaa?
me: illa
aneez: ennada kathai vidureengaa
if u dont understand or know a thing then how can u say about that thing and it's duties
7:36 PM me: naan solla varathu "intha suuriyan ippadi koluthuthe"nu erichal pattukittu irukkama, namma velaiyai AMAITHIyaa paakka mudinjathu athukkappuram
7:37 PM aneez: haha yethukku nee enakku ivloo kasttapattu explain panraa???
so u r having the feeelin and fear of being mis understood?
me: s
aneez: idhuvum illai spirituality
7:38 PM being none and being one
me: then whats as ur scale
aneez: i dont have any scale
me: being none and being one
aneez: does god has any scale?
me: great point
7:39 PM no
aneez: how do u know ????
may be god has a scale or maybe he doesn't
me: ninaichen ipdi keppanu
aneez: the point is to understand that there exists no need to understand
just to feel
7:40 PM no fucking explanation
me: entha feelingai appo nee godnu solluva
7:41 PM aneez: ethukku pirikuraa ellatheyum
kolanthaiyayum kadavul thaan padaikuraar
kolanthaiyaa kolra kolaikaranaeyum avar thaan padaikuraar
7:42 PM me: ithukku enna solrathunu theriyala
antha kozantha thaan kolaikaaranaa aaaguthu illaya..
7:43 PM aneez: aamaa appo yaaru kettavan yaaru nallavan
appo kadavul'nu oruthar illaiyaa?
7:44 PM me: irukkar..
aana kadavulai epdi neenga nallathu mattum mpanravarnu eduthukkireenga
7:45 PM aneez: apadiyaa..daily africa'la oru paavamum seyyadhaa 5000 children are dying
why he is playing games with them
appo kadavuley kettadhu panraaruna naangaa panna koodathaa?
7:46 PM apadi nallathu kettadhu rendumey pannina..apppo avaroda character enna manusa characteraa???
ennada kathai vudureengaa
7:47 PM me: intha discussion kadavul irukkaraa illayaanu poittu irukku...
aneez: illaiyaee
yaaru sonna it is goind towards some characters about god
existence is one of them
me: avar enga exist?
aneez: do u ever felt ur existence without any other human beings or bodies ???
7:48 PM me: angayavathu heaven-laya.. illa un manasaula...
aneez: u always need some other thing to prove your existence
7:49 PM me: sometimes i feel other persons as a sand pot which has 9 holes on it..
me too..
athanaala yaar meelayum kobam vara maattenguthu..
aneez: hahaa....
me: sari poo nu vidath thonrathu...
7:50 PM aneez: thani perungobam venumda intha vayathil
kobam illadha vaalvu veeen machi
me: enakku kobam en meela thaan...
aneez: bharathiyae Sinam palaga solli erukkaan
7:51 PM dei nalla thelivaana manadhu thevai spirituality'kku
me: theruvila pora naayai anbaa paakkath thoonuthu..
aneez: it's not a easy one
me: athuvum oru uir thananu thoonuthu
aneez: anbum + kobam + panivu + thairiyam ipadi ellam erukanummm
naaya naaya paarkanum....
manusana manusanaaa paarkanam
7:52 PM spirituality needs lot of intelligence
self indulgence
self questioning
relentless search
me: unakkum athukkum ore uyirnu therinjappuram epdi athai kal eduthu adikka thonum?
aneez: naan kal eduthu adikalai machi
inga nalla fry panni tharuvaangaa
me: ;-)
7:53 PM aneez: athai vaangi sapida thonudhu
deiii romba thannirakkam koodathu
spirituality'laa
u need a master machi
me: naanum inga chicken fish sappittukittu thaan irukken..
aneez: yogic practices,books,self questioning and search wont suffice
me: but i think im in transition stage...
aneez: guru illaaa viththaai aadathu
nalla guruva mothala thedikkkooo
7:54 PM me: yaar gurunu theriyala
aneez: first test his qualities
athu therinjaa 50% over machi
once u got a guru surrender urself to him
he will take care of u
it takes lot of years to get the guru
7:55 PM be patient and pray,meditate relentless to the GOD for a guru
me: innum 14k days thaan life.. athukkulla naan enna ellam pannanum..?
aneez: the divine path will send u the one
unakku evan sonna apadiii
7:56 PM me: unakku onnu theriyuma..?
aneez: do u think after we lose this body everything over?
yes
me: athu theriyalaye,...
theriyaama thaane ella kozappamum...
aneez: haaha aporam ennada 14k dayss
poda poii polappa paaruu
me: kanakku pottu paaru.. 60 yearskku innum evlo naalnu...
7:57 PM aneez: mothala kadamaiyaa mudingooo kannaasss
me: athai thaanda firste sonnen..
aneez: unnnai nambi erukura un kudumbathukku seyya vendiyathu ellam senjutiyaa
me: ethu en kadamai... customer satifacion..?
illa nu ninaikkiren...
aneez: athu un vayithu polappu
niraya kadamai erukkudaa
7:58 PM me: niraiya kelvikal vara vara.. athu ellam mounathila mudiyuthu..
aneez: ellatheyum thavarama senjittey thaan sidela self realisationum nadakanum
me: ethaiyum pesama mounamaa irukka thonuthu...
aneez: goodd
unnakku aairam peru aairam padhil koduthaalum
un manam kodukura mounam thaan perusu
7:59 PM me: as a black hole questions immerse into silence..coz they arose from silence illaiyaa..
aneez: deiii manam oru maayaiii
me: last year book fair chennai i bougth The Holy QuirOn also...
and tried to read..
just 4 pages i fell..
athukku mela poga mudiyala..
8:00 PM ramakrishnar, vivekanandharnu padichup paarthutten..
bivle school daysla padichu paarthen..
8:01 PM i believe u understand im not bandhafying by telling all these secrets to you...
aneez: idhu ellam secret illaida
8:02 PM who ever searches the divine all those millions are doing this same
me: llai ithu varaikkum yaarttayum sonnathilllla..
bharathiyoda ellap paattum pidikkum athai vida antha paattu..
"nirpathuve"..
8:03 PM bharathiyum oru sithar thaannu sonnap paattu illa athu..
"yaanum oru sithanaaga vantheen"nu paadinaar illaiyaa.
aneez: amanda
avar konjam over dose
dervish'nu englishlaa solluvaangaa
antha maadhri paarty adhu
me: avar vantha neeram sari illaa..
aneez: evan sonnaa?
8:04 PM me: athanaala country pathi pada vendiyathaa poyiduthu...
aneez: dei bharathi vandha velaiyaa correctaaa pannittaan
dei siththarnnaa epppovum kadaval pathi thaan paadanumaaa
me: illaatti oru yogiyaa aaga vendiyavaru...
aneez: ennangadaa idhuuu
me: kaanbathellam verum kanavaa..?
aneez: epovumey oru dappakkuliyaa adaikuringalaey
me: enga appa iranthappo veettukku ponapp en ninaivukku vantha lines ithu...
8:05 PM naanum verum kanavaa- intha njaalamum poi thaanaa..?
aneez: machi naan sooru thinna poren...
eennna thaan aanmeegam pesinalum
me: ellam poinu ponappuram appraisal illai, increment pathalainu sandai podarathula enna arththam irukku...
8:06 PM aneez: vayitrikkum siridhu eethuruvom
me: naan intha vayasukku thakuntha aal illa..
evlo neram aagum.. have i wait..?
aneez: deiii ellam nalla thaan erukkuuu
inga time 10.30
8:07 PM me: ok.. appo eatiituu thuungu..
naallaikku paarkkalaam.
aneez: deii whatever happening to u is good and rightt
me: s...
im also beleiving that...
romba mokkai pottutoom nu ninaikkiren..
aneez: just feel it and try to do thingss
have nice time
bye d
a
me: thanks da for a very good conversation...
8:08 PM byeda...
God bless u...
இந்த சேட் நடந்த நாள் :: பிப்ரவரி 27 நைட்.
காலையில் பார்த்தால் ஹிந்துவில் 'சுஜாதா மரணம்'.
புரியல எனக்கு!
திண்ணை - சில நினைவுகள்.
2002-ம் ஆண்டு.
ஒரு நாளின் மதியம். சென்னையின் சுடும் கதிர்கள் ஹாஸ்டல் ப்ளாக்குகளின் அடர் மரங்களின் இடைவெளியில் நழுவி விழுந்து கொண்டிருந்தன. ஐந்தாவது ப்ளாக்கில் இருந்து வெளி வந்த போது அரவிந்தன் எதிர்ப்பட்டான். அவன் முகம் ஒரு சங்கடத்தில் இருந்தது. 2000-ல் ஒரு ஏப்ரல் மாத திங்கட்கிழமை காலையில் பிஸிக்ஸ் க்ளாஸில் அமர்ந்திருக்கையில், சவரிராஜ் சாரின் அனுமதி கேட்டு என்னைப் பார்க்க வந்த சுரேஷின் முகத்தில் இருந்த அதே சங்கடம்.
"வசந்த்... பாட்டி இறந்துட்டாங்களாம். ஆனா உனக்கானு தெரியல. இந்த நியூஸ் அவனுக்காகவும் இருக்கலாம்..! எதுக்கும் ஃபோன் பண்ணிக் கேட்டுக்கோ..! அவனையும் பார்த்து சொல்லணும். கே.பி., குட்டி வசந்தை எங்கயாவது பார்த்தியா..?"
எனது பெயரிலேயே, எனது இனிஷியலிலேயே மற்றுமொரு ஆர். வசந்த குமார் வகுப்பில் இருந்தான். (இதே ஸ்டேட்மென்டை அவனும் சொல்ல 100% தகுதி இருக்கின்றது.) எனக்கு தோன்றி விட்டது. இது எனக்கான செய்தி தான். அவசரமாக அறைக்குத் திரும்பி கையில் கிடைத்த சில்லறைகளைப் பொறுக்கி கொண்டு பங்க் கேண்டீன் அருகில் இருந்த எஸ்.டி.டி. பூத்திற்கு சென்றேன். கார்த்தி வீட்டுக்கு போன் பண்ணி கேட்க விஷயம் உறுதிப்பட்டது.
அறைக்குத் தளர்வாய்த் திரும்பினேன். பேக் செய்ய வேண்டும். இப்போது நேரம் என்ன? மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இண்டர்சிட்டி இரண்டு முப்பதுக்கே போயிருக்கும். நான்கு மணிக்கு திருவனந்தபுரம் எக்ஸ்ப்ரஸ் இருக்கிறது. அதைப் பிடித்தாக வேண்டும்.
சென்ற முறை போல் பஸ்ஸில் சென்று தவறு செய்து விடக் கூடாது. இருந்த கொஞ்ச துணிகளை எடுத்துப் போட்டுக் கொண்டு அங்கே இங்கே கடன் வாங்கி சென்ட்ரலுக்குச் சென்று தி.எக்ஸ்பிரஸைப் பிடித்து எப்படியோ அமர்ந்து கொண்டேன்.
இரண்டு வருடங்களில் மற்றுமொரு முக்கிய மரணம்..! கல்லூரிக் காலம் எனக்கு எப்படி எல்லாம் இருக்கின்றது!!
இரவில் ஈரோடு வந்து அடர் மெளனத்தோடு ஆயா வீட்டிற்கு வந்தேன். அமைதியாக இருந்தது. ஈரமாக, மரணத்தை மட்டுமே நினைவுபடுத்தி துக்கத்தை கிளறச் செய்யும் கதம்ப பூ வாசம். எல்லார் வீடும் அடைத்து இருந்தது. 16/20 எண்ணிட்ட பச்சை நிற ஒற்றைக் கதவைத் தட்ட போன போது தான் நினைவுக்கு வந்தது.
நாதாங்கியை பிடித்து கதவில் அடிப்பேன்.
"யாரு..?" கயிற்றுக் கட்டிலில் அசைவு ஒலி கேட்கும்.
"ஆயா... நான் தான் வந்திருக்கேன்.." பேரைச் சொல்ல மாட்டேன். பேரன் குரல் தெரியாத என்ன?
"இரு... வர்றேன்..!" கதவு திறக்கப்படும்.
இன்று என்ன என்று சொல்லி அழைப்பது? யாரை சொல்லி கூப்பிடுவது? அப்படியே பேக்கை வாசலின் ஓரம் வீழ்த்தி விட்டு நானும் ஒரு புறமாய் விழுந்தேன்.
சிவப்பு நிறம். ஓரங்களில் பூ அலங்காரம். ஒரு நீள் செவ்வகமான திண்ணை. இரு திட்டுகளால் தாங்கப்பட்டு , கீழே வீட்டிலிருந்து வரும் ஜலதாரை நீர் பாயும் வழி என்று இருந்த திண்ணை இன்று வெறுமையாக இருந்தது.
பார்க்கப் பார்க்க பொங்கி வந்த நினைவுகள் கண்களில் வெடிக்க பெருங்குரலெடுத்து அழலானேன்.
பவானியில் ஒரு முக்கியமான பேருந்து நிறுத்தம் அந்தியூர் பிரிவு. ஊருக்குள் இருக்கும் மூன்று முக்கிய ஸ்டாப்புகளில் இது மட்டுமே ஸ்டாப் என்ற அந்தஸ்தைப் பெறும். மற்ற இரண்டும் பஸ் ஸ்டேண்டுகள். பழைய பஸ் ஸ்டாண்டு மற்றும் புது பஸ் ஸ்டாண்டு. இந்த இரண்டிற்கும் இடையில் இது அமைந்துள்ளது. இங்கு இறங்கி ஈரோடு செல்லும் திசையில் கோவை - பெங்களூரு நெடுஞ்சாலையில் நடந்தால் காவேரி ஆற்றுக்கு செல்லும் மூன்றாவது கட்டைத் தாண்டினால மம்மி - டாடி டி.வி.ஷோரூம் இருந்தது. அதற்கடுத்து சாமி மாவு மில் இருக்கும். அதற்கு நேர் எதிரில் மேற்குத் திசையில் பார்க்க ஒரு சந்து தெரியும். சந்தின் எண்டாக ஒரு பச்சைக் கதவு இருந்தது. நாமம் போட்டார் போல் மூன்று பிளவுகள் இருக்க, அது தான் எங்கள் வீட்டின் ஒரு வாசலாக இருந்தது. புற வாசல். புழக்கடை வாசல்.
அதனை ஒட்டியே ஒரு லைட் கம்பம் இருக்கும். அது தான் தெருவுக்கே வெளிச்சம் தரும். அதன் அருகில் தான் எங்கள் வீட்டின் திண்ணை இருக்கும்.
நான் பிறந்த பின்பும், அதற்கு நெடுங்காலம் முன்பிருந்தே எங்கள் பாட்டி அதில் தான் அமர்ந்திருப்பார். 4. இப்படி தான். திண்ணையில் அமர்ந்து இடது கையை மடக்கி வலது கையை ஊன்றி கன்னத்தை தாங்கிக் கொண்டு ஐம்பது வருடங்களாக வாழ்க்கையை ஓட்டி வந்தார்.
திண்ணை இல்லாமல் அந்தக் காலத்தில் - இருபது வருடங்களுக்கு முன்னால் - எங்கள் தெருவில் இல்லை. எங்கள் வீடு, கார்த்தி வீடு, வினோத் - ஆர்.எஸ்.பி. காம்பினேஷன் வீடு, கதிரேசன் வீடு, அமிர்தம் வீடு, அந்தப்பக்கமாய் வாத்தியார் வீடு, மணிவண்ணன் - பாபு - உமாசங்கர் வீடு, சுதா டெய்லர்ஸ் மணிகண்டன் வீடு இப்படி எல்லார் வீட்டின் முன்பும் திண்ணைகள் இருந்தன.
அந்தப்பக்கம் என்றால்... சொல்கிறேன். எங்கள் வீடு ஒரு சதுரத்தின் ஒரு பக்கம். அந்தப்பக்கம் என்றால் அது எதிர்ப்பக்கம். நடுவிலும் ஒரு வீடு இருக்கும். அதிலும் திண்ணை இருக்கும்.
இந்த திண்ணைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். எங்கள் திண்ணை கல்லால் இருந்தது. அது தெரியாமல் இருக்க அடர் சிகப்பாய் இருக்கும். அதை எங்கள் தொழிலில் கப்சாப்பு நிறம் என்பர். நடுவில் இருக்கும் வீட்டுத் திண்ணையும் அதே போல் இருக்கும். வாத்தியார் வீட்டுத் திண்ணை சுண்ணாம்பு அடித்து இருக்கும். பாபு - ம. - உ. - வீட்டுத் திண்ணையும் அதனுடன் இணைந்தே இருக்கும். சுதா டெய்லர்ஸ் வீட்டுத் திண்ணை கொஞ்சம் உயர்ந்து பக்கத்தில் படிக்கட்டுகளோடு இருக்கும். அதில் மொசைக் எல்லாம் போட்டு புள்ளிகள் வைத்திருக்கும்.
கார்த்தி வீட்டுத் திண்ணை இப்போது சுத்தமாக நினைவில்லை. வினோத் - ஆர்.எஸ்.பி கூட்டுத் திண்ணையும் மொசைக் எல்லாம் போட்டு உட்கார்ந்தாலே உச்சந்தலைக்கு ஜில்லென்று குளிர் பாஸ் ஆகும்.
அலற வைக்கும் ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் அற்ற தூர்தர்ஷன் மட்டும் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் திண்ணைகள் மாலை நேரப் பொழுது போக்கிற்குப் பெரிதும் பயன் கொடுத்தன.
ஆறு மணிக்கு மேல் கூடும் இச்சபை அங்கத்தினர்களில் பாட்டியும் ஒருவர். பலகதைகள் பேசப்படும். முன் சொன்ன போஸில் பாட்டி அமர்ந்து கொள்ள மற்றவர்கள் அவரவர் உட்காரும் வசதிக்கு தகுந்தார்ப் போல் உட்கார்ந்து கொள்ள ஊர் நியாயம் பேசப்படும். கல்யாணக் கதைகள், இழவு செய்திகள், புதுப்படக் கதைகள், படிப்புச் செய்திகள் அத்தனையும் பேசப்படும்.
பள்ளி விட்டு வந்தவுடன் ஹோம் வொர்க் எல்லாம் செய்து விட்டு, அன்று படிக்க வேண்டிய பாடங்கள் எல்லாம் படித்து விட்டு (இல்லாவிட்டால் தோசைக் கரண்டியில் முதுகு பழுக்கும்; தயிர் மத்தினால் கை முட்டிகள் பிளக்கப்படும்.) வேறு ஏதாவது (சிறுவர்மலர், காமிக்ஸ்) எழுத்துக் கூட்டி படிக்க முயல்வேன். அப்போது கரண்ட் போய் விட்டால் வருகின்ற சந்தோஷமே தனி தான். ஓடோடி வெளியே வந்து விடுவேன்.
முக்கியக் காரணம் பயம். அம்மா அப்பா வேலைக்குச் சென்று இன்னும் திரும்பாதிருக்க, பாட்டி வெளியே திண்ணையில் அமர்ந்து நியாயம் பேசிக் கொண்டிருக்க, (தம்பி என்ன செய்வான் என்று நினைவில்லை) திடீரென்று கரண்ட் போனால், பயம் வராமல் என்ன செய்யும்?
வெளியே ஓடோடி வந்து விடுவேன். தெருப் பசங்கள் எல்லோரும் வந்து விடுவார்கள். சில சமயம் திண்ணையில் அமர்ந்து கண்ணாமூச்சு விளையாடுவோம். இல்லாவிட்டால் ஐஸ் பாய், போலிஸ் - திருடன்...!
குண்டன் - குண்டி, குள்ளன் - குள்ளி, ராஜா - ராணி, இளவரசன் - இளவரசி, சுண்டைக்காய் - கொய்யாக்காய் என்று அப்போதே கலந்து கட்டி கதை சொல்லுவேன். கதை நிற்காமல் போய்க் கொண்டே இருக்கும். கரண்ட் வரும் வரை கதை போகின்ற போக்கில் போய்க் கொண்டே இருக்கும். இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கின்றது. எப்படி அந்தக் கதைகள் எல்லாம் சொன்னேன் என்று? காரணங்கள் : சிறுவர்மலர், காமிக்ஸ் புத்தகங்கள், அச்சாபீஸ் தாத்தாவுக்கு பாக்கு வாங்கி கொடுத்து படித்த நூற்றுக்கு மேற்பட்ட ராஜா கதைகள்..!
கொப்பி என்றொரு பண்டிகை நடத்தப்படுவது உண்டு.
சித்ரா பெளர்ணமி என்று நினைக்கிறேன். அதற்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பிருந்தே இதற்கான வசூல் துவங்கி விடும். 10 ரூ. முதல் 50 ரூ. வரை வீட்டிற்குத் தருவோம்.
எங்கள் தெருவிற்குத் தள்ளி கொஞ்சம் அகண்ட பகுதி இருக்கும். அங்கு தான் கொப்பி அடிப்போம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அவரை நடுவில் வைத்து சின்னப் பெண்கள், சிறுவர்கள் நாங்கள், மங்கைகள் எல்லோரும் சுற்றிச் சுற்றி வந்து கொப்பி அடிப்போம். எல்லோர் வீட்டில் இருந்து டிஃபன் பாக்ஸில் - பெரும்பாலும் பள்ளிக்கு கொண்டு செல்லும் பாக்ஸ் - ரெண்டு இட்லி, சாம்பார் அல்லது சாப்பாடு என்று வைத்து பிள்ளையாரைச் சுற்றி வைத்து விடுவோம். இரவு வந்து ஓர் ஏழு மணிக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்க் கூட்டம் களை கட்டும். அதுவரை நாங்கள் கதிரேசன் வீட்டுத் திண்ணையில் தான் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருப்போம். ( தளபதி எப்படி, தர்மதுரை கெளரி தியேட்டர்ல நூறு நாளாமே?)
சுற்றி வந்து பாட்டு எல்லாம் பாடுவோம். டயர்டாகி விட்டு சின்னதாய் பூஜை செய்து அவரவர் டிஃபன் பாக்ஸை எடுத்து அங்கேயே சாப்பிடுவோம். கொஞ்சம் பேர் திண்ணைகளில் அமர்ந்து; கொஞ்சம் தரையிலேயே.
பெளர்ணமி நாள் அன்று ஆடியோ ஆம்ப்ளிஃபயர்கள் திண்ணையில் கலர் கலர் எல்.ஈ.டி.க்களில் மின்னிக் கொண்டிருக்க, லைட் கம்பத்தில் கோன் ஸ்பீக்கர் காடி திருவிளையாடலோ, சரஸ்வதி சபதமோ வருடம் தவறாமல் ஒலிபரப்பாகும்.
"அண்ணா.. அண்ணாமலை போடுங்கண்ணா..! குணா எல்லாம் வேண்டாம்ணா..!"
"போடறேன்..! நீங்க டேன்ஸ் ஆடணும் என்ன?"
"சரிங்ணா..!"
டட்டர...டட்டர...டட்டர...டட்டர..... ஜிங்குச்சா..டடடடட...டேன்..ஹேய் வந்தேண்டா பால்காரன்...
தெருவே திருவிழாக் கோலத்தில் இருக்கும். எல்லோர் வீட்டின் முன்பும் கோலங்கள் போட்டு, வீட்டைச் சுத்தம் செய்து, பெருக்கி, வழித்து, சுண்ணாம்பு அடித்து, திண்ணைகளுக்கு காரை கட்டி..!
அன்றைய உணவு மட்டும் ஸ்பெஷலாக செய்யப்ப்டும். டிஃபன் பாக்ஸில் இல்லாமல் கொஞ்சம் பெரிய தட்டில் வாழை இலை வைத்து சூடான சாப்பாடு வைத்து விழா தொடங்கும். அன்று இரவு கொப்பி தொடங்கி விடிய விடிய பாட்டு பாடுவார்கள். முழு நிலவு அப்படியே ஜொலிக்கையில், கரண்டு போனால், வெண் பால் ஒளி பாயும். நாங்கள் திண்ணையிலேயே தூங்குவோம்.
விடிந்ததும் பிள்ளையாரை வழித்து காவிரியில் கரைத்து விட்டு வருவார்கள். நான் போனதில்லை. பெரியவர்களே செய்து விடுவார்கள். அவர்கள் வரும் வரை திண்ணைகளில் காத்திருப்போம். வந்த பின் தான் எல்லோர் வீட்டிலும் சாப்பாடு , டிபன் எல்லாம்!
தீபாவளி அன்று இந்த திண்ணைகள் படும் பாடு சொல்ல முடியாது, அவற்றால் பாவம்..!
எங்கள் திண்ணைகள் எல்லாம் வழுவழுவென பளபளவென பர்மா தேக்காலோ மார்பிள் பளிங்குகளினலோ செய்யப்பட்டிராததால், அவற்றுக்கும் வயதாகிக் கொண்டே வரும். ஓட்டை விழுந்து, பல்லிளித்து சந்துகளில் பூரான் வரும். எலிக்குஞ்சுகள் இரவெல்லாம் க்றீச்சிட்டுக் கொண்டே இருக்கும்; திண்ணைகளுக்கு அடியில் இருக்கும் சாக்கடைகளில் பெருக்கான்கள் திடீரென வங்குகளில் காணாமல் போகும். அப்படி பல ஜீவாத்மாக்களுக்கு வாழ்விடப் பாதை கொடுத்திருக்கின்றன.
ஊசிப் பட்டாசு என்று நினைவிருக்கின்றதா? ஆபத்தில்லாத வெடி. பெரிய வெடிகள் போல் காது காலியாகும் அளவிற்கு ப்ரச்னை ஏற்படுத்தாது. ரோல் கேப் போல் குழந்தைகள் விளையாடும் ரேஞ்சிலும் இருக்காது. சிறுவர்களுக்கு சிறந்த வெடி என்று காம்ப்ளான் போல் சிபாரிசில் பட்டாசுக் கடைகளில் விற்கப்படும். பற்ற வைத்தால் 27% வெடிக்காது. புஸ்வாணம் ஆகி விடும். மீதி வெடிக்கும். அதுவும் எப்படி?
'நானே செவனேனு படுத்திருக்கேன். என்னை ஏண்டா தொல்லை பண்றீங்க?' என்று கேட்டு மீண்டும் கண்களை மூடிக் கொள்ளும் தாத்தாக்கள் போல! 'பட்' என்று அல்லது 'படார்' என்று ஒரு சத்தம் வரும். அத்தோடு காலி யாகி சோலி முடிந்து போய் விடும்.
அதை வேறு எங்கும் வைக்க முடியாது. இராக்கெட் போல் பாட்டிலில் செருக முடியாது.லட்சுமி வெடி போல் தரையில் நிற்க வைக்க முடியாது. பச்சை நூலால் கட்டிய அணு குண்டுகளைப் போல் சுவற்றில் சாய்த்தும் வைக்க முடியாது. அவற்றை வைக்க ஒரே வாகான வழி திண்ணை ஓட்டைகள் தான். ரொம்ப பெரியதாகவும் இருக்காது. ஊசி நுழையக் கூட இல்லாத அளவுக்கும் இருக்காது. சரியாக ஊசிப் பட்டாசு வைத்தால் நிற்கும் அளவில் தான் இருக்கும்.
வைப்போம். எல்லார் வீட்டுத் திண்ணைகளிலும் ஊசிப் பட்டாசுகள் வைத்தே திண்ணைகள் பைத்தியங்கள்(Crack) ஆயின.
இதை விடவும் திண்ணைகளுக்கு மற்றுமொரு ஆபத்தான வில்லன் ஒருவர் உண்டு. அவர் தான் பாம்பு மாத்திரை. சும்மா அடிப்பாகம் செக்கச் செவேல் என்று நெருப்பில் ஜொலிக்க புசுபுசுவென்று சீறி வருவார் ஷாம்லி ஃப்ரெண்டார். அவரை வைக்கவும் தோதான இடம் திண்ணைகள் தாம். 'பொட்டிட்டு மையிட்டெழுதி' என்று பெரியாழ்வார் சொன்னது போல் கரும் பொட்டுகளால் திண்ணைகள் திருஷ்டிப் பொட்டிட்டு இருக்கும்.
இந்தக் கொண்டாட்டம் எல்லாம் தீபாவளி அன்று மட்டும் தான். அடுத்த நாள் பார்க்க வேண்டுமே! எங்களைத் திட்டிக் கொண்டே பாட்டி எல்லா பட்டாசுக் குப்பைகளையும் குட்டிவார். இது வருடா வருடம் நடக்கும் திருவைபவம்.
இவற்றைத் தவிர தாயக் கட்டை ஆட பயன்படும் திண்ணைகள், பேன் பார்க்க உதவும் திண்ணைகள் ( இதற்கு படிக்கட்டுகள் அருகில் அமர்ந்தவை தான் வசதிப்படும்.), கட்டிலைத் திருப்பிப் போட்டு நீளக் கால்களில் ஜமுக்காளம் கட்டி பெயர் தைக்க உதவும் திண்ணைகள், அமர்ந்து கால்களில் சின்னக் குழந்தைகளை நிற்க வைத்து ஊஞ்சல் ஆட்ட உதவும் திண்ணைகள், அம்மா வர லேட்டானால் படுத்து ஏதேதோ பயக் கற்பனைகளில் ஆழ உதவும் திண்ணைகள், ஜன்னலில் எட்டிப் பார்த்து பக்கத்து வீட்டில் டி.வி. பார்க்க உதவும் திண்ணைகள், அப்பா 'நாளைய மனிதன்' கதை சொல்ல பயந்து கொண்டே முகத்தை மூடிக் கவிழ்ந்து படுத்துக் கொண்ட திண்ணைகள்.....
ஆயிரம் கதைகள் உண்டு எனக்கு சொல்ல திண்ணைகள் பற்றி!
மறு நாள் காலை மயானத்திற்கு கூட்டிப் போனார்கள். தேவராஜன் பிள்ளை சந்தில் இருந்து வெளியே வந்து, நெடுஞ்சாலையைக் க்ராஸ் செய்து, பள்ளமாக இறங்கும் தெருவில் நடந்து மார்க்கெட்டைத் தாண்டி, இடது புறம் கட் செய்து நடந்தால் மயானம்.
வழியெங்கும் அவசர நாற்றங்கள். காவிரியில் பாறைகளோடு மோதி நதிநீர் ஓடிக் கொண்டிருந்தது. வான நீல கேட் திறந்து எரியூட்டும் இடத்திற்குச் சென்றோம். இன்னும் கொஞ்சம் புகை வந்து கொண்டிருந்தது. வெட்டியான் ஒரு தீய்ந்த கட்டையால் அதனைக் கிளறிக் கொண்டிருந்தார். கொண்டு போயிருந்த செம்பில் பால். அதனை ஊற்றினோம். சாம்பலில் இருந்து சில வெள்ளை எலும்புகளை எடுத்து "இது தான் உன் பாட்டி, பார்த்துக்கோ" என்றார்கள்.
வாழ்வின் அநித்தியம் புரிந்தது என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். அது தான் உண்மை.
***
பாலபாரதியின் திண்ணை தொகுப்புக்காக.
ப்ளாக்கர் கணக்குப்படி இது 400-வது பதிவாம்.
ஒரு நாளின் மதியம். சென்னையின் சுடும் கதிர்கள் ஹாஸ்டல் ப்ளாக்குகளின் அடர் மரங்களின் இடைவெளியில் நழுவி விழுந்து கொண்டிருந்தன. ஐந்தாவது ப்ளாக்கில் இருந்து வெளி வந்த போது அரவிந்தன் எதிர்ப்பட்டான். அவன் முகம் ஒரு சங்கடத்தில் இருந்தது. 2000-ல் ஒரு ஏப்ரல் மாத திங்கட்கிழமை காலையில் பிஸிக்ஸ் க்ளாஸில் அமர்ந்திருக்கையில், சவரிராஜ் சாரின் அனுமதி கேட்டு என்னைப் பார்க்க வந்த சுரேஷின் முகத்தில் இருந்த அதே சங்கடம்.
"வசந்த்... பாட்டி இறந்துட்டாங்களாம். ஆனா உனக்கானு தெரியல. இந்த நியூஸ் அவனுக்காகவும் இருக்கலாம்..! எதுக்கும் ஃபோன் பண்ணிக் கேட்டுக்கோ..! அவனையும் பார்த்து சொல்லணும். கே.பி., குட்டி வசந்தை எங்கயாவது பார்த்தியா..?"
எனது பெயரிலேயே, எனது இனிஷியலிலேயே மற்றுமொரு ஆர். வசந்த குமார் வகுப்பில் இருந்தான். (இதே ஸ்டேட்மென்டை அவனும் சொல்ல 100% தகுதி இருக்கின்றது.) எனக்கு தோன்றி விட்டது. இது எனக்கான செய்தி தான். அவசரமாக அறைக்குத் திரும்பி கையில் கிடைத்த சில்லறைகளைப் பொறுக்கி கொண்டு பங்க் கேண்டீன் அருகில் இருந்த எஸ்.டி.டி. பூத்திற்கு சென்றேன். கார்த்தி வீட்டுக்கு போன் பண்ணி கேட்க விஷயம் உறுதிப்பட்டது.
அறைக்குத் தளர்வாய்த் திரும்பினேன். பேக் செய்ய வேண்டும். இப்போது நேரம் என்ன? மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இண்டர்சிட்டி இரண்டு முப்பதுக்கே போயிருக்கும். நான்கு மணிக்கு திருவனந்தபுரம் எக்ஸ்ப்ரஸ் இருக்கிறது. அதைப் பிடித்தாக வேண்டும்.
சென்ற முறை போல் பஸ்ஸில் சென்று தவறு செய்து விடக் கூடாது. இருந்த கொஞ்ச துணிகளை எடுத்துப் போட்டுக் கொண்டு அங்கே இங்கே கடன் வாங்கி சென்ட்ரலுக்குச் சென்று தி.எக்ஸ்பிரஸைப் பிடித்து எப்படியோ அமர்ந்து கொண்டேன்.
இரண்டு வருடங்களில் மற்றுமொரு முக்கிய மரணம்..! கல்லூரிக் காலம் எனக்கு எப்படி எல்லாம் இருக்கின்றது!!
இரவில் ஈரோடு வந்து அடர் மெளனத்தோடு ஆயா வீட்டிற்கு வந்தேன். அமைதியாக இருந்தது. ஈரமாக, மரணத்தை மட்டுமே நினைவுபடுத்தி துக்கத்தை கிளறச் செய்யும் கதம்ப பூ வாசம். எல்லார் வீடும் அடைத்து இருந்தது. 16/20 எண்ணிட்ட பச்சை நிற ஒற்றைக் கதவைத் தட்ட போன போது தான் நினைவுக்கு வந்தது.
நாதாங்கியை பிடித்து கதவில் அடிப்பேன்.
"யாரு..?" கயிற்றுக் கட்டிலில் அசைவு ஒலி கேட்கும்.
"ஆயா... நான் தான் வந்திருக்கேன்.." பேரைச் சொல்ல மாட்டேன். பேரன் குரல் தெரியாத என்ன?
"இரு... வர்றேன்..!" கதவு திறக்கப்படும்.
இன்று என்ன என்று சொல்லி அழைப்பது? யாரை சொல்லி கூப்பிடுவது? அப்படியே பேக்கை வாசலின் ஓரம் வீழ்த்தி விட்டு நானும் ஒரு புறமாய் விழுந்தேன்.
சிவப்பு நிறம். ஓரங்களில் பூ அலங்காரம். ஒரு நீள் செவ்வகமான திண்ணை. இரு திட்டுகளால் தாங்கப்பட்டு , கீழே வீட்டிலிருந்து வரும் ஜலதாரை நீர் பாயும் வழி என்று இருந்த திண்ணை இன்று வெறுமையாக இருந்தது.
பார்க்கப் பார்க்க பொங்கி வந்த நினைவுகள் கண்களில் வெடிக்க பெருங்குரலெடுத்து அழலானேன்.
பவானியில் ஒரு முக்கியமான பேருந்து நிறுத்தம் அந்தியூர் பிரிவு. ஊருக்குள் இருக்கும் மூன்று முக்கிய ஸ்டாப்புகளில் இது மட்டுமே ஸ்டாப் என்ற அந்தஸ்தைப் பெறும். மற்ற இரண்டும் பஸ் ஸ்டேண்டுகள். பழைய பஸ் ஸ்டாண்டு மற்றும் புது பஸ் ஸ்டாண்டு. இந்த இரண்டிற்கும் இடையில் இது அமைந்துள்ளது. இங்கு இறங்கி ஈரோடு செல்லும் திசையில் கோவை - பெங்களூரு நெடுஞ்சாலையில் நடந்தால் காவேரி ஆற்றுக்கு செல்லும் மூன்றாவது கட்டைத் தாண்டினால மம்மி - டாடி டி.வி.ஷோரூம் இருந்தது. அதற்கடுத்து சாமி மாவு மில் இருக்கும். அதற்கு நேர் எதிரில் மேற்குத் திசையில் பார்க்க ஒரு சந்து தெரியும். சந்தின் எண்டாக ஒரு பச்சைக் கதவு இருந்தது. நாமம் போட்டார் போல் மூன்று பிளவுகள் இருக்க, அது தான் எங்கள் வீட்டின் ஒரு வாசலாக இருந்தது. புற வாசல். புழக்கடை வாசல்.
அதனை ஒட்டியே ஒரு லைட் கம்பம் இருக்கும். அது தான் தெருவுக்கே வெளிச்சம் தரும். அதன் அருகில் தான் எங்கள் வீட்டின் திண்ணை இருக்கும்.
நான் பிறந்த பின்பும், அதற்கு நெடுங்காலம் முன்பிருந்தே எங்கள் பாட்டி அதில் தான் அமர்ந்திருப்பார். 4. இப்படி தான். திண்ணையில் அமர்ந்து இடது கையை மடக்கி வலது கையை ஊன்றி கன்னத்தை தாங்கிக் கொண்டு ஐம்பது வருடங்களாக வாழ்க்கையை ஓட்டி வந்தார்.
திண்ணை இல்லாமல் அந்தக் காலத்தில் - இருபது வருடங்களுக்கு முன்னால் - எங்கள் தெருவில் இல்லை. எங்கள் வீடு, கார்த்தி வீடு, வினோத் - ஆர்.எஸ்.பி. காம்பினேஷன் வீடு, கதிரேசன் வீடு, அமிர்தம் வீடு, அந்தப்பக்கமாய் வாத்தியார் வீடு, மணிவண்ணன் - பாபு - உமாசங்கர் வீடு, சுதா டெய்லர்ஸ் மணிகண்டன் வீடு இப்படி எல்லார் வீட்டின் முன்பும் திண்ணைகள் இருந்தன.
அந்தப்பக்கம் என்றால்... சொல்கிறேன். எங்கள் வீடு ஒரு சதுரத்தின் ஒரு பக்கம். அந்தப்பக்கம் என்றால் அது எதிர்ப்பக்கம். நடுவிலும் ஒரு வீடு இருக்கும். அதிலும் திண்ணை இருக்கும்.
இந்த திண்ணைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். எங்கள் திண்ணை கல்லால் இருந்தது. அது தெரியாமல் இருக்க அடர் சிகப்பாய் இருக்கும். அதை எங்கள் தொழிலில் கப்சாப்பு நிறம் என்பர். நடுவில் இருக்கும் வீட்டுத் திண்ணையும் அதே போல் இருக்கும். வாத்தியார் வீட்டுத் திண்ணை சுண்ணாம்பு அடித்து இருக்கும். பாபு - ம. - உ. - வீட்டுத் திண்ணையும் அதனுடன் இணைந்தே இருக்கும். சுதா டெய்லர்ஸ் வீட்டுத் திண்ணை கொஞ்சம் உயர்ந்து பக்கத்தில் படிக்கட்டுகளோடு இருக்கும். அதில் மொசைக் எல்லாம் போட்டு புள்ளிகள் வைத்திருக்கும்.
கார்த்தி வீட்டுத் திண்ணை இப்போது சுத்தமாக நினைவில்லை. வினோத் - ஆர்.எஸ்.பி கூட்டுத் திண்ணையும் மொசைக் எல்லாம் போட்டு உட்கார்ந்தாலே உச்சந்தலைக்கு ஜில்லென்று குளிர் பாஸ் ஆகும்.
அலற வைக்கும் ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் அற்ற தூர்தர்ஷன் மட்டும் கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் திண்ணைகள் மாலை நேரப் பொழுது போக்கிற்குப் பெரிதும் பயன் கொடுத்தன.
ஆறு மணிக்கு மேல் கூடும் இச்சபை அங்கத்தினர்களில் பாட்டியும் ஒருவர். பலகதைகள் பேசப்படும். முன் சொன்ன போஸில் பாட்டி அமர்ந்து கொள்ள மற்றவர்கள் அவரவர் உட்காரும் வசதிக்கு தகுந்தார்ப் போல் உட்கார்ந்து கொள்ள ஊர் நியாயம் பேசப்படும். கல்யாணக் கதைகள், இழவு செய்திகள், புதுப்படக் கதைகள், படிப்புச் செய்திகள் அத்தனையும் பேசப்படும்.
பள்ளி விட்டு வந்தவுடன் ஹோம் வொர்க் எல்லாம் செய்து விட்டு, அன்று படிக்க வேண்டிய பாடங்கள் எல்லாம் படித்து விட்டு (இல்லாவிட்டால் தோசைக் கரண்டியில் முதுகு பழுக்கும்; தயிர் மத்தினால் கை முட்டிகள் பிளக்கப்படும்.) வேறு ஏதாவது (சிறுவர்மலர், காமிக்ஸ்) எழுத்துக் கூட்டி படிக்க முயல்வேன். அப்போது கரண்ட் போய் விட்டால் வருகின்ற சந்தோஷமே தனி தான். ஓடோடி வெளியே வந்து விடுவேன்.
முக்கியக் காரணம் பயம். அம்மா அப்பா வேலைக்குச் சென்று இன்னும் திரும்பாதிருக்க, பாட்டி வெளியே திண்ணையில் அமர்ந்து நியாயம் பேசிக் கொண்டிருக்க, (தம்பி என்ன செய்வான் என்று நினைவில்லை) திடீரென்று கரண்ட் போனால், பயம் வராமல் என்ன செய்யும்?
வெளியே ஓடோடி வந்து விடுவேன். தெருப் பசங்கள் எல்லோரும் வந்து விடுவார்கள். சில சமயம் திண்ணையில் அமர்ந்து கண்ணாமூச்சு விளையாடுவோம். இல்லாவிட்டால் ஐஸ் பாய், போலிஸ் - திருடன்...!
குண்டன் - குண்டி, குள்ளன் - குள்ளி, ராஜா - ராணி, இளவரசன் - இளவரசி, சுண்டைக்காய் - கொய்யாக்காய் என்று அப்போதே கலந்து கட்டி கதை சொல்லுவேன். கதை நிற்காமல் போய்க் கொண்டே இருக்கும். கரண்ட் வரும் வரை கதை போகின்ற போக்கில் போய்க் கொண்டே இருக்கும். இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கின்றது. எப்படி அந்தக் கதைகள் எல்லாம் சொன்னேன் என்று? காரணங்கள் : சிறுவர்மலர், காமிக்ஸ் புத்தகங்கள், அச்சாபீஸ் தாத்தாவுக்கு பாக்கு வாங்கி கொடுத்து படித்த நூற்றுக்கு மேற்பட்ட ராஜா கதைகள்..!
கொப்பி என்றொரு பண்டிகை நடத்தப்படுவது உண்டு.
சித்ரா பெளர்ணமி என்று நினைக்கிறேன். அதற்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பிருந்தே இதற்கான வசூல் துவங்கி விடும். 10 ரூ. முதல் 50 ரூ. வரை வீட்டிற்குத் தருவோம்.
எங்கள் தெருவிற்குத் தள்ளி கொஞ்சம் அகண்ட பகுதி இருக்கும். அங்கு தான் கொப்பி அடிப்போம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அவரை நடுவில் வைத்து சின்னப் பெண்கள், சிறுவர்கள் நாங்கள், மங்கைகள் எல்லோரும் சுற்றிச் சுற்றி வந்து கொப்பி அடிப்போம். எல்லோர் வீட்டில் இருந்து டிஃபன் பாக்ஸில் - பெரும்பாலும் பள்ளிக்கு கொண்டு செல்லும் பாக்ஸ் - ரெண்டு இட்லி, சாம்பார் அல்லது சாப்பாடு என்று வைத்து பிள்ளையாரைச் சுற்றி வைத்து விடுவோம். இரவு வந்து ஓர் ஏழு மணிக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்க் கூட்டம் களை கட்டும். அதுவரை நாங்கள் கதிரேசன் வீட்டுத் திண்ணையில் தான் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருப்போம். ( தளபதி எப்படி, தர்மதுரை கெளரி தியேட்டர்ல நூறு நாளாமே?)
சுற்றி வந்து பாட்டு எல்லாம் பாடுவோம். டயர்டாகி விட்டு சின்னதாய் பூஜை செய்து அவரவர் டிஃபன் பாக்ஸை எடுத்து அங்கேயே சாப்பிடுவோம். கொஞ்சம் பேர் திண்ணைகளில் அமர்ந்து; கொஞ்சம் தரையிலேயே.
பெளர்ணமி நாள் அன்று ஆடியோ ஆம்ப்ளிஃபயர்கள் திண்ணையில் கலர் கலர் எல்.ஈ.டி.க்களில் மின்னிக் கொண்டிருக்க, லைட் கம்பத்தில் கோன் ஸ்பீக்கர் காடி திருவிளையாடலோ, சரஸ்வதி சபதமோ வருடம் தவறாமல் ஒலிபரப்பாகும்.
"அண்ணா.. அண்ணாமலை போடுங்கண்ணா..! குணா எல்லாம் வேண்டாம்ணா..!"
"போடறேன்..! நீங்க டேன்ஸ் ஆடணும் என்ன?"
"சரிங்ணா..!"
டட்டர...டட்டர...டட்டர...டட்டர..... ஜிங்குச்சா..டடடடட...டேன்..ஹேய் வந்தேண்டா பால்காரன்...
தெருவே திருவிழாக் கோலத்தில் இருக்கும். எல்லோர் வீட்டின் முன்பும் கோலங்கள் போட்டு, வீட்டைச் சுத்தம் செய்து, பெருக்கி, வழித்து, சுண்ணாம்பு அடித்து, திண்ணைகளுக்கு காரை கட்டி..!
அன்றைய உணவு மட்டும் ஸ்பெஷலாக செய்யப்ப்டும். டிஃபன் பாக்ஸில் இல்லாமல் கொஞ்சம் பெரிய தட்டில் வாழை இலை வைத்து சூடான சாப்பாடு வைத்து விழா தொடங்கும். அன்று இரவு கொப்பி தொடங்கி விடிய விடிய பாட்டு பாடுவார்கள். முழு நிலவு அப்படியே ஜொலிக்கையில், கரண்டு போனால், வெண் பால் ஒளி பாயும். நாங்கள் திண்ணையிலேயே தூங்குவோம்.
விடிந்ததும் பிள்ளையாரை வழித்து காவிரியில் கரைத்து விட்டு வருவார்கள். நான் போனதில்லை. பெரியவர்களே செய்து விடுவார்கள். அவர்கள் வரும் வரை திண்ணைகளில் காத்திருப்போம். வந்த பின் தான் எல்லோர் வீட்டிலும் சாப்பாடு , டிபன் எல்லாம்!
தீபாவளி அன்று இந்த திண்ணைகள் படும் பாடு சொல்ல முடியாது, அவற்றால் பாவம்..!
எங்கள் திண்ணைகள் எல்லாம் வழுவழுவென பளபளவென பர்மா தேக்காலோ மார்பிள் பளிங்குகளினலோ செய்யப்பட்டிராததால், அவற்றுக்கும் வயதாகிக் கொண்டே வரும். ஓட்டை விழுந்து, பல்லிளித்து சந்துகளில் பூரான் வரும். எலிக்குஞ்சுகள் இரவெல்லாம் க்றீச்சிட்டுக் கொண்டே இருக்கும்; திண்ணைகளுக்கு அடியில் இருக்கும் சாக்கடைகளில் பெருக்கான்கள் திடீரென வங்குகளில் காணாமல் போகும். அப்படி பல ஜீவாத்மாக்களுக்கு வாழ்விடப் பாதை கொடுத்திருக்கின்றன.
ஊசிப் பட்டாசு என்று நினைவிருக்கின்றதா? ஆபத்தில்லாத வெடி. பெரிய வெடிகள் போல் காது காலியாகும் அளவிற்கு ப்ரச்னை ஏற்படுத்தாது. ரோல் கேப் போல் குழந்தைகள் விளையாடும் ரேஞ்சிலும் இருக்காது. சிறுவர்களுக்கு சிறந்த வெடி என்று காம்ப்ளான் போல் சிபாரிசில் பட்டாசுக் கடைகளில் விற்கப்படும். பற்ற வைத்தால் 27% வெடிக்காது. புஸ்வாணம் ஆகி விடும். மீதி வெடிக்கும். அதுவும் எப்படி?
'நானே செவனேனு படுத்திருக்கேன். என்னை ஏண்டா தொல்லை பண்றீங்க?' என்று கேட்டு மீண்டும் கண்களை மூடிக் கொள்ளும் தாத்தாக்கள் போல! 'பட்' என்று அல்லது 'படார்' என்று ஒரு சத்தம் வரும். அத்தோடு காலி யாகி சோலி முடிந்து போய் விடும்.
அதை வேறு எங்கும் வைக்க முடியாது. இராக்கெட் போல் பாட்டிலில் செருக முடியாது.லட்சுமி வெடி போல் தரையில் நிற்க வைக்க முடியாது. பச்சை நூலால் கட்டிய அணு குண்டுகளைப் போல் சுவற்றில் சாய்த்தும் வைக்க முடியாது. அவற்றை வைக்க ஒரே வாகான வழி திண்ணை ஓட்டைகள் தான். ரொம்ப பெரியதாகவும் இருக்காது. ஊசி நுழையக் கூட இல்லாத அளவுக்கும் இருக்காது. சரியாக ஊசிப் பட்டாசு வைத்தால் நிற்கும் அளவில் தான் இருக்கும்.
வைப்போம். எல்லார் வீட்டுத் திண்ணைகளிலும் ஊசிப் பட்டாசுகள் வைத்தே திண்ணைகள் பைத்தியங்கள்(Crack) ஆயின.
இதை விடவும் திண்ணைகளுக்கு மற்றுமொரு ஆபத்தான வில்லன் ஒருவர் உண்டு. அவர் தான் பாம்பு மாத்திரை. சும்மா அடிப்பாகம் செக்கச் செவேல் என்று நெருப்பில் ஜொலிக்க புசுபுசுவென்று சீறி வருவார் ஷாம்லி ஃப்ரெண்டார். அவரை வைக்கவும் தோதான இடம் திண்ணைகள் தாம். 'பொட்டிட்டு மையிட்டெழுதி' என்று பெரியாழ்வார் சொன்னது போல் கரும் பொட்டுகளால் திண்ணைகள் திருஷ்டிப் பொட்டிட்டு இருக்கும்.
இந்தக் கொண்டாட்டம் எல்லாம் தீபாவளி அன்று மட்டும் தான். அடுத்த நாள் பார்க்க வேண்டுமே! எங்களைத் திட்டிக் கொண்டே பாட்டி எல்லா பட்டாசுக் குப்பைகளையும் குட்டிவார். இது வருடா வருடம் நடக்கும் திருவைபவம்.
இவற்றைத் தவிர தாயக் கட்டை ஆட பயன்படும் திண்ணைகள், பேன் பார்க்க உதவும் திண்ணைகள் ( இதற்கு படிக்கட்டுகள் அருகில் அமர்ந்தவை தான் வசதிப்படும்.), கட்டிலைத் திருப்பிப் போட்டு நீளக் கால்களில் ஜமுக்காளம் கட்டி பெயர் தைக்க உதவும் திண்ணைகள், அமர்ந்து கால்களில் சின்னக் குழந்தைகளை நிற்க வைத்து ஊஞ்சல் ஆட்ட உதவும் திண்ணைகள், அம்மா வர லேட்டானால் படுத்து ஏதேதோ பயக் கற்பனைகளில் ஆழ உதவும் திண்ணைகள், ஜன்னலில் எட்டிப் பார்த்து பக்கத்து வீட்டில் டி.வி. பார்க்க உதவும் திண்ணைகள், அப்பா 'நாளைய மனிதன்' கதை சொல்ல பயந்து கொண்டே முகத்தை மூடிக் கவிழ்ந்து படுத்துக் கொண்ட திண்ணைகள்.....
ஆயிரம் கதைகள் உண்டு எனக்கு சொல்ல திண்ணைகள் பற்றி!
மறு நாள் காலை மயானத்திற்கு கூட்டிப் போனார்கள். தேவராஜன் பிள்ளை சந்தில் இருந்து வெளியே வந்து, நெடுஞ்சாலையைக் க்ராஸ் செய்து, பள்ளமாக இறங்கும் தெருவில் நடந்து மார்க்கெட்டைத் தாண்டி, இடது புறம் கட் செய்து நடந்தால் மயானம்.
வழியெங்கும் அவசர நாற்றங்கள். காவிரியில் பாறைகளோடு மோதி நதிநீர் ஓடிக் கொண்டிருந்தது. வான நீல கேட் திறந்து எரியூட்டும் இடத்திற்குச் சென்றோம். இன்னும் கொஞ்சம் புகை வந்து கொண்டிருந்தது. வெட்டியான் ஒரு தீய்ந்த கட்டையால் அதனைக் கிளறிக் கொண்டிருந்தார். கொண்டு போயிருந்த செம்பில் பால். அதனை ஊற்றினோம். சாம்பலில் இருந்து சில வெள்ளை எலும்புகளை எடுத்து "இது தான் உன் பாட்டி, பார்த்துக்கோ" என்றார்கள்.
வாழ்வின் அநித்தியம் புரிந்தது என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். அது தான் உண்மை.
***
பாலபாரதியின் திண்ணை தொகுப்புக்காக.
ப்ளாக்கர் கணக்குப்படி இது 400-வது பதிவாம்.
Friday, February 29, 2008
சுஜாதா - அஞ்சலி 2.
சுஜாதாவின் குரல் கேட்க.
ஓர் எழுத்தாளரின் மறைவுக்கு இவ்வளவு வருத்தம் ஏற்படுமா என்பது எனக்கே வியப்பாக இருக்கின்றது. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். சக பதிவர்களின் பதிவுகளைப் படிக்கையில் கண்களில் நீர் துளிர்க்கின்றது. அனைவரும் எந்தளவிற்கு துக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது விளங்குகின்றது.
ஒரு படைப்பை அனுபவிக்கும் போது நமது உணர்வுகள் அந்த படைப்பின் வழி பயணம் செய்கின்றன. ஆனால் எந்த அளவிற்கு அவ்வுணர்வுகளோடு அப்படைப்பு பின்னிப் பிணைகின்றது என்பதைப் பொறுத்து தான், அதன் விளைவுகளோ/ பாதிப்புகளோ நம்மில் விளைகின்றது.
ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போது, அதன் வழி நாமும் பயணிக்கிறோம். ஆனால் அதன் பாதிப்பு அவ்வளவு அற்புதமாக வருவதற்கு பலருடைய உழைப்பு தேவைப்படுகின்றது. அருமையான காட்சியைச் சிந்திக்கும் இயக்குநர், மனதின் அடியாழத்தோடு ஊடுறுவும் வகையில் இசையமைக்கின்ற இசையமைப்பாளர், காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவாளர் என் பலர் தேவைப்படுகின்றனர். இவற்றுள் ஏதேனும் ஒன்று குறைவாக இருந்தால், அதன் பாதிப்பு தக்கன அமையும்.
ஆனால் எழுத்தின் வழி பயணிப்பதற்கு எழுத்தாளரின் கற்பனை வளம் மட்டுமே போதுமானது. மிகச் சுலபமாக நம்மை தனது தளத்திற்கு இழுத்துச் செல்லாமல், அழைத்துச் செல்கின்ற நடை இருக்கும் போது நமது பயணம் என்றும் மறவாமல் இருக்கச் செய்கின்றது.
ஒரு கதை படிக்கும் போது, நமக்கு பிடித்த கதாபாத்திரத்தில் நம்மை நாம் உருவகப்படுத்திக் கொள்கிறோம். பெரும்பாலும் கதாநாயகன். அவனது எண்ணங்களில் நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அவனது வாழ்க்கை நிகழ்வுகள், சம்பவங்களில் நம்மை நாம் காணும் போதோ, நாம் செய்ய விரும்புகின்ற செயல்களை அவன் செய்யும் போதோ நாம் மிகச் சுலபமாக கதையோடு நம்மை ஐக்கியப் படுத்திக் கொள்ள முடிகின்றது.
அத்தகைய பெரும்பான்மையான கதைகளை எழுதியவர் சுஜாதா என்பதில் மறுப்பில்லை.
துப்பறியும் நாவல்களின் கணேஷ் - வசந்தாகவோ, தேஜஸ்வினியில் தேஜஸ்வினியாகவோ, அவளது தகப்பனாகவோ, 'மாஞ்சு'வில் மாஞ்சுவாகவோ, அவனது தம்பியாகவோ, அவர்களது அம்மாவாகவோ, ஆராவமுதனாகவோ, 'பிரிவோம் சந்திப்போம்'ல் மதுமிதாவாகவோ, 'ஆ'வில் அந்த நோய் வந்து தவிக்கின்ற நாயகனாகவோ, 'ரங்கத்து தேவதைகளில்' கிச்சாவாகவோ, பாச்சுவாகவோ, டீக்கடை வைத்திருக்கும் நாயராகவோ, லால்குடி பாஸஞ்சரில் பயணிக்கும் ரங்கத்து சிறுவனாகவோ தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் அந்தச் சூழலோடு தம்மை இணைத்துக் கொண்டவர்கள், சுஜாதாவை மறக்க முடியாது.
படைப்பாளிகளுக்கு மரணம் என்று இருக்க முடியுமா என்ன? கம்பனுக்கும், மகாகவி பாரதிக்கும் மரணம் வந்து விட்டதா என்ன? அது போல் சுஜாதாவின் எழுத்துக்கள் இருக்கும் வரை அவர் மரணித்து விட்டதாக கூற முடியுமா?
பாரதிக்கும், புதுமைப்பித்தனுக்கும் பிறகு தமிழ் உரைநடையில் ஒரு பெரும் புரட்சியும், மாற்றமும் கொண்டு வந்தவர் சுஜாதா என்பது பிற பதிவுகளைப் படிக்கையில் தெரிகின்றது.
அவரது இயல்பான மாறுபட்ட களங்களை இணைக்கின்ற திறமை அதில் முக்கியமான ஒன்றாகப் படுகின்றது.
காஷ்மீர் தீவிரவாதம் பற்றி, சுந்தரபாண்டியபுரத்தின் சின்னப்பெண் மூலம் சொல்ல வைக்கும் போதும், இலங்கைப் பிரச்னையைப் பற்றிச் சொல்ல முயல்கையில் சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் மூலமாகக் கூற வைக்கும் போதும், ஒரு தீவிரமான மனதுக்குள் குரல் கேட்கும் வியாதியை, திருச்சியில் ஒரு காலத்தில் நடந்த கள்ளக் காதலுடன் இணைக்கும் போதும் (ஆ..!), 'ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி' யை திருவல்லிக்கேணியின் பிராமண சாது இளைஞனின் மனதுக்குள் வைத்து பிராண்ட வைக்கும் போதும், அரசு இயந்திரத்த்கின் செயல்களை, ஒரு சாதாரண டி.வி.காமிராமேனின் வாழ்வின் நிகழ்வுகளைக் கொண்டு சொல்லும் போதும், புரியாத நோய் ஒன்றை கிராமத்துப் பெண்ணின் மனதைக் கொண்டு சொன்ன விதமும் (மதுரை), எளிய சொற்கள் மூலம் கணிப்பொறியியலை அறிமுகம் செய்து வைக்கும் போதும் வாசகனின்/ ரசிகனின் மனதுக்கு கொஞ்சம் இளைப்பாற்றல் தருகிறார்.
'கொஞ்சம் புரியாதது போல் இருக்கிறதே' என்று மனம் கொஞ்சம் சலிக்கும் போது, சடாரென வாசகனின் மனதுக்கு நெருக்கமான சூழலைக் கொண்டு வந்து சேர்க்கும் போது, அவனது மனம் மீண்டும் ஆர்வத்தைப் பற்றுகிறது. மீண்டும் கதைப்பயணம் தொடர்கிறது. சுஜாதாவின் வெற்றிக்கும், அவர் இத்தனை பெரும் வாசகர்களைப் பெற்றிருப்பதற்கும் (பெற்றிருந்ததற்கும்... ;-( ) அவர் எந்தப்புள்ளியில் இந்த தள மாற்றம் செய்ய வேண்டும் என்பது உணர்ந்திருப்பது தான். (உணர்ந்திருந்தது..;-( ) (கடந்த காலத்தில் எழுதவே வர மாட்டேன் என்கிறது. இன்னும் அவர் இறந்து போனார் என்பது எட்டவே இல்லை. 'கற்றதும் பெற்றதும்' இல்லாத விகடனைக் காணும் போதும், 'சுஜாதா பதில்கள் ' இல்லாத குங்குமம் காணும் போது தான் அந்த வெற்றிடம் புரியும் என்று தோன்றுகிறது.) அந்த இரு தளங்கள் எவையெவையாக இருக்க வேண்டும், அதன் கூட்டிணைவு எந்த விகிதத்தில் இருக்க வேண்டும் என்ற மிகச் சரியான விகிதாச்சாரம் தெரிந்து வைத்திருந்ததும், அவற்றை மிகச் சரியாகக் கூர்மையாக செய்ததும் தான்.
அவரது இந்த இயல்பே, தொழில்நுட்பத்தையும், பழந்தமிழையும் இணைக்க வைத்தது என்றும், அதற்கு அவரது பிராமண திருவரங்கக் குடும்பப் புலமும், தொழில் நுட்பத்தின் பொறியியல் பின்புலமும் தளமாக அமைந்தது எனலாம். அந்த Mentality, பலதரப்பட்ட மாறுபட்ட களங்களை சேர்த்து வைத்து கதைகளை, திரைக்கதைகளை அமைக்க வைத்தது எனலாம்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனையும், ஆழ்வார்களையும் ஒப்பிட்டுப் பார்த்து அதனை தமிழில் பொழிவதற்கு அவருக்கு தமிழின் மீதிருந்த ஆர்வமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
சுஜாதா என்ற மிகப்பெரும் எழுத்தாளரை, விஞ்ஞானியை, எளிய முறையில் அணுக முடிந்த மனிதரை, நடைமுறையின் கதைகளை எழுதிய கற்பனைச் சுரங்கத்தை அளவிட்டுப் பார்ர்க எழுந்த முயற்சி அல்ல. அதற்கான தகுதியும், வயதும் இல்லாதவன் நான் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். எனினும் எனக்குத் தோன்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இதை எழுதுகிறேன்.
அவரது பல்துறைத் திறமும், ஆர்வமும் அவர் ஒரு யுக மனிதர் எனச் சொல்ல வைக்கின்றது. அவரது பலதுறை நடைமுறை வசனங்கள் பல துறைகளின் தின வாழ்வைக் காட்டுகின்றன. முக்கியமாக கணேஷ் - வசந்த் மூலம் நீதிமன்றங்களில் என்ன நடக்கின்றது, அதன் தின வசனங்கள் எப்படி இருக்கும் என்பதை எனக்குத் தெரிய வைத்தது.
பல கதை எழுத்தாளர்களின் கதைகள் காலப்போக்கில் பிடிக்காமல் போய் விட, இன்னும் தொடர்ந்து வருகின்றது சுஜாதாவின் எழுத்து என்பதில் அவரது திறன் புலனாகின்றது. காலத்திற்கேற்ப மாற்றம் கொண்ட கதை உலகமும், தீராத, குறையாத கற்பனை வளமும் அவரது தொடர் வெற்றிகளுக்கு காரணம்.
ஐயா, நாம் ஒருபோதும் நேரில் கண்டதில்லை என்ற போதும் உங்களது கதைகள், கட்டுரைகள், பேட்டிகள் வழியாக இது நாள் வரை உங்களோடு தொடர்பு வைத்திருந்தோம். இனிமேல் உங்களது ஸ்தூல உடல் இங்கு இருக்கப் போவதில்லை எனினும், எழுத்துக்கள் வழி நீங்கள் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கத் தான் போகிறீர்கள் என்பதிலும் இனிவரும் எத்தனையோ தலைமுறைகளோடும் உங்களது உரையாடல்கள் காலங் காலமாக உரையாடிக் கொண்டே இருக்கும் என்பதிலும், சந்தேகமென்ன?
நீர் எங்களுக்குச் சொல்லுவதற்கென எத்தனையோ கதைகளைப் புதைத்து வைத்து வாடுகின்றன திருவரங்கத்தின் காவிரிக் கரையும், வானியலின் செவ்வாய்க் கிரகமும்..! கண்களில் பொங்குகின்ற கண்ணீர் மறைக்கின்றது எழுத்துக்களை..! செழுந்தமிழ் மகனே சென்று வாரும்..! நீர் சொல்வதைக் கேட்பதற்கென திறந்த காதுகளைக் கொண்டு காத்திருக்கும் தமிழ்த் தலைமுறைகள் என்றென்றைக்கும்...!
Thursday, February 28, 2008
சுஜாதா - பெயர் தந்த படைப்பாளி.

ஒரு பிரபலமான எழுத்தாளர் என்பதையும் தாண்டி தனிப்பட நெருக்கம் கொள்ள எத்தனை காரணங்கள் உள்ளன எனக்கு!!
பையன் பிறந்த பின் என்ன பெயர் வைக்க என்று குழம்பாமல், சுஜாதாவின் 'வசந்த்' போல் வர வேண்டும் என்று பெயர் வைத்தார்கள். அப்படி எனக்கு பெயர் தந்த படைப்பாளி அல்லவா அவர்?
நேற்று இந்த பதிவை எழுதி விட்டு, இன்று காலையில் ஹிந்துவைப் புரட்டினால், அதிர்ச்சி. ஒன்றுமே ஓடவில்லை. அலுவலகத்தில் சென்று சேர்ந்து, ஒரு வேலையும் நடக்கவில்லை. 'வயிற்று வலி' என்று சொல்லி விட்டேன். உண்மையில் வலி தானே..!!!
பள்ளியில் படிக்கும் போது 'நவீன தமிழ்ச் சிறுகதைகள்' என்று ஒரு புத்தகம் பரிசாகக் கொடுத்தார்கள். அதில் படித்த சுஜாதாவின் 'நகரம்' என்ற சிறுகதை அத் தொகுப்பில் படித்த பல சிறுகதைகளில் வித்தியாசப்பட்டு இருந்தது.
அறிமுக பாராவில் மதுரையைப் பற்றிக் கூறும் போது, அவரது எழுத்து எங்கெங்கோ சென்று பறந்து, பின் நடைமுறைக் காலத்திற்கு வந்து நிற்கும். அக்கதை அவரைப் பற்றிய ஓர் இரகசிய வாசலைத் திறந்து வைத்தது என்றால் மிகையில்லை. அதற்கு முன்பே அவரது கதைகள் படித்திருக்கலாம். சரியாக நினைவில்லை.
ஆனால் அவரது கதைகள் பிறரது கதைகளில் இருந்து வித்தியாசப்பட்டு இருப்பது புரிந்தது. சின்னச் சின்ன வாக்கியங்கள், அலட்சியமாகப் பேசும் கதாபாத்திரங்கள், சட் சட்டென தாவும் சூழ்நிலைகள் என்று அவரது கதைகளின் வழி அவரது திறன் புரியலானது.
தூர்தர்ஷனில் 'என் இனிய இயந்திரா' காணும் போது பிரமிப்பாய் இருந்தது. '90களில் இப்படி ஒரு சிந்தனை எத்தனை பேருக்கு இருந்திருக்கும்? பெரும்பாலோர் காதலையும், குடும்பச் சிக்கல்களையும் பொட்டு அவிழ்த்துக் கொண்டிருக்கையில் வளரும் சிறுவன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டன சாகசக் கதைகள் மூலம் அவரது எழுத்துக்கள்.
விகடனும், குமுதமும் தொடர்ச்சியாக வாங்கத் தொடங்கிய பின் படித்த 'பிரிவோம் சந்திப்போம்', கற்றதும் பெற்றதும் முதல் பாகம் அவரின் பிரம்மாண்டத்தை அனுபவங்கள் வழி அலசிப் போடும் இலாவகம் எல்லாம் அவரது திறமையையும் தீராத தேடலையும் படம் போட்டுக் காட்டின.
குமுதத்தில் வந்த 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' என்னை மிகவும் பெருமை கொள்ளச் செய்தது என்பதில் எனக்கு மகிழ்வே!
சுஜாதாவின் கதைகளில் மிளிரும் இளமையும், கவர்ச்சியும், துள்ளலும் எத்தனை பரவசத்தை அளிக்குமோ அதற்குச் சிறிதும் சளைக்காது கவர்ச்சி தூக்கலாக படம் வரைந்த ஓவியர் ஜெ., கதைகளின் போக்கிற்கெ வாசகனைக் கொண்டு வந்து விடுவர். சுஜாதா - ஜெ காம்பினேஷன் எத்தனை கதைகளில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன...!
குமுதம் ஆசிரியரான காலத்தில், ஒரு வருடம், குமுதத்தின் முகத்தையே மாற்றி வைத்தார். இரவில் பூக்கும் குமுத மலரை அடையாளமாகக் கொண்டிருந்த குமுதத்திற்கு இளமையைக் கொண்டு வந்தார். ஆனால் எழுத்தாளர் ஒருவர் ஒரு கூட்டுக்குள் அடைய வேண்டி வந்ததன் இழப்புகள் அவரை மீண்டும் சிறகடித்துப் பறக்கும் பறவையாக்கின.
குமுதத்தில் எழுதிய 'படித்தவர்க்கும் பாமரர்க்கும் கணிப்பொறி', கணிப்பொறியே அறியாத இக் கிராமத்துச் சிறுவனுக்கு சிலிக்கான் சில்லுகள் பற்றிய ஓர் எளிய அறிமுகத்தைக் கொடுத்தது.
ஜூ. வி. -ல் வந்த 'ஏன்? எதற்கு? எப்படி?' என்ன ஓர் அற்புதத் தொகுப்பு! சிக்கலான கேள்விகள் மூலமும், எளிய வினாக்கள் மூலமும் மதனின் கைவண்ணத்தில் Googling இல்லாத காலகட்டத்தில் அறிவியலின் கையைப் பிடித்து தமிழ் உலகத்திற்குச் சுற்றிக் காட்டினார் எனலாம்.
'ஆழ்வார்கள் -ஓர் எளிய அறிமுகம்' மூலம் அவரது பன்முகத் திறமைகளில் பலவற்றை அறிய முடிந்தது.
'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' மூலம் ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்தினார். கிச்சா, பாச்சு, மாஞ்சு எல்லோரையும், மாட வீதிகளையும், தெற்கு கோபுரத்தையும், அம்மா மண்டபத்தையும் வடக்குவிளையான் கிரிக்கெட் அணியையும் அமெரிக்க அம்பிகளையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன? முக்கியமாக அரங்கத்து தேவதைகளையும், அரஸ்-ன் தூரிகைக் கன்னிகளாய் அவர்கள் வெளிப்பட்ட அழகையும்...!
இப்போது அந்த நண்பர்களைத் தேடி சென்றுள்ளார் போலும்! மீண்டு வந்து மற்றுமொரு 'கற்றதும் பெற்றதும்' எழுதுவார்.
கல்லூரியில் சேர்ந்த போது, கணிப்பொறியே தெரியாத காலகட்டத்தில் தமிழ் எழுத்துக்களை கண்ணியில் காண்கையில் எத்தனை மகிழ்வாய் இருக்கும்? ஒரு தெரியாத தேசத்தில் நண்பனைக் கண்ட மகிழ்வு அது. அது அம்பலம்.
அவர் எழுதிய இணையம் பற்றிய தமிழ்ப் புத்தகமும், அதில் குறிப்பிட்டிருந்த பல இணைய முகவரிகளும் அந்த ஆரம்ப காலகட்டத்தில் அத்துணை துணையாக இருந்தது.
கரையெல்லாம் செண்பகப்பூ படமாகப் பார்த்த கட்டத்தில் தான் அந்நாவல் வடிவம் மிகவும் பிடித்துப் போனது.
அறிவியல், நடைமுறைக் கதைகள் , பழந்தமிழ் இலக்கியம், ஆழ்வார்கள், இளவயது நினைவுகள் என்று கலந்த் கட்டி எழுதி தான் ஒரு பல் துறை நிபுணன் என்பதை நிரூபித்தார்.
இன்று பிழைக்க ஓர் ஊர் சென்றாலும் மொழி உணர்வை விடாது பதிவுகளிலும், எழுத்துலகிலும் எழுதி வரும் எத்தனையோ பேரின் முன்னோடி சுஜாதா, அறிவியல் துறையில் இருந்தாலும் அது பிழைப்புக்கு, மகிழ்ச்சிக்கு தம் எழுத்து என்று வாழ்ந்து காட்டியதன் மூலம்!
செந்தமிழ் மொழி பெரும்பாக்கியம் பெற்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழைப் பெருமை படுத்த தோன்றி கொண்டே இருக்கிறார்கள். இக்கால கட்டத்தில் அறிவியல் பாய்ச்சல் போடும் போது, தமிழும், தமிழனும் தேங்கி விட்டு காணாமல் போய் விடக் கூடாது என்று பிறந்தவர் தான் இவர்.
எளிய தமிழில் அறிவியலை அறிமுகப்படுத்துவதில் இருந்து, சங்கத் தமிழை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவது வரை ஒரு தொடர்ச் சங்கிலியின் இன்றியமையாத கண்ணியாக இருந்தார் எனில் அதில் மிகையில்லை.
இப்போது அவரது மரணம் தமிழ்க் குடும்பங்களுக்கு, குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வலியை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் தான் அந்த ஓர் எழுத்தாளராய் அம்மனிதரின் வாழ்வின் வெற்றி அடங்கி இருக்கின்றது. ஒரு பரிபூரண வாழ்வை வாழ்ந்த அந்த மாமனிதர் அமைதியில் நிறைவு கொண்டு அங்கேயே இருந்து விட மாட்டார்..!
ஒரு பயணம் சென்றிருப்பது போல் அரங்கனின் அடி காண சென்றிருக்கிறார். கொஞ்ச நாள் கழித்து வந்து தம் பயண அனுபவங்களைக் கண்டிப்பாக எழுதுவார்.
அது வரை கணேஷ் - வசந்தையும், மதுமிதாவையும், தேவதைகளையும், மாஞ்சுவையும், திருவரங்கத்தையும் பார்த்துப் பார்த்து நம்மை அமைதிப்படுத்திக் கொள்வோம்...!
Saturday, January 12, 2008
சுவாமிஜி.

இன்று சுவாமிஜி விவேகானந்தரின் பிறந்த தினம்.
நான்காம் வகுப்பு முடித்து ஐந்தாம் வகுப்பு சேர்வதற்காக எங்கள் ஊரில் பள்ளியைத் தேடியதில், இடமில்லை என்று சொல்லப்பட்ட பள்ளிகளில் ஒன்று 'சுவாமி விவேகானந்தா துவக்கப் பள்ளி'. பின் வேறொரு பள்ளியில் சேர்ந்தேன். இப்படித் தான் முதன்முதலில் (அசந்தர்ப்பமாக)சுவாமிஜியின் பெயர் அறிமுகமானது.
என் சகோதரருக்கு அப்பள்ளியில் இடம் கிடைத்தது. அவ்வப்போது அவருக்குக் கொடுக்கும் புத்தகங்களில் ஒன்று நானும் படித்தேன். (நமது புத்தகப் பைத்தியந்தான் இங்கேயே சொல்லி இருக்கிறதே..!). 'சிறுவர்களுக்கான விவேகானந்தர்'. அவரது வாழ்வில் சிறு வயதில் செய்த குறும்புகள், தியான வாழ்வு, இரக்க மற்றும் தைரிய நிகழ்வுகள் என்று சிறுவர்களுக்கு பிடித்தவற்றைக் கூறி இருந்தார்கள்.
பத்தாம் வகுப்பு முடிந்து, பரிசு கொடுத்த வைபவத்தில், நான் ஒரு புத்தகத்தைப் பார்த்துக் கூறினேன். 'என்ன இந்த புக் இவ்ளோ தடியா இருக்கு. யார் தலையில் கட்டப் போகிறார்களோ' என்று. கடைசியில் கிட்டியது(ஐயோ.. மலையாளம்..!) என் தலை...!
இராமகிருஷ்ண மடத்தின் வெளியீடான 'சுவாமி விவேகானந்தர்'. ஆசிரியர் ரா.கணபதி அவர்கள்.
சில நாட்களிலேயே இரவெல்லாம் விழித்துப் படித்து முடிக்கையில் இவரை மிகவும் அருகில் இருந்துப் பார்த்து, வாழ்ந்தது போன்ற உணர்வு கிடைத்தது உண்மை.
பிறகு எங்கள் ஊர்க் கோயிலுக்குச் சென்று வரும் போதெல்லாம் மடத்தின் சின்னச் சின்ன வெளியீடுகள் (2 ரூபாய், 4 ரூபாய் விலை) வாங்கி வந்து படிப்பது வழமையாகிப் போனது.
சென்னை வந்த பின், அவ்வப்போது மயிலை சென்று கபாலியைக் கண்டு வருகையில் மடத்தையும் சென்று பார்த்து விட்டு வருவேன். அங்கும் சும்மா இல்லாமல் புத்தக வரிசை ஆரம்பித்தது. அங்கு வாங்கிய 'கைலாஷ் யாத்திரை' என்ற சி.டி... சொல்லக் கூடாது சார்.. அந்த உணர்வை நீங்கள் அனுபவித்தால் தான் தெரியும்.
இமயத்தின் பிரம்மாணடமும், அந்த வெள்ளைப் பனி மலையில் படர்ந்திருக்கும் ஆன்மீகமும், இமயம் மீதான அன்பை மேலும் வளர்த்துக் கொள்ள இந்த சி.டி. உதவியது. (இன்று பாரதத்தின் தென் முனையில் இருந்தாலும் என்றாவது அந்த பத்ரிகேஸ்வரனின் தரிசனம் பெற வேண்டும் என்பது உள் அவா.)
Tuesday, July 24, 2007
தாய் மண்ணிற்குத் திரும்பும் தமிழ்த் தங்கமகனே, வருக, வருக!
மேதகு குடியரசுத் தலைவர் ஆ.பெ.ஜ.அப்துல் கலாம் அவர்கள் இன்று நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்து, ஐந்தாண்டு காலம் சிறப்பாகப் பணியாற்றி, மீண்டும் தன் தாய்மண்ணிற்குத் திரும்புகிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் தாம் விட்டுச் சென்ற பணியைத் தொடர வருகிறார்.
முதன்முதலில் அவரைச் சந்தித்ததைப் பற்றி இங்கே கூறுகிறேன்.
பொக்ரானில் வெற்றிகரமாக அணுச் சோதனையை நிறைவேற்றி, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராகிப் பணியாற்றி விட்டு, பின் எங்கள் கல்லூரிக்கு பேராசிரியப் பணியாற்ற வந்தார். கணிப்பிறி ஆய்வகத்தில் இரு அறைகள் அவருக்காக ஒதுக்கப்பட்டன. அவர் அதைத் தம் பணியறையாக வைத்துக் கொண்டார்.
வார இறுதிகளில் ஊருக்குப் போய்விட்டு அதிகாலையில் விடுதிக்குத் திரும்பும் மாணவர்கள், மைதானத்தின் வழியாக வருகையில், இவர் ஒரு பாதுகாவலரோடு காலைநடை போவதைப் பார்த்து வணக்கம் செலுத்துவர். (மற்ற நாட்களில் எங்கே அத்தனை அதிகாலையில் யார் எழுவர்? அதுவும் விடுதியில்?)
அவரும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் செலுத்துவாராம்.
இப்படி ஒருவர் பெரிய மனிதர் நம் கல்லூரியில் இருக்கும் போது, அவரை எப்படியாவது சந்தித்திட வேண்டும் என்று விருப்பம் இருந்தது. எப்படிச் சந்திப்பது என்று தயக்கம் வேறு!
அவ்வப்போது கணிப்பொறி ஆய்வகத்திற்குச் செல்கையில், அவரது அறையை எட்டிப் பார்ப்பதுண்டு.
ஒரு வாசல். அதன் அருகில் ஒருவர் அமர்ந்திருப்பார். அவரிடம் சந்திக்க விரும்புவதின் நோக்கத்தைக் கூறினால், அவர் கலாமிடம் கூறி அவரது விருப்பத்தை அறிவார். பின் நேரம் ஒதுக்கப்படும். அக்குறிப்பிட்ட நேரத்தில் அவரைச் சந்தித்துத் திரும்பி விட வேண்டும். இது தான் முறை என்பதை அறிந்தேன்.
அப்போதே அவர் கல்லூரி மாணவர்கள் என்றால், எந்த தயக்கமும் இன்றி, அனுமதிக்கச் சொல்லி இருந்தார் என்று கேள்விப்பட்டு இருந்தேன். எப்படி, என்ன சொல்லி அவரைச் சந்திக்கலாம் என்று யோசித்தேன்.
ஏதாவது சொல்ல வேண்டும் அல்லவா?
சிறு வயதில் இருந்தே ஒரு பழக்கம்.
பத்திரிகைகளில் ஏதேனும் அருமையான ஓவியம் கண்ணில் பட்டு விட்டால், கை அரிப்பெடுக்க ஆரம்பித்து விடும். நானும் தான் வரைவேன் என்று சொல்லிக் கொண்டு, சாட் பேப்பரில் வரைவேன். அது கமல் செய்வது போல், படைப்பாளி ஓவியத்தில் நீர் ஊற்றிய துடைப்பாளி வேலை போல் இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
குங்குமம் இதழில், 'பாண்டியன்' என்ற ஓவியர் வரைந்த கலாம் அவர்களின் ஓவியம் பார்த்தவுடன், இதை வரைய வேண்டும் என்று தோன்றியது. அதை வரைந்து கொண்டிருக்கையிலேயே, இதை வரைந்து கலாம் அவர்களிடமே காட்டி கையெழுத்து வாங்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. (இதுவரை இது எப்பேர்ப்பட்ட சிந்தனை என்று இறுமாப்போடு இருந்தேன். சென்ற வார விகடனில் ஓவியர் ஸ்யாம் அவர்கள் இது போல் பல பெரியவர்களிடம், அவர்கள் படத்தை வரைந்து, அவர்களின் கையொப்பம் வாங்கியிருக்கிறார் என்று படித்தவுடன், புஸ்ஸென்றானது ஒரு சோகக் கதை.)
மாதத் தேர்வுகள் முடிந்த ஒரு திங்கட்கிழமை அந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு, அவரது அலுவலகம் சென்றேன். கையில் புகைப்படக் கருவி இல்லாததால், நண்பரிடம் வாங்கிச் சென்றிருந்தேன்.
அவரது அறைக்கு முன்னிருந்த அலுவலரிடம் கலாம் அவர்களைக் காண வேண்டும் என்றேன். எதற்காக என்ற கேள்விக்கு, மாணவர் அட்டையைக் காட்டி விட்டு, அந்த ஓவியத்தைக் காட்டி, 'இதை அவரிடம் காட்டி, அவரது கையொப்பம் வாங்க வேண்டும்' என்றேன். அலுவலர், பாதுகாப்புக்குக் கையில் துப்பாக்கியுடன் இருந்த பாதுகாவலர், உள்ளிருந்த அலுவலர்கள் அனைவரும் ஓவியத்தைப் பார்த்து வியந்து வாழ்த்தினர்.சோதனைகள் முடிந்த பின் அவரிடம் அனுமதி பெற்று, உள் அனுப்பி வைக்கப் பட்டேன்.
பின் உள் நுழைகையில் தான் தெரிந்தது. உள்ளே மற்றுமொரு அறை இருப்பதை! முன்னறையில் அமர வைத்தனர். ஓர் ஐந்து நிமிடம் காத்திருக்கச் சொன்னார்கள். அதற்குள், இரண்டு தொலைபேசி அழைப்புகள். ஒண்று டி.ஆர்.டி.ஓ.வில் இருந்தும், மற்றொன்று ஹரிகோட்டாவில் இருந்தும்.
அழைப்பு கிடைத்தது.
அறைக்கதவு திறந்தது.
முன்னறை சிறியதாக இருந்தாலும், அவரது அலுவல் அறை பெரியதாக இருக்கும், நீளமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே சற்று நிதானமாக உள் நுழைந்தால், 'தடார்' என்று எதிரில் உட்கார்ந்திருக்கிறார். 'பட்'டென்று ஆகி விட்டது எனக்கு. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அமைதியாக எழுந்து நின்று கை கொடுத்தார். அமரச் சொன்னார். அமர்ந்தேன். பெயர், வகுப்பு என்று விசாரித்தார். பின் அந்த ஓவியத்தைக் காட்டினேன். பாராட்டினார். அதில்,'Role Model for Rural Students' என்று எழுதி, கீழே A.P.J.Abdul Kalam என்று எழுதியிருந்தேன். அவரது பெருமை பாடும் புகழ்ப் பட்டப் பெயர்களையோ, எந்த புகழ் உரைகளையோ எழுதாமல், வெறும் பெயர் மட்டும் எழுதியிருந்தேன். உண்மையில் அது மட்டும் தானே நமது அடையாளம்? மற்ற பட்டங்கள் எல்லாம் பிறர் தருவது தானே? என்ற எண்ணத்தில்..!
'With Best Wishes' என்று எழுதி,அவரது கையொப்பம் இட்டார். 'Rural Students' என்று எழுதி இருந்ததால், எந்த ஊர் என்று கேட்டார். 'பவானி' என்று சொல்ல எனோ கூச்சப்பட்டு, (அவருக்குத் தெரியுமோ, என்னவோ என்ற எண்ணம் தான்) 'ஈரோடு' என்றேன்.
பின் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தயக்கத்துடன் கேட்டுக் கொண்டேன். பொதுவாக அவர் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை/ விரும்புவதில்லை என்று கேள்விப்பட்டிருந்தேன். அதனால் தான்.
ஆனால் அவர் ஒத்துக் கொண்டார்.
பரவசத்தில், பதட்டத்தில் தடாரென்று எழுந்ததில், நான் அமர்ந்திருந்த நாற்காலியைத் தள்ளி விட்டு விட்டேன். பின் எடுத்து ஒழுங்கு படுத்தினேன். அவரது அலுவலக ஊழியரைக் கூப்பிடலாம் என்று கதவைத் திறக்கப் போனேன். அங்கு அடுத்த தவறுதல். அவரது அறைக் கதவு, உள்ளே தாழ்போட்டுக் கொள்ளும் வகையில், பட்டன் சிஸ்டத்தில் இருந்தது. பதட்டத்தில் அதை அழுத்தித் தொலைத்து விட்டேன். கதவைத் திறக்க முடியாமல் போயிற்று. சோகமாய் அவரைப் பார்த்தேன். 'சுத்த லூசா இருப்பான் போல்' என்று எண்ணினாரோ என்னவோ, அவரே வந்து கதவைத் திறந்து விட்டௌ, அவரது ஊழியர் ஒருவரை அழைத்து, புகைப்படம் எடுக்கச் சொன்னார்.
அந்த ஓவியத்தின் ஒரு முனையில் நானும் மறு முனையில் அவரும் மேலும் கீழும் பிடிக்க, அவரது ஊழியர் காமிராவின் பட்டனை அழுத்தினார்.
ஒரே ஒரு ஃப்ளாஷ்.
மற்றுமொன்று எடுக்கச் சொல்லலாமோ என்று (பேக் அப் - சரியாக வரவில்லை என்றால் என்பதால்) நினைக்கையிலேயே, அவர் கை கொடுத்தார். வேறு வழியின்றி நானும் கை கொடுத்து விட்டு வெளி வந்தேன். பிறகுதான் மூச்சே இயல்பு நிலைக்குத் திரும்பியது.
பிறகு சந்தோஷமாக அதை அனைத்து அலுவலர்களிடம் காட்டி விட்டு, விடுதிக்கு அத்தனை மகிழ்ச்சியுடன் திரும்பினேன். ஆனால் பசங்கள் அதை நம்பவேயில்லை. 'யார்ரா இந்த பொம்பளை' என்றே கேட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள்.
அப்போதெல்லாம் அவர் குடியரசுத் தலைவர் ஆவார் என்று யாரும் எண்ணவேயில்லை.
பிறகு அந்த வரலாறு நிகழ்ந்த போது, ஐயாவுடைய மதிப்பு சும்மா, ஜிவ்வென்று கலாம் அனுப்பிய இராக்கெட் கணக்காக மேலேறியது. நானும் போதாக்குறைக்கு கொஞ்ச காலம் 'எனக்கு கையெழுத்து போட்டதால் தான் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்து ஜனாதிபதியானார்' என்று சொல்லிக் கொண்டு திரிந்தேன்.
முன்பே அவரது 'அக்னிச் சிறகுகள்' படித்திருந்தேன். அப்போதே அவர் மேல் மதிப்பாய் இருந்தது. அவர் எங்கள் பல்கலைக் கழகத்தில் படித்தவர் என்று அறிந்ததும், இன்னும் கொஞ்சம் நெருக்கம் மனதில் தோன்றியது. அது இன்னும் வளர்ந்தது, இந்த ஓவிய விளையாட்டில்!
ஒரு விஞ்ஞானி ஜனாதிபதியாகவும், ஒரு பொருளாதார மேதை பிரதமராகவும், ஒரு பொருளாதார அறிஞர் நிதியமைச்சராகவும் இருக்கையில் நாடு இன்னும் நிறைய விஷயங்களில் முன்னேறி இருக்கலாம் என்று தோன்றுகிறது இப்போது! இப்படி ஒரு கூட்டணி இனி இந்த தேசத்திற்கு மறுபடியும் எப்போது அமையுமோ?
ஆனாலும் தேசத்தின் இளம் தூண்களின் மனத்தில் நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தியதிலும், உலகிலேயே இளமையான தேசத்தின் எதிர்காலம் இளம் குழந்தைகளின் கைகளில் தான் என்பதை உணர்ந்து, நாடெங்கும் பயணித்து இலட்சக்கணக்கான இளஞ்சிறார்களின் மனத்தில் தேசத்தின் வளர்ச்சியைப் பற்றிய கனவை விதைத்ததிலும், தான் வெறும் 'இரப்பர் ஸ்டாம்ப்' அல்ல என்று உணர்த்தியதிலும் கலாம் நாம் கண்டுவந்த மற்ற வெற்று ஜனாதிபதிகளில் இருந்து பெரிதும் வேறுபட்டு விளங்கினார்.
பல இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்ற நாட்டில், இராக்கெட் அனுப்புவதற்கும், செயற்கைக் கோள் அனுப்புவதற்கும் இத்தனை பணம் செலவு செய்ய வேண்டுமா என்று பலர் கேட்ட போது, 'தேசத்தின் பாதுகாப்பு' தான் முக்கியம். அது ஸ்திரமாக்கி விட்டு, பின் உற்பத்தியைப் பெருக்கலாம் என்று உண்மை நிலையைக் கூறினார்.
வெறும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான்,'அண்ணன் அழைக்கிறார்',' தலைவர் தறிகெட்டுக் கூப்பிடுகிறார்' என்று போஸ்டர் அடித்து வரவேற்பு கொடுக்க வேண்டுமா?
இதோ..
'தலை நகரில் ஆண்டு விட்டு, தாய் மண்ணிற்குத் திரும்பும் தமிழ்த் தங்கமகனே.. வருக.. வருக..'
'இராமேஸ்வரத்தில் பிறந்த இரத்தினமே... இந்தியா தந்த இசுலாம் இதயமே.. வருக.. வருக..'
'கற்ற இடத்திற்குப் பெருமை சேர்த்து, உற்ற இடம் அடைந்து, உயர் புகழ் பெற்று, தாயகம் திரும்பும் தவத் திருமகனே வருக...'
'அண்ணா பலகலைக்கழகத்திற்குத் திரும்பும் அண்ணலே வருக.. வருக..'
குறிப்பு : சிறப்பு இருக்கும் இடத்தின் மீது சேறு வீசப்படுவது உலக இயல்பு. 'ஞானி' என்று தம்மைத் தாமே கூறித் திரியும் ஒருவர், கலாம் அவர்களைப் பற்றி ஆ.வி.-யில் கேவலமாக எழுதியிருந்தார். அவருக்குக் கூறிக் கொள்ளும் பதில் இது தான்:
'ஆண்டவரே.. இவர்கள் தாம் என்ன செய்வது என்பதை அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்..'
கலைந்தது கலாம் கனவு..! பிழைத்தது இந்தியா..!
அப்துல்கலாம் ஏன் ஜனாதிபதி ஆக கூடாது?
அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! - ஞானி
விடை பெறுகிறார் 'மக்கள்' ஜனாதிபதி.....
Monday, July 09, 2007
வாழ்த்து மடல்!

பரிசாய் என் தமிழ் தான் தரமுடியும்,
தரிசாய் என் கரங்கள் தற்போதைக்கிருப்பதால்!
புகழொளி பட்டுத் திருமேவும் கதிரின்
திகழொளி பட்டுத் திரை வானெங்கும் தித்தித்திட,
வள்ளித் தலைவன் வாசமலர் சூடிநிற்ப,
வெள்ளிக்கிழமை துணை சேர்ந்தாய், வாழி!
நாதசுரம் மேளமெல்லாம் நல்லோர்தம் ஊதிநிற்ப,
வேதமுறை பட்டரெல்லாம் வேண்டும் முறை ஓதிநிற்ப,
கூதலுற்ற காற்றுவந்து கூரையெங்கும் கூடுகட்ட,
பாதவிரல் தரைதேய்ப்ப பாங்குடன் நிற்கின்றாய், வாழி!
சுற்றி நிற்கும் பேரதனால் சுற்றமாயினர்,
உற்ற நண்பர் உறவினர் உவந்து நிற்பனர்,
பெற்ற நேரமெண்ணி அம்மை வாழ்த்திநிற்ப,
உற்றவனின் மணிவிரலில் விரல் கோர்த்தாய், வாழி!
தீவலம் வரும்போது திருமகனின் விரல் பிரியாய்,
நீவலம் வருகின்ற மாமாவின் மனம் பிரியாய்,
சேர்வளம் சேர்கின்ற செழும்வாழ்வு பிரியாய், உங்கள்
பேர்வலம் வரச்செய்யும் பிள்ளைகள் பெறுவாய், வாழி!
ஒருபாதி பெற்று, ஓருயிராய் நின்றாள் அன்னை,
திருமகளோ நாரணனின் துணையாய் நின்றாள்!
தருவாய் உன் அன்பையெல்லம் கற்பகத்
தருவாய் மனம் சேர் மன்னன் மேல், வாழி!
'வாழ்த்துதற்கு வயது வேண்டும்', வயதாகிப் போன மொழி!
வாழ்த்துதற்கு மனம் போதும், வந்து நிற்க மாட்டாமல்,
வாழ்த்த வந்துள்ளேன், வாழி வாழி பல்லாண்டு,
வாழையடி வாழையென்று வாழி வாழி பல்லாண்டு!
எழுதியது : 05 - DEC - 2003.
என் இருள் காலங்களில் ஓர் அக்காவின் திருமணம் நடந்தது. வெட்கத்தினால் நான் மண விழாவிற்குச் செல்லவில்லை. பின் ஒரு நாள் அவர்களைப் பார்க்கச் சென்று, அப்போதும் அவர்களுக்கு அன்பளிக்க ஒன்றும் கையில் இல்லாததால், வற்றாத அன்னை நதியாய்த் தமிழில் எழுதிக் கொடுத்தக் கவிதையிது!
இப்போதும் படிக்கையில்... ஏதேதோ நினைவுகள்...!
தரிசாய் என் கரங்கள் தற்போதைக்கிருப்பதால்!
புகழொளி பட்டுத் திருமேவும் கதிரின்
திகழொளி பட்டுத் திரை வானெங்கும் தித்தித்திட,
வள்ளித் தலைவன் வாசமலர் சூடிநிற்ப,
வெள்ளிக்கிழமை துணை சேர்ந்தாய், வாழி!
நாதசுரம் மேளமெல்லாம் நல்லோர்தம் ஊதிநிற்ப,
வேதமுறை பட்டரெல்லாம் வேண்டும் முறை ஓதிநிற்ப,
கூதலுற்ற காற்றுவந்து கூரையெங்கும் கூடுகட்ட,
பாதவிரல் தரைதேய்ப்ப பாங்குடன் நிற்கின்றாய், வாழி!
சுற்றி நிற்கும் பேரதனால் சுற்றமாயினர்,
உற்ற நண்பர் உறவினர் உவந்து நிற்பனர்,
பெற்ற நேரமெண்ணி அம்மை வாழ்த்திநிற்ப,
உற்றவனின் மணிவிரலில் விரல் கோர்த்தாய், வாழி!
தீவலம் வரும்போது திருமகனின் விரல் பிரியாய்,
நீவலம் வருகின்ற மாமாவின் மனம் பிரியாய்,
சேர்வளம் சேர்கின்ற செழும்வாழ்வு பிரியாய், உங்கள்
பேர்வலம் வரச்செய்யும் பிள்ளைகள் பெறுவாய், வாழி!
ஒருபாதி பெற்று, ஓருயிராய் நின்றாள் அன்னை,
திருமகளோ நாரணனின் துணையாய் நின்றாள்!
தருவாய் உன் அன்பையெல்லம் கற்பகத்
தருவாய் மனம் சேர் மன்னன் மேல், வாழி!
'வாழ்த்துதற்கு வயது வேண்டும்', வயதாகிப் போன மொழி!
வாழ்த்துதற்கு மனம் போதும், வந்து நிற்க மாட்டாமல்,
வாழ்த்த வந்துள்ளேன், வாழி வாழி பல்லாண்டு,
வாழையடி வாழையென்று வாழி வாழி பல்லாண்டு!
எழுதியது : 05 - DEC - 2003.
என் இருள் காலங்களில் ஓர் அக்காவின் திருமணம் நடந்தது. வெட்கத்தினால் நான் மண விழாவிற்குச் செல்லவில்லை. பின் ஒரு நாள் அவர்களைப் பார்க்கச் சென்று, அப்போதும் அவர்களுக்கு அன்பளிக்க ஒன்றும் கையில் இல்லாததால், வற்றாத அன்னை நதியாய்த் தமிழில் எழுதிக் கொடுத்தக் கவிதையிது!
இப்போதும் படிக்கையில்... ஏதேதோ நினைவுகள்...!
Labels:
காதல் தொடாத கவிதை.,
ஞாபகம் வருதே.
Saturday, June 09, 2007
இருக்கா... இல்லையா..?
மேலே உள்ள காமெடியை பார்த்து ரசித்தீர்களா..? நன்றாகச் சிரித்தீர்களா..? நன்று. சிரிப்பை நிறுத்துங்கள். நான் சொல்லப் போவது, கொஞ்சம் சீரியசான மேட்டர் தான்.
"பேய் இருக்கா இல்லையா" என்று வடிவேலு கேட்பாரே, அது போல் உங்களைக் கேட்கிறேன். உங்களுக்கு அனுபவம் ஏதாவது இருக்கிறதா..?
என் அனுபவத்தில் உணர்ந்த ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.
சிறு வயதில் எல்லோரையும் போல் தான் எனக்கும் பயம். இரவில் தனியாகப் போக பயம். கரண்ட் போய் விட்டால் , வீட்டிலேயே இருக்க மாட்டேன். உடனே தெருவிற்கு ஓடி வந்து விடுவேன். விளக்கு பற்ற வைப்போம் என்ற எண்ணமும் தோன்றாது. நள்ளிரவுக்கு மேல், பக்கத்தில் இருக்கின்ற வேறொரு அறைக்கு கூட போக மாட்டேன். ஆறாவதோ, ஐந்தாவதோ படிக்கும் போது 'உருவம்' படத்திற்கு அப்பாவோடு போய், படம் பார்த்த வரையில், வாட்டர் பாட்டில் கொண்டு சென்ற பிளாஸ்டிக் கூடையை முகத்தில் மறைத்து, அதன் இடுக்குகள் வழியே திரையைப் பார்த்தேன். இடைவேளையின் போதே, 'விட்டால் போதும்' என்று ஓடி வந்தேன். (இதற்காகத் தனியாகப் பாட்டு வாங்கியது தனி.)
இந்தி டியூஷன் செல்லும் போது, சாரின் கடைசிப் பையன், வெண்டைக்காயின் காம்புகளை முகம் முழுதும் ஒட்ட வைத்து, 'திடீர்' என்று முன்னால் வந்து நிற்க, 'உருவம்' மோகன் தான் நினைவுக்கு வந்தார். விழுந்தடித்து, மேலிருந்து கீழே ஓடி வந்தேன்.
'நாளைய மனிதன்' என்றொரு கதையை அப்பா சொல்கையில், ஓடோடி வந்து வீட்டுக்குள் புகுந்து கொண்டதுண்டு.
இதையெல்லாம் எல்லோர்க்கும் ஏற்படும் அனுபவங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் முதன்முதலாய் கேள்விப்பட்டிராத அனுபவம் ஒன்று ஏற்படுகையில், ஆடிப் போய் விட்டது தான் இனி சொல்லப் போவது.
எட்டாவதோ, ஒன்பதாவதோ படிக்கையில், தனியறை கொடுத்து விட்டார்கள். இரும்பு கட்டில், பெட் என்று.
ஒருநாள் இரவு இரண்டு மணி வரை படித்து விட்டு, உறங்கச் செல்கிறேன். எப்போதும் எதிரில் இருக்கும் ஒரே ஒரு ஜன்னலைச் சாத்தி விட்டு தான் உறங்குவேன். நமக்கு வெளிச்சம் துளிகூட இருக்கக் கூடாது. தூக்கம் வராது. 'டக்'னு துளி சத்தம் கூட கேட்கக் கூடாது. உடனே தூக்கம் கலைஞ்சிடும்.
ஆனா அன்னிக்கு நல்ல நிலா வெளிச்சம். பெளர்ணமியானு ஞாபகம் இல்லை. அப்படியே இளம் நீல வெளிச்சம் ஜன்னல் வழியா வந்து கொண்டிருந்தது. லேசா காத்து வேற வீசிக் கொண்டிருந்தது.
'சரி, ஒரு நாள் ஜன்னலைத் திறந்து வெச்சு தான் தூங்குவோம்' என்று ஜன்னலைத் திறந்து வைத்தவாறே படுத்தேன். எப்போதோ மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் படித்த 'மாரல் சயின்ஸில்' இந்த மாதிரி ' தூங்கும் போது , ஜன்னலைத் திறந்து வைத்து தான் தூங்க வேண்டும் என்று படித்திருந்தது, அன்றைக்குப் பார்த்து ஞாபகம் வந்து தொலைத்தது.
ஜன்னலைத் திறந்து வைத்தவாறே, நீல வெளிச்சத்தைப் பார்த்தவாறே படுத்தேன். 'மல்லாந்து படுக்கற்துல என்ன சுகம்' என்று எண்ணியவாறே, கண்களை மூடியது தான் தாமதம்.
என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
விரிந்தவாறே இருந்த கைகளையும், கால்களையும் யாரோ இறுக்கப் பிடித்துக் கொண்ட உணர்வு. அவற்றை துளிக் கூட அசைக்க முடியவில்லை. கண்களைத் திறக்கப் பார்க்கிறேன். ம்ஹூம்... கொஞ்சம் கூட நகர்த்த முடியவில்லை.
கண்களைத் திறக்க வேண்டும், கை, கால்களை அசைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அந்த நினைவு நன்றாக வேலை செய்கிறது. ஆனால், உடலை மட்டும் அசைக்க முடியவில்லை.
பயங்கரமான அதிர்ச்சி.
நிஜமாகவே ப்ரும்பாடு பட்டு, கை, கால்களை அசைத்தேன். 'தடார்' என்று எல்லாம் ஒழுங்காயிற்று. கை, கால்களை அசைக்க முடிந்தது. கண்களைத் திறந்து பார்த்தேன். அதே நீல வெளிச்சம் ஜன்னல் வழியாக விழுந்து கொண்டிருந்தது.
இதயம் எப்படித் துடித்தது என்று அப்போது எனக்குத் தான் தெரியும்.
விழுந்தடித்துக் கொண்டு ஓடி, அப்பாவிடம் சொல்லி, நெற்றி நிறைய திருநீறு பூசி, அங்கேயே படுத்துக் கொண்டேன். பிறகு வரவில்லை.
இது தான் 'பேய்' என்று எனக்குப் புரிந்து போனது.
அப்புறம் கொஞ்ச நாளைக்கு அது போல் எதுவும் நடக்கவில்லை. ஆனால், ஜன்னல் மட்டும் நான் இரவில் தூங்கும் போது திறக்கவேயில்லை.
10-வது படிக்கையில், மீண்டும் 'அது' வந்தது.
எங்கள் பள்ளியில், பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும் , இறுதித் தேர்வு நேரங்களில் பள்ளியிலேயே இரவு தங்கி படிக்க அனுமதிப்பார்கள். வீட்டுச் சூழல் படிப்பைப் பாதித்து விடக்கூடாது என்பதற்காக.
அப்படி ஒரு நாளின் இரவு.
உட்காரும் பெஞ்சுகளை எல்லாம் இழுத்துப் போட்டு, ஒரு படுக்கை மாதிரி செய்து, அதன் மேல் பெட்ஷீட்டை விரித்துப் படுத்தேன். உஷாராக, எல்லா ஜன்னல்களையும் சாத்தி விட்டுத் தான். பிற மாணவர்கள் வெளியே படுத்துக் கொண்டார்கள். நான் ஏன் வெளியே படுத்துக் கொள்ளவில்லை என்று சரியாக நினைவில் இல்லை.
நினைத்துப் பாருங்கள்.
பெரிய வகுப்பறையில், நான் மட்டும் தனியாக. எல்லா ஜன்னல்களையும் அடைத்தாகி விட்டது. அறையின் விளக்குகள் எல்லாவற்றையும் அணைத்து விட்ட பிறகு, வகுப்பறையே முழு இருட்டில் மூழ்கியது.
கிராமத்துச் சூழலின் இரவுக்கே உரிய, சில்வண்டுகளின் ரீங்காரங்கள், எப்போதாவது கடக்கின்ற கரும்பு ஏற்றிய மாட்டு வண்டியின் சக்கரச் சத்தங்கள், தூரத்தில் தொடர்ந்து குலைத்துக் கொண்டேயிருந்த தெருநாயின் ஓலக் குரல், வெளி ஜன்னல்களின் இடுக்குகள் வழியே கசிகின்ற நிலவொளி...
ஏதோ கனவு கண்டு, முடிக்கும் போது, 'அது' பிடித்தது.
என்ன செய்வதென்றே தெரியவில்லை.
மீண்டும் போராட்டம்.
ஒரு நொடியில், சடாரென்று கயிறு அறுந்து, கண் திறந்தேன். மூச்சு பலமாக வாங்கியது. கண்களை மூடினாலோ, நெஞ்சு துடிக்கின்ற சத்தம், கண்களை திறந்தாலோ கருகும்மென்ற இருட்டு...
எந்த மூலையில் என்ன இருக்கின்றதென்றே தெரியவில்லை.
அடித்துப் பிடித்து ஓடி கதவைத் திறந்து வெளியே வந்து படுத்துக் கொண்டேன்.
ஏதோ இரவில் மட்டும் தான் 'அது' வரும் என்று நினைத்து விடாதீர்கள்.
ஒரு நாள் ,சனிக்கிழமை மதியம். 12:30க்கு மேல் இருக்கும். இன்னொரு நண்பனுடன் பஸ்பாஸ் எடுக்க ஐ.ஆர்.டி.டி. செல்வதாகத் திட்டம். அவன் வரும்வரையில், கொஞ்ச நேரம் கண் மூடலாமே என்று, கீழே படுத்தவாறு, சோபா மேல் காலைத் தூக்கிப் போட்டு, கண் மூடினேன்.
'அது' வந்து விட்டது.
பின், விடுபட்டவுடன் பார்த்தால், அவன் வந்திருந்தான். அவனோடு மதிய உணவு உண்கையில், இதைப் பற்றிக் கூறினேன். அப்போது, அவன் கூறினான். அவனுக்கும் இது போல் ஆவதுண்டு, இது உடலிலிருந்து வலி வெளியே போகின்றதென்று சொன்னான்.
வித்தியாசமாக இருந்த கருத்து.
பின்பொரு நாள், சுஜாதாவின் 'ஏன், எதற்கு, எப்படி' ஏதோவொரு பாகம் படிக்கையில், அவர் ஒன்று குறிப்பிட்டு இருந்தார்.
'பல பேருக்கு வருகின்ற இதற்கு பேர் 'அமுக்கான்'. இதற்கு காரணம், தூக்கத்தில் இருந்து விழிக்கும் போது , உடல் உறுப்புகளின் விழிப்பும், உள்ளத்தின் விழிப்பும் ஒரே நேரத்தில் நிகழ வேண்டும். அப்படித் தான் எப்போதும் நிகழும். அவ்வாறு இல்லாமல், இரண்டின் விழிப்புகளுக்கும் இடையில், மைக்ரோ செக்ண்ட் அளவில் இடைவெளி இருக்கும் போது, உணர்வு முதலில் விழித்துக் கொள்ளும். ஆனால் உடல் இன்னும் விழித்துக் கொள்ளாததால், நம்மால் உடலை அசைக்க முடியாமல் போய்விடுகின்றது' என்று கூறியிருந்தார்.
இந்த விளக்கம் தான் 'அது'வா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
பின் கல்லூரியில் சேர்ந்து, பசங்களோடு இருக்கும் அறைகளிலும், தனியறை கொடுத்த பின்னும், வேலையில் சேர்ந்த பின்னும், இன்னமும் கூட 'அது' அடிக்கடி வந்து அட்டெண்டென்ஸ் போட்டு விட்டுச் செல்கின்றது.
சிலசமயம், முயற்சிக்காமல் அப்படியே விட்டால் என்ன என்று சும்மா கை, கால்களை அசைக்க முயற்சிக்காமல் இருப்பேன். பின் கொஞ்ச நேரம் (மைக்ரோ செகண்டு தானோ ? நமக்கு தான் ரிலேட்டிவிட்டி தியரிபடி கொஞ்ச நேரமாகத் தோன்றுகிறதோ..?) கழித்து, பயம் வந்து முயற்சித்து விட்டு விடுதலையாவேன்.
எனக்கு என்ன சந்தேகம் என்றால், இது எல்லோர்க்கும் ஏற்படுகின்ற விஷயம் என்றால், ஏன் இது நாள்வரை அதைப் பற்றி ஏதும் நாம் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம்? இதனை யாராவது ஆராய்ந்து இருக்கிறார்களா?
நாம் முயற்சியே செய்யாமல் விட்டால், அதுவாகவே நம்மை விட்டு போய் விடுமா..? இதைப் பற்றி மருத்துவ வரலாறு என்ன சொல்கின்றது?
நம் பெரியோர்கள் இதைப் பற்றி ஏன் நம்மிடம் சொல்வதில்லை? 'அவனவனே அனுபவித்துத் தெரிந்து கொள்ளட்டும்' என்று விட்டு விட்டார்களோ?
இன்னும் புரியாத (எனக்கு) மர்மமாகவே இது இருக்கின்றது.
ஒருவேளை உயிர் பிரியும் போது, இப்படித் தான் இருக்குமோ? அதற்கான டெமோ தானோ, இப்படி வருவதெல்லாம்? இதைப் பற்றி சொல்லி வைத்தால், மனிதன் பயத்திலேயே உயிரை விட்டு விடுவான் (அப்போதும் இதே முறையிலா..?) என்று தான் பெரியவர்கள் மறைத்தார்களோ..?
ஒண்ணுமே புரியலப்பா.
'அது' பேயாகத் தான் இருக்க வேண்டும் என்று தான் இன்னமும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)