Tuesday, July 29, 2014

தீண்டாய்...மெய் தீண்டாய்.

குழலிலே மூச்சுக்காற்றைச் செலுத்தி ராகங்களைப் பிறப்பிக்கின்ற லாவகத்தைத் தீட்டிக் கொள்ளும் பயிற்சியாக இனிய மெட்டுகளுக்குப் புது வரிகள் எழுதத் தீர்மானித்து, இதோ.

'என் சுவாசக் காற்றின்' 'தீண்டாய்'க்கு ஒரு வடிவம்.

**

பூவாய்
மென் பூவாய்
பூவாய்
உடல் பூவாய்

குளிர் இதழ் ஒன்று கண்கள் மூடியதே
உள் அனல் கங்கை உள்ளம் மூட்டியதே
மடல் அகம் ஊறிப் புறம் ஏகி உயிர்த்திட்டதே (பூவாய்)

தளிர் இலைமேலே பூக்கள் தோன்றியதோ
பெண் சிலைமேலே ஜீவன் ஊன்றியதோ
விழி இடம் சென்று வலம் வந்து முகிழ்த்திட்டதோ (பூவாய்)

முதல் போர்வை பெண்மை கொள்ளும்
உடல் வேர்வை நம்மை உண்ணும்
பொழுதோடும் தேகம் உள்ளது

முதல் பார்வை முத்தம் கேட்கும்
முகத்தோடு முட்டிப் பார்க்கும்
முடியாமல் போகும் போர்க்களம்

தொலைவானக் காட்டின் மேலே
தொலை வான மேகம் போலே
என்னை உந்தன் கைகள் ஆளுவதோ?

தொலைவானக் காட்டின் உள்ளே
தொலைவோமே பிள்ளை போலே
மழை கொண்ட மேகம் மூளுவதோ?

தணலின் எழிலே எழிலே
எனை முழுதாய்க் கொள்க

பனியே நிழலே
என் வேகம் கொள்க (பூவாய்)

விளையாடிட நேரம் உண்டு
விளையாட்டில் கூடல் உண்டு
விளைவாக நம்மைச் செய்யவோ?

விளைகின்ற பூமி மேலே
விதைபோடும் வீரம் போலே
விருந்தொன்றை நீயும் கொள்ளவோ?

இலைமூடும் கூட்டுக்குள்ளே
இளம் ஜோடிக் கிளிகள் போலே
திரண்டோடித் திசைகள் சென்றிருப்போம்

இலைநீயும் இல்லை நானும்
நிலைசேர்ந்து ஜென்மம் யாவும்
தமிழ்தீர புதிய பாடல் பாடி வைப்போம்

கடலோ கடலில் நிலவோ
உன் உடலோ என்ன

சுழலோ தழலோ
நீ நுழைந்தால் என்ன (பூவாய்)

**