Saturday, May 23, 2009

நாஸ்டால்ஜிக் ரசிப்பு.1.

மூர்ஸ் விதியை மீறி மூர்க்கமாக தமிழ்ப் பதிவர்களின் எண்ணிக்கை எகிறிக் கொண்டிருக்கின்றது. இன்று எழுதும் பதிவுகள் அறுபது நொடிகளுக்குள் கவனத்தில் இருந்து, காணாமல் போய் விடுகின்றன. நடப்பு நிகழ்ச்சிகளை ஒட்டி எழுதப்படும் பதிவுகள் சம்பவச் சூடு அடங்கும் போது தாமும் அமுங்கி கரைந்து விடுகின்றன. தினச் செயல்பாடுகளைப் பதித்து வைப்பதற்காக எழுதினாலும், ஒரு நிரந்தரத் தன்மையை அதற்கு அளிப்பதன் மூலம் பதிவு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என்று நினைக்கிறேன்.

எழுத வந்த புதிதில் என்னை ஈர்த்த சில பதிவுகள் இன்னும் நெஞ்சுக்குள் ஒட்டிக் கொண்டிருப்பது, படித்தவர்களை விட, அவற்றின் கருத்து நினைவில் இருப்பது, எழுதியவருக்கு மகிழ்ச்சியைத் தரும்.

புதிதாக எழுத வந்துள்ளவர்களுக்கு என்னைக் கவர்ந்த சில அந்த நிலாக்காலப் பதிவுகளைச் சுட்டிக் காட்டுவது, இன்னும் செழுமையாக எழுத வைக்கும் என்பது தீரா நம்பிக்கை. இது முழுக்க முழுக்க என் கவனங்களுக்கு வந்தவையும், என் ரசனைக்குப் பிடித்தவையும் மட்டுமே!

சிலர் இப்போது, பதிவுலகில் முன்பிருந்த ஏக்டிவ்வில் இல்லை என்பது எனக்கு அவ்வப்போது திகிலூட்டுகின்றது. இந்த வரிசையைச் சாக்கிட்டு பழைய பதிவுகளைப் படிக்கும் இன்பம் பெற விழைகிறேன். இணையத்தின் சாஸ்வதத் தன்மையை ஷார்ட் டெர்மில் உணர முடிகின்றது.

மீனாக்ஸ்.

மீனாக்ஸ் பொறியியல் மற்றும் மேலாண்மை படித்தவர். 2007-ல் சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் நடந்த 'The Grand Tamil Bloggers Meet'-ல் இவரைச் சந்தித்தேன். 'இப்போதெல்லாம் ஏன் எழுதுவதில்லை?' என்று கேட்டேன். 'எழுத வேண்டும்' என்று சிம்பிளாகச் சொல்லிச் சென்றார். இவர் பதிவுகளில் எனக்குப் பிடித்தன :

http://thavam.blogspot.com/2005_02_01_archive.html

http://thavam.blogspot.com/2006/08/anecdote.html

http://thavam.blogspot.com/2006/11/blog-post_21.html

உச்சமான அருமை :: வருங்கால மனைவியை சந்திக்கப் போதல் - சில குறிப்புகள்

http://thavam.blogspot.com/2006/04/blog-post_21.html

http://thavam.blogspot.com/2005_06_01_archive.html

http://thavam.blogspot.com/2006/04/cognitive-seduction.html

Friday, May 22, 2009

மொக்ஸ் - 23.MAY.2K9.






னந்தபுரத்தில் இது என்ன வானிலை என்றே புரியவில்லை.

மே மாதம் உச்ச வெயில் இருக்கும் நேரங்களில் மழை கொட்டுகிறது. ஹனிமூன் படுக்கைகளில் போர்வைகள் போல் எப்போதும் மேகங்கள் கலைந்தே இருக்கின்றன. ஆளுயர வாழை இலைகள் எப்போதும் ஜில் பச்சையாக அசைகின்றன. நான்காவது கையாக குடையும் உடலோடு ஒட்டியிருக்கின்றது. குறுக்கும் முறுக்குமான கேபிள் வயர்களிலும், புணர்கின்ற சாரைப் பாம்புகளாய், ஆடையற்ற மின் லைன்களிலும் துளித்துளியாக ஓடிக் கொண்டேயிருக்கின்றது சாரல்கள். இருள் களையாத ஐந்து மணிக்கே மூட்டப்படும் ச்சாயாக் கடைகளில் கூட்டம் எப்போதும் இருக்கின்றது. மொட்டை மாடியில் சென்று பார்த்தால் தூரத்து மலைகளில் புகை சுழன்று சுழன்று எழுகின்றது. சாலைக் குழிகளையெல்லம் சமனப்படுத்தி பழுப்பு நீர் சேகரமாகிறது. ஜன்னல்களை இறுக்க மூடும் கே.எஸ்.ஆர்.டி.ஸி. பஸ்களில் கூரைகளின் பொத்தல்கள் வழி நீர்க்கோடுகள் உள் பாய்கின்றன. அவ்வப்போதைய மின்னல் இசைகளுக்கு வைப்பர்கள் ஓயாது தலையாட்டிக் கொண்டேயிருக்கின்றன. ரெயின் கோட்க்ளைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கின்றது. பூ போட்ட குடைகளின் கீழ் யூனிஃபார்ம் போடாத பூக்கள், ஜூன் அதற்குள் வந்து விட்டதை நினைத்து 'உச்' கொட்டுகிறார்கள். காற்றில் ஈர வாசம் அடிக்கின்றது. விடியற்காலையிலேயே மின் காற்றாடிகள் நிறுத்தப்படுகின்றன. கொஞ்சம் விட்டதும் 'இன்று புதிதாய் பிறந்தோம்' என்று ரீங்காரமிட்டு, பொட்டுப் பூச்சிகள் அறைக்குள் விர்ரடிக்கின்றன. யாரும் பறிக்காத மரங்களில் மாங்காய்கள் மேல் மழைத்துளி சறுக்குகிறது. வானை அளக்கும் பறவைகளின் கீச்கீச்சுவென்ற சிங்கிள் சைன் ஓசைகள் குட்டி ஹார்மானிக்ஸ்களுடன் எழும்புகின்றன. நாட்களில் லேசான சோம்பல் மிதக்கின்றது. மஞ்சள் கொன்றை பூக்கள் விஷுவோடு பொலிவிழந்து, இயல்புக்கு திரும்ப, பலாப் பழங்கள் உடலெங்கும் ஈரமாய் சரிந்திருக்கின்றன. வளைந்து வளைந்து மேலேறும் சாலைகளின் பக்கவாட்டுச் சரிவு வீடுகளின் சிம்னிகளிலிருந்து மெதுவாக புகை வந்து கொண்டிருக்கின்றது. ஏர்போர்ட் அருகே சின்னதாய் ஏதோ முஸ்லீம்கள் பிரச்னை என்று சடாரென இந்த செவ்வாய் ஹர்த்தால் நடத்தினார்கள். அது வேறு பேட்டை என, இந்தப்பக்கம் ஹாரனடித்து பஸ்கள் ஓட, கடைகள் மட்டும் அடைந்திருந்தன. ஈரக் கூந்தல் பறபறக்கும் மங்கைகள் பளிச்சென்றிருக்கிறார்கள். எது பேசினாலும் வாய் பொத்தி சிரிக்கும் பெண்கள் கண்களில் இயல்பாக ஒரு மை தேய்ந்திருக்கின்றது. வேகச் சக்கரங்கள் தெறிக்கும் சகதிக்கு ஒதுங்கிப் பாவாடை கொஞ்சம் தூக்கும் அந்த குட்டிப் பெண்ணின் பாதங்களில் கொலுசின் கீழ் பிங்க் செருப்பில் மிக்கி முகம் சிரித்திருக்கின்றது.

மழையில் நனைகின்ற எந்த ஊரும், எந்தப் பெண்ணும் அழகாய்த் தான் இருக்கிறார்கள்.

நேற்று ஒரு மாற்றமாக டெக்னோமாலில் இருக்கும் அம்ப்ரோஸியா சென்றேன், இன்னும் மூன்று நண்பர்களுடன். சர்வீஸ் செக்டார் இந்த நேரத்தில் செமத்தியாக அடிவாங்கியிருப்பது தெரிந்தது. பாஸ்கின் ராபின்ஸ் காலியாக இருந்தது. மேல் மாடி மாடர்ன் சலூனில் துணி போர்த்தியிருந்தார்கள். எப்போதும் கொஞ்சம் கூட்டம் தளும்பும் அம்ப்ரோஸியாவில் சிக்கன் வறுத்த மணம் மட்டுமே விரவியிருந்தது. கூல் டீ, ஃபிங்கர் சிப்ஸ், ஃப்ரெஞ்ச் சிக்கன் டிக்கி காம்போ 65 ரூவிலிருந்து சரேலென சரிந்து 40க்கு வந்திருந்தது. இருப்பதிலேயே விலை குறைவானது எது என்று பார்த்தால் ஃப்ரைட் எக், 10 என்றிருந்தது. கொஞ்சமாவது சாப்பிடுவோம் என்று பார்த்து 35க்கு சிக்கன் அண்ட் பட்டர் என்று ஆர்டர் செய்ய, 'கங்க்ராட்ஸ் சார்! நீங்கள் தான் இதை முதன் முதலில் ஆர்டர் செய்திருக்கிறீர்கள்' என்று திகிலூட்டினார்கள். 'செய்யத் தெரியும்ல?'. 'அதெல்லாம் கவலை நோ. கலக்கிரலாம்'.

ஏழரைக்கு மேல் கொத்துக் கொத்தாய் கேர்ள்ஸ் மட்டும் டேபிள்களை ஆக்ரமித்தனர். நாங்கள் மட்டும் தான் பசங்க! என்னென்னவோ ஆர்டர் செய்தார்கள். பர்கர் கடிக்கையில் சீஸ் துளிர்த்த உதட்டுக்காரி தனியாக வந்திருந்தாள். ப்ளூ ஜீன்ஸ், வொய்ட் டாப்ஸ் இளள், அநியாயத்திற்கு ஒல்லிக்குச்சியாக இருந்தாள். துப்பட்டா மறந்திருந்த குள்ளமான ஒருத்தி சிக்கிய ஒருவனிடம் சிரித்துப் பேசியே பிட்ஸா மேல் சாஸ் பிழிய, பர்ஸ் வேகமாக கரைவதை உணராத அவன், அவ்வப்போது எட்டிப் பார்த்து வியந்து கொண்டிருந்தான். ஐஸ்க்ரீம்கள் குப்பிகளை அவசர அவசரமாக காலியாக்கினார்கள். தங்களுக்குள் மெல்லிய குரலில் கிசுகிசுத்துக் கொண்டு பெரிய குரல்களில் வெவ்வேறு ஃப்ரீக்வன்ஸிகளில் சிரித்தார்கள். காதுகள் விடைத்த கைப்பைகளை பக்கத்து சேர்களில் கிடத்தியிருந்தார்கள். ஆர்.ஜி.பி. காம்பினேஷனே சொல்ல முடியாத வர்ணத்தில் வைத்திருந்த கர்ச்சீப்பில் வட்டமாய்க் கண்ணாடிகள் காட்டினார்கள். கேக், க்ரீம், சிக்கன் வகையறாக்களின் போட்டோக்கள் ஒட்டிய சுவர்களில் இருந்து கசியும் பீட் துடிக்கும் இசையின் வால்யூம் மட்டும் வழக்கத்தை விட குறைவாய் இருந்தது.

ரிஸஷன் காரணமோ..?

ட்டியே இருக்கும் டி.ஸி.புக்ஸ் சென்று ஏதாவது புது வரவாக இருக்கின்றதா என்று ஒரு நோட்டம் விட்டதில், சில பட்டன. ஆனால் விலை தான் 295 ரேஞ்சில் இருந்தன. அதெப்படி 295 என்று ஃபிக்ஸ் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. 100 ரூபாய்க்கு மிகாமல் ஏதாவது கிடைக்குமா என்று சுற்றிச் சுற்றித் தேடியதில், ஏற்கனவே வாங்கித் தீர்த்து விட்ட சேட்டன் நூல்கள் மட்டும் இருந்தன. இன்சார்ஜ் வந்து, 'சார்.. கடையைக் கல்லா கட்டணும்' என்று சொன்னார். பட்ஜெட்டை விட அதிகமாக வேண்டாம் என்று முடிவு செய்து, ஒரே ஒரு புத்தகம் வாங்கி விட்டு படித்துக் கொண்டே கழக்குட்டம் வந்து பஸ் ஏறி, எதிர்பாரா மழை விசிட்டில் நனைந்து, வீடு வந்து சேர்ந்தேன்.

வேர்ட்ஸ்வொர்த் எடிஷன்ஸ்காரர்கள் 'வேர்ட்ஸ்வொர்த் க்ளாஸிக்ஸ்' வரிசையில் அருமையான, படிக்க வேண்டிய புத்தகங்களை குறைந்த விலையில் வெளியிடுகிறார்கள். நான் பார்த்த போது கடையில் இருந்தன, டி.எஸ்.எலியட், ஜாய்ஸ், டிக்கின்ஸ், ஷேக்ஸ்பியர் (கம்ப்ளீட் வொர்க்ஸ்). 105 ரூபாய் போட்டிருந்தார்கள். எடுத்துக் கொண்டேன். ஜேம்ஸ் ஜாய்ஸின் 'டுப்ளினர்ஸ்'.

எழுதும் எல்லோர்க்கும் சொந்த ஊரைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருந்திருக்கின்றது. ஒன்றுமே பதியாத பளிச் ஸ்லேட் மனதில், வளரும் போது சந்திக்கின்ற முதல் ஆச்சரியங்கள், ஏமாற்றங்கள், அதிர்ச்சிகள், துக்கங்கள், மயக்கங்கள், தயக்கங்கள், பிம்பங்கள், அனுபவங்கள் சொந்த ஊரில் தான் படிகின்றன. கடைசி வரை அவை மறந்து போவதில்லை. மீண்டும் மீண்டும் வாழ்வில் இவைகளையே சந்திக்க நேரும் போதும், முத்தம் முதல் அனுபவ உணர்வுகளைத் தான் மறுபடியும் எழுப்பிக் கொள்கிறோம். பழகிப் போகத் துவங்குகின்றன. வாத்தியாரின் 'ஸ்ரீரங்கத்து தேவதைகளும்', ஆர்.கே.நாராயணனின் மால்குடி மனிதர்களும் அதைத் தானே சொல்கிறார்கள்! ஜாய்ஸின் 'டுப்ளினர்ஸும்' அவரது டுப்ளின் மக்களைப் பற்றிய கதைகளாக இருக்கின்றன என்பது சின்ன இண்ட்ரொடக்ஷனில் புரிந்தது. நேற்றிரவு தூறிய மழைக்கிடையில் 'தி சிஸ்டர்ஸ்' என்ற ஒரே ஒரு கதை தான் படித்தேன். முழுதும் படித்து விட்டு பிறகு எழுதுகிறேன். 'டுப்ளினர்ஸும்', ஏறத்தாழ சுயசரிதமான 'A Portrait of the Artist as a Young Man ' படித்து வைத்துக் கொண்டு தயாராவது, ஜாய்ஸின் மேக்னம் ஓபஸான 'உலிஸஸை' எதிர் கொள்கையில் கொஞ்சமேனும் உதவும் என்பதை சிலர் ஒத்துக் கொள்கிறார்கள்.

கரம் அமுதாவின் வெண்பா பதிவில் இட்ட ஒரு வெண்பாவை இங்கே ஒரு பதிவுக்காக எழுதி வைத்துக் கொள்கிறேன். 'உய்வதும் வாழ்வா உணர்.' என்று முடியுமாறு வெண்பா கேட்டிருந்தார்.

ரோட்டோரம் தண்ணிபோட்டு போனாரு முன்சாமி
'ஊட்டுலசொல் லிக்கினியா?' பஸ்காரர் - கேட்டாரு.
மெய்மறந்து நிற்கின்ற முன்சாமி, இப்படி
உய்வதும் வாழ்வா உணர்.

ணில்மாமா, கண்ணன், எழிலோவியம், அல்வா, கங்கணம், சித்திரக்குள்ளன், சோலைவனம், நங்கை, பேரொலி, லண்டன் முரசு, புள்ளி துளிப்பாவிதழ், டமாரம், சிவாஜி போன்ற சென்ற நூற்றாண்டின் ஆரம்பத் தமிழ்ப் பத்திரிக்கைகளைப் படிக்க வேண்டுமா..? பொள்ளாச்சி நசன் 'தமிழம்.நெட்' தளத்தில் இவற்றோடு இன்னும் பல பழைய நூல்களை மின்னூல் வடிவில் சேகரித்து வைக்கிறார்.

தமிழம் வலையில் நாள் ஒரு நூல் பகுதியில் வைக்கப்படுபவை அனைத்துமே இலவசமாக நம் மக்கள் வலை இறக்கிப் படிக்கவும், பயனபடுத்தவும் தான்.

தமிழில் வெளி வந்த அனைத்து நூல்களையும், இதழ்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு இலவசமாக, எளிமையாகக், கிடைக்கும் வகையில் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

இந்த வகையில் உதவும் அனைவரையும் நான் அன்போடு வணங்குகிறேன்.


என்கிறார். இவரை நான் மரியாதையோடு வணங்குகிறேன்.

நாள்-ஒரு-நூல்.

ரொம்ப நாளாகத் தேடித் தேடி ஒரு நல்ல தளம் கண்டுபிடித்தேன். பார்க்கின்ற, யதேச்சையாக கேட்கின்ற ஆங்கிலப் பாடல்களை இலவசமாக இறக்கிக் கொள்ள! எங்கெங்கோ தேடியும் கிடைக்காத 'சினிமா பாரடைஸோ' தீம் இசை இங்கு தான் கிடைத்தது.

Akon - Lonely ::

- - akon - lonely
Found at bee mp3 search engine


இங்கே :: தேனீ கேட்கும் இசை.

ங்கள் அலுவலகம் இருக்கும் பில்டிங் வாசலில் ஒரு பெண் இப்படி நின்று கொண்டிருந்தால், எழுத்துக்கள் ஏன் இவ்வளவு கிளுகிளுப்பாய் வராது...?

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!

சிவராமன் என்ற புனைபெயர் வைத்திருக்கும் பைத்தியக்காரன், அதிகாரத்தின் உரையாடலைத் தகர்க்கும் உத்தேசத்துடன் தொடங்கியிருக்கும் 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' என்ற மையமற்ற தொகுப்பு, கைக்காசைப் போட்டு ஒரு சிறுகதைப் போட்டி நடத்துகின்றது. 20 கதைகளுக்கு 30K தருகிறார்.

கோதாவில் குதித்து எழுதத் துவங்கும் முன்பாக, சிறுகதை பற்றியும், அதை எழுதுவது பற்றி அனுபவசாலிகள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றும் கொஞ்சம் தெரிந்து கொள்வது அதிகாரத்தின் உரையாடலைச் சுக்கு நூறாக உடைத்து நொறுக்கி ஊதித் தள்ளிவிடும் என்பது கார்க்கி மேல் சத்தியமாதலால் ('பேட்டி என்பது பலகாரத்தைத் தின்று கொண்டே உரையாடல் அல்லவா?' எனக் கேட்கும் அர்ஜூனனின் கேள்விக்கு கிருஷ்ணன் சொன்ன பதில் என்னவாக இருக்கும்?), சில கண்ணிகள் ::

ஜெயமோகன் சொல்கிறார் ::

சிறுகதையில் என்ன நடக்கிறது?
சிறுகதை ஒரு சமையல்குறிப்பு

யெஸ்.பாலபாரதி சொல்வது ::

ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?

திண்ணையின் இலக்கியக் கட்டுரைகள் பகுப்பில், சில நல்ல கட்டுரைகள் வரையறை செய்கின்றன.

சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)
சிறுகதை - அதன் அகமும் புறமும் - சுந்தர ராமசாமி
அறிவியல் புனைவுகள் - ஓர் எளிய அறிமுக வரலாறு - அரவிந்தன் நீலகண்டன்
படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம் - இந்திரா பார்த்தசாரதி
'கதைச்சொல்லி'யும், கதையும் - கே. ராமப்ரசாத்.
சிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும் - எஸ்.ஷங்கரநாராயணன்
கதை சொல்லுதல் என்னும் உத்தி - தேவமைந்தன்

வே.சபாநாயகம் ஒரு 40 பேரின் குறிப்புகளைத் திண்ணையில் தொகுத்திருக்கிறார். என்ன சொல்கிறார்கள் கீழ் வருபவர்கள்..?

தேவன்
தி.ஜானகிராமன்
சுஜாதா
லா.ச.ராமாமிர்தம்
கி.சந்திரசேகரன்

அகிலன்
தி.ஜ.ரங்கநாதன்
கு.ப.ராஜகோபாலன்
இந்திரா பார்த்தசாரதி
த.ஜெயகாந்தன்

சி.சு.செல்லப்பா
க.நா.சுப்ரமண்யம்
புதுமைப் பித்தன்
அ.ச.ஞானசம்பந்தன்
ஜெயமோகன்

தொ.மு.சி.ரகுநாதன்
வி.ஆர்.எம்.செட்டியார்.
வாசந்தி
அசோகமித்திரன்
கி.ராஜநாராயணன்

மகாகவி பாரதியார்
எம்.டி.வாசுதேவன் நாயர்
அகஸ்தியன்
ந.பிச்சமூர்த்தி.
ந.சிதம்பரசுப்பிரமண்யம்

ரா.ஸ்ரீ.தேசிகன்
லியோ டால்ஸ்டாய்
மாப்பசான்
பி.எஸ்.ராமையா
விந்தன்

பேராசிரியர் கல்கி
ஹெப்ஸிபா ஜேசுதாசன்
அனுராதா ரமணன்
பிரபஞ்சன்
தாலமி

ச.து.சு.யோகி
கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)
மாக்சிம் கார்க்கி
ராஜாஜி
சாலை இளந்திரையன்

இவர்களையெல்லாம் படிக்காமலும் அற்புதமான சிறுகதைகள் வருகின்றன. முடிந்த அளவிற்கு படித்துப் பார்க்கலாம்.

போட்டியில் கலந்து கொள்வனவற்றில் ஒரு நல்ல சிறுகதையாவது இவற்றைப் படித்துப் பார்த்து வந்தால், இப்பதிவிற்குச் செலுத்திய உழைப்பு வீணில்லை என்று மகிழ்வேன்.

***

இன்னும் கொஞ்சம், நாளை வேறொரு பதிவில் எழுதுகிறேன்.

***

போட்டிக்குத் தொடர்பு :
சிறுகதைப் போட்டி: 20 கதைகளுக்கு தலா ரூ. 1,500 பரிசு

பைத்தியக்காரன் : 9840907375
(சென்னை நம்பர்.)
sivaraman71@gmail.com

Thursday, May 21, 2009

என்ன செய்யலாம்...?

ண்பர் ஒருவருடன் நடத்திய இணைய உரையாடலை ஆங்காங்கே வெட்டி நட்சத்திரங்கள் இட்டு, பதிவாய்ப் போட்டதற்கே ஒருவர் வந்து திட்டி விட்டுப் போனார். அதற்கு பதில் சொல்வதில் அர்த்தமில்லை. அவரது மனக் குமுறல்களைத் தாங்கிக் கொள்கிறேன். நான்/நாங்கள் அப்படிப்பட்ட நிலையில் தான் இங்கு இருக்கிறோம்.

எனக்கு உங்கள் துயரங்கள், கலவரங்கள், கவலைகள், வலிகள் தெரியாது. உங்களது மண் பிரிந்த நிலைமையில் நான் இருந்ததில்லை. அறுபது வருட ஈழப் போராட்டத்தின் இறுதி என்று எதிரிகள் குதூகலிக்கும் போது, இது இறுதி அல்ல என்பது எனக்குப் புரிகின்றது. உங்களுக்கு அறிவுரை கூற எனக்குத் தகுதியில்லை. சில கருத்துக்கள் மட்டும் எழுத விரும்புகிறேன்.

1. அந்தப் பதிவில் சொன்னது போலவே எனக்கு தமிழீழத் தலைவர் கொல்லப்பட்டார் என்பதில் நம்பிக்கையில்லை. அவர்கள் காட்டிய படங்கள் போலியானவை என்பதும் தெளிவாகத் தெரிகின்றது. அவராக வந்து தாம் உயிர்த்திருப்பதைச் சொல்லும் வரை நான் நம்பப் போவதில்லை.

2. ஒரு முக்கியமான கருத்தை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இனிமேலாவது எங்களை நம்புவதை நீங்கள் விட்டு விட வேண்டும். எங்களால் உங்களைப் பற்றி, இது போன்ற மீச் சிக்கலான தருணங்களில் அஞ்சலிக் கவிதையை, வருத்தப் பதிவை, சோகப் புலம்பலைச் சொல்லி எழுதத் தான் முடியுமே ஒழிய, ஒரு துரும்பை இங்கிருந்து அங்கு நகர்த்த மாட்டோம். எங்களை தொப்புள் கொடி உறவு, ஒரே ரத்தம் என்றெல்லாம் சொல்வதில் அர்த்தம் இல்லை. எத்தனை உணர்ச்சி வசப்பட்டாலும் இது தான் இப்போதைய நிதர்சனம்; யதார்த்தம். இதை முதலில் உள் வாங்கிக் கொள்ளுங்கள்.

எத்தியோப்பிய தேசத்தின் அருகில் இருக்கும் ஓர் ஆப்ரிக்க நாட்டினரிடமிருந்து எத்தகைய தார்மீக ஆதரவை எதிர்பார்ப்பீர்களோ அதே அளவில் மட்டும் எங்களிடமிருந்து எதிர்பாருங்கள். அதையும் கொடுப்போமா என்பது சந்தேகமே!

இது உங்கள் மண்ணுக்கான சுதந்திரப் போராட்டம். இதை நீங்கள் மட்டுமே வென்றெடுக்க முடியும். நீங்கள் மட்டுமே!

3. நூற்றாண்டு நூற்றாண்டுகளாக ஒவ்வொரு தேச மக்களாலும் அடித்து துரத்தப்பட்ட யூதர்கள் தனிநாடு பெற்றது எப்படி..? ஆயிரம் சர்வதேசக் காரணங்கள் அமைந்து கொடுத்தன என்றாலும், ஆதாரம், யூதர்கள் கைவிட்டிராத நம்பிக்கை தானே..?

சுற்றிலும் இருக்கும் எரி எண்ணெய் வளத்திற்காகத் தான் இஸ்ரேலுக்கு மேற்குலகம் ஆதரவு தந்து வருகின்றது என்பது எல்லோரும் அறிந்தது. எண்ணெய் வளம் வற்றத் தொடங்கியதும், இஸ்ரேல் தேவையில்லாமல் போய் விடும் அபாயம் இருக்கிறது.

ஈழ மண்ணில் என்ன இருக்கின்றது? எண்ணெயா? எரி வாயுவா..? தங்கமா..? எதுவும் இல்லாவிட்டாலும் சிறப்பான மற்றொன்று கிடைக்கின்றது.

உலகின் எந்த இனத்திற்கும் குறையாத அறிவு வளம் கொண்ட தமிழினம். தமிழ் மனிதர்கள். தமிழ் மூளை.

இப்போது துவங்கியிருக்கும் நூற்றாண்டு, தகவல் நூற்றாண்டு. கட்டற்ற அறிவின் காலம். இத்தனை காலமாக சாதி, சமயம், பொருளாதார அடுக்குகள், அடிமைத் தொழில் என்று அத்தனை பிரிவுகளாலும் பிரிந்து கிடந்த அறிவுப் பரவல் இன்று எல்லோர்க்கும் கிடைக்கின்ற காலம்.

படிக்க வையுங்கள். நீங்கள் எந்த தேசத்தில் சென்று சேர்ந்தாலும், எந்த பிழைப்பு பிழைத்தாலும் படிக்க வையுங்கள். உங்கள் பிள்ளைகளை; உங்களுடனே அந்த நாட்டில் வந்து சேர்ந்த மற்றொரு ஈழத் தமிழனின் குழந்தைக்குப் படிப்புத் தாருங்கள். உங்கள் பிள்ளையை மருத்துவத்திற்கு படிக்க வைத்தால், அவனை வெல்டருக்காவது படிக்க வையுங்கள்.

இலக்கை அடையும் வரை பிழைத்திருக்க வேண்டும்; அதற்கு உழைக்க வேண்டும்; அதற்கு படித்திருக்க வேண்டும்.

எந்த ஜாதியோ, எந்த மதமோ, என்ன நிறமோ, தமிழன் என்ற கூட்டுக்குள் அணைத்துக் கொள்ளுங்கள். இத்தனை நாளில் என்னென்ன வேறுபாடுகள் கண்டீர்களோ, அத்தனையையும் கொஞ்சம் கொஞ்சமாகவாவது குறைத்துக் கொண்டு ஒன்று சேருங்கள்.

எங்கெங்கு சிதறிப் போயிருந்தாலும், எப்படியெப்படியோ சீவித்திருந்தாலும், அந்த கனவைக் கைவிட்டு விடாதீர்கள்.

அந்த கனவு...! நெருப்பில் எரிகின்ற கனவு..! உங்கள் தூக்கத்தில் வந்து திடுக்கிடச் செய்யும் அந்த கனவு. அதை அணைத்து விடாதீர்கள். நீங்களே அதை விட்டு விட்டால், அந்த கனவு எங்கே செல்லும்?

தமிழைக் கற்பியுங்கள். எங்கள் 'பண்ணி'த் தமிழை அல்ல; உங்கள் தமிழை! சிங்களம் கற்கச் செய்யுங்கள். என்றைக்கிருந்தாலும் அண்டை நாடாக வாழப் போகிறவர்கள் அல்லவா? அதற்காகக் கற்கச் செய்யுங்கள்.

நீங்கள் இன்று இருக்கும் நிலையை விட, உங்கள் பிள்ளை இன்னும் உயர்வான்; அவன் பிள்ளை இன்னும் உயர்வான். அவன் பிள்ளை இன்னும்...!!

ஒரு நாள் வரும். உங்கள் தலைமுறைகள் அதிகாரத்திற்கு நெருக்கமாகவோ, ஏன்.. அதிகாரத்திலோ இருக்கும் நாள் வரும். வந்தே தீரும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் யூதர்களுக்கு வரவில்லை..? அப்போது உங்கள் மனதில் அணையாத கனவை நிறைவேற்றுங்கள்.

ஜெருசலம் காக்கப் போரிட்ட யூதர்களுக்குத் தெரியுமா இஸ்ரேல் கிடைக்கும் என்று..? ஆனாலும் அவர்கள் நம்பினார்கள்.

உங்கள் காலத்தில் கிடைக்காமல் போகலாம். உங்கள் பிள்ளை காலத்தில்... அவனுக்கு அடுத்து...உங்களது ஏதோ ஒரு கொள்ளுப் பேரன் காலத்தில் உங்கள் பூமி, உங்கள் மண் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.

அப்போது நீங்கள் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் விதை நீங்கள் போட்டது.

நீங்கள் ஒவ்வொருவரும் போராளி ஆகுங்கள். நிலம், போர்க்களம் ஆக வேண்டாம். உங்கள் மனம், களம் ஆகட்டும்; உங்கள் வாழ்க்கை நிலை, சமர் ஆகட்டும்; உங்கள் இப்போதைய பொருளாதார நிலை, உங்கள் எதிரி ஆகட்டும்; கல்வி, அறிவு கொண்டு உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்.

பணத்தால் அடியுங்கள்; இன்று உங்களைக் கண்டும் காணாமல் போன நாடுகளை அறிவால் வெல்லுங்கள்; துரோகம் செய்த நாடுகளைத் தூசியாக எண்ணித் தாண்டிப் போங்கள்.

என்றாவது உங்கள் மண்ணை அடைந்து வெற்றிக் கொடி ஏற்றி வாழ்ந்து காட்டும் போது, இக்கரையில் இருந்து எட்டிப் பார்க்கும் எங்களைப் பார்த்துப் புன்னகையுங்கள்; கையாலாகாதவர்கள் சந்தோஷப்படுவோம்.

4. தமிழகத் தமிழர்களாக நாம் சில செய்யலாம். நாடு பெயர்ந்தவர்களில் தமிழகத்திற்கு வந்தவர்கள் நிலை தான் மிகவும் கடினமாக இருப்பதாக அறிகிறோம். அவர்களுக்குப் படிப்பறிவும், குறைந்த பட்சத் தொழில் நடத்தும் அறிவும் இந்திய அரசியல் அமைப்பிற்கு உட்பட்டு கற்பிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். அகதிகள் (மன்னிக்க!) சட்டத்தில் என்ன சொல்லி இருக்கின்றது என்று பார்த்து, அதற்கு உட்பட்டு என்ன செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். தனி ஆளாகச் செய்வதை விட, ஒரு என்.ஜி.ஓ. என்ற வகையில் ஈடுபடுவது குறைந்த பட்சமாகவாவது முன் நகர உதவும் என்று நினைக்கிறேன்.

5. இலங்கைப் பிரச்னை தான் தீர்ந்து விட்டது என்று சொல்லிக் கொள்கிறார்களே, இனியாவது சிங்கள் ராணுவம் நமது ராமேஸ்வர, நாகை மீனவர்களைக் கண்டதும் சுடாமல் இருக்கின்றதா என்று பார்ப்போம். சர்வதேச மீன்பிடி எல்லையைத் தெளிவாக வகுக்கிறார்களா என்று பார்ப்போம். இந்தியாவும், இலங்கையும் தான் இப்போது நேச நாடுகளாகி இருக்கிறார்களே!

6. ஈழத்திலேயே இருக்கின்ற புலம் பெயராத மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கும், அவர்களது இடங்களுக்கே திரும்பச் சென்று வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் இந்திய அரசு என்ன செய்ய முடியும், எந்த வகையில் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க முடியும் என்று பார்க்க வேண்டும்.

7. மிகச் சிறிய அளவாயினும் செய்யக் கூடியவற்றைச் செய்யாமல், 'காலம் வரும்', 'இறைவனை வேண்டுகிறேன்', 'கண்ணீர் வருகின்றது' என்றெல்லாம் சொல்லி விட்டு ஒரு புல்லைக் கூடப் பிடுங்கிப் போடாமல் இருப்பதற்குப் பொத்திக் கொண்டு போகலாம். காலமும் வராது; இறைவனும் வர மாட்டான். நாம் தான் செயல்பட வேண்டும்.

***

இதுவரை எழுதிய அத்தனையும் சுத்த பேத்தல்களாக உங்களுக்குத் தெரியலாம். மனதில் தோன்றியவற்றை எழுதி வைக்கிறேன். சொல்லத் தோன்றியது; சொல்கிறேன். அவ்வளவு தான்.

நன்றிகள்.

Monday, May 18, 2009

Today's Chat.

ன்று இரவு இலேசான மொக்கைகளுடன் துவங்கிய ஓர் உரையாடல் வேறு திசையில் வளர்ந்து கீழ்க்காணுமாறு ஓடியது.

***
***
***

11:00 PM Happy: appuram prabhakaranai norikkiduchu pola Sri Lanka?
me: innum sure news varalai...
i dont beleive indian media..
11:01 PM waiting for internaional media reports...
Happy: yes da.. not sure why international media are not reporting...
indian media has such low credibility in our eyes!!!
11:02 PM I also dont believe shit ndtv, cnn ibn etc
me: indian media has lots of politics issues...
Happy: what cnn ibn says, even cnn is not saying!!!
me: thats the point...
11:03 PM Happy: now CNN is reporting tamil tiger leader killed
me: link kudu...
have ssen
11:04 PM Happy: http://edition.cnn.com/2009/WORLD/asiapcf/05/18/sri.lanka.conflict/index.html
11:05 PM me: they also refer srilankan govt's report... the sinhalese govt killed prabhakaran many times before during war times...
they have to allow UN team then only we can get authenticated news..
Happy: hmmm yeah but there is no other way to verify
11:06 PM i wont be surprised if prabhakaran is roaming around and shopping nethili meen in saidapet tomorrow!!
me: i think (hope) prabhakaran has to escape from the land and continue fighting like subhash chandra bose..
11:07 PM Happy: but prabha is a terrorist... he didn't mind killing even tamil leaders, other supporters...
dont compare him with netaji
me: yes... TN once was a safer land for tigers.. ******... so now TN is not a better place for tigers...
11:08 PM there is a big history behind the eelam struggle. it started from when british gave freedom to sri lanka..
Happy: Tamil Eelam is a dream.
11:09 PM we should stop asking for it, or else Pak will ask Kashmir, China will ask Arunachal etc
me: yes... until all the tamilians are getting divided by caste, religion and political parties...
it is a dream...
Happy: see how many ppl voted for Tamil eelam supporters like Vai Ko, PMK etc? ALL LOST
11:10 PM So Tamil Eelam is not an election issue in TN, at least I am happy for this
See SL is a sovereign nation, whose HDI is far higher than India.
me: PMK lost is a happyfull event.. not for their eelam stand but other factors r there..
11:11 PM Happy: *********
me: now the TN ppl starts a new tradition in voting. getting money. it becomes a direct C2C business.
11:12 PM Happy: but if everyone gives money who will they vote for?
me: but one day we know why tamil eelam is not formed,....but at that time chinese will occupy us from north, by supporting PAK from west and SL from south..
11:13 PM Happy: hahah athis is also a dream
Pak wont exist in next 3 - 5 years
me: SL never never our friend..
Happy: Talibans will eat Pak
SL is always dependent on us..
me: during our wars with PAK and china, it supports them..
11:14 PM Happy: do you know they have permitted Bharti to setup mobile operations there? which enemy will let another enemy in business? Bharti has invested $200 m in SL
me: ios bharti an INDIAN company..
indian govt company..?
11:15 PM Happy: No. SL doesn't support anyone, because it is helped by all, India, Pak and China.. it;s because of India not helping them at sometime, they went to Pak and China for help
Bharti is a private company but Indian only
me: it is a business. like IPL named but played in RSA...
there is no sentiment in it.. only money...
Happy: exactly who cares for sentiment...
11:16 PM me: plz check the history... they allowed air flights to get fuelled during wars..
Happy: who is contributing for development in TN and other places in India? Is it Punjabis, Gujratis, Marathis or Sri Lankan Tamils?
me: what im saying is allowing bharti doesnt mean they love india...
Happy: so what, we permitted Saddam Hussein at times to use our country since he was Indira's friend
11:17 PM allowing bharti means they dont hate India too.
Do you know Chinese and Pakistani firms are not allowed to do business in India in crucial sectors like telecom? If SL has permitted us in telecom, that means it doesn't hate us
me: finally the genocide of tamils in SL is coz of an italian lady's revenge...
11:18 PM Happy: foreign policy is a very complex issue which India has mastered in the past 60 years. Our country NAM is a great idea.
me: yes thats y it is truggling to keep kashmir and AP for the last 62 years.. great foreign policy...
Happy: we can do nothing for what is happening in SL because it's a different country
11:19 PM me: then y india played a different game in forming bangladesh...
Happy: if it had been someother country, either it would have gone to many wars or lost both kashmir or AP... since it's India, we are able to freely discuss all this, as well as criticise govt
me: then y india paid money and troops and support to SL...
Happy: India didnt play any game in Bangladesh.. it just strategically helped Mukthi Bahinis
11:20 PM me: then y it should not do the same to tigers..?
Happy: everything is foreign policy strategy. strategic diplomatic leverage, they call it
me: technical terms...........which are killing them.....
Happy: becos tiger dont have legitimacy, not elected by people, didnt fight in elections, didnt use democratic methods.
11:21 PM unlike rajapaksa who was overwhelmingly voted to power by sri lankans
so rajapaksa has legitimacy to do what sri lankans want to do..
me: if we do the same thing will the center govt help us too...
what exactly the dravidian ppl did on 60s...
Happy: do you get the difference why we cant compare a legitimate state army with a rogue terrorist group?
11:22 PM me: for what behru replied 'nonsense'...
Happy: r u referring to anti-hindi protests?
11:23 PM me: no. 'dravida naadu' movement...
u told : we can do nothing for what is happening in SL because it's a different country...
Happy: if dravida nadu had been formed, we would have been worse than sub saharan africa
me: check the SL govt sites. in their parliment the sinhalese ministers thanked for indian support.
11:24 PM thats may be possible... coz of our saakkadai leaders...
11:25 PM Happy: we are one with this sub-continent and we cant deny the shared history we have with other Indians..
me: so u told tigers and hizbulla are to be treated in the same scale..?
Happy: yes, India supports SL in its anti-terrorist activities, what is wrong?
tigers, hizbollah, talibans, all are illegitimate *** *** ***
11:26 PM sorry for those harsh words, but I feel that
precisely because they are not following democratic methods for their so-called freedom movement
me: so u beleive that after tiger's demise, the sinhalese govt will give equal rights to tamils there..?
11:27 PM now they started the killing of tamils who resided in Colombo now...
11:28 PM Happy: I dont care what sinhalese govt does or not because 1) As an Indian, my civil liberties and rights end in Indian borders 2) I am not a Human Rights activist to worry about what is happening across the world 3) I see homeless, food-less, water-less almost-dead beggars every day and want to solve their problems first before worrying about what is happening to fellow human beings who live hundreds or thoudands of kms away from me
my first priority is my locality, society, city, state, country and then comes the world
11:29 PM I dont have power cut for 2 hours every day. I have to fight for resources here everyday. I want to solve that first
me: I DIDNT EXPECT THIS WORD FROM A MAN WHO SUPPORTS FREE TIBET MOVEMENT...
11:30 PM Happy: Only westerners who have earned everything become human rights activist. It is not for poor Indians like us to think of all those things
Tell me if there is EVEN ONE Tibetan terrorist on Earth.
Dalai Lama is the most peaceful person on Earth and not even one Tibetan has killed anyone else while Chinese men kill anti-Chinese people
11:31 PM me: so u support until one will do ahimsa methods, but if they start the other way u get back ur supports?
Happy: that is where lies democratic and undemocratic methods of protests... dont you see why everywhere Tibet movement has support whereas people hate LTTE, Hezbollah etc?
11:32 PM me: so u still beleive ONLY Gandhi's methods got freedom and not bhagat, nethaji, bharathi, VOC's methods..
then no way i can discuss...
Happy: not about ahimsa, imsa etc.. it should not end up in death of civilians or people not involved in the issue
As I told you not about ahimsa or himsa... it's about how one goes about protesting
11:33 PM SL is a free democratic nation. Prabhakaran could have got elected as HR activist of SL and talked across the world about so-called discrimination in SL... why didnt he do that?
me: first we have to read the entire hisory of SL then we can come and discuss... i wish for that. but if u told 'first i think abt my locality then home then street, then town....' then y u worry abt whether prabhakaran died or not.. it doesnt affect ur street's powercut.. right..?
11:34 PM Happy: first i need to have power to check the news!!!!
and then I need pure water to drink and digest the news!!
and then good roads to go to places to protest [in case I want to]
11:35 PM me: then please focus on them first.. dont worry abt prabhakaran... thats what i want to mention...:)
Happy: obviously.. focussing on them... !!
11:36 PM me: so then we wil discuss abt which is the last time the mosquito van come to ur street..?
tell me..
we will discuss on it first..
11:37 PM once our mother nation becomes shining then we will talk abt our neighbours...
if they exist until then!
Happy: then we will never talk about neighbours hahahha
me: thats true as bru...
11:38 PM Happy: but i hope this time there woudl be better reforms because there is no left
me: so india itself has this much problems in its hand why to support other independent soverign country's terrorist activities.,..
Happy: anti-terrorist activities
11:39 PM me: yes the same
11:40 PM Happy: if Indian army fights against Kashmir terrorists will you call it India's terrorist activity or anti-terrorist activity?
11:41 PM me: so u compare india's its own anti-terrorist activities in kashmir and supports to another soverign, independent country's anti-terrorist activities..?
so when bangladesh formation war period, kashmir is in pure peace..?
Happy: no comparison.. trying to see similarities in ALL NATION STATES' anti-terrorist activities.
11:42 PM me: then y it doesnt send army to Israel since it is also fighting against Palestine terrorist groups..?
Happy: do you know Israel trains Indian army and armed forces?
me: y this reverse activity?
Happy: Always the better army trains the other weakers ones, that is why we train SL army
11:43 PM me: Fantastic...
Happy: and we receive training from Israelis... israelis are superb in anti-terrorist activities
Israelis have developed best techniques, both using machines and men...
11:44 PM but Israelis also learnt from Indian army how to fight in heights like Siachen etc since Indian army has mastered that art
seri romba nera achcu... lets discuss this later some weekend...
am going to sleep :|
me: ok daa..
me 2..
can i post our chat in my blog..?
11:45 PM Happy: oh please, its my pleasure to figure in your blog :)
me: Tnx buddy...

***

உறுதியாகச் செய்தி தெரியும் முன்பாகவே அஞ்சலிக் கவிதைகள், பதிவுகள் எழுதி செய்திகளை முன் சொல்லும் பதிவர்கள் கொஞ்சம் பொறுமை காக்கலாம். கொழும்பிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் முகத்தையாவது காட்டட்டும் அவர்கள்.