Monday, February 26, 2007

கல்கி பதில்.

கே.ஜி.எஃப்.சி.பழனிச்சாமி, கிழக்குத் தாம்பரம்.

கே. தமிழக மக்களிடையே காணப்படும் மிகப்பெரிய மூட நம்பிக்கை எது?

கல்கி பதில். இலவசங்கள்! இலவசங்கள் மூலம் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற நம்பிக்கை. இலவசங்களுக்கு மயங்கி வோட்டுப் போடும் அவலம்.
( நன்றி: கல்கி இதழ். 04.மார்ச்.2007. பக்கம்:10)

ஜன நாயகவாதிகளாய் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்துள்ள தமிழ் மக்கள் அனைவரையும் சற்று சிந்திக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 'தி.மு.க. கூட்டணி அரசு அமையக் காரணமாய் இருந்தவர்கள் அனைவரும் இலவசங்களைக் கேட்டுத் தான் ஓட்டுப் போட்டார்களா..? முந்தைய அரசின் நடவடிக்கைகளால் வெறுத்துப் போனவர்களும், 'சப்பாத்தியை மாற்றிப் போடு' என்ற மொழியின் மேல் நம்பிக்கை கொண்டவர்களும் இந்தக் கூட்டத்தில் இல்லையா..?

என்ன சொல்ல வருகிறார்கள் இவர்கள்.?

உன்னோடு...!


ன்னோடு கொஞ்சம்

பேச வேண்டும்,

கிடைக்குமா தனிமை?

நீயும், நானுமற்ற தனிமை!


பேச்சில் கொஞ்சம்

பருக வேண்டும்,

இருக்குமா வெறுமை?

வார்த்தைகளும், வசனங்களுமற்ற

வெறுமை!


வெறுமையில் கொஞ்சம்

வசிக்க வேண்டும்,

அமையுமா இனிமை?

ஆசைகளும், ஓசைகளுமற்ற

இனிமை!


தனிமையில் கொஞ்சம்

தரிக்க வேண்டும்,

தகையுமா மெளனம்?

சப்தங்களும், அமைதியுமற்ற

மெளனம்!


எழுதியது : 02.Mar.2004