Thursday, August 07, 2008

பாவ் குட்டியோடு ஒரு வஜனம்.

சிந்தாநதியின் பாவனா கவுஜ/வஜனப் போட்டிக்காக எழுதிய வஜனம் ::



"ஹாய் பாவ்.."

"ஹாய்டா..!"

"அதிகாலையில் இருந்து தண்ணீரில் நீ நிற்கலாமா? தண்ணிக்கே ஜல்பு பிடிச்சுற போகுது..!"

"ரொம்ப Ice வைக்காத..!"

"என்கிட்ட இருக்கறதே ரெண்டு Eyes தான்! அதை தான் உன் மேல ஆல்ரெடி வெச்சிட்டேனே..!"

"சரி..! நான் அதிகாலையில் இருந்து நிற்கிறேன்னு உனக்கு எப்படி தெரிந்தது..?"

"விடிகாலையில் வானம் நீல நிறமா இருந்தது. அது அப்படியே மெல்ல மெல்ல குளத்தில் படர்ந்தது. நீ வந்து நின்ற உடன் உன் ஆடையில் ஏறி.. இப்போது குளம் நீல நிறத்தை இழந்து விட்டது.. உன் உடைகள் மட்டுமே நீல நிறமாய்..!"

"ஸ்...!"

"அது மட்டுமா? உன் நீல வளையல்களைப் பார்த்து தான் கொஞ்சமாய் குழம்பி, கிறங்கி ஐன்ஸ்டீனும் வானம் வளைவானது என்று சொன்னார் போலும்!"

"அவரை ஏண்டா இங்க கொண்டு வர்ற? ப்ளூ கலர் ட்ரெஸ்ல ஏறுவதற்கு முன்னாடி என் ட்ரெஸ் என்ன வொய்ட் கலர்லயா இருந்தது?

"சந்தேகம் என்ன? தேவதைகள் எல்லாம் வெள்ளை நிற ஆடைகள் தானே அணிந்திருப்பர். சரி! அது என்ன கையில் ஐந்து தலை பாம்பு?"

"ம்..! உன்னைப் போன்ற ஜொள்ளர்கள் வந்தால் தீண்ட விட..!"

"ஓ..! அப்படி எனில் ஒரு கவிதை சொல்லி விட்டு ஓடி விடுகிறேன்.."

"சொல்லு! பார்க்கலாம்..!"

"சூரியனைச் சுற்றி வட்டமாய் புயல்கள் இருந்தால், அங்கே கரோனா!
நிலாவைச் சுற்றி கூட்டமாய் பயல்கள் இருந்தால், அங்கே பாவனா...!"

"வசந்த் இவிட வரணும்! ஞான் இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரான்...!"

ல்லோரும் புகுந்து கலக்குங்க....! வாங்க...!

Wednesday, August 06, 2008

சாரு Sir-u...!

இன்று சாரு ஸ்பெஷல்.

1. சாரு Sir-uவின் சுனாமி பற்றிய ஒரு பதிவைப் பார்த்ததும் எனக்கும் சுனாமி பற்றிய ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது.

ராமாவரத்தில், எம்.ஜி.ஆர். அவர்களின் வீட்டுக்கு எதிர்ப்புறத்தில் உள்ள ஓர் அபார்ட்மெண்ட்டில் தங்கி இருந்தோம். நான், சண்முகம், சிவராஜ், பாலாஜி, ஆண்டனி, கீர்த்தி. சனிக்கிழமை இரவு வழக்கம் போல் நெடு நேரம் பேசி விட்டு தூங்க ஆயத்தப்படும் போது பார்த்தால், நள்ளிரவைத் தாண்டி முட்கள் ஓடிக் கொண்டிருந்தன.

மென் குளிர், நிலா, நட்சத்திரங்கள் எல்லாம் பார்த்ததும் ஒரு கவிதை போல் லேசாக சில வார்த்தைகள் கிளர்ந்தெழ வைத்திருந்த 80 பக்க லார்ஜ் சைஸ் நோட்டில் கிறுக்கிக் கொண்டேன். அது கடைசியில்!

ஞாயிறு காலையில் எட்டு மணிக்கு மேலாக எழ முயற்சி செய்கையில், ஆண்டனி தான் சொன்னான்.

"டேய், பூமி அதிர்ச்சிடா..! நீ ஃபீல் பண்ணினியா..?"

எனக்கு ஒன்றும் அது போல் தோன்றவில்லை. ஏதேனும் தூக்கத்தில் புரண்டிருப்பேன் என்று சொல்லி விட்டேன். பெத்த பாடி.

பிறகு தான் சுனாமி, கடல் ஊருக்குள் புகுந்து விட்டது என்றெல்லாம் மக்கள் சொன்னார்கள்.

சுனாமி? புதிதாக இருந்தது.

அவசரமாக கீழே போய், ஆபீஸ் சீனியர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்க்க, சன் டி.வி. நியூஸில், கோட் சூட் அணிந்த வாசிப்பாளர், "இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இராணுவ ... (காமிரா ஆடுகின்றது) சார்... செட் ஆடுது பாருங்க.. (காட்சி அதிர்கிறது)..கேமிரா ஆடுது சார்...(கோட், சூட், டை எல்லாம் எல்.ஜி. திரைக்கு 45 டிகிரி வாக்கில்..) என்னங்க நடக்குது... எர்த் க்வேக்கா...?"

"நீங்கள் பார்த்த இக்காட்சி நமது சன் டி.வி.யின் காலை 8 மணி செய்திகளுக்காக வீடியோ எடுக்கப்படும் போது அலுவலகத்தில் ஏற்பட்டது. இந்தோனேஷியாவில்..." அப்போதும் பட்டுப் புடவை, செயின், மல்லிகைப்பூ என்ற முதலிரவு அலங்காரத்தில் ஒரு பெண் செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்.

நாங்கள் பெண்களாய் இல்லாத காரணத்தால், அவரது அலங்காரங்களில் கவனம் செலுத்தாமல், காத்திருக்கும் ஆண்களாய் இல்லாத காரணத்தால், அவரில் கவனம் செலுத்தாமல், ஆர்வமான இளைஞர்களாய் இருந்தமையால், திரையில் கீழே காபிக் கொட்டை சைஸில் ஓடிக் கொண்டிருந்த ஃப்ளாஷ் நியூஸில் கண்களைப் பதித்திருந்தோம்.

FLASH NEWS : இன்று அதிகாலை ஆறு மணி சுமாருக்கு இந்தோனேஷியாவில் கடல் கொந்தளிப்பால், வங்காள விரிகுடாவில் கடும் நில அதிர்ச்சி ஏற்பட்டது. அந்தமான், இலங்கை, இந்தியா, பர்மா, பங்களாதேஷ் கடற்கரைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வீடியோக்கள் காட்டப்பட்டன. கடல் பொங்கி ரிசார்ர்ட்டுகளில் புகுந்திருந்தது. மெரினாவில் மாருதி கார் முக்கால் செங்குத்தாக நின்று கொண்டிருந்தது. பீச் ரோடு வரை வாய்க்கால் போல் தேங்கி இருந்தது. திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி அசிங்கமாய் பச்சைப் பாறைகள் படிந்து தெரிந்தன. நாகையில் படகுகள் தெறித்திருந்தன. குமரியில் விவேகானந்தர் மண்டபம் முழுக்க நனைந்திருந்தது. இலங்கையில் தென்னைகள் மிதந்தன.

ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தோமே ஒழிய, இதன் கடும் பயங்கரம் புரியவில்லை.

சுனாமி என்பதன் அர்த்தம் தெரியாததால், வதந்திகள் றெக்கை அல்ல, ராக்கெட் கட்டி பறந்தன.

"பீச் ரோட்ல ட்ராஃபிக் ஃபுல்லா ப்ளாக் பண்ணிட்டாங்களாம். நேப்பியர் ப்ரிட்ஜ்ல இருந்து லைட் ஹவுஸ் வரைக்கும் ப்ளாக். அப்படியே தூர்தர்ஷன் ரோட்ல திருப்பி விட்டுருக்காங்க.."

"பெசண்ட் நகர்ல கடல் ஒரு கி.மீ.க்கு உள்ள போயிருக்கு. எல்லாரும் ஜாலியா உள்ள போய்ட்டு வர்றாங்களாம். என்ன, கொஞ்சம் வழுக்கறதால பாத்து பாத்து போறாங்களாம்.."

"பொன்னியின் செல்வன்ல வர்ற மாதிரி நாகப்பட்டினத்துல தான் செம அட்டாக். பாதி ஊரை காலி பண்ணிடுச்சு..."

"திருச்செந்தூர்ல கடல் கோயிலை மட்டும் விட்டுட்டு, சுத்திட்டு போய் பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் வந்திருக்கு. ஒரு காலத்துல வருண பகவான் முருகன்கிட்ட சத்தியம் பண்ணி இருக்காராம், உங்க கோயிலை தொட மாட்டேன்னு.! அதான்...!"

"ஸ்ரீலங்கா மட்டும் இல்லைனா, அவ்வளவு தான் கன்யாகுமரி உட்பட சவுத் ஃபுல்லா க்ளோஸ் ஆகி இருக்கும்..."

"அந்தமான்ல தான் பயங்கரமான சேதமாம்..."

அரட்டை அரங்கம், டாப் டென்களின் கீழே நகர்ந்தபடி இருந்த நியூஸிலேயே எங்கள் கவனம் நிறைந்திருக்க, அவ்வப்போது அதை கலைத்தபடி ஃபோன் கால்கள் வீட்டிலிருந்து...!

"வீட்டிலேயே இருடா...! எங்கயும் போயிடாத..! எர்த் க்வேக் வரலாம்னு சொல்றாங்க..!"

"ம்மா..! நாங்க இருக்கறது ராமாபுரத்துல..! கடல் இங்க இருந்து மூணு கிலே மீட்டர் தள்ளி. சுனாமி எல்லாம் வராதுமா..!"

"எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க...!"

திடீரென்று ஒரு ஞானோதயம்.

ஊரில் இருக்கின்றவர்கள் தான் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், நாமும் ஏன் அதையே செய்ய வேண்டும்? நடந்தது நமக்கு அருகில் தானே! நேரில் சென்று பார்த்தால் என்ன..?

அவசர அவசரமாக குளித்து விட்டு (மதியம் 12:30) நானும் கீர்த்தியும் கிளம்பினோம்.

M54 பிடித்து ஒரு ஸ்டாப்பிங்கில் (சைதைக்கு முன் ஸ்டாப். எட்டு மாதத்திற்குள் பேர் மறந்து விட்டதே!) இறங்கி, ரோட்டை க்ராஸ் செய்து, ரோட்டை க்ராஸ் செய்து, ரோட்டை க்ராஸ் செய்து, 23C பிடித்து பெசண்ட் நகர் சென்றோம்.

கல்லூரிக் காலத்தின் அந்திம செமஸ்டர்களில் கிண்டி கேம்பஸில் இருந்து நடந்தே பெசண்ட் நகர் பீச் போய் அரட்டை அடித்து விட்டு, ஆங்காங்கே கிடைத்ததை உண்டு விட்டு, மீண்டும் நடைபயணம் மேற்கொண்ட 'அந்த ஒரு கனாக் காலத்தில்' அலைகள் வந்து தீண்டும் இடத்தில் ஒரு மேடு போல் உருவாகி இருந்தது. அதில் அமரலாம்.

இப்போது அந்த மேட்டையே சுத்தமாக காணோம்.வழித்து எடுக்கப்பட்டு இருந்தது. ரோட்டில் இருந்து கடல் வரை சீரான மணல் தளமாக இருந்தது.

அது மட்டுமல்ல. கடல் பச்சையாக உள் வாங்கி இருந்தது.

மேட்டுப் பாறைகள் பாசி பூண்டிருந்தன. அழுக்காய், கறுப்பாய் சாக்கடையாய் இருந்தது. நகரத்தின் முழுக் கழிவுகளும் கலக்கும் கடலின் ஆரம்பமே இப்படி என்றால், கடல் முழுதும் எவ்வளவு மாசுபட்டிருக்கும் என்று தோன்றியது.

காய்ந்த இளநி, செருப்புகள், வாழைத் தோல், உடைந்த பலூன், அபூர்வமாய் சில்லறைகள், பூச் சரங்கள், நண்டு என்று எக்கச்சக்கமாய் தெரிந்தன.

சிக்னல் எடுக்கிறதா என்று செக் செய்து பார்த்தேன். எடுத்தது. வானம் கொஞ்சம் மேக மூட்டமாய் இருந்தது. எப்போதும் மழை வரலாம். எனினும் சென்னையின் வெயில் சூழ் காற்று இருந்தது.

நானும், கீர்த்தியும் கைகளைப் பிடித்துக் கொண்டு கொஞ்ச தூரம் உள்ளே சென்றோம். வழுக்கியதும், இறுக்கம்.

கொஞ்ச நேரத்தில் எங்களையும் தாண்டி உள்ளே சென்றிருந்த எல்லோரும், 'தடார் புடார்' என்று வெளியே ஓடி வர, நாங்களும் கூடவே ஓடி... திரும்பிப் பார்த்தால், கடல் எங்களைத் துரத்திக் கொண்டு வருகின்றது.

தன் எல்லையில் வந்து விட்ட அயலானைத் துரத்தும் வெறித் தெரு நாயின் வேகத்துடன், மீண்டும் தன் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றும் போர் வீரனின் தாவலுடன் அலைகள் எங்களை ஆக்ரமிப்பு செய்ய ஓடி வந்தன.

நான் ஒரு முட்டாள்தனமான யோசனை கூறினேன்.

கடலின் எல்லையை ஒட்டி, மீனவக் குடிசைகளைத் தாண்டி, அஷ்டலக்ஷ்மி கோயிலின் கிழக்குப் பார்த்த படிக்கட்டுகளில் ஏறிக் கொள்வோம் என்று.

கீர்த்தி, 'அதெல்லாம் வேண்டாம்! என்று மெயின் ரோட்டுக்கே ஓடுவோம்' என்று சொல்லி.. அங்கேயே ஓடினோம்.

பிறகு பெருமூச்சு விட்டு, கோயிலுக்கு செல்லலாம் என்று நடந்து போய் சர்ச்சை கடந்தால், அது வரை ஈரம். கடலின் உப்பு ஈரம். காலையில் வந்த அலை ஈரம்.

லேசாக பூத்த பயத்துடன் அவற்றை, அவர்களை கடந்து சென்று கோயிலுக்கு அருகில் பார்த்தால்...

படிக்கட்டுகள் வரை கடல் வந்திருந்தது. இப்போது கிளம்பிய கடல்..!

அப்போது தான் 'தப்பித்தோம்!' என்று நினைத்துக் கொண்டேன்.

அந்த கவிதை ::

ஐந்து புள்ளிக் கோலங்களாய்.

உன் வார்த்தைகளின் வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்ட மனம், உன் மெளனத்தின் எடை தாங்க முடியாமல் தவிக்கிறது. அந்த கனத்தையெல்லாம் கரைத்து ஊற்றிய மையில் எழுதிய கவிதைகளின் எழுத்துக்கள், நான் இறக்கி வைத்த எடை தாளாமல் வளைந்தும், நெளிந்தும் கிடக்கின்றன.

சொல்லாமல் நீ நகர்ந்து சென்று விட்ட பின்பு, உனது ' நாளை பார்க்கலாம் ' என்ற சொல்லுக்காக, என் மனதில் நான் ஒதுக்கி வைத்த உள்ளம், காலியான வெறும் பள்ளமாக உள்ளது.

ஆயிரமாயிரம் கரங்களால் கரை தழுவும் நுரைகளால் ஆர்ப்பரிக்கும் கடலும் அந்த மெளனத்தை நிரப்ப முடியாமல் பின்வாங்கிச் செல்கிறது.

வழக்கமாய் நீ பிரிந்து செல்கையில், உடையிலிருந்து உதிரும் மணற்துளிகளை தாங்கி முத்தமிடுவதை, திரும்பிப் பார்த்துச் சிரித்துச் செல்வாய். இன்று நீ உதறாத மணற்துகள்களுக்காக, என் உதடுகள் உலர்ந்து கிடப்பதை, திரும்பிப் பார்க்காமலேயே அறிவாயா?

நீ சென்று விட்டபின்பு, கடற்கரை மணலில் நீ பதித்த பாதச் சுவடுகள், ஐந்து புள்ளிக் கோலங்களாய் மின்னுகின்றன.

அவற்றின் ஓரமாகவே என் மனமும் சென்று கொண்டிருக்கிறது.....

2. சைனாவில் இருந்து அனீஸ் என்ற எனது நண்பரின் கடிதத்தையும் அதற்கு சில கேள்விகளை பதிலாகவும் சாரு இன்று தன் பதிவில் இணைத்துள்ளார்.

மகிழ்ச்சியாக இருந்தது.

அவரின் அனுமதி இல்லாமல் இங்கே அதை கொடுப்பது சரியல்ல (தவறா என்பது மற்றொரு கேள்வி!) என்பதால் க்ளிக்குங்க!

பிப்ரவரி 27, 2008 இரவில் எங்கள் இருவருக்கும் இடையே நடந்த Chat-ஐ படிக்க விரும்பின் இங்கே க்ளிக்குங்க!

Tuesday, August 05, 2008

5. someone.

நேற்று கொஞ்சம் உடல் நலம் சரியில்லை. லைட்டாக ஃபீவர் போல் இருந்தது. எனவே அவ்வளவாக இணையத்தில் சுற்றாமல், மெயில் மட்டும் படித்து விட்டு படுத்துக் கொண்டேன். ஆனால் வழக்கமாக தூங்கும் நேரம் இரவு 10 மணி இல்லையாதலால், என்ன செய்வது என்று கொஞ்சம் போல் குழம்பினேன்.

ஒரு மாதமாக அறிவியல் கதைப் போட்டிக்காக சிந்தித்துக் கொண்டேயும் (?) எழுதிக் கொண்டேயும் இருந்ததால், வாங்கி வைத்திருந்த புத்தகங்கள் புத்தம் புதிதாக தூசி படிந்து இருந்தன.

எனவே இன்று இரவு படிக்க என்று முடிவு செய்து, கையில் கிடைத்த புத்தகத்தை எடுத்தேன்.

five point someone from chetan bhagat.

இரண்டு நாட்களின் இரவைப் பங்கு போட்டுக் கொண்டது புத்தகம்.

ர்யான், ஹரி, அலோக் என்ற மூன்று நண்பர்களின் IIT வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்ற இப்புத்தகம் என் கல்லூரி வாழ்க்கையை நினைவூட்டியது.

வழுக்கிச் செல்லும் நகைச்சுவையோடு நாவல் பறக்கின்றது. முதல் நாளின் நிர்வாண ரேக்கிங்கில் துவங்கி, கடைசி நாள் கான்வகேஷன் செரமனி வரை சீரான வேகத்தில் ஃப்ளோவில் ஓடுகின்றது.

I reccommend this one to everyone, especially who dreamt IIT in their school days.

புத்தகம் : five point someone.

புத்தக வகை : புனை கதை.

ஆசிரியர் : சேதன் பகத்.

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

பதிப்பகம் : Rupa.

விலை : 95 ரூ.

நீ ரஜினி ரசிகனா? ரஜினி வெறியனா? - பதில்.

ன்பு வெண்பூ,

ஷா - இன் - ஷா என்ன சொன்னார்? என்ற எனது பதிவிற்கான உங்களது கமெண்ட் இது ::


வசந்த்.. கண்டிப்பாக நான் உங்கள் கருத்தில் இருந்து வேறுபடுகிறேன் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். ரஜினியைத் தாக்கி எழுதினால் உடனே எல்லோரும் கவனிப்பார்கள் என்பதால் நான் உட்பட பெரும்பாலோர் அதைச் செய்யவில்லை. உங்களுக்கு என் பதில்கள்:

1. ஒகேனக்கல் பிரச்சினை கிடப்பில் இருப்பது குறித்து எத்தனையோ முறை நானே பின்னூட்டமிட்டுள்ளேன். அது குறித்த எல்லா தகவல்களையும் பெற முடியாததால் என்னால் அதுகுறித்து பதிவிட முடியவில்லை. அது அரசியல்வாதிகளால்தான் கிடப்பில் இடப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

2. ஊருக்கு இளைத்தவன் என்பதால் அவர் மீது மட்டும் சேறு வாரி இறைப்பதாக சொல்வதில் சிறிதும் உண்மையில்லை. அரசியல்வாதிகள் அத்தனை பேருமே அவரவர் சுயநலங்களால் பதிவர்களால் சாடப்படுவது கண்கூடு.

3. உங்கள் தலைவர் உத்தமராகவே இருக்கட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர் வருத்தம் தெரிவித்தது அரசியல்வாதிகளாலேயே என்று இருக்கட்டும். அவர் வருத்தம் தெரிவித்ததற்கு 17 பிரிண்ட் ஓடவேண்டும் என்பது காரணம் இல்லை என்பது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் இத்தனை நாள் கழித்து மிக மிகச் சரியாக அந்த 17 பிரிண்ட்கள் ரிலீஸ் ஆவதற்கு 1 நாள் முன்னால் எதற்கு சாமி மன்னிப்பு கேட்க வேண்டும்? அதற்கு பின்னால் அவர்க்கு பிஸினஸ் மைண்ட் இல்லை என்று நீங்கள் நம்பலாம். எல்லோரும் அதையே செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

அவரைப் பொறுத்தவரை அவரால் தான் சொன்னதைக் காப்பாற்றமுடியவில்லை என்றால் படத்தில் மட்டும் நடிக்கட்டும். அதுதான் அவரது எல்லா படங்களையும் ரசிக்கும் என் போன்றோர் எதிர்பார்ப்பது. நானும் ரஜினி ரசிகன் தான். வெறியன் இல்லை.


எனது பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பல பதிவர்களில் நீங்களும் ஒருவர் என்று நீங்கள் எவ்வாறு சரியாகப் புரிந்து கொண்டீர்களோ, அதே போல் நானும் ரஜினி ரசிகன் தான். வெறியன் இல்லை என்று நீங்கள் சொல்லியிருப்பதன் வாயிலாக நீ ரசிகனா இல்லை வெறியனா என்ற கேள்வி என்னை நோக்கி எறியப்பட்டு இருக்கின்றது என்பதை மிகச் சரியாக புரிந்து கொண்டுள்ளேன் என்பதையும் இங்கே தெளிவுபடுத்துகிறேன்.

மூன்று நாட்கள் தாமதமாக உங்களுக்கு பதில் கொடுப்பதற்கு மன்னிக்கவும்.

இந்நேரத்திற்கு உங்களுக்கே ரஜினி அவர்களின் குரலுக்கான காரணங்களும், விளக்கங்களும், ஆதரவுக் குரல்களும் கிடைத்திருக்கும். இல்லாவிடில் சில இணைப்புச் சுட்டிகள் இதோ ::

http://www.rajinifans.com/

http://onlysuperstar.blogspot.com/

http://mayavarathaan.blogspot.com/

நான் ரஜினி ரசிகனா இல்லை வெறியனா என்ற கேள்விக்கு எனது சில பழம் பதிவுகளைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ரஜினியும் நாசரின் முகமும்...!

இப்ப என்ன செய்ய?

மோக்ளியின் ஷா - இன் -ஷா.

வளர் பருவத்தில் நீங்கள் அவரது படங்களோடு வளர்ந்திருப்பின் மட்டுமே அவரின் தாக்கம் உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று ஒரு பதிவில் படித்தது நினைவுக்கு வருகின்றது.

நான் ஒரு சாதாரண ரஜினி ரசிகன். புதுப்படங்களை பார்த்து விசிலடித்துக் கொண்டாடி, அதே சமயம் அவரது பழைய படங்களைப் பார்த்து இனி இது போல் நடிக்க மாட்டாரா என்று வருந்தி, மீண்டும் அவர் இளமை வேஷம் பூசி வேக நடையில் வரும் போது, அத்தனையையும் மறந்து விசிலடித்து, டிக்கெட் கிழித்து பறக்க விட்டு, ஆட்டம் போடும் கோடிக்கணக்கான அவரது ரசிகர்களில் ஒருவன்.

மற்றுமொரு நண்பருடன் பேசிய ஈ-மெயில் உங்கள் பார்வைக்கு (கீழிருந்து படித்து வரவும்.)::

From: Vasantha Kumar R.
Sent: Monday, August 04, 2008 3:41 PM
To:
Subject: RE:



Yes.. I have to publish another post to ask sorry for mentioning “apologise” in my post.



Some loosus told why he worried about 1.5 crores which come from Karnataka zone..?



They forgot or don’t want to remember that thalaivar returned crores to the distributors who got lose from BABA. If these sathyaraj, TR guys start to pay like that, they have to come to platform and have to start begging.



If he doesn’t bother abt Karnataka market, he won’t have any problem. But it will lead a new way. That all tamil films get stopped showing in KA, because all the film ppl attended that fast. It will lead that effect in all the areas. Like udipi hotel should be shut down in TN. Hotel Sangeetha has to be closed in TN.



All nair tea shops to be closed in TN. The lakhs of ppl who settled in all the other states has to return to their home state…

Then it leads to disintegration of India. And the country will break into pieces like USSR got broken into Russia and all other ‘…isthan’ countries.



His one speech stops all these things. He is the leader.


--------------------------------------------------------------------------------

From:
Sent: Monday, August 04, 2008 3:26 PM
To: Vasantha Kumar R.
Subject: RE:



Even now he has not apologised any where.He just clarified what he has said before to those karnataka chamber guys and others.


--------------------------------------------------------------------------------

From: Vasantha Kumar R.
Sent: Monday, August 04, 2008 3:11 PM
To:
Subject: RE:

Even a man with very small common-sense can understand that thalaivar’s “we have to kick them” was towards who were all oppose to the hogenakkal water project.



These guys are always waiting for chances to remove thalaivar’s supremo from the Tamil Film Industry.. but they fail as usual.



In tamil blogosphere also everyone shout “Rajini is disloyal to tamilians..blah..blah” all these craps..!



I opposed them very strongly in my blog.



All of main guys in the industry as KB, Bharathiraja, ameer, seeman all appreciate thalaivar’s speech.



These waste guys like sathyaraj (he thinks he became periyar because of he acted as that legend. Poor guy…!), Sarath kumar (another poor man… he is trying to popularize his party’s name(I think max 100 ppl know the name) by any means..) and TR (I wonder why this guy still not recognized that he is getting treated as a comedian in tamil cinema and political arena. He has a lot of other works to do. For example controlling his son’s finger and middlefinger and advised him to stop destroying a beautiful actress’s life... sure, that will take a lifetime effort…) all are stomach burning ppl…



We fans are behind him.. He is a true leader…who betted his fame for his film’s distributors, producers and fans in Karnataka…! And not only for his film’s, but for the entire tamil cinema!



The political leaders ordered their followers if they feel problems to cut down the trees or to burn three young students in a bus and to kill innocent workers even they are not responsible for any thing


But our thalaivar never order his fans to do such things even he was attacked severely by many ppl. Amma, manorama , Bharathiraja, PMK and now sathyaraj!


A true leader is the one who leads his followers by simply showing his life. Not necessarily he has to speech or advise.



After this incident, I am really happy for being a fan to such a big man and really proud to call him “THALAIVAR”.

--------------------------------------------------------------------------------

From:
Sent: Monday, August 04, 2008 2:47 PM
To: Vasantha Kumar R.
Subject: RE:

stupid people.This T.R dirty fellow,as if some body asked him he is giving comments...

every one making politics of it...

actually this is the most clear of all the thalaivar's speech.

--------------------------------------------------------------------------------

From: Vasantha Kumar R.
Sent: Monday, August 04, 2008 2:41 PM
To:
Subject: RE:

Officially 1 hour. Ok..!

Unofficially how much time…?

Did you notice how thalaivar’s speech is transformed by ugly magazines and news channels..?


--------------------------------------------------------------------------------

From:
Sent: Monday, August 04, 2008 2:34 PM
To: Vasantha Kumar R.
Subject: RE:

Here 1 hour power cut afternoon 12 -1

***

எனது வாதங்கள் முட்டாள்தனமாக தோன்றினால் நன்றி.

இங்கே சிலருக்கு (உங்களை அல்ல!) ரஜினி ரசிகன் என்று கூறிக் கொள்வதில் தயக்கமும், ஏதோ ப்ரெஸ்டீஜ் இஷ்யூவும், இருப்பது போல் தோன்றுகின்றது. தமிழ் வலையுலகத்தில் இதை விட மகா ஆட்களை கேள்விப்பட்டும் பார்த்தும் வருகிறோம்.

எங்களுக்கு அதில் தயக்கம் இல்லை.

ஆனால் இது போன்ற எந்த வித ஆதாரமும் இல்லாத, உடனடி பரபரப்பு செய்திகளை நம்பி இந்த நல்ல மனிதரை இழிவு படுத்த யார் விரும்பினாலும் நாங்கள் அதை எதிர்த்து உண்மைக்கு கொஞ்சம் அருகே கூட்டிச் செல்ல முயல்வோம்.

அன்றி, நாங்கள் வம்புகளுக்கு ஒதுங்கிப் போவதும் இல்லை; ஒடுங்கிப் போவதும் இல்லை.

இனியும் உங்களுக்குப் புரியவில்லை என்றால், ஸாரி தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்புவதற்கு எங்களுக்கு நேரம் இல்லை.

நன்றி!

Sunday, August 03, 2008

தோஸ்த்... படா தோஸ்த்...!



ன்பு தமிழர்களுக்கும், கன்னடர்களுக்கும், மலையாளிகளுக்கும், தெலுங்கர்களுக்கும், பிற இந்தியர்களுக்கும், பாகிஸ்தானியர்களுக்கும், இலங்கையர்களுக்கும், பர்மியர்களுக்கும், சீனர்களுக்கும், தாலிபான்களுக்கும், ஆஃப்கானிஸ்தானியர்களுக்கும், ஈராக்கியர்களுக்கும், ஈரானியர்களுக்கும், ஆசியர்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும், ஆஸ்திரேலியர்களுக்கும், அண்டார்டிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும், ரஜினி வெறியர்களுக்கும், கமல் பைத்தியங்களுக்கும், கமல் கடுப்பர்களுக்கும், அனானி அண்ணாச்சிகளுக்கும், போலி காலிகளுக்கும், கிரிக்கெட் கிளர்ச்சியாளர்களுக்கும், புரட்சிக்காரர்களுக்கும், கமர்ஷியல் ரைட்டர்களுக்கும், இலக்கிய எழுத்தாளர்களுக்கும், ஜெயமோகன்களுக்கும், சாரு நிவேதிதாக்களுக்கும், பின்லேடன்களுக்கும், புஷ்களுக்கும், கம்யூனிஸிகளுக்கும், சோஷியலிஸிகளுக்கும், ப்ரோக்ரமர்களுக்கும், டெஸ்டர்களுக்கும், மானேஜர்களுக்கும், கஸ்டமர்களுக்கும், ப்ளேயர்களுக்கும், அம்பயர்களுக்கும், ரெஃப்ரிகளுக்கும், மாணவர்களுக்கும், வாத்தியார்களுக்கும், போலீஸ்களுக்கும், திருடர்களுக்கும், நயன் தாராக்களுக்கும், சிம்புகளுக்கும், செந்தழல் ரவிகளுக்கும், சுப்பையா சார்களுக்கும், விகடன்களுக்கும், குமுதங்களுக்கும், இட்லி வடைகளுக்கும், சாம்பார் வடைகளுக்கும், மைக்ரோசாஃப்டுகளுக்கும், ஓபன் சோர்ஸ்களுக்கும், பெரியாரிஸ்டகளுக்கும், ஹரியாரிஸ்டுகளுக்கும்,

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.....!


Get Your Own Hindi Songs Player at Music Plugin

படம் உதவி நன்றி :: http://www.wondercliparts.com/holidays/friendship_day/graphics/friendship_day_graphics_01.gif