Monday, February 26, 2007

உன்னோடு...!


ன்னோடு கொஞ்சம்

பேச வேண்டும்,

கிடைக்குமா தனிமை?

நீயும், நானுமற்ற தனிமை!


பேச்சில் கொஞ்சம்

பருக வேண்டும்,

இருக்குமா வெறுமை?

வார்த்தைகளும், வசனங்களுமற்ற

வெறுமை!


வெறுமையில் கொஞ்சம்

வசிக்க வேண்டும்,

அமையுமா இனிமை?

ஆசைகளும், ஓசைகளுமற்ற

இனிமை!


தனிமையில் கொஞ்சம்

தரிக்க வேண்டும்,

தகையுமா மெளனம்?

சப்தங்களும், அமைதியுமற்ற

மெளனம்!


எழுதியது : 02.Mar.2004

2 comments:

Anonymous said...

//கிடைக்குமா தனிமை?

நீயும், நானுமற்ற தனிமை!///

ம்ம்ம்...மீண்டும் 'வாவ்'தான்...:)
நீங்க எழுதியிருப்பது எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...உங்களோட இந்தக் கவிதையை எங்க குழுவில் "சுட்ட கவிதைகள்"னு ஒரு thread இருக்கு...அங்கு கடத்திச் செல்கிறேன் [உங்க பெயரோடுதான் ]...:)

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகைக்கு... மிக்க நன்றிகள்.... உங்கள் குழுவின் முகவரியைக் கொடுத்தால், நானும் அங்கு வந்து கவிதைகளைப் படித்து, இன்புறுவேனல்லவா...?