Thursday, June 05, 2008

ஒரு கடலை.

"ப்ஜ்யூஷோ ஷிர்ம்ஸ்க்யோ..!"

"ஹயாஜிஷ் ஸிண்ஹெனியோ.."

"என்ன ஒளற்ரே..?"

"நீ கேட்டதுக்கு பதில் சொன்னேன்.."

"நான் என்ன சொன்னேன்னு எனக்கே புரியல. உனக்கு எப்படி புரிஞ்சு, பதில் சொன்ன..?"

"எனக்கும் புரியல. நீ ஏதோ உளற்ரேன்னு புரிஞ்சிடுச்சு. அதான் நானும் கொஞ்சம் உளறினேன். ஆமா, என்ன ட்ரை பண்ணினே?"

"காதலில் குழறுவதை சிமுலேட் செய்து காட்டினேன்..!"

"ஓ..! யார் மீதான காதல்..?"

"எந்த மங்கையின் காதலைப் பெற யுகங்கள் தோறும் தவங்கிடந்து வந்தேனோ, எந்த பேரழகியின் சிறு புன்னகைக்காக பெரும் மாளிகையைத் தூக்கி எறிந்து நடந்தேனோ, எந்த மகாராணியின் விரலசைவிற்காக, பெரும் போர்களில் நெடுங்குருதி சிந்தினேனோ, அந்த பெண்ணின் மேல் கொண்ட இந்த ஜென்மக் காதல்...!"

"அபாரம்...! அருமை,கவிராயரே! யாரங்கே..? இந்தக் கவிராயருக்கு, ராயர் காபி க்ளப்பில் ஒன்றரை வாரத்திற்கு ஸ்ட்ராங்கான காபி, வடை சாப்பிட யாம் ஒப்புதல் அளிக்கிறோம். ஓலைப் பத்திரத்தில் எழுதிக் கொண்டு வாரும்.."

"தேங்க்ஸ்! அப்படியே இந்தக் கவிஞரின் கன்னத்தில் ஒன்று கொடுத்தால் தன்யனாவேன்..!"

"கொடுக்கத் தான் வேண்டும்! இப்போதே வேண்டுமா? இல்லை பின்னொரு பொழுதில் பெற்றுக் கொள்கிறீரா..?"

"மகராணியின் சித்தம், என் பித்தம்.. ச்சீ, என் பாக்கியம்..!"

"இப்போதே கொடுக்கலாம். ஆனால் தாடி முட்கள் குத்துமே?"

"கூர்மையான விளிம்புகளைக் கொண்ட இலைகளை நீட்டிக் கொண்டு பனை மரங்கள் இருக்கின்றன. வலிக்குமே என்று பயந்து கொண்டு அவ்விடத்தில் மழை பெய்யாது போய் விடுமோ? அன்று அன்றோ? அது போல் இந்தக் கூரிய முகக் காட்டிலும் உனது ஈர இதழ்கள் பதிய என்ன தயக்கம்..? போனில் என்ன தாடி முடி..?"

"ஃபோனில் இருந்தாலும் நீ என் பக்கத்தில் தானே இருப்பதா நெனச்சிட்டு இருக்கேன்.."

"ஆ... டச் பண்ணிட்டயேம்மா..."

"இப்ப உத தான் குடுக்கப் போறேன்..! நான் கையால் கொடுக்கப்படும் பரிசைச் சொன்னேன்.."

"அறையா..? அதை பொது இடத்தில் கொடுக்க வேண்டாம். தனி அறையில் கொடுத்தால் போதும். அதனால் தான் அதற்கு அறை என்று பெயர்..! எப்படி என் கண்டுபிடிப்பு..?"

"புத்திசாலி தான்! உங்க ஐ.க்யூ. எவ்ளோ..?"

"அதை எல்லாம் நான் மெஷர் பண்ணல..! வேண்ணா ஒரு ஆயிரம் வெச்சிக்கலாமா?"

"லூசு..! அது மாக்ஸிமமே 120 தான். போன சென்டன்சிலயே தெரிஞ்சிடுச்சு, உங்க அறிவோட அளவு என்னனு..!"

"உன்னைக் காதலிக்கிறேனே.. இதை வெச்சே என்னோட ஐ.க்யூ. ஸீரோனு நீ தெரிஞ்சிருக்கலாமே..!"

"ஹ்ம்.. அப்டியா..? அப்ப என்னோட ஐ.க்யூ. நெகட்டிவ்ல தான் போகணும்... அதே காரணத்துக்காக..."

"ஹி..ஹி.. நான் சும்மா சொன்னேன்."

"பட், நான் சொன்னது உண்மை.."

"மேடம் கோவிச்சுக்கிடீங்க போல.. வாபஸ். நான் வாபஸ் வாங்கிக்கறேன்..."

"இல்ல. வாபஸ் வாங்கினா மட்டும் போறாது. நாளைக்கு ஷேக்ஸ் அண் க்ரீம்ஸ்ல ரெண்டு வெனிலா, ஒரு எக் ஸாண்ட்விச் மேல சத்யம் பண்ணினாத் தான் ஒத்துக்குவேன். ஓ.கே.வா..?"

"ஓ.கே. சொல்லாட்டி விடவாப் போறே..?"

"ஓ.கே. பை. குட் நைட்.."

"என்ன அதுக்குள்ள குட் நைட்? தூங்கப் போறியா என்ன?"

"ஹலோ சார்! இப்ப டைம் என்ன தெரியும்ல..? நைட் ஒண்ணு ஆகுது.. தூங்கப் போறியானு கேள்வி..?"

"ஸோ வாட்? அழகன்ல எப்படி மம்முட்டியும், பானுப்ரியாவும் நைட் ஃபுல்லா பேசிட்டு இருப்பாங்க.. நாம அந்த மாதிரி இன்னிக்கு ட்ரை பண்னினா என்ன?"

"ஆமா.. அது மாறி மாறி ஷாட் வெச்சு, எத்தன நாள் எடுத்தாங்களோ.. யாருக்குத் தெரியும்?"

"ஓ.கே. பை. லஹகியூஃபூஸிவ்ச்யா..."

"பை. ஹயாரெஸிஷ்க் யோப்ரியாஜ்..."

2 comments:

MADCOVI said...

Classic conversation. ( from where you copied it?) Eventhough they
rediculed each other they exchanging their deep love also.

இரா. வசந்த குமார். said...

Dear Madcovi,

Thanks. This was not a copied one. Just an imagination. ;-)