Tuesday, May 04, 2010

...ஆதலினால் காதல் செய்வீர்!



னவுக்குள் ஊர்வலத்தில்
தேர் வலம் வரும்;
நினைவுகள் கல்லெறிந்த
சிலையாகும்;
செல்பேசி மினுக்கிட
இதயம் இரட்டிப்பாகும்;
குறுந்தகவல் அனுப்பி, பதில் காலம்
மனம்
கடல் மேல் ஒளியாகும்;
கண்ணாடியிலிருந்து
பார்க்கும் கண்கள்
வெட்கம் காணும்;

வாக்கிங் போகையில்
முந்தின இரவு மழையில்
நனைந்த நாய்க்குட்டி
உதறும் போது,
உங்களுக்கும் சிலிர்க்கும்;
அத்தனை
காதல் பாடல்களும்
உங்களுக்காகவே பாடப்பட்டிருக்கும்;
வோர்ட்ஸ்வொர்த்
உங்கள் கவிஞர் ஆவார்;

விக்கியில் 'ரொமாண்டிசிஸம்'
படிப்பீர்;
கூகுளில்
'Classic Love Poems'
தேடி நெகிழ்வீர்;
<3 என்றே
உங்கள் தகவல்கள் முடியும்;

வயிற்றுக்குள்
பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும்;
கால்களில் பஞ்சு
சேர்ந்து கொள்ளும்;
அரையடிக்கும் மேலேயே
மிதப்பீர்;
பசிக்கத் தோன்றாது;
காற்றில் துணுக்குகளில்
கவிதைகள் மிதக்கும்;
ஊற்றும் வெயிலிலும்
உற்சாகம் உணர்வீர்;
தெருவெங்கும்
ரோஜா பூத்திருக்கும்;
பறவைகள்
உல்லாசமாகக் கூச்சலிடும்;

பைத்தியம் போல் எதற்கோ
புன்னகைப்பீர்;
தனக்குள் பேசுவீர்;
மழையில் கிடார் வாசிப்பீர்;
மேகக் கிறுக்கல்களில்
முகம் தேடுவீர்;
இரவின் தனிமைக்குள்
புகுந்து கொண்டு,
ஜன்னல் வழி குளிரும்
நிலவை முத்தமிடுவீர்;

மற்றுமொரு பகல்
இடையில்
முடியாது
நீண்டு கொண்டிருக்கையில்...
மெளனமாய்
அழத் தயாராவீர்;

5 comments:

thamizhparavai said...

என்ஞாய்.....

மெனக்கெட்டு said...

....ஆதலினால் காதல் செய்கிறீரா?

உமா said...

ஆஹா nice.

இரா. வசந்த குமார். said...

நன்றிகள். யெஸ்... வெட்கம்.. :)

kalyan8567 said...

NICE ONE........LIKE IT.