Thursday, December 22, 2016

நீலாம்பல் நெடுமலர்.8.



மேற்கண்ட படத்திற்குத் தொடர்பாக 'படத்திற்கு வெண்பா படை' என்று கேட்கப்பட்டிருக்க, எழுதியவை கீழே.

ஒருநதியில் ஓடிடும் ஓடத்தில் நாமே
ஒருபுறம் ஓட்டை எனினும் - வருந்தா
தெனக்கென்ன வென்றிருப்பின் மூழ்கி மரித்தல்
அனைவர்க்கும் ஆமே அறி.

இருவர் உழைக்க ஒருவர் சிரிக்க
இருநிலை ஏனோ இயம்பின் - வருத்தம்
வருமே வருநிலை யாவர்க்கு மன்றோ
வருமுன் உணர்தல் நலம்

நீரள்ளி நீரள்ளி நீரிறைக்கும் வாளியில்
நீரறியா நீர்வழி உண்டாயின் - நீரது
நீங்காது நீந்துவோர் நின்றிட நீந்தாதோர்
நீங்குவர் நீத்தார் என.

 படகில் புகுநீர் மெதுவாய்க் கவிழ்க்கும்
உடனே கவனித்தல் நன்றாம் - கடமையோ
என்றிருப்பின் கண்டோரும் காணோரும் ஆவாரே
இன்றிருப்பர் நாளையோ இல்.

மேலே அமர்தல் சுகமே என்றாலும்
கீழே உழைப்பவர் நீரிலே - வாழேன்
எனவமைதல் என்றும் புகழ்.

வடத்திற்குத் தேர்போலே வாழ்வுக்கு நீரே
தடத்திற்குத் தார்போலே தாழ்வுக்குச் சோம்பல்
குடத்திற்குள் சிற்றலையாய்த் தந்தேன் உமது
படத்திற்கு வெண்பாப் படை.

No comments: