Monday, August 27, 2018

வேனில்தரை மழை.

ண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற 'கீத கோவிந்தம்' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் இடம்பெற்ற 'இன்கேம்..' என்ற பாடலுக்குத் தமிழ் வரிகள் கோர்த்த போது.



ததிகின தகஜனு
ததிகின தகஜனு
தரிகிட ததரின
ததம் தீமத ஆனந்தம்

வந்தான் இங்கே
கண்டான் உன்னை
தந்தேன் என்னை
என்றே சொன்னான்
பெண்ணே உன்னுள்
பொங்கும் இன்பம்
இன்றும் என்றும் பேரின்பம்


உன்னை அன்றி கண்கள் பார்க்காதே
மயிலே... இள வெயிலே...
உன்னை விட்டு எங்கும் போகாதே
ஒயிலே... எழில் குயிலே...


மின்னல் வெட்டும் வேகம் ஆளாச்சே..உன்
மின்னுமிரு கண்கள் வேலாச்சே...
பக்கம் நின்றால் வெக்கம் வேறாச்சே.. நீ
பார்த்துச் சொல்லும் சொற்கள் கேட்க
பாலும் தேனும் போலாச்சே... (உன்னை)

மாலைவரும் நிலவென அழகா
மருண்டுவரும் மானென உருவா
வேளையிது விழும்பனி கனவா
விடைதர விரும்பி வா...

மீனுமது விரும்பிடும் விழியா
மீட்டுவது கரும்பெனும் மொழியா
மீறுவதில் மகிழ்வது வருமா
மிளிரொளி பரவி வா...


நான் நடக்கும் நிலமதைத் தொடருமுன் பார்வை...
நான் முகிழ்க்கும் சிரிப்பதில் மலர்வாள் பாவை... (உன்னை)

காதலினில் கலந்திடும் பொழுதா
காத்திருக்கும் கணங்களும் பழுதா
காலைவரை அணைத்திடு முழுதாய்
கடும்குளிர் கரைக்க வா..


கோபமென எழுவதும் உனதா
கோதைமனம் விழைவதும் எனதா
கோலமிடும் விரலிடை மனதா
கொழுமலர் கனிந்து வா...

வேண்டுமென விரைந்துனைத் தழுவிடும் போது...
வேனில்தரை மழையெனக் கரைவாள் மாது... (உன்னை)

1 comment:

Raju said...

Fantastic lyrics.. This is the best one I have heard.. can you please write a similar one for the tune of Madhurame song (Arjun Reddy movie).