Thursday, June 14, 2007

நம்பு தம்பி, நம்மால் முடியும்...!

தினம் கடந்து செல்கின்ற நாட்களில், கடந்து போகின்ற பாதைகளில் பீடு நடை போட்ட நாட்கள் சில உண்டு. தட்டுத் தடுமாறி கீழே விழுந்து, மூச்சு வாங்கி எழுகின்ற நாட்கள் சில உண்டு.

ஏதைத் தேடி ஓடுகிறோம் என்று தெரியாமல் தேடி, திக்குத் தெரியாமல் விழிக்கையில், சுற்றிப் பார்க்கையில் எல்லாம் இருட்டாய்த் தெரிகையில் எங்காவது சிறு ஒளி தெரியாதா என்று தவிக்கின்ற தருணங்கள்...

யாராவது கைதூக்கி விடமாட்டார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்து, ஏமாந்து தலையைத் தொங்கப் போடுகின்ற கணங்கள்...

சின்ன மின்மினியின் ஒளி...

பொட்டு பொட்டாய் மினுமினுக்கின்ற நட்சத்திரங்கள்...

எங்கோ ஒரு திசையில் தெரிகின்ற சின்ன விளக்கொளி..

இவற்றைக் காண்கையில், மனம் கடலில் தத்தளிக்கையில் இறுக்கிப் பிடித்துக் கொள்கின்ற மரக் கட்டை போல் பிடித்துக் கொள்கின்றது.

அந்த நாட்களில் நான் பிடித்துக் கொண்ட மரக்கலங்கள் இதோ, உங்கள் பார்வைக்கு...!

1.தோல்வி நிலையென நினைத்தால்...!



ந்த நாளிலும் மறக்கவே முடியாத பாடல். அடக்குமுறைக்கு ஆட்பட்ட தொழிலாளர் மீண்டும் போராட்ட உணர்வு பெறச் செய்யும் நிலை பற்றிய பாடல் என்றாலும், சோர்ந்திருக்கும் நிலைகளில், இதை கேட்கையில் 'எழுந்திருடா... தோல்வியைத் தூரப் போட்டு வீறு கொண்டெழு.." என்று ஒரு குரல் எனக்குள்ளே கேட்கத் தொடங்கும்.

பி.பி.சீனிவாஸின் குரலில் அற்புதமான போராட்ட வரிகள்.

வாழ்நாள் முழுதும் ஏதோ ஒன்றிற்காகப் போராட்டாம் செய்து கொண்டே இருக்க வேண்டி இருக்கின்றது. சமயங்களில் தன்னை எதிர்த்தே ஒருவன் போராட வேண்டி இருக்கின்றது. அந்த நேரங்களில் உள்ளே ஒலிக்க வேண்டிய முன்னேற்றப் பாடல்.

2.வ்வொரு பூக்களுமே சொல்கிறதே.



ந்தப் பாடலில் அந்த இசைக் குழுவினரைப் பயன்படுத்தியது, சேரனின் மசாலாக் கண் என்று யாரேனும் நினைத்திருந்தால், தயவு செய்து அதை மாற்றிக் கொள்ளுங்கள்.

படத்தின் சேரன் போல் அனுபவப்பட்டவர்களுக்கு இப்பாடல் எத்தகைய நெஞ்சுரத்தைக் கொடுத்தது என்று எனக்குத் தெரியும். ஊக்கம் பெற்ற பல நண்பர்களையும் தெரியும்.

சினிமா என்பது வெறும் இரண்டரை மணிநேரம் கழித்து மறந்து விடுகின்ற வடிவம் என்று இருந்த எனக்கு , இதயத்தோடு கலந்து எழுச்சியூட்டிய பாடல் என்பது என் நிழல் நேரங்களில் உடன் இருந்த நண்பர்களுக்குத் தெரியும்.

தேசிய விருது தராமல் இருந்தால், விருதிற்கான மதிப்பை இழந்திருக்க வேண்டியது, அவ்விருது. கொடுத்து தங்களுக்குச் சிறப்பு செய்து கொண்டார்கள்.

3.வெற்றி நிச்சயம்.



லைவருக்காக இல்லாவிட்டாலும் இந்தப் பாடல் எனக்கு மிகப் பிடித்தப் பாடல். வேறு யார் நடித்திருந்தாலும் இந்தளவிற்குச் சிறப்பாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

பள்ளி நாட்களில், மனதில் உத்வேகத்தைக் கொடுத்த பாடல்களில் இதுவும் ஒன்று.

3.ன்னால் முடியும் தம்பி.


Get Your Own Music Player at Music Plugin

இப்பாடலைப் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன?

4.வெற்றிக் கொடி கட்டு.



ல்லூரிக் காலத்தில் ஏற்பட்ட சில திடீர் நடுக்கங்களில் தடுமாறி விழுந்து விடாமல் காப்பாற்றிய சில சக்திகளில் இப்பாடலும் ஒன்று.

தலைவரது இது போன்ற 'ஒரு பாட்டு முடிவில் ரிச்' பாடல்களைப் பலர் கேலி செய்திருந்தாலும், தேவை இருக்கின்றவர்களுக்கு இது போன்ற பாடல்கள் பூஸ்ட் என்பது, அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.

திவிற்குத் தலைப்புக் கொடுத்து உதவிய எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களுக்கு என்றும் நன்றிகள்.

இந்தியா எழுச்சியுறாத காலத்திலும், 'எண்ணங்கள்' என்றொரு அற்புதமான புத்தகம் தந்ததன் மூல, தமிழ் இளைஞர்களின் கனவுக்கு கால்கோள் இட்ட ஐயா எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

2 comments:

மணியன் said...

நான் மிக மனச்சோர்வுடன் இருக்கும் நேரங்களில் நினைவுகொள்ளவிரும்பும் பாடல்களை ஒருசேரக் கொடுத்ததிற்கு நன்றி.

இரா. வசந்த குமார். said...

அன்பு மணியன் ஐயா அவர்களுக்கு,, தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள் ஐயா..