
கூடு கட்டும் பறவைகளைப் பார்த்திருக்கிறாயா? கொத்திக் கொத்தி விரிசல் உண்டாக்கி, வீடு கட்டும். இலை, தழைகளைப் பொறுக்கி வந்து, சின்னச் சின்னதாய் உண்டாக்கும்.
ஆகாயமே கூரையாக, பூமியே வீடாக சிறகடித்துப் பறக்கும் கருங்குயிலைக் கண்டிருக்கிறாயா நீ? வானகத்தின் வரிசைப் புள்ளிகளில் வட்டமிட்டுப் பறக்கும் நீலக்குயிலின் நிறம் கொண்டதடி உன் காதல்.
காற்றின் வெளியில் காரணம் தெரியாத ரணம் நிறைந்த குரலில் கூவுகின்ற இக்குயிலை கூட்டில் அடைக்க மனம் வந்தது. கம்பி வேலிகளிலும், காட்டின் கரு மரங்களிலும், அபூர்வமாய் நெடுஞ்சாலைகளில் செல்கையில் தோளின் அருகிலும் அமர்ந்து பறக்கின்ற இக்காதலை யாருக்கென்று ஒப்படைக்க முடியும்?
ரேகை தேய்கின்ற விரல்களின் அணைப்பில் தொலைதூரத்தில் கரைகின்ற குரலின் ஓசை அப்பொழுதை மூளையின் செல்களில் உறைந்து செல்ல விடுகின்றது......
No comments:
Post a Comment