Friday, February 08, 2008

Shall I....?



'இது காதல் தானா..?'

எனக்குத் தெரியவில்லை. அவ்வப்போது ஒரு சின்ன ஹாய். முகத்தில் பூசிய புன்னகையின் சுவடு என் முகத்திலும் பதிந்து விடும். கஃபேயிலோ, ரெஸ்டாரெண்டிலோ எதிர்பாராமல் எதிரே பார்க்கையில், ஒரு புன்முறுவல். வார்த்தைகளே பரிமாறப்பட்டதில்லை. ஆனாலும் ஒரு மென் முனை, இதயத்திற்குள்.

வீட்டில் சொல்லி விட வேண்டும். ஆனால் யாரிடம் என்று தான் தெரியவில்லை. அதற்குள் அவளிடம்..! ஒரு வார்த்தை. இல்லாவிட்டால் இரண்டு வார்த்தைகள்.

இப்போதெல்லாம் தனிமையின் கரங்களைப் பிடித்துக் கொண்டு, மாடியில் நின்று கொண்டு, மினுக்கின்ற நகரத்தை இரசித்துக் கொண்டே இருக்கப் பிடிக்கின்றது. காலடியில் வெளிச்சப் புள்ளிகளை உமிழ்ந்து கொண்டே நகர்கின்ற ஊர்திகளையும், தலைக்கு மேலே வெண் மொட்டுக்களைத் திறக்காத முல்லைப் பந்தலின் சிந்துகின்ற ஒளியையும் இணையாக ரசித்துக் கொண்டே கேப்பசினோவை உறிஞ்சிக் குடிக்கப் பிடிக்கின்றது.

போன Springல் பார்த்த மஞ்சள் மலர்கள் இன்று எங்கு மலர்ந்திருக்கும் என்ற எண்ணம் கொஞ்சம் தலை தூக்கிப் பார்க்கின்றது. அந்த மலர்களைப் பார்த்தால் கேட்க வேண்டும், அன்று நடந்ததை நீங்கள் யாரிடமும் சொல்லவில்லை தானே என்று.

வாடைக் காற்று என்று ஊரில் காற்று வீசும். மலைத் தொடரின் கண்டிப்பான முறைப்பையும் மீறி, அள்ளிக் கொள்ள பாய்ந்து வரும். அது போல், இங்கு அடிப்பதில்லை. மாலை நேரங்களில் போட்டிருக்கின்ற கோட்டையும் மீறி சிலுசிலுப்பை மட்டும் தூண்டிச் செல்கின்றது, ஒரு இதமான தென்றல்.

ஏரிக்கரையின் நடை பாதைகளை அடுத்து போட்டிருந்த காய்ந்த மலர்கள் படுத்திருந்த அமர் நாற்காலிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்திருந்தேன். எப்போதாவது இந்தப் பக்கம் வரும் போது அதில் மட்டுமே அமர்வேன்.

மூச்சின் மெல்லிய புகை ஊர்வலமாய்ப் போய்க் கொண்டிருந்த அந்த மாலை நேரத்தில், அருகில் நிழலாடிய தருணத்தில் நிமிர்ந்து பார்த்தேன். கண்டவுடன் பிடித்துப் போகும் ஒரு திருத்தமான அழகு. தெளிவான முகம். பொட்டு பொட்டாய்ப் பூத்திருந்த வியர்வைத் துளிகளை , கைகுட்டைகளில் ஒற்றிக் கொண்டாள்.

அருகில் இருந்த மற்றுமொரு இடத்தில் அமர்ந்தாள்.

கைகளில் கனத்த ஓர் ஆங்கிலப் புத்தகம். பல்கலைக் கழகத்தின் ஒரு பறவை என்று தெரிந்தது. புதிய முகம். இது போல் ஏரிக்கரையில் நடை போடுகையில், பற்பல தேசத்தின் புறாக்களைக் கண்டதுண்டு. ஆனால் இது வேறு மாதிரியானது.

தலையைத் திருப்பித் தொலைவில் வானத்தில் பறந்த மற்றுமொரு பறவையைப் பார்த்தேன். சிறகின் புள்ளிகளைப் பிடித்துக் கொண்டு நடை பழகும் அதற்கு வானம் ஓர் எல்லையா என்று தோன்றியது.

ஏதோ சரசரக்கும் சத்தம் கேட்டது. அவ்வப்போது காதுக்குள் ஒரு பூரான் ஊறும் சத்தம். இது பழகிப் போய் விட்டது. திரும்பிப் பார்த்தேன். அவள் தான் ஏதோ கேட்டாள். கொஞ்சம் பொறுக்கச் சொல்லி, மெஷின் எடுத்து மாட்டிக் கொண்டதும், அவள் கண்களில் ஒரு அதிர்ச்சி, சின்ன வியப்பு. எதிர்பார்த்திருந்தேன், இந்த எதிர் வினைகளை. பழகிப் போன இந்த விஷயம், வளைகுடாப் போரில் மிக அருகில் விழுந்த ஸ்கட்டில் இறந்து போன செவிப் புலன்களின் நிலைமை முதன் முதலில் தெரிய வரும் போது, எனக்கும் இது போன்ற அதிர்ச்சியைத் தான் கொடுத்தது.

அருலில் இருக்கும் இந்திய ரெஸ்டாரெண்ட் பற்றிக் கேட்டாள். ந்நன் அழைத்துச் செல்கிறேன் என்று கூறியதும், மகிழ்வோடு வந்தாள். பாதைகளின் பதிவுகளில் எல்லாம் அவள் வார்த்தைகளும், எனது 'உம்'களும் நிரம்பிக் கொண்டே வந்தன.

தொடர்? - உம்!

C I N E M A P A R A D I S O :

No comments: