Thursday, September 20, 2012

மேற்கில் பொழிந்த நதி! (A)


மூடுமேகங்கள் விரைந்து செல்கின்றன. வனத்தின் பச்சைப் பந்தல்களில் முன்மாலைப் பனித்துகள்கள் போர்வையிடுகின்றன. நிலா முற்றத்தில் வெட்கிச் சரியும் தாவணிப் பெண்கள் போல் எட்டிப் பார்த்து மறைகின்றது. தொலைதூர நட்சத்திரங்கள் தங்கள் கள்வெறி குடித்து மாந்திய கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி வர்ணஜாலம் காட்டுகின்றன. கூடடைந்த சின்னஞ்சிறு பறவைகள் தத்தம் சிறகுகளின் கதகதப்பில் காய்ந்த புற்கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு அணைக்கின்றன.

முன் நெற்றியில் வந்து விழுந்த ஒற்றைப் புல் கேசம் விழிகளை மறைக்க முயன்று காந்தள் மலர் விரல்களால் வெகுவாகத் தோற்கடிக்கப்பட்டன.

புகைப்படலம் எழும்பிப் பரவும் வீடு கொண்ட நங்கை, பாறை மீது மோதி மோதி விலகி விலகிச் செல்லும் நதியின் நுரை போல் தெறித்து அணைந்த வேளையில் சருகுகளின் மேல் தென்றலும் மெல்ல நடை போடுகின்றது.

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.