Tuesday, December 20, 2016

நீலாம்பல் நெடுமலர்.7.

'வியத்தகு வெண்பா விருந்து' என்ற ஈற்றடிக்கு எழுதியது.

ருவிழி துள்ளும் துவளும் துடிக்கும்
கருவிழி சொல்லும் குழற்றும் பிதற்றும்
இருகரம் தீண்டும் தழுவும் தடவும்
இருபுறம் கேட்கும் கொடுக்கும் பிடிக்கும்
இருமார்கள் வேண்டும் திமுறும் குமுறும்
இருகூர்மை கொல்லும் குழையும் குவியும்
இருகால்கள் தாங்கும் தடுக்கும் தவழும்
இருந்தாழ்கள் வாங்கும் வருடும் வணங்கும்
இருப்பாளே என்றும் குறளடி தேனாய்
இறுக்கும் சிவந்த இதழ்.

கண்வழி அன்பென என்மீது சிந்தடி
முன்வழி பெண்ணென மெய்மீது சிந்தடி
சொல்வழி செல்வதைச் சொல்லுமுன் சிந்தடி
வில்விழி கொல்வதை நீராலே சிந்தடி
கைவழிக் காதலைக் கண்டதும் சிந்தடி
தையலின் மோகமே தைத்தபின் சிந்தடி
கள்ளுள மாரினைக் கவ்வுமுன் சிந்தடி
உள்ளுளப் பிள்ளையை உண்மையாய்ச் சிந்தடி
மெல்லுணர் வாழ்விலே மெய்யெனச் சிந்தடி
மெல்லிடை ஆள்வதை மெத்தைமேல் சிந்தடி
கள்ளியே கள்வனைக் காத்தபின் சிந்தடி
கள்வனோ சென்றபின் நீர்.

நெய்யகல் தீமுகம் நீலாம்பல் தேன்மலர்
பொய்யகல் தீஞ்சொல் புகழுடை பொன்தளிர்
மெய்யுணர் மெல்லுடல் மேற்றிசை மென்னொளி
கையனல் கொல்மணம் கள்ளிதழ் முள்தனம்
வேல்விழி கூர்முடி நீள்விரல் நெற்கதிர்
பால்நிறம் பன்னீர்த் துளிகுரல் வான்குளிர்
ஆலிடை நெய்த்தொடை அல்குலை ஆள்பவன்
கோலின் அளவடி நீ.

இயங்கிடும் போதுகளில் இன்மைக் கணத்தில்
முயங்கிடும் முன்மாலைப் பின்னால் - தயங்கா
மயக்குறு மங்கைநீ மன்னன் படிக்கும்
வியத்தகு வெண்பா விருந்து.


டியும் முடியும் ஒரே சொல் கொண்டு அமையும் குறள் வெண்பாக்கள்.

முயலாமை முந்திய வித்தை அறிவீர்
தயங்கினால் நீயே முயல்.

கிழித்துக் களம்படா நீங்கல் மறவர்
பழிப்பினும் வீரர்க் கிழி.

கண்ணேநீ என்றால் இமைப்பின் மறைவனோ
என்றாள் அவளுமென் கண்.

தொடவாநான் என்றாய் தொடுவது போதா
படவாநீ கூர்வில் தொடு.

மதுரமே உன்சொல் உதிருமே உண்ணா
அதரமே தேக்கும் மது.

1 comment:

Yarlpavanan said...

அருமை நண்பா!
http://www.ypvnpubs.com/